Followers

Search Here...

Showing posts with label வியாசர். Show all posts
Showing posts with label வியாசர். Show all posts

Saturday 7 May 2022

Advice for Today's MLA and MPs. சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில், இன்று இந்தியசட்டத்தின் (சாஸ்திரம்) படி ஆட்சியை வழிநடத்தும் MLA, MPக்களுக்கு (இன்று பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்கள்) சொல்லப்பட்ட அறிவுரை, ஒழுக்கம். அன்று பிராம்மண வர்ணத்தார் எப்படி வாழ்ந்தார்கள்? தெரிந்து கொள்வோம், மஹாபாரதம்.

சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில், இன்று இந்தியசட்டத்தின் (சாஸ்திரம்) படி ஆட்சியை வழிநடத்தும் MLA, MPக்கள் என்ற இன்றைய பிராம்மண வர்ணத்தார் (லௌகீக மற்றும் வைதீக பிராம்மண ஜாதியை இங்கு சொல்லவில்லை) சொல்லப்பட்ட அறிவுரை, ஒழுக்கம். அன்று பிராம்மண வர்ணத்தார் எப்படி வாழ்ந்தார்கள்? தெரிந்து கொள்வோம், மஹாபாரதம்.

பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.

பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.

அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர். 

அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்ட யுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.

நிலத்திற்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும், 

'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்

என்று சொல்லி விட்டார்.

'யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது' என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

அந்த சமயம், 

திரௌபதியும், பிறகு மீண்டும் அர்ஜுனனும், வ்யாசரும் "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினார்கள்.

அப்பொழுது, 

அரசனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தண்ட நீதியை, எப்படி இரண்டு ப்ராம்மணர்கள் மதித்தார்கள்? 

அவர்களுடைய தவவாழ்க்கை எப்படி தூய்மையாக இருந்தது? என்று சொல்லதொடங்கினார்..


अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम् |

शङ्खः च लिखितः चास्तां भ्रातरौ संयत व्रतौ ||

- vyasa mahabharata

புராண காலத்தில் (ஒரு சமயம்), கடுமையான தவசீலர்களான சங்கர் மற்றும் லிகிதர் என்ற  சகோதரர்கள் வாழ்ந்தார்கள்.

तयॊः आवसथाव् आस्तां रमणीयौ पृथक् पृथक् |

नित्यपुष्पफलैः वृक्षैरः उपेतौ बाहुदाम् अनु ||

- vyasa mahabharata

அவர்களுக்கு பாஹுதா என்ற நதிக்கரையில் பூக்களும், பழங்களும் நிறைந்து இருக்கும் இரு ஆஸ்ரமங்கள் தனித்தனியே இருந்தன.

ततः तदाचिल् लिखितः शङ्खस्याश्रमम् आगमत् |

यदृच्छयापि शङ्खॊ ऽथ निष्क्रान्तॊ ऽभवद् आश्रमात् ||

- vyasa mahabharata

ஒரு சமயம் லிகிதர், தன்னுடைய சகோதரர்  சங்கர் ஆஸ்ரமத்துக்கு வந்தார். அப்பொழுது சங்கர் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே சென்று இருந்தார்.

सॊ ऽभिगम्याश्रमं भ्रातुः शङ्खस्य लिखितः तदा |

फलानि शातयाम् आस सम्यक् परिणतान्य उत ||

- vyasa mahabharata

தன்னுடைய சகோதரர்  சங்கர் ஆஸ்ரமத்துக்குள் உலவி கொண்டிருந்த லிகிதர், அங்கு நன்றாக பழுத்திருந்த ஒரு பழத்தை பறித்தார்.

तान्य उपादाय विस्रब्धॊ भक्षयाम् आस स द्विजः  |

तस्मिंश् च भक्षयत्य एव शङ्खॊ ऽपय् आश्रमम्  आगमत् ||

- vyasa mahabharata

அருகில் யாரும் இல்லாத நிலையில், அந்த பழத்தை சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் சமயத்தில், சங்கர்  வந்து விட்டார்.

