Followers

Search Here...

Showing posts with label பெரியாழ்வார். Show all posts
Showing posts with label பெரியாழ்வார். Show all posts

Sunday 22 March 2020

மதுரை கூடலழகர் பெருமாள் சரித்திரம் - பாசுரம் (அர்த்தம்) - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பெரியாழ்வார் கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கூடலழகர் பெருமாள் கோவில் - மதுரை (பாண்டிய தேசம்)
எப்படி ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாளை வளைத்துக்கொண்டு, ஒரு பக்கம் "காவிரி"யும், மறுபக்கம் "கொள்ளிடம்" என்ற பெயருடன் நதி ஓடுகிறதோ!! 
அதுபோல, 
மதுரையை தென் பக்கத்தின் வழியாக "க்ருதமாலா" என்ற நதியும், வடபக்கத்தின் வழியாக "வைகை" என்ற நதியும் ஓடிக்கொண்டிருந்தது.
(இன்று, க்ருதமாலா வற்றி விட்டது).

"சத்யவ்ரதன்" என்ற அரசன், ஆண்டு கொண்டிருந்தார்.




இவர் இப்போது நடக்கும் "வைவஸ்வத மனு"வுக்கும்  முன்னர் இருந்த சாக்ஷுச என்ற மனுவின் காலத்தில் இருந்தவர்.

"மதுரை" என்ற இந்த நகரம் எத்தனை காலங்களாக இருந்துள்ளது? என்பது மனுவின் காலத்தை கணக்கிட்டாலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்த சத்யவ்ரதனே 'சாக்ஷுச மனு'வின் ஆட்சி காலம் முடிந்தபின், வைவஸ்வத மனுவாக அவதரித்தார்.

மதுரைக்கு சம்பந்தப்பட்ட ஒரு அரசன், இன்று பூலோகத்தை வைவஸ்வத மனுவாக ஆட்சி செய்கிறார் என்பது நமக்கு பெருமை.

சத்யவ்ரதனாக ராஜ்யத்தை கவனித்து கொண்டிருந்த இவர், தர்மத்தில் மக்களை வைத்து இருப்பதிலும், தர்மம் மீறாமல் ஆட்சி செய்வதிலும் கவனமாக இருந்தார்.
அரசனாக இருந்தும், போகங்களை விரும்பாதவர்.
"தர்மத்தில் இருக்க வேண்டும், மக்களை இருக்க செய்ய வேண்டும்" என்று "கர்ம யோகியாக" ஆட்சி செய்து வந்தார் சத்யவ்ரதன்.

ராஜனாக இல்லாமல், ராஜரிஷியாக இருந்தார் சத்யவ்ரதன்.

சத்யவ்ரதன், "க்ருதமாலா என்று அழைக்கப்பட்ட வைகை" ஆற்றங்கரையில், பகவத் தியானம் செய்து கொண்டிருந்தார்.

திடமான சித்தம் கொண்டவர், சத்யவ்ரதன்.
புலன்களை அடக்கியவர், சத்யவ்ரதன்.
வைராக்கியம் உடையவர், சத்யவ்ரதன்.
தபஸ்வியாக இருப்பவர், சத்யவ்ரதன்.
எந்த காரியத்தை செய்தாலும் சிரத்தையாக செய்பவர் சத்யவ்ரதன்.

ராஜரிஷியான சத்யவ்ரதன், பகவானை தியானித்து கொண்டே, சந்தியா வந்தனம் செய்து, ஜலத்தை எடுத்து அர்க்யம் விட்டு கொண்டிருந்தார்.

அப்போது, ஜலத்தை கையில் எடுக்கும் போது, இவர் கையில் ஒரு சிறிய "மீன்" தானாக அகப்பட்டது.
கையில் மீன் (மத்ஸ்ய) இருப்பதை பார்த்த சத்யவ்ரதன், அதை மீண்டும் ஆற்றிலேயே கீழே போட்டார்.
இவர் கையில் தானாக வந்து விழுந்த அந்த மீன், அரசனை பார்த்து தேவ பாஷையில் பேசஆரம்பித்தது..
"உம்மை நான் சரண் அடைகிறேன். என்னை காப்பாற்றும். என்னை மீண்டும் ஆற்றிலேயே போட்டு விட்டீர்களே ?!
என்னை விட பெரிய மத்ஸ்யங்கள் உள்ள இந்த ஆற்றில் என்னை நீங்கள் விட்டு விட்டால், என்னை இவைகள் சாப்பிட்டு விடுமே !!"
என்று சொல்ல,
மீன் பேசியதை கண்டு ஆச்சர்யப்பட்ட சத்யவ்ரதன், இது சாதாரண மீன் அல்ல, தேவதை என்று உணர்ந்து, உடனே அந்த மீனை தன் தீர்த்தபாத்திரத்திலேயே போட்டு கொண்டு, தன் ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார். 

அன்று ராத்திரியே அந்த மீன், பெரிய மீனாக வளர்ந்து, "இங்கு எனக்கு போதுமான தண்ணீர் இல்லையே!" என்று சொல்ல,
அரசர், தன் தீர்த்த பாத்திரத்தில் இருந்து அந்த மீனை எடுத்து, பெரிய தீர்த்த குடத்தில் மாற்றினார். 
சற்று நேரத்துக்கெல்லாம், அந்த மீனுக்கு அந்த இடமும் போதாதபடி குடம் முழுவதும் வளர்ந்து கிடக்க, அந்த மீனை எடுத்து தன் மாளிகையின் பின்புறம் உள்ள பெரிய கிணற்றில் விட்டு விட்டார்.
பொழுது விடிந்து பார்த்தால், அந்த கிணறு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த மீன் பெரிதாக ஆகி, "இந்த தண்ணீரும் எனக்கு போதவில்லையே!!" என்றது.

அரசர், தன்னுடைய சிஷ்யர்களோடு கூட அந்த மீனை எடுத்துக்கொண்டு போய், தக்ஷிண சமுத்திரத்தில் (indian ocean ) கொண்டு விட்டார்.

சமுத்திரத்தில் விடப்பட்ட மீன் உடனே சத்யவ்ரதனை பார்த்து சொல்கிறது,
"மீன் ஜாதியான எங்களுக்குள் பங்காளி பொறாமைகள் மிக அதிகம்.
ஒரு மீன், இன்னொரு மீனை சாப்பிட்டுவிடுவார்கள்.
மற்ற மீன்கள் என்னை பொறாமைப்பட்டு சாப்பிட்டுவிடுமே !
உங்களை சரணம் அடைந்தால்,  ஒரு தோஷமும் (குற்றமும்)  இல்லாத என்னை போய் சமுத்திரத்தில் தள்ளிவிட்டீர்களே?
தோஷம் இருந்தால் கூட அபயம் (பாதுகாப்பு) கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா?
என்னிடம் ஏதாவது தோஷம் இருந்தாலும், இப்படி நீங்கள் என்னை தள்ளலாமா?"

என்று அந்த மீன் கேள்வி கேட்டது.

"மீன் பேசுமா? அதிலும் தேவபாஷையில் பேசுகிறதே இந்த மீன்! 




இது ஏதோ தேவலீலை, வந்திருப்பது ஒரு தேவன்" என்று புரிந்துகொண்ட சத்யவ்ரதன், அந்த மீனை பார்த்து,

"நீ ஒரு சாதாரண மீன் அல்ல. நீ யாரோ ஒரு மஹாபுருஷன், இப்படி ஒரு மீன் ரூபத்தில் வந்து, என்னிடத்தில் இப்படி விளையாடுகிறாய் என்று நினைக்கிறன்.

பரவாசுதேவனுக்கு தான் செய்யும் அவதாரங்கள் மட்டுமே லீலை (விளையாட்டு) அல்ல..  தான் செய்யும் உலக படைப்புகளும், உலகை காப்பதும், உலகை அழிப்பதும் கூட லீலை தான் என்று வேதம் சொல்கிறது.

உலக நிர்வாகத்தையே விளையாட்டாக செய்து கொண்டு போகிறார் பரமாத்மா நாராயணன் என்று வேதம் சொல்கிறது.

அப்படி இருக்க, இப்போது எனக்கு காட்சி தருவது மாய மீன் என்று அறிகிறேன்.
மீனை போல காட்சி தருகிறாயே தவிர, நீ மீன் அல்ல என்று அறிகிறேன்.
நீ சாக்ஷத் பரமாத்மா என்று நினைக்கிறேன்"
என்று சத்யவ்ரதன் சொன்னதுமே, மத்ஸ்ய (மீன்) ரூபத்தில் இருந்த பகவான் பேசலானார்,
"ஹே சத்யவ்ரதா ! ராஜன்.. உன் பகவத் பக்திக்கு நான் ப்ரசன்னமானேன். நீ சொல்வது சத்யம்.
நான் மத்ஸ்ய ரூபத்தில் வந்திருக்கும் பரமாத்மா தான்.

சரணாகதி செய்தவனை ரக்ஷிப்பதின் பெருமையை உனக்கு தெரிவிக்கவே இப்படி விளையாடினேன்.

ஒரு மீனாக இருந்தாலும், சரண் அடைந்து விட்டால், அதை காப்பாற்ற வேண்டும்.
ஒரு பிராணி நம் வீட்டில் நம்பி இருந்தாலும், அதை நாம் காப்பாற்ற வேண்டும்.

ஜீவகாருண்யம் உயர்ந்த கர்மம்!
அதை உனக்கு காட்டவேண்டும் என்பதற்காக நான் இந்த விளையாட்டு விளையாடினேன்.

இந்த மத்ஸ்ய ரூபம் உனக்காக மட்டும் எடுத்துக்கொண்டது ல்ல.
முன்பு பிரளய காலத்தில் இந்த மத்ஸ்ய ரூபம் எடுத்துக்கொண்டேன்.

யோகநித்ரையில் நான் இருக்கும் பொழுது, என் நாபிகமலத்தில் இருந்து "ப்ரம்ம தேவனை" படைத்தேன். 
ப்ரம்ம தேவன் 'வேத ஸ்வரூபன்'. 
அவர் நான்கு தலைகளும் நான்கு வேதங்கள்.

வேதத்தை கொண்டுள்ளதால், ப்ரம்ம தேவனுக்கு "வேத கர்பன்"என்று பெயர். 

ஒரு சமயம் "மது கைடபர்"கள் இந்த நான்கு வேதத்தையும் எடுத்துக்கொண்டு ப்ரளயஜாலத்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டு விட்டார்கள்.
அந்த வேதத்தையும் மீட்க வேண்டும், இவர்களையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பிரளய ஜலத்தில் நீந்தி வேதத்தை மீட்க அதற்கு ஏற்ற மத்ஸ்ய ரூபத்தை அன்று தரித்துக்கொண்டேன்.
பிரளய காலமாக இருந்ததால், என் அவதாரத்தை பார்த்து ரசிக்க அப்போது ஒரு பக்தன் இல்லை. 
நான் எந்த அவதாரம் செய்தாலும், அந்த அவதாரத்தை பார்த்து ரசிக்க ஒரு பக்தன் தேவை. அதனால், உம்மிடத்தில் வந்து மத்ஸ்ய அவதாரம் செய்து விளையாடினோம்.
இன்றிலிருந்து 7வது நாள், ஒரு பெரிய பிரளயம் வரப்போகிறது.
அந்த சமயத்தில் நீ என்னை தியானிக்கும் போது, நான் உன்னை ரக்ஷிப்பேன்." 
என்று சொல்லிவிட்டு, பகவான் மறைந்து விட்டார்.




ப்ரம்மாவின் 100 ஆயுசு முடியும் போது, மஹா பிரளயம் ஏற்பட்டு, 14 லோகங்களும் (சத்ய லோகம் முதல் பாதாளம் வரை)  அழிந்து விடும்.

