Followers

Search Here...

Friday 28 May 2021

Rama Rajya - How people lived under the Rule of Ram? ராம ராஜ்யம் - ராமபிரான் அரசாட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? தெரிந்து கொள்வோம் - வால்மீகி ராமாயணம்

Rama Rajya - How people lived under the Rule of Ram? 

ராம ராஜ்யம் - ராமபிரான் அரசாட்சியில் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? தெரிந்து கொள்வோம் - வால்மீகி ராமாயணம் 

राज्यन् दशसहस्राणि प्राप्य वर्षाणि राघवः |

शताश्वमेधानाजह्रे सदश्वान्भूरिदक्षिणान् ||

-  वाल्मीकि रामायण

ராஜ்யன் தச சஹஸ்த்ராணி 

ப்ராப்ய வர்ஷாணி ராகவ: |

சத அஸ்வமேதான் ஆஜஹ்னே 

சத அஸ்வான்  பூரிதக்ஷிணம் ||

- வால்மீகி ராமாயணம் 

பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் ராமபிரான் ஆட்சி செய்து, நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்து புகழ் பெற்றார்.

Ram ruled kingdom for ten thousand years, Rama performed a hundred of aswamedha yagya and numerous gifts bestowed





न पर्यदेवन् विधवा न च व्यालकृतं भयम् |

न व्याधिजं भयन् वापि रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ந பர்யதேவன் விதவா 

ந ச வ்யாலக்ருதம் பயம் |

ந வ்யாதிஜம் பயன் வாபி 

ராமே ராஜ்யம் ப்ரஸாசதி ||

- வால்மீகி ராமாயணம்

ராமராஜ்யத்தில், கணவனை இழந்து யாரும் விதவை ஆகவில்லை. விஷ ஜந்துக்கள் கடிக்குமே! என்ற பயமோ, வியாதி வருமே! என்ற கவலையோ யாருக்கும் இருக்கவில்லை. 

While Rama was ruling the kingdom, there were no widows to lament, nor there was no danger from wild animals, nor any fear born of diseases.


निर्दस्युरभवल्लोको नानर्थः कन् चिदस्पृशत् |

न च स्म वृद्धा बालानां प्रेतकार्याणि कुर्वते || 

-  वाल्मीकि रामायण

நிர்தஸ்யு பவத் லோகே

ந அனர்த: கஸ்சித் அஸ்ப்ருஷத் |

ந ச ஸ்ம வ்ருத்தா பாலானா

 ப்ரேத காரியாணி குர்வதே ||

- வால்மீகி ராமாயணம் 

ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் நிம்மதியாக கஷ்டங்கள் எதுவும் இன்றி வாழ்ந்தனர். திருடர்கள் இல்லாமல் உலகம் கவலையின்றி இருந்தது. மற்றவர்கள் பொருளை யாரும் தொடக் கூட மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. முதியவர்கள் பாலர்களுக்கு அந்திம சம்ஸ்காரங்கள் செய்யும்படியாக ஒரு சம்பவம் கூட நிகழவில்லை.

The world was bereft of thieves and robberies. No one felt worthless nor did old people perform obsequies concerning youngsters.


सर्वं मुदितमेवासीत्सर्वो धर्मपरोअभवत् |

राममेव अनुपश्यन्तो न अभ्यहिन्सन् परस्परम् ||

-  वाल्मीकि रामायण

ஸர்வம் முதிதமேவ அஸீத் 

சர்வா தர்மோபரோ அபவத் |

ராமமேவ அனுபஸ்யந்தோ 

ந அப்ய-ஹின்ஸன் பரஸ்பரம் ||

- வால்மீகி ராமாயணம் 

எங்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எங்கும் தர்மமே தலை தூக்கி நின்றது. ராமனையே அனுசரித்து அனைவரும் இருந்தனர். யாரும், தங்களுக்குள் சண்டையிடுவதில்லை.  அடித்துக் கொள்வதில்லை. 

Every living beings felt pleased. Every one was intent on virtue. Everyone's eye fixed towards Rama alone. No one killed one another.


आसन्वर्षसहस्राणि तथा पुत्रसहस्रिणः |

निरामया विशोकाश्च रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ஆஸன் வர்ஷ சஹஸ்ராணி 

ததா புத்ர சஹஸ்ரிண: |

நிராமயா விசோகா: ச 

ராமே ராஜ்யம் ப்ரசாஸதி || 

- வால்மீகி ராமாயணம்

அனைவரும் ஆயிரம் வருஷங்கள் ஆயிரக் கணக்கான புத்திரர்களோடு வாழ்ந்தனர். ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்கள் வியாதியின்றி, வருத்தம் இன்றி, சுகமாக இருந்தனர். 

While Rama was ruling the kingdom, people survived for thousands of years, with thousands of their progeny, all free of illness and grief.

रामो रामो राम इति प्रजानाम् अभवन् कथाः |

रामभूतं जगाभूद् रामे राज्यं प्रशासति ||

-  वाल्मीकि रामायण

ராமோ ராமோ ராம இதி

ப்ரஜாநாம் அபவன் கதா: |

ராமபூதம் ஜகாபூத்

ராமே ராஜ்யம் ப்ரஸாசதி || 

- வால்மீகி ராமாயணம்

ராமா, ராமா, ராமா' என்றே ப்ரஜைகள் எப்பொழுதும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.  கதைகள் பேசினாலும், ராமனைச் சுற்றியே, ராமனைப் பற்றியே பேசினர்.  ராம மயமாகவே உலகம் விளங்கியது. ராமபிரான் ராஜ்யத்தை ஆளும் பொழுது ஜனங்களின் மனதில் ராமரே நிறைந்திருந்தார். 

