Followers

Search Here...

Showing posts with label மஹாபாரதம். Show all posts
Showing posts with label மஹாபாரதம். Show all posts

Sunday 21 January 2024

மஹாபாரதம் (கேள்வி 2) - நான்கு யுகங்களில் உள்ள மனிதர்களை பற்றி பீமனுக்கு சொன்னது யார்? என்ன சொன்னார்?

நான்கு யுகங்களை பற்றி பீமனுக்கு யார் சொன்னார்?

பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்.

காற்றில் ஒரு சமயம் சௌகந்திக மலர் ஒன்று திரௌபதி அருகில் வந்து விழுந்தது.

அது போல மேலும் பல மலர்கள் வேண்டும் என்று பீமனிடம் கேட்டாள்.

பீமன் அந்த மலரை தேடி கொண்டு கிளம்பினான். போகும் வழியில், ஹனுமானை கண்டான்.

ஹனுமானிடம் இலங்கையை தாண்டுவதற்காக பெரிய ரூபத்தை எடுத்து கொண்ட காட்சியை தனக்கு காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்.


एवमुक्तः स तेजस्वी प्रहस्य हरिरब्रवीत् - Aranya kAndam (Vyasa Mahabharata)

இதை கேட்டு ஹனுமான் புன்முறுவல் செய்தார்.


न तच्छक्यं त्वया द्रष्टुं रूपं नान्येन केनचित्।
कालावस्था तदा ह्यन्या वर्तते सा न सांप्रतम्।
ततोऽद्य दुष्करं द्रष्टुं मम रूपं नरोत्तम ।।

अन्यः कृतयुगे कालश्रेतायां द्वापरे परः।
अयं प्रध्वंसनः कालो नाद्य तद्रूपमस्ति मे ।।

பீமனை பார்த்து, "அந்த உருவம் உன்னாலும் மற்றவர்களாலும் இப்போது பார்க்க இயலாது. க்ருத யுக காலம் வேறு. த்ரேதா யுக காலம் வேறு. துவாபர யுக காலம் வேறு.

அடுத்த அடுத்த காலங்களில் சக்திகள் குறைகிறது.

அந்த ரூபத்தில் நானும் இப்போது இல்லை.


भूमिर्नद्यो नगाः शैलाः सिद्धा देवा महर्षयः।
कालं समनुवर्तन्ते यथा भावा युगेयुगे ।। 

कालंकालं समासाद्य नराणां नरपुङ्गव।
बलवर्ष्मप्रभावा हि प्रहीयन्त्युद्भवन्ति च ।।

तदलं बत तद्रूपं द्रष्टुं कुरुकुलोद्वह।
युगं समनुवर्तामि कालो हि दुरतिक्रमः ।।

யுகங்கள் அதனதன் சக்திக்கு ஏற்று நடப்பது போல, இந்த பூமியும், நதிகளும், மரங்களும், மலைகளும், சித்தர்களும், தேவர்களும், ரிஷிகளும் காலத்தை ஏற்று அனுசரித்து நடக்கிறார்கள்.

மனிதர்களுடைய தேக பலமும் யுகம் செல்ல செல்ல குறைகிறது. முந்திய யுகங்களில் தேக பலம் அதிகமாக இருக்கிறது.

காலத்தை அனுசரித்து நான் இருப்பதால், நீயும் அந்த ரூபத்தை பார்க்க ஆசைப்பட வேண்டாம். காலத்தை மீறி நாம் இருக்க கூடாதல்லவா?"

என்றார் ஹனுமான்.


युगसङ्ख्यां समाचक्ष्व आचारं च युगेयुगे।
धर्मकामार्थभावांश्च कर्मवीर्ये भवाभवौ ।।

"யுகங்களின் கால அளவை அந்த யுகங்களில் இருந்த ஆசாரங்களை, அறம் பொருள் இன்பம் போன்றவைகளின் உண்மையான அர்த்தத்தை, பாவம் புண்ணியம் பற்றியும், ஆற்றலையும், பிறப்பையும், இறப்பையும் பற்றி எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும்"

என்று கேட்டான் பீமன். 


कृतं नाम युगं श्रेष्ठं यत्रधर्मः सनातनः।
कृतमेव न कर्तव्यं तस्मिन्काले युगोत्तमे ।। 

न तत्र धर्माः सीदन्ति क्षीयन्ते न च वै प्रजाः।
ततः कृतयुगं नाम कालेन गुणतां गतम् ।।

ஹனுமான், பீமனை பார்த்து,

"க்ருத யுகத்தில் தர்மம் (அறம்) நிலையாக இருந்தது. அந்த யுகத்தில் நல்ல தர்மங்களே (அறமே) செய்யப்பட்டது. அதர்மமாக (அறமில்லாமல்) காரியங்கள் செய்யப்படவில்லை. அந்த யுகத்தில் தர்மம் (அறம்) வாடவே இல்லை. மக்களும் குறையாமல் இருந்தனர். இதனாலேயே இந்த யுகம் க்ருத யுகம் என்று அழைக்கப்பட்டது.


देव दानव गन्धर्व यक्ष राक्षस पन्नगाः।
नासन्कृतयुगे तात तदा न क्रयविक्रयः ।।
न सामऋग्यजुर्वर्णाः क्रिया नासीच्च मानवी।
अभिध्याय फलं तत्र धर्मः संन्यास एव च ।।
न तस्मिन्युगसंसर्गे व्याधयो नेन्द्रियक्षयः।
नासूया नापि रुदितं न दर्पो नापि वैकृतम् ।। 

க்ருத யுக சமயத்தில், தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், பன்னகர்களும் இந்த பூமியில் இருக்கவில்லை. 

அந்த யுகத்தில், வாங்குவது-விற்பது என்ற காரியங்கள் இல்லை.

ருக், யஜு ஸாம என்று தனித்து இல்லாத காலம் அது.. மனிதர்களுக்கு உழைக்க அவசியமும் இல்லை. 

அந்த யுகத்தில் நினைத்த மாத்திரத்தில் அனைத்தும் கிடைத்தது. 

அனைவருக்கும் ஸந்யாஸமே (மோக்ஷ எண்ணமே) இருந்தது.

அந்த யுகத்தில் நோய் யாருக்குமே இல்லை.

அந்த யுகத்தில் புலன்கள் தன் சக்தியை இழப்பதே இல்லை.

அந்த யுகத்தில் யாருமே மற்றவரின் நல்ல குணத்தை பார்த்து அஸூயை படாமல் இருந்தனர்.

அந்த யுகத்தில் யாரும் அழுவதில்லை. யாருக்கும் தன்னை பற்றி அகங்காரம் இல்லை. யாரும் கபடம் செய்வதில்லை. 


न विग्रहः कुतस्तन्द्री न द्वेषो न च पैशुनम्।
न भयं नापि संतापो न चेर्ष्या न च मत्सरः ।।

யாரும் சண்டை இடுவதும் இல்லை.

அந்த யுகத்தில் யாருக்கும் சோம்பல் கிடையாது. யாரிடமும் விரோதமும் கிடையாது. யாருமே மற்றவரை கோள் சொல்வதும் கிடையாது. 

எதை நினைத்தும் பயமும் கிடையாது. 

கிடைக்கவில்லையே என்ற தாபமும் யாருக்கும் கிடையாது. பொறாமையும் கிடையாது. 

யாருக்கும் மற்றவரை கண்டு எரிச்சலும் இல்லை. 


ततः परमकं ब्रह्म सा गतिर्योगिनां परा।
आत्मा च सर्वभूतानां शुक्लो नारायणस्तदा ।। 

அப்படிப்பட்ட க்ருத யுகத்தில், 

எவர் யோகிகளுக்கு கதியாக இருக்கிறாரோ, எவர் அனைத்து உயிருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறாரோ, எவர் பரமானந்தத்துடனேயே இருக்கிறாரோ, அந்த பரம ஸ்வரூபியான நாராயணன், க்ருத யுகத்தில் "வெண்மையாக" இருந்தார்.


ब्राह्मणआः क्षत्रिया वैश्याः शूद्राश्च कृतलक्षणाः।
कृते युगे समभवन्स्वकर्मनिरताः प्रजाः ।।

समाश्रयं समाचारं समज्ञानं च केवलम्।
तदा हि समकर्माणो वर्णा धर्मानवाप्नुवन् ।।

க்ருத யுகத்தில் இருந்த க்ஷத்ரியர்கள் (army,police), பிராம்மணர்கள் (vedic scholars with 6 duties), வைசியர்கள் (employer), சூத்திரர்கள் (employee) அவர்களுடைய இயற்கையான குணத்தில் கலப்படம் இல்லாமல் இருந்தனர். தங்கள் கடமையை பற்றுடன் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த க்ருத யுகத்தில் இருந்த நான்கு வர்ணத்து மக்களும், 

பிரம்மத்தை அடைவதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த பிரம்மத்தை அடைவதற்காக ஒழுக்கத்தோடு எப்பொழுதுமே இருந்தார்கள்.

பிரம்மத்தை பற்றிய அறிவும் கொண்டிருந்த இவர்கள் அதற்கான காரியங்களே செய்து கொண்டிருந்தார்கள். பிரம்மத்தை அடையும் தகுதியோடு இருந்தார்கள்.


एकदेवसदायुक्ता एकमन्त्रविधिक्रियाः।
पृथग्धर्मास्त्वेकवेदा धर्ममेकमनुव्रताः ।। 

வர்ணத்தை (குணத்தை) பொறுத்து, வெவ்வேறு தர்மங்களோடு வாழ்ந்தாலும், பிரம்மத்தை மட்டுமே அனைவரும் தியானித்தார்.

அனைவரும் ஓம் என்ற ப்ரணவத்தையே ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒன்றாக இருந்த வேதத்தையே ப்ரமாணமாக கொண்டு வாழ்ந்தார்கள். 

தர்மத்திலேயே அனைவரும் வாழ்ந்தார்கள்


चातुराश्रम्य युक्तेन कर्मणा कालयोगिना।
अकामफल संयोगात्प्राप्नुवन्ति परां गतिम् ।।

செய்யும் காரியத்தில் பலனை எதிர்பார்க்காமல், தன் காரியங்களை ஈடுபாட்டுடன் செய்து கொண்டே, 4 வரணத்து மக்களும் உத்தம கதியை அடைந்தார்கள்.


आत्मयोग समायुक्तो धर्मोऽयं कृतलक्षणः।
कृते युगे चतुष्पादश्चातुर्वर्ण्यस्य शाश्वतः ।।

ஆத்மாவை ப்ரம்மத்துடனேயே இணைத்து கொண்டு, 4 வரணத்து மக்களும் வாழ்ந்தார்கள். 

தவம் (மன அடக்கம்), சௌசம் (தூய்மையான நடத்தை), தயை (இரக்கம்), உண்மை (சத்யம்) என்ற நான்கு தர்மமும் இந்த மக்களால் காக்கப்பட்டது இந்த க்ருத யுகத்தில்.


कामः कामयमानेषु ब्राह्मणेषु तिरोहितः'।
एतत्कृतयुगं नाम त्रैगुण्यपरिवर्जितम् ।। 

மோக்ஷமே குறிக்கோள் என்று வாழ்ந்த இந்த மக்களால், அறம் பொருள் இன்பம் என்பதில் இன்பம் என்ற காமம் நசிந்து கிடந்தது.

ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணமும் இல்லாத யுகமாக க்ருத யுகம் இருந்தது.


त्रेतामपि निबोध त्वं यस्मन्सत्रं प्रवर्तते।
पादेन ह्रसते धर्मो रक्ततां याति चाच्युतः ।।

த்ரேதா யுகத்தை பற்றியும் சொல்கிறேன் கேள்…

த்ரேதா யுகத்தில், யாகங்கள் நிரம்ப செய்யப்பட்டது.

த்ரேதா யுகத்தில் தர்மத்தின் ஒரு கால் குறைந்தது.

இந்த த்ரேதா யுகத்தில் அச்சுதனான நாராயணன் "சிவப்பு" நிறத்தில் இருந்தார்.


सत्यप्रवृत्ताश्च नराः क्रिया धर्मपरायणाः।
ततो यज्ञाः प्रवर्तन्ते धर्माश्चविविधाः क्रियाः ।।

த்ரேதா யுகத்தில் அனைவரும் சத்தியத்தில் திட சித்தத்தோடு இருந்தார்கள்.

தர்ம காரியங்களில் ஈடுபட்டார்கள்.

பல வித யாகங்கள், பல வித தர்மங்கள், பல வித கிரியைகள் செய்தனர்.


त्रेतायां भावसंकल्पाः क्रियादानफलोपगाः।
प्रचलन्ति न वै धर्मात्तपोदानपरायणाः।

स्वधर्मस्थाः क्रियावन्तो नरास्त्रेतायुगेऽभवन् ।।

த்ரேதா யுகத்தில், கிரியை செய்தால் தான் பலன் கிடைக்கும்.