भक्षयन्तं तु तं दृष्ट्वा शङ्खॊ भ्रातरम अब्रवीत् |

कुतः फलान्य अवाप्तानि हेतुना केन खादसि ||

- vyasa mahabharata

சங்கர், லிகிதரை பார்த்து, "இந்த பழங்கள் எங்கிருந்து கிடைத்தது? ஏன் இதை சாப்பிட்டாய்?" என்று கேட்டார்.

सॊ ऽब्रवीद् भ्रातरं ज्येष्ठम् उपस्पृश्याभिवाद्य च |

इत एव गृहीतानि मयेति प्रहसन्न इव ||

- vyasa mahabharata

தனது சகோதரர் வந்ததை பார்த்த லிகிதர் அருகில் சென்று நமஸ்காரம் செய்தார். "அண்ணா! இங்கிருந்து தான் இந்த பழங்களை எடுத்துக்கொண்டேன்" என்று சகஜமாக சிரித்து கொண்டே சொன்னார்.

तम् अब्रवीत् तदा शङ्खः तीव्रकॊप समन्वितः |

स्तेयं त्वया कृतम् इदं फलान्य आददता स्वयम् |

गच्छ राजानम् आसाद्य स्वकर्म प्रथयस्व वै |

अदत्तादानम् एवेदं कृतं पार्थिव सत्तम |

स्तेनं मां त्वं विदित्वा च स्वधर्मम अनुपालय |

शीघ्रं धारय चौरस्य मम दण्डं नराधिप ||

- vyasa mahabharata

கடுமையான கோபத்துடன் சங்கர் "நீயாகவே பழங்களை எடுத்த காரணத்தால், இந்த காரியம் திருட்டாகும். ஆகையால் நீ அரசனிடம் சென்று 'அரசே! கொடுக்காத பழத்தை எடுத்ததால், நான் திருடனாகிறேன். என்னை திருடன் என்ற ரீதியில் பார்த்து, எனக்கு தகுந்த தண்டனையை வழங்கி, உன் தண்ட நீதியை காப்பாற்று' என்று தெரிவித்து கொள்" என்றார்.

इत्य उक्तस् तस्य वचनात् सुद्युम्नं वसुधाधिपम् |

अभ्यगच्छन् महाबाहॊ लिखितः संशितव्रतः ||

- vyasa mahabharata

வாழ்க்கையை நெறியோடு வாழ விரும்பும் லிகிதர், சகோதரர் சொன்னது தர்மமே என்று ஏற்று, அப்பொழுது தர்மப்படி அரசாட்சி செய்து கொண்டிருந்த ஸுத்யும்னரிடம் சென்றார்.

सुद्युम्नः त्वान्त पालैभ्यः श्रुत्वा लिखितम् आगतम् |

अभ्यगच्छत् सहामात्यः पद्भ्याम एव नरेश्वरः ||

- vyasa mahabharata

காவலாளி மூலமாக லிகிதர் வந்திருப்பதை அறிந்த அரசர், தானே நடந்து வந்து எதிர்கொண்டு வரவேற்றார்.

तम् अब्रवीत् समागत्य स राजा ब्रह्म वित्तमम् |

किम् आगमनम् आचक्ष्व भगवन् कृतम् एव तत्  ||

- vyasa mahabharata

லிகிதரை பார்த்து, "பகவன்! நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்று சொல்ல வேண்டும். உடனே மறுக்காமல் செய்கிறேன்" என்று அரசர் சொன்னார்.

एवम् उक्तः स विप्रर्षिः सुद्युम्नम् इदम् अब्रवीत् |

प्रतिश्रौषि करिष्येति श्रुत्वा तत कर्तुम् अर्हसि |

अनिसृष्टानि गुरुणा फलानि पुरुषर्षभ |

भक्षितानि मया राजं तत्र मां शाधि माचिरम् ||

- vyasa mahabharata

உடனே ஸுத்யும்னரை பார்த்து, "மகாராஜன்! சகோதரர் கொடுக்காத பழத்தை, நானே எடுத்து சாப்பிட்டு விட்டேன். அந்த குற்றத்துக்காக என்னை தாமதமின்றி தண்டிக்க வேண்டும்" என்றார்.