While Rama ruled the kingdom, the talks of the people centered round Rama, Rama and Rama. The world became Rama's world.





नित्यपुष्पा नित्यफला: तरवः स्कन्धविस्तृताः |

कालवर्षी च पर्जन्यः सुखस्पर्शश्च मारुतः ||

-  वाल्मीकि रामायण

நித்ய-புஷ்பா நித்ய-பலா:

தரவ: ஸ்கந்த-விஸ்த்ருதா: |

காலவர்ஷீ ச பர்ஜன்ய:

சுக-ஸ்பர்ச: ச மாருத: || 

- வால்மீகி ராமாயணம்

மரங்கள் நித்யம் பூத்துக் குலுங்கின. அனைத்து காலங்களிலும் அனைத்து விதமானபழங்கள் பழுத்துத் தொங்கின. கிளைகள் படர்ந்து விஸ்தாரமாக நின்றன.  பருவ காலங்களில் விடாது மழை பெய்தது.  காற்று இதமாக வீசியது. 

The trees there were bearing flowers and fruits regularly, without any injury by pests and insects. The clouds were raining in time and the wind was delightful to the touch.


ब्राह्मणाः क्षत्रिया वैश्याः शूद्रा लोभविवर्जिताः |

स्वकर्मसु प्रवर्तन्ते तुष्ठाः स्वैरेव कर्मभिः ||

-  वाल्मीकि रामायण

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஸ்யா: 

சூத்ரா லோப விவர்ஜிதா: |

ஸ்வ-கர்மசு ப்ரவர்தந்தே 

துஷ்டா: ஸ்வை: ஏவ கர்மபி: || 

- வால்மீகி ராமாயணம்

ப்ராம்மணர்களோ, க்ஷத்திரியர்களோ, வைஸ்யர்களோ, சூத்ரர்களோ, யாராக இருந்தாலும் பேராசை இன்றி, அவரவர் வேலைகளை நியாயமாக செய்து கொண்டிருந்தனர்.  தங்கள் தங்கள் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்தனர். தங்கள் செயல்களிலேயே திருப்தியுடன் இருந்தனர். 

Brahmins (the priest-class), Kshatriyas (the warrior-class), Vaishyas (the class of employers, merchants and agriculturists), Shudras (the employee-class) were performing their own duties, satisfied with their own work and bereft of any greed.


आसन् प्रजा धर्मपरा रामे शासति नानृताः |

सर्वे लक्षण-सम्पन्नाः सर्वे धर्म-परायणाः ||

दश-वर्ष सहस्राणि रामो राज्यम् अकारयत् |

वाल्मीकि रामायण

ஆஸன் ப்ரஜா தர்மபரா

ராமே சாஸதி ந அன்ருதா: |

சர்வே லக்ஷண சம்பண்ணா:

சர்வே தர்ம-பராயணா: || 

தச-வர்ஷ சஹஸ்ராணி

ராமோ ராஜ்யம் அகாரயத் |

- வால்மீகி ராமாயணம்

ப்ரஜைகள் தர்மத்தில் நம்பிக்கையுடன் அனுசரித்தும் வந்தனர். அனைத்து மக்களும் சிறந்த குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். அனைவரும் நல்லொழுக்கத்திலேயே இருந்தனர். ராமபிரான் இவ்வாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அரசாட்சி புரிந்தார்.

While Rama was ruling, the people were intent on virtue and lived without telling lies. All the people were endowed with excellent characteristics. All were engaged in virtue. Rama was engaged in the kingship thus for one thousand years.

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram

Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram   Jai Shriram


Wednesday 26 May 2021

ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டிய பிரார்த்தனை)..தெரிந்து கொள்வோம்

ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டிய பிரார்த்தனை)



ஸந்தியாவந்தனம் செய்த பிறகு,

கிழக்கு முகமாக உட்கார்ந்து (காலையில்), ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டியது)

மேற்கு முகமாக உட்கார்ந்து (மாலையில்), ஸமிதாதானம் (ப்ரஹ்மசாரிகள் செய்ய வேண்டியது). மாலை அக்னி மூட்டாமல், அக்னியை தியானித்து சொல்லலாம்.


அக்னி ஏற்படுத்தி முன்னால் வைத்துக் கொண்டபின், இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்.

ஆசமனம் 

ஒம் அச்யுதாய நம: 

ஒம் அனந்தாய நம: 

ஒம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம்:

ஓவ்வொரு மந்திரத்தைச் சொல்லும் போது அந்தந்த மந்திங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

கேசவ (வலக்கை கட்டைவிரலால் வலது கன்னம் ஸ்பரிசிக்க வேண்டும்)

நாராயண (வலக்கைக் கட்டைவிரலால் இடது கன்னம் ஸ்பரிசிக்க வேண்டும்)

மாதவ (வலக்கை மோதிர விரலால் வலது கண் ஸ்பரிசிக்க வேண்டும்)

கோவிந்த (வலக்கை மோதிர விரலால் இடது கண் ஸ்பரிசிக்க வேண்டும்)

விஷ்ணு (வலக்கை ஆள்காட்டி விரலால் வலது நாசி ஸ்பரிசிக்க வேண்டும்)

மதுஸூதன (வலக்கை ஆள்காட்டி விரலால் இடது நாசி ஸ்பரிசிக்க வேண்டும்)

த்ரிவிக்ரம (வலக்கை சிறு விரலால் வலது காது ஸ்பரிசிக்க வேண்டும்)

வாமன (வலக்கை சிறு விரலால் இடது காது ஸ்பரிசிக்க வேண்டும்)

ஸ்ரீதர (வலக்கை நடு விரலால் வலது தோள் ஸ்பரிசிக்க வேண்டும்)

ஹ்ருஷீகேச (வலக்கை நடு விரலால் இடது தோள் ஸ்பரிசிக்க வேண்டும்)

பத்மநாப (ஐந்து விரல்களால் சேர்த்து நாபி ஸ்பரிசிக்க வேண்டும்)

தாமோதர (ஐந்து விரல்களால் சேர்த்து தலை ஸ்பரிசிக்க வேண்டும்)


விக்னேச்வர த்யானம்

சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி வர்ணம் சதுர்ப்புஜம் !

