Followers

Search Here...

Saturday 31 October 2020

'குங்குமப்பூ' கொண்டு பூஜிக்காமல், ஏன் குங்குமத்தால் பூஜிக்கிறார்கள்?... தெரிந்து கொள்வோம்

 'குங்குமப்பூ' கொண்டு பூஜிக்காமல், ஏன் குங்குமத்தால் அம்பாளை பூஜிக்கிறார்கள்?....

ஏன் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்து, நெற்றியில் குங்குமம் இட்டு கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்?




"குங்குமம்" என்பது சம்ஸ்க்ரித சொல்

உண்மையில் அந்த சொல், நாம் உபயோகிக்கும் குங்குமத்தை அல்ல, குங்குமப்பூவை" குறிக்கிறது.


தேவி உபாசனை செய்யும் போது, "குங்குமப்பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்

என்று தான் வேத சாஸ்திரம் சொல்கிறது.

இதை குறித்து ஒரு சமயம் மஹா பெரியவர், "குங்கும பூவை கொண்டு செய்யாமல், ஏன் இப்பொழுது குங்குமத்தால் அம்பாளுக்கு பூஜை செய்கிறார்கள்?" என்று கேட்டார்.


யாரும் பதில் சொல்லவில்லை.

பதில் தெரிந்து இருந்தாலும், அவருடைய அழகான பதிலுக்காக அமைதி காத்தனர்.


மஹா பெரியவர் பேச தொடங்கினாராம்..

"வைத்திய சாஸ்திரப்படி 'குங்கும பூவுக்கு சரீரத்தின் புண்களை ஆற்றி, சூட்டை குறைக்கும் குணம் உண்டு' என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

அதே குணம் மஞ்சளுக்கும் உண்டு என்று சொல்கிறது.

சாஸ்திரத்தில், அனைத்துக்கும் 'ப்ரதிநிதி விசாரம்' என்று உண்டு.

அதாவது, 

ஒன்று கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதில் அதற்கு ஈடான மற்றொரு பொருளை எடுத்து கொள்ளலாம் என்று உள்ளது.

அதன் படி, 

குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பவர்கள் சிலர்.

குங்குமப்பூவோ விலை அதிகம்.

அதற்கு பதில், மஞ்சளை பாலில் கலந்து குடிப்பார்கள், மருத்துவ ரீதியாக.

அதே போல, 

அம்பாளுக்கு பூஜை செய்யும் போது, குங்கும பூ இல்லாத நிலையில், அதற்கு ப்ரதிநிதியாக மஞ்சளுக்கு கொஞ்சம் சிவப்பு நிறம் கொடுத்து, 'குங்குமம்' என்று சொல்லி, அம்பாளுக்கு பூஜிக்கிறோம்"

என்று விளக்கினாராம் காஞ்சி மஹா பெரியவர்.


பெண்கள் நெற்றியில் குங்குமம், மஞ்சள் இட்டு கொள்வதற்குள் அடங்கி இருக்கும் மருத்துவ குணமும் இதன் மூலம் அறியலாம்.


அலங்கார ப்ரியனான பெருமாளுக்கு (ராமருக்கோ, கிருஷ்ணருக்கோ), குங்குமப்பூவால் பூஜை செய்வது விசேஷம்... முடிந்தவர்கள் செய்யலாம்.


ஹிந்து மதத்தில் எதுவுமே காரணமில்லாமல் இல்லை என்று அறிந்து கொண்டாலேயே, ஹிந்துக்கள் சுகமாக வாழலாம்.

No comments: