Followers

Search Here...

Showing posts with label எப்படி. Show all posts
Showing posts with label எப்படி. Show all posts

Wednesday 13 November 2019

4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது? எந்த காரணத்தால் இப்படி சொன்னார்கள்? தமிழ் மொழியில் சொல்லப்பட்ட 4000த்தை "தமிழ் மறை" என்று ஏன் சொன்னார்கள்?

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..

கடல் போன்றது "வேதம்'..




வேதம், "பகவானை பற்றி மட்டும் சொல்லவில்லை, உபதேவதைகள் பற்றியும், உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்து, உலகத்தில் அர்த்தங்களை பெறுவதற்கான அனைத்து கலைகளையும் பற்றி சொல்கிறது..."


"4 வேதங்கள் மட்டும் வேதத்தில் அடக்கம்" என்று நினைத்து விட கூடாது...

"அர்த்தங்களை (wealth) பெறுவதற்கு பல விஷயங்களையும் சொல்கிறது" வேதம்...

  • ஆயுர்வேதம் (medicine)
  • ஸ்தாபத்யம் (engineering)
  • காந்தர்வ வேதம் (music)
  • தனுர் வேதம்(army)
  • சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)
  • கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life)
  • வியாகரணம் (expert in grammers and linguistic analysis)
  • நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words)
  • சந்தஸ் (expert in poetic metres)
  • ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy.)
  • ஸ்ம்ருதி,
  • இதிகாசம் (knowledge about history),
  • புராணம் (knowledge about very old history) இவைகளும்,
  • காவியம்,
  • நாடகம்,
  • அலங்காரம்
  • யோகம் (expert in meditation, contemplation and liberation)
  • ஸாங்க்யம் (Expert in consciousness and matter)
  • நியாயம் (Expert in exploring sources of knowledge)
  • சௌகதம்
  • ஆர்ஹதம்
  • மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical)
  • பாசுபதம்
  • பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana)

என்று பல வேதத்தில் அடக்கம்.

"கடல் போன்ற வேதத்தை ஒருவன் முழுமையாக படித்து, உபதேவதைகள், அர்த்தங்களை (wealth) பற்றி சொல்லும் வேத பாகங்களை தள்ளி விட்டு, குறிப்பாக பரமாத்மாவை பற்றி வேதம் என்ன சொல்கிறது?" என்று தெரிந்து கொள்வதற்கு கலியுகத்தில் நமக்கு ஆயுசு போதாது....

"பரமாத்மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசையுள்ள நமக்கு, வள்ளலாக வந்தார்கள் "ஆழ்வார்கள்"..
ஆழ்வார்கள், "வேதத்தின் சாரத்தை, இதிகாச, புராணங்களின் சாரத்தை (essence) நமக்கு 4000 திவ்ய பிரபந்தமாக கொடுத்து விட்டார்கள்."

பகவானை பற்றி அறிய, 'வேதம் முழுவதையும் படிக்க முடியாத நமக்கு, பகவானை பற்றி வேதம் சொல்லும் விஷயத்தை' அப்படியே தமிழில், கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.

வேதம் என்ற "பழத்தை" பிழிந்து,
அர்த்தவாதங்கள் சொல்லும் வேத மந்திரங்களை "சக்கை" என்று தள்ளி விட்டு,
பரமாத்மாவை பற்றி மட்டுமே சொல்லும் வேத மந்திரங்களை "சாறு" போல எடுத்து,
4000 திவ்ய ப்ரபந்தமாக "தமிழில்"  நமக்கு சிரமப்படாமல் அருந்தி சுவைப்பதற்கு கொடுத்து விட்டார்கள் ஆழ்வார்கள்.
"பகவானை பற்றி அறிந்து கொள்ள, 
வேதம் முழுக்க படிக்க அவசியமில்லை, 4000 திவ்ய பிரபந்தங்களே போதும்"
என்ற அளவுக்கு தமிழ் மக்களுக்கு பெரும் நிதியாக கொடுத்து விட்டார்களே ஆழ்வார்கள்..

"4000 திவ்ய ப்ரபந்தம் புரிந்து கொண்டால், பகவானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரகசியம் தெரிந்த தமிழன் திவ்ய ப்ரபந்ததை விடுவானா?.. "




பிரபந்தங்கள் தமிழனின் பொக்கிஷமாயிற்றே... தமிழ் மொழியாயிற்றே..

வேதம் "கடல் போன்றது" என்று எடுத்துக்காட்டாக சொல்வதற்கு காரணம் உண்டு..

கடல் தண்ணீரில் "உப்பு" கலந்து இருக்கும்..
பல ஜீவராசிகள் அதை சார்ந்து இருக்கிறது...
மனிதர்களாகிய நமக்கோ, கடல் முழுக்க நீர் இருந்தாலும், அதில் ஒரு சொட்டு நீர் கூட தாகத்தை தணிக்காது...
மனிதனும் நீரை நம்பி தான் வாழ்கிறான்.




மனிதனுக்கு நீர் கொடுப்பதற்காக அந்த கடலின் மேல், மேகங்கள் சென்று, அது தன் சாமர்த்தியத்தால், கடலில் உள்ள உப்பை மட்டும் விலக்கி விட்டு, நல்ல தண்ணீரை மட்டும் உறிஞ்சிக்கொள்கிறது...

கர்ப்பம் தரித்த பெண் போல, கார்மேகமாக நகர்ந்து நகர்ந்து, நம் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் வந்து, அம்ருதம் போன்ற மழையை பொழிந்து நம் தாகத்தை தீர்த்து விடுகிறது...
கடல் நீரில் (வேதம்) உள்ள
உப்பை (அர்த்தவாதங்களை) விலக்கி,
சுவையான நீரை மட்டும் (பகவானை பற்றி மட்டுமே)  எடுக்க தெரிந்த மேகங்கள் போல நமக்கு 'ஆழ்வார்கள்' கிடைத்தார்கள்.

வேதத்தில், சாரம் இல்லாத  சாஸ்திரங்களை விலக்கி, சாரத்தை மட்டும் எடுக்கும் சக்தி நமக்கு கிடையாது..

எம்பெருமான் அருள் பெற்ற, அருள் பெற்றதால் ஞானத்தை அடைந்த
ஆழ்வார்கள்,
12 கருமேகங்களாக நம் தமிழகத்தில் உதித்து,
வேத நாயகனான நாராயணனின் பரத்துவத்தை, குணங்களை சொல்லும் வேத பாகங்களை, "மேகம்" சுத்தமான நீரை மட்டும் உறிஞ்சுவது போல உறிஞ்சி,
நம்மை போன்ற சாமானிய ஜனங்களும் "கோவிந்தனின் நாமத்தை, அவர் மகிமையை, அவர் குணங்களை, அவர் கருணையை அறிந்து கொள்ளும்" படியாக,
"4000 திவ்ய ப்ரபந்தங்கள்" என்ற அம்ருத மழையாக பொழிந்து விட்டனர்..