प्रमाणं चेन मतॊ राजा भवतॊ दण्डधारणे |

अनुज्ञायाम् अपि तथा हेतुः स्याद् ब्राह्मणर्षभ |

स भवान् अभ्यनुज्ञातः शुचि कर्मा महाव्रतः |

ब्रूहि कामान् अतॊ ऽन्यांस तवं करिष्यामि हि ते वचः ||

- vyasa mahabharata

இதை கேட்ட அரசர் ஸுத்யும்னர், "ப்ராம்மணர்களில் உத்தமரே! ஒருவனுக்கு 'தண்டனை விதிப்பது அரசன்  கடமை' என்பது உண்மையே என்றாலும்,  'அனுமதி கொடுப்பதும்' அரசனுக்கு உரியதே! ஆகையால், கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கும் நீங்கள் குற்றமற்றவர் என்று அனுமதி அளிக்கிறேன். ஆகையால், நீங்கள் வேண்டியதை கேளுங்கள். நான் உங்கள் இஷ்டம் போல செய்கிறேன்" என்றார்.

छन्द्यमानॊ ऽपि ब्रह्मर्षिः पार्थिवेन महात्मना |

नान्यं वै वरयाम् आस तस्माद् दण्डाद् ऋते वरम्  |

ततः स पृथिवीपालॊ लिखितस्य महात्मनः |

करौ प्रच्छेदयाम् आस धृतदण्डॊ जगाम सः ||

- vyasa mahabharata

இப்படி மஹாத்மாவான அரசர் சொல்லியும், தனக்கு 'தண்டனையை தவிர வேறு ஏதும் வேண்டாம்' என்று சொல்லிவிட்டார் லிகிதர்.

இப்படி சொன்னதால், உலகில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய அரசனாக இருந்து, திருட்டுத்தனத்துக்கு உரிய தண்டனையாக லிகிதரின் இரு கையையும் வெட்டி தண்டனை கொடுத்து விட்டார்.

स गत्वा भ्रातरं शङ्खम् आर्तरूपॊ ऽब्रवीद् इदम् |

धृतदण्डस्य दुर्भुद्धे: भगवन् क्षन्तुम अर्हसि ||

- vyasa mahabharata

கை அறுபட்ட நிலையில், தன் சகோதரரான சங்கரை பார்க்க சென்றார். அவரிடம் 'எனது குற்றத்துக்காக தண்டனை பெற்றேன். என் புத்தி குறைவை நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

न कुप्ये तव धर्मज्ञ न च दूषयसे मम |

धर्मॊ तु ते व्यतिक्रान्तः ततः ते निष्कृतिः कृता |

स गत्वा बाहुदां शीघ्रं तर्पयस्व यथाविधि |

देवान् पितॄन ऋषींश् चैव मा चाधर्मे मनॊ कृथाः ||

- vyasa mahabharata

சங்கர் "தர்மம் தெரிந்தவனே! உன்னிடத்தில் எனக்கு ஒரு கோபமும் இல்லை. நீ ஒரு குற்றமும் இப்பொழுது செய்யவில்லை. நீ தர்மத்தை மீறியதால், அந்த குற்றத்துக்கு ப்ராயச்சித்தம் தேவைப்பட்டது. நீ உடனேயே பாஹுதை என்ற நதிக்கரைக்கு சென்று, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்மப்படி தர்ப்பணம் செய். இனி அதர்மத்தில் மனதை செலுத்தாதே!" என்றார்.

तस्य तद् वचनं श्रुत्वा शङ्खस्य लिखितः तदा |

अवगाह्यापगां पुण्याम् उदकार्धं प्रचक्रमे |

प्रादुरास्तां ततः तस्य करौ जलज संनिभौ |

ततः स विस्मितॊ भ्रातुः दर्शयाम आस तौ करौ ||

- vyasa mahabharata

இவ்வாறு சங்கர் சொன்னதும், அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, லிகிதர் அந்த நதியில் சென்று நீராடி, தர்ப்பணம் செய்ய இறங்கினார்.

அப்பொழுது, தண்ணீரில் தாமரை மலர்வது போல, அவரின் இரு கைகளும் உண்டாகி விட்டன.

