Followers

Search Here...

Sunday 6 September 2020

ஹிந்து மதத்தை விட்டு விலகி போனவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பரம்பரை மூலம் என்ன நடந்தது? பாரத மண்ணின் சரித்திரம் தெரிந்து கொள்வோம்.

ஒரு ஹிந்து மதம் மாறிய பிறகு, அவன் காலம் வரை கூட நல்லவனாக கூட இருக்கலாம்.




அவன் சந்ததியால் ஹிந்துக்களுக்கு ஏற்படுத்தும் அபாயங்கள் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?


1000 வருட நம் சரித்திரமே இதற்கு சான்று..

கவனமுடன் படியுங்கள்..


268BCE சமயத்தில், ஆப்கான் முதல், பெரும்பாலான பாரத தேசத்தை ஆண்டு வந்தான் ஹிந்து மன்னன் "அசோக சக்கரவர்த்தி". 

பகவத் கீதை படிக்காத இவன், திடீரென்று மூளை கெட்டு, பௌத்த மதத்தை ஏற்றான்.

குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணர், அரசனுக்கு குறிப்பாக சொன்ன, க்ஷத்ரிய தர்மத்தை விட்டான்.


போர் வீரர்களை பயிற்சியில் ஈடுபடுத்தாமல், வீரத்தை வளர்க்காமல், பௌத்த மடம் கட்டவும், காவல் காக்கவும் பயன்படுத்தினார்கள் பௌத்த மதம் மாறிய அரசர்கள். 


பலம் வாய்ந்த எதிரிகள் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருக்க, 

பாரத நாட்டை காக்கும் அரசர்கள் பௌத்த மதத்தை ஏற்று, போர் வீரர்களை போதுமான போர் பயிற்சி இல்லாமல் வைத்து இருந்தனர்.


அசோக சக்கரவர்த்தியே பௌத்த தர்மத்தை கடைபிடிப்பதால், சிற்றரசர்கள் அனைவரும் மெதுவாக பௌத்த தர்மத்தை ஏற்க ஆரம்பித்தனர்.


சுமார் 1100 வருடங்கள் பாரத நாடு பௌத்த தர்மத்தில் மூழ்கியது. 

பகவத் கீதையை மறந்து, மொட்டை அடித்து சமாதானம் பேசிக்கொண்டு சாது தேசமாக ஆகி இருந்தது பாரத நாடு.

சிங்கம் போன்ற க்ஷத்ரிய அரசர்கள் உலவிய நாட்டில், மொட்டை தலைகள் அலைந்தது.


அரசன் வீரத்தை விட்டு விட்டு, சந்நியாசி போன்று பேசிக்கொண்டிருந்த அபாய காலம் அது


சரயு என்ற நதியின் ஒரு பிரிவாக அழைக்கப்பட்ட, "ஹரி நதி", ஆப்கான் தேசத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இன்று, அதை "ஹீரத்" என்று மாற்றி விட்டனர்

(https://en.m.wikipedia.org/wiki/Hari_(Afghanistan))


மதம் மாறிய வரலாற்றை பாருங்கள்...

1. அமீர் பாஞ்சி (Amir Bhanji) (ஆப்கான் ஹிந்து அரசன் ஆண்டு வந்தான். 9th Century)

2. His son அமீர் சூரி (பௌத்த மதத்துக்கு மாறினான். 10th Century.  

பௌத்த மடம் கட்டிக்கொண்டு இருந்த போர் வீரர்கள், போருக்கு தயாராக இல்லாமல் இருந்ததால், அரேபிய Saffarid இஸ்லாமிய படையெடுப்பில் பெரும் தோல்வியை சந்தித்தான். 

பௌத்த தர்மத்தை விட இஸ்லாம் வீரம் மிக்கது என்று மதம் மாறாவிட்டாலும், ஆப்கான் தேசத்தில் குர்ரான் படிப்பதை அனுமதித்தான்.).  கோர் (Ghor) என்ற ஆப்கான் நகரை தலைநகராக ஆண்டு வந்தான்.

இவன் மூலமாக கோரி பரம்பரை உருவானது.


3. His son முகம்மது இபின் சூரி (பௌத்த மதம், ஆனால் குரான் மூலம் வளர்க்கப்பட்டான். கஜினி படையெடுத்து, இவனை கைது செய்து, சிறையிலேயே கொன்றான். நாடு முழுவதும் இஸ்லாமிய ஆளுமைக்கு உட்பட ஆரம்பித்தது. 10th century)


4. His son அபு அலி இபின் முஹம்மது (இஸ்லாமிய வளர்ப்பு. ஆப்கான் மக்களை முழுவதுமாக  இஸ்லாமியர்கள் ஆக்கினான். 20 வருடங்களில் கோவில்கள், மடங்கள் தரைமட்டம் ஆனது. 1011 AD)


5. His Nephew அப்பாஸ் இபின் ஷித் (மாமா அபு அலியை கொன்று தான் அரசன் ஆனான். 1035 AD)


6. His son முகம்மது இபின் அப்பாஸ் (1060 AD)





7. His son குதுப் அல்தின் ஹசன் (1080 AD)

இவன் காலத்தில் தான் கர்நாடக தேசத்தில் மேல்கோட்டையில் உள்ள செல்லபிள்ளை என்ற பெயர் கொண்ட கோவிலை சூறையாடினான். 

அங்கு இருந்த நாராயணன் உற்சவ மூர்த்தியை தூக்கி சென்று விட்டான்.

இந்த கோவில் மதில் சுவர்களில் உள்ள உடைக்கப்பட்ட சிலைகள் நமக்கு கதை சொல்கிறது.

80 வயது நெருங்கி இருந்த ராமானுஜர் (1017ல் அவதரித்தார்) அந்த சமயத்தில் குலோத்துங்க சோழனின் (கிருமி கண்ட சோழன்) வைணவ வெறுப்பால், ஸ்ரீ ரங்கத்தை விட்டு வெளியேறி, நடந்து நடந்து, கர்நாடக தேசம் வந்து, மேல்கோட்டை அடைந்தார்.

அங்கு பெருமாள் இல்லை என்றதும், தானே டெல்லிக்கு சென்று சுல்தானிடம் கேட்டு, "வாராய் செல்ல பிள்ளாய்" என்று பெருமாளை கூப்பிட, அரசன் கண் எதிரே, சிலையாக இருந்த நாராயண விக்கிரகம் அவன் பெண் கையிலிருந்து குதித்து, ஓடி சென்று ராமானுஜர் அருகில் சென்றது.

பயந்து போன சுல்தான், "உடனே எடுத்து சொல்லுங்கள்" என்றான்.

பெருமாளின் இந்த லீலையை நேரில் காண வாய்ப்பு கிடைத்தும், சுல்தான் ராமானுஜர் பெரிய மாயக்காரர் போல என்று தான் நினைத்தான். 

"அவரை அனுப்பி விடுவதற்கு, இந்த சிலையை கொடுப்பதே வழி" என்று நினைத்தான்.

சுல்தானின் பெண், பெருமாளின் பிரிவு தாங்காமல், மேல்கோட்டை ஓடி வந்து, விரகத்தால் உயிரையே விட்டு விட்டாள்.

அந்த முஸ்லீம் பெண், இன்றும் அந்த உற்சவ பெருமாளின் கால் அருகே சிறு மூர்த்தியாக இருக்கிறாள்.

பெருமாளை அடைந்த அந்த முஸ்லீம் பெண்ணும், இன்று வரை பூஜிக்கப்படுகிறாள். 


8. His son இஸ் அல்தின் ஹுசைன் (1100 AD)


9. His son சயப் அல்தின் சூரி (1146 AD. இவன் ஆப்கான் தேசத்தை, தன் 6 சகோதரர்களுக்கு பிரித்து கொடுத்தான்)


10. His brother பஹா அல்தின் சம்

முஹம்மது கோரி(1149AD. ஆனால் அதே வருடம் இறந்து விட்டான். இவனுடைய 2 பிள்ளைகளே முகம்மது கோரி, முகம்மது கியாசுத்தின்)


11. His  another brother அலாவுதீன் ஹுசைன் (1149AD)





12. His son சயப் அல்தின் முகம்மது (1161AD)


13. முகம்மது கியாசுத்தின் (பஹா அல்தின் சம் முஹம்மது கோரியின் மூத்த மகன். 1163AD. 

இவனால் பாரத தேசத்தின் வங்காள தேசம் வரை சூறையாட பட்டது..  

பலர் கத்தி முனையில் மதம் மாற்றப்பட்டனர். 

இந்திய மண்ணின் இருண்ட காலம் ஆரம்பமான நேரம்...)