அதன் காரணத்தால், பல வித கொடைகள் செய்தார்கள்.

த்ரேதா யுகத்தில், தவம், தானம் இரண்டையும் கடைப்பிடித்தார்கள். இதனாலேயே எவரும் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்தனர்.

த்ரேதா யுகத்தில் இருந்த மனிதர்கள் தங்கள் தர்மத்தில் இருந்து கொண்டு, தங்கள் காரியங்களை செய்து கொண்டு இருந்தார்கள்.


द्वापरे च युगे धर्मो द्विभागो नः प्रवर्तते।
विष्णुर्वै पीततां याति चतुर्धा वेद एव च ।।

த்வாபர யுகத்தில் தர்மத்தின் கால்களில் இரண்டு குறைந்தது.

த்வாபர யுகத்தில் விஷ்ணுவானவர் "பொன்" நிறத்தில் இருக்கிறார்.

த்வாபர யுகத்தில் வேதம் நான்காக பிரிந்தது.


ततोऽन्ये च चतुर्वेदास्त्रिवेदाश्च तथा परे।
द्विवेदाश्चैकवेदाश्चाप्यनृचश्च तथा परे ।। 

த்வாபர யுகத்தில் சிலர் சதுர் வேதிகளாகவும், சிலர் த்ரிவேதிகளாகவும், சிலர் ஒரு வேதம் அறிந்தவர்களாகவும், சிலர் வேதமே அறியாதவர்களாகவும் ஆனார்கள்.


एवं शास्त्रेषु भिननेषु बहुधा नीयते क्रिया।
तपोदानप्रवृत्ता च राजसी भवति प्रजा ।।

வேத சாஸ்திரமும் பிரிந்ததால் கிரியைகளும் பிரிந்தன. த்வாபர யுகத்தில் உள்ள மக்கள் ரஜோ குணத்தால் தவத்திலும் தானத்திலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டனர். 


एकवेदस्य चाज्ञानाद्वेदास्ते बहवः कृताः।
सत्यस्य चेह विभ्रंशात्सत्ये कश्चिदवस्थितः ।।
सत्यात्प्रच्यवमानानां व्याघयो बहवोऽभवन्।
कामाश्चोपद्रवाश्चैव तदा वै दैवकारिताः ।। 

ஒன்றாய் இருந்த வேதத்தை முழுவதும் அறிய முடியாததால் வேதம் பிரிக்கப்பட்டது.

த்வாபர யுகத்தில் மனிதனின் புத்தி சக்தி குறைந்ததால், சத்தியத்தில் யாரும் நிலையாக இருப்பதில்லை.

சத்தியத்தில் இருந்து நழுவியதால், பல வித நோய்களும், ஆசைகளும், தெய்வ தண்டனையால் கஷ்டங்களும், உண்டாகின்றன.


यैरर्द्यभानाः सुभृशं तपस्तप्यन्ति मानवाः।
कामकामाः स्वर्गकामा यज्ञांस्तन्वन्ति चापरे ।

एवं द्वापरमासाद्य प्रजाः क्षीयन्त्यधर्मतः।

சிலர், இந்த கஷ்டத்தை போக்கி கொள்ள தவம் செய்கின்றனர்.

சிலர், உலக விஷயங்கள் கிடைப்பதற்காக யாகங்கள் செய்கிறார்கள்.

சிலர் ஸ்வர்கத்தை விரும்பி யாகங்கள் செய்கிறார்கள்.

மனிதர்கள் துவாபர யுகத்தை அடைந்து அதர்மத்தால் இவ்வாறு குறைவடைகிறார்கள்.


पादेनैकेन कौन्तेय धर्मः कलियुगे स्थितः ।
तामसं युगमासाद्य कृष्णो भवति केशवः।
वेदाचाराः प्रशाम्यन्ति धर्मयज्ञक्रियास्तथा ।।
கலி யுகத்தில் தர்மம் ஒரே ஒரு காலில் நிற்கும்.
கலி யுகத்தில் தமோ குணமே மேலோங்கி இருக்கும். 
இந்த யுகத்தை அனுசரித்து கேசவன் கருமை நிறத்தில் இருக்கிறார்.
வேதங்கள் (அறிவு), ஆசாரங்கள் (ஒழுக்கம்) மட்டுமின்றி, தர்மமும் (அறமும்) யாகங்களும் (service) மற்ற கிரியைகளும் (work) குறைந்து காணாமல் போகும்.

ईतयो व्याधयस्तन्द्री दोषाः क्रोधादयस्तथा।
उपद्रवाः प्रवर्तन्ते आधयो व्याधयस्तथा ।
युगेष्वावर्तमानेषु धर्मो व्यावर्तते पुनः।
கலி யுகத்தில், பல வித உபாதைகள், வியாதிகள், கோபமும், சோம்பறித்தனமும் உண்டாகும்.
பெரும் தொந்தரவுகளும், மனோ வியாதியும் உண்டாகும்.
பெரும் பயம் உண்டாகும். கலி யுகம் செல்ல செல்ல, தர்மங்கள் (அறம்) குறைந்து விடும். 

धर्मे व्यावर्तमाने तु लोको व्यावर्तते पुनः ।
लोके क्षीणे क्षयं यानति भावा लोकप्रवर्तकाः।
युगक्षयकृता धर्माः प्रार्थनानि विकुर्वते ।। 
மனிதர்களிடம் தர்மம் (அறம்) குறைய குறைய, உலகம் க்ஷீணமாகும். 
உலகம் க்ஷீணமாக, உலகில் நடைபெற்ற தர்மங்கள், ஞானம் (அறிவு) குறைந்து போகும்.
கலியின் இறுதியில் செய்யப்படும் தர்மங்கள், விரும்பிய பலனை தராமல் எதிர்வினையாக பலன் தந்து விடும்.

एतत्कलियुगं नाम अचिराद्यत्प्रवर्तते।
युगानुवर्तनं त्वेतत्कुर्वन्ति चिरजीविनः ।।
கலி யுகம் என்பது வெகு சீக்கிரத்தில் வர போகிறது.
சிரஞ்சீவிகள் யுகத்தை அனுசரித்து இருக்கிறார்கள். 

यच्च ते मत्परिज्ञाने कौतूहलमरिंदम।
अनर्थकेषु को भावः पुरुषस्य विजानतः ।।
एतत्ते सर्वमाख्यातं यन्मां त्वं परिपृच्छसि।
युगसङ्ख्यां महाबाहो स्वस्ति प्राप्नुहि गम्यताम् ।।
பகைவர்களை அடக்குபவனே! என்னை (விஸ்வரூபத்தை) பற்றி நீ அறிய ஆவல் படுகிறாய். மனிதனுக்கு ப்ரயோஜனமில்லாத விஷயத்தில் என்ன பிடிவாதம்? 
யுகங்களின் வரலாற்றை பற்றி நீ கேட்டதால், நான் சொன்னேன். க்ஷேமமாக இரு. நீ போகலாம்" என்கிறார் ஹனுமான். 

மஹாபாரதம் (கேள்வி 1) - சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இருந்தானா?

பாண்டவர்கள் வன வாசம் சென்றார்கள். 

ஒரு சமயம், திரௌபதி திவ்யமான நறுமணம் கொண்ட 1000 இதழ்கள் கொண்ட தாமரை மலரை கண்டாள். 

சௌகந்திக மலரை பறிக்க சென்றான் பீமன். 

அந்த சமயம் சகோதரர்களோடு அர்ஜுனன் இருந்தானா? 


பீமன் வரவில்லையே என்று தர்மபுத்திரர் திரௌபதி, நகுலன், சகாதேவனோடு, அங்கிருந்த ப்ராம்மணரைகளையும் கடோதகஜன் உதவியோடு அழைத்து கொண்டு, கந்தமாதன் என்ற மலையை அடைந்தார்கள்.

குபேரன் "பீமன் சௌகந்திக மலர்களை வேண்டுமளவுக்கு எடுத்து கொள்ளட்டும்" என்று அனுமதி கொடுத்த பிறகு, பீமன் மலர்களை பறித்து கொண்டான்.


ऊषुर्नातिचिरं कालं रममाणाः कुरूद्वहाः |

प्रतीक्षमाणआ बीभत्सुं गन्धमादनसानुषु || 

- ஆரண்ய காண்டம் (மஹாபாரதம்)

கந்தமாதன் என்ற அந்த மலை அடிவாரத்திலேயே சில காலம் பீபத்ஸு என்ற பெயர் கொண்ட அர்ஜுனனை எதிர்பார்த்து வசித்து வந்தார்கள்.


பதில்: சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இல்லை

Thursday 16 November 2023

பெண்ணை பற்றி மனு சொன்ன விஷயம் என்ன? தெரிந்து கொள்வோம்

அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், ஸ்வாயம்பு மனு ப்ரம்ம லோகம் செல்லும் முன்னர் கடைசியாக சொன்ன வார்த்தையை யுதிஷ்டிரனிடம் சொல்கிறார்.

स्त्रियः पुंसां परिददौ मनुर्जिगमिषुर्दिवम्।

अबलाः स्वल्पकौपीनाः सुहृद सत्यजिष्णवः।।

ईर्षवो मानकामाश्च चण्डाश्च सुहृदोऽबुधाः।

स्त्रियस्तु मानमर्हन्ति ता मानयत मानवाः।।

स्त्रीप्रत्ययो हि वै धर्मो रतिभोगाश्च केवलाः।

परिचर्या नमस्कारास्तदायत्ता भवन्तु वः।।

- வியாச மஹாபாரதம்

(அனுஸாஷன பர்வம்)

மனு தன்னுடைய உலகத்துக்கு செல்லும் முன் இவ்வாறு சொன்னார்.

"மனிதர்களே! பெண்கள் ஆண்களை விட உடல் பலம் குறைந்தவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். நல்ல குணம் கொண்டவர்கள். சத்யத்தை ஜெயிப்பவர்கள், பொறாமையும் கொண்டவர்கள், கௌரவத்தை விரும்புபவர்கள், 

மனிதர்களே! பெண்களை கௌரவமாக நடத்துங்கள். தர்மமே பெண்ணை நம்பி தான் இருக்கிறது. காமமும் பெண்ணை நம்பியே இருக்கிறது. அனைத்து பூஜைகளும், வழிபாடும் (நமஸ்காரமும்)  பெண்ணை நம்பியே இருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமாக இருக்கும் பெண்ணை மதியுங்கள்.

उत्पादनमपत्यस्य जातस्य परिपालनम्।

प्रीत्यर्थं लोकयात्रायाः पश्यत स्त्रीनिबन्धनम्।।

सम्मान्यमानाश्चैता हि सर्वकार्याष्यवाप्स्यथ।

विदेहराजदुहिता चात्र श्लोकमगायत।।

नास्ति यज्ञः स्त्रियाः कश्चिन्न श्राद्धं नोप्रवासकम्।

धर्मः स्वभर्तृशुश्रूषा तया स्वर्गं जयन्त्युत।। 

- வியாச மஹாபாரதம்

(அனுஸாஷன பர்வம்)

உன் குடும்பத்தில் சந்ததி உருவாக்கி கொடுப்பதும் பெண்ணே. அந்த சந்ததியை வளர்த்து காப்பதும் பெண்ணே. உலக வாழ்க்கை உங்களுக்கு ஆனந்தமாக தெரிவதற்கு காரணமே பெண் தான் என்று பாருங்கள். அவர்களை நீங்கள் கௌரவத்தோடு நடத்தினால், எல்லா பலனையும் பெறுவீர்கள்" என்று சொல்லி, புருஷர்களிடம் பெண்களை தகப்பன் போல கொடுத்து விட்டு, சொர்க்க லோகம் சென்றார் மனு. 

Friday 28 July 2023

பீஷ்மர் - 8 வஸுக்களின் அம்சமாகவே பிறந்தார். பீஷ்மரின் பிறப்பு ரகசியம் தெரிந்து கொள்வோமே! - வ்யாஸ மஹாபாரதம்

வியாஸரின் சிஷ்யர் "வைஸம்பாயனர்", ஜனமேஜயனுக்கு அவன் குடும்ப கதையை சொல்கிறார்.

சத்தியம் தவறாத, தோல்வியே அடையாத "மஹாபிஷக்" என்று பெயர் பெற்ற இக்ஷ்வாகு அரசன் ஒருவர் இருந்தார்.

इक्ष्वाकुवंशप्रभो राजासीत्पृथिवीपतिः।

महाभिषगिति ख्यातः सत्यवाक्सत्यविक्रमः।।

- வியாசர் மஹாபாரதம்

அவர் 1000 அஸ்வமேத யாகம் செய்து, 100 ராஜசூய யாகம் செய்து தேவேந்திரனை திருப்தி செய்து இருந்தார்.

அந்த அரசன் பூலோகத்தில் தேகத்தை விட்டு பிரிந்த பிறகு,  மேலுலகில் இருந்தார்.