ततः तम् अब्रवीच छङ्खः तपसेदं कृतं मया |

मा च ते ऽत्र वि शङ्का भूद् दैवम् एव विधीयते ||

- vyasa mahabharata

உடனே சங்கர், "இது என் தபோ பலத்தால் செய்யப்பட்டது. உனக்கு சந்தேகம் வேண்டாம். அதிருஷ்டம் (விதி) இப்படியாக உள்ளது" என்றார்.

किं नु नाहं त्वया पूतः पूर्वम् एव महाद्युते |

यस्य ते तपसॊ वीर्यम् ईदृशं द्विजसत्तम ||

- vyasa mahabharata

உடனே லிகிதர், "மஹா தேஜஸ்வியே ! உமது தவத்துக்கு இப்படி ஒரு சக்தி இருக்குமானால், என்னை அப்பொழுதே பரிசுத்தமாக ஆக்கி இருக்கலாமே?" என்று கேட்டார்.

एवम् एतन् मया कार्यं नाहं दण्डधरस तव |

स च पूतॊ नरपतिः त्वं चापि पितृभिः सह ||

- vyasa mahabharata

சங்கர், "என்னால் உன்னை சுத்தனாக ஆக்கி இருக்கமுடியும் என்றாலும்,  தண்டனை தரும் அதிகாரம் எனக்கு இல்லையே. மக்களின்  அரசனுக்கு  தானே பாவத்திற்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தண்டனை கொடுத்ததால், அந்த அரசரும் தன்னுடைய தண்ட நீதியை காப்பாற்றினார். செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றதால், நீயும் பரிசுத்தமானாய்." என்று சொன்னார்.

स राजा पाण्डवश्रेष्ठ श्रेष्ठॊ वै तेन कर्मणा |

प्राप्तवान परमां सिद्धिं दक्षः प्राचेतसॊ यथा ||

- vyasa mahabharata

பாண்டவர்களில் உத்தமனே! அந்த உத்தம அரசரான ஸுத்யும்னர் தண்ட நீதியை பரிபாலனம் செய்ததால், ப்ராசேதஸ், தக்ஷனை போல  உயர்வான ஸித்தி பெற்றார்.

एष धर्मः क्षत्रियाणां प्रजानां परिपालनम् |

उत्पथे ऽस्मिन् महाराज मा च शॊके मनॊ कृथाः ||

- vyasa mahabharata

"மக்கள் தீய வழியில் செல்லாமல் பாதுகாப்பது" அரசனின் பெரிய தர்மமாகும்.

மகாராஜன்! சோகத்தை மனதில் அனுமதிக்காதீர்.

भ्रातुः अस्य हितं वाक्यं शृणु धर्मज्ञ सत्तम |

दण्ड एव हि राजेन्द्र क्षत्रधर्मॊ न मुण्डन ||

- vyasa mahabharata

தர்மம் தெரிந்த உத்தமனே!  உனது தம்பியான அர்ஜுனன் சொன்ன "தண்டநீதியை" கேள். தர்மத்தை காக்க அரசாட்சி செலுத்துவதே, க்ஷத்ரிய அரசனின் தர்மம் (கடமை). சந்யாசிகளுக்கு உரியது சந்நியாச தர்மம். சந்நியாச தர்மம் க்ஷத்ரியனான உனது தர்மம் அன்று" என்று கூறினார்.

Friday 6 May 2022

ப்ராம்மணத்துவம் அடைவது எப்படி? க்ஷத்ரியத்துவம் அடைவது எப்படி? வியாசர் பதில் சொல்கிறார்.

"ப்ராம்மணத்துவம் அடைய" என்ன வேண்டும்?

"க்ஷத்ரியத்துவம் அடைய" என்ன வேண்டும்?

பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.

பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.


அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர்

அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்ட யுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.


நிலத்திற்க்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும், 

'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்

என்று சொல்லி விட்டார்.


யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

அந்த சமயம், திரௌபதியும், "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினாள். 

இப்படி பலர் சொன்ன பிறகு, வியாசர் யுதிஷ்டிரரிடம் உபதேஸிக்கிறார்.

