'குங்குமப்பூ' கொண்டு பூஜிக்காமல், ஏன் குங்குமத்தால் அம்பாளை பூஜிக்கிறார்கள்?....
ஏன் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்து, நெற்றியில் குங்குமம் இட்டு கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்?
"குங்குமம்" என்பது சம்ஸ்க்ரித சொல்,
உண்மையில் அந்த சொல், நாம் உபயோகிக்கும் குங்குமத்தை அல்ல, குங்குமப்பூவை" குறிக்கிறது.
தேவி உபாசனை செய்யும் போது, "குங்குமப்பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்"
என்று தான் வேத சாஸ்திரம் சொல்கிறது.
இதை குறித்து ஒரு சமயம் மஹா பெரியவர், "குங்கும பூவை கொண்டு செய்யாமல், ஏன் இப்பொழுது குங்குமத்தால் அம்பாளுக்கு பூஜை செய்கிறார்கள்?" என்று கேட்டார்.
யாரும் பதில் சொல்லவில்லை.
பதில் தெரிந்து இருந்தாலும், அவருடைய அழகான பதிலுக்காக அமைதி காத்தனர்.
மஹா பெரியவர் பேச தொடங்கினாராம்..
"வைத்திய சாஸ்திரப்படி 'குங்கும பூவுக்கு சரீரத்தின் புண்களை ஆற்றி, சூட்டை குறைக்கும் குணம் உண்டு' என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
அதே குணம் மஞ்சளுக்கும் உண்டு என்று சொல்கிறது.
சாஸ்திரத்தில், அனைத்துக்கும் 'ப்ரதிநிதி விசாரம்' என்று உண்டு.
அதாவது,
ஒன்று கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதில் அதற்கு ஈடான மற்றொரு பொருளை எடுத்து கொள்ளலாம் என்று உள்ளது.
அதன் படி,
குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பவர்கள் சிலர்.
குங்குமப்பூவோ விலை அதிகம்.
அதற்கு பதில், மஞ்சளை பாலில் கலந்து குடிப்பார்கள், மருத்துவ ரீதியாக.
அதே போல,
அம்பாளுக்கு பூஜை செய்யும் போது, குங்கும பூ இல்லாத நிலையில், அதற்கு ப்ரதிநிதியாக மஞ்சளுக்கு கொஞ்சம் சிவப்பு நிறம் கொடுத்து, 'குங்குமம்' என்று சொல்லி, அம்பாளுக்கு பூஜிக்கிறோம்"
என்று விளக்கினாராம் காஞ்சி மஹா பெரியவர்.
பெண்கள் நெற்றியில் குங்குமம், மஞ்சள் இட்டு கொள்வதற்குள் அடங்கி இருக்கும் மருத்துவ குணமும் இதன் மூலம் அறியலாம்.
அலங்கார ப்ரியனான பெருமாளுக்கு (ராமருக்கோ, கிருஷ்ணருக்கோ), குங்குமப்பூவால் பூஜை செய்வது விசேஷம்... முடிந்தவர்கள் செய்யலாம்.
ஹிந்து மதத்தில் எதுவுமே காரணமில்லாமல் இல்லை என்று அறிந்து கொண்டாலேயே, ஹிந்துக்கள் சுகமாக வாழலாம்.
ஆண்கள், பெண்கள், ரிஷிகள், ராக்ஷஸர்கள், மிருகங்கள் என்று அனைவருமே, அவரை பார்க்க வேண்டும், பழக வேண்டும், பேச வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம்.
ராமபிரானும் தானே முன் வந்து பேசி பழகுவாராம். யாரையும் அவமரியாதை செய்ய மாட்டாராம், யாரிடமும் பாராமுகமாக இருக்க மாட்டாராம். எல்லோருடைய நலனிலும் அக்கறை காட்டுவாராம்.
தசரதர் "தன் பிள்ளை" என்று ஆசையாக இருந்தார்.
ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.
இருந்தாலும்,
ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் பித்ரு பக்தியை கண்டு திகைத்து நிற்பாராம்.
எல்லையில்லா பாசம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல்,ராமபிரானை பெருமையுடன் பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவாராம்.
லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோர், 'ராமபிரான் தன் அண்ணா' என்று ஆசையாக வருவார்களாம்.
ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.
இருந்தாலும்,
ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் சகோதர பாசத்தை கண்டு திகைத்து நிற்பார்களாம்.
எல்லையில்லா பாசம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல், ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவார்களாம்.
வசிஷ்டர் மற்றும் பல ரிஷிகள், 'பரமாத்மாவே ராமனாக வந்து இருக்கிறார்' என்று ஆசையாக வருவார்களாம்.
ராமபிரானும் தானே வலிய வந்து அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.
இருந்தாலும்,
ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் மரியாதையை கண்டு திகைத்து நிற்பார்களாம்.
எல்லையில்லா ஆனந்தம் இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல் தன் ஆசிரமத்தை விட்டு, தசரதர் அரண்மனையிலேயே தங்கி கொண்டு, தினமும் ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்பட்டார்களாம்.
ஹனுமான், 'ராமபிரானுடைய தாஸன்' என்று ஆசையாக வருவாராம். ராமபிரானும் தானே வலிய வந்து, அன்போடு பழகும் குணம் கொண்டவர் தான்.
இருந்தாலும்,
ராமபிரானின் எண்ணிலடங்கா தெய்வ குணங்கள், அதே சமயம் தன்னிடம் அவர் காட்டும் அன்பை கண்டு திகைத்து நிற்பாராம்.
எல்லையில்லா பக்தி இருந்தும், சகஜமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் மனமில்லாமல், ராமபிரானை பார்த்து கொண்டே இருக்க ஆசைப்படுவாராம்.
பரமாத்மா ராமபிரானாக வந்ததை கண்டு, ஆண்களுக்கே இப்படி ஆசை, நிலை உண்டாகுமென்றால், தாயான கௌசல்யாவுக்கும், மஹாலட்சுமியான சீதா தேவிக்கும் ஏற்படும் ஆசையை சொல்லவும் வேண்டுமா?.
நரமாமிசம் சாப்பிடலாம் என்று வந்த ராக்ஷஸி சூர்பனகை, ராமபிரானின் தோற்றத்தை கண்டதுமே, மதி மயங்கி போனதில் ஆச்சரியமில்லை.
பாகுபாடு இல்லாமல், அனைவரையும் மயக்கியது ராமபிரானின் தெய்வ தரிசனம்.
ராமபிரான் தான் அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர் தான் என்றாலும், ராமபிரானை யாராலும் அத்தனை சகஜமாக நெருங்க முடியாத படி, எண்ணிலடங்கா கல்யான குணங்களுடன் இருந்தார்.
ஆசை இருந்தாலும், இவர் கம்பீரமும், குணங்களும், தோற்றமும் அனைவரையும் திகைப்படைய செய்தது... அவர் நிழல் கூட அனைவரையும் மோஹிக்க செய்தது.
த்ரேதா யுகம், துவாபர யுகத்துக்கும் (8 லட்சம் 64 ஆயிரம் வருடம்) முந்தியது.
ராம அவதாரம் செய்த போது, 'பார்ப்பவர்கள் அனைவருக்குமே இந்த நிலை ஏற்பட்டது' என்று வால்மீகி நமக்கு காட்டுகிறார்.
ஆசையாக ஓடி வரும் அனைவரும், ராமபிரானின் கம்பீரத்தை, குணத்தை, தோற்றத்தை பார்த்து அப்படியே நின்று விடுவார்கள் என்று வால்மீகி நமக்கு காட்டுகிறார்.