ப்ரம்மாவின் ஒரு பகல் முடிந்து, அவர் தூங்கும் காலத்தில் 'நைமித்திய பிரளயம்' ஏற்படும்.
இந்த நைமித்திய பிரளய காலத்தில், 
14 லோகங்களுக்கும் கீழே இருக்கும் பிரளய ஜலம் எழும்பி, பாதாளம் தாண்டி, பூலோகம், புவர்லோகம் தாண்டி, சொர்க்க லோகம் வரை பொங்கி, பிரளய ஜலத்தில் அழித்து விடும்,

பூலோகத்திற்கு மேல் உள்ள புவர்லோகம், சொர்க்க லோகம்  உள்ளது.
பூலோகத்திற்கு கீழ் உள்ள 7 லோகங்கள் (அதள, விதள, சுதள, தலாதள,மஹாதள, பாதாள,ரஸாதல) உள்ளது.

இவை அனைத்தும் நைமித்திய பிரளய ஜலத்தில் அழிந்து விடும்.

சொர்க்க லோகம் வரை உயர்ந்து கிடைக்கும் பிரளய ஜலத்தில், அந்த பிரளய ஜலத்துக்கு ஏற்ற பெரிய ரூபத்துடன் மத்ஸ்ய அவதாரம் லீலையாக (விளையாட்டாக) செய்தார் பெருமாள். 

இப்படி பிரளய ஜலத்தில் "மீனாக அவதாரம்" செய்த பெருமாள், தன் வாலை சுழற்றி பிரளய ஜலத்தில் ஒரு அடி அடிக்க, 
அதனால் தெறித்த தண்ணீர், சொர்க்க லோகத்துக்கும் மேல் உள்ள மகர லோகம், ஜன லோகம், தப லோகம் தாண்டி, ப்ரம்ம லோகம் வரை சென்று விழுந்து, ஈரமாக்கியதாம்.
அப்படியென்றால், எத்தனை பெரிய அவதாரம் மத்ஸ்ய அவதாரம் என்று தெரிகிறது.

பகவான் சொன்னபடியே, 7வது நாளில் பிரளயம் ஏற்பட்டு, பூலோகம் தண்ணீரில் மூழ்கி விட,  சத்யவ்ரதன் பகவானை தியானிக்க, 
ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில் பகவான் ஒரு கையால் சத்யவ்ரதனை தன் அருகில் கூப்பிட்டு, மறுகையால் அபய முத்திரையுடன் காட்சி கொடுத்தார். 

சத்யவ்ரதனை காக்க, பகவான் மத்ஸ்ய ரூபத்தை எடுத்துக்கொள்ள, சத்யவ்ரதன் கூடவே சப்த ரிஷிகளும் பெருமாளின் மேல் ஏறிக்கொள்ள,
பிரளய ஜலத்தில் நீந்தி கொண்டே பகவான், தன் மீது அமர்ந்து இருக்கும் சத்யவ்ரதனுக்கு தர்ம உபதேசங்கள் செய்தார்.
பிரளய ஜலம் வடிந்ததும், சத்யவ்ரதன் வைவஸ்வத மனுவாக ஆகி, உலகை ஆட்சி புரிந்துகொண்டு இருக்கிறார்.

'தனக்கு மத்ஸ்ய ரூபத்தில் எப்படி பெருமாள் காட்சி கொடுத்தாரோ, அதே போல, ஒரு கோவில் அமைத்தார்' சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு.

சத்யவ்ரதன் அமைத்த கோவில் இந்த தான், மதுரையில் உள்ள "கூடலழகர் திருக்கோவில்". 
'மதுரை' என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு "கூடல்" என்று தமிழில் பொருள்.

திருமாலிருஞ்சோலையில் உள்ள கள்ளலழகரும் அழகர் தான். 
கூடல் மாநகரில் உள்ள பெருமாளும் அழகர் தான். 

கள்ளழகர் பெருமாள் (திருமாலிருஞ்சோலை), வட மதுரையில் இருக்கிறார்.
கூடலழகர் பெருமாள், தென் மதுரையில் இருக்கிறார்.

கூடலழகர் பெருமாள் ஒரு பக்கம் ஸ்ரீதேவியுடன், மறுபக்கம் பூதேவியுடன் ஆதிசேஷன் மேல், உட்கார்ந்து இருந்த திருக்கோலத்தில், பரமபதத்தில் இருப்பது போல கம்பீரமாக இருக்கிறார்.




திருமாலிருஞ்சோலையில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார்.

கூடலழகர் விமானமும், திருக்கோஷ்டியூர் போல, அஷ்டாங்க விமானத்துடன் உள்ளது.
பெருமாளும் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்து இருக்கும் அழகை பார்த்தால், வாசலில் இருக்கும் நம்மை கூப்பிடுவது போல இருக்கும்.

பெருமாளின் முத்திரையும் அதற்கு ஏற்றார் போல இருக்கிறது.

அர்ச்சா (பூஜிக்கத்தக்க) திருமேனியுடன் இருக்கும் பகவான், ஒவ்வொரு இடத்திலும் ஒரு வித முத்திரையுடன் நமக்கு காட்சி தருகிறார்.
கூடல் நகரில் இருக்கும் இந்த அழகர், 
ஒரு கையால் நம்மை கூப்பிடுவது போல முத்திரையுடன், 
அருகில் வந்த தன் பக்தனுக்கு, மற்றொரு கையால் அபயம் (பயப்படாதே!) என்ற முத்திரையுடன் இன்றும் காட்சி தருகிறார்.

எப்படி சத்யவ்ரதனுக்கு காட்சி கொடுத்த்தாரோ! அதேபோல, 
நம்மையும் கூப்பிட்டு, உன் பயத்தை போக்க, "நான் இருக்கிறேன்" என்று அபயம் தருகிறார்.

இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு, சத்யவ்ரதன் என்ற வைவஸ்வத மனு, வைகானச முறைப்படி பூஜைகள் நடக்குமாறு ஏற்பாடு செய்தார் கூடலழகர்.

இந்த பெருமாளுக்காக பிரத்யேகமாக பாடப்பட்டது தான் 
"பல்லாண்டு..." என்ற பிரசித்தி பெற்ற "பெரியாழ்வார் பாசுரம்".

பெரியாழ்வார் காலத்தில், வல்லபதேவன் என்ற பாண்டிய ராஜன், "அனைத்து சமயங்களிலும் சாரதமமான (மிகவும் உயர்ந்த) சமயம் எதுவோ, அதை தான் ஆச்ரயிக்க வேண்டும்" 
என்று ஆசைப்பட்டார்.

அதற்காக கூடல்நகர் என்ற மதுரையில் "பெரிய வித்வத் மேளா" ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இந்த மேளாவில், பல வித வைதீக வித்வான்களும், வைதீகம் அறியாத மற்ற சமய வித்வான்களும் கலந்து கொண்டு, அவரவர் சமயத்துக்கு சார்பாக பேச ஆரம்பித்தனர்.

எந்த சமயம் தெய்வ சம்மதமோ, அந்த சமயத்தை தான் ஏற்க ஆசைப்பட்ட அரசர், ஒரு பொற்கிழியை உயரே கட்டி விட்டு, 
"எந்த சமயம் தெய்வத்துக்கு சம்மதமோ, அந்த சமயத்தை தெய்வமே இந்த பொற்கிழி தானாக கீழே விழ செய்து பதில் சொல்லட்டும்" 
என்று சொல்லிவிட்டார்.




விஷ்ணுசித்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில், பெருமாளுக்கே தொண்டு செய்து கொண்டு, பெருமாள் ப்ரஸாதத்தையே பெற்றுக்கொண்டு, எளிமையான வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்.

இப்படி அரசன் பரிக்ஷை  வைக்க, கூடலழகர் பெருமாளே, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் விஷ்ணுசித்தர் கனவில் தோன்றி, கூடல் நகருக்கு வர சொல்லி, "தன்னை பற்றி அந்த சபையில் நிர்ணயம் செய்யவும்" 
என்று சொல்ல,
"எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, பெரிய சபையில், அனைவரும் ஏற்கும் விதமாக பேசும் சாமர்த்தியம் உண்டோ" என்று விஷ்ணுசித்தர் கேட்க,
"நாமே உம்முடைய வாயிலிருந்து பேசுவோம்.. வாரும்" 
என்று பகவான் அழைத்தார்..

அதே சமயத்தில், அரசனுக்கும் "இப்படி ஒரு ஒருவர் வருகிறார்" என்று கனவில் அசரீரியாக கேட்க, விஷ்ணுசித்தர் கூடல்நகர் வந்ததும், தகுந்த மரியாதை செய்து வரவேற்றான்.

சபைக்கு வந்து சேர்ந்தார் விஷ்ணுசித்தர். 
மிக பெரிய சபை ஏற்பாடாகி இருந்தது.

"குதர்க்கமாக" பேசுபவர்கள், 
"நோக்கத்துடன்" பேசுபவர்கள், 
"சாஸ்திர பிரமாணமாக" பேசுபவர்கள், 
"சாஸ்திர விரோதமாக" பேசுபவர்கள், 
என்று பல கோஷ்டிகள் குழுமி இருந்தார்கள்.

"தான் பேச போவதில்லை.. பகவான் தான் உள்ளிருந்து பேச போகிறார்" என்பதால், 
"இவர்கள் மத்தியில் பேசவேண்டுமே !!" 
என்ற எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக உட்கார்ந்தார் விஷ்ணுசித்தர்.

இப்படி ஒவ்வொருத்தரும் தன் தரப்பில் பேச ஆரம்பிக்க, இவர் தரப்பு பேச நேரம் வர, அரசர் மரியாதையோடு 
"தாங்கள் தங்கள் பக்க அபிப்ராயத்தை சொல்ல வேண்டும்" என்றதும்,
"வேண்டிய வேதங்கள் ஓதி" என்று "வேதத்தின் சாரம் என்ன?" என்பதை எடுத்து, பகவானின் பரத்துவத்தை நிர்ணயம் செய்ய, 
அனைவரும் பார்க்க, மேலே கட்டி இருந்த பொற்கிழி தானாகவே அவிழ்ந்து, விஷ்ணுசித்தர் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கி வளைந்து கொண்டு, அவர் மடியில் தானாகவே வந்து விழுந்தது.

அந்த காலங்களில், "பகவானை அடைய எது சிறந்த வழி? என்று தெரிந்து கொள்ளவே அனைவரும் ஆசைப்பட்டனர். 
தன் சமயத்தை பிடித்துக்கொண்டு, வீண் பிடிவாதம் செய்த காலம் இல்லை. 

"இவர் மகிமை பொருந்தியவர்" என்று புரிந்து கொண்ட மற்றவர்களும், இவரை பெரிய ரதத்தில் வைத்து ஊர்வலமாக அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

அரசரும், இவரையே ஆஸ்ரயித்து, விஷ்ணுசித்தரை பட்டத்து யானையில் ஏற்றி, ஊர்வலமாக தானே அழைத்து கொண்டு வருகிறார்.

மற்ற பண்டிதர்கள் எல்லோரும், ஆசையோடு கூடவே வந்தனர். 
சிலர் சத்ர-சாமரம் போட்டுக்கொண்டே அழைத்து வந்தனர்.