அதனால்,

  1. பெரியாழ்வார் அருளிய "திருப்பல்லாண்டு, திருமொழி"
  2. ஆண்டாள் அருளிய "திருப்பாவை, நாச்சியார் திருமொழி"
  3. குலசேகராழ்வார் அருளிய "பெருமாள் திருமொழி"
  4. திருமழிசையாழ்வார் அருளிய "திருச்சந்தவிருத்தம்", "நான்முகன் திருவந்தாதி"
  5. தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய "திருமாலை, திருப்பள்ளி எழுச்சி"
  6. திருப்பாணாழ்வார் அருளிய "அமலனாதிபிரான்"
  7. மதுரகவியாழ்வார் அருளிய "கண்ணிநுண்சிறுத்தாம்பு"
  8. திருமங்கையாழ்வார் அருளிய "பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்"
  9. பொய்கை ஆழ்வார் அருளிய "முதல் திருவந்தாதி"
  10. பூதத்தாழ்வார் அருளிய "இரண்டாம் திருவந்தாதி"
  11. பேயாழ்வார் அருளிய "மூன்றாம் திருவந்தாதி"
  12. நம்மாழ்வார் அருளிய "திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி"
    திருவரங்கத்தமுதனார் அருளிய "இராமானுச நூற்றந்தாதி"

ஆகிய 4000த்தில் சொல்லப்பட்டு இருக்கும் அனைத்தும், வேதத்தின் சாரமான "பரமாத்மாவின் குணங்களையே, தத்துவத்தையே பேசுகிறது"...

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது.
நம்மாழ்வார் "ரிக், யஜுர், சாம, அதர்வண" ஆகிய 4 வேதங்களின் சாரத்தை பிழிந்து,
"திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி" என்ற "தமிழ் மறை"களாக நமக்கு கொடுத்தார்.

திருமங்கையாழ்வார், "சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம்" ஆகிய 6 சாஸ்திரங்களின் சாரமாக,
"பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்" என்ற "தமிழ் சாஸ்திரங்களாக" நமக்கு கொடுத்தார்.




ஆறு சாஸ்திரத்தின் சாரமும், பெரிய திருமொழியில் இருப்பதை நாம் காணலாம். 
திவ்ய தேசம் பற்றி சொல்லும் போது, அந்த திவ்ய தேசத்தில் உள்ள வீதிகளை வர்ணிக்கும் போதே, தான் கற்ற சாஸ்திர ஞானத்தை பிரபந்தத்தில் காட்டி விடுகிறார்.
நாம் உலக விஷயமான சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலமாகவும் நமக்கு மேலும் பகவத் பக்தி ஏற்பட செயது கொள்ள வேண்டும் என்று காட்டுகிறார் திருமங்கையாழ்வார்.

தான் கற்ற 6 சாஸ்திரங்களையும் திருமங்கையாழ்வார், உலக விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், எம்பெருமானுக்கே பயன்படுத்தினார்.

உலக சாஸ்திரங்களை கற்றாலும், அதன் மூலம் பகவத் பக்தியை உயர்த்தி கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும் என்று காட்டுகிறார்.. திருமங்கையாழ்வார்.

அது போல, 2 இதிகாசங்கள், புராணங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது..

ஸ்ரீ ராமாயணத்தை ராமபிரானை பற்றி அறிய, குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியே போதுமானது...
வால்மீகி ராமாயணத்தின் சாரமாக, நமக்கு ராமபிரானின் குணத்தை நமக்கு காட்டுகிறார்..

"பாகவதம்" போன்ற சாத்வீக புராணங்களின் சாரமாக, பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் போன்றவர்கள் அருளிய பிரபந்தங்களே நமக்கு பகவத் பக்தி அனுபவத்தை கொடுத்து விடுகிறது..

"விஷ்ணு தர்மத்தை" அறிய, தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி போன்றவைகளே அந்த சாரத்தை நமக்கு தந்து விடுகிறது..

இப்படி "மோக்ஷத்துக்கு வழி சொல்லும் புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள், 4 வேதம் உட்பட அனைத்தும்" 4000 திவ்ய பிரபந்தத்தில் அடங்கி விடுகிறது..

தமிழர்களுக்கு "பொக்கிஷம்" அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..
அர்த்தங்கள் பொதிந்த, பக்தியை தரக்கூடிய, 'தமிழ் மறை' அல்லவா திவ்ய பிரபந்தங்கள்..

4 வேதங்களையும், புராணங்களையும், சாஸ்திரங்களையும் முழுவதாக படித்து இருந்தவர்களால் தானே, இவையெல்லாம் 4000த்தில் அடங்கி இருப்பதாக சொல்லி இருக்க முடியும்!!..

4000த்தில் இவையாவும் அடங்கி உள்ளது!! என்று சொன்னவர்கள் யார்? என்றும் நாம் கவனிக்க வேண்டாமா?

சர்வ சாஸ்திரங்களும் 4000த்தில் அடங்கி விடுகிறது என்று  யார் சொன்னார்கள்? 
என்று கவனிக்கும் போது தான், திவ்ய பிரபந்தத்தின் பெருமை நமக்கு புரியும்..

சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இதையாவது தெரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட சாதாரண புத்தகம் இல்லையே, 4000 பிரபந்தங்கள்...
வெறுமனே தமிழ் கற்று கொள்வதற்காக, ஏற்பட்ட நூல் இல்லையே 4000 பிரபந்தங்கள்...
சர்வ சாஸ்திரமும், வேதமும், புராணங்கள், இதிகாசங்கள் உட்பட அனைத்தும் கரைகண்ட,
பெரியவாச்சான் பிள்ளை, தேசிகர், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்கள் வாக்கியத்தால் நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..

சர்வ சாஸ்திரமும் கரை கண்ட பெரியவாச்சான் பிள்ளை, போன்ற மகான்கள், கடைசியாக '4000த்தை கையில் எடுக்கும் போது, அதில் உள்ள பிரபந்தங்களோடு வேத சாஸ்திரங்களை, புராண, இதிஹாசங்களை காட்டி விளக்கம் கொடுக்கும் போது, நமக்கு 4000த்தின் பெருமை தெரிகிறது..'

தேசிகர் போன்று சாஸ்திரத்தில் கரை கண்டவர் கிடையாது...
அவர் சம காலத்தில் சிம்மமாக இருந்த மகா பண்டிதர்கள் எல்லாம், இவர் வித்வத்தை பார்த்து பெருமதிப்பு கொண்டிருந்தனர்..

சர்வ சாஸ்திரமும் அறிந்த தேசிகர், கடைசியில் 4000த்தை கையில் எடுத்து வாசிக்க வாசிக்க, "தெளியாத மறை நிலமெல்லாம் தெளிகிறது" என்று சொல்கிறார்..