இந்த நிலையை, இந்த அனுபவத்தை நாமும் உணர, நமக்காக கடலை படைத்தார், பரமாத்மா நாராயணன்.
'பீச்சுக்கு போக வேண்டும்' என்று ஆசை ஆசையாக பலர் கிளம்பி செல்வார்கள்.
கடல் அலை அருகே வந்தவுடன், கடலின் கம்பீரத்தை, தோற்றத்தை, கடல் நடுவே உள்ள ஆழ்ந்த அமைதியை கண்டு, பிரமித்து அங்கேயே நின்று விடுவார்கள்.
'பீச்சுக்கு இத்தனை தூரம் கிளம்பி வந்தோம், கடலுக்குள் என்ன இருக்கிறது என்று கூட பார்க்க முடியவில்லையே?
சீ கடலை பார்க்கவா வந்தோம்... வேண்டாம். கிளம்பலாம்"
என்றும் நினைக்காமல், அப்படியே கடல் அலைகளின் அழகை, காற்றை ரசித்து பார்த்து கொண்டே இருப்பார்கள்.
கடலை தரிசனம் செய்ததிலேயே திருப்தி கொள்கிறார்கள், பலர்.
பரமாத்மாநாராயணன்தரிசனம் நமக்கு கிடைத்தால், எப்படி இருக்கும்? என்ற ஒரு அனுபவத்தை, கடல் நமக்கு காட்டுகிறது..
"ராமபிரான் கடல் போன்றவர்" என்று சொல்வதற்கு காரணமும் இதுவே.
குகன் போன்றவர்கள், கடலை தரிசனம் செய்ததிலேயேதிருப்தி அடைந்தார்கள்.
பரதனை போன்றவர்கள், கடலில் கொஞ்சம் படகில் சவாரி செய்த திருப்தி அடைந்தார்கள்.
ஹனுமானை போன்றவர்கள், கடலில் மூழ்கி, சில முத்துக்களை எடுத்த திருப்தி அடைந்தார்கள்.
இன்னும் கடலை முழுமையாக உணர்ந்தவர்கள் இல்லை...
அது போல,
ராமபிரானின் கல்யாண குணங்களை முழுமையாக உணர்ந்தவர்கள் இல்லை...
ராம பக்தர்களான மகாத்மாக்களுக்கு, கடலை பார்க்கும் போது, ராமபிரானின் குணங்களும், தரிசன ஆனந்தமும் ஏற்படுகிறது.
இந்த அனுபவம் நமக்கும் ஏற்பட்டு, ராமபிரானின் அருள் நமக்கும் கிடைக்க ஆசைப்படுவோம்.
விளையாடி கொண்டிருந்த தன் குழந்தை ஒரு நாள் திடீரென்று சாக்கடைக்குள்விழுந்து விட்டது.
இதை பார்த்த தாய், பதறி போனாள்.
மிகவும் நாகரீகமானவள் அவள். அழகானவள். சுத்தமானவள்.
தனக்கு அழுக்காகுமே?
தான் போய் சாக்கடையில் இறங்குவதாவது?
என்று துளியும் நினைக்காமல், குழந்தையை காக்க வேண்டுமே! என்ற ஒரே எண்ணத்தில், தானும் சாக்கடையில் குதித்து விட்டாள்.
குழந்தையை மேலும் மூழ்கி விடாமல் தானே கைப்பற்றி, சாக்கடையில் இருந்து தூக்கி விட்டு, தானும் வெளி வந்தாள்.
அது போல,
வைகுண்டத்தில் இருக்கும் வாசுதேவன், ஆனந்தமயமான மோக்ஷத்தை விட்டு விட்டு, 'ஜீவாத்மாக்கள் சாக்கடை போன்ற உலக விஷயங்களில் விழுந்து விட்டதே!' என்று நினைத்து,
'இவர்களை எப்படியாவது மோக்ஷத்துக்கு அழைத்து சென்று விட வேண்டும்' என்று முடிவு கட்டி, தானே உலகத்தில் குதித்து விட்டார்.