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப-சா’ந்தயே !!


ப்ராணாயாமம்;.

ஓம் பூ:, ஓம் புவ:, ஓஹும் ஸூவ: 

ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓஹும் ஸத்யம் 

ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் 

பர்கோ தேவஸ்ய தீமஹி 

தியோ யோந: ப்ரசோதயாத் 

ஓமாபோ: ஜ்யோதீரஸ: 

அம்ருதம் ப்ரஹ்ம 

பூர் புவஸ் ஸூவரோம் 

என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை வசிப்பதாக ஐதிகம்)


ஸங்கல்பம்:

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்’வர ப்ரீத்யர்த்தம், |

(காலையில்) ப்ராத ஸமிதாதானம் கரிஷ்யே 

(மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே 





பிறகு, 

அக்னி பகவானிடம் கீழ் கண்டவாறு  ப்ரார்த்தனை செய்கிறான் பிரம்மச்சாரி:




அக்னி பிரார்த்தனை:

பரித்-வாக்னே (ஸமித்தில் (அரச மர குச்சி) வெளிப்படும் அக்னி பகவானே !) 

பரிம்-ருஜாமி (எனக்கு அருள் புரிய வேண்டும்)

ஆயுஷா-ச தனேன-ச (எனக்கு நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்க)

ஸுப்ரஜா; ப்ரஜயா பூயாஸம் (பிள்ளைகளில் நல்ல பிள்ளையாக நான் இருக்க) 

ஸுவீர: வீரை: (வீரத்தில் சிறந்த வீரம் உடையவனாக இருக்க)

ஸுவர்ச்சா: வர்ச்சஸா: (ஞானத்தில், சிறந்த ஞானம் அமைந்தவனாக இருக்க)

ஸுபோஷ: போஷை: (உடல் ஆரோக்யத்தில் சிறந்த ஆரோக்கியம் உள்ளவனாக இருக்க)

ஸுக்ருஹ: க்ருஹை: (வசிக்கும் இடம், சிறந்த இடமாக இருக்க) 

ஸுபதி: பத்யா (எஜமானனில் சிறந்த எஜமானன் (குரு) அமைந்தவனாக இருக்க)

ஸுமேதா: மேதயா (மேதை தனத்தில் சிறந்த மேதை உடையவனாக இருக்க)

ஸு-ப்ரஹ்மா ப்ரம்மசாரிபி: (ப்ரம்மச்சாரியில் சிறந்த ப்ரம்மச்சாரியாக இருக்க)

( என்று சொல்லி ஜலத்தைக் கையில் எடுத்து )

ஓம் பூ: புவ ஸுவ: (என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)

அதி தேனு மன்யஸ்வ (அக்னிக்கு தெற்கு பாகத்தில், கீழிலிருந்து மேலாக ஜலம் விடவும்)

அனுமதேனு மன்யஸ்வ (தெற்கிலிருந்து வடக்காக ஜலம் விடவும்)

சரஸ்வதேனு மன்யஸ்வ (வடபுறம் கீழிருந்து மேலாக ஜலம் விடவும்)

பிறகு,

தேவஸவித: ப்ரஸுவ” (இது கிடைக்க பெற அக்னி தேவனே! உம்மை  பிரார்த்திக்கிறேன்.)

( என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)


ஹோமம்:

(கீழ்கண்ட 16 மந்த்ரங்களைச் சொல்லி, ஒவ்வொரு தடவையும் ”ஸ்வாஹா” என்று சொன்னபின், அக்னியில் ஸமித்தை (அரச மர குச்சி) ஒவ்வொன்றாக வைக்கவும்)

01)

ஒம் அக்னயே ! ஸமிதம் ! ஆஹார்ஷம் ! ப்ருஹதே !  ஜாத-வேதஸே !

யதாத்வம் ! அக்னே ! ஸமிதா ! ஸமித்யஸே ! ஏவம்-மாம் ! 

ஆயுஷா ! வர்ச்சஸா ! ஸந்யா !  

மேதயா ! ப்ரஜயா ! 

பசுபி: !  ப்ரஹ்ம-வர்ச்சஸேன !  

அந்நாத்யேன ! 

ஸமேதயா ! ஸ்வாஹா.

அக்னி பகவானே! ஆயுளாலும், சக்தியாலும், லாபத்தாலும், புத்தியாலும், மக்களாலும், பசுக்களாலும் நான் ஓங்கி வளர்ந்து அபிவிருத்தி ஆக வேண்டும். ப்ரம்ம தேஜஸ் அடைய வேண்டும். அதற்காக நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஆஹுதி செய்கிறேன்.

02) 

ஏதோஸி ! ஏதி-ஷீ-மஹி ! ஸ்வாஹா

அக்னி பகவானே! நீங்கள் வளர்கிறீர்கள். அது போல, என்னையும் வளர செய்யுங்கள். 

03)

ஸமி-தஸி ! ஸமேதி-ஷீ-மஹி ஸ்வாஹா

அக்னி பகவானே! நீங்கள் பிரகாசிக்கிறீர்கள். அது போல, என்னையும் சுடர் விட்டு பிரகாசிக்க செய்யுங்கள்.