யார் இப்படி சொல்கிறார்? என்பதை கவனிக்க வேண்டும்..
"தான் கற்ற வேதங்களில், புரியாத சில வாக்கியங்கள், 4000 திவ்ய பிரபந்தத்தை படிப்பதால், புரிந்து விடுகிறது என்று யார் சொல்கிறார்? என்று பார்க்க வேண்டும்..
அப்பொழுது தான், நமக்கு 4000த்தின் மகத்துவம் புரியும்.

"தான் வேத சாஸ்திரம் படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள இயலாத இடங்களை கூட 4000 திவ்ய பிரபந்தத்தில் பார்க்கிறேன்" என்று சொல்கிறார் தேசிகர்..

அற்புதமான திவ்ய பிரபந்தத்தை, தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்..

இதன் உண்மையான ஆழ்ந்த அர்த்தங்களை, ஞானத்தில் உயர்ந்த, பரமாத்மாவிடம் திட பக்தி உள்ள, மகான்களிடம் கேட்டு மனதில் உள்வாங்கி, அனுபவிக்க வேண்டும்..  




திவ்ய பிரபந்தங்களே நமக்கு பரமாத்மாவை பற்றிய ஞானத்தை, பக்தியை தரும்.
தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுவோம்.

வாழ்க 4000 திவ்ய பிரபந்தம்.
வாழ்க ஆழ்வார்கள்.   வாழ்க நாயன்மார்கள். 
வாழ்க நம் பாரத மண்ணில் உதிக்கும் மகான்கள்.



Thursday 7 November 2019

ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்?



உலகத்தில் உள்ள எதை பற்றியும், நம் எச்சில் வாயால் பேசி விடலாம், பேசலாம்...
ஆனால்,
நம்மை படைத்த பகவானை பற்றி நம் எச்சில் வாயால் பேசலாமோ? பேச முடியுமா?..

சொல்லுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா "பகவான்"!
"பரமாத்மாவின் பெருமையை சொல்" என்று சப்த ப்ரம்மமாகிய வேதத்தை கேட்டால்,
"பகவானின் பரத்துவத்தை பற்றி சொல்ல இயலாது" என்று வேதமே  தயங்கி பேசுகிறது...

பகவானின் பெருமையை பற்றி சொல்ல, ஏன் மகான்கள் கூட தயங்கினார்கள்?...
"வாக்கு தூய்மை இல்லை" என்று பெரியாழ்வார், இந்த கேள்விக்கு பதில் சொல்கிறார் என்று கவனிக்க வேண்டும்.
"வாக்கில் தூய்மை இல்லாததால், எம்பெருமான் பெருமையை உரைக்கவும்,
எம்பெருமான் நாமத்தை சொல்லவும் கூட, அஞ்சுகிறேன்"
என்று பெரியாழ்வார் சொல்கிறார்..
யார் இப்படி சொல்கிறார்? என்று இங்கு கவனிக்க வேண்டும்..

பகவானின் பெருமையை நினைக்கும் போது, பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்கள்,
எம்பெருமான் பெருமையை தன் வாயால் பேச முயற்சித்து, "தன் எச்சில் பேச்சால், எம்பெருமானை  களங்கம் செய்து விடுவோமோ!!"
என்று அஞ்சினார் என்றால், 'நாம் எத்தனை நிதானத்துடன் பேச வேண்டும்' என்று புரியும்.

"எப்பேற்பட்டவர் பெரியாழ்வார்" என்று கவனிக்க வேண்டும்..
யார் இப்படி சொல்கிறார்? என்று கவனிக்க வேண்டும்..
"ஆண்டாளை மகளாக பெற்றவர்" என்ற பெருமையை உடையவர்,
எம்பெருமானை நேரில் தரிசித்து "பல்லாண்டு..." பாடியவர்,
ஆழ்வார்களில் ஒருவர்,
இப்படி அஞ்சினார் என்றால்,
நாம் எத்தனை கவனத்துடன் பகவானை பற்றி பேச வேண்டும், 
என்று கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்..

வாக்குத்தூய்மை இல்லாமையினாலே
மாதவா!! உன்னை வாய்க்கொள்ளமாட்டேன்
என்று பாசுரம்.
இங்கு திருமொழியில் 'பெரியாழ்வார்',
"எம்பெருமான் பெருமையை, தன் எச்சில் வாயால் பேசுவதாவது?
என்று அஞ்சுகிறார்.

"இந்த பாசுரத்தின் கனத்தை (weight) நாம் உள் உணரும் போது தான், 
நாம் பகவானை பற்றி பேசும் போது, எத்தனை கவனத்துடன் பேச வேண்டும்" என்று புரிந்து கொள்ள முடியும்..
"பகவானின் பெருமையை நம்மால் பாட முடியாது, பேச முடியாது.. 
அவர் வாக்குக்கும் அப்பாற்பட்டவர்"
என்று வேதம் சொல்கிறது...

இதே விஷயத்தை மற்ற மதங்கள் கூட சொல்வதை கவனிக்கலாம். அதோடு நின்று விடுகிறது மற்ற மதங்கள்.



சப்த ப்ரம்மமாகிய அதே வேதம்,
"வாக்குக்கு எட்டாதவர் தான் பரமாத்மா, 
மனசுக்கு அப்பாற்பட்டவர் தான் பரமாத்மா..
அதற்காக, 
அவர் பெருமையை பேசாமல், நினைக்காமல் இருந்து விடாதே!!....
வேத சாஸ்திரம் எப்படி எம்பெருமானை பேசுகிறதோ, அது போலவே பேசு!!
புராணங்கள், சாஸ்திரங்கள் எப்படி பரமாத்மாவை காட்டுகிறதோ, அது போலவே நினை!!
நீயாக கற்பனை செய்து!! 
உன் புத்தியை கொண்டு பேசி, 
எம்பெருமான் பெருமையை நீ தாழ்த்தி பேசாதே"
என்று பகவானை பற்றி 'பேசு, நினை' என்ற அனுமதியை நம் அனைவருக்கும் கொடுத்து,
முக்கியமாக உபன்யாசகர்கள், பௌராணிகர்கள், பேச்சாளர்களை பார்த்து ஜாக்கிரதை படுத்துகிறது...

"பகவான் பெருமையை பேச முடியாது... 
இருந்தாலும் சும்மா இருந்து, வீண் பொழுது போக்கி விடாதே!!  
கிடைத்த வாழ்க்கையை வீண் செய்யாதே!
மனித பிறவி கிடைப்பது மிகவும் அரிது!! 
ஆதலால் உன் வாயால் பகவான் பெருமையை எப்பொழுதும் பேசு, 
உன் மனதால் அவரை எப்பொழுதும் நினைத்து கொண்டே இரு" 
என்று வேதம் அனுமதி கொடுக்கிறது.

"வாக்குக்கு அப்பாற்பட்ட பகவானை பேசு என்றால்,எப்படி பேச வேண்டும்?"
என்ற கேள்வி நமக்கு எழலாம்..
"தீது இல்லா மொழிகள் கொண்டு"  பகவானை பேசு
என்று 'தொண்டரடிபொடி ஆழ்வார்' அதற்கு பதில் சொல்கிறார்..