15. முகம்மது கோரி (பஹா அல்தின் சம்

முஹம்மது கோரியின் இளைய மகன். 1173AD).  

இவன் காலத்தில் தான் மஹாராஷ்ட்ர தேசம் வரை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பெருமளவில் நடந்தது. 

பண்டரிபுரம் கோவிலை இடிக்க கூட வந்து விட்டான் இவன்.

ப்ரித்விராஜ் சவுஹான் என்ற ஹிந்து அரசன் இவனை பாரத மண்ணில் கால் பதிக்க விடாமல் தடுத்தான். 

முதல் படையெடுப்பில் கோரி படு காயம் அடைந்தான். ப்ரித்விராஜ் சவுஹான் மன்னித்து அனுப்பினான்.

விளைவு: இரண்டாவது முறை திடீர் தாக்குதல் செய்து, ப்ரித்விராஜ் சவுஹானை சிறை பிடித்து, கண்ணை பிடுங்கினான்.

ஆப்கான் கொண்டு சென்று சிறை வைத்தான்.

இவனை கேலி செய்து விளையாடிய கோரியை, கண் இல்லாமலேயே ப்ரித்விராஜ் சவுஹான் அம்பு எய்து கொன்றான். 

ஹிந்து அரசன் வீர மரணம் அடைந்தார். 

கோரியின் மரணம் ஆப்கானில் முடிந்தது. 


1000ADல் அமீர் சூரி என்ற ஒரு ஹிந்து மதம் மாறினான். 

அவன் நல்லவனாக கூட இருந்து இருக்கலாம்.

ஆனால், 

150 வருடங்கள் கழித்து 12வது தலைமுறையாக வந்த 'முகம்மது கோரி' ஹிந்துக்களை கொல்வதும், கோவிலை இடிப்பதும், கொள்ளை அடைப்பதையும் தன் கொள்கையாக கொண்டு இருந்தான்.

முகம்மது கோரி, ஆப்கான் தேசத்தை முழுவதுமாக ஒரு ஹிந்து, ஒரு பௌத்தன் கூட இல்லாத நகரமாக ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்கியதை காட்ட, வெற்றி சின்னமாக , "ஜாம் மினார்" (minaret of jam) என்ற கோபுரத்தை அங்கு கட்டினான்.

மதம் மாறுபவன் நல்லவனாக கூட இருக்கலாம். 

ஆனால் அவன் பரம்பரை உருவாக்கும் விஷங்கள் எப்படிப்பட்டது? என்பதற்கு நம் 1000 வருட துன்ப காலங்களே சான்று.


கோரி பரம்பரை 1000AD முதல் சுமார் 1206AD வரை ஆப்கான் முதல் வங்காள தேசம் வரை, மராட்டிய தேசம் வரை ஆக்ரமித்து ஆண்டு வந்தது.. 

பிறகு, மாம்லுக் என்ற அடிமை பரம்பரை என்ற பெயரில் குதுப்தின் ஐபக், முஸ்உத்தின் ஐபக் 1296AD வரை ஆண்டனர். 

குதுப்தின் ஐபக், தன் எஜமானன் ஆப்கான் தேசத்தை இஸ்லாமிய நாடாக ஆக்கி, "ஜாம் மினார்" கட்டியது போலவே, டெல்லி நகரமும் இஸ்லாமிய தேசம் என்று காட்ட, "குதுப் மினார்" என்ற அதே போன்ற வடிவமைப்பில் ஹிந்து அடிமைகளை கொண்டே கட்டினான். 




பாரத தேசத்தை இஸ்லாமிய நாடாக ஆக்கி விட்டேன் என்று காட்ட "குதுப் மினார்" கட்டப்பட்டது.

ஹிந்துக்களை அழிக்கும் இவன் கனவு கனவாகவே போனாலும், இவன் கட்டிய இந்த ஸ்தூபம் இன்றும் பாரத மண்ணில் இருக்கிறது.


இதற்கு பிறகு கில்ஜி பரம்பரை இவர்களை துரத்தி ஆட்சியை பிடித்தனர்.

இதில் இரண்டாவது ஆட்சியாளனாக வந்த அலாவுதீன் கில்ஜி, ராஜஸ்தான், குஜராத் போன்ற ராஜ்யங்களை முழுவதும் இஸ்லாமிய மண்ணாக ஆக்க, பெரும் படைகளை திரட்டி கொண்டு போனான்.

இந்த சமயத்தில் தான் ராணி பத்மாவதி ராஜஸ்தான் கோட்டை தகர்க்கப்பட்ட செய்தி கேட்டதும், மானத்தை காத்து கொள்ள, அக்னி குண்டத்தில் பல ராஜ ஸ்த்ரீகளுடன் குதித்து உயிர் விட்டாள். 

குஜராத் தேசத்தில் போர் செய்த போது, ஹிந்து மக்கள் பலரை அடிமைகளாக ஆக்கினான் அலாவுதீன்.

அதில் மாணிக் என்ற ஹிந்து வீரனாகவும் இருந்ததை பார்த்து, அலாவுதீன் கில்ஜிக்கு ஒரு நட்பும் பரிவும் உண்டானது.


இந்த நன்றிக்கு, ஹிந்துவாக இருந்த மாணிக், தன்னை முஸ்லீமாக மாற்றிக் கொண்டான்.

ஹிந்து மதத்தை விட்டு விலகிய இவன் தான் "மாலிக் காபுர்".


மதம் மாறிய இவனையே படை தளபதியாக ஆக்கி, முதல் முறையாக ஆந்திர தேசமும், தமிழகமும் கில்ஜி காலத்தில் தாக்கப்பட்டது.


இஸ்லாமியனாக போன இந்த மாலிக் காபுர், ககாத்திய தேசத்து அரசனை நேரடியாக எதிர்க்க முடியாமல், கோவில்களுக்குள் நுழைந்து கொள்ளை அடித்து, பொது மக்களை கொன்று பெரும் கலவரத்தை உருவாக்கினான்.

ககாத்திய தேசத்தில் பல கோவில்களில் பெரும் கொள்ளை நடந்தது. அதில் ஒரு காளி கோவிலில் மஹாகாளி அணிந்து இருந்த வைர மாலைகளில் இருந்த ஒரு வைரம் தான் "கோஹினூர்" என்று அழைக்கப்படும் வைரம். 

இன்று இது பிரிட்டன் நாட்டில் உள்ளது.

தெலுங்கு தேசத்தின் சொத்து இது.


இது மட்டுமா மாலிக் காபுர் செய்தான்.. 

பிறகு காஞ்சிபுரம் வந்து, பிறகு பாண்டிய தேசத்துக்குள் நுழைந்து மதுரை மீனாட்சி கோவிலில் புகுந்தே விட்டான்.

அங்கிருந்த பட்டர்கள், மூல மூர்த்தியான சுந்தரேஸ்வரர் இருக்கும் இடத்துக்கு முன் கல் சுவரை எழுப்பி, வேறொரு பெரிய சிவலிங்கத்தை வைத்து விட்டனர்.


செருப்பு காலில் லட்சம் இஸ்லாமிய படையுடன் நுழைந்த மாலிக் காபுர் சிவலிங்கத்தை குத்தி தள்ளி விட்டான்.

(இன்றும் அந்த சிவலிங்கம் உள்ளது.. மதம் மாறியவன் என்னவெல்லாம் செய்வான் என்று கதை சொல்கிறது) 




பாண்டிய மன்னன் பொது மக்களை காக்க, கோவிலை காக்க, அடி பணிந்தான். 


பாண்டிய தேசத்து மொத்த கஜானாவையும், 1000 யானை படைகளையும் கொடுத்தான்.


மாலிக் காபுர், பாண்டிய தேசத்து எல்லையான ஸ்ரீ ரங்கம் வரை சென்றான். 


அங்கு கோவிலை சூறையாடி 13000 வைஷ்ணவர்களை கோவிலேயே கழுத்தை வெட்டி கொன்றான்.


உற்சவ மூர்த்தியான ரங்கநாதரை டெல்லிக்கே தூக்கி சென்று விட்டான்.

ரங்கநாதரை விளையாட்டு பொம்மையாக இவன் பெண்ணுக்கு கொடுத்து விட்டான்.

பேசும் தெய்வமான ரங்கநாதர், இவளிடம் பேசி கொண்டு இருக்க, 'பொம்மையை வைத்து கொண்டு இருக்கும் தன் மகள் பைத்தியம் ஆகி விட்டாள்' என்று பயந்தான்.


பிறகு வைஷ்ணவர்கள் சிலர் டெல்லிக்கே சென்று ரங்கநாதரை கேட்க, 'அபாயமான இந்த ரங்கநாத பொம்மை வேண்டவே வேண்டாம்' என்று கொடுத்து விட்டான். 

