Followers

Search Here...

Saturday 27 May 2023

ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை . ஸ்வாயம்பு மனு ஸ்மிருதி

ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை)

विसृज्य ब्राह्मणांस्तांस्तु 

नियतो वाग्यतः शुचिः ।

दक्षिणां दिशम् आकाङ्क्षन् 

याचेतैमान् वरान् पितॄन् ॥ 

- மனு ஸ்மிருதி

சாப்பிட்ட பிராம்மணர்கள் கிளம்பிய பிறகு, அமைதியாக அவர்களை சிறிது தூரம் பின் தொடர்ந்து, பிறகு தெற்கு முகமாக நின்று இவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்..

दातारो नो अभिवर्धन्तां 

वेदाः सन्तति: एव च ।

श्रद्धा च नो मा व्यगमद् 

बहुदेयं च नो अस्त्विति ॥

தாதாரோ நோ அபி-வர்தந்தாம்

வேதா சந்ததி: ஏவ ச |

ஸ்ரத்தா ச நோ மாவ்யகமத்

பஹுதேயம் ச நோ அஸ்த்விதி ||

- மனு ஸ்மிருதி

அள்ளி தானம்  கொடுக்கும் குணமுள்ள புத்திரர்களால் என் குலம் பெருக வேண்டும்.

வேதம் ஓதுவதிலும், அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வதிலும், யாகங்களில் செய்வதிலும் ஆர்வமுள்ள சந்ததிகளால் என் குலம் பெருக வேண்டும்.

எங்கள் அனைவருக்கும் வேதத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறையாமல் இருக்கட்டும். 

மற்றவர்களுக்கு அள்ளி கொடுக்கும்படியான செல்வம் எங்களுக்கு கிடைக்கட்டும்.


இவ்வாறு பிரார்த்தனை செய்து ஸ்ரார்த்தம் முடிக்க வேண்டும்...


What is muhurtA (முகூர்த்தம்), kAshtai (காஷ்டை)? மனு ஸ்மிருதி ஸ்லோகத்தை பார்போம்.... What Manu smriti says..

What is Day (நாள்), muhurtA (முகூர்த்தம்), kalA (கலை),  kAshtai (காஷ்டை) என்றால் என்ன? மனு ஸ்மிருதி ஸ்லோகத்தை பார்போம்....  What Manu smriti says..

निमेषा दश च अष्टौ च काष्ठा 

त्रिंशत् तु ताः कला ।

त्रिंशत् कला मुहूर्तः स्याद् 

अहोरात्रं तु तावतः ॥

- மனு ஸ்மிருதி (Manu Smriti)

18 முறை கண் இமைக்கும் நேரத்தை, 1 காஷ்டை (3.2 sec) என்று சொல்கிறோம்.

30 காஷ்டை , 1 கலை (இன்றைய கணக்குப்படி 96 sec) என்று சொல்கிறோம்.

30 கலைகள், 1 முகூர்த்தம் (இன்றைய கணக்குப்படி 48 min/2880 sec) என்று சொல்கிறோம்.

30 முகூர்த்தம், இரவும் பகலும் சேர்ந்த ஒரு நாள் என்று சொல்கிறோம்.

18 times blinking eyes = 1 kAshtai

30 kAshtai = 1 kalA

30 kalA = 1 muhurtA

30 muhurtA = 1 full day (day+night)

Friday 26 May 2023

Manu smriti says "Plants experience happiness and sorrow". Let us know the sloka...

Million of yrs ago, manu has already said "Plants experience happiness and sorrow".  Let us know the sloka...

तमसा बहु-रूपेण वेष्टिताः कर्महेतुना ।

अन्तस्सञ्ज्ञा भवन्त्येते सुख-दुःख समन्विताः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

தாவரங்கள் தமோ குணத்தோடும், உணர்ச்சியோடு சேர்ந்த மனதை கொண்டிருப்பதால், சுக துக்கத்தை அனுபவிக்கின்றன. 

Plants experience happiness and sorrow because they have a spirit and emotional mind.

What is the difference between Vanaspati (வனஸ்பதி) and Vruksha (வ்ருக்ஷம்)? Let us understand... Manu smriti answers..

Which Tree is referred as Vanaspati (வனஸ்பதி) and Vruksha (வ்ருக்ஷம்)

अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।

पुष्पिणः फलिन: च एव वृक्षास्तूभयतः स्मृताः ॥

- Manu smriti (மனு ஸ்மிருதி)


எந்த மரம், பூக்கள் இல்லாமல் பழம் தருமோ, அந்த மரத்தை "வனஸ்பதி" என்று சொல்கிறோம்.