"நம் புத்திக்கு எட்டிய அளவில், 
அருவெறுக்க தக்க உதாரணங்களையும், 
அருவெறுக்க தக்க சொற்களையும், 
கற்பனையான கதைகளையும், 
நமக்கு தெரிந்த படி பிதற்றி, 
'பெருமாளுடைய பெருமையை', 
நம் எச்சில் வாயால் குறைத்து பேசி விட கூடாது..."
என்பதை உணர்த்த,
"தீது இல்லா மொழிகள் கொண்டு, எம்பெருமான் பெருமையை பேசு" 
என்று தொண்டரடிபொடி ஆழ்வார் நமக்கு வழி காட்டுகிறார்..

"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டவர் பகவான்" என்று உபநிஷத் சொல்லிவிட்டு,
இருந்த போதிலும், "வாக்குக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ பேசு", "மனதுக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ தியானம் செய்" என்று நம்மை பேச உற்சாகப்படுத்துகிறது..

"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவை எப்படி பேச முடியும்? எப்படி தியானிக்க முடியும்?"
இதற்கு ஸ்ரீ கிருஷ்ணரே நமக்கு கீதையில் பதில் சொல்கிறார்.




"பகவானை பற்றி பேசவேண்டும் என்று நீ நினைத்தால், 
உன் சொந்த 'புத்தியால்' பேசாதே!!..
ஆழ்வார்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ!,
ஆழ்வார்களின் ஸ்ரீ ஸூக்திகளுக்கு எப்படி வ்யாக்யானம் (விளக்க உரை) செய்து இருக்கிறார்களோ!
மகரிஷிகளான வியாசர், வால்மீகி போன்றவர்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ!!  அது போல பேச கற்றுக்கொள்.

பகவானை பற்றி அறிந்து கொள்ள, ஒரு தகுந்த (ஞான பூர்ணனான) ஆச்சார்யாரிடம் பணிந்து இருந்து கேட்டு, 
அவர் சொன்ன உபதேசங்களை மனதில் வாங்கி கொண்டு, 
அந்த விஷயங்களின் அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பகவானிடம் தான் முதலில் பிரேமை (அன்பு) கொண்டு,, 
பிறகு, பகவானை பற்றி பேச போகிறோமே என்ற பக்தியுடன் (தெய்வத்திடம் ஆசை), உன்னுடைய மனதை பகவத் அனுபவத்தில் உயர்த்திக்கொண்டு பகவானை பற்றி சொல்வாயானால், உனக்கும் பிரயோஜனம் உண்டு.. கேட்பவருக்கும் பிரயோஜனம் உண்டு.."

தத் வித்தி ப்ரணி  பாதேன 
பரி பிரஷ்னேன சேவையா 
உபதேக்ஷ்யந்தி  தே  ஞானம்
ஞானிநஸ் தத்வ தர்ஷின:
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (Chapter 4:  Sloka 34)

"பகவானை பற்றி அறிந்த ஞான குருவிடம் பணிந்து, குருவுக்கு சேவை செய்து, அவர் உபதேசத்தை பெற்று, அவர் உபதேசத்தை மனதில் உள் வாங்கி கொண்டு, அந்த அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பிறகு பகவான் மீது களங்கம் ஏற்படாத புண்ணிய சொற்களை கொண்டு, பக்தியுடன் சொல்" 
என்பதை ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மாவே நமக்கு சொல்லி வழிகாட்டுகிறார்.

"எம்பெருமான் பெருமையை கேட்க வேண்டும்"
என்று ஆசையோடு வரும் பக்தர்கள் அனைவரும், சொல்ல வந்த பௌராணிகரை (உபன்யாசம் செய்பவர்) தானே நம்பி வருகிறார்கள்!!..
ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைத்து பார்க்க வேண்டும்..

எம்பெருமானை பற்றி, பலர் முன்னிலையில் பேசுபவர்கள், ஜாக்கிரதையாக சொல்ல வேண்டாமோ?...

"நம் எச்சில் வாயால், 
எம்பெருமான் பெருமையை குறைத்தோ,
எம்பெருமான் பெருமையை தவறாகவோ,
எம்பெருமானை மரியாதை குறைத்தோ பேசி விட கூடாதே!!"
என்று அச்சம் வேண்டாமா?...

எம்பெருமானை பேசுவதற்காகவே ஏற்பட்ட மங்களமான, பவித்ரமான, உயர்ந்த சொற்களை பயன்படுத்து பேச வேண்டாமா?...

எம்பெருமான் பெருமையை குறைத்து விடாமல், உயர்ந்த சொற்களை கொண்டு பேசினால் தானே, கேட்பவர்களுக்கும் எம்பெருமான் மீது பக்தி உண்டாகும்... 
அப்படித்தானே மஹான்கள் வழி காட்டுகின்றனர்.
"எம்பெருமான் பெருமையை", உயர்ந்த சொற்கள் கொண்டு பேசினால் தானே, நாம் பேசியதற்கே பிரயோஜனம்.
அப்படி பேசினால் தானே,
உபன்யாசம் செய்பவருக்கும், எம்பெருமான் பெருமையை பேசிய ஆத்ம திருப்தி கிடைக்கும்...



பெருமாள் பெருமையை பேசும் போது, "தீது இல்லா மொழிகள் கொண்டு  எம்பெருமான் பெருமையை பேசு"
என்று நம்மை நிதானிக்கிறார் தொண்டரடிபொடி ஆழ்வார்..

மேலும்,
மற்ற மதங்கள் "மனிதர்களால் உருவானவை"...
அவர்கள் உருவாக்கி வழிபடும் தெய்வத்தை,
"உருவாக்கிய மனிதர்களே", கடுமையான பிரச்சாரம் மூலமாகவும், மிரட்டியும், தன் தெய்வத்தை மக்கள் மத்தியில் நிலை நாட்ட முயல்கின்றனர்...
இது போன்ற மதங்கள் பல ஆயிரம் உருவாகி, கால வெள்ளத்தில் அழிந்து விட்டன...

காலம் கணக்கிட முடியாத படி ("சனாதன" என்று சமஸ்கரித சொல்) என்றுமே இருப்பது, சப்த ப்ரம்மாகிய வேதம்..
சப்தத்திலேயே கலந்து இருக்கிறது வேதம்..
அதனால் தான், வேதத்துக்கே "சப்த பிரம்மம்" என்று பெயர்.