இப்படி "விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார்" மதுரையின் நான்கு வீதியை சுற்றிக்கொண்டு வரும் போது, 
தன் குழந்தைக்கு விழாவில் மரியாதை செய்வதை பார்க்க தாயும் தந்தையும் பார்க்க ஆசைப்படுவது போல,

கூடலழகர் பெருமாள் இருப்பு கொள்ளாமல், தானும் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், கருடவாகனத்தில் வர, 
எம்பெருமானை ஆகாசத்தில் கருடவாகனத்தில் பார்த்த பெரியாழ்வார், தன்னுடன் கூட வந்திருக்கும் பண்டிதர்களில்,  
சிலர் பரமாத்மா என்று ஒருவர் இல்லவே இல்லை என்றும்,
சிலர் அணுக்கள் தான் உலகம் என்றும்,
சிலர் இயற்கையே தான் உண்மை என்றும்,
சிலர் கர்மா (action-reaction ) தான் என்றும் 
சிலர் காலம் தான் என்றும்,
சிலர் வேதத்திலேயே சொன்ன உபதெய்வங்களையே பரமாத்மா என்றும்,
சிலர் தெய்வம் உண்டு, ஆனால் தெய்வத்துக்கு நாமம் இல்லை, ரூபம் இல்லை, குணம் இல்லை என்றும் வாதிட்டவர்கள்.
இவர்கள் மத்தியில், இப்படி அப்பட்டமாக நாம, ரூப, குண, சௌந்தர்யத்துடன் "தானே பரமாத்மா" என்று வந்து விட்டாரே?!!  
"இவர்களால் பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டு விடுமோ!!" என்று நினைத்தார் பெரியாழ்வார்.

"குழுமி இருக்கும் அத்தனை பேரும் பெருமாளின் அருமை தெரிந்து இருப்பார்களா? 

பக்தர்கள் நடுவில், பெருமாள் இப்படி திவ்ய காட்சி கொடுத்தால், ஆசை தீர ஆடுவார்கள், பஜிப்பார்கள்.
இவர்களோ! இத்தனை காலமும், குதர்க்கம் செய்து கொண்டிருந்தார்கள். பெருமாளின் மகிமையை உணராது இருந்தார்கள்.
இவர்களும் பார்க்கும் படியாக, கொஞ்சம் அவசரப்பட்டு தரிசனம் தந்துவிட்டாரோ?" 
என்று பெரியாழவார் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். 

"பெருமாளுக்கு திருஷ்டி பட்டு இருக்குமோ!!" என்று தோன்ற, பெரியாழ்வார், "பெருமாளுக்கு பல்லாண்டு பாடி திருஷ்டி கழிக்க வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.

பெரியாழ்வார் அழகாக இசையோடு பாடுவார். 
"வித்வத் சபைக்கு வருகிறோமே" என்பதால், பஜனை செய்ய விடமாட்டார்கள் என்பதால் தாளம் எடுத்துக்கொண்டு வரவில்லையாம் பெரியாழ்வார்.

பெருமாள் கருடனில் அமர்ந்து காட்சி கொடுக்க, இப்போது பஜனைக்கு அவசியம் வந்ததும், பெரியாழ்வாருக்கு தாளம் தேவைப்பட்டது.

யானையின் இருபக்கமும் தொங்கி கொண்டிருந்த மணிகளையே தாளமாக எடுத்துக்கொண்டு, ஒன்றோடு ஒன்று மொத்திக்கொண்டு, பகவானுக்கு மங்களாசாஸனம் செய்கிறார் பெரியாழ்வார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா 
உன் சேவடி செவ்வி திருக்காப்பு 
-- பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு 

பெருமாள் கருடவாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் போது, பெருமாளின் திருவடி இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருக்க, பெரியாழ்வார் அந்த சிவந்த திருவடியை, அனைவருக்கும் சரணமாக இருக்கக்கூடிய திருவடியை (சேவடி) பார்த்துவிட்டார்.




பெருமாள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று "என்னை ஒருவனையே சரணடைந்து விடு" என்று தான் தன் திருவடியை அனைவருக்கும் காட்டினார்.

முத்தும்மணியும் வைரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
--  பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி

"சங்கு சக்ர யவ வஜ்ர ரேகைகள் உடையதாக, 
முத்தும் மணியும், வைரமும், நன் பொன்னும் (தங்கமும்), தத்திப் பதித்து தலைபெய்தார் போல, எங்கும் பத்து விரலும், மணிவண்ணன் பாதம்" என்று பெருமாளின் திருவடியை கொஞ்சும் பெரியாழவார், 
கூடல் நகரில், பலரும் பார்க்க தன் திருவடியை பெருமாள் காட்டி விட, பெரியாழ்வாருக்கு அற்புதமான இந்த திருவடியை பார்த்து இவர்கள் கண் பட்டு விடுமே!! என்று திருவடியை பாதுகாக்க நினைத்து, அந்த திருவடிக்கு ஒரு திருக்காப்பு (பாதுகை) போட்டு மறைத்தாராம். 
அதையே
'உன் சேவடி செவ்வி திருக்காப்பு' 
என்கிறார்.

பெருமாளின் அங்கங்கள் ஜொலிஜொலிப்புடன் காந்தியுடன் இருப்பதை, மணிவண்ணா என்று அழைக்கிறார்.

முஷ்டிகன் சாணுரன் என்ற இரு மல்லர்களோடு சண்டையிடும் திண் (உறுதியான) தோளை கொண்ட பெருமாள் இவர் என்றதும், திண்தோள் என்று அழைக்கிறார்.

இந்த பெருமாளுக்கு தான் "சுந்தர பாகு" என்று பெயர். அழகிய தோள் உடையவர்.

இது திருஷ்டி கழிப்பு பெருமாளுக்கு போதாது என்று, மேலும் பாடுகிறார்.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
--  பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!" என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமே" என்று பக்தன் நினைக்கிறான்.

"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 

"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா? 
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே" 
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.





அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
என்கிறார்.


அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி  தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.

பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க, 
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.

பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது. பெருமாள் எதிரில் தான் காட்சி கொடுக்கிறார். 
இருந்த போதிலும், 
"இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல், "அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு

அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல, 
பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் கொடுக்குமாம். 

"பாஞ்சசன்யமும் பல்லாண்டே" 
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க, வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும், வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கும் பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.

அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.


Monday 3 February 2020

பாசுரம் (அர்த்தம்) - எம்மனா! என் குல தெய்வமே! என்னுடைய நாயகனே! - பெரியாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பாசுரம் (அர்த்தம்) : திருப்பதி பெருமாள்

எம்மனா!!
என் குல தெய்வமே!!
என்னுடைய நாயகனே!!
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
-- திருமொழி (பெரியாழ்வார்)




பெரியாழ்வார், திருமலையில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாளை 3 அழகான பெயர்கள் சொல்லி கூப்பிடுகிறார்...
முதலில்,
  • "எம்மனா!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு,
  • "என் குலதெய்வமே!!" என்று கூப்பிடுகிறார்.
பிறகு
  • "என்னுடைய நாயகனே!!" என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்.

இந்த 3 நாமங்களின் உள் அர்த்தம் தெரியாமல் போனாலும், இந்த சொற்களே இனிக்கிறது...

அர்த்தம் தெரிந்து கொண்டால், தினமும் இந்த 3 நாமத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆசை வந்து விடும் நமக்கு.
'பெரியவாச்சான் பிள்ளை (உபேயம், உபாயம், பர தெய்வமாக),
ஆளவந்தார் (ஞான விரோதி, ஆஸ்ரய விரோதி, மோக்ஷ விரோதி), 
உடையவர் ஸ்ரீராமானுஜர் (தேக அபிமானம் கழிந்து, அன்ய ஷேசத்துவம் கழிந்து, ஸ்வஸ் ஸ்தாதந்திரியமும் கழிந்து)
போன்ற ஆச்சார்யர்கள் 'இந்த மூன்று சொற்களின் (எம்மனா, என் குலதெய்வமே, என்னுடைய நாயகனே) அர்த்தத்தை பலவாறு ரசிக்கிறார்கள்' என்றும் பார்க்கிறோம்.

மரணத்தை ஒருவன் பார்த்தாலேயே "உடல் வேறு ஆத்மா வேறு" என்ற ஞானம் (அறிவு) கொஞ்சம் பகுத்தறிவு உள்ளவனுக்கும் வந்து விடும்.
ஆதலால்,
"உடல் வேறு ஆத்மா வேறு" என்று நினைப்பது மட்டுமே உண்மையான ஞானம் என்று நினைக்கக்கூடாது.. அது மட்டுமே ஞானம் இல்லை.

"நான் ஜீவன் (ஆத்மா)! நான் பகவானுடைய தாஸன்!"
என்று நினைப்பதே 'உண்மையான ஞானம்' என்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்.

"உடல் நானில்லை, ஜீவனே நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள்" என்று பகவானை விலக்கி விட்டு,
"தான் ஆத்மா, தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொள்வதே உண்மையான ஞானத்துக்கு விரோதம் தான்.
இப்படி நினைப்பதே "ஞான விரோதம்" என்கிறார்கள் நம் ஆச்சாரியர்கள். (அத்வைதம்)

(அத்வைதம் என்ன சொல்கிறது? விஷிஸ்டாத்வைதம் என்ன சொல்கிறது?) மேலும் அறிய இங்கே படிக்கவும்.

"எம்மனா" (எம்பெருமான்) என்ற சொல்லுக்கு
"உடல் நானில்லை, ஜீவனே (ஆத்மா) நான். ஜீவனாகிய நான் ஒரு தனித்த பொருள் இல்லை. நான் சுதந்திரமானவன் இல்லை. நான் பகவானின் தாஸன்"
என்று அர்த்தம் காட்டுகிறார்கள், நம் ஆச்சாரியர்கள். (விசேஷ அத்வைதம்)

ஆதலால்,
"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல்லும் போதே,
நமக்கு "ஞான விரோதமான அத்வைத புத்தி ஒழிந்து விடும்" என்கிறார்.




அது போல,
"என் குலதெய்வமே" என்று சொல்லும்போதே,
நமக்கு "ஆஸ்ரய விரோதமான புத்தி ஒழிந்து விடும். பெருமாளை ஆஸ்ரயிக்க வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.
அது போல,
"என்னுடைய நாயகனே" என்று சொல்லும்போதே,
நமக்கு "மோக்ஷ விரோதமான புத்தி ஒழிந்து விடும். வெறும் சுதந்திரம் (விடுதலை) மட்டும் பெறாமல், வைகுண்டம் (வீடு) என்ற நம் சொந்த வீட்டுக்கு (மோக்ஷம்) போக வேண்டும் என்ற புத்தி ஏற்படும்" என்கிறார்.




மேலும்
நாம் இந்த பிறவியில் அடைய வேண்டியது (உபேயம்) எது?
(What should we achieve?)
என்ற கேள்விக்கு,

"எம்மனா" (எம்பெருமான்) என்று சொல் மூலம்,
"நாம் அடைய வேண்டியவர் (உபேயம்), நம்முடைய பகவான் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார், பெரியாழ்வார்.
"எம்மனா" என்ற சொல்லுக்கு "நான் அவருடையவன். அவருடைய சொத்து" என்று பொருள்.

நாம் அடைய வேண்டியது ("உபேயம்") யார் என்று தெரிந்து விட்டது.சரி...
ஆனால்,
பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்) என்ன?
என்ற அடுத்த கேள்விக்கு,

"என் குலதெய்வமே" என்ற சொல் மூலம்,
"நாம் பெருமாளை அடைய வேண்டிய வழி (உபாயம்), அவரையே நம் குல தெய்வமாக கொள்வது தான்"
என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

"பெருமாளை குலதெய்வமாக நீ ஆக்கிக்கொண்டால், 
நீ மட்டுமல்ல, உன் பரம்பரையில் பிறந்த அனைவருமே, 
அவர்கள் பிறவியில் அடைய வேண்டியதான (உபேயம்) பெருமாளை அடைந்து விடுவார்கள்"
என்கிறார் பெரியாழ்வார்.
"குலதெய்வமாக வெங்கடேசபெருமாளே அமைந்தவர்களுக்கு, வைகுண்டம் போகும் வழியையும் காட்டி, அடையும் லட்சியமாகவும் பெருமாளே இருந்து, மோக்ஷம் வரை துணையாகவே இருக்கிறார்" என்கிறார் பெரியாழ்வார்.