सोऽश्वमेधसहस्रेण राजसूयशतेन च।

तोषयामास देवेशं स्वर्गं लेभे ततः प्रभुः।।

- வியாசர் மஹாபாரதம்


ஒரு சமயம் தேவர்கள் ப்ரம்ம லோகம் சென்று ப்ரம்ம தேவனை தரிசித்தனர்.

அங்கே ராஜ ரிஷிகளும் இருந்தனர். இந்த மஹாபிஷக் என்ற அரசரும் இருந்தார்.

ततः कदाचिद्ब्रह्माणमुपासांचक्रिरे सुराः।

तत्र राजर्षयो ह्यासन्स च राजा महाभिषक्।।

- வியாசர் மஹாபாரதம்


அப்பொழுது, நதிகளில் சிறந்தவளான கங்கை ப்ரம்மதேவனை தரிசிக்க வந்தாள்.

அப்போது, சந்திரன் போன்ற நிறத்தில் அவள் அணிந்திருந்த பட்டாடை சிறிது காற்றில் சிறிது விலகியது.

अथ गङ्गा सरिच्छ्रेष्ठा समुपायात्पितामहम्।

तस्या वासः समुद्धूतं मारुतेन शशिप्रभम्।।

- வியாசர் மஹாபாரதம்


உடனே அங்கிருந்த தேவர்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டனர்.

மஹாபிஷக் என்ற இந்த ராஜரிஷி மட்டும் கங்கையை பார்த்து கொண்டே இருந்தார்.

ततोऽभवन्सुरगणाः सहसाऽवाङ्मुखास्तदा।

महाभिषक्तु राजर्षिरशङ्को दृष्टवान्नदीम्।।

- வியாசர் மஹாபாரதம்

இதை கண்ட ப்ரம்ம தேவர், மஹாபிஷக்கை கடிந்து கொண்டார்.

பிரம்மதேவர், "நீ மனிதனாக பிறந்து, பிறகு மீண்டும் நல்ல லோகங்களை அடைவாய்.

மூடனே!  எந்த கங்கையை கண்டு உன் மனம் மயங்கியதோ, அதே கங்கையானவள் மனித லோகத்தில் உனக்கு பிடிக்காததை செய்ய போகிறாள்.

அவள் செயலை கண்டு உனக்கு எப்போது உனக்கு கோபம் வருமோ, அப்பொழுது நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்." என்று கடிந்து சொன்னார்.

सोपध्यातो भगवता ब्रह्मणा तु महाभिषक्।

उक्तश्च जातो मर्त्येषु पुनर्लोकानवाप्स्यसि।।

यया हृतमनाश्चासि गङ्गया त्वं हि दुर्मते।

सा ते वै मानुषे लोके विप्रियाण्याचरिष्यति।

यदा ते भविता मन्युस्तदा शापाद्विमोक्ष्यते।।

- வியாசர் மஹாபாரதம்


இப்படி சபித்ததும், மனுஷ்ய லோகத்தில் உள்ள ராஜ ரிஷிகளையும், அரசர்களையும் பார்த்த மஹாபிஷக், அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் "பிரதீபன்" என்ற அரசனை தனக்கு தகப்பனாக ஏற்றார்.

स चिन्तयित्वा नृपतिर्नृपानन्यांस्तपोधनान्।।

प्रतीपं रोचयामास पितरं भूरितेजसम्।

- வியாசர் மஹாபாரதம்


மனதை கட்டுப்படுத்த முடியாமல் தன்னையே பார்த்து கொண்டிருந்த மஹாபிஷக்கை நினைத்து கொண்டே கங்கை திரும்பி சென்றாள்.

सा महाभिषजं दृष्ट्वा नदी दैर्याच्च्युतं नृपम्।।  

- வியாசர் மஹாபாரதம்

ஜனமேஜயா! 

அவள் செல்லும் போது, சொர்க்க லோகத்தில் தேவர்களில் ஒருவர்களான 8 வஸுக்கள் உடல் பொலிவு குன்றி, அறிவு கலங்கி நிற்பதை கண்டாள். உடனே அவர்களை பார்த்து, "ஏன் இப்படி நிறம் மாறி காணப்படுகிறீர்கள்? நீங்கள் நலம் தானே?" என்று விஜாரித்தாள்.

तमेव मनसा ध्यायन्त्युपावृत्ता सरिद्वरा।

सा तु विध्वस्तवपुषः कश्मलाभिहतान्नृप।।

ददर्श पथि गच्छन्ती वसून्देवान्दिवौकसः।

तथारूपांश्च तान्दृष्ट्वा प्रपच्छ सरितां वरा।।

किमिदं नष्टरूपाः स्थ कच्चित्क्षेमं दिवौकसाम्।

- வியாசர் மஹாபாரதம்


தேவர்களாகிய வசுக்கள், கங்கையை பார்த்து, "மஹா நதியே! நாங்கள் விளையாட்டாக வஸிஷ்டருக்கு செய்த சிறு தவறினால் இப்படி ஆகி இருக்கிறோம்.

முன்பு, நான் அறியாமல் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த வஸிஷ்டருக்கு இடைஞ்சல் செய்தோம்.

உடனே அவர் கோபத்தினால், "நீங்கள் மானிட உலகத்தில் கர்ப்பவாசம் செய்வீர்கள்" என்று சபித்து விட்டார்.

வேத வாக்குள்ள அவர் என்ன சொன்னாலும் பலிக்கும். அதை மாற்றவும் இயலாது.

கங்கா தேவியான நீயே பூலோகத்தில் எங்களை புத்திரர்களாக பெற வேண்டும். மனித பெண் கர்ப்பத்தில் நாங்கள் வசிக்க மாட்டோம்." என்றனர். இப்படி 8 வஸுக்களும் கேட்டு கொண்டதும், "அப்படியே ஆகட்டும்" என்றாள் கங்காதேவி.

तामूचुर्वसवो देवाः शप्ताः स्मो वै महानदि।।

अल्पेऽपराधे संरम्भाद्वसिष्ठेन महात्मना।

विमूढा हि वयं सर्वे प्रच्छन्नमृषिसत्तमम्।।

सन्ध्यां वसिष्ठमासीनं तमत्यभिसृताः पुरा।

तेन कोपाद्वयं शप्ता योनौ संभवतेति ह।।

न तच्छक्यं निवर्तयितुं यदुक्तं ब्रह्मवादिना।

त्वमस्मान्मानुषी भूत्वा सूष्व पुत्रान्वसून्भुवि।।

न मानुषीणां जठरं प्रविशेम वयं शुभे।

इत्युक्ता तैश्च वसुभिस्तथेत्युक्त्वाऽब्रवीदिदम्।।

- வியாசர் மஹாபாரதம்


"மனிதர்களில் எந்த புருஷன் உங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

मर्त्येषु पुरुषश्रेष्ठः को वः कर्ता भविष्यति।

- வியாசர் மஹாபாரதம்


அதற்கு வஸுக்கள், "ப்ரதீபனுடைய பிள்ளையாக சாந்தனு என்னும் அரசன் பிறந்து பெரும் புகழ் பெறுவான். மனித லோகத்தில் அவன் மூலம் நாங்கள் வர நினைக்கிறோம்" என்றனர்.

प्रतीपस्य सुतो राजा शान्तनुर्लोकविश्रुतः।

भविता मानुषे लोके स नः कर्ता भविष्यति।।

- வியாசர் மஹாபாரதம்

உடனே கங்கை, "தேவர்களே! நீங்கள் என்னிடம் என்ன சொன்னேர்களோ, அதற்கு நான் சம்மதிக்கிறேன். அந்த அரசனுக்கும், உங்களுக்கும் விருப்பமான காரியத்தை நான் செய்வேன்" என்று சொன்னாள்.

ममाप्येवं मतं देवा यथा मां वदथानघाः।

प्रियं तस्य करिष्यामि युष्माकं चेतदीप्सितम्।।

- வியாசர் மஹாபாரதம்


உடனே வஸுக்கள், "மூன்று லோகங்களும் செல்பவளே! நீண்ட காலம் இந்த சாபத்தை நாங்கள் அனுபவிக்க விரும்பவில்லை. ஆதலால், உனக்கு பிறந்த பிள்ளைகளை பிறந்தவுடனே ஜலத்தில் போட்டு விட வேண்டும். புத்தியில்லாத நாங்கள் வஸிஷ்டர் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்த போது, அவருடைய பசுவை பிடிக்க விரும்பி முயற்சி செய்ய, அந்த ப்ரம்மரிஷியால் சபிக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி சபிக்கப்பட்ட எங்களை நீ உடனே விடுவித்து விட வேண்டும்" என்று கேட்டு கொண்டனர்.

जातान्कुमारान्स्वानप्सु प्रक्षेप्तुं वै त्वमर्हसि।

यथा नचिरकालं नो निष्कृतिः स्यात्त्रिलोकगे।।

जिघृक्षवो वयं सर्वे सुरभिं मन्दबुद्धयः।

शप्ता ब्रह्मर्षिणा तेन तांस्त्वं मोचय चाशु नः।।

- வியாசர் மஹாபாரதம்


இதை கேட்ட கங்காதேவி, "அப்படியே செய்கிறேன். ஆனாலும், (சாந்தனு) அரசனுக்கு பிள்ளையில்லாமல் செய்ய கூடாது. அவருக்கு ஒரு பிள்ளையாவது நிறுத்த வேண்டும். என்னிடம் புத்திரனை எதிர்பார்த்து சேர்ந்த அந்த அரசன் வீண் போக கூடாது" என்றாள்.

एवमेतत्करिष्यामि पुत्रस्तस्य विधीयताम्।

नास्य मोघः सङ्गमः स्यात्पुत्रहेतोर्मया सह।।

- வியாசர் மஹாபாரதம்


அதற்கு அந்த வஸுக்கள், "நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சக்தியில் 4ல் ஒரு பாகத்தை கொடுக்கிறோம். அந்த சக்தியுடன் உங்களுக்கும் அந்த அரசனுக்கும் பிரியமான புத்திரன் ஒருவன் நிலைப்பான். ஆனால், அவன் மனித லோகத்தில் சந்ததியை உருவாக்க மாட்டான். அதனால், உன்னுடைய வீரமிகு புத்திரனுக்கு புத்திரன் உண்டாக மாட்டான்" என்று சொன்னார்கள். இவ்வாறு கங்கா தேவியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, வஸுக்கள் சென்றனர்.

तुरीयार्धं प्रदास्यामो वीर्यस्यैकैकशो वयम्।

तेन वीर्येण पुत्रस्ते भविता तस्य चेप्सितः।।

न संपत्स्यति मर्त्येषु पुनस्तस्य तु सन्ततिः।

तस्मादपुत्रः पुत्रस्ते भविष्यति स वीर्यवान्।।

- வியாசர் மஹாபாரதம்

Sunday 16 July 2023

சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? சரபங்களை யார் படைத்தார்? வ்யாஸ மஹாபாரதம் சரபத்தை பற்றி சொல்கிறது

சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? சரபங்களை யார் படைத்தார்?

पुलहस्य सुता राजञ्शरभाश्च प्रकीर्तिताः।

सिंहाः किपुरुषा व्याघ्रा ऋक्षा ईहा मृगास्तथा।।

- ஆதி பர்வம் (மஹாபாரதம் வியாசர்)

ப்ரம்மாவின் 6 மானஸ புத்ரர்களில் ஒருவர் புலஹர். 

இந்த மகரிஷி, தன் தபோ பலத்தால், 

சரபங்கள், சிங்கங்கள், (குதிரை உடம்பும், மனித முகமும் கொண்ட) கிம்புருஷர்கள், புலிகள், கரடிகள், ஓநாய்கள் போன்றவற்றை ஸ்ருஷ்டி செய்தார்.


இந்த சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? என்பதை, தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் காண முடிகிறது.


இந்த சரபம் என்ற விலங்கு, இறக்கைகளுடன், எட்டு கால்களுடன், சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது.


Monday 1 May 2023

"ஸ்மார்த்த" "ஸ்ரௌத்த" தர்மம் என்றால் என்ன? பிராம்மண வர்ணத்தில் அனுமதிக்கப்படாத விவாஹம் எது? அறிவோம் மஹாபாரதம்

பராசர ரிஷி, சத்யவதி மூலமாக வியாசரை நொடி பொழுதில் யமுனை கரையில் பிறப்பிக்க செய்தார்.  

அப்போது, அவளை பார்த்து, சிறந்த தர்மம் எது? என்று விளக்க ஆரம்பிக்கிறார்.

शिष्टानां तु समाचारः शिष्टाचार इति स्मृतः।

श्रुतिस्मृतिविदो विप्रा धर्मज्ञा ज्ञानिनः स्मृताः।।

- adi parva (Vyasa mahabharata)

சிஷ்டர்கள் தொன்றுதொட்டு செய்து கொண்டு வரும் ஆசாரமே - "சிஷ்டாசாரம்" என்று சொல்லப்படுகிறது.