வேதத்தை அறிந்து கொண்டு தான் ப்ரம்ம தேவனே,
"ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம்" என்று வரிசையாக படைத்தார்..
உலக ஸ்ருஷ்டி ஆரம்பித்தார்..
"ப்ரம்ம தேவனையும் படைத்து, அவருக்கு வேதத்தையும் சொல்லி கொடுத்தவர்" பரவாசுதேவன் நாராயணன் என்று நம் ஹிந்து தர்மம், பரமாத்மா பரவாசுதேவன் ஆரம்பித்து, உலக சிருஷ்டியை சொல்கிறது...
வேதத்தில் சொல்லப்படும் அனைத்து தெய்வங்களும் நிஜமானவை.
அனைத்து தெய்வங்களுமே நம்மை விட அதிபலசாலிகள்.. நம்மை விட உயர்ந்தவர்கள்.. செய்த புண்ணியங்களால் தேவ பதவிகளை பெற்றவர்கள்..

ப்ரம்மா உட்பட அனைத்து தேவர்களுக்கும், சர்வேஸ்வரன் "பரவாசுதேவன் நாராயணன்".
இதனால் தான்,
மற்ற மதங்களை போல, நம் சனாதன தர்மம் எந்த நிலையிலும் அழியாமலேயே உள்ளது... அழிக்கவும் இயலாதது..

இதனால் தான்,
1000 வருடங்கள் அரேபியர்கள் நுழைந்து இஸ்லாமிய ராஜ்யமே கடுமையாக இந்த பாரத மண்ணில் நடத்தியும்,
200 வருடங்கள் ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சியே கடுமையாக நடத்தியும், இன்றும் பாரத நாடு ஹிந்துக்களால் நிரம்பி உள்ளது...

அது போதாதென்று, உலகத்தில் இன்று எங்கு சென்றாலும்,
ஹிந்து தர்மத்தில் ஈர்க்கப்பட்டு, ராமரையும், கிருஷ்ணரையும் பக்தி செய்பவர்கள் அதிகரிக்கின்றனர்.
எங்கு சென்றாலும் "ஒரு ஹிந்துவை காணலாம்" என்ற அளவுக்கு உலகம் நிரம்ப இன்று இருப்பதை காண முடிகிறது..

மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை, மனிதர்களே பிரச்சாரம் செய்து காக்க முயற்சிக்கின்றனர்..
ஆனால்,
நம் சனாதன தர்மம் அசைக்கப்படும் போது, தெய்வங்களே தன்னை அவதரித்து கொண்டு காக்கிறது..
இதற்கு அத்தாட்சியே,
1200 வருட அந்நிய ஆதிக்கத்தையும் தாண்டி, இன்றும் ஹிந்து தர்மம் என்று சொல்லப்படும் சனாதன தர்மம் நிற்பதற்கு காரணம்.

சுயமே ஹிந்து தர்மத்தை காக்கும் பொறுப்பை தெய்வங்களே கொண்டுள்ளது நம் தர்மத்தில்..
அப்படி இருக்கும் போது,
'நாம் தெய்வங்களை பற்றி பேசுவதால் தான், எம்பெருமான் நாராயணன் பெருமை, மற்ற தெய்வங்களின் பெருமை உலகில் நிற்கிறது' என்று கர்வபட்டு விட கூடாது...

சுயமே பிரகாசமாக உள்ள சூரியனை, ஒரு அகல் விளக்கு கொண்டு ப்ரகாசப்படுத்தி விட்டதாக,
பௌராணிகர்கள் (ஆன்மீக சொற்பொழிவாளர்கள்) நினைக்க கூடாது... கர்வ பட கூடாது..



ப்ராம்மணன், "சூரியன் உதிக்கும் முன் எழுந்து, ஸ்நானம் செய்து, காயத்ரி மந்திரத்தை தான் ஜபித்ததால் தான், சூரியன் உதிக்கிறார்" என்று நினைத்தால், அது எத்தனை மடத்தனமோ! அத்தனை மூடத்தனம்
"தன் பேச்சால் தான், மக்கள் மனதில் பக்தி நிலைக்கிறது"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைப்பதும்..
இந்த கர்வம் கூடவே கூடாது...

ப்ராம்மணன், "காயத்ரி மந்திரம் சொல்லாமல் போனாலும், தேவ தர்ப்பணம் செய்து க்ரஹங்களை, வ்யூஹ மூர்த்தியான பரமாத்மாவை திருப்தி செய்யாமல் போனாலும்"
சூரியன் எப்படியும் "தக தகவென்று உதிக்க" தான் போகிறார்!!

"என்னால் தான் சூரியன் உதிக்கிறார்" என்று நினைக்காமல்,
"தனக்கும் அந்தர்யாமியாக உள்ள, சூரியனுக்கும் அந்தர்யாமியாக உள்ள பரமாத்மாவை, நானும் வழிபட மனித பிறவி கிடைத்ததே"
என்று தனக்கு கிடைத்த பாக்கியத்தை ப்ராம்மணன் நினைத்து பார்த்தால், கர்வம் இல்லாமல் சந்தியா வந்தனம் செய்வான்..
அப்படி கர்வமில்லாமல், ஈஸ்வர பக்தியுடன், சந்தியா வந்தனம் செய்து வாழும் ப்ராம்மணனை, உலகமும் மதிக்குமே...

அது போல,
"நான் பகவானை பற்றி 10 வார்த்தைகள் சொன்னதால் தான், உலகத்தில் பக்தி பிரச்சாரம் ஆகிறது... நாராயணனை எல்லோரும் ஏற்று கொள்கிறார்கள்"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைக்க கூடாது...

மாறாக,
"நம்முடைய பிரச்சாரம் தேவையே இல்லை... 
வேதத்தின் நாயகனான எம்பெருமான் அவர் பெருமையாலேயே ப்ரகாசிக்கிறார்.. அத்தகைய பெருமை உடையவர்"
என்றே ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவாளர்களும் நினைக்க வேண்டும்.

"நான் ராமாயண பிரச்சாரம் செய்கிறேன்.. கிருஷ்ணரை பற்றி பிரச்சாரம் செய்கிறேன்..."
என்று தன் அனுபவத்துக்கு தோன்றியபடி,
நாமாக ஒன்றை கற்பனை செய்து கொண்டு,
உலகத்தில் கேட்க தகாத, அருவெறுப்பான சம்பவங்களை சொல்லி,
எம்பெருமானை பற்றி நம் எச்சில் வாயால் பேசினோம் என்றால்,
கேட்கும் ஜனங்கள் ஏளனமாக சிரிக்க போகிறார்களே தவிர,
"ராமாயணம், பாகவதம் கேட்ட பலனாக அவர்களுக்கு தான் பக்தி வந்து விட போகிறதா?... இல்லை சொற்பொழிவு செய்தவருக்கு பக்தி உண்டாக போகிறதா?.."
பகவானை பற்றி பேச அமர்ந்து விட்டு, 
ஏளனமாக, மரியாதை குறைந்த ஈன சொற்களை பயன்படுத்தி பேசும் போது, 
ஆசையாக பகவான் பெருமையை கேட்க வரும் சாதாரண ஜனங்களுக்கு கூட, ரசிக்காதே!!.