"யாருக்கு குலதெய்வமாக வெங்கடேசபெருமாள் அமைந்தாரோ!, அவர்களே பாக்கியவான்" என்கிறார் பெரியாழ்வார்.
மஹாபாரதத்தில் திரௌபதி "கோவிந்தா..." என்று தன் குலதெய்வமாக பெருமாளை வரித்து கொண்டதற்காக, அவளுடைய பேரன் பரிக்ஷித் கர்ப்பத்திலேயே அழிய வேண்டும் என்று அஸ்வத்தாமன் நினைத்தும், திரௌபதி என்ற பக்தைக்காக அவள் குலத்தை அழிய விடாமல் ரக்ஷித்தார் பெருமாள்.

குலதெய்வமாக இருந்து, நாமும் நம் பரம்பரையும், மோக்ஷம் போகும் வரை, நம் கூட இருந்தே ரக்ஷிக்கிறார்.

"என்னுடைய நாயகனே" என்ற சொல் மூலம், "பரதெய்வம் நாராயணனே"
என்ற தெளிவு ஏற்படுத்துகிறார் பெரியாழ்வார்.

உலகத்தில்,
சிலருக்கு இஷ்ட தெய்வமாக (உபேயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார்.
அவர்கள் பெருமாளை "எம்மனா" (எம்பெருமான்) என்கிறார்கள்.

இன்னும் சிலருக்கு குல தெய்வமாக (உபாயமாக) "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். 
அவர்கள் பெருமாளை "என் குல தெய்வமே" என்கிறார்கள்.

சிலருக்கு பர தெய்வமாக "வெங்கடேச பெருமாள்" இருக்கிறார். அவர்கள் பெருமாளை  "என்னுடைய நாயகனே" என்கிறார்கள்.

"தனக்கோ உபேயமாகவும் (இஷ்டதெய்வம்), உபாயமாகவும் (குலதெய்வம்), பரதெய்வமாகவும், 
மூன்று சம்பந்தத்துடன் பெருமாள் இருக்கிறாரே!"
என்ற பெருமிதமடைந்து பாடுகிறார் பெரியாழ்வார்,




பரதெய்வமாக இருக்கும் நாராயணனே, தனக்கு குலதெய்வமாகவும் இருக்கிறார். தனக்கு இஷ்டதெய்வமாகவும் இருக்கிறார்.
பெருமாள், 
என்னையும், என் பரம்பரையையும் ரக்ஷிக்கிறார் என்கிற போது,
என்னை பற்றியும் எனக்கு கவலையில்லாமல்
என் குடும்பத்தை பற்றியும் கவலையில்லாமல்
என்னை உங்கள் திருவடியை ஆச்ரயித்து கொண்டு இருக்குமாறு செய்து கொண்டு, நீங்கள் என்னை சுகமாக வைத்துக்கொண்டு, ரக்ஷிக்கிறீர்களே !!
உம்மிடத்தில் எனக்கு பரிபூரணமான ப்ரேமை உண்டாகும் படி செய்து, எப்பொழுதும் உங்கள் தொண்டுக்காகவே என்னை ஆக்கி,
என்னை வெளி உலக காரியங்களில் இங்கும் அங்கும் போக விடாமல் தடுத்து,
நீங்கள் என்னை பரிபாலிக்கும் அழகும்,
உங்கள் கருணைக்கு பாத்திரமாக இருக்கும் என் நிலையும்,
எனக்கு கிடைத்த நன்மையை (பாக்கியத்தை) போல, இவ்வுலகினில் யார் பெறுவார்? 
என்று என்கிறார் பெரியாழ்வார்.
அதையே,
நின்னுள் உள்ளேனாய்ப் பெற்ற நன்மை
இவ்வுலகினில் யார் பெறுவார்?
என்று பெருமிதம் அடைகிறார்.

நாமும் வெங்கடேச பெருமாளை, பரதெய்வமாகவும், குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொள்வோம்.
சர்வ மங்களத்தையும் திருப்பதி பெருமாளே, நமக்கும் நம் பரம்பரைக்கும் அருள்வார். 


குருவே துணை !



Monday 13 January 2020

பாசுரம் (அர்த்தம்) - பறவை ஏறும் பரம புருஷா... இரவு செய்யும் பாவக் காடு (பெரியாழ்வார்). "பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்? காரணத்தை ஆழ்வார் மூலம் தெரிந்து கொள்வோமே !!

திருப்பதியில், ஆதிசேஷனே "7 மலைகளாகவும் இருக்கிறார்". 
இந்த 7 மலைகளுக்கு, பொதுவாக "திருமலை" என்றும் "சேஷாத்ரி" என்றும் "சேஷகிரி" என்றும் பெயர்.
அதில் சில மலைகள், சில பக்தர்களின் பெயர்களில் அமைந்தது.

ஏழு மலைகளின் பெயர்கள்:
1. நாராயணாத்ரி (நாராயண முனிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் வைகானச பூஜையை உபதேசித்த இடம் என்பதால்) ஸ்ரீனிவாச பெருமாள் இருக்கும் இடம்.
2. வேங்கடாத்ரி (பாபங்கள் பொசுங்கும் என்பதால்)
3. சேஷாத்திரி (ஆதி சேஷனை குறிக்கிறது). சிலர் நிலாத்ரி என்றும் சொல்கிறார்கள்.
4. அஞ்சனாத்ரி (ஆஞ்சநேயர் அவதரித்த இடம். அவள் தாய் அஞ்சனாவின் பெயரில்)
5. சிம்மாத்ரி ( நரசிம்ம  அவதார ஸ்தலம் என்பதால்)
6. கருடாத்ரி (கருடன் அம்ருத கலசத்தோடு இங்கு அமர்ந்ததால்)
7. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்றதால்)





பாபங்கள் பொசுங்கும் என்பதால் திருமலைக்கு வேங்கடாத்ரி என்ற பெயரும் உண்டு.

வேங்கடம் (வேம்+கடம்) என்றால் "பாவங்களை எரிப்பது" என்று பொருள்.

  • "வேம்" என்றால் பாவம் என்று தமிழில் அர்த்தம்.
  • "கடம்" என்றா எரித்து (fry) என்று தமிழில் அர்த்தம்.


பெரியாழ்வார், பெருமாளை சரணாகதி செய்யும் போது, "திருமலையப்பனை நினைத்து கொண்டு, வெங்கட்ரமனா கோவிந்தா!!  என்று கதறி அழைத்து விட்டாலே, நம் பாவங்கள் எல்லாம் எரிந்து போகும்"
என்கிறார்.
"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போல, நமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பறவை ஏறும் பரம புருஷா!
நீ என்னை கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்  
பெரும்பதம் ஆகின்றதால்
இரவு செய்யும் பாவக் காடு
தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே! 
-  திருமொழி (பெரியாழ்வார்)

"பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்?

"அஞானம் தான், நாம் பாவம் செய்வதற்கு காரணம்"
என்கிறார் பெரியாழ்வார்.

'எந்த அஞானத்தை சொல்கிறார் பெரியாழ்வார்? தெரிந்து கொள்வோமே!

"இரவு செய்யும் பாவக் காடு" என்கிறார் பெரியாழ்வார்.
இங்கு "இரவு" என்று "அஞானத்தை" சொல்கிறார் பெரியாழ்வார்.

"ஏன் இப்படி தொடர்ந்து பாவத்தை செய்கிறேன்? ஏன் பாபியாகவே இருக்கிறேன்?"
என்று ஒரு பக்தன் தன்னையே நொந்து, ராமபிரானை பார்த்து உண்மையை சொல்கிறான்.
"ராமா, நீங்கள் தர்மத்துக்காக எத்தனை, படாதபாடு பட்டீர்கள் !!
தர்மத்துக்காகவே பூமியில் நீங்கள் அவதரித்தீர்கள்..., 
நானோ தர்ம துரோகியாக இருக்கிறேன்!!

மனிதர்கள் எப்படி தர்மத்தில் வாழ வேண்டும்? என்று காட்ட, வைகுண்டத்தை விட்டு விட்டுமனிதனாகவே தானும் அவதரித்து, தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், தர்மத்துக்காக தானே !! 
தர்மத்தை நிலைநிறுத்துவதற்கு தானே !!
நானோ, தர்ம துரோகியாக இருக்கிறேன் !!
என்று சொல்ல,







"அப்படி என்ன, நீ அதர்ம செய்து விட்டாய்?" 
என்று ராமபிரான் பரிந்து கேட்க,

"ராமா, இப்படியா எனக்கு பரிந்து பேசுவது?
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு உகந்த காரியங்களோ, அது எதையுமே செய்யாதவன் நான்!
அது மட்டுமல்ல, 
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு எதிரானதோ, அதையெல்லாம் செய்தவன் நான்!

'இந்த அதர்மம் செய்தேன், அந்த அதர்மம் செய்யவில்லை என்று இல்லாமல்', உலகத்தில் உள்ள அனைத்து அதர்ம காரியங்களையும், 
தேடி தேடி, பார்த்து பார்த்து, ஆசைப்பட்டு ஆசைப்பட்டு செய்திருக்கிறேன்.

இப்படி பாபங்களே செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
'உடம்பே நான்' என்ற அஞானமே, நான் செய்யும் இத்தனை பாபத்துக்கும் காரணம்.
'உடம்பே நான்' என்ற அகம்பாவத்தால், இத்தனை பாவங்களும் செய்கிறேன்.
எத்தனை நாள் இப்படியே இருந்து விடப்போகிறேன்? 
ஒரு நாள் நிச்சயம் செத்து விடுவேனே!!
இவ்வளவு பாப காரியங்கள் செய்கிறேனே!! இப்படியாவது பிழைக்க வேண்டுமா? இந்த உடம்பு நிரந்தரமானதா!!
ஒரு சாண் வயிற்றுக்கு சோறு போட்டு காப்பாற்ற, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?
புலன்களுக்கு சுகம் கிடைக்க, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?

'உடம்பே நான்' என்ற அகம்பாவம் தானே, என் பாபங்கள் அனைத்துக்கும் காரணம்.
'உடம்பு நான் இல்லை, ஆத்மா தான் நான்' என்ற நினைவு கூட இல்லாமல் பாபம் செய்து கொண்டே போகிறேனே!!
அது போகட்டும்,
'ஐயோ!! இப்படி இந்த உடம்புக்காக இத்தனை பாபங்களை செய்கிறோமே!! என்று நினைத்தாவது கண்ணீர் விட்டாயா?' 
என்று கேட்டு விடாதீர்கள்.

'நான் பாபி' என்ற எண்ணம் ஒரு எள் அளவிற்காவது இருந்தால் தானே! என் கண்களில் நீர் சிந்தும்...

'நான் ஏதோ பரமபுண்ணியவான் போலவும், பாவமே செய்யாதவன் போலவும் தானே நானே என்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறேன்'.

'நான் ரொம்ப யோக்கியன். நான் நீதி தவறி நடக்க மாட்டேன்' 
என்று தைரியமாக சொல்லி கொண்டு இருப்பேனே தவிர, 
தனக்கு தானே ஒரு முறை கூட சிந்தித்து பார்த்தது கிடையாது. 
என்னை பற்றி ஒரு அனுதாபம் கூட ஏற்பட்டது கிடையாது, எனக்கு!!

நான் ஏன் சிந்தித்தது கிடையாது? என்று நீங்கள் கேட்டால், 
'ஆத்மா தான் நான்' என்ற ஞானம் இல்லாதது தான் நான் சிந்திக்காததற்கு காரணம். 
'உடம்பே நான்' என்ற அஞானம் தான் நான் சிந்திக்காததற்கு காரணம்.
என்றான் அந்த பக்தன்

பெரியாழ்வார் சொல்கிறார்,
'உடம்பே நான்' என்று இருக்கும் அஞான ஜனங்கள், 'பாபம் செய்கிறோம்' என்ற நினைவு கூட இல்லாமல், 
'புஷ்ப தோட்டம்' போடுவது போல,
தன் பாபங்களை கொண்டே அவரவர்களுக்கு ஒரு பெரிய 'பாப தோட்டம்' போடுகிறார்களாம்.