வேதத்தையும்+தர்ம சாஸ்திரத்தையும் (அனைத்து ஸ்ம்ருதிகளையும்)+தர்மஸூக்ஷ்மத்தையும் அறிந்த வேதியனே (விப்ரன்) - "ஞானி" (அறிவு உள்ளவன்) என்று சொல்லப்படுகிறான்.


धर्मज्ञैर्विहितो धर्मः श्रौतः स्मार्तो द्विधा द्विजैः।

- adi parva (Vyasa mahabharata)

தர்மம் தெரிந்த இரட்டை பிறப்பாளர்களால் (பூணூல்/காயத்ரீ உபதேசம் பெற்ற பிராம்மணர்கள்/வைசியர்கள்/க்ஷத்ரியர்கள்), "ஸ்ரௌத்த" தர்மம், "ஸ்மார்த்த" தர்மம் என்ற 2 தர்மங்கள் விதிக்கப்பட்டு உள்ளது. 

दानाग्निहोत्रमिज्या च श्रौतस्यैतद्धि लक्षणम्।।

- adi parva (Vyasa mahabharata)

"தானம் + அக்னி ஹோத்ரம் + யாகம்" இந்த மூன்றும் "ஸ்ரௌத்த" தர்மத்தில் உள்ள லக்ஷணங்கள்.


स्मार्तो वर्णाश्रमाचारो यमैश्च नियमैर्युतः।

- adi parva (Vyasa mahabharata)

"யமம்+நியமம்" போன்ற வர்ணாஸ்ரம தர்மத்தை கடைபிடித்து கொண்டிருப்பது "ஸ்மார்த்த" தர்ம லக்ஷணம்.

(யமம் - பிற உயிரை துன்பம் செய்யாமல் இருப்பது, பொய் பேசாமல் இருப்பது, திருடாமல் இருப்பது, தகாத காமம் இல்லாமல் ப்ரம்மச்சர்யத்தில் இருப்பது, அதர்மமான பொருளில் பற்று இல்லாமல் இருப்பது. யமம் என்பது இந்த குணங்களை குறிக்கிறது)

(நியமம் - தூய்மையாக (சௌசம்) இருப்பது, கிடைத்ததில் திருப்தி கொள்வது, தவம் செய்வது, வேதம் ஓதுவது, பகவத் தியானம் செய்வது. நியமம் என்பது கட்டுப்பாடுகளை குறிக்கிறது


धर्मे तु धारणे धातुः सहत्वे चापि पठ्यते।।

- adi parva (Vyasa mahabharata)

தர்மமே அனைத்திற்கும் ஆதாரம். ஆதலால் அவரவர் தர்மத்தை விட கூடாது என்று சொல்லப்படுகிறது. 


तत्रेष्टफलभाग्धर्म आचार्यैरुपदिश्यते।

अनिष्टफलभाक्रेति तैरधर्मोऽपि भाष्यते।।

तस्मादिष्टफलार्थाय धर्ममेव समाश्रयेत्।

- adi parva (Vyasa mahabharata)

தன்னுடைய தர்மத்தில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இனிய பலன்கள் தானாக கிடைக்கும் என்று ஆசார்யர்கள் உபதேசிக்கிறார்கள்.

நல்ல பலன் நமக்கு கிடைப்பதற்காக, நம் தர்மத்தை நாம் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். 

ब्राह्मो दैवस्तथैवार्षः प्राजापत्यश्च धार्मिकः।।

विवाहा ब्राह्मणानां तु गान्धर्वो नैव धार्मिकः।

- adi parva (Vyasa mahabharata)

பிராம்மண விவாஹம் (1), தெய்வ விவாஹம் (2), ஆர்ஷம் என்ற விவாஹம் (3), ப்ராஜாபத்யம் என்ற விவாஹம் (4) தர்மத்துக்கு உட்பட்ட விவாஹ முறைகள். 

காந்தர்வ விவாஹம் (LOVE MARRIAGE) ஒரு போதும் பிராம்மண வர்ணத்தில் (Today MLA/MP are in this Varna guiding Kshatriya (army/police)) உள்ளவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விவாஹம் ஆகாது. 


त्रि-वर्णेतर जातीनां गान्धर्वासुर राक्षसाः।।

- adi parva (Vyasa mahabharata)

பிராம்மண/க்ஷத்ரிய/வைஸ்ய வர்ணத்தில் இல்லாதவர்களுக்கு காந்தர்வ விவாஹம் (5), ஆஸுர விவாஹம் (6), ராக்ஷஸ விவாஹம் (7) தர்மமாக கூறப்படுகிறது. 


पैशाचो नैव कर्तव्यः पैशाचश्चाष्टमोऽधमः।

सामर्षां व्यङ्गिकां कन्यां मातुश्च कुलजां तथा।।

- adi parva (Vyasa mahabharata)

பைஸாச விவாஹம் (8) யாருமே செய்து கொள்ள கூடாது. இந்த 8வது விவாஹம் இழிவானது.

வியாசர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? த்வைபாயனர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? அறிவோம் மஹாபாரதம்

வியாசர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? அறிவோம் மஹாபாரதம்

एवं द्वैपायनो जज्ञे सत्यवत्यां पराशरात्।

न्यस्तो द्वीपे यद् बाल: तस्माद् द्वैपायनःस्मृतः।।

- adi parva (Vyasa mahabharata)

பராசரருக்கும், சத்யவதிக்கும் பிறந்த இவர், யமுனை கரையிலேயே (த்வீபத்தில்) குழந்தையாக விடப்பட்டதால், இவருக்கு 'த்வைபாயனர்" என்ற பெயர் வந்தது.


पादापसारिणं धर्मं स तु विद्वान्युगे युगे।

आयुः शक्तिं च मर्त्यानां युगावस्थामवेक्ष्यच।।

ब्रह्मणो ब्राह्मणानां च तथानुग्रह काङ्क्षया।

विव्यास वेदान्यस्मत्स तस्माद् व्यास इति स्मृतः।।

- adi parva (Vyasa mahabharata)

தர்மம் ஒவ்வொரு யுகமாக நகரும் போது, கால் பங்கு விலகி போவதையும், மனிதனின் ஆயுளும், சக்தியும் யுகங்களுக்கு தக்கபடி இருப்பதையும் பார்த்த அந்த த்வைபாயனர், 

வேதத்தையும், ப்ராம்மணர்களையும் அனுசரித்து, வேதத்தை வகுத்ததால், அவருக்கு "வியாசர்" என்று பெயரும் ஏற்பட்டது.

वेदानध्यापयामास महाभारत पञ्चमान्।

सुमन्तुं जैमिनिं पैलं शुकं चैव स्वमात्मजम्।।

அந்த வியாசர், வேதத்தை, பைலருக்கும் (ரிக்), சுமந்துவுக்கும், ஜைமினிக்கும் (ஸாம), தன் பிள்ளையான சுகருக்கும் சொல்லிவைத்தார்.

Saturday 29 April 2023

Punjab தமிழ்நாடு உறவு அறிவோம். பாண்டவர்களுக்கு எத்தனை மகன்கள் பிறந்தார்கள்? அறிவோம் மஹாபாரதம்

பாண்டவர்களுக்கு எத்தனை மகன்கள் பிறந்தார்கள்? அறிவோம் மஹாபாரதம்

ततः पाञ्चाल विषयं गत्वा

स्वयंवरे द्रौपदीं लब्ध्वा अर्ध राज्यं 

प्राप्य इन्द्रप्रस्थ निवासिन: तस्यां 

पुत्रान् उत्पादयाम् आसु द्रौपद्याम्।।

प्रतिविन्ध्यां युधिष्ठिरः |

सुतसोमं वृकोदरः |

श्रुतकीर्तिमर्जुनः |

शतानीकं नकुलः |

श्रुतसेनं सहदेव इति।।

- மஹாபாரதம் (வ்யாஸர்)

பாஞ்சால தேசம் (punjab) சென்று, திரௌபதியை சுயம்வரத்தில் வென்று, கிடைத்த பாதி ராஜ்யமான இந்திரப்ரஸ்தத்தில் பாண்டவர்கள் வசித்தனர். அங்கு திரௌபதி மூலம் பாண்டவர்கள் 5 புத்திரர்களை பெற்றனர்.

யுதிஷ்டிரன் ப்ரதிவிந்த்யன் (1) என்ற புத்திரனை பெற்றார்.

பீமன் ஸுதஸோமன் (2) என்ற புத்திரனை பெற்றார்.

அர்ஜுனன் ஸ்ருதகீர்த்தீ (3) என்ற புத்திரனை பெற்றார்

நகுலன் ஸதாநீகன் (4) என்ற புத்திரனை பெற்றார்.

சஹதேவன் ஸ்ருதசேனன் (5) என்ற புத்திரனை பெற்றார்.

शैव्यस्य कन्यां देवकीं नामोपयेमे युधिष्ठिरः।

तस्यां पुत्रं जनयामास यौधेयं नाम।।

யுதிஷ்டிரன் ஸைப்யனின் பெண்ணான தேவகீயை மணந்தார். அவர்களுக்கு யௌதேயன் (6) என்ற புத்திரன் பிறந்தான்.


भीमसेनस्तु वाराणस्यां काशिराज कन्यां जलन्धरां नामोपयेमे स्वयंवरस्थां।

तस्यामस्य जज्ञे शर्वत्रातः।।

பீமன் காசி ராஜனின் பெண்ணான ஜலந்தராவை மணந்தார். அவர்களுக்கு ஸர்வத்ராதன் (7) என்ற புத்திரன் பிறந்தான்


अर्जुनस्तु खलु द्वारवतीं गत्वा 

भगवतो वासुदेवस्य भगिनीं सुभद्रां

नामोदवहद् भार्यां |

तस्याम् अभिमन्युं नाम पुत्रं जनयामास ||

அர்ஜுனன் துவாரகை சென்ற போது, பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை மணந்தார். அவர்களுக்கு அபிமன்யு (8) என்ற புத்திரன் பிறந்தான்

नकुलस्तु खलु चैद्यां रेणुमतीं नामोदवहत् |

तस्यां पुत्रं जनयामास निरमित्रं नाम ||

நகுலன் சேதி நாட்டு அரசன் பெண்ணான ரேணுமதீயை, மணந்தார். அவர்களுக்கு நிரமித்ரன் (9) என்ற புத்திரன் பிறந்தான்


सहदेवस्तु खलु माद्रीमेव स्वयंवरे विजयां नामोदवहद्भार्याम् |

तस्यां पुत्रं जनयामास सुहोत्रं नाम ||

சஹதேவன் மத்திர நாட்டு அரசன் பெண்ணான விஜயாவை சுயம்வரத்தில் மணந்தார். அவர்களுக்கு ஸுஹோத்ரன் (10) என்ற புத்திரன் பிறந்தான்

भीमसेनश्च पूर्वमेव हिडिम्बायां राक्षस्यां पुत्रमुत्पादयामास

घटोत्कचं नाम |

பீமன் இதற்கு முன்பேயே ராக்ஷஸ பெண்ணான ஹிடிம்பியை மணந்தார். அவர்களுக்கு கடோத்கஜன் (11) என்ற புத்திரன் பிறந்தான்.


अर्जुनस्तु नागकन्यायाम् उलूप्याम् 

इरावन्तं नाम पुत्रं जनयामास ||

அர்ஜுனன் மேலும் நாக கன்னியான உலூபியை மணந்தார். அவர்களுக்கு இராவந்தன் (12) என்ற புத்திரன் பிறந்தான். 


ततो मणलूरुपति कन्यायां चित्राङ्गदायाम् अर्जुनः पुत्रम् उत्पादयामास

बभ्रुवाहनं नाम |

பிறகு, அர்ஜுனன் மதுரைக்கு எல்லையாக இருந்த மணலூர் (பாண்டிய தேசம்) அரசனின் (சித்ரவாஹனன்) பெண்ணான சித்ராங்கதாவை மணந்தார். அவர்களுக்கு பப்ருவாஹனன் (பாண்டிய மன்னன்) (13) என்ற புத்திரன் பிறந்தான். 

एते त्रयोदश पुत्राः पाण्डवानाम् 

இவ்வாறு பாண்டவர்களுக்கு 13 புத்திரர்கள் பிறந்தார்கள். 


பாண்டிய தேச அரசி சித்ராங்கதா, அர்ஜுனனின் மூத்த மனைவியும், பாஞ்சாலியுமான (punjab) திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து இருக்கிறாள்.

அவள் மகனும், பாண்டிய அரசனுமான பப்ருவாஹனன் முதல் பிறகு 5000 வருடங்கள் வந்த பாண்டிய அரசர்கள் யாவரும் திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து வழிபாடு செய்து, அக்னியில் இருந்து தோன்றியவள் என்பதால், அவளுக்கு முன் தீ மிதித்து வழிபாடு செய்து இருக்கின்றனர் என்று தெரிகிறது.