ஸ்ரீ ரங்கம் வந்து விட்டார் ரங்கநாதர்.


ஆனால், மீண்டும் கலவரம் ஏற்பட, அடுத்த 70 வருடங்கள் தமிழகம் முஸ்லிம்களால் இருண்டது.

கில்ஜியை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த துக்ளக் தமிழகம் வரை வந்து விட்டான். 

மேலும் அறிய.. இங்கே படிக்கவும்.


சுமார் 70 வருடங்கள், 

ஸ்ரீரங்கம் கோவில் மூடப்பட்டது. 

மீனாட்சி கோவில் மூடப்பட்டது. 

காஞ்சியில் இருந்த அத்தி வரதர் குளத்துக்குள் வைக்கப்பட்டு விட்டார்.


யார் ஹிந்துக்களை மீட்பார்கள்? என்ற கேள்வி பாரத தேசம் முழுவதும் பரவி, பெரும் கேள்விக்குரியானது. 


தெலுங்கு தேசத்தை பூர்வீகமாக கொண்டு, கர்நாடக தேசத்தின் ஹம்பியை தலைநகராக கொண்டு, விஜயநகர அரசர்கள் தலையெடுத்தார்கள்.


தமிழகம் 80 வருடங்கள், துக்ளக் ஆட்சியின் கீழ் உள்ள முஸ்லிம்களால் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்தது. 


ஹிந்துக்களை காக்க, வந்தார் கம்பண்ணா. வென்றார் தமிழகத்தை. மீண்டும் ஹிந்துக்கள் வாழ வழி செய்தார். 

அடைக்கப்பட்ட மூன்று கோவில்களும் மீண்டும் திறக்கப்பட்டன.


அழிக்க நினைத்தும், ஹிந்துக்கள் அழிந்து விடாமல், ஹிந்து தெய்வங்களே கம்பண்ணா ரூபத்தில் காத்தது.


ஒவ்வொருவரின் பரம்பரையை நன்றாக கவனித்தால், முகம்மது கோரியின் மூதாதையனும் ஒரு காலத்தில் ஹிந்துவாக இருந்தவன் என்று தெரிகிறது. 

இன்று மதம் மாறுபவன் விதைக்கும் விஷம் எப்படிப்பட்டது என்று சரித்திரத்தை கொண்டே நாம் அறியலாம்.

மாலிக் காபுர் தானே மதம் மாறியவன்.

தான் பிறப்பில் ஒரு ஹிந்து என்று தெரிந்தும், அவனே பெரும் கோவிலை இடித்தான்.


ஹிந்து மதம் விட்டு, சென்றவர்கள் எந்த காலத்திலாவது நமக்கு தீங்கு செய்வார்கள் என்பதற்கு, நாம் 1000 வருடங்கள் அனுபவித்த இழப்புகளே சான்று.


நம் சரித்திரத்தை அறிந்து கொள்வது போல, அந்நியர்கள் என்று அறியப்பட்ட கோரி, கில்ஜி போன்றவர்கள் யார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Saturday 5 September 2020

பெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பின் வரும் இந்த மந்திரத்தை சொல்ல ஆசை வரும். தெரிந்து கொள்வோமே.

 ஒரு தகப்பன், தன் 2 வயது பிள்ளை தட்டு நிறைய உணவை வைத்து ஆசையாக சாப்பிடுவதை பார்க்கிறான்.




ஆனால், அந்த பிள்ளை 'தகப்பன் சாப்பிட்டானா?' என்று கூட நினைக்காமல் முழு உணவையையும் சாப்பிட்டு விட்டது. 


"தன் பிள்ளை தனக்கு கொடுப்பானா?" என்று தகப்பன் உண்மையில் எதிர்பார்க்கவும் இல்லை. 


உண்மையில், தகப்பனுக்கு பிள்ளை சாப்பிட்டதை பார்த்தே திருப்தி ஏற்பட்டு விட்டது.


ஆனால், 

கடைசி சாதத்தை வாயில போட்டு கொண்ட பாசமுள்ள அந்த 2 வயது பிள்ளைக்கு, 'தன் தகப்பனுக்கு கொடுக்கவில்லையே!!' என்று திடீரென்று நினைவு வர, 

உடனே ஆசையோடு தன் வாயில் இருந்த எச்சில் உணவையே, 

தன் இடது கையால் எடுத்து, தகப்பனை பார்த்து, 

"அப்பா... நீயும் சாப்பிடு" என்று பாசத்தால் கொடுக்க, 

திருப்தி மட்டுமே கொண்டிருந்த இந்த தகப்பன், ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று, எச்சில் என்று கூட பார்க்காமல், தன் குழந்தையின் பாசத்தில் உருகி, அதை ஏற்கிறான்.


அந்த பாசத்தை நாம் ஈஸ்வரனிடம் காட்டுவதே இந்த மந்திரம்.


'அம்ருதாபிதானம் அஸி' என்று கொஞ்சம் ஜலத்தை பருகி விட்டு, 




பிறகு, கையில் மிச்சமிருக்கும் கொஞ்சம் ஜலத்தை நம் எச்சில் கையால், கட்டை விரல் வழியாக விட்டு கொண்டே இந்த மந்திரத்தை சொல்வது வழக்கம்.


இதன் அர்த்தம் இதோ:

அங்குஷ்டமாத்ர:  புருஷ அங்குஷ்டஞ்ச ஸமாச்ரித: !

ஈச: ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு: ப்ரீணாதி விச்வபுக் !!


உலகையே படைத்து, அதையே தனக்கு உணவாக உண்ணும் அளவுக்கு சக்தி கொண்ட அந்த பரமாத்மாவான புருஷன் (புருஷ:), கட்டைவிரல் அளவுக்கு (அங்குஷ்டமாத்ர:) எனக்காக ரூபம் எடுத்து, கட்டைவிரல் அளவுக்கு வியாபித்து கொண்டு (அங்குஷ்டஞ்ச ஸமாச்ரித:) நான் கொடுக்கும் இந்த துளி ஜலத்தை, பாசத்தோடு ஏற்க வேண்டும். 


அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாக (ஸர்வஸ்ய ஜகத: ப்ரபு:) இருக்கும் பரமாத்மா (ஈச:), எங்கும் வியாபித்து இருப்பவர், (விச்வபுக்) ஒரு தகப்பனை போல, அறியாபிள்ளையாகவும், பாசத்தோடும் இருக்கும் என்னை கண்டு ப்ரீதி அடையட்டும் (ப்ரீணாதி).


ஒரு இலை நிறைய சோற்றை தெய்வ சிந்தனை இல்லாமல், நம் வயிற்றுக்கே போட்டு கொண்டாலும், 

கொஞ்சம் பாசத்தோடு நம்மை படைத்த பரமாத்மாவுக்கு நம் எச்சில் கையால் கொடுத்தாலும், ஒரு தகப்பனை போல ஆனந்தம் அடைகிறார் என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.


'பெற்றோர் மீது பாசமுள்ள யாவருக்கும்' சாப்பிட்ட பின் வரும் இந்த மந்திரத்தை சொல்ல ஆசை வரும்.

சீதை மருமகளாக எப்படி இருக்கிறாள்? என்று பாருங்கள்... மாமியார் மருமகள் உறவு. சீதா தேவி காட்டுகிறாள்.

கீழ்த்தரமான ராவணன் "ராமர் இறந்து விட்டதாக" சீதையிடம் இரண்டு இடத்தில் சொல்கிறான்.
'அனாதையாகி போன சீதை தன்னை மணக்க வேண்டும்" என்று அழைத்தும் பார்த்தான்.

தாளாத சீதை பலவாறு புலம்புகிறாள். 



'ஐயோ! நான் விதவையாகி விட்டேனே!
என்று கூட புலம்புகிறாள். 

தான் படும் இந்த வேதனை நிலையிலும், ராமபிரானை பெற்ற மாதா கோசலையின் துக்கத்தை நினைத்து சீதை அழுகிறாள்.

'மாமியார் துக்கப்படுவாளே! அவள் மனம் வாடுமே
என்று அந்த துக்கத்திலும் நினைக்கிறாள் உத்தமியான சீதை.

1.
ராமபிரான் கடலை கடந்து, சுவேல மலை அருகில், வானர படைகளுடன் வந்து விட்டார் என்றதும், 'எப்படியாவது சீதையை சம்மதிக்க வைக்க வேண்டும்' என்று நினைத்தான். 