04)

தேஜோஸி ! தேஜ: ! மயி-தேஹி ! ஸ்வாஹா

அக்னி பகவானே! நீங்கள் வீர்யம் கொண்டு விளங்குகிறீர்கள். அது போல, என்னையும் ப்ரம்ம தேஜஸோடு (வீர்யம்) இருக்க செய்யுங்கள். 

05)

அபோ-அத்யா ! அந்வ-சாரிஷம் ! 

ரஸேநா ! ஸம-ஸ்ருக்ஷ்மஹி ! பயஸ்வான் ! 

அக்நே-ஆகமம் ! தம்மா: !  ஸகும்-ஸ்ருஜா  ! 

வர்சஸா !  ஸ்வாஹா ! 

அக்னி பகவானே! என்னை ப்ரம்ம வர்சஸுடன் சேர்த்து வைப்பீராக..

06)

ஸம்மாக்நே !  வர்ச்சஸா ஸ்ருஜ !  ப்ரஜயா-ச !  தநேந-ச !  ஸ்வாஹா

அக்னி பகவானே! ப்ரம்ம வர்சஸும், நன் மக்களும், தனமும் அருள்வீராக.

07)

வித்யுந்மே ! அஸ்ய-தேவா: ! இந்த்ரோ-வித்யாத் ! ஸஹ-ரிஷிபி: ! ஸ்வாஹா

அக்னி பகவானே! இப்படி ஹோமம் செய்யும் என்னை, இந்திராதி தேவர்களும், ரிஷிகளும் ரக்ஷிக்கும் படி அருள் செய்ய வேண்டும்.

08)

அக்நயே ! ப்ருஹதே ! நாகாய ! ஸ்வாஹா

அக்னி பகவானே! வான் உலகில் பெருமைமிக்க அக்னியே, நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஹோமம் செய்கிறேன்.

09) 

த்யாவா ! ப்ருதிவீப்யாம் ! ஸ்வாஹா

அக்னி பகவானே! வான் உலகத்தில் உள்ளவர்களின் நன்மைக்காகவும், பூமியில் இருப்பவர்களின் நன்மைக்காகவும் நான் இந்த ஸமித்தை உங்களுக்கு ஹோமம் செய்கிறேன்.

10) 

ஏஷாதே-அக்நே ! ஸமித்தயா ! 

வர்த்தஸ்வ-ச ! ஆப்யாயஸ்வ-ச ! தயாஹம் ! 

வர்த்தமாந: ! பூயாஸம் ! ஆப்யாய-மாநஸ்ச ! ஸ்வாஹா !

அக்னி பகவானே! நாம் வைக்கும் ஸமித்தால் நீங்கள் பரிபூர்ணமாக இருப்பது போல, நானும் பரிபூர்ணமாக ஆகும் படி செய்யுங்கள்.

11) 

யோமாக்நே ! பாகிநம் ! ஸந்தம் !  அதா-பாகம் ! சிகீர்ஷதி ! அபாகம்-அக்நே  !தம்குரு ! மாம் க்நே ! பாகிநம்-குரு ! ஸ்வாஹா !

அக்னி பகவானே! தகுதி இருந்தும் (என்ன காரணத்தாலோ) எனக்கு இன்று வரை கிடைக்காத பாக்கியங்களை, எனக்கு கிடைக்கும் படியாக செய்யுங்கள்.

12)

ஸமிதம்-ஆதாய ! அக்நே ! ஸர்வ-வ்ரத: ! பூயாஸம் ! ஸ்வாஹா !

அக்னி பகவானே! இந்த ஸமிதாதானம் செய்வதால், சர்வ விரதம் செய்த பலனை எனக்கு கிடைக்கும் படியாக செய்யுங்கள்.

13)

பூ: ஸ்வாஹா !


14)

புவ ஸ்வாஹா !


15)

ஸுவ ஸ்வாஹா !


16)

ஓம் பூ: புவ ஸுவ ஸ்வாஹா !




(என்று ஸமித்தை அக்னியில் சேர்த்த பிறகு )


அதிதேன்வ மக்கும் ஸ்தா: (அக்னிக்கு தெற்கு பாகத்தில், கீழிலிருந்து மேலாக ஜலம் விடவும்)

அனுமதேன்வ  மக்கும் ஸ்தா (தெற்கிலிருந்து வடக்காக ஜலம் விடவும்)

சரஸ்வதேன்வ  மக்கும் ஸ்தா (வடபுறம் கீழிருந்து மேலாக ஜலம் விடவும்)

பிறகு,


”தேவஸவித: ப்ராஸாவீ” (இது கிடைக்க பெற அக்னி தேவனே! உம்மை  பிரார்த்திக்கிறேன்.)

(என்று கூறி ஜலத்தால் அக்னியை ப்ரதக்ஷிணமாக சுற்றவும்)

பிறகு,

"ஸ்வாஹா" என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் சேர்க்கவும்.


உபஸ்தானம்:

”அக்நே உபஸ்த்தாநம் கரிஷ்யே” (என்று கூறி எழுந்து நிற்கவும்)


பிறகு, 

(இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அக்னி பகவானைப் ப்ரார்த்திக்கவும்) 



யத்தே அக்நே ! தேஜஸ் தேநாஹம் ! தேஜஸ்வீ ! பூயாஸம் ! 

யத்தே அக்நே ! வர்ச்சஸ்-தேநாஹம் ! வர்ச்சஸ்வீ ! பூயாஸம் !

யத்தே அக்நே ! ஹரஸ்- தேநாஹம் ! ஹரஸ்வீ ! பூயாஸம்  !

ஹே அக்னி பகவன்! நீங்கள் பொலிவுடன் இருப்பதைப் போலவே, நானும் பொலிவுடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள்.