இன்றைய பஞ்சாபில் கூட திரௌபதிக்கு வழிபாட்டு கோவில்கள் அதிகம் இல்லை. ஆனால் திரௌபதிக்கு தெற்கு பாரதமான தமிழ்நாட்டில் திரௌபதிக்கு கோவில்கள், வழிபாடுகள் அதிகம் காணப்படுகிறது.

Saturday 15 April 2023

மகாபாரத சமயத்தில் மதுரை, தமிழ்நாடு... ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது? வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்

ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது? 

தமிழர்களுக்கும் திரௌபதிக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருக்கும்?

 

திரௌபதியை மணந்து கொண்ட அர்ஜுனன், தமிழகம் வந்தாரா?

மஹாபாரதம் படிக்கும் போது, இதற்கான விடை நமக்கு தெரிகிறது.


அது மட்டுமல்ல, அர்ஜுனன் பாண்டிய இளவரசியான சித்ராங்கதையை மணந்து கொண்டார் என்று தெரிகிறது.


அர்ஜுனன் பிள்ளையே பிறகு பாண்டிய மன்னன் ஆனான் என்றும் தெரிகிறது. 

மஹாபாரத போருக்கு பிறகு 4000 வருடங்கள் (பாண்டிய ஆட்சி இருந்த வரை) அர்ஜுனன் வம்சமே பாண்டிய மன்னர்களாக ஆண்டனர்.


அர்ஜுனன் பாண்டிய இளவரசி சித்ராங்கதையை மணக்க இடம் கொடுத்த திரௌபதிக்கு இந்த தமிழ் மண் தெரிவிக்கும் நன்றி என்று அறிய முடிகிறது.


மேலும், திரௌபதி அக்னியில் இருந்து வந்தவள் என்று காட்ட, தீ மிதிக்கும் வழிபாடும் ஏற்பட்டது என்று அறிய முடிகிறது.


மஹாபாரத காலத்தில் (3100BCE) "மதுரை"க்கு பெயர் என்ன இருந்து இருக்கிறது? என்று அறிய முடிகிறது.

பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?

சோழ அரசாட்சியும், சேர அரசாட்சி முடிந்ததும், பாண்டிய அரசாட்சி பல வருடங்கள் நடந்தது என்பது மாலிக் காபூர் வந்த சமயத்தில் அறிய முடிகிறது. இஸ்லாமியர்கள் தாக்கிய மீனாக்ஷி கோவிலில் இன்றும் உடைக்கபட்ட சிவ லிங்கம் கதை சொல்கிறது.

5000 வருடம் முன் மஹாபாரத காலத்தில் "மணிபூரம்" என்றும் மதுரை அழைக்கப்பட்டு இருக்கிறது.

பார்வதி தேவியே மலயத்வஜ பாண்டியனுக்கு மீனாக்ஷியாக பிறந்து இந்த பாண்டிய தேசத்தை ஆண்டாள். மலயத்வஜன் வம்சத்தில் வந்த பாண்டிய மன்னன் என்று சகாதேவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார், அன்று இருந்த பாண்டிய அரசர்.

பிற்காலத்தில் பெரியாழ்வார் இங்கு வந்து வசித்த போது, சில மைல் தூரத்தில் கள்ளழகர் இருக்கும் இடத்தை பார்த்தால் கோகுலம் போலவும், அங்குள்ள மலையை பார்த்தால் கோவர்த்தனம் போலவும், பிருந்தாவனம் போலவும், இந்த தலைநகரை பார்த்தால் மதுரை போலவும் தெரிய, அங்கேயே கடைசி வரை வசித்தார்.
மணிபூரம் தென்மதுரை போல இவருக்கு தெரிய, உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிஜமான மதுராவை வடமதுரை... வடமதுரை என்று குறிப்பிட்டு பாடுகிறார்.

அவர் காலத்துக்கு பிறகே, மதுரை என்ற பெயர் உண்டாகியது.

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் முக்தி பெற்ற ஸ்தலம் அழகர்மலை என்ற சோலைமலை என்ற திருமாலிருஞ்சோலை.

பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?


தமிழர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?


வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்


Connection between tamil people (Pandiya and chola) in mahabharat?

In 3 chapter, we see  this connection.
Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.

1st when Arjuna goes for theertha yatra,
2nd sahadeva when he goes for rajasuya yagya,
3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.

பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும்,
தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.

நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.

மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

1.
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.

அப்பொழுது, பாண்டிய தேசத்தில், மணலூர் வருகிறான். அப்பொழுது சித்ரவாகனன் என்ற பாண்டிய அரசன், தன் பெண்ணை (சித்ராங்கதை) நிபந்தனை பேரில் திருமணம் அர்ஜுனனுக்கு செய்து முடிக்கிறான்.
ஆதி பர்வம், 61, 235 அத்தியாயம்
https://www.proudhindudharma.com/2022/10/Pandya-king-dynasty-arjuna.html?m=1

2.
யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார்.
இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.
சபா பர்வம், அத்தியாயம் 33
https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1

3.
போர் முடிந்த பிறகு, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் முடிவு செய்கிறார்.
அப்போது, அர்ஜுனன் பாண்டிய தேசம் வருகிறான்.
பாண்டிய மன்னனான தன் மகனையும், தமிழ் பெண்ணான சித்ராங்கதையையும் பார்கிறான்.
அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79
https://www.proudhindudharma.com/2023/01/arjuna-killed-by-pandiya-king.html?m=1

Wednesday 12 April 2023

யக்ஷன் கேள்விகள், தர்மபுத்திரர் யுதிஷ்டிரர் பதில்கள் - ஆதி பர்வா. அறிவோம் வியாசர் மஹாபாரதம்

யக்ஷன் கேள்விகள், தர்மபுத்திரர் யுதிஷ்டிரர் பதில்கள்… வியாசர் மஹாபாரதம்

किंस्विद् आदित्यम् उन्नयति के च तस्य अभित: चराः।

कश्चैनम् अस्तं नयति कस्मिंश्च प्रति-तिष्ठति ॥ Adi Parva

யார் சூரியனை உதிக்க செய்கிறார்?

சூரியனுக்கு பக்கத்தில் யார் போகிறார்கள்?

யார் சூரியனை அஸ்தமிக்க செய்கிறார்?

எதில் சூரியன் நிலை பெற்று இருக்கிறார்?

ब्रह्म आदित्यम् उन्नयति देवा: तस्य अभित: चराः।

धर्म: चा अस्तं नयति च सत्ये च प्रति-तिष्ठति ॥

பரமாத்மா (ப்ரம்மம்) சூரியனை (ஜீவனை) உதிக்க செய்கிறார்.

தேவர்கள் (மனமும், புலனும்) சூரியனுக்கு (ஜீவனுக்கு) பக்கத்தில் போகிறார்கள்.

பரமாத்மாவின் சட்டம் என்ற தர்மமே (பக்தியால்) சூரியனை (ஜீவன்) அஸ்தமிக்க செய்கிறது (மோக்ஷம் அடைகிறான்)

சத்தியத்தில்  (பரமாத்மாவின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு) சூரியன் (ஜீவன்) நிலை பெற்று இருக்கிறான்.

 केनस्विद् श्रोत्रियः भवति केनस्विद् विन्दते महत्।

केनस्विद्  द्वितीयवान् भवति राजन् केन च बुद्धिमान् ॥

எதனால் மனிதன் ஸ்ரோத்ரியனாகிறான் (வேதம் படித்தவன்)?

எதனால் மனிதன் மகத்தை (பெருமை) அடைகிறான்?

எதனால் மனிதன் துணை உள்ளவனாகிறான்?

எதனால் மனிதன் புத்திமானாகிறான்?

श्रुतेन श्रोत्रियो भवति तपसा विन्दते महत्।

धृत्या द्वितीयवान् भवति बुद्धिमान् वृद्ध सेवया ॥

வேதம் ஓதுவதால் மட்டுமே மனிதன்  ஸ்ரோத்ரியனாகிறான்.

தவத்தால் (action without giveup) மனிதன் மகத்தை (பெருமை) அடைகிறான்

தைரியத்தினால் மனிதன் துணை உள்ளவனாகிறான்.

வயதானவர்களை கைவிடாமல் அவர்களுக்கு சேவை செய்யும் மனிதன் புத்திமானாகிறான்.

किं ब्राह्मणानां देवत्वं क: च धर्मः सतामिव।

क: च एषां मानुषो भावः किम् एषां सतामिव ॥

ப்ராம்மணன் (MLA, MP) தேவ தன்மையை (ஸத்வ குணத்தை/சாஸ்திரத்தை மீறாத குணத்தை) எப்போது பெறுகிறான்?

ப்ராம்மணனிடம் (MLA, MP) இருக்க வேண்டிய சாது தர்மம் எது?

பிராம்மணன் (MLA, MP) எப்போது மனித தனமையை அடைகிறான்?

ப்ராம்மணனிடம் (MLA, MP) இருக்க கூடாத அசட்டு குணம் எது?

स्वाध्याय एषां देवत्वं तप एषां सतामिव।

मरणं मानुषो भावः परिवाद: असतामिव ॥

ப்ராம்மணன் வேதம் அத்யயனம் செய்வதால் தேவ தன்மை பெறுகிறான். (வேதம் படிக்க படிக்க சமம்-தமம் (மன அடக்கம், புலன் அடக்கம்) உண்டாகும், ஆத்மாவே நான் என்று அறிகிறான்)

ப்ராம்மணனிடம் இருக்க வேண்டிய குணம் - தவமே (வேதத்தின் அர்த்தத்தை நினைத்து கொண்டே இருப்பதே)

‘ஆத்மா நான்’ என்பதை மறந்து, தேகம் அழியும் மரணத்தை கண்டு பயப்படும்  பிராம்மணன் மனித தனமையை அடைகிறான்

ப்ராம்மணனிடம் இருக்க கூடாத குணம் - பரநிந்தை (பிறரை பற்றி குறை சொல்வது)

किं क्षत्रियाणां देवत्वं क: च धर्मः सतामिव।

क: च एषां मानुषो भावः किं एषाम् सतामिव ॥

க்ஷத்ரியன் (Police/Army) தேவ தன்மையை (சாஸ்திரத்தை மீறாத குணம்) எப்போது பெறுகிறான்?

க்ஷத்திரியனிடம் இருக்க வேண்டிய சாது தர்மம் எது?

க்ஷத்திரியன் எப்போது மனித தனமையை அடைகிறான்?

க்ஷத்திரியனிடம் இருக்க கூடாத அசட்டு தர்மம் எது?

इषु अस्त्रम् एषां देवत्वं यज्ञ एषां सतामिव।

भयं वै मानुषो भावः परित्यागो असतामिव ॥

க்ஷத்திரியன் பாணங்களாலும், அஸ்திரங்களாலும் தேவத்தன்மையை பெறுகிறான்.

உலக நன்மைக்காக யாகங்கள் செய்வதே,  க்ஷத்திரியனிடம் இருக்க வேண்டிய சாது தர்மம்

பயப்படும் போது க்ஷத்திரியன்  மனித தன்மையை அடைகிறான்.

நம்பியவனை கைவிடுவதே க்ஷத்திரியனிடம் இருக்க கூடாத அசட்டு தர்மம்

किम् एकं यज्ञियं साम किम् एकं यज्ञियं यजुः।

का च: एषां वृणुते यज्ञं कां यज्ञो नातिवर्तते ॥

யாகத்திற்கு முக்கியமான ஸாமம் எது? 

யாகத்திற்கு முக்கியமான யஜுஸ் எது? 

யாகத்தை எது தாங்குகிறது? 

யாகம் எதை மீறாமல் இருக்கிறது?

प्राणो वै यज्ञियं साम मनो वै यज्ञियं यजुः।

ऋग् एका वृणुते यज्ञं तां यज्ञो नातिवर्तते ॥

இதயத்தில் இருக்கும் பிராணனே யாகத்திற்கு முக்கியமான ஸாமம்.

மனமே யாகத்திற்கு முக்கியமான யஜுஸ். 

ரிக் மந்திரங்களே யாகத்தை தரிக்கிறது.

யாகம் ரிக் மந்திரங்களை மீறாமல் இருக்கிறது.

யாகம் செய்யும் போது, ரிக் மந்திரங்கள் சொல்லி பெருமாளை அழைக்கிறோம். பிறகு யஜுர் மந்திரங்கள் மன ஈடுபாட்டுடன் சொல்லி, பெருமாளுக்கு அக்னியின் வழியாக நெய்வேத்யம் செய்கிறோம். இதை ஏற்று கொண்ட பெருமாளை ஸாம கானம் பாடி ஆனந்தப்படுத்துகிறோம். உலகத்தில் ஏதாவது அடைய ஆசை இருந்தால், கடைசியாக, அதர்வண மந்திரங்கள் சொல்லி, நமக்கு தேவையான ஆசைகளை சொல்லி, அவரிடம் வரம் வாங்குகிறோம்.