ராமபிரானாகவும், கிருஷ்ணராகவும் அவதாரம் செய்து அனைவரிடமும் பழகினார்.
இந்த விபவ அவதாரங்கள் 'குறிப்பிட்ட காலம் வரை தான்' என்பதால், விபவ அவதாரம் போதாதென்று,
'ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு' அனைவரும் அர்ச்சனை (பூஜை) செய்யும் படியாக, ஒவ்வொரு ஜீவனுக்கும் கிடைக்கும் படியாக அர்ச்ச அவதாரம் செய்து விட்டார்.
அவரவர் இஷ்டத்துக்கு பூஜை செய்யட்டும்..
பூஜை செய்யாமல் கூட போகட்டும்.. இவர்கள் வீட்டில் இவர்களை விடாமல் தங்கி விடுவோம்.
'தன்னை என்றாவது ஒரு நாள், இவன் கவனித்து விட்டால், தன்னிடம் பக்தி ஏற்பட செய்து, ஞானத்தை கொடுத்து, மோக்ஷம் கொடுத்து விடலாம்' என்று பிடிவாதம் செய்து கொண்டு அவதரித்து விட்டார்.
ராமபிரானாக, கிருஷ்ணராக வந்த நோக்கமும்,
கோவிலில் இருப்பதற்கு நோக்கமும்,
நம் வீட்டில் பூஜை அறையில் இருப்பதற்கு நோக்கமும்,
படங்களாக வருவதற்கு நோக்கமும் ஒன்றே.
நம்மை எப்படியாவது கை பிடித்து தூக்கி, மோக்ஷம் கொடுப்பதற்கே, பெருமாள் ஒரு தாயை போல, சம்சாரம் என்னும் சாக்கடையில் தானே குதிக்கிறார்.
நம் வீட்டில் இருக்கும் ராம, கிருஷ்ண விக்கிரகத்தை, படத்தை இந்த அனுபவத்தில் பார்க்க நாம் ஆரம்பிக்கும் போது தான், பகவானின் கருணையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே, பரமாத்மாவை ஒரு பொருளுக்குள், தேசத்துக்குள், காலத்துக்குள் அடைக்க முடியாது.
ஆதலால், "பரமாத்மாவை எனக்கு காட்டு" என்று ஒருவன் கேட்டால், "அவனுக்கு காட்ட முடியாது"என்று சொல்வதற்கு காரணமே இதுதான்.
பரமாத்மாவை "அனுமானத்தாலும்" தெரிந்து கொள்ள முடியாது.
காரணம்,
நம் அனுமானத்துக்கும், அப்பாற்பட்டவர் பரமாத்மா.
நாம் பொதுவாகவே ஒரு 'காரியத்தை' பார்த்து தான், 'காரணத்தை' அனுமானம் செய்கிறோம்.
உதாரணத்திற்கு,
'வீடு' என்ற ஒரு காரியம் கண் எதிரே இருப்பதை பார்த்து, 'யாரோ ஒருவர் இதை முன்பு கட்டி இருக்கிறார்'
என்று அனுமானிக்கிறோம்.
ஆனால்,
ஜீவாத்மாவின் அனுமானம் அனைத்துமே சரியாகவும் இருக்க முடியாது.
நம் 'புத்திக்கு எட்டிய அளவு தான் அனுமானமும்' உண்டாகிறது.
ஒருவனின் அனுமானம் பிற்காலத்தில் தவறு என்று கூட நிரூபிக்க படலாம்.
"உலகம் தட்டை' என்று ஒரு அந்நிய மதம் அனுமானித்தது.
கலிலியோ 'உலகம் உருண்டை' என்று அனுமானித்தார். அதற்காக அவரை தண்டித்தார்கள்.