இதையே "இரவு செய்யும் பாவக்  காடு" என்று சொல்கிறார் பெரியாழ்வார்.

"தெரியாமல் இந்த பாவங்கள் செய்து விட்டாயோ?" என்று கேட்டால், "தெரிந்தே செய்த பாப காடு"  (செய்யும் பாவக் காடு) என்கிறார் பெரியாழ்வார்.

ஒரு தோட்டம் போடுவது போல, அஞானிகள், இந்த உடம்புக்காக, தெரிந்தே 'பாபம் என்ற தோட்டத்தை' அமைத்துக்கொள்கிறார்களாம்.

இப்படி அஞானிகள், 'உடம்பே நான்' என்று கஷ்டப்பட்டு, ஜென்ம ஜென்மாக ஆசையுடன் வளர்த்த இந்த பாபத்தோட்டம்,
திடீரென்று ஒரு சந்தர்ப்பம், ஒரு காட்டு தீயில் சிக்கி, அந்த காடே பொசுங்கி விட்டது!!
என்கிறார் பெரியாழ்வார்.
"திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா...வேங்கட ரமண கோவிந்தா"
என்று திருப்பதியில் இருந்து கூட வேண்டாம், இருக்கும் இடத்திலிருந்தே "திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா... வேங்கட ரமண கோவிந்தா"
என்று சொல்லிவிட்டால் கூட,
நாம் பார்த்து பார்த்து வளர்த்த இந்த பாப காடு, 
"கோவிந்தன்" என்ற பெரும் காட்டுத்தீயில் பொசுங்கி விடுமே!! 
என்கிறார் பெரியாழ்வார்.




"இப்படி நாம் வளர்த்த பாப காடு, 'கோவிந்தா' என்று சொன்னவுடனேயே பாபங்கள் பொசுங்கியது மட்டுமில்லாமல், கற்பகவருக்ஷங்களே நிறைந்த பசுமையான  காடாகவும் ஆகி விட்டது" என்கிறார் பெரியாழ்வார்.

அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே

என்று சொல்லும் போது,
"கோவிந்தா" என்று சொன்னவுடன், அந்த வேங்கடநாதன் தன்னை கரம் பிடிக்க (நீ என்னை கைக்கொண்டபின்), 
அஞானம் என்ற இருள் விலகி, மோக்ஷம் நிச்சயமாகிவிட,
ஞானம் ஏற்பட்டு (அறிவையென்னும் அமுத ஆறும்), 
ஆத்ம ஞானம் புத்தியில் (தலைபற்றி) ஏற்பட்டு, 
பெருமாளின் கருணையை நினைத்து ஏற்பட்ட பக்தியால் 
"கோவிந்தா.. கோவிந்தா..." என்று நாமம் வாயில் வருகிறதே (வாய்க்கொண்டதே)!! 
என்கிறார் பெரியாழ்வார்.

"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போலநமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பாபங்களை பொசுக்கும் வேங்கடாத்ரியில், வீற்று இருக்கும் ஸ்ரீனிவாசன், 'நம் பாபங்களை மட்டும் போக்குவதில்லை, பாபங்களை போக்கி, நமக்கு நல்லதையே கிடைக்க செய்து, நல்லதையே நினைக்க செய்து, தன்னிடம் பக்தி உண்டாகும் படி செய்து, மோக்ஷ வாசலையும் திறந்து விடுகிறார்'.


ஸ்ரீனிவாச பெருமாளை பக்தியுடன் சேவிப்போம்.

முழுசி வண்டாடிய - திருமங்கை ஆழ்வார் அஷ்டபூஜை பெருமாளை பார்த்து பாடிய பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோமே..



Saturday 20 April 2019

மரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன? மரண வேதனை எப்படி இருக்கும்? தெரிந்து கொள்வோமே!!

நமது உடலில் உள்ள 'நாடிகள்' சரியான நிலையில் ஓடும் வரை,
நமது 'மனம்' திடமாக இருக்கும் வரை,
நம்முடைய வாழ்க்கை ஒழுங்காக ஓடுகிறது.


ஒழுங்காக ஓடும் வரை, 'அதை வாங்குவேன், இதை சாதிப்பேன், அவனை ஒழிப்பேன்' என்று அலைகிறோம்.
நமக்கு உடம்பு சரியில்லை என்றால், டாக்டரை பார்க்க ஒடுகிறோம்.
அவர் நம் கையை பிடித்து, நாடி ஒழுங்காக ஒடுகிறதா? என்று  பார்க்கிறார்.
நாடி ஒழுங்காக ஓடினால் 'பயமில்லை' என்கிறார்.
நாடி தாறுமாறாக ஓடினால்?
மனம் பேதலித்து போனால்?
நமக்கு உண்மையான பிரச்சனை அங்கு தான் ஆரம்பிக்கிறது.

மரண சமயத்தில், உடம்பில் உள்ள நாடிகளும், மனமும் தாறுமாறாகி விடும். எதற்கும் கட்டுப்படாமல் போகும்.
மனம் தாறுமாறாக போன நிலையில்,
எதுவுமே புரியாத நிலையை ஏற்பட்டு விடும்.

மரண படுக்கையில் கிடக்கும் போது, யார் யாரோ மனதுக்குள், வந்து வந்து நிற்பார்கள்.
இத்தனை காலம் மனதில் எழுந்த தோற்றங்கள், எண்ணங்கள், விஸ்வரூபம் எடுத்து, தாறுமாறாக நம் மனதில் வந்து நிற்கும்.

பலரின் நினைவு ஒரே சமயத்தில் வருவதால், குழப்பத்தை ஏற்படுத்தி, 'யார்? யார்? யார்?' என்று கேட்க வைத்து, கண்கள் அகன்று பேய் முழி முழிக்க வைக்கும்.
மனமும், நாடிகளும் கட்டுப்பாட்டை இழந்து, மரண சமயத்தில் சிலருக்கு, யார் தன்னை பார்க்க வந்து இருக்கிறார்? என்று தெரியும். ஆனால் பேச விடாமல் வாய் இழுத்து விடும்.
'பேரன்' தான் வந்து இருக்கிறான் என்று தெரியும்.
பேசலாம் என்று தோன்றும். ஆனால் வாக்குக்கான நாடி செயல்படாமல் இழுத்து விடும். வாக்கு எழாது.
வாக்கு இழுத்த நிலையில், மனமும் தாறுமாறாக போன நிலையில், பேச முடியாமல் செய்வதறியாது கண்கள் அகன்று முழிக்க வைக்கும்.

சில பேருக்கு, மரண சமயத்தில் யார் வந்து இருக்கிறார்? என்பது கூட தெரியாமல் போய் விடும்.
தன் மகனே வந்தாலும், யார் வந்தார்கள்? என்று புரிந்து கொள்ள முடியாமல், மனது அலை பாயும்.
"யாரு? யாரு?..." என்று கேட்டுக்கொண்டே செய்வதறியாது முழிப்பார்கள்.


இது மரண காலத்தில் அனைவருக்கும் ஏற்பட போகும் அவஸ்தை.
மறுக்க முடியாத உண்மை.

இப்படி ஒரு மரண வேதனையை, ஒவ்வொரு ஜீவனும் கட்டாயம் அனுபவிக்கிறார்கள். அனுபவிக்க போகிறார்கள்.
யோகிகளுக்கும் இந்த மரண வேதனை உண்டு.

மரண சமயத்தில், மனமும் நாடியும் தாறுமாறாக போவதால்,
வாய் இழுத்து விடும்,
கண்களை போட்டு சுழற்றும்,
உடம்பே வீங்கி விடும்,
வயிற் உப்பி விடும்.
மனம் கட்டுப்பாட்டை இழந்ததால், நாடிகள் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பிக்க, படுத்த படுக்கையிலேயே மலம் மூத்திரம் தானாகவே வெளியேறி விடுகிறது. 
மரண சமயத்தில் இவன் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறான்? என்று சொந்தங்களையே பேச வைக்கும்.

மரண வாசலில் படுத்து இருக்கும் போது, உடம்பில் ஈ மொய்க்கும். எறும்பு கடிக்கும்.
தன் மேல் கடிக்கும் எறும்பை, தன் கையால் எடுத்து ஏறிய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

ஒரு கல்லை போன்று, கட்டையை போன்று, போட்டது போட்டபடி மரண சமயத்தில் கிடக்கிறான்.
ஆரோக்கியமாக இருந்த காலத்தில், ஒரு கொசு கடித்தால் கூட தாங்க முடியாமல் புரண்டு புரண்டு படுப்பவன், தன் மரண சமயத்தில்,100 தேள் ஒரே சமயத்தில் கடித்தால் ஏற்படும் தாங்க முடியாத வலியை ஒருசேர, உடல் முழுவதும் அனுபவிக்கிறான்.
மரண காலத்தில் என்ன அனுபவம் பெறுகிறோம்? என்று கருட புராணத்திலும் காட்டப்படுகிறது.

இப்படி ஒரு மரண வேதனை நமக்கு முன்னால் இருப்பது தெரிந்தும், அந்த மரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி தேடிக்கொள்ளாமல் இருப்பானா ஒரு விவேகி? 

மரண வேதனையில் இருந்து தப்பிக்க, இன்றே "நாராயணனிடம் பக்தி செய்" என்று நமக்கு பாசுரங்கள் அருளி இருக்கிறார்கள் ஆழ்வார்கள்.

இப்படிப்பட்ட மரண வேதனையை அனுபவித்து கொண்டு, நம் சொந்தங்கள் 'எப்போ இவன் உயிர் போகுமோ?' என்று கேட்கும் அவமானத்தை கேட்டு கொண்டு, "கொர்...  கொர்..." என்று இழுத்துக்கொண்டு, உயிர் ஊசலாடி கொண்டு இருக்கும்.

இந்த நிலையை பார்த்து விட்டு, நம்முடைய சொந்தங்கள் எல்லோரும் "இன்னும் பத்து நிமிடத்தில் உயிர் போய் விடும்" என்று சொல்லிக்கொண்டு, செய்வதறியாமல் கையை பிசக்கிக்கொண்டு சுற்றி உட்கார்ந்து இருப்பார்கள்.


இப்படி ஒரு நிலை நமக்கும் உண்டே.. மறுக்க முடியுமா?...
தர்மபுத்திரரான யுதிஷ்டிரரிடம், யக்ஷ ராஜன் (யமன்)
"எது ஆச்சர்யம் ?"
என்று கேட்ட பொழுது, தர்மபுத்திரர் அற்புதமான பதிலை சொன்னார் என்று பார்க்கிறோம்.
"இந்த சரீரத்தில் ஒன்பது த்வாரங்கள் இருந்தும், ஆத்மா வெளியே செல்லாமல் இருக்கிறதே!! இதுவே ஆச்சர்யம்."
என்றார்.

இதை கேட்ட யக்ஷன்,
"இதையும் விட ஆச்சர்யம் எது?"
என்று மேலும் கேட்க,
"உலகில், பலர் தினமும் இறந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை கண் கூடாக பார்த்தும்,
தான் மட்டும் ஏதோ சாகாமல், சாஸ்வதமாக (நிரந்தரமாக) இருந்துகொண்டே இருக்கப்போவதாக நினைத்து வாழ்கிறார்களே!! இவர்களே மிகப் பெரிய ஆச்சர்யம்"
என்று பதில் சொன்னார் என்று பார்க்கிறோம்.