The tree which gives fruit without becoming flower, is referred as Vanaspati.


எந்த மரம், பூக்களை உண்டாக்கி, அதிலிருந்து பழம் தருமோ, அந்த மரத்தை "விருக்ஷம்" என்று சொல்கிறோம்.

The tree which gives fruit from flower, is referred as Vruksha.

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்கள் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே

தூவா விரைத்தாலு நன்றாகா வித்தெனவே 

பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு 

—அவ்வையார் இயற்றிய நல்வழி


மனு ஸ்மிருதியின் வாக்கியத்தையே, அவ்வையும் பயன்படுத்துகிறாள்.


பூக்காது காய்க்கும் அத்தி மரம், ஆல மரம், அரச மரம், பலா மரம் முதலிய மரங்கள் உலகில் உண்டு. அது போல, 

மக்கள் கூட்டத்தில், இதைச் செய் என்று சொல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படும் நல்லோரும் உண்டு. 

அதற்கு மாறாக,

விதைத்தாலும் முளைக்காத வித்து (விதை) போன்றும் சிலர் இருக்கிறார்கள். 

அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது- தெரியாது. 

அதாவது விதைத்தாலும் முளைக்காது போன்று இப்படிப்பட்ட மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரையும் இப்படி பயனற்றதாக போகும்.

நல்லவன் கஷ்டப்படுகிறான்! கெட்டவன், கொள்ளைக்காரன் நன்றாக வாழ்கிறான் !! நானும் இவர்களை போல ஆகி விடலாமா? இதற்கு பதில் என்ன? மனு ஸ்ம்ருதி படியுங்கள்..

"நல்லவன் கஷ்டப்படுகிறான்!கொள்ளைக்காரன்,கெட்டவன் நன்றாக வாழ்கிறான் !! நானும் இவர்களை போல ஆகி விடலாமா?" இதற்கு பதில் என்ன? 

மனு ஸ்ம்ருதி படியுங்கள்..  ப்ரம்மாவின் புத்திரனான ஸ்வாயம்பு மனு சொல்கிறார்.


न सीदन्नपि धर्मेण मनो अधर्मे निवेशयेत् ।

अधार्मिकानां पापानाम् आशु पश्यन् विपर्ययम् ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

தான் அறத்தோடு (தர்மம்) வாழ்ந்து வறுமையில் வாடும் போது, அதே சமயம் அதர்மத்தோடு வாழும் ஒருவன் சௌக்கியமாக வாழ்கிறானே என்று மனம் தடுமாற கூடாது. "அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்" என்று அறிந்து, தானும் அதர்ம வழியில் செல்ல மனத்தை செலுத்தவே கூடாது.


न अधर्म: चरितो लोके सद्यः फलति गौरिव ।

शनैरावर्त्य मानस्तु कर्तुर्मूलानि कृन्तति ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

அதர்மம் செய்பவன் அதற்கான பாப பலனை உடனே அடைந்து விடுவதில்லை. ஆனால், காலம் கனியும் போது அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்.

यदि न आत्मनि पुत्रेषु न चेत् पुत्रेषु नप्तृषु ।

न त्वेव तु कृतो अधर्मः कर्तुर्भवति निष्फलः ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

ஒருவேளை, அதர்மம் செய்தவன் பாபத்தின் பலனை அழிவை சந்திக்காமல் போனாலும், அவன் பிள்ளையோ, பேரனோ அல்லது அவனது பிள்ளையோ அதன் பலனை அடைந்து அழிந்து போவார்கள். ஒரு நாளும் ஒருவன் செய்த அதர்மம் பலன் தராமல் போகாது.


अधर्मेणैधते तावत् ततो भद्राणि पश्यति ।

ततः सपत्नान् जयति समूलस्तु विनश्यति ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

ஒருவன் செய்த அதர்மங்கள் ஒரு நிலையை அடையும் வரை, அவன் சுகமாக சௌக்கியமாக வாழ்ந்து கொண்டு இருப்பான். தன்னை விட குறைந்த எதிரிகளையும் ஒழிப்பான். எப்பொழுது இவன் செய்த பாபம் ஒரு பரிபக்குவத்தை அடைகிறதோ, அப்போது தன்னுடைய சொத்து, சுகம், பிள்ளைகளோடு சேர்த்து, தானும் அழிந்து போவான்.