ஹே அக்னி பகவன்! தீயவர்கள் அருகில் வர முடியாதபடி நீங்கள் வீரியத்துடன் இருப்பதைப் போலவே, நானும் வீரியத்துடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள். 

ஹே அக்னி பகவன்!, உறங்கும் மக்களை எழுப்பும் சக்தி உள்ளவராக நீங்கள் இருப்பதைப் போலவே, நானும் சக்தி உள்ளவனாக இருக்க அணுகிரஹம் செய்யுங்கள். 

மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மய்யக்நி: தேஜோ ததாது ! 

மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மயீந்தர:  இந்த்ரியம் ததாது ! 

மயிமேதாம் ! மயிப்ரஜாம் ! மயிஸூர்யோ ப்ராஜோ ததாது !

அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள். 

அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் மகிமை கிடைக்க அணுகிரஹம் செய்யுங்கள்.

அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள். 

அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் பஞ்ச கர்ம இந்திரியங்கள், பஞ்ச ஞான இந்திரியங்கள் சக்தியுடன் இருக்க அணுகிரஹம் செய்யுங்கள்.

அக்னி பகவன்! எனக்கு மறதி இல்லாத நுண்ணறிவு அளியுங்கள். 

அக்னி பகவன்! எனக்கும் என் சந்ததியினருக்கும் ஞான வாழ்க்கை அமைய அணுகிரஹம் செய்யுங்கள்..

அக்நயே நமஹ  !

மந்த்ரஹீநம் ! க்ரியாஹீநம் ! பக்திஹீநம் ஹீதாச’ன ! 

யத்ஹு-தம்து ! மயாதேவ ! பரிபூர்ணம் ததஸ்துதே ! 

ப்ராயச்சித்தாநி ! அசேஷாணி ! தப:  கர்ம ! 

ஆத்மகாநிவை ! யாநிதேஷாம்  !அசேஷாணாம் ! 

ஸ்ரீக்ருஷ்ண ! அனுஸ்மரணம் ! பரம் ! 

ஸ்ரீக்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண, 

(என்று சொல்லி. அபிவாதயே சொல்லி விட்டு, நமஸ்காரம் செய்யவும்) 

பிறகு 

ரக்ஷா மந்த்ரம் : 

(அக்னியிலிருந்து சிறிதளவு பஸ்மத்தை எடுத்து இடது உள்ளங்கையில் ஜலம் விட்டு மோதிர விரலால் கீழ்க்கண்ட மந்த்ரத்தைக் கூறி, குழைத்து அந்தந்த இடத்தில் ரக்ஷையாக இட்டுக் கொள்ளவும்)

மானஸ்-தோகே ! தநயே ! மாந-ஆயுஷீ ! மாநோகோஷு ! மாந: ! 

அச்’வேஷு ! ரீரிஷ: ! வீராந்மாந ! ருத்ரபாமித ! வதீ: ! ஹவிஷ்மந்த: ! நமஸா ! விதே மதே ! 

பிறகு,

மேதாவீ பூயாஸம் (நெற்றில்)

தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்) 

வர்ச்சஸ்வீ பூயாஸம் (வலது தோளில்) 

ப்ரஹ்ம் வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) 

ஆயுஷ்மாந் பூயாஸம் (கழுத்தில்) 

அந்நாதோ பூயாஸம் (நாபியில்) 

ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்) 

இட்டுக்கொண்டு கை அலம்பி, கீழ் சொன்ன மந்திரத்தை சொல்லி கொண்டே. அக்னி பகவானைப் பார்த்து ப்ரார்த்தனை செய்யவும். 

ஸ்வஸ்தி ! ஸ்ரத்தாம் ! மேதாம் ! யச: ப்ரஜ்ஞாம் !

வித்யாம் !   புத்திம் !  ஸ்ரியம் பலம் ! ஆயுஷ்யம் ! 

தேஜ: ஆரோக்யம் !  தேஹி மே ! 

ஹவ்ய வாஹந !  ஸ்ரியம் தேஹி மே !  

ஹவ்ய வாஹன !  ஓம் நம: இதி 

(என்று சொல்லி அக்னியைப் ப்ரார்த்தித்து பின் ஆசமனம் செய்து) 

‘‘ஒம் த்தஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து”

என்று சொல்லி ஒரு உத்தரணி தீர்த்தத்தை வலது உள்ளங்கையில் விட்டுக் கீழே விடவும்.

Friday 21 May 2021

In How many days, Ram Setu Bridge was constructed by Nala? Valmiki ramayan. எத்தனை நாட்களில் வானரர்கள் பாலம் கட்டி முடித்தனர்?

 In How many days, Ram Setu Bridge was constructed by Nala? 

कृतानि प्रथमेन आह्ना योजनानि चतुर्दश |

प्रहृष्टै गज-सम्काशै: त्वरमाणैः प्लवङ्गमैः ||

- वाल्मीकि रामायण

க்ருதானி ப்ரதமேந ஆஹ்னா

யோஜனானி சதுர் தச: |

ப்ரஹ்ருஷ்டை கஜ-சம்காசை:

த்வரமானை ப்லவங்கமை ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14

முதல் நாளில், யானை போன்று இருக்கும் வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே சிலிர்ப்புடன், உற்சாகத்துடன், படு வேகமாக 14 யோஜன தூரம் பாலம் அமைத்து விட்டனர்.

On the first day, 14 Yojanas of bridge were constructed by the elephant like monkeys speedily, thrilled with delight.

द्वितीयेन तथैव आह्ना योजनानि तु विशतिः |

कृतानि प्लवगै: तूर्णम् भीमकायै: महाबलैः ||

- वाल्मीकि रामायण

த்விதீயேன ததைவ ஆஹ்னா

யோஜனானி து விஸதி |

க்ருதானி ப்லவகை: தூர்ணம்

பீமகாயை: மஹா-பலை: ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14+20 = 34

இரண்டாவது நாளில், பெரிய உருவத்தோடு, மஹாபலம் கொண்ட வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே படு வேகமாக மேலும் 20 யோஜன தூரம் வரை பாலம் அமைத்து விட்டனர்.