'வித்யுஜிஹ்வா' என்ற மாயாவியை அழைத்து, மாயாரூபமான வெட்டப்பட்ட  ராமபிரான் தலையையும், அவர் வைத்து இருந்த வில்லையும் உருவாக்க சொன்னான்.
வெட்டப்பட்ட மாயா ராமபிரான் தலையை காட்டி, 
"கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.
(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்! உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.
(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா! - வால்மீகி ராமாயணம்)" 
என்று பேசி அவளை சம்மதிக்க முயற்சித்தான்...

அப்போது புலம்பி அழும் சீதா தேவி, அந்த நிலையிலும் கூட, தன் மாமியாரை நினைத்து அழுகிறாள்,
"என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..



ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!
(சா ஸ்வஸ்ரூர் மம கௌசல்யா த்வயா புத்ரேன ராகவ! வத்ஸேன் ஏவ யதா தேனுர் விவத்ஸா வத்சலா க்ருதா!! - வால்மீகி ராமாயணம்)
என்று அழுகிறாள்.

சீதையின் மென்மையான குணம் இங்கு நமக்கு தெரிகிறது.

2.
வானர சேனைக்கும், ராக்ஷஸர்களுக்கும் கடுமையான யுத்தம் இரவு பகலாக ஓய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தது.
இந்திரஜித் போர் புரிய வந்தான்.

இவனை அம்பு மழைகளால் சிதறடித்தார் ராமபிரான்.

மாய போர் புரியும் இந்திரஜித் தன்னை மறைத்து கொண்டு, நாக அஸ்திரத்தை ஏவி, ராமபிரானையும், லக்ஷ்மணரையும் கீழே சாய்த்தான்.

விழுந்த இவர்கள் மீது பல அம்புகளை ஏவினான். 
ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம லக்ஷ்மணரை பார்த்து, ஹனுமான், சுக்ரீவன், நீலன், மைந்தன், த்விவிதன், சுசேனன், குமுதன், அங்கதன் சூழ்ந்தனர்.
வானர சேனைகள் கண் கலங்கி அழ ஆரம்பித்தனர்.

இப்படி அழுது கொண்டிருந்த வானரர்களை மறைந்து இருந்து பார்த்து கொண்டிருந்த இந்திரஜித், 
இந்த வானரர்களையும் கொன்று விடும் எண்ணத்தில், 
ஒன்பது முறை அம்புகளை 'நீலன்' மீது ஏவினான்.
ஆறு முறை 'மைந்தன், த்விவிதன்' மீது ஏவினான்.
பத்து முறை 'ஹனுமான்' மீது ஏவினான்.
இரண்டு இரண்டு முறை, 'ஜாம்பவான், கவாக்சன், சரபன்' மீது ஏவினான்.
'அங்கதன்' மீது கணக்கில்லா அம்புகளை ஏவினான்.
'எங்கிருந்து அம்புகள் வருகிறது?' 
என்று தெரியாமல் வானரர்கள் நிலை குலைய, 
அட்டகாச சிரிப்புடன், வெகு நேரமாக மூச்சு பேச்சு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் 'ராம லக்ஷ்மணர்கள் இறந்து விட்டார்கள்' என்று தீர்மானித்து, இலங்கை நகரத்துக்குள் சென்று, வெற்றி செய்தியை ராவணனிடம் சொன்னான்.

பெரும் மகிழ்ச்சி அடைந்த ராவணன் தன் மகனை உச்சி முகர்ந்து பாராட்டினான்.

பிறகு, மகனை அனுப்பி விட்டு, அசோக வனத்தில் இருக்கும் ராக்ஷஸிகளை அழைத்தான்.



த்ரிஜடை தலைமையில் அனைவரும் வர, ராவணன் அவர்களை பார்த்து,
"இந்திரஜித்தால் ராம லக்ஷ்மண இருவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று சீதையிடம் சொல். 

அவளை புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ராமனும், லக்ஷ்மணனும் விழுந்து கிடக்கும் இடத்தை காட்டு.

என்னை லட்சியம் செய்யாமல் இருக்கும் சீதை, போர் களத்தில் விழுந்து கிடக்கும் இவர்கள் சடலத்தை பார்க்கட்டும்.
இதை பார்த்த பிறகாவது, சந்தேகமில்லாமல், பயமில்லாமல் நகைகளை அணிந்து அலங்காரம் செய்து கொண்டு என்னை மணக்க தயாராகட்டும்.

மரண காலத்தில் கட்டப்பட்டு கிடக்கும் ராமனையும், லக்ஷ்மணனையும், அகன்ற கண்கள் உடைய சீதை (விசாலக்ஷி) பார்த்து, தன் நம்பிக்கையை இழக்கட்டும். 

இனி யாரும் இவளுக்கு துணை இல்லை என்கிற நிலையில், இவள் என்னிடம் சரண் அடைவாள்"
என்றான்.

ராவணன் சொன்னதை ஏற்று, ராக்ஷஸிகள் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ராமர், லக்ஷ்மணர் விழுந்து கிடக்கும் இடத்தை அடைந்தனர்.

அசைவில்லாமல் கிடக்கும் இவர்களை சூழ்ந்து கொண்டு, வானரர்கள், விபீஷணன் சோகத்தில் இருப்பதை பார்த்து விட்டு, சீதை மயங்கி விழுந்தாள்.

சிறிது நேரத்தில் விழித்த சீதை, பலவாறு புலம்புகிறாள்.

அந்த சமயத்தில் கூட, தன் மாமியாரை நினைத்து அழுகிறாள்,
"காலத்தை யாராலும் வெல்ல முடியாது என்று ஆகிவிட்டதே! வீழ்த்தவே முடியாத என் ராகவனும், அவர் தம்பி லக்ஷ்மணன் கூட போர்க்களத்தில் வீழ்ந்து விட்டார்களே!

ஐயோ! ராகவனும், அவர் தம்பி லக்ஷ்மணனும் வீழ்ந்த சோகத்தை காட்டிலும், 
எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடன் விரதம் இருக்கும் என் மாமியாரை (கௌசல்யா) நினைத்து என் மனம் வருந்துகிறதே!!"
(ந ஸோசாமி ததா ராமம் லக்ஷ்மணம் ச மஹாபலம்! ந ஆத்மானம் ஜனனீம் வாபி யதா ஸ்வஸ்ரூம் தபஸ்வினீம்!! - வால்மீகி ராமாயணம்)
இந்த வனவாசம் என்ற விரதம் எப்பொழுது முடியுமோ என்று அனுதினமும் நினைத்து கொண்டு இருப்பாளே!

எப்பொழுது நான் ராமனை, லக்ஷ்மணனை, சீதையை பார்ப்பேன்? என்று எங்கள் வருகைக்காக காத்து கிடப்பாளே"
(சா அனுசிந்தயேத் நித்யம் சமாப்த வ்ரதம் ஆகதம்! கதா த்ரஷ்யாமி சீதாம் ச லக்ஷ்மணம் ச ச ராகவம்!! - வால்மீகி ராமாயணம்)
என்று அழ ஆரம்பிக்கிறாள்.

த்ரிஜடை "கவலைப்படாதே! வானர்களை முகத்தில் இன்னும் உற்சாகமும், கோபமும் அடங்கவில்லை. 
உன் கணவன் உயிர் பிரிந்த பின், இப்படி இவர்கள் இருக்க வாய்ப்பில்லை. 
மேலும் திவ்யமான இந்த புஷ்பக விமானம் கணவனை இழந்த பெண்களை சுமந்து பறக்காது..." என்று பல காரணங்களை காட்டி, சீதையை சமாதானம் செய்கிறாள். 

வால்மீகி ராமாயணம் அறிவோம்.

மாமியார் துக்கப்படுவாளே! என்று நினைக்கும் மென்மையான சீதையை போன்ற மருமகளாக இருக்க, அனைத்து பெண்களும் ஆசைப்பட வேண்டும்.

வால்மீகி "வேடுவனாக" இருந்தவர்.
அவர் அவதரித்த ஊர் "அன்பில்".
ராம அவதார காலம் முழுவதும் உத்திர பிரதேசம் சென்று வசித்தார்.

ராம அவதாரம் முடிந்த பிறகும், 'விபீஷணன், வால்மீகி, ஹனுமான்' பூலோகத்தில் இருந்தனர்.

ராம அவதாரம் முடிந்த பின், மீண்டும் தமிழகம் வந்து, "திருநீர்மலை" என்ற இடத்தில் ராம தியானத்தில் இருந்து, முக்தி பெற்றார்.

தமிழன் எழுதிய ராமாயணம் உலகமே படிக்கிறது. 
இது தமிழனுக்கு பெருமை.