பிற்காலத்தில்,
'உலகம் உருண்டை தான்' என்று நிரூபிக்கப்பட, மனித அனுமானங்களால் உருவாக்கப்பட்ட மத கொள்கைகள் நகைப்பு உரியதானது.
மனித அனுமானங்கள், அந்தந்த காலத்தை அனுசரித்தோ, தேசத்தை அனுசரித்தோ, பொருளை அனுசரித்தோ நிர்ணயிக்கப்படுகிறது.
காலம் மாறும் போது,
தேசம் மாறும் போது,
பொருள் (வஸ்து) மாறும் போது,
மனித அனுமானங்கள் மாறுபடகூடும்.
இப்படி இருக்க, அனுமானத்தை கொண்டு, 'இவர் தான் பரமாத்மா' என்று மனித புத்தியை கொண்டு, எழுதப்பபட்ட போலி மதங்களை கண்டு ஏமாற கூடாது.
நம்முடைய புத்தியோ "அளவு உடையதாக' இருக்கிறது.
பரமாத்மாவோ 'அளவற்று' இருக்கிறார்.
அளவுடைய நம் புத்தியால், அளவில்லாத பரமாத்மாவை
எப்படி அனுமானிக்க முடியும்?
'அளவில்லாத பரமாத்மாவை நாம் புரிந்து கொள்ள முடியாது' என்பது உண்மை என்றாலும்,
'அந்த பரமாத்மா அளவிடமுடியாதவர், காலத்துக்கும், தேசத்துக்கும், பொருளுக்கும் அப்பாற்ப்பட்டவர்' என்ற அளவுக்காவது நாம் தெரிந்து கொண்டாலே, பரத்துவ ஞானம் நமக்கு உண்டாக ஆரம்பித்து விடும்,
'நம்முடைய புத்தியால் தெரிந்து கொள்ள முடியாதவர் பரமாத்மா' என்று தெரிந்து கொண்டாலே போதுமானது.
உன்னுடைய கண்ணை கொண்டு அந்த பரமாத்மாவை பார்க்க முடியாது.
ஆனால்,
'உன் கண்ணுக்கு பார்க்கும் சக்தியை கொடுத்ததே அந்த பரமாத்மா தான்' என்று நீ புரிந்து கொண்டாலே போதும்.
உன்னுடைய காதை கொண்டு அந்த பரமாத்மாவை கேட்க முடியாது.
ஆனால்,
'உன் காதுக்கு கேட்கும் சக்தியை கொடுத்ததே அந்த பரமாத்மா தான்' என்று புரிந்து கொண்டாலே போதும்.
எந்த பரமாத்மா உள்ளே இருப்பதால், உன் கண் பார்க்கிறதோ, காது கேட்கிறதோ, நாக்கு சுவைக்கிறதோ, அந்த பரமாத்மாவை உன் கண்களால், காதால், நாக்கால் எப்படி பார்க்க, கேட்க, சுவைக்க முடியும்?
அதனால், 'பரமாத்மா நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்' என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
அப்படி எங்கும், எல்லாமுமாக, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட, தனித்த சாட்சியாக, யாவரிடத்திலேயும் ஹ்ருதயத்தில் இருக்க கூடிய அந்த பரமாத்மா "சாஷாத் நாராயணனே" என்று சர்வ சாஸ்த்திரமும் சொல்கிறது.
வேதம் "நாராயணனே பரதெய்வம்" என்று சொல்வதை புரிந்து கொள்ளாதவர்கள், மோக்ஷம் அடையாமல் இருக்கிறார்கள்.
புரிந்து கொள்ளாததாலேயே, பரமாத்மாவை 'நாராயணன், விஷ்ணு' என்று சொன்னால், முப்பத்து முக்கோடி தேவர்களை போல 'அவரும் ஒரு தேவன்' என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
மனிதர்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும்..
தேவர்கள் கூட சில சமயம், விஷ்ணுவும்தன்னை போல ஒரு தேவன் தான் என்று நினைத்து விடுகிறார்கள்?