किंस्वित् आवपतां श्रेष्ठं किंस्विन् निवपतां वरम्।

किंस्वित् प्रतिष्ठमानानां किस्वित् प्रसवतां वरम् ॥

பயிர் செய்பவனுக்கு சிறந்தது எது?

விதைப்பவனுக்கு எது சிறந்தது?

தன்னை நிலைநிறுத்தி கொள்ள விரும்புபவர்களுக்கு எது சிறந்தது?

சந்ததிக்கு எது சிறந்த வரம்?

वर्षम् आवपतां श्रेष्ठं बीजं निवपतां वरम्।

गावः प्रतिष्ठमानानां पुत्रः प्रसवतां वरः ॥

மழையே பயிர் செய்பவனுக்கு சிறந்தது.

நல்ல விதையே விதைப்பவனுக்கு சிறந்தது.

தன்னை நிலைநிறுத்தி கொள்ள விரும்புபவர்களுக்கு பசுக்களே சிறந்தது.(பசுக்களை காப்பவனை, பசுக்கள் காக்கும்)

புத்ர பாக்கியமே சிறந்த வரம்.

इन्द्रियार्थान् अनुभवन् बुद्धिमान् लोकपूजितः।

संमतः सर्वभूतानाम् उच्छ्वसन् को  न जीवति ॥

கண் காது மூக்கு, நாக்கு, தோல் போன்ற 5 புலன்களால் விஷயங்களை அனுபவிக்கிறான்.

சிறந்த புத்தி உள்ளவனாகவும் இருக்கிறான்.

உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும் இருக்கிறான்.

அனைத்து உயிர்களுக்கும் சம்மதமாகவும் இருக்கிறான்.

மூச்சு விட்டுக்கொண்டும் இருக்கிறான்.

ஆனால் உயிரில்லாதவனாக இருக்கிறான். அவன் யார்?

देवता अतिथि भृत्यानां पितॄणाम् आत्मनश्च यः।

न निर्वपति पञ्चानाम् उच्छ्वसन्न स जीवति ॥

எவன் தெய்வங்களுக்கும், அதிதிகளுக்கும் (வீட்டிற்கு திடீரென்று வந்தவர்களுக்கும்), தனக்கு வேலை செய்பவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தனக்கும் எவன் பூஜை (உணவு/மரியாதை) செய்வதில்லையோ, அப்படிப்பட்டவன், மூச்சு விட்டு கொண்டிருந்தாலும், அவன் உயிரில்லாதவனாகவே இருக்கிறான்.

किंस्विद् गुरुतरं भूमेः किंस्विद् उच्चतरं च खात्।

किंस्विद् शीघ्रतरं वायोः किंस्विद् बहुतरं तृणात् ॥

பூமியை காட்டிலும் கனமானது எது?

ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தது எது?

காற்றை விட வேகமானது எது?

புல்லை காட்டிலும் வேகமாக வளர்வது எது?

माता गुरुतरा भूमेः खात्पित: उच्चतर: तथा।

मनः शीघ्रतरं वाता:

चिन्ता बहुतरी तृणात् ॥

பிள்ளை மதித்தாலும், மிதித்தாலும் பொறுமையாக இருப்பவள் தாய். பூமியை காட்டிலும் தாய் கனமானவள்.

தந்தை ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தவர்

பெரிய பெருமாள் என்று நினைத்த மாத்திரம் மனம் ஶ்ரீரங்கம் சென்று விடும். மனம் காற்றை விட வேகமானது.

கவலை புல்லை காட்டிலும் வேகமாக வளரும்.

किंस्वित् सुप्तं न निमिषति किंस्वित् जातं न च इङ्गते।

किंस्वित् हृदयं न अस्ति किंस्वित् वेगेन वर्धते ॥

எது தூங்கும்போதும் கண் மூடாமல் இருக்கிறது?

எது பிறந்தும் அசைவில்லாமல் இருக்கிறது?

யாருக்கு இதயம் இல்லை?

எது வேகத்தால் வளர்கிறது?

मत्स्यः सुप्तो न निमिषति अण्डं जातं न च इङ्गते।

अश्मनो हृदयं न अस्ति नदी वेगेन वर्धते ॥

மீன் (ஆத்மா) தூங்கும்போதும் (தமஸ்) கண் மூடாமல் இருக்கிறது.

முட்டை (14 லோகங்கள்) பிறந்தும் அசைவில்லாமல் இருக்கிறது. 

கல்லுக்கு (யோகிகளுக்கு) இதயம் இல்லை. (யோகிக்கு சுக-துக்கம் அனுபவிக்க இதயம் இல்லை)

நதி (மனம்வேகத்தால் வளர்கிறது.

किंस्वित् प्रवसतो मित्रं किंस्वित् मित्रं गृहे सतः।

आतुरस् च किं मित्रं किंस्वित् मित्रं मरिष्यतः ॥

வெளியூரில் யார் நண்பன்?

வீட்டில் இருப்பவனுக்கு யார் நண்பன்?

நோயாளிக்கு யார் நண்பன்?

சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?

विद्या प्रवसतो मित्रं भार्या मित्रं गृहे सतः।

आतुरस्य भिषङ्मित्रं दानं मित्रं मरिष्यतः ॥

வெளியூரில் செல்பவனுக்கு படித்த கல்வியே நண்பன்.

வீட்டில் இருப்பவனுக்கு மனைவியே தோழி.

நோயாளிக்கு வைத்தியனே நண்பன்.

சாகப்போகிறவனுக்கு செய்த தானமே நண்பன்.

को अतिथिः सर्वभूतानां किंस्विद् धर्मं सनातनम्।

अमृतं किंस्विद् राजेन्द्र किंस्वित् सर्वमिदं जगत् ॥

அனைத்து உயிர்களுக்கும் யார் அதிதி?

எந்த தர்மம் மிகவும் தொன்மையானது?

ராஜேந்திரா! எது அம்ருதம்?

இந்த உலகம் அனைத்தும் எதனால் மூடப்பட்டு இருக்கிறது?

अतिथिः सर्वभूतानाम् अग्निः सोमो गवामृतम्।

सनातनो अमृतो धर्मो वायुः सर्वमिदं जगत् ॥

அனைத்து உயிர்களுக்கும் அதிதியாக (விருந்தாளி) அக்னியே வருகிறார். அவருக்கு தேவையான உபசாரத்தை கட்டாயம் செய்து விட வேண்டும். (வயிற்றில் உள்ள அக்னியும் ஒரு அதிதியே)

மோக்ஷத்தை பற்றி சொல்லும் தர்மமே மிகவும் தொன்மையானது.

வெண்மையான பசும்பால் (மஞ்சள் கலந்தால் மருந்தாகவும் இருக்கும், பாயாசமாகி விருந்தாகவும் இருக்கும்) அம்ருதமாகும்.

இந்த உலகம் அனைத்தும் வாயுவால் மூடப்பட்டு இருக்கிறது.

किंस्विद् एको विचरते जातः को जायते पुनः।

किंस्विद् धिमस्य भैषज्यं किंस्विद् आवपनं महत् ॥

யார் ஒருவர் தனித்து திரிந்து கொண்டு இருக்கிறார்?

பிறந்த பிறகு மீண்டும் எவன் பிறக்கிறான்?

பனிக்கு எது மருந்து?

எல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ள பெரிய பாத்திரம் எது?

सूर्य एको विचरते चन्द्रमा जायते पुनः।

अग्नि: हिमस्य भैषज्यं भूमि: आवपनं महत् ॥

சூரியன் (ஆத்மா) ஒருவரே தனித்து திரிந்து கொண்டு இருக்கிறார்.

சந்திரன் (மனம்) தேய்ந்து பிறகு மறுபடி பிறக்கிறான்.

அக்னி (வேதவாக்கை புரிந்து கொள்ளும் போது) பனிக்கு (அஞானம்) மருந்து.

பூமியானது (உடல்) எல்லாவற்றையும் (வித்யை, அவித்யை) அடக்கி வைத்துள்ள பெரிய பாத்திரம்.

किंस्विद् एकपदं धर्म्यं किंस्विद् एकपदं यशः।

किंस्विद् एकपदं स्वर्ग्यं किंस्विद् एकपदं सुखम् ॥

தர்மம் எதில் நிலைபெறுகிறது?

புகழ் எதில் நிலைபெறுகிறது?

ஸ்வர்க்கம் எதில் நிலைபெறுகிறது?

சுகம் எதில் நிலைபெறுகிறது?

दाक्ष्यम् एकपदं धर्म्यं दानम् एकपदं यशः।

सत्यम् एकपदं स्वर्ग्यं शीलम् एकपदं सुखम् ॥

தர்மம் (அவரவர் கடமை) முயற்சியில் நிலைபெறுகிறது. (தர்மத்தை முயற்சியில்  நிலைநாட்ட வேண்டும். தர்மம் தானாக அமையாது)

தானம் செய்ய செய்ய, புகழ் நிலைபெறுகிறது.

சத்தியத்தில் (உள்ளும் புறமும் உண்மையாக இருத்தல்) இருக்க இருக்க, ஸ்வர்க்கம் நிலைபெறுகிறது.

நல்லொழுக்கம் பெருக பெருக, சுகம் நிலைபெறுகிறது.

किंस्विद् आत्मा मनुष्यस्य किंस्विद् दैवकृतः सखा।

उपजीवनं किस्विद् अस्य किंस्विद् अस्य परायणम् ॥

மனிதனுக்கு ஆத்மா எது?

தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட துணை யார்?

மனிதனுடைய பிழைப்புக்கு ஸாதனம் எது?

மனிதனுக்கு முக்கியமான கதி (அடையவேண்டியது) என்ன?

पुत्र आत्मा मनुष्यस्य भार्या दैवकृतः सखा।

उपजीवनं च पर्जन्यो दानमस्य परायणम् ॥

மனிதனுக்கு ஆத்மாவாக (விருப்பமாக) இருப்பவன் "புத்திரனே".

தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட துணை "மனைவியே"

மனிதனுடைய பிழைப்புக்கு சாதனம் "மேகமே".

மனிதனுக்கு முக்கியமான கதி தானமே (அனைத்தையும் சரணாகதி செய்வதே)

धन्यानाम् उत्तमं किंस्विद् धनानां स्यात्किम् उत्तमम्। 

लाभानाम् उत्तमं किंस्यात् सुखानां स्यात्किम् उत्तमं ॥

செல்வத்தை ஏற்படுத்தி கொடுப்பவற்றுள் சிறந்தது எது?

செல்வத்தில் சிறந்த செல்வம் எது?

லாபங்களுள் எது சிறந்த லாபம்?

சுகங்களுள் எது சிறந்த சுகம்?

धन्यानामुत्तमं दाक्ष्यं धनानामुत्तमं श्रुतम्।

लाभानां श्रेय आरोग्यं सुखानां तुष्टि: त्तमा ॥

செல்வத்தை ஏற்படுத்தி கொடுப்பவற்றுள் சிறந்தது  ஊக்கமே.

செல்வத்தில் சிறந்த செல்வம் - சாஸ்திர ஞானமே (வேதத்தை உண்மையாக அறிந்து கொள்வதே)

லாபங்களுள் சிறந்த லாபம் - நோயற்ற வாழ்வே.

சுகங்களுள் சிறந்த சுகம் - திருப்தியே.

किंस्विद् धर्मपरं लोके कश्च धर्मः सदाफलः।

किं नियम्य न शोचन्ति कैश् सन्धिर्न जीर्यते ॥

உலகத்தில் சிறந்த தர்மம் எது?

எந்த தர்மம் எப்பொழுதுமே பலன் கொடுக்கும்?

எதை அடக்கினால், மனிதன் துயரம் அடையமாட்டான்.

எவர்களோடு ஏற்படும் நட்பு, குறையாமல் இருக்கும்?

आनृशंस्यं परं धर्मो त्रेताधर्मः सदाफलः।

मनो यम्य न शोचन्ति सन्धिः सद्भिर्न जीर्यते ॥

உலகத்தில் சிறந்த தர்மம் "அஹிம்ஸையே" (கொல்லாமை)

மோக்ஷத்தை தரக்கூடிய (அ உ ம - ஓம்) பிரணவம் ஜப தர்மம் எப்பொழுதுமே பலன் கொடுக்கும்.

மனதை அடக்கும் மனிதன், துயரம் அடைய மாட்டான்.

ஸாதுக்களோடு ஏற்படும் நட்பு, குறையாமல் இருக்கும்.

किं नु हित्वा प्रियो भवति किंनु हित्वा न शोचति।

किंनु हित्वा अर्थवान् भवति किंनु हित्वा सुखी भवेत् ॥

எதை விட்டால், மனிதன் அனைவருக்கும் ப்ரியமானவன் ஆகிறான்?

எதை விட்டால், மனிதன் துயரத்தை அடைவதில்லை?

எதை விட்டால், மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்?

எதை விட்டால், மனிதன் சுகம் பெறுகிறான்?