तपॊ यज्ञ: तथा विद्या भैक्षम् इन्द्रिय निग्रहः |

ध्यानम् एकान्तशीलत्वं तुष्टिर दानं च शक्तितः |

ब्राह्मणानां महाराज चेष्टाः संसिद्धि कारिकाः ||

- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)

மஹாராஜனே! தவம், யக்ஞம், ஆத்மாவை பற்றிய அறிவு, உயிர் தக்க வைக்க பிக்ஷை வாழ்க்கை, புலன் அடக்கம், தியானம், தனிமையை விரும்புவது, ஆத்ம சுகத்தில் இருப்பது, கிடைத்ததில் திருப்தி, தன் சக்திக்கு தகுந்த தானம் செய்வது,

இந்த தர்மங்கள்  அனைத்தும், ப்ராம்மணர்களுக்கு ப்ராம்மணத்துவம் 'ஸித்தி' அடைவதற்காக விதிக்கப்பட்டவை. 


क्षत्रियाणां च वक्ष्यामि तवापि विदितं पुनः |

यज्ञॊ विद्या समुत्थानम् असंतॊषः श्रियं प्रति |

दण्डधारणम् अत्युग्रं प्रजानां परिपालनम् |

वेद  ज्ञानं तथा कृत्स्नं तपॊ सुचरितं तथा |

द्रविणॊपार्जनं भूरि पात्रेषु प्रतिपादनम् |

एतानि राज्ञां कर्माणि सुकृतानि विशां पते |

इमं लॊकम् अमुं लॊकं साधयन्तीति नः श्रुतम ||

- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)

க்ஷத்ரியர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம் உனக்கு தெரிந்தாலும், மீண்டும் சொல்கிறேன்.

யாகம் செய்வதிலும், உலகம் மற்றும் ஆத்மா பற்றிய அறிவு, பொருள் சேர்ப்பதில் திருப்தி இல்லாமலும், புகழில் ஆசையும், ஆட்சியில் பாராபட்சம் இல்லாமல் தண்ட நீதியோடு நிர்வாகமும், அனைத்து உயிர்களையும் காப்பதும், வேதனையை அறிவதும், தவமும், ஒழுக்கமான தனிமனித வாழ்க்கையும், பொருள் ஈட்டுவதில் திறனும், அந்த பொருளை நல்ல தர்மங்களுக்கு கொடுப்பதும், அரசர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம்.

இப்படி க்ஷத்திரியன் க்ஷத்ரியத்துவம் அடையும் போது, இவ்வுலகில் மட்டுமல்ல, மேல் உலகிலும் புகழோடு இருப்பான்.

Sunday 27 February 2022

பெண்களிடம் உள்ள தோஷங்கள் என்ன? தெரிந்து கொள்வோம்

பெண்களிடம் உள்ள தோஷங்கள் என்ன? 

"பரத ஸ்ரேஷ்டரே ! பெண்களின் ஸ்வபாவம் பற்றி அறிய விரும்புகிறேன்.

பெண்கள் தான் பாவங்களுக்கு வேர், அவர்களின் மனமும் சலனமுள்ளது சொல்லப்படுகின்றதே!"

என்று யுதிஷ்டிரர் கேட்டார்.

(स्त्रीणां स्भावम् इच्छामि श्रॊतुं भरतसत्तम | स्त्रियो हि मूलं दॊषाणां लघु चित्ताः पितामह || வியாசர் மஹாபாரதம்)


பீஷ்மர் பேசலானார்.

இந்த விஷயம் சம்பந்தமாக நாரதரும், பஞ்சசூடை என்னும் தேவலோக அப்சரஸும் பேசிக்கொண்ட சம்பாஷணை பற்றி ஒரு புராண இதிகாசம் சொல்கிறது.


முற்காலத்தில், தேவரிஷியான நாரதர் லோகங்கள் எல்லாவற்றிலும் சஞ்சரித்து கொண்டிருக்கும் போது, ப்ரம்ம லோகத்தில் இருக்கும் பஞ்சசூடை என்னும் சிறந்த அப்சரஸை கண்டார்.


அங்கமெல்லாம அழகுடைய இவளை பார்த்த நாரதர்,

"அழகிய இடையுள்ளவளே! என் மனதில் ஒரு சந்தேகம் உள்ளது.

அதை பற்றி நீ விளக்க வேண்டும்" என்றார்.