வைகுண்டத்தில் இருக்கும் பரமாத்மா நாராயணன், காலத்துக்கும், தேசத்துக்கும், வஸ்துவுக்கும் அப்பாற்பட்டவர் என்றாலும், எந்த வஸ்துவாகவும் வர கூடியவர், எந்த தேசத்திலும், எந்த காலத்திலும் இருப்பவர் என்பதால், சொர்க்க லோகத்தில் உள்ள தேவர்களை போல தானும் "விஷ்ணு" என்ற தேவனாகவும் (வஸ்துவாக) தன்னை க்ஷீராப்தியில் அவதரித்து கொண்டு விடுகிறார்.
"ஆதித்யாநாமஹம் விஷ்ணு:" என்று பகவத் கீதையில் "தேவர்களுக்குக்குள்ளே நான் விஷ்ணு என்ற தேவனாகவும் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.
அதுமட்டுமா,
"மனிதர்களுக்குள்ளே நான் ராமனாக இருக்கிறேன்" என்றும் ராம்பிரானே ப்ரம்ம தேவனை பார்த்து "ஆத்மாநம் மானுஷம் மன்யே" என்று சொல்கிறார்.
"மனிதனாக பரமாத்மா வந்து விட்டதால், ராமபிரான் மனிதன் தானே" என்று நினைப்பவர்கள் அஞானிகள்.
"தேவனாக வந்து விட்டதால், விஷ்ணுவும் மற்ற தேவர்களை போல தானே" என்று நினைப்பவர்களும் அஞானிகளே.
கோஹினூர் வைரம் - அலாவுதீன் கில்ஜிக்கு பிறகு பலரிடம் கை மாறியது.
ஷிஹாபுதின் கில்ஜி (அலாவுதீன் கில்ஜி பிள்ளை)
குதுப்தின் முபாரக் (அலாவுதீன் கில்ஜி பிள்ளை)
குஷ்ரோ கான் (அலாவுதீன் படைத்தளபதி)
கியாசுதீன் துக்ளக் (அலாவுதீன் ஆட்சியில் பஞ்சாப் கவர்னராக வேலை பார்த்தவன்)
முகம்மது பின் துக்ளக் (கியாசுதீன் துக்ளக் மகன்)
பெரோஸ் ஷா துக்ளக் (முகம்மது பின் துக்ளக்கும், அவன் சகோதரிக்கும் பிறந்தவன்)
துக்ளக் கான் (பெரோஸ் ஷா துக்ளக் பேரன்)
அபு பக்கர் ஷா (பெரோஸ் ஷா துக்ளக் பேரன்)
நசுருத்தின் ஷா (பெரோஸ் ஷா துக்ளக் மகன்)
அலாவுதீன் சிக்கந்தர் ஷா (நசுருத்தின் ஷா மகன்)
நசுருத்தின் மகமூத் ஷா || (நசுருத்தின் ஷா மகன்)
கைசர் கான் (பெரோஸ் ஷா துக்ளக் ஆட்சியில் ஆரம்பித்து முல்தான் கவர்னராக இருந்தான். ஈரான், ஆப்கான், மங்கோலிய தேசம் அவரை கைப்பற்றி இருந்த தைமூர் என்ற இஸ்லாமியன் துணை கொண்டு, நசுருத்தின் மகமூத் ஷாவை கொன்று, தைமூரின் பெயரில் அடிமை (சயீத்) ஆட்சி ஆரம்பித்தது)
முபாரக் ஷா (கைசர் கான் மகன்)
முகம்மது ஷா (முபாரக் ஷாவின் தங்கை மகன்)
ஆலம் ஷா (முகம்மது ஷாவின் மகன்)
பஹ்லுல் லோடி (ஆப்கானில் லோடி என்ற இனத்தை சேர்ந்தவன்.. இவன் பஞ்சாபில் உள்ள சிர்ஹிந்த் என்ற ஊருக்கு கவர்னராக இருந்தான்)