"பெருமாளை போய் இப்படி தரம் குறைந்த வார்த்தைகளால் பேசுகிறாயே.. நியாயமா?"
என்று சொற்பொழிவை கேட்பவர்கள் கேள்வி கேட்காததால் தானே, இப்படி தரம் தாழ்ந்த ஆன்மீக சொற்பொழிவுகளும் ஆங்காங்கே நடப்பதை காண்கிறோம்.

"யாரை பற்றி பேசுகிறோம்?"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...
"ஆழ்வார்கள் எப்படிபட்ட உயர்ந்த பவித்ரமான சொற்களையே பயன்படுத்தி, தன் வாக்கால் பகவானின் பெருமையை தரம் தாழ்த்தி விட கூடாதே என்று பயந்தார்கள்!!"
என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...

"நம் சொற்பொழிவினால், நமக்கும் பக்தி உயர வேண்டும்... கேட்பவருக்கும் பக்தி உயர வேண்டுமே"
என்று உயர்ந்த பதங்களை கொண்டே பேச வேண்டும்..

எம்பெருமானை பற்றி நாம் சொல்ல, கேட்பவன் பக்தி உயர்வதை பார்க்க ஆசை பட வேண்டும்..

"ராமரும், கிருஷ்ணரும் நம் தெய்வம், என் பெருமாள், நம் பெருமாள்"
என்று ஹிந்துக்கள் யாவரும் பரம்பரை பரம்பரையாக வளர்ந்து இருக்கிறோம்..

இப்படி வளர்க்கப்பட்ட நாம்,
ஈன சொற்கள் கொண்டு பேசப்படும் இது போன்ற ஆன்மீக சொற்பொழிவை கேட்கும் போது வேதனை படுகிறோம்..

ஹிந்துக்கள் பொதுவாகவே சாத்வீக குணத்துடனேயே இருப்பதால்,
இது போன்ற சொற்பொழிவுகளை அப்போதே திருத்தி கண்டிக்காமல்,
"தன் வரையிலாவது காதில் விழ வேண்டாமே" என்று ஒதுங்கி விடுகின்றனர்...
இது கேட்பவர்களின் குற்றம் அல்ல.. ஆன்மீக சொற்பொழிவாளர்களின் குற்றமே..



ஆன்மீக சொற்பொழி செய்பவர்கள், 
தன் அறிவை காட்டி எம்பெருமான் பெருமையை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை...
"அப்படி பேசினால் தான் கூட்டம் வரும்" என்று நினைப்பதும் தவறு...

"ஆழ்வார்கள்" பாடிய பாசுரங்களை,
அதற்கு விளக்கம் கொடுத்த "பெரியவாச்சான் பிள்ளை. தேசிகர், ராமானுஜர்" போன்ற அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களையே பயன்படுத்தி மக்களுக்கு எளிய தமிழில், 'அவன், இவன்' என்று பகவானை தரம் குறையாமல் பேசி  புரிய வைக்க முடியும்.

நம் எச்சில் வாயால நம் புத்தியை கொண்டு ஏன் எம்பெருமான் பெருமையை குறைக்க வேண்டும்?...

ஆன்மீக சொற்பொழிவாளர்கள்,
ஹிந்துக்களின் பக்தியை உயர்த்த,
தன் பக்தியையும் உயர்த்த,
அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களை கொண்டே பேச வேண்டும்.. மக்கள் மனதில் பக்தியை பெருக்க வேண்டும்..
அப்படி உயர்ந்த சொற்களால் பக்தியை வளர்க்கும் ஆன்மீக பெரியோர்கள் இன்றும் இருக்கிறார்கள். 
அவர்கள் அனைவரையும் ஹிந்துக்களாகிய நாம் கவுரவிக்க வேண்டும். அவர்களை அவர்கள் தர்மத்தில் வாழ முடிந்த உதவிகளை  நாம் செய்ய வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்...
வாழ்க நம் பாரத தேசத்தில் வாழும் அவதார புருஷர்கள்.. 



Thursday 15 August 2019

சந்தியா வந்தனத்தை, மகான்கள் எப்படி பார்க்கிறார்கள்? நாம் தெரிந்து கொள்வோமே...

சந்தியா வந்தன மந்திரங்களை,
சந்தியா வந்தனம் அமைக்கப்பட்ட க்ரமத்தை (வரிசையை),
நாம் நன்றாக கவனித்தோமானால்,
அதில் அதி அற்புதமான "ஆனந்தம்" என்ற பொக்கிஷம் உள்ளது என்று புரிந்து விடும்.


மேலும் நாம் நன்றாக கவனித்தோமானால்,
ஒரு சாதாரண மனிதன், பகவானை எந்த வழியில் அடைய முயற்சிக்க வேண்டும்? என்ற ரகசியமும் வெளிப்படையாக காட்டுகிறது என்பதும் புரிந்து விடும்.   .

ஒரு சின்ன 5 நிமிட பிரார்த்தனையில் "வேதத்தின் சாரத்தை, பேரானந்தத்தை தரக்கூடிய பொக்கிஷத்தை அடக்கி கொண்டு உள்ளது, சந்தியா வந்தனம்" என்று புரிந்து விடும்.

இந்த ஆனந்தத்தை மகாத்மாக்கள் புரிந்து இருப்பதால், சந்தியா வந்தனம் செய்வதை மிகவும் விரும்பி செய்கிறார்கள்.

சந்தியா வந்தனம் செய்யும் போது மகாத்மாக்கள் அனுபவிக்கும் அந்த ஆனந்தம் என்ன? என்று நாமும் புரிந்து கொள்வோமே!!
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சந்தியா வந்தனம் எப்படி உள்ளது? என்று நன்றாக கவனித்து பாருங்கள்..

"அச்சுதாய நம:, அனந்தாய நம:, கோவிந்தாய நம:" என்று சொல்லும் போது,
இது "பகவானின் பெயர்கள், வேத மந்திரங்கள்" என்று மட்டும் நாம் நினைத்தால், மகாத்மாக்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது, நாம் அனுபவிக்கவும் முடியாது.
மகாத்மாக்கள் "அச்சுதா அனந்தா, கோவிந்தா" என்று பரமாத்மாவின் பல பெயர்களை சொல்ல சொல்ல,
பகவானின் பெயரை தன் வாயார சொல்லி அழைக்க, ஆனந்தமாக அனுபவிக்க கிடைத்த வாய்ப்பாக பார்க்கிறார்கள்.

ஒவ்வொரு பெயரையும் சொல்லும் போதே, பஜனை செய்த ஆனந்தத்தை மகாத்மாக்கள் அனுபவிக்கிறார்கள்.
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, த்ரிவிக்ரமா, என்று சொல்ல சொல்ல பஜனை செய்த ஆனந்தத்தில் மகாத்மாக்கள்  திளைக்கிறார்கள்.

இதனால் மகாத்மாக்கள், சந்தியா வந்தனத்தை ஆசை ஆசையாக செய்கிறார்கள்.