On the second day, another 20 Yojanas of bridge were constructed speedily by the monkeys of terrific bodies and of mighty strength





आह्ना तृतीयेन तथा 

योजनानि तु सागरे |

त्वरमाणै: महाकायै:

एक-विंशति: एव च ||

- वाल्मीकि रामायण

ஆஹ்னா த்ருதீயேன ததா

யோஜனானி து சாகரே |

த்வரமானை: மஹாகாயை

ஏக விம்ஸதி: ஏவ ச ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14+20+21 = 55

மூன்றாவது நாளில், மஹாபலம் கொண்ட வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே இன்னும் படு வேகமாக மேலும் 21 யோஜன தூரம் வரை பாலம் அமைத்து விட்டனர்.

On the third day, 21 Yojanas of the bridge were constructed in the ocean speedily by the monkeys with their terrific bodies.

चतुर्थेन तथा च आह्ना द्वाविंशति: अथापि वा |

योजनानि महावेगैः कृतानि त्वरितै: ततः ||

- वाल्मीकि रामायण

சதுர்தேன ததா ச ஆஹ்னா

த்வாவிம்ஸதி: அதாபி வா |

யோஜனானி மஹாவேகை:

க்ருதானி த்வரிதை: தத: ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14+20+21+22 = 77

நான்காவது நாளில், மஹா வேகம் கொண்ட வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே இன்னும் படு வேகமாக மேலும் 22 யோஜன தூரம் வரை பாலம் அமைத்து விட்டனர்.

On the fourth day, further 22 Yojanas were constructed by the dashing monkeys with a great speed





पञ्चमेन तथा च आह्ना प्लवगैः क्षिप्र कारिभिः |

योजनानि त्रयो विंशत् सुवेलम् अधि-कृत्य वै ||

- वाल्मीकि रामायण

பஞ்சமேன ததா ச ஆஹ்னா

ப்லவகை: க்ஷிப்ர காரிபி: |

யோஜனானி த்ரயோ விம்ஸத்

சுவேலம் அதி-க்ருத்ய வை ||

- வால்மீகி ராமாயணம்

Total: 14+20+21+22+23 = 100

ஐந்தாவது நாளில், வானரர்கள், ராம கோஷம் செய்து கொண்டே இன்னும் படு சீக்கிரமாக மேலும் 23 யோஜன தூரம் வரை பாலம் அமைத்து மறு கரையை அடைந்து விட்டனர்.

On the fifth day, the monkeys working quickly constructed 23 yojanas of the bridge up to the other seashore.



दश-योजन विस्तीर्णम् शत-योजन मायतम् |

ददृशु: देव गन्धर्वा नल-सेतुम् सुदुष्करम् ||

- वाल्मीकि रामायण

தச யோஜன விஸ்தீர்ணம்

சத யோஜன மாயதம் |

தத்ருசு: தேவ கந்தர்வா

நல சேதும் சுதுஷ்கரம் ||

- வால்மீகி ராமாயணம்

நலன் அமைத்த இந்த பாலம், 10 யோஜன தூரம் அகலமும், 100 யோஜன தூரம் நீளமும் கொண்டிருந்தது. எளிதில் கட்ட முடியாத நலன் அமைத்த இந்த பாலத்தை கண்டு தேவர்களும், கந்தர்வர்களும் கண்டு ஆச்சர்யப்பட்டனர்.

Celestials and Gandharvas, saw the construction of Nala's bridge, which was very difficult to be built, whose width is of ten yojanas and a length of hundred 

This unnatural bridge was constructed by mighty Vanara in treta yuga almost 12 lak years before. 

Even Today, Google map clearly shows part of the bridge visible under the sea.

Some of the regions are dry, and the sea in the area rarely exceeds 1 metre (3 ft) in depth, thus hindering ship navigation by other countries to pass thru between india and srilanka. 

It was reportedly passable on foot until the 15th century when storms deepened the channel

Ram setu naturally protects navy attacks by other countries in southern part of india (Tamilnadu and kerala). Hence, as on today, india faces maximum problem only from srilanka alone..

If ram setu is destroyed, this opens up countries like china to attack south india territory as they already hold control in srilanka. 

Ram not just constructed bridge to bring back sita..  Ram setu protects entire south india from invasion thru sea.

Jai shri ram.



12 லட்சம் வருடங்கள் முன், த்ரேதா யுகத்தில், மரங்களையும், பெரிய பெரிய மலைகளையும் போட்டு அமைக்கப்பட்ட இந்த பாலம், இன்றும் கடலுக்கு அடியில் இருப்பது தெரிகிறது..

இலங்கைக்கும் பாரத நாட்டிற்கும் இடையே உள்ள இந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருந்தாலும், 3 அடி ஆழத்தில் தரை தொடும் படியாக பல வழி தடத்தில் உள்ளது.. 

இதனால், கப்பல் போக்குவரத்து மூலம் இலங்கை பாரத நாட்டுக்கு இடையே பயணிக்க முடியாமல் பிற நாட்டு போர் கப்பல்கள் வர முடியாதபடி இயற்கையாகவே தடுக்கிறது. 

தெற்கு பாரத பகுதியை கப்பல் வழியாக அத்தனை எளிதில் பிற நாட்டினர் தாக்கி விட முடியாதபடி, ராம சேது தடுக்கிறது. 