Saturday 29 August 2020

'ராவணன் பேசிய பச்சை பொய்' தெரிந்து கொள்ள வேண்டாமா .. சீதையின் புலம்பல்.. தமிழன் 'வால்மீகி' கொடுத்த ராமாயணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சீதா தேவியை மீட்க, வானர சேனையை திரட்டி கொண்டு, இலங்கையை நோக்கி வந்தார் ராமபிரான்

"சார்தூளா" என்ற ஒற்றன், ராவணனிடம் இதை தெரிவிக்க, "சுகா" என்ற ராக்ஷஸ ஒற்றனை மேலும் விவரம் அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் பிடித்து கட்டி வைத்தனர்.

ஐந்தே நாளில், கடலில் பாலம் அமைத்து, இலங்கையை வந்து அடைந்தார் ராமபிரான்.

பிறகு சுகாவை விடுவித்து அனுப்பினார். 




பிறகும், ராவணன், சுகனோடு 'சாரணன்' என்ற மற்றொரு ராக்ஷஸ ஒற்றனை அனுப்பி, வானர வீரர்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவம் மாற்றி கொண்டு, இவர்கள் இருப்பதை கண்டு விபீஷணன் ராமபிரானிடம் தெரிவிக்க, இருவரையும் பிடித்து கட்டினர் வானரர்கள்.

ராமபிரான் இவர்களை விடுவித்து, விபீஷணனையே இவர்களுக்கு முழு படைபலத்தையும் காட்ட சொல்லி, திருப்பி அனுப்பினார்.


'சுக சாரணன்' இருவரும் வானரர்கள் படை பலத்தை ராவணனிடம் பிரமிப்புடன் சொல்ல, சார்தூளா கோபம் அடைகிறான்

எதிரியை போற்றும் படியாக ராவணனிடம் பேசுவதை கண்டித்தான். 

'சுக சாரணன்' இருவரும், அமைதியுடன், 'ராவணனுக்கு வெற்றி உண்டாகட்டும்' என்று சொல்லி விட்டு சபையை விட்டு கிளம்பினர்.

ராவணன், மகோதரன் என்ற ஒரு மந்திரியை பார்த்து, "சிறந்த ஒற்றர்களை" சபைக்கு அழைத்து வர சொன்னான்.

உடனே, தலை சிறந்த ராஜ ஒற்றர்களை, ராவணன் முன் அழைத்து வந்தான் மகோதரன்.

சார்தூலாவின் தலைமையில், அனைத்து ஒற்றர்களையும் ராமபிரானை பற்றி அறிந்து வர அனுப்பினான்.

"ராமனின் திறன் என்ன? ராமனுக்கு பிடித்தமானவர்கள் யார் யார்? 

யாரெல்லாம் ராமனுக்கு நட்பாக இருக்கிறார்கள்? 

ராமன் எப்பொழுது தூங்குவார்? எப்பொழுது விழிப்பார்? 

வேறு என்னவெல்லாம் காரியம் செய்கிறார்? 

என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்? 

அனைத்தையும் தெரிந்து கொண்டு என்னிடம் வந்து சொல்ல வேண்டும்" 

என்று உத்தரவு செய்தான்.

மாயாவிகளான இவர்கள் வானர்ர்களோடு கலந்து கொண்டு சுவேல மலையில் இருக்க, கடல் போன்ற வானர சேனையை பார்த்து அச்சம் கொண்டனர்.

விபீஷணன் மீண்டும் இவர்களை கண்டுபிடித்து விட்டார். 

சார்தூளா வானரர்களிடம் மாட்டி கொண்டு விட, இவர்களை வானரர்கள் ரத்தம் வரும் வரை கைகளை மடக்கி குத்தி, முட்டியால் குத்தி, பற்களால் கடித்து உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சுவேல மலையில் இருந்த ராமபிரான், மீண்டும் வானரர்களை தடுத்து, அனைவரையும் விடுவித்தார்.

ராவணனிடம் திரும்பி வந்த சார்தூளவும் மற்ற ஒற்றர்களும், பெரும் மரண பீதியில் இருந்தனர்.


ராவணன் இவர்களின் வெளுத்து போன முகத்தை பார்த்து, மனஉளைச்சலுடன் "ஏன் இப்படி சோர்ந்து இருக்கிறீர்கள்? நீங்களும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கினீர்களா?" 

என்று கேட்டான்.


நடந்த விஷயத்தை சொல்லி, குறிப்பாக 'ஒவ்வொரு வானரனும் எந்த தேவனின் அம்சமாக இருக்கிறார்கள்?' என்று சார்தூளா ராவணனிடம் சொல்கிறான்...

"அரசே! வானர அரசன் சுக்ரீவன், ருக்ஷராஜனின் மகன். 

ஜாம்பவான் கட்கதனின் இளைய மகன். தும்ரா கட்கதனின் மூத்த மகன். 

கேசரி ப்ருஹஸ்பதியின் மகன்.

இலங்கையில் புகுந்து ராக்ஷஸரகள் பலரை கொன்ற ஹனுமான் கேசரியின் மகன்.

சுசேனன் சாஷாத் தர்ம தேவதையின் மகன்.

ததிமுகன் சோம தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

சுமுகன் மரண தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

படைத்தளபதியான நீலன் அக்னி தேவனின் அம்சம்.

ஹனுமான் வாயு தேவனின் அம்சம்.

அங்கதன் இந்திரனின் பேரன்.

மைந்தனும் த்விவிதனும் அஸ்வினி குமாரர்களின் அம்சம்.

கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதன் அனைவரும் சூரிய தேவனின் பிள்ளைகள்.

10 கோடிக்கும் மேலான வானரர்கள் போர் செய்ய குவிந்து இருக்கிறார்கள்.




இளமையான வீரனாக இருக்கும் ராமன், தசரதனின் பிள்ளை.

அந்த ராமன் தான் கர, தூஷன, த்ரிசிரர்களை கொன்றார்.

யாருமே அந்த ராமனை எதிர்க்க முடியவில்லை.

விராதா மற்றும் கபந்தன் போன்ற ராக்ஷஸர்களையும் கொன்றவர் இந்த ஸ்ரீராமன்.

ஜனஸ்தானத்தில் இருந்த ஒட்டு மொத்த ராக்ஷஸர்களும் வேரோடு அழிந்து விட்டனர்.

கூடவே இருக்கும் லக்ஷ்மணன் விடும் பாணத்தை இந்திரன் கூட தடுக்க இயலாது."

இப்படி வானரர்கள் அனைவரையும் பற்றி சொல்ல, ராவணன் மனகுழப்பம் அடைந்தான்.

சிறிது நேரம் தன் மந்திரிகளிடம் ஆலோசனை செய்து விட்டு, தன் மாளிகைக்கு சென்றான்.


தனது மாளிகையில், "வித்யுஜிஹ்வா" என்ற மாயாவியை அழைத்து இவ்வாறு பேசினான்,

"சீதையை மாயத்தால் குழப்ப வேண்டும். நீ உடனேயே மாயையால் ராமனின் தலையையும், அவன் கையில் வைத்து இருக்கும் அம்பு, வில்லை கொண்டு வா" என்றான்.

(வித்யுஜிஹ்வம் ச மாயாக்யம் அப்ரவீத் ராக்ஷஸாதிப: ! மோஹயிஷ்யாவஹே சீதாம் மாயயா ஜனகாத்மஜாம் !! 

சிரோ மாயாமயம் க்ருஹ்ய ராகவஸ்ய நிஸாசர! த்வம் மாம் சமுபதிஸ்டஸ்வ மஹச்ச சசரம் தனு:!! - வால்மீகி ராமாயணம்)


வித்யுஜிஹ்வா உடனேயே மாயா ரூபமான ராமனின் தலையும், வில்லும் அம்பும் கொடுக்க, ராவணன் அந்த மாயாவிக்கு தான் அணிந்து இருந்த ஆபரணத்தை பரிசாக கொடுத்து அனுப்பினான்.


பிறகு, 

ராவணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை பார்க்க ஆவலுடன் சென்றான்.


அபலையான சீதை தலை குனிந்து நிலத்தை பார்த்து கொண்டே, ராமபிரானின் நினைவிலேயே, பயமுறுத்தும் ராக்ஷஸிகள் சூழ அமர்ந்து இருந்தாள்.

மிகவும் உற்சாகமாக தன்னை பற்றி உயர்வாக சீதையை பார்த்து பேசலானான் ராவணன், 

"சீதா! நான் உன்னிடம் எத்தனை மதுரமாக பேசினாலும், அந்த ராமனை நம்பிக்கொண்டு ஏதோ உளருகிறாய். 

பரிதாபம்! கரண் போன்ற ராக்ஷஸரகளை கொன்ற உன் கணவன் இப்பொழுது போரில் கொல்லப்பட்டு விட்டான்.

உன் நம்பிக்கை அனைத்தும், என்னால் வேர் அறுக்கப்பட்டு சின்னாபின்னம் ஆக்கப்பட்டு விட்டது. 

(கர ஹந்தா ச தே பர்தா ராகவ சமரே ஹத:! சின்னம் தே சர்வதோ மூலே தர்பஸ்தே விஹிதோ மயா!  - வால்மீகி ராமாயணம்)

கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.

(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

சீதா! முட்டாள்த்தனமான நம்பிக்கையை விடு..  செத்துபோனவனை வைத்து என்ன செய்ய போகிறாய்?

(விஸ்ருஜே மாம் மதிம் மூடே கிம் ம்ருதேன கரிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

ஒழுக்கமானவளே! என் மனைவிகள் அனைவருக்கும் மேலே உன்னை ஆக்கி, பட்டத்து ராணியாக உன்னை ஆக்குகிறேன்.

(பவஸ்ய பத்ரே பார்யானாம் சர்வாசாம் ஈஸ்வரி மம  - வால்மீகி ராமாயணம்)

அல்ப புண்ணியங்கள் கொண்டவளே! மூடத்தனமாக நீ உன்னையே எல்லாம் தெரிந்தவள் என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்.

(அல்ப புண்யே நிவ்ருத்தார்த்தே மூடே பாண்டிதம் ஆனினி!  - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்... உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.

(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா!  - வால்மீகி ராமாயணம்)

இந்த ராமன் சுக்ரீவன் தலைமை ஏற்ற பெரும் படையை கூட்டிக்கொண்டு, என்னை கொல்வதற்கு கடற்கரை பக்கம் போர் புரிய வந்தான்.

(சமாயாத சமுத்ராந்தம் மாம் ஹந்தும் கில ராகவ:!  - வால்மீகி ராமாயணம்)

சூரியன் மறைந்த வேளையில், வடக்கு சமுத்திர கரையில் படைகளுடன் தங்கி இருந்தான்.

பயண களைப்பில் சோர்ந்து இருந்த இவர்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர்.

என்னுடைய ஒற்றர் படை அங்கு சென்று இதை கவனித்தனர்.

ப்ரஹஸ்தன் தலைமையில் பெரும் ராக்ஷஸ படை அங்கு சென்றனர்.

(தத் ப்ரஹஸ்த ப்ரணீதேன பலேன மஹதா மம! - வால்மீகி ராமாயணம்)

ராமனின் மொத்த படைகளும் இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.

ராக்ஷஸர்கள் தங்களிடம் இருந்த பிராணிகளை பிடிக்கும் ஆயுதங்களை கொண்டும், கதையை கொண்டும், சக்கரத்தை கொண்டும், கம்புகளை கொண்டும், கத்தியை கொண்டும், அம்புகளை கொண்டும், கூர்மையான ஆணிகள் பதித்த கதையை கொண்டும், ஏவுகணை போன்ற ஆயுதங்களை கொண்டும் அடியோடு வானர கூட்டத்தை அழித்தனர்.

அந்த சமயத்தில், தூங்கி கொண்டிருந்த ராமனின் அருகில் சென்ற ப்ரஹஸ்தன் தன் கூரிய வாளால் ராமனின் தலையை சீவி விட்டான். அங்கு அவனை எதிர்ப்பதற்கு ஒரு ஆள் இல்லை.

(அத சுப்தஸ்ய ராமஸ்ய ப்ரஹஸ்தேன ப்ரமாதினா! அசக்தம் க்ருத ஹஸ்தேன சிரஸ் சின்னம் மஹாசினா! - வால்மீகி ராமாயணம்)


விபீஷணன் சிறைபிடிக்கப்பட்டான்.

லக்ஷ்மணன் எஞ்சி இருந்த வானர கூட்டத்துடன் விரட்டி அடிக்கப்பட்டான்.

சுக்ரீவன் கழுத்து நொறுக்கப்பட்டு கீழே வீழ்ந்தான்.

ஹனுமான் ராக்ஷஸர்களால் தாடை உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

ஜாம்பவான் மண்டி இட்டு காலில் விழுந்தான். அவனை ஈட்டியால் குத்தி மரத்தை சாய்ப்பது போல சாய்த்து விட்டனர்.

மைந்தன், த்விவிதன் இருவரும் வீழ்த்தப்பட்டனர். 

அனைவரும் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அழுது விழுந்தனர்.

பனசன் பனச மரத்தை போல விழுந்தான்.

தரீமுகன் பலமுறை வெட்டப்பட்டு கீழே விழுந்தான்.

குமுதன் அம்புகளால் வீழ்த்தப்பட்டான். வலியால் கதற கூட முடியாமல் இறந்தான்.

அங்கதன் பல ஆயிரம் அம்புகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தான்.

வானர கூட்டம் யானைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

பலர் தேரிலும் குதிரைகளின் கால்களிலும் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

யானைகள் சிங்கத்தால் பின் பக்கத்தில் இருந்து தாக்கப்படுவது போல, ராக்ஷஸர்கள் வானரர்களை தாக்கினர். 

பலர் கடலில் விழுந்து உயிர் விட்டனர்.

பல வானரர்கள் கடற்கரையிலும், மலைகளிலும், மரங்களுக்கு இடையிலும் ராக்ஷஸர்களால் கொல்லப்பட்டனர்.

இப்படி என்னுடைய படைகள் உன் கணவனையும் அவன் படையையும் அழித்து விட்டனர்.

உனக்காக புழுதி படிந்த ரத்தம் ஒழுகும் ராமனின் தலையை கொண்டு வந்து இருக்கிறேன்."

இப்படி சொல்லிக்கொண்டே, அருகில் இருந்த ஒரு ராக்ஷஸியை பார்த்து, 

"வித்யுஜிஹ்வாவை போரிலிருந்து கொண்டு வந்த ராமனின் தலையோடு இங்கு வரச்சொல்" 

என்று கட்டளை இட்டான்.

வித்யுஜிஹ்வா மாயா ரூபமான ராமனின் தலையுடன், ராமபிரான் வைத்து இருக்கும் அம்பு வில்லை காண்பித்தான்.

ராவணன், வித்யுஜிஹ்வாவை பார்த்து, 

"அந்த ராமனின் தலையை சீதைக்கு முன் வை. கடைசி முறையாக அவள் கணவனை பார்த்து கொள்ளட்டும்." என்றான்

(அக்ரத குரு சீதாயா சீக்ரம் தாசரதே சிர:! அவஸ்தாம் பஸ்சிமாம் பர்த்ரு க்ருபனா சாது பஸ்யது!! - வால்மீகி ராமாயணம்)


உடனே வித்யுஜிஹ்வா சீதையின் முன் மாயா ரூபமான ராமபிரான் தலையை வைத்தான்.


ராவணன், மாயா ரூபமான ராமனின் வில்லை சீதையின் முன் வீசிவிட்டு, சீதையை பார்த்து,

"இதோ பார்.. ராமனின் நாண் ஏற்றப்பட்ட வில். இரவோடு இரவாக அந்த மனிதன் கொல்லப்பட்ட பின், ப்ரஹஸ்தன் இதை கொண்டு வந்தான்.

சீதா! நீ எனக்கு வசமாகி விடு."

என்று பேசினான்.

ராமபிரானின் தலையையும், தலை கேசத்தையும், அவர் அணிந்து இருந்த குண்டலம் போன்ற ஆபரணங்களையும், வில்லையும் பார்த்த சீதை, ராவணன் சொன்ன வார்த்தையை நம்பி விட்டாள்.

கதறி அழுத சீதை, நிலை தடுமாறி பேசலானாள். 

"கைகேயி! சந்தோஷமாக இருங்கள். இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய உத்தமர் கொலை செய்யப்பட்டு விட்டார்.

உங்களால் குலமே நாசமாகி விட்டது.

மற்றவர்கள் துயரத்தில் நீங்கள் ஆனந்தப்படுங்கள்.

எந்த விதத்தில் உங்களுக்கு ராமபிரான் துன்பம் செய்தார்?

எதற்காக அவருக்கு மரவுரி அணிந்து வனம் செல்ல செய்தீர்கள்?"

இப்படி சொல்லிக்கொண்டே வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரம் போல சீதை மயங்கி விழுந்தாள்.


சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு, ராமபிரானின் தலையை முகர்ந்து கொண்டே, புலம்ப ஆரம்பித்தாள்...

"ஐயோ! நான் இறந்து விட்டேன். 