நாரதரை பார்த்து, 

"நீங்கள் கேட்கும் விஷயம் எனக்கு தெரிந்தால், அதை பற்றி நான் சொல்ல தகுதியானவள் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக சொல்கிறேன்" என்றாள்.


நாரதர், "சிறந்தவளே! உனக்கு தெரியாத விஷயத்தை பற்றி உன்னிடம் எவ்வகையிலும் கேட்க மாட்டேன். பெண்களிடம் உள்ள தோஷத்தை பற்றி உன்னிடம் கேட்க விரும்புகிறேன்" என்றார்.

அப்சரஸ், "ஓ தேவ ரிஷி! நான் பெண்ணாக இருந்து கொண்டே பெண்களை தூஷிக்க மாட்டேன். பெண்கள் எவர்கள் என்பதும், எப்படிப்பட்ட இயற்கை உள்ளவர்கள் என்பதும் உமக்கு தெரிந்தவை தானே. இவ்வகையான காரியத்தில் என்னை நீங்கள் ஏவ கூடாது" என்றாள்.


தேவரிஷி, 

"உண்மையை சொல். பொய் சொல்வதால் பாபம் உண்டாகும். உண்மையை சொல்வதில் தோஷமில்லையே" என்று கூறினர்.

(ताम् उवाच स देवर्षिः सत्यं वद सुमध्यमे |मृषावादे भवेद् दॊषः सत्ये दॊषॊ न विद्यते ||வியாசர் மஹாபாரதம்)


இப்படி சொன்னதும், சிரித்து கொண்ட அந்த அப்சரஸ்,

பெண்களிடம் உள்ள தோஷங்களை சொல்ல தொடங்கினாள்

"நாரதரே! நல்ல குலத்தில் பிறந்து, மிகுந்த அழகு உள்ளவளாக இருந்தாலும், சிறந்த கணவனே அமைந்தாலும், பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீற விரும்புகிறார்கள்.

இது ஸ்த்ரீகளுக்கு உள்ள தோஷம் (stain).

(कुलीना रूपवत्यश च नाथवत्यश च यॊषितः |  मर्यादासु न तिष्ठन्ति स दॊषः सत्रीषु नारद || வியாசர் மஹாபாரதம்)


ஸ்த்ரீகளை பார்ப்பதை காட்டிலும் பாபம் ஒன்று கிடையாது.

பாபத்துக்கு வேர் போல ஸ்த்ரீகளே இருக்கிறார்கள்.

அது உமக்கு தெரியுமே!

(न सत्रीभ्यः किंचिद् अन्यद वै पापीयस्तरम् अस्ति वै | सत्रियॊ हि मूलं दॊषाणां तथा तवम् अपि वेत्थ ह || வியாசர் மஹாபாரதம்)

ஒரு பெண்ணுக்கு, புகழும் செல்வமும், அழகும், அவள் சொல் பேச்சை கேட்கும் கணவனே அமைந்தாலும், சமயம் கிடைத்தால், அவர்களை விட்டு விட்டு விலகவும் துணிவார்கள்.

(समाज्ञातान ऋद्धिमतः प्रतिरूपान वशे स्थितान् | पतीन् अन्तरम् आसाद्य नालं नार्यः प्रतीक्षितुम || வியாசர் மஹாபாரதம்)


பிரபுவே! அடக்கத்தை விட்டுவிட்டு, பாவப் பழக்கங்கள், தீய நோக்கங்களைக் கொண்ட ஆண்களிடமும் தோழமையை (friendship) வளர்த்து கொள்கிறார்கள்.

பெண்களாகிய எங்களிடத்தில் இருக்கும் பெரிய அதர்மம் இது.

(असद् धर्मस तव अयं सत्रीणाम् अस्माकं भवति परभॊ | पापीयसॊ नरान् यद् वै लज्जां त्यक्त्वा भजामहे || வியாசர் மஹாபாரதம்)


எவன் தம்மை வேண்டி, அருகில் பழகி, சிறிது உபசாரம் செய்தாலும், அவனை பெண்கள் விரும்பி விடுகின்றனர்.