மரண வேதனை நம் அனைவர் முன்னாலும் காத்து கொண்டு நிற்கிறது.
மரண வேதனை தவிர்க்க முடியாதது.
'மோக்ஷம் என்ற வைகுண்டம்' அடையாது போனால், நமக்கு மறுபிறவி உண்டு.
ஒவ்வொரு பிறவியிலும் இந்த மரண வேதனை நம்மை விடாது.
மரண வேதனைக்கு பயந்தாவது, நாராயணனை பற்றி கொள் என்கிறார்கள் ஆழ்வார்கள்.

நாம் செய்த புண்ணியங்களுக்கு, சொர்க்கத்தில் சில நிமிடங்கள் இருந்து விட்டு,
நாம் செய்த பாவங்களுக்கு நரகத்தில் தண்டிக்கப்பட்டு,
மீண்டும் மீண்டும் பூமிக்கு அனுப்பப்பட்டு, பிறந்து கொண்டே இருக்கிறோம்.
கடைசி மூச்சு விடும் சமயத்தில், என்ன நினைவு ஏற்படுகிறதோ? அது சம்பந்தமாகவே அடுத்த பிறவி எடுக்கிறான் என்று வேத சாஸ்திரம் 'மறுபிறவி ஏற்படுவதற்கான காரணத்தை' சொல்கிறது.


பகவத்கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ,
யம் யம் வாபி ஸ்மரண் பாவம்
த்யஜத் யந்தே கலேவரம் !
தம் தமேவைத்தி கௌந்தேய
சதா தத் பாவ பாவித !! 
(Chapter 8, Sloka 8)
என்று சொல்லும்போது,
"எவனெவன் சாகிற காலத்தில், எதை எதை நினைத்து சாகிறானோ, அது சம்பந்தமாகவே அடுத்த பிறவி எடுத்து விடுகிறான்." என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, வேத வாக்கை ஊர்ஜிதப்படுத்துக்கிறார்.
'கடைசி மூச்சு விடும் சமயத்தில், நாராயணனை ஸ்மரணம் செய்து கொண்டே உயிர் பிரிந்தால் மட்டுமே மோக்ஷம் கிடைக்கும்' என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.

ராமாயண காலத்தில் சபரியும், சரபங்க ரிஷியும் யோகிகளாக வாழ்ந்தனர்.
தன் யோக வலிமையால் ஸ்ரீ ராமரை தரிசித்துக்கொண்டே, வேறு நினைவுகள் ஏற்படாத வண்ணம் மனதை நிலை நிறுத்தி, ஜீவன் உடலை விட்டு பிரிவதை தைரியமாக எதிர்கொண்டு, மோக்ஷம் அடைந்தார்கள்.
அதே போல, கடைசி நிமிடத்தில், ஸ்ரீ கிருஷ்ணனை தரிசித்து கொண்டே, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி, கிருஷ்ண த்யானத்தோடு, தைரியமாக உயிரை பிரித்து கொண்டார் பீஷ்மர்.

யோகீஸ்வரர்களான இவர்களால், உயிர் பிரிவதை, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மரண சமயத்தில் இருந்தது.
பகவானை எதிரில் நிறுத்தி, அவர் த்யானத்துடன் உயிரை பிரித்துக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டிருந்தனர்.

யோகிகள் எல்லோரும் மோக்ஷம் அடைவார்களா? என்று கேட்டால், 'இல்லை' என்றும் தெரிகிறது.

யோகீஸ்வரரான பரத முனிக்கே மோக்ஷம் அந்த ஜென்மத்தில் கிடைக்கவில்லையே !!
பரத யோகீஸ்வரருக்கு, அவருடைய மரண சமயத்தில் "ஐயோ நான் வளர்த்த மான் என்ன ஆகுமோ?"
என்று மான் நினைவு ஏற்பட்டு விட்டது.
தன் வாழ்நாள் முழுவதும், தன் யோக பலத்தால், பகவத் தியானமே செய்தார் பரத யோகி.
கடைசி காலத்தில்,
பகவான் நாராயணன் நினைவு அவருக்கே வரவில்லை.


அத்தனை கடும்முயற்சி செய்து யோகீஸ்வரரான பரதர், மரண சமயத்தில் மான் நினைவோடு உயிரை விட்டதால், மறு ஜென்மத்தில் மானாகவே பிறந்து விட்டார்.
யோக பயிற்சிகள் அவரை கைவிட்டு விட்டதே !!
அப்யாச 'யோக'த்தால் செய்த தியானம் அவரை கைவிட்டது.
ஒரு மானிடம் ஏற்பட்ட 'ஆசை' அவரை கவிழ்த்து விட்டதே!!

யோகத்தால் தியான ஸித்தி ஏற்படலாம்.
8 ஸித்திகளும் கை கூடலாம்.
கடைசி நிமிடத்தில்  பகவத் தியானம் ஏற்படுமா? என்பது சந்தேகம் என்று பரத ரிஷி வாழ்க்கையை பார்த்தாலே தெரிகிறதே!!

மோக்ஷம் அடைய, யோக சாதனைகள் ப்ரயோஜனப்படாது என்று தெரிகிறதே.

யோக சாதனைகளை, மோக்ஷம் அடையும் வழியாக நம்ப இயலவில்லை.

கடைசி நிமிடத்தில் யோகிகள் கூட  பகவத் தியானம் செய்ய முடியாமல் போகுமென்றால், சாதாரண ஜனங்களான நம்மை போன்ற மனிதர்கள், யோக சாதனைகளை செய்து, மோக்ஷம் அடைவது என்பது நடக்காத காரியமே.

கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'ஹரி' நாமம் வராது போனால், மோக்ஷம் கிடைக்காது.
மோக்ஷம் அடையாது போனால், நமக்கு மறுபிறவி நிச்சயம். 
மறுபிறவி இருப்பதாலேயே, மரண வேதனையும் நிச்சயம்.

இன்றைய பொழுதில் நமக்கு உடலும் அனுகூலமாக உள்ளது. மனதும் விகாரப்படாமல் அடங்கி இருக்கிறது.
இந்த நல்ல நிலையில் கூட, நம் வாயில் "ராம ராம ராம..." என்று பகவன் நாமா வரவில்லையே !!
காபி சாப்பிடவும்,
புரளி பேசவும்,
சினிமா பார்க்கவும்
அங்கும் இங்கும் அலைய ஆசை இருக்கிறதே தவிர,
வரப்போகும் மரணத்தை பற்றிய எண்ணமில்லையே !!
மறுபிறவி கூடாது, மோக்ஷம் வேண்டும் என்ற முயற்சி இல்லையே!!




உடலும், மனமும் நன்றாக இருக்கும் இன்றைய நிலையிலேயே "நாராயணா" என்று வாயில் வராத போது,
மரகட்டை போல கிடக்கும் நிலையில், உடலும் மனமும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,
100 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் வேதனையை தரும் மரண காலத்திலா,
நமக்கு "நாராயணா..." என்று வர போகிறது?

மரண காலத்திற்கு இப்பொழுதே தயார் செய்து கொள்ள வேண்டாமா?
மரண வேதனை ஏற்படாமல் இருக்க வேண்டிய முயற்சி செய்து கொள்ள வேண்டாமா?

யோகிகளும் ஜெயிக்க முடியாத மரண வேதனையை, சாதாரண ஜனங்கள் ஜெயிக்க முடியுமா?
மரண வேதனையை மறந்தால் தானே, பகவத் தியானம் செய்ய முடியும்?
பகவான் நாராயணனோ, கடைசி மூச்சு விடும் சமயத்தில்
'யார் என்னை நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே மோக்ஷம் கொடுக்கிறேன். மற்றவர்களுக்கு அவர்கள் செய்த புண்ணியத்துக்கு ஏற்ற சொர்க்க வாசமோ, ப்ரம்ம லோக வாசமோ, கைலாய வாசமோ, அதல, சுதல, பாதாள லோகங்களில் வாசமோ செய்ய செய்து,
பாவத்துக்கு நரக லோகத்தில் ஏற்ற தண்டனை கொடுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பூ உலகில் மரமாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ, மனிதனாகவோ பிறக்க செய்கிறேன்' என்கிறார் !!

மரண வேதனையை சாதாரண ஜனங்களால் ஜெயிக்கவே முடியாதே!!
ஒரு கொசு கடித்தாலேயே, உடலை துச்சம் என்று நம்மால் நினைக்க முடிவதில்லை.
மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்தில், உடலை மறந்து, சாதாரண ஜனங்களால் பகவத் தியானம் செய்யவே முடியாதே!!
அவர்களுக்கு மோக்ஷமே கிடையாதா??
இந்த கவலை ஒரு முறை ஸ்ரீ ராமனுஜருக்கே வந்து விட்டது!!
எய்ப்பு என்னை வந்து நலியும் போது
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப்பள்ளியானே !!
இது பெரியாழ்வார் அருளிய 'திருமொழி'
'ரங்கப்ரபோ... உடலும் மனதும் கட்டுப்பாட்டை இழந்து,
100 தேள் ஒரே சமயத்தில் கொட்டும் மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்தில்,
அந்த மரண வேதனையை தாங்க முடியாமல் "ஐயோ... அம்மா.." என்று கதறும் என்னிடம் போய், 'என்னை மரண சமயத்தில் தியானம் செய்தாயா?' என்று கேட்காதீர்கள்.
மரண வேதனையை அனுபவிக்கும் நான், அந்த சமயத்தில், உறுதியாக உங்களை நினைக்கவே மாட்டேன்.

மரண காலத்தில் உங்களை நினைக்க துப்பு இல்லாதவன் என்பதை உணர்வதால், குழந்தையாக இருக்கும் போதே, இளமையுடன், ஆரோக்கியத்துடன் இருக்கும் இப்போதே 'ரங்கப்ரபோ.. ரங்கப்ரபோ..." என்று இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப்பள்ளியானே'
என்று திருமொழியில் பெரியாழ்வாரே இந்த பாசுரத்தில், உறுதியாக சொல்கிறார்.
பகவானோ 'மரண சமயத்தில் என் தியானம் வராவிட்டால், மோக்ஷம் கிடையாது' என்று உறுதியாக, தீர்மானமாக சொல்கிறார்.

பெரியாழ்வாரோ 'மரண சமயத்தில் மரண வேதனை எழும்பி, பகவத் தியானம் வரவே வராது' என்று உறுதியாக சொல்கிறார்.

இளமை காலத்திலேயே, உடலும் மனமும் நம் சொல்பேச்சு கேட்கும் சமயத்திலேயே, பகவத் பக்தி செய்து பழகி விட்டோம் என்றால், அந்த பழக்கமே, நம் கடைசி காலத்தில் பகவத் தியானத்தை சுலபத்தில் கொடுக்கும் என்று நம்பினால், ஆழ்வார் அதற்கும் உத்திரவாதம் இல்லை என்கிறார்..
மேலும்,
பெரியாழ்வாரே "அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்" என்று 'கடைசி நிமிடத்தில் பகவத் தியானம் நான் செய்ய மாட்டேன்' என்று வேறு சொல்கிறார்.

எப்படிப்பட்ட எண்ணங்களுடன் ஒருவன் தன் வாழ்நாளை செலவழிக்கிறானோ, அப்படிப்பட்ட எண்ணங்களே மரண சமயத்தில் எழும்பி, அந்த எண்ணங்களே காரணமாக ஆகி மறுபிறவி அமைந்து விடுகிறது.