நீண்ட கைகள் உடைய என் நாதா! 

சத்தியத்தை கடைபிடிக்கும் நாயகா! நான் இறந்து விட்டேன்!

ஐயோ! நான் விதவை ஆனேனே! 


மனைவிக்கு முன்னால் கணவன் போவது நியாயமா?

ஒழுக்கத்தில் சிறந்தவரே! என்னை முந்தி கொண்டு நீங்கள் சென்று விட்டீர்களா?

என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..

ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!

உங்களுக்கு நீண்ட ஆயுசு என்று ஜாதகம் கணித்தார்களே!! 

அவர்கள் சொன்ன சொல் பொய் போனதே! இப்படி சிறுவயதோடு உங்கள் வாழ்வு முடிந்து விட்டதே!

எந்த நேரமும் சுதாரிப்புடன் இருக்கும் உங்களையும், காலம் விழுங்கி விட்டதா?

அரசாங்க அறிவு உள்ளவராயிற்றே நீங்கள்.. எப்படி நீங்கள் இப்படி உடலை விட்டு பிரிந்து இருக்க முடியும்?

பெரும் அபாயகரமான சூழ்நிலையிலும் தப்பித்து கொள்ளும் திறன் கொண்டவரல்லவா நீங்கள்?

உங்களை எப்படி இந்த இரவு கொள்ளை கொண்டது?

ஓ தாமரை கண்ணா! என்னை விட்டு பிரிந்து விட்டீர்களே!

எளிமையான என்னை விட்டு விட்டு, பூமியின் மேல் உள்ள ஆசையால் சென்று விட்டீர்களா?

இந்த அற்புதமான வில்லை நான் எத்தனை முறை மலர்களால் பூஜித்து இருப்பேன்.

குறை இல்லாதவரே! நீங்கள் உங்கள் மூதாதையர்களும், என் மாமனார் தசரதர் இருக்கும் லோகத்துக்கு சென்று விட்டீர்களா?

உங்களுடைய ஒழுக்கமான நடத்தையால் நீங்கள் நக்ஷத்திரமாக இருந்து கொண்டு இருக்கிறீர்களா?

ஏன் நீங்கள் என்னை பார்க்க வில்லை? 

என்னிடம் ஏன் பேசவில்லை?

இளமை காலத்தில் உங்களை மணந்த பின், உங்களை தானே நான் தொடர்கிறேன்.

மணமேடையில் என் கை பிடித்து, என்னை ஒருபோதும் விட மாட்டேன் என்று சொன்னீர்களே!

அதை ஞாபகபடுத்தி கொண்டு, உடனே என்னையும் அழைத்து கொள்ளுங்கள்.

(சம்ஸ்ருதம் க்ருஹ்னதா பாணிம் சரிஷ்யாமீதி யத் த்வயா! ஸ்மர தன் மம காகுத்ஸம் நய மாமபி துக்கிதாம்!! - வால்மீகி ராமாயணம்)

என்னை இந்த உலகத்தில் விட்டு விட்டு, வேறு உலகத்துக்கு ஏன் சென்றீர்கள்?

அடைக்கலம் தருபவரே! என்னால் அணைக்கப்பட்ட உங்கள் தேகத்தை, பிராணிகள் எப்படி இழுத்து செல்ல முடியும்?

வேத காரியங்கள் பல செய்தீர்களே. உங்களுக்கு வேத முறைப்படி இறுதி காரியங்கள் ஏன் கிடைக்கவில்லை?

நாம் மூன்று பேரும் வனவாசம் வந்தோம்.

இப்பொழுது லக்ஷ்மணன் மட்டுமே திரும்பி செல்கிறான்.

கௌசல்யா மாதா லக்ஷ்மணனை கேட்பாளே!! 

லக்ஷ்மணன் ராக்ஷஸர்களால் இரவில் நடந்த பேரழிவை சொல்லவேண்டி வருமே!

நான் இந்த ராக்ஷஸர்களிடம் சிக்கி இருப்பதையும், ராமபிரானை விண்ணுலகம் சென்றதையும் கேட்டால், கௌசல்யா மாதாவின் இதயம் சுக்கு நூறாகி விடுமே!!

இவர் எனக்காக கடல் கடந்து வந்தது பலன் அளிக்கவில்லையே!!

இந்த சிறிய சண்டையில் இவர் கொல்லப்பட்டு விட்டாரே!!

மனைவி என்ற பெயரில் நானே மரணமாக வந்து தொலைந்தேனே! 

இதை தெரிந்து கொள்ளாமல் ராகவன் என்னை மணந்து கொண்டு விட்டாரே!

நான் போன ஜென்மத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வதை நிறுத்தி இருக்கிறேன். அதனால் தான் யாருக்கும் அபயம் தரும் இவருக்கு மனைவியாக இருந்தும், இத்தனை துன்பத்தை அனுபவிக்கிறேன்.

ராவணா! என் உடலையும் ராமபிரானின் உடலோடு வைத்து விடு.

என் கணவனோடு என்னையும் எரித்து விடு. இந்த புண்ணிய காரியத்தையாவது செய்.

என் தலை ராமபிரான் தலையோடு சேரட்டும்.. என் தேகம் ராமபிரானின் தேகத்தோடு சேரட்டும். நான் அந்த உயர்ந்த ஆத்மாவான ராபிரானையே தொடர்கிறேன்!"

இவ்வாறு தன் கணவனின் தலையையும், வில்லையும் பார்த்து பார்த்து புலம்பினாள் சீதை.

இப்படி இவள் அழுது கொண்டு இருக்க, ராக்ஷஸ படையில் இருந்து சிலர் அங்கு வந்து கை குவித்து நின்றனர்.

பிறகு ராவணனை பார்த்து, 

"ப்ரஹஸ்தன் அனைத்து மந்திரிகளுடன் வந்து இருக்கிறார். உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறார். இது ஒரு அவசர செய்தி. தயவு செய்து உங்கள் அமைச்சர்களை பார்க்க அழைக்கிறோம்" என்றார்கள்.

இதை கேட்ட ராவணன் உடனே அசோக வனத்தை விட்டு, தன் சபையை நோக்கி சென்றான்.

ராவணன் நகர்ந்து போன உடனேயே, அங்கு இருந்த மாயா ரூபமான ராமபிரான் தலையும், வில்லும் மறைந்து போயின.

(அந்தர்தானம் து தச்சீர்ஷம் தச்ச கார் முகம் உத்தமம்! ஜகாம ராவணஸ்யைவ நிர்யான சமன் அந்தரம்!! - வால்மீகி ராமாயணம்)










Thursday 27 August 2020

கிருஷ்ணகிரி என்ற ஊர் எத்தனை பழமை வாய்ந்தது? வால்மீகி ராமாயணம் காட்டுகிறது.. மூன்று விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்றும் வால்மீகி ராமாயண சொல்கிறது. தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?..

ராமாயணம் நடந்த காலம் த்ரேதா யுகம்.. 
சுமார் 8 லட்சம் வருடம் முன்பு நடந்த அவதாரம்.
கலியுகம் ஆரம்பித்து (3102BCE) 5000 வருடங்கள் ஆகிறது.
கலியுகம் முன் துவாபர யுகம். இந்த யுகம் 8,64,000 வருடங்கள்.
துவாபர யுகத்திற்கு முன் த்ரேதா யுகம்.
ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த சரித்திரம்.

அன்று த்ரேதா யுகத்தில், 'மூன்று விதமான மனிதர்கள்' இருந்ததாக சொல்கிறது - 'மனிதர்கள், வானரர்கள், ராக்ஷஸர்கள்'.

மனிதர்களை விட பலசாலிகளாகவும், மாயம் தெரிந்தவர்களாகவும், படித்தவர்களாகவும் இவர்கள் இருந்ததாக சொல்கிறது. 
ஆனால் குரங்கு போன்ற நிலையில்லா புத்தி 'வானரர்களுக்கும்', 
மனித மாமிசம் பச்சையாக உண்ணும் பழக்கம் 'ராக்ஷஸர்களுக்கும்' இருந்ததாக சொல்லப்படுகிறது.



ஹோமோசபியன் (home Sapien) என்ற நம்மை போன்ற உருவமைப்பு உள்ள மனிதர்களாக அகத்தியர், ராமபிரான், அயோத்தி மக்கள், மிதிலை மக்கள் என்று பலர் ராமாயணத்தில் காட்டப்படுகிறார்கள்.

இதை எழுதிய 'தமிழன் வால்மீகி' உட்பட மனித வர்க்கமாக காட்டப்படுகிறார்கள்.