मानं हित्वा प्रियो भवति क्रोधं हित्वा न शोचति।

कामं हित्वा अर्थवान् भवति लोभं हित्वा सुखी भवेत् ॥

கர்வத்தை (தன்னை பற்றி ஒரு அபிமானம்) விட்டால், மனிதன் அனைவருக்கும் ப்ரியமாகிறான்.

கோபத்தை விட்டால், மனிதன் துயரத்தை அடைவதில்லை.

தர்மத்துக்கு எதிரான ஆசைகளை விட்டால், மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்.

பேராசையை மனிதன் விட்டு விட்டால், மனிதன் சுகம் பெறுகிறான்.

किम् अर्थं ब्राह्मणे दानं किम् अर्थं नटनर्तके।

किम् अर्थं चैव भृत्येषु किम् अर्थं चैव राजसु ॥

ப்ராம்மணனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

நடனம், நாட்டியம் ஆடுபவர்களுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

வேலைக்காரனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

அரசனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

धर्मार्थं ब्राह्मणे दानं यशोर्थं नटनर्तके।

भृत्येषु सङ्ग्रहार्थं च भयार्थं चैव राजसु ॥

தர்மத்துக்காக ப்ராம்மணனுக்கு தானம் கொடுக்கிறோம்.

புகழுக்காக நடனம், நாட்டியம் ஆடுபவர்களுக்கு தானம் கொடுக்கிறோம்.

வசப்படுத்துவதற்காக வேலைக்காரனுக்கு தானம் கொடுக்கிறோம்.

பயத்தை போக்கி கொள்ள, அரசனுக்கு தானம் கொடுக்கிறோம்.

केनस्विद् आवृतो लोकः केनस्विन्  प्रकाशते ।

केन त्यजति मित्राणि केन स्वर्गं न गच्छति ॥

எதனால் உலகம் மூடப்பட்டு இருக்கிறது?

எதனால் உலகம் பிரகாசிக்கவில்லை?

எந்த காரணத்தால், மனிதன் தன் நண்பனை இழக்கிறான்?

எந்த மனிதன் ஸ்வர்க்கத்தை அடையாமல் இருக்கிறான்?

अज्ञानेनावृतो लोक: मसा न प्रकाशते।

लोभात्त्यजति मित्राणि सङ्गात्स्वर्गं न गच्छति ॥

உலகம் (ஆத்மா) அஞானத்தால் மூடப்பட்டு இருக்கிறது.

தமோ குணத்தால் உலகம் (ஆத்மா) பிரகாசிக்கவில்லை.

லோபத்தினால் (பேராசை), மனிதன் தன் நண்பனை இழக்கிறான்.

(உலக) பற்றுதல் உடைய மனிதன் ஸ்வர்க்கத்தை அடையாமல் இருக்கிறான்.

मृतः कथं स्यात्पुरुषः कथं राष्ट्रं मृतं भवत्।

श्राद्धं मृतंकथं वा स्यात्कथं यज्ञा मृतो भवेत् ॥

எப்போது மனிதன் இறந்தவனுக்கு சமமாகிறான்?

அரசாங்கம் எப்பொழுது இறந்ததற்கு சமமாகிறது?

ஸ்ரார்த்தம் எப்போது அழிந்ததாகும்?

யாகம் எப்போது அழிந்ததாகும்?

मृतो दरिद्रः पुरुषो मृतं राष्ट्रमराजकम्।

मृतम् अश्रोत्रियं श्राद्धं मृतो यज्ञस्त्व दक्षिणः ॥

தரித்திரம் ஏற்படும் போது, மனிதன் இறந்தவனுக்கு சமமாகிறான்.

அரசன் இல்லாத அரசாங்கம் இறந்ததற்கு சமமாகிறது

வேதத்தை அத்யயனம் செய்யாத ப்ராம்மணன் செய்து வைக்கும் ஸ்ரார்த்தம் பயனில்லாது போகும்.

தக்ஷிணை இல்லாத யாகம், பயனற்றதாக போகும்.

का दिग्  किं उदकं पार्थ किम् अन्नं किंच वै विषम्।

श्राद्धस्य कालम् ख्याहि ततः पिब हरस्व च ॥

எது பாதை (திக்கு)?

பரத குலத்தவனே ! எது ஜலம்?

எது அன்னம்?

எது விஷம்?

சிரத்தையோடு இதற்கு பதில் சொல்லி விட்டு, தண்ணீர் எடுத்து கொள்.

सन्तो दिग् जलम् आकाशं गौ: अन्नं ब्राह्मणं विषम्।

श्राद्धस्य ब्राह्मणः कालः कथं वा यक्ष मन्यसे ॥

சாதுக்கள் செல்லும் பாதையே நமக்கும் பாதை (திக்கு).

ஆகாசத்திலிருந்து ஜலம் உண்டாகிறது. ஆகையால், ஆகாசமே ஜலம்.

பசுவின் பால் இல்லாமல் உலகம் இல்லை. பசுவே நமக்கு உணவு தருகிறது.

ப்ராம்மணனுடைய பொருள் விஷம். பிராம்மணன் பொருளை அபகரிப்பதால், விஷத்தை குடித்தது போல ஆகும்.

तपः किंलक्षणं प्रोक्तं को दमश्च प्रकीर्तितः।

क्षमा च का परा प्रोक्ता का च ह्रीः परिकीर्तिता ॥

எது தவம் என்று சொல்லப்படுகிறது?

எது தமம் என்று சொல்லப்படுகிறது?

எது பொறுமை என்று சொல்லப்படுகிறது?

எது வெட்கமென்று சொல்லப்படுகிறது?

तपः स्वधर्मवर्तित्वं मनसो दमनं दमः।

क्षमा द्वन्द्व सहिष्णुत्वं ह्रीर कार्य निवर्तनम् ॥

அவரவர் தர்மத்தை (கடமையை)  கடைப்பிடிப்பதே தவம்.

மனதை அடக்குவதே, சிறந்த தமம் என்று சொல்லப்படுகிறது.

ஸுகம் துக்கம் போன்ற இரட்டைகளை (த்வந்தம்) பொறுப்பதே, பொறுமை என்று சொல்லப்படுகிறது.

செய்ய கூடாத காரியத்திலிருந்து விலகி திரும்பி வருவதே, வெட்கம் என்று சொல்லப்படுகிறது.

किं ज्ञानं प्रोच्यते राजन् क: शमश्च प्रकीर्तितः।

दया च का परा प्रोक्ता किं च: आर्जवम् उदाहृतम् ॥

அரசே! ஞானம் எப்படி  உண்டாகும்?

எது சமமென்று என்று சொல்லப்படுகிறது?

எது கருணை (தயை) என்று சொல்லப்படுகிறது?

எது ஆர்ஜவம் என்று சொல்லப்படுகிறது?

ज्ञानं तत्त्वार्थ सम्बोधः शमश्चित्त प्रशान्तता।

दया सर्वसुखैषित्वम् आर्जवं सम-चित्तता ॥

உண்மையை அறியும் போது, ஞானம் (அறிவு) உண்டாகும்

சித்தத்தில் சாந்தி (அமைதி) இருப்பதே சமமென்று என்று சொல்லப்படுகிறது.

அனைவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதே, கருணை (தயை) என்று சொல்லப்படுகிறது.

எங்கும் சமமான எண்ணமே ஆர்ஜவம் என்று சொல்லப்படுகிறது. (அதாவது, உள்ளும் (மனம்) புறமும் (வாக்கு) ஒரே போல இருத்தல்)

कः शत्रु: दुर्जयः पुंसां कश्च व्याधि: अनन्तकः।

कीदृशश्च स्मृतः साधु: असाधुः कीदृशः स्मृतः ॥

மனிதனால் எளிதில் வெல்லமுடியாத பகைவன் யார்?

எது முடிவில்லாத வியாதி?

எப்படி இருந்தால், மனிதன் ஸாது என்று அழைக்கப்படுகிறான்?

யார் அஸாது என்று அழைக்கப்படுகிறான்?

क्रोधः सुदुर्जयः शत्रु: लोभो व्याधि: अनन्तकः।

सर्व भूत हितः साधु: असाधु: निर्दयः स्मृतः ॥

கோபமே மனிதனால் எளிதில் வெல்லமுடியாத பகைவன்.

பேராசையே  முடிவில்லாத வியாதி

அனைத்து உயிருக்கும் நன்மை செய்ய நினைப்பவனே, ஸாது என்று அழைக்கப்படுகிறான்

பிற உயிரிடத்தில் கருணை (தயை) அற்றவன், அஸாது என்று அழைக்கப்படுகிறான்

को मोहः प्रोच्यते राजन् कश्च मानः प्रकीर्तितः।

किं आलस्यं च विज्ञेयं कश्च शोकः प्रकीर्तितः ॥

அரசே! எது மோகம் என்று சொல்லப்படுகிறது?

எது மானம் என்று சொல்லப்படுகிறது?

எது சோம்பேறித்தனம் (ஆலஸ்யம்) என்று சொல்லப்படுகிறது.

எது சோகம் என்று சொல்லப்படுகிறது?

मोहो हि धर्म मूढ्तवं मान: त्व आत्मा अभिमानिता।

धर्म निष्क्रियता लस्यं शोकस्त्वज्ञानम् च्यते ॥

தர்மத்தை (கடமை) அறியாமல் இருப்பதே, மோகம் என்று சொல்லப்படுகிறது

'நான்' என்ற அஹங்காரமே, மானம் என்று சொல்லப்படுகிறது

தர்மத்தை (கடமையை) செய்யாமல் இருப்பதே சோம்பேறித்தனம் (ஆலஸ்யம்) என்று சொல்லப்படுகிறது.

உண்மையை அறியாமல் இருப்பதே (அஞானமே), சோகம் என்று சொல்லப்படுகிறது.

किं स्थैर्यम् ऋषिभिः प्रोक्तं किं च धैर्यम् उदाहृतम्।

स्नानं च किं परं प्रोक्तं दानं च किमिहोच्यते ॥

உறுதியான நிலை என்று ரிஷிகள் எதை சொல்கிறார்கள்?

எது தைரியம் என்று சொல்லப்படுகிறது?

எது சிறந்த ஸ்நானம் (குளியல்) என்று சொல்லப்படுகிறது?

எது தானம் என்று இந்த உலகில் சொல்லப்படுகிறது?

स्वधर्मे स्थिरता स्थैर्यं धैर्यम् इन्द्रिय निग्रहः।

स्नानं मनो मल त्यागो दानं वै भूत रक्षणम् ॥

அவரவர் தர்மத்தில் (கடமையில்) நிலைத்து இருப்பது, உறுதியான நிலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.

புலன்களால் உண்டாகும் உணர்ச்சிகளை அடக்குதல், தைரியம் என்று சொல்லப்படுகிறது.

மனதில் உள்ள அழுக்கை கலைவதே, சிறந்த ஸ்நானம் (குளியல்) என்று சொல்லப்படுகிறது.

உயிர்களை காப்பதே, தானம் என்று இந்த உலகில் சொல்லப்படுகிறது. (பிராணிகள் கொலை செய்யப்படாமல், உயிர் தானம் செய்வதே)

कः पण्डितः पुमान्ज्ञेयो नास्तिकः कश्च उच्यते।

को मूर्खः कश्च कामः स्यात्को मत्सर इति स्मृतः ॥

யார் பண்டிதன் என்று அறியப்படுகிறான்?

யார் நாஸ்திகன் என்று சொல்லப்படுகிறான்?

யார் மூர்க்கன் என்று சொல்லப்படுகிறான்?

எது காமம் (இச்சை) ஆகும்?

எது மாத்ஸர்யம் என்று சொல்லப்படுகிறது?

धर्मज्ञः पण्डितो ज्ञेयो नास्तिको मूर्ख उच्यते।

कामः संसारहेतु: च हृत्तापो मत्सरः स्मृतः ॥

அனைத்து தர்மங்களையும் (கடமைகளை) அறிந்தவன் பண்டிதன் என்று சொல்லப்படுகிறான்.

மூர்க்கனே நாஸ்திகன் என்று சொல்லப்படுகிறான்.

சம்சாரம் என்ற பிறப்பே, காமம் ஆகும்.

மனக்கொதிப்பே மாத்ஸர்யம் என்று சொல்லப்படுகிறது

को अहंकार इति प्रोक्तः कश्च दम्भः प्रकीर्तितः।

किं तद् दैवं परं प्रोक्तं किं तत् पैशुन्यं उच्यते ॥

எது அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது?

எது டம்பம் என்று சொல்லப்படுகிறது?

தெய்வம் (விதி) என்பது என்ன?

எது பைசூன்யம் என்று சொல்லப்படுகிறது?

महा ज्ञानम् हंकारो दम्भो धर्मो ध्वजोच्छ्रयः।

दैवं दानफलं प्रोक्तं पैशुन्यं परदूषणम् ॥

பெரிய அஞானமே (உண்மையை அறிய இயலாத நிலையே), அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது.