சிக்கந்தர் லோடி (பஹ்லுல் லோடி மகன்)
இப்ராகிம் லோடி (சிக்கந்தர் லோடியின் மகன்)
பாபர் (கெங்கிஸ் கான், தைமூர் பரம்பரையில் வந்தவன். பாணிபட் போரில் இப்ராகிம் லோடியை கொன்று டெல்லியை கைப்பற்றினான்)
ஹுமாயுன் (பாபர் மகன்)
அக்பர் (ஹுமாயுன் மகன்)
ஜஹாங்கீர் (அக்பர் மகன்)
ஷாஹ்யர் மிர்சா (ஜஹாங்கீர் மகன்)
ஷாஜஹான் (ஜஹாங்கீர் மகன். ஷாஹ்யர் மிர்சா கொன்று சுல்தான் ஆனான்)
இவன் காலத்தில் தங்கத்தால் தனக்கு உருவாக்கப்பட்ட மயில் ஆசனத்தில் (peacock throne) இந்த கோஹினூர் வைரத்தை பதித்து வைத்து இருந்தான் ஷாஜஹான்.
ஔரங்கசீப் (ஷாஜஹான் மகன்)
பகதூர் ஷா (ஔரங்கசீப் மகன்)
ஜஹந்தர் ஷா (ஔரங்கசீப் மகன்)
பரூக்சியர் (பகதூர் ஷா பேரன், ஜஹந்தர் ஷாவை கொன்று சுல்தான் ஆனான்)
ரபிஉத் தரஜித் (பகதூர் ஷா பேரன், பரூக்சியரை கொன்று சுல்தான் ஆனான்)
ரபிஉத் தௌலத் (ரபிஉத் தரஜித் சகோதரன்)
நேகு சியர் (ஔரங்கசீப் பேரன்)
முகம்மது ஷா (பகதூர் ஷா பேரன்)
முகம்மது இப்ராஹிம் (ரபிஉத் தரஜித் சகோதரன்)
முகம்மது ஷா (பகதூர் ஷா பேரன். இவன் ஆட்சியில் 1772ல் அயோத்தியை 'பைசாபாத்' மாற்றினான்)
ஈரான் : (1739 AD - 1747 AD) 8yrs
ஈரான் தேசத்தை ஆக்கரமித்து அரசாங்கம் செய்து இருந்த நாதீர் ஷா, 1739ல் டெல்லியை தாக்கினான்.
டெல்லியில் 6 மணி நேரத்தில் 30000 பொது மக்களை கொன்று விட்டான். கோட்டையை உடைத்து 'முகம்மது ஷா'வை பிடிக்க, பயந்து போய் டெல்லி கஜானாவை திறந்து விட்டான்.
அப்போது கோஹினூர் வைரத்தை தன் கைக்கு ஆபரணமாக போட்டு கொண்டு விட்டான்.
ஒரு நாள் டில்லியில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து, அடுத்த 3 வருடங்கள் நாதீர் ஷா, ஈரான் மக்களிடம் வரியே கேட்கவில்லை.
ஒரு டில்லியின் சொத்தே எத்தனை இருந்துள்ளது என்று நினைத்து பார்க்கும் போது, பாரத தேசம் முழுவதும் எத்தனை இருந்து இருக்கும் என்று யோசியுங்கள்.
முகலாய அரசன் ஒரு ஈரான் அரசனிடம் தோற்றுவிட்டான், என்றதும், கிழக்கு இந்திய கம்பனி என்ற பெயரில் வந்து இருந்த பிரிட்டிஷ் கிறுஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆட்சியை ஒடுக்க இதுவே சரியான நேரம் என்று கணித்தனர்.