ஹோமோ எரக்டஸ் (homo Erectus) என்ற மனித உருவம் கொண்டவர்கள் பல லட்சம் வருடம் முன்பு இருந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.
ஹோமோ எரக்டஸ் (homo Erectus) என்ற மனித உருவம் கொண்ட, தாவும் திறன் உள்ள ஹனுமான், சுக்ரீவன், அங்கதன் போன்ற வான்-நரர்கள் (வானரர்கள்) எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டுகிறது. 

ஹோமோ நைன்டெர்தல் (homo naenderthal) என்ற மனித உருவம் கொண்ட, பலசாலியான, மனித மாமிசம் உண்பவர்கள், பல லட்சம் வருடம் முன்பு இருந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.
ஹோமோ நைன்டெர்தல் (homo naenderthal) என்ற மனித உருவம் கொண்ட, மனித மாமிசம் உண்ணும் சூர்பனகா, கும்பகர்ணன், ராவணன், மாரீசன் போன்ற ராக்ஷஸர்கள் எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டுகிறது.

ராமாயணம் நடந்ததற்கு இலங்கை சாட்சி, ராம சேது (அணை) சாட்சி, கிருஷ்ணகிரி சாட்சி, அயோத்தி சாட்சி, மிதிலை சாட்சி..

இடம் மட்டுமல்ல, அறிவியல் காட்டும் 3 வகை மனிதர்களை பற்றி, அவர்கள் எப்படி இருந்தார்கள்? என்பதற்கும் ராமாயணம் சாட்சி.






அயோத்தி என்ற நகரம் மட்டும் பழமையானதல்ல, 'அயோத்தி' என்ற பெயர் கூட பழமையானது. 
இந்த நகரம்' ராமபிரான் காலத்துக்கும் முன்பேயே இருந்து இருக்கிறது.
குறைந்தபட்சம் 8 லக்ஷம் வருடம் ஆகியும், நகரத்தின் பெயர் நிலைத்து இருக்கிறது என்பதே 'அயோத்திக்கு' பெருமை.
இன்று வரை, அயோத்தி என்ற பெயரிலேயே இருக்கிறது.

அது போல 
'கிருஷ்ணகிரி' என்ற பெயரும் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் வருகிறது. 
8 லக்ஷம் வருடம் ஆகியும், நகரத்தின் பெயர் நிலைத்து இருக்கிறது. 

8 லட்ச வருடங்களுக்கும் மேல் இந்த பெயரை தனக்கே உரிமையாக கொண்டுள்ளது இந்த ஊர்.

வால்மீகி ராமாயணத்தில் 'யுத்த காண்டத்தில்' கிருஷ்ணகிரி என்ற இந்த ஊரின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது...

தாமரை போன்ற கண்களையுடைய ராமபிரான் மஹேந்திர மலையின் உச்சிக்கு சென்றார்.
அங்கிருந்து ஆமைகளும், மீன்களும் நிரம்பி இருக்கும் சமுத்திரத்தை கண்டார்.

பிறகு, வானர சேனையுடன், சஹ்ய மலை, மலய மலையை கடந்து, பிறகு வேலாவனம் என்ற காட்டை கடந்து கடற்கரையை அடைந்தார்கள். (இன்று ராமேஸ்வரம் என்று பெயர்)

(தே சஹ்யம் சமதிக்ரம்ய மலயஸ்ச மஹா கிரிம்! ஆசேதுரானுபூர்வ்யேன சமுத்ரம் பீமநிஸ்வனம்!
அவருஹ்ய ஜகாமாஸு வேலாவனம் அனுத்தமம் - வால்மீகி ராமாயணம்)

இதற்கு பிறகு விபீஷணன் ராமபிரானை சரண் அடைகிறார்.
சமுத்திர தேவன் ராமபிரான் முன் காட்சி கொடுத்து, 'நலன்' இந்த பாலத்தை கட்ட ஆரம்பிக்கட்டும், நான் அதை காக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

அப்பொழுது ராவணனின் ஒற்றன் 'சார்தூளா' என்பவன் ராமபிரான் கடற்கரை வரை வந்து விட்டதை தெரிவித்தான்.
ராவணன்  'சுகா' என்ற ராக்ஷஸ ஒற்றனை என்ன நடக்கிறது என்று பார்த்து வர உத்தரவு இட்டான். 

மாயாவியான இவன் பறவை ரூபம் எடுத்து பறந்து வர, அவனை வானரர்கள் பிடித்து இறக்கைகளை வெட்டி, சிறை பிடித்தனர்.

'தூதுவனை கொல்ல கூடாது' என்று இவன் கதற, ராமபிரான் அனைவரையும் தடுத்து விட்டார்.

'வெறும் 5 நாட்களில் பாலம் அமைத்து விட்டார்' நலன்
ராம சேது அமைக்கப்பட்டு, படைகளுடன் இலங்கையை வந்து அடைந்தார்.
இலங்கை வந்ததும் ராமபிரான் 'சுகா' என்ற ஒற்றனை விடுவிக்க சொல்லி விட்டார்.

'உயிர் போய் விடுமோ' என்ற பயந்து இருந்த சுகா, ராவணனிடம் ஓடி சென்று, 'ராமபிரான் படைகளோடு வந்து இலங்கைக்கே வந்து விட்டார்' என்று சொன்னான்.

அப்பொழுது ராவணன் சிரித்த கொண்டே,
"என்ன இது? ஏன் இப்படி இரண்டு கைகளும் ஒடிந்து இருக்கிறாய்? அந்த நிலையான புத்தி இல்லாத வானரர்களிடமா (homo erectus) மாட்டி கொண்டு விட்டாய்?" 
என்று சிரித்தான்.
(கச்சின்ன அநேக சித்தானாம் தேஷாம் த்வம் வசமாகத? - வால்மீகி ராமாயணம்)

"இலங்கைக்கே வந்து விட்டார்கள்" என்றதும், ராவணன், சுகா மற்றும் சாரண என்ற இருவரை அழைத்து மீண்டும் படைகளின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவத்தை மாற்றி இவர்கள் வானர கூட்டத்தின் பலத்தை வேவு பார்க்க ஆரம்பித்தனர்.

விபீஷணன் இவர்களை கண்டுபிடித்து, ராமபிரானிடம் சொல்ல, இருவரையும் வானரர்கள் பிடித்து நிறுத்தினர்.




'ராவணன் தான் தங்களை அனுப்பினார்' என்று சொல்ல, ராமபிரான் சிரித்து கொண்டே, 
"உன் அரசன் சொன்ன வேலையை செய்து விட்டீர்களா? முழு படை பலத்தையும் பார்த்து விட்டீர்களா? இன்னும் பார்க்க வேண்டுமா? பார்த்து விட்டால் கிளம்புங்கள். 
இன்னும் பார்க்கவில்லை என்றால், விபீஷணனே உங்களுக்கு எங்கள் படைபலத்தை காட்டுவார்". 

இப்படி ராமபிரான் அனுமதியோடு அனைத்தும் விஷயங்களும் அறிந்து கொண்ட பின், ராவணன் இருக்குமிடம் சென்றனர்.

நடந்த விஷயங்களை கூறி, பல வானர வீரர்கள் பற்றியும், அவர்கள் எந்த தேசத்தில் இருந்து வந்துள்ளார்கள் என்றும் சொல்கின்றனர்.

சாரணன் ராவணனிடம், ஒரு வானரனை காண்பித்து சொல்கிறான், 

"இதோ, சிங்கம் போல பிடரி மயிருடன் இருக்கிறானே! 
மனதில் என்ன நினைக்கிறான் என்று முக பாவனை கொண்டு அறிய முடியாதபடி இருக்கிறானே! 
கொளுத்தும் நெருப்பை போல இலங்கையை பார்க்கிறானே! 
அந்த வானர வீரனின் பெயர் தான் 'ரம்போ'. 
இவன் விந்திய மலை, கிருஷ்ண கிரி, சஹ்ய மலை, சுதர்சன மலை பகுதிகளை ஆட்சி செய்கிறான்" 
என்று ராவணனிடம் சொன்னான்.

(விந்த்யம் க்ருஷ்ணகிரிம் சஹ்யம் பர்வதம் ச சுதர்சனம்! ராஜன் சததம் அத்யாஸ்தே ரம்போ நாமைஷ யூதப:!! - வால்மீகி ராமாயணம்)

'கிருஷ்ணகிரி' என்ற பெயர் 8 லட்சம் பழமை வாய்ந்தது என்று தெரிகிறது.

'அன்பில்' என்ற பிரதேசத்தில் அவதரித்த 'தமிழன் வால்மீகி' கொடுத்த ராமாயணத்தை, தமிழன் அனைவரும் படிக்க வேண்டும்.