'தர்மத்தை அனுஷ்டிக்கிறேன்' என்று பிறருக்கு தெரிவித்தலே, டம்பம் என்று சொல்லப்படுகிறது.

தானம் செய்ததால் ஏற்படும் பலனே விதி.

பிறரை திட்டுவதே, பைசூன்யம் என்று சொல்லப்படுகிறது.

धर्म: च अर्थ: च काम: च परस्पर विरोधिनः।

एषां नित्य विरुद्धानां कथम् एकत्र संगमः ॥

அறம், பொருள், இன்பம் மூன்றும் ஒன்றோடொன்று விரோதமுள்ளவை. எப்பொழுதும் விரோதமுள்ள இவை மூன்றும், ஓரிடத்தில் எப்போது சேரும்?

यदा धर्म: भार्या च परस्पर वशानुगौ।

तदा धर्म अर्थ कामानां त्रयाणामपि संगमः ॥

எப்பொழுது தர்மமும் (கடமையும்), மனைவியும் சேர்ந்து நடப்பார்களோ, அப்பொழுது அறம், பொருள், இன்பம் மூன்றும் சேரும்.

अक्षयो नरकः केन प्राप्यते भरतर्षभ।

एतन्मे पृच्छतः प्रश्नं तच्छीघ्रं वक्तुमर्हसि ॥

நீண்ட நரகத்தை யார் அடைவார்கள்?

இதற்கு விடை அளிப்பாயாக..

ब्राह्मणं स्वयमाहूय याचमानम् अकिंचनम्।

पश्चान्नास्तीति यो ब्रूयात्सो अक्षयं नरकं व्रजेत् ॥

பொருள் இல்லாத நிலையில், யாசகம் செய்யும் ப்ராம்மணனை தானே கூப்பிட்டு, பிறகு கொடுப்பதற்கு இல்லையென்று எந்த மனிதன் சொல்வானோ, அவன் நீண்ட நரகத்தை அடைவான்.

वेदेषु धर्मशास्त्रेषु मिथ्या यो वै द्विजातिषु।

देवेषु पितृधर्मेषु सो अक्षयं नरकं व्रजेत् ॥

எவன் வேதத்தை பற்றி பொய் சொல்வானோ, தர்மத்தை பற்றி பொய் சொல்வானோ, ப்ராம்மணனிடத்தில் பொய் சொல்வானோ, தேவர்களிடத்தில் பொய் சொல்வானோ, பித்ரு காரியங்களில் பொய் சொல்வானோ, அவனும் நீண்ட நரகத்தை அடைவான்.

विद्यमाने धने लोभाद् दानभोग विवर्जितः।

पश्चान् नास्ति इति यो ब्रूयात्सो अक्षयं नरकं व्रजेत् ॥

தனம் இருக்கும் போதே, பேராசை காரணமாக பிறருக்கு கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் "இல்லை" என்று சொல்வானோ, அவனும் நீண்ட நரகத்தை அடைவான்.

राजन् कुलेन वृत्तेन स्वाध्यायेन श्रुतेन वा।

ब्राह्मण्यं केन भवति प्रब्रूह्येतत् सुनिश्चितम् ॥

அரசனே! ஒருவன் குலத்தால் ப்ராம்மணனாகிறானா? ஒழுக்கத்தால் ப்ராம்மணனாகிறானா? வேதம் ஓதுவதால் ப்ராம்மணனாகிறானா? சாஸ்திர அறிவினால் ப்ராம்மணனாகிறானா?

இதனை நன்றாக யோசித்து பதில் சொல்வாயாக?

शृणु यक्ष कुलं तात न स्वाध्यायो न च श्रुतम्।

कारणं हि द्विजत्वे च वृत्तमेव न संशयः ॥

யக்ஷனே ! கேள். குலத்தாலோ, வேதம் ஓதுவதாலோ, சாஸ்திர அறிவினாலோ ஒருவன் ப்ராம்மணன் ஆவதில்லை. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன்  ப்ராம்மணன் ஆகிறான். இதில் சந்தேகம் இல்லை.

वृत्तं यत्नेन संरक्ष्यं ब्राह्मणेन विशेषतः।

अक्षीणवृत्तो न क्षीणो वृत्ततस्तु हतो हतः ॥

ஆதலால், பிராம்மணன் தன் ஒழுக்கத்தை பெரும் முயற்சி செய்து பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒழுக்க குறையற்ற பிராம்மணன் எந்த குறையும் இல்லாமல் மதிக்கப்படுவான். ஒழுக்கத்தை தொலைத்தவன் கெட்டு போனவனே !

पठकाः पाठकाश्चैव ये चान्ये शास्त्रचिन्तकाः।

सर्वे व्यसनिनो मूर्खा यः क्रियावान्स पण्डितः ॥

படிப்பவர்கள், படிப்பை சொல்லி தருபவர்கள், மேலும் பல சாஸ்திரங்களை சிந்தனை செய்பவர்கள், யாராக இருந்தாலும், தெரிந்து கொண்டதே பரம பிரயோஜனம் என்று நினைப்பார்களென்றால், அவர்களே மூடர்கள். எவன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவானோ , அவனே பண்டிதன்.

चतुर्वेदोऽपि दुर्वृत्तः स शूद्रादतिरिच्यते।

यो अग्निहोत्र परो दान्तः स ब्राह्मण इति स्मृतः ॥

நான்கு வேதத்தை அத்யயனம் செய்தவனே என்றாலும், ஒழுக்கமில்லாவிட்டால், அந்த பிராம்மணன் (MLA/MP) சூத்திரனுக்கும் (employee) கீழானவன்.

அக்னி ஹோத்திரத்தில் பற்றுதலும், புலன்களை (காமத்தை கோபத்தை வளர்க்கும் விஷயங்களை பார்ப்பது, பேசுவது, முகர்வது, தொடுவது, கேட்பது) அடக்கி வைத்து இருப்பவன் ப்ராம்மணாக கருதப்படுகிறான்.

प्रियवचनवादी किं लभते

विमृशित कार्यकरः किं लभते।

बहु-मित्रकरः किं लभते

धर्मे रतः किं लभते कथय ॥

பிரியமாக பேசுபவன் எதை அடைகிறான்?

ஆலோசித்து காரியத்தை செய்பவன் எதை அடைகிறான்?

பல நண்பர்களை கொண்டிருப்பவன் எதை அடைகிறான்?

தர்மத்தின் வழியில் இருப்பவன் எதை அடைகிறான்?

प्रियवचनवादी प्रीयो भवति

विमृशितकार्यकरोऽधिकं जयति।

बहुमित्रकरः सुखं वसते

यश्च धर्मरतः स गतिं लभते ॥

பிரியமாக பேசுபவன் அனைவர்க்கும் பிரயமானவனாகிறான்.

ஆலோசித்து காரியத்தை செய்பவன் வெற்றி அடைகிறான்.

பல நண்பர்களை கொண்டிருப்பவன் சுகமாக இருக்கிறான்.

தர்மத்தின் வழியில் இருப்பவன் நற்கதியை அடைகிறான்

को मोदते किम् श्चर्यं कः पन्थाः का च वार्तिका।

वद मे चतुरः प्रश्नान्मृता जीवन्तु बान्धवाः ॥

எவன் சந்தோஷமாக இருக்கிறான்?

எது ஆச்சர்யம்?

எது வழி?

எது தினமும் நடக்கும் நிகழ்ச்சி?

இந்த 4 கேள்விக்கும் பதில் அளிப்பாயாக.

पञ्चमेऽहनि षष्ठे वा शाकं पचति स्वे गृहे।

अनृणी चाप्रवासी च स वारिचर मोदते ॥

ஜலத்தில் சஞ்சரிக்கும் யக்ஷனே!

எந்த மனிதனால் பகலில் 5வது அல்லது 6வது காலத்தில், (12-4PM) (ஒரு பகலை 8ஆக பிரிப்பார்கள்) குறைந்தது ஒரு கீரையாவது தன் வீட்டில் சமைத்து சாப்பிட முடிகிறதோ! கடனில்லாதவனாகவும், வெளியூர் பயணம் செல்லவேண்டிய அவசியமில்லாதவனாகவும் எவன் இருக்கிறானோ, அவனே சந்தோஷமாக இருக்கிறான்.

अहन्यहनि भूतानि गच्छन्तीह यमालयम्।

शेषाः स्थावरमिच्छन्ति किमाश्चर्यमतः परम् ॥

இந்த உலகில் தினமும் எண்ணிலடங்கா உயிர்கள் யமலோகம் சென்று கொண்டே இருக்கிறது. மிச்சப்பட்டு இருக்கும் உயிர்கள் (மனிதர்கள்) தாங்கள் மட்டும் நிலையாக இருக்க போகிறோம் என்று நினைக்கிறார்கள். இதை காட்டிலும் ஆச்சர்யம் வேறு என்ன இருக்கிறது?

तर्को प्रतिष्ठः श्रुतयो विभिन्ना

नैको मुनिर्यस्य मतं प्रमाणम्।

धर्मस्य तत्त्वं निहितं गुहायां

महाजनो येन गतः स पन्था ॥

விவாதத்தால் தர்மத்தை நிர்ணயிக்க முடியாது (பேசுபவன் சாமர்த்தியமே ஜெயிக்கும்)

வேதத்திலோ ஒரு மந்திரம் பல அர்த்தங்களை கொண்டு இருக்கிறது.

அதை கொண்டும் உண்மையான தர்மத்தை நிர்ணயிக்க முடியவில்லை.

ஒரு முனிவர் சொல்லும் சாஸ்திரம் மற்றொரு முனிவர் சொல்வதற்கு  மாறாக இருக்கிறது.

எது தர்மம் என்று அறிவது உண்மையில் ரகசியமாக தான் வைக்கப்பட்டுள்ளது.

ஆதலால்,

எந்த வழியில் பல பெரியோர்கள் சென்றார்களோ, அது தான் நாம் பின்பற்ற வேண்டிய தர்ம வழி.

पृथ्वी विभाण्डं गगनं पिघानं

सूर्याग्निना रात्रिदिवेन्धनेन।

मास: तु दर्वी परिघट्टनेन

भूतानि कालः पचतीति वार्ता ॥

பூமியே ஒரு பாண்டம் போல உள்ளது. ஆகாயம் அதற்கு மூடி போல இருக்கிறது. இந்த பூமி என்ற பாண்டத்தில், இரவு பகல் என்ற விறகுகளை வைத்து, சூரியன் என்ற அக்னி மூட்டி, மாதங்கள், காலங்கள் (ருதுக்கள்) என்ற கரண்டியை கொண்டு பூத உடல்களை கிளறி, பக்குவம் செய்து கொண்டே இருக்கிறது காலம். இதுவே தினமும் நடந்து வருகின்ற நிகழ்வு.

व्याख्याता मे त्वया प्रश्ना यथातत्वं परंतप।

पुरुषं त्विदानीं व्याख्याहि यश्च सर्वधनी नरः ॥

எதிரிகளை கொளுத்துபவனே! நான் கேட்ட கேள்விகளுக்கு உள்ளது உள்ளபடி விடை அளித்தாய்.

யார் புருஷன்?

யார் அனைத்து செல்வமும் உடைய மனிதன் என்று கருதப்படுகிறான்?

இதை விரிவாக கூறு.

दिवं स्पृशति भूमिं च शब्दः पुण्येन कर्मणा।

यावत्स शब्दो भवति तावत्पुरुष उच्यते ॥

புண்ணியங்கள் (நல்வினை) செய்வதால், பேரும் புகழும் பூமியில் மட்டுமல்லாது சொர்க்க லோகம் வரை பரவுகிறது. அந்த புகழ் சொல் எதுநாள் ஒருவனுக்கு இருக்கிறதோ, அது வரை "புருஷன்" என்று மதிக்கப்படுகிறான்.

तुल्ये प्रियाप्रिये यस् सुखदुःखे तथैव च।

अतीतानागते चोभे सवै पुरुष उच्येत ॥

எந்த மனிதன் விருப்பு-வெறுப்பு, சுக-துக்கம், வருமானம்-நஷ்டம் போன்ற இரட்டைகளை கண்டும் சமமாக இருக்கின்றானோ, அவனும் "புருஷன்" என்று மதிக்கப்படுகிறான்.

समत्वं यस्य सर्वेषु निस्पृहः शान्त मानसः।

सुप्रसन्नः सदा योगी स वै सर्वधनी नरः ॥

எந்த மனிதன் எந்த பொருளை கண்டாலும் சலனமில்லாமல், சம புத்தியோடு, ஆசை அற்றவனாக, சாந்தமான மனநிலையுடன், தெளிவுள்ளவனாக, எப்போதும் ப்ரம்மத்தையே தியானித்து கொண்டு இருக்கிறானோ, அந்த மனிதனே, எல்லா செல்வமும் உடையவன் என்று கருதப்படுகிறான்.