உலக எண்ணங்களுடனேயே ஒருவன் தன் வாழ்நாளை செலவழித்தால், அது சம்பந்தமான எண்ணங்களே மரண சமயத்தில் எழும்பி, அந்த எண்ணங்களே காரணமாக ஆகி மறுபிறவி அமைந்து விடுகிறது.
எப்படிப்பட்ட எண்ணங்களுடன் வாழ்கிறோமோ, அது சம்பந்தமான எண்ணங்களே மரண சமயத்தில் எழும்புவதால், 'மோக்ஷம் அடைய வேண்டும்' என்று ஆசைப்படுபவர்கள் (முமுக்ஷுக்கள்),
தன் வாழ்நாளை பகவத் தியானம், பகவத் கைகர்யம் செய்து கொண்டே கழிக்கின்ற்னர்.
அது சம்பந்தமான பகவத் எண்ணங்கள் மட்டுமே மரண காலத்திலும் அவர்களுக்கு ஏற்பட்டு, மோக்ஷத்திற்கு வழி செய்யும் என்று புரிந்து இருந்தார் ராமானுஜர்.

யோகிகள் கூட, மரண வேதனையை ஜெயிக்க முடியாமல், மனதின் எண்ணத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்..
பகவத் தியானமே தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த பரத யோகீஸ்வரருக்கு, கடைசி நொடியில் பகவத் தியானம் மறந்து போய், எங்கேயோ மனதில் ஒட்டியிருந்த மானின் எண்ணம் ஏற்பட்டு, உயிர் பிரிந்து விட்டது. அந்த ஜென்மத்தில் அவருக்கு மோக்ஷம் கிடைக்கவில்லை. அடுத்த பிறவி அமைந்து மானாகவே பிறந்து விட்டார்.

யோகிகள் கூட மோக்ஷம் கிடைக்காமல் தோற்று போனார்கள் என்பதால், பெரியாழ்வார் 'இளமையிலேயே பகவத் பக்தி செய்து, பகவத் பக்தி செய்து, வாழ்ந்தாலும், மரண சமயத்தில் மரண வேதனையை மீறி, பகவத் சிந்தனை நமக்கு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை' என்று சொல்ல, ஸ்ரீ ராமானுஜருக்கே ஒரு சமயம் கலக்கம் ஏற்பட்டு விட்டது.

நன்றாக இருக்கும் காலத்திலேயே பகவத் தியானம் இந்த ஜனங்களுக்கு வரவில்லையே !! மரண வேதனையை அனுபவிக்கும் சமயத்திலா சாதாரண ஜனங்களுக்கு 'நாராயணன்' நினைவு வரப்போகிறது?

மரண வேதனை நிச்சயமாக நமக்கும் இருக்கிறது, என்று தெரிந்து கொண்டே,
வீண் பொழுது போக்கி,
நன்றாக இருந்த சமயத்தில்
தூங்கியும், சாப்பிட்டும்,
தூங்கியும், சாப்பிட்டும்,
தூங்கியும் தானே பொழுது போனது...
இப்படி வாழ்க்கை வாழ்ந்தால், கடைசி நிமிடத்தில் எப்படி பகவத் தியானம் ஏற்படும்?


பெரியாழ்வார் சொன்னபடி, இளமை காலத்திலேயே பக்தி செய்தோம் என்றாலும், கடைசி மூச்சு விடும் சமயத்தில் பகவத் தியானம் ஏற்படுவது சுலபம் இல்லை என்கிறாரே?
தாங்க முடியாத மரண வேதனையை மீறி, பகவத் தியானம் ஏற்படுமா?.. சாத்தியமில்லையே..

'பகவத் தியானம் செய்தால் தான் மோக்ஷம் தருவேன்' என்று பெருமாள் சொல்கிறாரே!!

பெரியாழ்வார் 'சொன்ன சொல்லும் பொய் போகாது'.
பெருமாள் 'சொன்ன சொல்லும் பொய் போகாது'.

"இளமை காலத்திலிருந்தே பகவத் கைகர்யம் செய்கிறேன். அதனால் மரண காலத்தில் பகவத் தியானத்தை எதிர்பார்க்காதீர்கள்" என்று ஆழ்வார் சொல்கிறாரே?
"மரண காலத்தில் பகவத் தியானம் செய்தவர்களுக்கு மட்டுமே மோக்ஷம்" என்று பெருமாள் சொல்கிறாரே?

இருவர் வாக்கும் பொய் போகாது என்று புரிந்தாலும், இருவர் சொல்வதும் எதிர் எதிராக இருப்பது போல தெரிய, ஸ்ரீ ராமனுஜருக்கு மனதில் கலக்கம் ஏற்பட்டது.
பெருமாளோ ஸ்ரீ ராமானுஜரிடம் அர்ச்ச மூர்த்தியாகவே (சிலையாகவே) பேசுவார்.
தன் வருத்தத்தை காஞ்சி வரதராஜ பெருமாளிடமே விண்ணப்பித்து கொண்டார் ஸ்ரீராமானுஜர்.
(இன்று காஞ்சிபுரம் போனாலும் ராமனுஜரிடம் பேசிய வரதராஜ பெருமாளை, பேரருளாளனை நாமும் நம் கண்ணால் தரிசித்து ஆனந்த படலாம்)

வராஹ அவதாரம் செய்த போது பூமி தேவியுடன் பேசிய அதே பதிலை, இப்பொழுது காஞ்சி வரதன், ஸ்ரீ ராமனுஜருக்கு ஞாபகப்படுத்தினார்.

காஞ்சி வரதன் என்ற பேரருளாளன், ஸ்ரீ ராமானுஜரை பார்த்து, அர்ச்ச அவதாரமாக இருந்து கொண்டே பேசினார்,
"என்னுடைய அடியாருக்கு, அந்திம காலத்தில் என்னுடைய நினைவு வர தேவையில்லை" என்றார்.
'இது என்ன தேவரீர், இப்படி சொல்லிவீர்டீர்கள்!
சாஸ்திரம் அந்திம காலத்தில் உங்கள் ஸ்மரணம் வேண்டும் என்று சொல்கிறதே?'
என்று ராமானுஜர் கேட்க,
'என்னை சரணம் அடையாத யோகீஸ்வரர்களுக்கு அப்படி ஒரு விதி சொல்லப்பட்டது.
யோக அப்யாசத்தால் சுய முயற்சியால் மனதை நிறுத்தி, மரண காலத்தில் என்னை தியானிக்க சக்தி உள்ளவர்களுக்கு 'என்னை தியானம் செய்தால்' மோக்ஷம் கொடுக்கிறேன் என்றேன்.
ஆனால்,
என் அடியார்களுக்கு இத்தனை கடும் முயற்சிகள் தேவையில்லை.
என் அடியார்கள், அந்திம காலத்தில் 'ஐயோ அம்மா..' என்று மரண வேதனையில் அலறிக்கொண்டு இருந்தாலும் மோக்ஷம் கிடைக்க செய்கிறேன்.

காஷ்டபாசமாக (கல்லும் கட்டையும் போல) மரண வாசலில் என் பக்தன் கிடக்கும் போது, அவனால் என்னை நினைக்க முடியாது என்று அறிவேன்.
மனமும், உடலும் தாறுமாறாக போன நிலையில் அவனால் என்னை தியானிக்க முடியாது என்று அறிவேன்.
என் பக்தன் என்னை அப்பொழுது தியானிக்க முடியாது போனாலும்,
அவனை நான் நினைக்கிறேன்.



அவன் 'கால்' நன்றாக இருக்கும் பொழுது, ஓடி ஓடி வந்து 'என் சன்னதி' முன் நிற்பானே!!
'இன்று ரங்கநாதன் புறப்பாடு,
இன்று திருவெங்கடமுடையான் புறப்பாடு', என்று வந்து வந்து நிற்பானே!!
'கண்' நன்றாக தெரியும் போது, ஓடி ஓடி வந்து 'பெருமாள் சேவை இன்று எப்படி அழகாக இருந்தது!!',  என்று பார்த்து கொண்டு ரசிப்பானே!!

'காது' நன்றாக கேட்கும் பொழுது, ஓடி வந்து ஓடி வந்து 'அங்கு பாகவத உபன்யாசமாம்', 'அங்கு ராமாயண உபன்யாசமாம்' என்று காது குளிர கேட்டு ஆனந்த படுவானே!!
'வாய்' நன்றாக இருக்கும் காலத்தில், 'நாராயணா...கோவிந்தா... ராமா...ரங்கப்ரபோ...வரதா' என்று என் திருநாமத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பானே!!

'கை' நன்றாக இருந்த காலத்தில், என் அடியார்களுக்கு வேண்டிய தொண்டுகள் அலுக்காமல் சலிக்காமல் செய்வானே!!

ஒரு மனிதன், தனக்கு அன்பு காட்டியவனிடத்தில் நன்றி கெட்டு நடந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
ஆனால் எனக்கு, ஒரு ஜீவன் ஒரு 'துளசி' சமர்ப்பித்தால் கூட வீண் போகாது.
ஒரு பிடி 'அவல்' கொடுத்தாலும் கூட, குபேரன் ஆக்கி விடுவேன் என் பக்தனை.
ஒன்றுமே கொடுக்கவில்லை, வாயால் 'கோவிந்தா...' என்று ஒரு முறை சொன்னால் கூட அபயம் தருவேன்.
திரௌபதி 'கோவிந்தா' என்று கூப்பிட்ட ஒரு சொல்லுக்கு அவள் குடும்பத்துக்கே அடிமையாக கூட இருந்து காப்பேன் என்று தானே, அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினேன்.

என்னையே சரணம் அடைந்து, என்னையே சுற்றி சுற்றி வந்தவனுக்கு நான் அல்லவோ உண்மையான ஆதம் உறவு.

இன்று மரண வாசலில் என் பக்தன் கிடக்கிறானே... அவனுடைய சரீர பந்துக்கள் எல்லோரும் வந்து போகிறார்களே.
நான் அவனுடைய ஆத்ம பந்துவாயிற்றே.. நாம் சென்று பார்க்க வேண்டாமா..

என் பக்தன் மரண படுக்கையில் கிடக்கும் போது, மரண வேதனையில் தவிக்கும் போது, நான் அவனுக்கு மரண வேதனையை மறைத்து, என் தியானத்தை கொடுப்பேன்.



சரீர பந்துக்கள்
'அப்பா... அப்பா.. என்னை தெரிகிறதா?....',
'அண்ணா.. என்னை தெரிகிறதா?...',
என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது,
ஆத்ம பந்துவான நான், என் அபய ஹஸ்தத்தை காட்டி, பிரசன்னமான முகத்துடன் 'என்னை தெரிகிறதா?...' என்று கேட்க, சரீர பந்துக்கள் அழைப்பது எல்லாம் என் பக்தனுக்கு மறந்தே போய் விடும்.
மரண வேதனையும் மறைந்து விடும்.

நானே வலிய வந்து, என் பக்தனுக்கு, என் நினைவை கொடுப்பேன்.
தரிசனம் பெற்ற என் பக்தனுக்கு வேறு நினைவு ஏற்படாத வண்ணம் செய்து, என் பக்தன் கடைசி மூச்சு விடும் சமயத்தில் 'என்னை நினைத்து விட்டான்' என்று வேத சாஸ்திரத்தையும் மீறாமல் இருக்க செய்து, நானே அவனை மோக்ஷத்திற்கு அழைத்து சென்று விடுவேன்"
என்றார் அர்ச்ச அவதாரமாக இருந்த காஞ்சி வரதன்.
ஸ்ரீ ராமானுஜர் பேரருளாளன் பதிலால், பேரானந்தம் அடைந்தார்.

இளமை காலத்திலேயே பகவத் பக்தி நிறைய செய்து வந்தால், பகவான் நம்மை கண்டு பிரியம் கொள்கிறார்.
'என் பக்தன்' என்று கவனிக்கிறார்.