(स्त्रियं हि यः परार्थयते संनिकर्षं च गच्छति |  ईष: च कुरुते सेवां तम् एवेच्छन्ति यॊषितः || வியாசர் மஹாபாரதம்)


மற்றவர்களின் விருப்பு, வெறுப்பை நினைத்து, சுற்றி இருக்கும் ஜனங்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தினால் மட்டுமே ஸ்வபாவத்தில் கட்டுப்பாடை விரும்பாத பெண்கள், கணவர்களுக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்.

(अनर्थित्वान् मनुष्याणां भयात् परिजनस्य च | मर्यादायाम् अमर्यादाः सत्रियस तिष्ठन्ति भर्तृषु ||  வியாசர் மஹாபாரதம்)


தனக்கு வேண்டியதை எப்படியாவது சாதித்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். தனக்கு பிடித்து விட்டால், எந்த வயது ஆணையும் விரும்புவார்கள்.

(नासां कश्चिद् अगम्यॊ ऽसति नासां वयसि संस्थितिः| வியாசர் மஹாபாரதம்)


அழகில்லாதவனோ,  அழகுள்ளவனோ, ஆண் என்பதாலேயே பழக ஆசைப்படுவார்கள்.

(विरूपं रूपवन्तं वा पुमान् इत्य एव भुञ्जते | வியாசர் மஹாபாரதம்)


இப்படி பல ஆண்களிடம் பேசும் பெண்கள், பாபத்தை கண்டு பயந்தோ, இரக்கத்தினாலோ, பொருளுக்காகவோ, சுற்றத்தார் குழந்தைகள் பாசத்தாலோ, குலத்திற்காகவோ கணவர்களிடம் கட்டுப்படுவதில்லை.

(न भयान् नाप्य अनुक्रॊशान् नार्थहेतॊः कथं चन | न जाति कुल संबन्धात् स्त्रियस तिष्ठन्ति भर्तृषु || வியாசர் மஹாபாரதம்)


கட்டுப்பாடுள்ள நல்ல குலத்தில் பிறந்த பெண்களும், இளமை, அழகு, ஆபரணங்களோடும், ஆடைகளோடும் சுதந்திரமாக இருக்கும் மற்ற பெண்களை பார்த்து, தாங்களும் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகின்றனர்.

(यौवने वर्तमानानां मृष्टाभरण वाससाम् | नारीणां सवैरवृत्तानां स्पृहयन्ति कुलस्त्रियः || வியாசர் மஹாபாரதம்)


தன்னை விரும்பும் கணவன் கிடைத்தும், கௌரவமாக நடத்தும் கணவன் கிடைத்தும், கூனன், குருடன், முட்டாள், குள்ளனுக்கு கூட பெண்கள் தங்களின் அனுகூலங்களை வழங்குவதைக் காணலாம்.

(याश च शश्वद् बहुमता रक्ष्यन्ते दयिताः स्त्रियः | अपि ताः संप्रसज्जन्ते कुब्जान्ध जड वामनैः || வியாசர் மஹாபாரதம்)


தேவரிஷி! மஹரிஷி! 

இவ்வுலகத்தில் திறமையே இல்லாத ஆண்களின் தோழமையை, அசிங்கமான ஆண்களின் தோழமையை கூட பெண்கள் விரும்புவதைக் காணலாம்

(पङ्गुष्व अपि च देवर्षे ये चान्ये कुत्सिता नराः | स्त्रीणाम् अगम्यॊ लॊके ऽसमिन् नास्ति कश्चिन महामुने || வியாசர் மஹாபாரதம்)


ப்ராம்மணரே! 

பெண்கள் தன்னிடம் பழக தகுதியற்ற ஆண் இவன் (வேறு ஜாதி, வேறு மதம், ரௌடி, கேடி, குடிகாரனாக இருந்தாலும்) என்று யாரையும் நினைப்பதில்லை.

(यदि पुंसां गतिर् ब्रह्म कथं चिन् नॊपपद्यते |अप्य अन्यॊन्यं परवर्तन्ते न हि तिष्ठन्ति भर्तृषु || வியாசர் மஹாபாரதம்)



மற்ற ஆண்களிடம் பழக முடியாதபட்சத்தில், உறவினர்களின் பேச்சுக்கு பயந்து, தண்டனைக்கு பயந்து, பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் தங்களைத் தாங்களே வைத்திருக்கிறார்கள்.