ராமாயனம் சொல்லும் சரித்திரத்தை நிரூபிக்கும் இந்த பாலத்தை உடைத்து, இந்த இரு நாட்டுக்கு இடையே கப்பல் போக்குவரத்து செய்ய அந்நிய நாடுகள் பல விதத்தில் இரு நாட்டுடன் பேரம் பேசி கொண்டு இருக்கின்றனர்.

ஒரு வேளை இந்த ராம சேது தகர்க்கப்பட்டால் சீனா போன்ற தேசங்கள் இலங்கையை தன் வசப்படுத்தி, தமிழகத்தை, கேரளத்தை கைப்பற்றி விடும் என்பதில் சந்தேகமில்லை.

தென் இந்தியாவை இயற்கையாக பாதுகாக்கும் ராம சேதுவை போற்றுவோம்.

ஜெய் ஸ்ரீ ராம்.

Friday 14 May 2021

"Everything is Destiny.. So Dont fall in Anger or Lust" - Ram Says... அனைத்தும் விதி என்று உணர்ந்து, ஆசையின்றி (எதிர்பார்ப்பின்றி), கோபமின்றி இருக்க கற்று கொள்ளவேண்டும்" என்று ராமபிரான் சொல்கிறார்

"அனைத்தும் விதி என்று உணர்ந்து, ஆசையின்றி (எதிர்பார்ப்பின்றி), கோபமின்றி இருக்க கற்று கொள்ளவேண்டும்" என்று ராமபிரான் சொல்கிறார். 



सुख दुह्खे भय क्रोधौ लाभ अलाभौ भव अभवौ |

यस्य किंचित् तथा भूतम् ननु दैवस्य कर्म तत् ||


சுக துக்கே பய க்ரோதோ

லாப அலாபௌ பவ அபவோ |

யஸ்ய கிஞ்சித் ததா பூதம்

நனு தைவஸ்ய கர்ம தத் || 

லக்ஷ்மணா! நமக்கு கிடைக்கும் சுகமும்-துக்கமும், பயமும்-கோபமும், லாபமும்-நஷ்டமும், பிறப்பும்-இறப்பும் மற்றும் எதுவுமே, விதியின்  காரணம் தான்.

Pleasure and pain, fear and anger, gain and loss, birth and death and such other things are all the acts of destiny





ऋषयो प्युग्रतपसो दैवेनाभिप्रपीडिताः |

उत्सृज्य नियमाम् स्तीव्रान् भ्रश्यन्ते काममन्युभिः || 


ருஷயோபி உக்ர தபஸோ

தைவேனாபி ப்ரபீடிதா: |

உத்ஸ்ருஜ்ய நியமாம் ஸ்தீவ்ரான்

ப்ரஸ்யந்தே காம மன்யுபி: ||

லக்ஷ்மணா! உலக விஷயங்களிலிருந்து விலகி, உக்ரமான தவம் செய்யும் பெரிய பெரிய ரிஷிகள் கூட கோபத்தினாலும், காமத்தினாலும் விதியின் பிடியில் சிக்கி விடுகின்றனர்.

Even sages, who performed sever penance, having been harassed by destiny leave aside restraint and get ruined by lust and anger


असम्क्ल्पितमेवेह यदकस्मात् प्रवर्तते |

निवर्त्यारम्भमारब्धम् ननु दैवस्य कर्म तत् ||


அஸம் வில்பதம் இவ இஹ

யத கஸ்மாத் ப்ரவர்ததே |

நிவர்த்ய ஆரம்பம் ஆரப்தம்

நனு தைவஸ்ய கர்ம தத் || 

லக்ஷ்மணா! உலகில் "இதை செய்ய வேண்டும்" என்று நடக்கும் முயற்சிகளை, திடீரென்று அடியோடு தடுத்து நிறுத்த செய்வது விதியின் காரணமே!

It is indeed an act of destiny which suddenly and unimaginably obstructs an action, undertaken in the world ,at the starting point itself.


एतया तत्त्वया बुद्ध्या संस्तभ्यात्मानमात्मना |

व्याहते अपि अभिषेके मे परितापो न विद्यते ||


ஏதயா தத்த்வயா புத்தயா 

சமஸ்தப்ய ஆத்மானம் ஆத்மனா |

வ்யாஹதே அபி அபிஷேகே

மே பரிதாபோ ந வித்யதே ||  

லக்ஷ்மணா! இந்த சத்தியத்தை அறிவுபூர்வமாக அறிந்து இருப்பதால், ஆசை கோபத்திலிருந்து நான் விலகி இருக்கிறேன். என்னுடைய ராஜ்யாபிஷேகம் இன்று தடைபட்டதால், எனக்கு துளி கூட சோகம் இல்லை.

Although my coronation is obstructed, I have no grief since I have restrained the self by myself with real consciousness.


இவ்வாறு, ராமபிரான் சொன்னார்.

Thus, Ram said to Lakshmana.

Wednesday 12 May 2021

குல தெய்வமான ரங்கநாதரை வழிபட்ட ராமபிரான்... தெரிந்து கொள்வோம்.. வால்மீகி ராமாயணம்

குல தெய்வமான ரங்கநாதரை வழிபட்ட ராமபிரான்

गते पुरोहिते रामः 

स्नातो नियतमानसः |

सह पत्न्या विशालाक्ष्या 

नारायणमुपागमत् ||

- वाल्मीकि रामायण

கதே புரோஹிதே ராம:

ஸ்நாதோ நியத மானஸ: |

சஹ பத்ன்யா விசாலாக்ஷ்யா

நாராயணம் உபாகமத் ||

- வால்மீகி ராமாயணம்


நாளை பட்டாபிஷேகத்துக்கு தயாராக இருக்க, அன்றைய இரவு விரதத்தில் இருந்து தர்ப்பைபுல் படுக்குமாறு சொல்லி விட்டு புரோஹிதரான வசிஷ்டர் சென்றார். ராமபிரான் ஸ்நானம் செய்து விட்டு, விசாலமான கண்களை உடைய சீதா தேவியுடன் ஒருநிலைப்பாடுடன் தன் குலதெய்வமான நாராயணனை தியானித்தார்.