தனியாக பஜனை செய்ய கூட தேவை இல்லாமல், சந்தியா வந்தனமே பரமாத்மாவை பல பெயர்கள் கொண்டு பஜிக்கும் அழகை மகாத்மாக்கள் ரசிக்கிறார்கள்.
"மமோபாத்த சமஸ்த.." என்று சொல்லி, "பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்று முடிக்கும் போது,
"பரமேஸ்வரன் நான் செய்யும் சந்தியா வந்தனத்தை கண்டு ஆனந்தம் அடைகிறார். என்னை கண்டு பிரியம் கொள்கிறார்" என்று சொல்லும் போதே தான் செய்யும் சந்தியா வந்தனத்தில் பரமேஸ்வரன் ப்ரீத்தி அடைகிறாரே !! என்று மகாத்மாக்கள் மேலும் உற்சாகம் அடைகின்றனர்.


"தான் மட்டும் ஆனந்தத்தை அனுபவிக்கவில்லை. 
சந்தியா வந்தனம் செய்யும் என்னை பார்த்து பரமேஸ்வரனும் பிரியம் கொள்கிறார்" என்ற உண்மையை உணர்ந்து, மேலும் உற்சாகமாக அடைகிறார்கள்.

சந்தியா வந்தனமே, ஆரம்பம் முதல் கடைசி வரை பகவானின் பெயரை சொல்லி சொல்லி ஆனந்தத்தில் நம்மை ஆழ்த்தும், நமக்கு செய்ய கிடைத்த வாய்ப்பு என்று புரியும். 

சந்தியா வந்தனமே மகாத்மாக்களுக்கு பஜனையாக தெரிகிறது. பகவானை பஜிக்க கசக்குமா?

ஆரம்பமே பரமாத்மாவை எப்படி பஜிக்கிறது பாருங்கள்.

அச்சுதா நம (நிலையான பரமாத்மாவே, உமக்கு நமஸ்காரம்)
அனந்தாய நம (எல்லையற்று இருக்கும் பரமாத்மாவே, உமக்கு நமஸ்காரம்)

அச்சுதா, ஆனந்தா என்று சொல்லி, பரமாத்மாவை பஜிக்க கசக்குமா?
மகாத்மாக்கள் இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதாலேயே சந்தியா வந்தனம் செய்ய மிகவும் பிரியப்படுகிறார்கள்.

இது மட்டுமா?...
சந்தியா வந்தனம் அமைக்கப்பட்ட க்ரமத்தை (வரிசையை) நன்றாக கவனியுங்கள்.

பொதுவாக, மனிதன் தன் பக்தியை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கிறான்.

தான் செய்யும் தினசரி காரியங்களையே (கர்மா) 'தெய்வம் நாம் செய்யும் செயலை பார்த்து ப்ரீத்தி (சந்தோஷம்) கொள்ளட்டும். தெய்வத்துக்காக செய்கிறேன்' என்று செய்ய ஆரம்பிக்கிறான்.
அப்போது, கர்மாவையே (செயல்கள்) யோக முறையில் செய்ய ஆரம்பிக்கிறான்.
"கர்ம யோகி" ஆகிறான்.
மனிதன் தன் பக்தியை உயர்த்தி கொள்கிறான்.

கர்ம யோகத்தின் பலனாக தெய்வ சிந்தனையுடனேயே இருந்ததால், மெதுவாக தெய்வத்துக்கு என்று நேரம் ஒதுக்கி, அவரை பற்றி நினைக்கிறான்.
தெய்வத்தை பற்றிய அறிவை (ஞானத்தை) வளர்த்து கொள்ள ஆரம்பிக்கிறான்.
அப்போது, தெய்வத்தை பற்றிய அறிவு (ஞானம்) பெற, ஞான யோக முறையில் முயற்சி செய்ய ஆரம்பிக்கிறான்.
"ஞான யோகி" ஆகிறான்
மனிதன் தன் பக்தியை, மேலும் உயர்த்தி கொள்கிறான்.
தெய்வத்தை பற்றிய அறிவு (ஞானம்) பெற்றபின், "அவரை அடைந்தே தீர வேண்டுமென்றும், அவரை பார்க்க வேண்டும்" என்ற ஆர்வத்தை பெறுகிறான்.
ஆழ்வார்களை போன்றும், நாயன்மார்களை போன்றும், ஆனந்தமாக பஜிக்க ஆரம்பிக்கிறான். பகவானிடத்தில் ப்ரேம பக்தி செய்கிறான்.
"பக்தி யோகி" ஆகிறான்
மனிதன் தன் பக்தியை, மென்மேலும் உயர்த்தி கொள்கிறான்.



எல்லா திசைகளிலும், அனைத்து தேவதைகளிலும், "பரமாத்மா வாசுதேவன்" இருப்பதை பார்க்கிறான்.
யாரை பார்த்தாலும், பரமாத்மா வாசுதேவன்" இருப்பதை பார்க்கிறான்.

"அனந்தாய நம" என்ற சொற்களின் அர்த்தத்தை, அனுபவத்தை பெறுகிறான்.

இறுதியில் தெய்வ தரிசனம் பெற்ற பின்,
இனி சம்சார சூழலில் சிக்கி மீண்டும் பிறக்க ஆசைப்படாமல் இருக்க, "தான் செய்த பாவ, புண்ணியங்கள் அனைத்தையும் நாராயணின் திருவடிகளில் சமர்ப்பித்து விட", பரமாத்மா வாசுதேவன் அந்த ஜீவனுக்கு தன் இருப்பிடமான அழியாத வைகுண்டத்தில் நித்ய வாசம் செய்ய அனுக்கிரஹம் செய்து,
தன்னை எப்பொழுதும் தரிசித்து கொண்டே இருக்க அனுக்கிரஹம் செய்து, சம்சார சூழலில் இருந்து காப்பாற்றி விடுகிறார்.             

இதையே பகவத் கீதையில்,
"கர்ம மார்க்கம்" என்றால் என்ன? கர்ம மார்க்கத்தில் உள்ள  "கர்ம யோகி" எப்படி இருப்பார்?
"ஞான மார்க்கம்" என்றால் என்ன? ஞான மார்க்கத்தில் உள்ள "ஞானி" எப்படி இருப்பார்?
"பக்தி மார்க்கம்" என்றால் என்ன? பக்தி மார்க்கத்தில் உள்ள "பக்தன்" எப்படி இருப்பார்?
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கி சொல்கிறார்.
கடைசியில், 
இந்த மார்க்கங்களை கடந்து, "மோக்ஷத்தை அடைய, அனைத்து பாவ புண்ணியங்களையும் தன் திருவடிகளில் சமர்ப்பித்து, தன் ஒருவனையே சரணடைந்து விடு" 
என்று சரணாகதி மார்க்கத்தை கடைசியில் காட்டி, மோக்ஷத்திற்கான வழியையும் காட்டுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவானை அடைய 
"கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்" போன்ற வழிகளில் சென்று, கடைசியில் பெருமாளே கதி என்று, "உன் பாவ புண்ணியங்கள் அனைத்தையும் பெருமாளிடம் சரண் செய்து விடு" என்று சொல்லப்படும் மோக்ஷத்திற்கான வழியை
5 நிமிட சந்தியா வந்தனத்தில் அடங்கி உள்ளதை, மகாத்மாக்கள் பார்க்கின்றனர்.