மரண காலத்தில், மரண வேதனை அனுபவித்தாலும்,
நம்மால் பெருமாளை தியானிக்க முடியாமல் போனாலும்,
நாம் அவரிடம் காட்டிய 'பக்தி என்ற அன்பு'க்கு வசமாகி, நமக்கும் திவ்ய காட்சி கொடுத்து, பகவத் தியானத்தை தானே கொடுத்து, மோக்ஷம் கிடைக்க செய்கிறார்.
பெருமாள் தன் கருணையின் காரணமாக தன் பக்தன், பிறவி கடலை கடக்க செய்கிறார்.

காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு 'பேரருளாளன்' என்ற சொல்வதன் மகத்துவம் ஸ்ரீ ராமனுஜருக்கே புரியக்கூடியது.
உலகம் பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பூமா தேவி, பெருமாளிடம் பிரார்த்தனை செய்தாள்.
பூமியை வராஹ அவதாரம் செய்து தூக்கி, அதன் நிலையில் நிறுத்தினார் பெருமாள்.

அப்பொழுது, நம்மை எல்லாம் பெற்று, தாங்கி கொண்டு இருக்கும் பூமி தாயார், தன் கணவனான, நம் தகப்பனாரான பெருமாளிடம், 'இப்படி நம் குழந்தைகள் (ஜீவன்கள்) பிறந்து இறந்து, பிறந்து இறந்து கொண்டே இருக்கிறார்களே!! இவர்களுக்கும் மோக்ஷம் கிடைக்க வழி சொல்லுங்கள்' என்று கேட்க,
வராஹ அவதாரத்துடன் இருந்த பெருமாள், பிற்காலத்தில் 1037AD சமயத்தில், காஞ்சி வரதனாக ஸ்ரீராமனுஜருக்கு உபதேசித்ததை, அன்று பூமா தேவிக்கு உபதேசம் செய்தார்.

பெற்றோருக்கு, தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை எப்பொழுதும் உண்டு.
நாம் அனைவருக்கும் தாயான பூமா தேவியும், பூமா தேவியின் கணவனும், நம் தந்தையுமான நாராயணனும், நம் நலத்திற்காக பேசிக்கொள்ளும் அற்புதமான புராணம் வராஹ புராணம்.


வராஹ புராணம் படிப்பதாலேயே நமக்கு சாத்வீக புத்தி வளரும். சாத்வீக பக்தியும் வளரும். சாத்வீக குணங்களே வளரும். சாத்வீக தெய்வமான நாராயணன் மீதே பிரியம் ஏற்படும். மோக்ஷமும் உண்டாகும்.

நாம் மோக்ஷம் அடைய,
சக்கரவர்த்தியான 'ராமபிரான்' சொல்லாத ஆறுதல் வார்த்தையை,
கீதாச்சாரியன் 'ஸ்ரீ கிருஷ்ணர்' சொல்லாத ஆறுதல் வார்த்தையை,
'வராஹ பெருமாள்' நமக்கு சொல்கிறார்.

ஒவ்வொரு அவதாரமும் ஒரு காரணத்திற்காக பெருமாள் செய்தார்.
வராஹ அவதாரம் செய்து பூமியை மீட்டு, நாம் வாழ இடமும் கொடுத்து, மோக்ஷமும் கிடைக்க வழியை சொல்லி, வைகுண்டம் அழைத்து கொண்டு போவேன்' என்று சொல்லும் அவதாரமாக உள்ளது வராஹ அவதாரம்.

ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த பெருமாள், "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று சொல்லும்போது, "என்னை சரணம் அடை. மோக்ஷமும் கொடுக்கிறேன்." என்கிறார்.

ஸ்ரீ ராமராக அவதாரம் செய்த பெருமாள், "குற்றமே செய்தாலும், என்னை சரணம் அடைந்தவனை காப்பேன்" என்கிறார்.

ராம, கிருஷ்ண அவதாரத்தில் "சரணம் அடை" என்று உத்தரவு போடுகிறார் பகவான்.

ஆனால், பகவான் வராஹ அவதாரம் செய்த போது, 'என்னை சரணம் அடை. மோக்ஷம் கொடுக்கிறேன் என்று மட்டும் சொல்லவில்லை. வைகுண்டதுக்கு நானே அழைத்து கொண்டே போவேன்' என்று ராம, கிருஷ்ண அவதாரத்தில் சொல்லாத ஆறுதல் வார்த்தையை சொல்கிறார்.

நமக்கு மோக்ஷம் கிடைப்பதற்கு, நம்மை சுமக்கும் தாயான பூமி தேவி, நமக்கு தந்தையான நாராயணனிடம் மோக்ஷத்திற்கான வழியை கேட்டாள்.

தாயும் தந்தையும் தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டுமே..என்று பேசிக்கொண்ட அருமையான உரையாடல் வராஹ புராணம்.
"யார் ஒருவன், தன்னுடைய நாடிகள் ஒழுங்காக ஓடிக்கொண்டு இருக்கும் போதும், மனதும் திடமாக இருக்கும் போதும்,
என்னை பஜிக்கிறானோ, அவனின் மரண கால சமயத்தில், அவன் நாடிகள் தாறுமாறாக போன நிலையில், மனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், என்னை நினைக்க முடியாத சமயத்தில், நான் அவனை நினைத்து கொள்வேன்.

சம்சார சூழலில் இருந்து அந்த ஜீவனை மீட்டு, மீண்டும் பிறக்க விடாமல், அந்த ஜீவனை வைகுண்டம் கூட்டி செல்வேன்"
என்று நமக்கு ஆறுதல் வாரத்தையை சொன்னார் வராஹ மூர்த்தியாக இருந்த நாராயணன்.

பூமி தேவி, நாராயணனை பஜிக்கும் ஜீவனான நம்மை கண்டு பேரானந்தம் அடைகிறாள். ஒரு ஜீவன் மோக்ஷத்திற்கு செல்ல போகிறது என்று ஆனந்தம் அடைகிறாள்.

நாராயணனை துவேசிக்கும், வெறுக்கும் ஜீவனை கண்டு வெறுப்பு கொள்கிறாள்.
'இப்படியும் ஒரு பிள்ளையை பெற்றோமே' என்று வெறுப்பு கொள்கிறாள் பூமா தேவி.

ஒரு தாய்க்கு நல்ல குழந்தையும் பிறக்கும், கெட்ட குணங்கள் கொண்ட குழந்தையும் பிறக்கும்.
தாய்க்கு இரண்டு குழந்தைகளிடமும் பாசம் உண்டாகும். கெட்ட குணம் கொண்ட குழந்தையாக இருந்தாலும், விட்டு விட மாட்டாள்.
தன்னை அடித்தால் கூட பொறுத்துக்கொள்வாள் தாய்.
ஆனால்,
தன் கணவனை கேலி பேசும், திட்டும் பிள்ளையை அடியோடு வெறுப்பாள் தாய்.
இது இயற்கையான தாயுள்ளம்.
இந்த குணம் பூமி தாயாருக்கும் உண்டு.


பூமியில் நல்லவர்கள், கெட்டவர்கள் பிறக்கிறார்கள். அனைவரையும் அணைத்து கொண்டு பூமி தேவி இடம் கொடுக்கிறாள். உணவு தருகிறாள்.
தன்னையே மிதித்தாலும், வெட்டினாலும் பொறுமை காக்கிறாள்.
எதையும் பொறுத்து கொள்வதாலேயே பூமிக்கு 'க்ஷமா' என்றும் பெயர் சொல்வதுண்டு.

இப்படிப்பட்ட பூமா தேவியும், நம்மை கண்டு கோபம் கொள்வது ஒரேயொரு சமயத்தில் தான்.

தன் கணவனான நாராயணனை வெறுப்பவர்களை, அடியோடு வெறுக்கிறாள்.

வராஹ அவதாரம் செய்து பூமியை நிலை நிறுத்தினார் பகவான் நாராயணன்.

க்ருத, த்ரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் முடியும் சமயத்தில், பூமி பாரம் தாங்க முடியாமல் பூமா தேவி நாராயணனை சரணம் அடைந்தாள்.
எத்தனை கோடி ஜனங்கள் இருந்தாலும் தாங்க கூடிய பூமா தேவி, பாரம் தாங்க முடியாமல் தவித்தாள் என்று சொல்லப்படும் போது, பூமாதேவியே அதற்கு விளக்கம் தருகிறாள்.
துவாபர யுகம் முடியும் சமயத்தில், பூமா தேவியும் மனம் வெறுக்கும் அளவிற்கு, திடீரென்று நாராயணனை துவேசிக்கும் அசுரர்கள் உலகெங்கும் பிறந்து விட்டனர்.
தன் பிள்ளைகள் தான் என்றாலும், கணவனை வெறுக்கும் பிள்ளைகளை வெறுத்தாள் பூமா தேவி.
இவர்கள் அனைவரையும் ஒடுக்கி, தன் வேதனையை போக்க வேண்டும் என்று பிரார்த்திக்க, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்து, பிறந்த நாள் முதலேயே சம்ஹார மூர்த்தியாக, ஆனால் கோபமே இல்லாத ஆனந்த மூர்த்தியாக இருந்து, உலகில் இருந்த ஒட்டு மொத்த நாராயண விரோதிகளையும் ஒரே இடத்தில் போர் என்று இழுத்து வேரோடு சாய்த்து, பூமா தேவிக்கு நிம்மதி வழங்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஸ்ரீ கிருஷ்ண, ஸ்ரீ ராம அவதாரங்களில் கூட ராஜஸ (போர்) குணங்கள் வெளிப்படுகிறது.
மோக்ஷம் மட்டுமே குறிக்கோள் என்று நினைப்பவர்கள், ராஜஸ குணம் துளியும் சேர கூடாது என்று நினைப்பார்கள்.
வராஹ அவதாரம் சுத்தமான சாத்வீக புராணம் என்று பெரியோர்கள் அறிகிறார்கள்.

மோக்ஷ்ம் மட்டுமே வாழ்நாள் லட்சியம் என்று நினைப்பவர்கள், சாத்வீக கிரந்தமான வராஹ புராணம் படிப்பதை தான் விரும்புவார்கள். அல்லது சாத்வீக கிரந்தமான பாகவதம் படிக்க விரும்புவார்கள்.

மஹாபாரதம் எழுதிய பின் வ்யாஸருக்கே மனம் சஞ்சலமாக போய் விட்டது. அதற்கு பின், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தையும், அதற்கு முன் செய்த அவதாரத்தையும் மட்டுமே 'பாகவதம்' என்ற சாத்வீக கிரந்தமாக எழுதி மன சாந்தி அடைந்தார் வியாசர்.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
சொர்க்கம், நரகம் என்று நிறுத்திக்கொண்டு விட்டன உருவாக்கப்பட்ட பொய் மதங்கள்.
சொர்க்கத்துக்கும் மேல், மகர லோகம், ஜன லோகம், தப லோகம், ப்ரம்ம லோகம், பாற்கடல், கைலாயம் என்று சொல்லிக்கொண்டே போகிறது நம் ஹிந்து வேத தர்மம்.
இவை அனைத்தும் அழிய கூடியது என்று சொல்லி, வைகுண்டம் என்ற மோக்ஷத்தை பற்றியும் சொல்கிறது ஹிந்து வேத தர்மம்.
அந்த வைகுண்டநாத பெருமாள்,
மோக்ஷத்திற்கான வழியாக என்ன சொன்னார் என்று சொல்லி தருகிறது..


ஹிந்துவாக பிறப்பதே மகா புண்ணியம்...
போலி மதங்களில் தவறி போனாலும்,
போலி மதங்களில் பிறந்து விட்டாலும், நாராயணா பக்தி அனைவரும் செய்யலாம்.
ஹிந்துவாக வாழ்வதாலேயே நமக்கு பல வாழ்க்கை ரகசியங்கள் தானாக விளங்கி விடும்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஹிந்து வேத தர்மம்.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhya Vandanam - Evening Prayer (with meaning)



Sandhya Vandanam - Afternoon Prayer (with meaning)

Sandhya Vandanam - Morning Prayer (with meaning)