After Vasistha left, Rama took bath and meditated on Lord Narayana with undistracted mind along with his wide-eyed wife, Seetha.


प्रगृह्य शिरसा पात्रं

हविषो विधिवत्तदा |

महते दैवतायाज्यं

जुहाव ज्वलितानले ||

- वाल्मीकि रामायण


ப்ரக்ருஹ்ய சிரஸா பாத்ரம்

ஹவிஷோ விதிவத் ததா |

மஹதே தைவதா யாஜ்யம்

ஜூஹாவ ஜ்வலிதானலே ||

- வால்மீகி ராமாயணம்


பிறகு, ஹோமம் வளர்த்து, யாக பாத்திரத்தில் பசும் நெய்யை தலைக்கு மேல் தூக்கி, அதை நாராயணனுக்கு காட்டி சங்கல்பித்து, யாக அக்னியில் ஆஹுதி செய்தார்.


Taking the vessel with clarified butter on his head as per scriptures, he offered to Lord Vishnu the clarified butter, by dropping it into the blazing fire.



शेषं च हविषस्तस्य

 प्राश्याशास्यात्मनः प्रियम् |

ध्यायन्नारायणं देवं

 स्वास्तीर्णे कुशसंस्तरे ||

वाग्यतः सह वैदेह्या

 भूत्वा नियतमानसः |

श्रीमत्यायतने विष्णोः

 शिश्ये नरवरात्मजः ||

- वाल्मीकि रामायण


சேஷம் ச ஹவிஷ: தஸ்ய

ப்ராஸ்ய ஆசாஸ்ய ஆத்மன: ப்ரியம் |

த்யாயன் நாராயணம் தேவம்

ஸ்வாஸ்தீர்னே குச சம்ஸ்தரே ||

வாக்யத: சஹ வைதேஹ்யா

பூத்வா நியத மானஸ: |

ஸ்ரீமத்யாயதனே விஷ்ணோ:

சிஷ்யே நரவர ஆத்மஜ: ||

- வால்மீகி ராமாயணம்


பக்தியுடன் நாராயணனுக்கு ஆஹுதி கொடுத்த பிறகு, மிச்சமிருந்த ஹவிஸை பிரசாதமாக ராமபிரானும், சீதாதேவியும் எடுத்து கொண்டனர். பிறகு, அந்த விஷ்ணுவின் சன்னதியிலேயே தர்ப்பை புல் பரப்பி, அதில் சீதா தேவியும், ராமபிரானும் படுத்துக்கொண்டனர்.


Rama ate the remainder of clarified butter after finishing the sacrifice, which he performed for his own good, silently meditated on Lord Narayana with controlled mind and slept along with Seetha on a properly laid bed of Kusa grass in a splendid temple of Lord Vishnu.

एकयामावशिष्टायां 

रात्र्यां प्रतिविबुध्य सः |

अलञ्कारविधिं कृत्स्नं

कारयामास वेश्मनः ||

- वाल्मीकि रामायण


ஏகயாம அவசிஷ்டாயாம்

ராத்ரயாம் ப்ரதி-விபூத்ய ச: |

அலங்கார விதிம் க்ருத்ஸ்னம்

காரயாமாச வேஸ்மன: ||

- வால்மீகி ராமாயணம்


விடிவதற்கு ஒரு ஜாமம் முன்னதாகவே (சுமார் 1:12AM) ராமபிரான் எழுந்து விட்டார். அயோத்யா மாளிகையில் செய்ய வேண்டிய அலங்கார காரியங்களை முடிக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.


Rama woke up three hours before dawn and caused to complete the entire decoration of the house.


तत्र शृण्वन् सुखा वाचः 

सूतमागधवन्दिनाम् |

पूर्वां सन्ध्यामुपासीनो 

जजाप यतमानसः ||

- वाल्मीकि रामायण


தத்ர ஸ்ருண்வன் சுகா வாச:

சூதமாகத வந்தினாம் |

பூர்வாம் சந்த்யாம் உபாஸீனோ

ஜஜாப யத மானஸ: ||

- வால்மீகி ராமாயணம்


ப்ரம்ம முகூர்தத்தில், சந்தியா காலம் நெருங்கிய போது, வேதியர்கள் ஓதும் சுகமான வேத சந்தங்கள் காதில் விழுந்தது. 

ராமபிரானும், சூரியன் உதிக்கும் சமயத்தில், ஒருநிலைப்பாடுடன் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து கொண்டிருந்தார்.


Listening to the pleasing verses of professional reciters, he worshipped the early sunrise and meditated on Gayatri* with an undistracted mind.


तुष्टाव प्रणतश्चैव

शिरसा मधुसूदनम् |

विमलक्षौमसंवीतो

वाचयामास च द्विजान् ||

- वाल्मीकि रामायण


துஷ்டாவ ப்ரணதஸ்ச ஏவ

சிரஸா மதுசூதனம் |

விமலஷௌம சம்விதோ

வாசயாமாச ச த்விஜாம் ||

- வால்மீகி ராமாயணம்


ராமபிரான் தலைக்கு மேல் கை உயர்த்தி விஷ்ணுவை வழிபட்டார். தூய பட்டு ஆடை அணிந்து இருந்தார் ராமபிரான். கோவிலில் பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர்.


He praised Lord Vishnu by bowing his head before Him. By wearing pure silk clothes, he got valedictory text recited by Brahmans.