(अलाभात पुरुषाणं हि भयात् परिजनस्य च | वधबन्धभयाच चापि स्वयं गुप्ता भवन्ति ताः || வியாசர் மஹாபாரதம்)


சஞ்சலமான மனம் உள்ளவர்கள் பெண்கள். புது உறவுகளை தேடுவதில் ஆர்வம் உள்ளவர்கள். 

அவர்களின் இயல்பு புரிந்துகொள்ள முடியாதது, அன்பினால் மட்டும் அவர்களை கீழ்ப்படிய வைக்க இயலாது.

(चल सवभावा दुःसेव्या दुर्ग्राह्या भावत: तथा | पराज्ञस्य पुरुषस्येह यथा वाचस तथा सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


அக்னி விறகுகளால் திருப்தி அடைவதில்லை.

கடல் எத்தனை நதிகளின் நீர் சேர்ந்தாலும் நிரம்புவதில்லை.

யமன் உலகில் உள்ள சர்வ உயிர்களை அழித்தாலும், திருப்தி கொள்வதில்லை.

பெண்களும் புருஷர்களால் நிரம்புவதில்லை.

(नाग्निस तृप्यति काष्टाहां नापगानां महॊदधिः | नान्तकः सर्वभूतानां न पुंसां वामलॊचनाः || வியாசர் மஹாபாரதம்)

 

தேவரிஷி! இன்னொரு மர்மமும் பெண்களிடம் உள்ளது. அழகான மற்றும் வசீகரமான குணநலன்களைக் கொண்ட ஒரு ஆணை கண்டவுடன், பெண்களிடம் மாறாத ஆசையின் அறிகுறிகள் தோன்றும்.

(इदम् अन्यच च देवर्षे रहस्यं सर्वयॊषिताम् | दृष्ट्वैव पुरुषं हृद्यं यॊनिः परक्लिद्यते सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


மனைவி விரும்பியது அனைத்தையும் பூர்த்தி செய்து, மனைவி விருப்பப்பட்ட விஷயங்களையே செய்து, நல்ல காலம், கெட்ட காலம் இரண்டிலும் பார்த்து பார்த்து காப்பாற்றும் கணவனை கூட, பெண்கள் போதிய மரியாதை கொடுப்பதில்லை.

(कामानाम अपि दातारं कर्तारं मानसान्त्वयॊः | रक्षितारं न मृष्यन्ति भर्तारं परमं सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


தனக்கு பிடித்த ஒரு ஆண் அருகில் இருந்தால், பெண்கள் எல்லையில்லாமல் கிடைக்கும் பிற சௌக்கியத்தையும், அலங்காரத்தையும், கூட தூக்கி எறிய துணிவார்கள்.

(न कामभॊगान् बहुलान् नालंकारार्थ संचयान् |  तथैव बहु मन्यन्ते यथा रत्याम अनुग्रहम् || வியாசர் மஹாபாரதம்)


குலநாசம் செய்யும் குணம், அலையும் மனம், உயிரை பறிக்கும் திறன், அடங்காத அக்னி போன்ற கோப பேச்சு, கூர்மையான வெட்டும் கத்தி போன்று உறவை வெட்டும் குணம், கொடுமையான விஷம், கருநாகம், தீ இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்தவள் பெண்.

(अन्तकः शमनॊ मृत्युः पातालं वडवामुखम | कषुर धारा विषं सर्पॊ वह्निर इत्य एकतः सत्रियः || வியாசர் மஹாபாரதம்)


நாரதரே! 5 மஹா பூதங்களும், உலகங்களும், ஆண் பெண்களும் எதிலிருந்து ப்ரம்மாவினால் படைக்கப்பட்டனரோ! அந்த மூல காரணத்திலிருந்தே பெண்களின் குற்றங்களும் படைக்கப்பட்டு இருக்கின்றன." என்றாள்.

(यत: च भूतानि महान्ति पञ्च; यत: च लॊका विहिता विधात्रा | यतः पुमांसः परमदाश च निर्मितस; तदैव दॊषाः परमदासु नारद || வியாசர் மஹாபாரதம்)