சந்தியா வந்தனம் செய்யும் முறையை நன்றாக கவனித்தால்,
நாம் செய்யும் இந்த பிரார்த்தனையில் முதல் பகுதி "கர்ம யோகமாகவே" செய்வது நமக்கு புரியும்.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி,
தீர்த்தத்தை எடுத்துக்கொண்டும்,
நம் மீது புரோக்ஷித்துக்கொண்டும்,
நவ கிரஹங்களுக்கு தீர்த்தம் கொடுத்து திருப்தி (தர்ப்பணம்) செய்தும்,
வ்யூஹ அவதாரமாக உள்ள பரவாசுதேவனுக்கும் தீர்த்தம் கொடுத்து திருப்தி (தர்ப்பணம்) செய்வதையும் பார்க்க, முழுக்க முழுக்க  ஒரு கர்மாவை (செயல்) போல இருந்தாலும்,
பகவானின் பெயரை சொல்லிக்கொண்டே செய்வதால், "கர்ம யோகமாக" நாம் செய்வது புலப்படும்.


"கர்ம யோகம்" முடிந்து, "ஞான யோகம்" செல்லும் போது, நாம் செய்யும் சந்தியா வந்தனத்தை பாருங்கள்..
பகவானை மனதால் தியானித்து, ஞான அனுபவத்தை பெற,
பிரணவ ஜபம், காயத்ரி ஜபம் செய்வதை கவனித்தால்,
"ஞான மார்கத்தை" சந்தியா வந்தனம் நமக்கு காட்டுவது புரியும்.

பகவானை பற்றி ஜபத்தாலும், தியானத்தாலும், அறிவு (ஞானம்) பெற்ற பின், 
சந்தியா வந்தனம் நமக்கு, பக்தி மார்க்கத்தை காட்டுவதை கவனியுங்கள்.
"பகவானை காண வேண்டும்" என்ற ஆர்வம் ஏற்பட்டு, சூரியனை பார்த்து, சூரியனுக்கும் சூரிய நாராயணனாக, பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார் என்று சூரியனை கை கூப்பி வணங்குவதும்,
எல்லா திசைகளுக்கும், யமனுக்கு, அனைத்து தேவதைகளுக்கும், கடைசியில் நாராயணனுக்கும் வணங்குவதை பார்த்தால்,
பக்தி மார்க்கத்தில் ஆனந்த கூத்தாடும் பக்தனை போல நாம் இருப்பது புரியும்.
கடைசியில் சூரிய நாராயணனையே சரணம் அடைந்து,
தான் செய்த அனைத்து பாவ புண்ணியங்களை "நாராயணாயேதி சமர்பயாமி" என்று நாம் சொல்லி முடிப்பதை பார்த்தால், மோக்ஷ மார்க்கத்தை நமக்கு சந்தியா வந்தனம் காட்டுவது புரியும். 
இந்த அனுபவத்தில் சந்தியா வந்தன மந்திரங்களை சொல்லும் போது, 
"பஜனை செய்யும் ஆனந்தத்தையும்",
சந்தியா வந்தன க்ரமத்தை (வரிசையை) பார்க்கும் போது,
அதில் "ஜீவன் மோக்ஷம் வரை செல்லும் பாதை காட்டப்படுவதை" மகாத்மாக்கள் கவனிக்கின்றனர்.

சந்தியா வந்தனத்தை விரும்பி விரும்பி செய்கிறார்கள் மகாத்மாக்கள்.

மகாத்மாக்களின் இந்த அனுபவத்தை, நாம் உணரும் போது, 
நமக்கு சந்தியா வந்தனம் செய்ய ஆசை வந்தே தீரும்.




அர்த்தங்களுடன் சந்தியா வந்தனம் தெரிந்து கொள்வோமே...
அர்த்தங்கள் தெரிந்து கொள்வதின் மூலம் தான், ஸ்ரத்தை (ஈடுபாடு) நமக்கு வரும்.
நமக்கு சந்தியா வந்தனத்தில் ஈடுபாடு வர, அர்த்தங்களை புரிந்து கொள்வதும் அவசியம்.

இதோ...


Sandhya Vandanam -  Morning (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)





Friday 21 June 2019

ஞானி எப்படி இருப்பார்? தெரிந்து கொள்வோமே

யார் பண்டிதன்? யார் ஞானி?
'எந்த காரியத்தை செய்தாலும், அது அந்த வாசுதேவனின் ஆராதனை' என்று உணர்ந்து செய்பவனே உண்மையான பண்டிதன்.






ஞானியின் அடையாளம்:
எப்பொழுதுமே ஒரு பலனை கருதி செய்யக்கூடாது.

நான் தான் செய்கிறேன் என்ற கர்வதோடும் செய்யக்கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், பலன் அடையும் மனிதர்களையோ, தெய்வங்களையோ நினைத்தும் செய்ய கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், தெய்வங்களோ, மனிதனோ தனக்கு ஏதாவது பலனாக தருவார்களா? என்றும் எதிர்பார்க்க கூடாது.

எந்த காரியத்தை செய்தாலும் சரி,
அது தெய்வத்துக்காக இருந்தாலும் சரி,
ஒரு மனிதனுக்காக இருந்தாலும் சரி,
விலங்கிற்காக ஆனாலும் சரி,
செய்யும் காரியம் அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கே' என்று மட்டும் உணர்ந்து,
'எதிர்பார்ப்பு, எரிச்சல், ஏமாற்றம், கோபம்' எதுவும் இல்லாமல், 
அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கு ஆராதனை செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து செய்பவனே - உண்மையான பண்டிதன்.
அவனே ஞானி.
ஞானி ஒரு செயலை செய்து, அதில் பலன் எதிர்பார்ப்பதில்லை.
காரணம், அவன் செய்யும் செயல்கள் யாவும் அந்த அந்தர்யாமியான வாசுதேவனை ஆராதனை செய்வதற்கே.



ஒரு செயல் செய்ததிலேயே, ஞானி திருப்தி அடைகிறான். 
'ஆராதனை செய்தோம்' என்ற திருப்தியில் இருக்கிறான். 
இவனே பண்டிதன். அவனே ஞானி.

சர்வேஸ்வரனே செய்கிறார், 
சர்வேஸ்வரனுக்கே இந்த பலன் சேருகிறது,
என்று இருப்பவன் பண்டிதன். அவனே ஞானி.

இப்படி செய்யும் எந்த கர்மாவின் பலன்களும், அவனிடம் சேராது. 

இப்படி செய்யும் எந்த கர்மாவும், அவனுடைய மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுத்து விடும்.