முகலாய இஸ்லாமியர்கள் பலம் குறைய, அவர்களுக்கு கீழ் அடிபணிந்து ஆட்சி செய்த அனைத்து இஸ்லாமிய சிற்றரசனும் அந்த அந்த ஊருக்கு நாங்களே சுல்தான் என்று சொல்லி கொள்ள ஆரம்பித்தனர்.
ஆப்கான் : (1747 AD - 1809 AD) 62 yrs
1747ல் நாதீர் ஷாவை அவனது மெய்காப்பாளன் தலை சீவினான்.
மற்றொரு மெய்காப்பாளன் "அஹமத் ஷா அப்தலி" இவன் கையிலிருந்த வைரத்தை எடுத்து கொண்டான்.
இவனை காந்தகாரில் உள்ள அப்தலி இன மக்கள், காந்தகார் அரசனாக ஏற்றனர். இவன் பெஷாவர் (புருஷோத்தமபுறம்) வரை கைப்பற்றினான்.
7 முறை முகலாயர்களை தாக்கி டில்லியை கைப்பற்ற முயற்சித்தான்.
கடைசியாக முகம்மது ஷா டில்லியை இழந்து விடுவோமோ? என்ற பயத்தில், சிந்து தேசம், பஞ்சாப் (பாஞ்சாலம்) வரை கொடுத்து விட்டான்.
சண்டையே போடாமல், காந்தகார் அரசன் அஹமத் ஷா அப்தலிக்கு சிந்து, பஞ்சாப் கிடைத்தது.
பிறகு, நாதீர் ஷா வைத்து இருந்த ஈரான் தேசத்தை போரிட்டு கைப்பற்றி விட்டான்.
இவனை தொடர்ந்து வந்த இவன் பரம்பரை 1809 வரை கோஹினூர் வைரத்தை ஆப்கானில் வைத்து இருந்தனர்.
1809ல் ஆப்கான் அரசனாக இருந்த ஷா சஹுஜ் துர்ரானியை அவன் சகோதரன் மஹ்மூத் ஷா தூக்கி எறிந்து பதவியில் அமர்ந்தான்.
உயிருக்கு பயந்து கோஹினூர் வைரத்துடன் இந்தியாவுக்கு ஓடி வந்து, அப்போது லாகூரில் (லவ புரம்) இருந்த சீக்கிய அரசன் 'ரஞ்சித் சிங்'கிடம் அடைக்கலம் கேட்டான்.
மீண்டும் இந்தியாவுக்கு : (1809 AD - 1849 AD) 40 yrs
1813ல் காப்பற்றியதற்கு பதிலாக கோஹினூர் வைரத்தை வாங்கி கொண்டார்.
கோஹினூர் வைரத்தை "புரி ஜகன்நாத்" கோவிலுக்கு உயில் எழுதி கொடுக்க ஆசைப்பட்டார் ரஞ்சித் சிங்.
ஆனால் ரஞ்சித் சிங் உயில் எழுதாமலேயே, 1839ல் இறந்து விட்டார்.
1849ல் கிழக்கு இந்திய கம்பனி கிறிஸ்தவர்கள், சீக்கியர்களிடம் போர் செய்து, பஞ்சாப், லாகூரை கைப்பற்றினர்.
ரஞ்சித் சிங் மகன் துலீப் சிங் , "லாகூர் ஒப்பந்தம்" என்று பிரிட்டிஷ் அரசுக்கு அனைத்தையும் ஒப்படைத்து விட்டான்.
சீக்கிய அரசாங்க சொத்து, கோஹினூர் வைரம் அனைத்தையும் பிரிட்டனில் இருக்கும் விக்டோரியாவுக்கு அனுப்பி விட்டனர்.
துலீப் சிங் பிரிட்டனில் சென்று வசித்து, 2 கிறிஸ்தவ பெண்களை மணந்து, தானும் கிறிஸ்தவன் ஆகி, நாட்டை விற்று விட்டு, அங்கேயே குடியேறினார்.