Followers

Search Here...

Showing posts with label வியாசர். Show all posts
Showing posts with label வியாசர். Show all posts

Monday 1 May 2023

வியாசர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? த்வைபாயனர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? அறிவோம் மஹாபாரதம்

வியாசர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? அறிவோம் மஹாபாரதம்

एवं द्वैपायनो जज्ञे सत्यवत्यां पराशरात्।

न्यस्तो द्वीपे यद् बाल: तस्माद् द्वैपायनःस्मृतः।।

- adi parva (Vyasa mahabharata)

பராசரருக்கும், சத்யவதிக்கும் பிறந்த இவர், யமுனை கரையிலேயே (த்வீபத்தில்) குழந்தையாக விடப்பட்டதால், இவருக்கு 'த்வைபாயனர்" என்ற பெயர் வந்தது.


पादापसारिणं धर्मं स तु विद्वान्युगे युगे।

आयुः शक्तिं च मर्त्यानां युगावस्थामवेक्ष्यच।।

ब्रह्मणो ब्राह्मणानां च तथानुग्रह काङ्क्षया।

विव्यास वेदान्यस्मत्स तस्माद् व्यास इति स्मृतः।।

- adi parva (Vyasa mahabharata)

தர்மம் ஒவ்வொரு யுகமாக நகரும் போது, கால் பங்கு விலகி போவதையும், மனிதனின் ஆயுளும், சக்தியும் யுகங்களுக்கு தக்கபடி இருப்பதையும் பார்த்த அந்த த்வைபாயனர், 

வேதத்தையும், ப்ராம்மணர்களையும் அனுசரித்து, வேதத்தை வகுத்ததால், அவருக்கு "வியாசர்" என்று பெயரும் ஏற்பட்டது.

वेदानध्यापयामास महाभारत पञ्चमान्।

सुमन्तुं जैमिनिं पैलं शुकं चैव स्वमात्मजम्।।

அந்த வியாசர், வேதத்தை, பைலருக்கும் (ரிக்), சுமந்துவுக்கும், ஜைமினிக்கும் (ஸாம), தன் பிள்ளையான சுகருக்கும் சொல்லிவைத்தார்.

Sunday 26 March 2023

மகாபாரதம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன? வைசம்பாயணர் (வியாசரின் சிஷ்யர்) சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்.

"சர்பயாகம் செய்கிறான்" என்று கேள்விப்பட்ட வியாசர்,

ஜனமேஜெயன் தீக்ஷை பெற்று அமர்ந்து இருக்கும் சர்ப யாகசாலையில் பிரவேசித்தார்.

श्रुत्वा तु सर्पसत्राय दीक्षितं जनमेजयम्।

अभ्यगच्छद् ऋषि: विद्वान् कृष्णद्वैपायन: तदा।।


ஜனமேஜெயன், யாக சாலைக்கு வந்த வியாச பகவானை நமஸ்கரித்து, பாத்யம், அர்க்ய தீர்த்தம் கொடுத்து வரவேற்று, ஆசனம் கொடுத்தார்.


மேலும்,

"வியாச பகவன்!கௌரவர்கள் பற்றியும் பாண்டவர்கள் பற்றியும் தாங்கள் நேரில் அறிவீர்கள். அவர்களுக்குள் எப்படி விரோதம் ஏற்பட்டது? நீங்கள் அந்த வரலாற்றை சொல்ல, அதை நான் கேட்க ஆசைப்படுகிறேன்.

எண்ணிலடங்கா உயிர்கள் மடிய காரணமான அந்தப் பெரும்போர், எனது பாட்டனார்களுக்குள் ஏன் நடந்தது? 

அவர்களின் தெளிந்த அறிவும் விதியால் மூடப்பட்டதோ? 

ஓ பிராமணர்களில் சிறந்தவரே ! 

அதை எனக்கு முழுமையாக, எவை எவை எவ்வாறு நடந்தனவோ அவற்றை அவ்வாறே சொல்ல வேண்டும். பகவன்! நீங்கள் நடந்தவற்றை அறிந்தவர் என்பதால் உங்களிடம் நடந்ததை கேட்க விரும்புகிறேன்" என்றார் ஜனமேஜயன்.

जनमेजय उवाच।

कुरूणां पाण्डवानां च भवान् प्रत्यक्ष दर्शिवान्।

तेषां चरितम् इच्छामि कथ्यमानं त्वया द्विज।।

कथं सम भवद् भेद: तेषाम् अक्लिष्ट कर्मणाम्।

तच्च युद्धं कथं वृत्तं भूतान्त करणं महत्।।

पितामहानां सर्वेषां दैवेनाविष्ट चेतसाम्।

कार्त्स्न्येनैतन्ममाचक्ष्व यथा वृत्तं द्विजोत्तम।

इच्छामि तत्त्वतः श्रोतुं भगवन् कुशलो ह्यसि।।


ஜனமேஜயனின் பிரார்த்தனையை கேட்ட கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாசர், தனது அருகில் அமர்ந்திருந்த தமது சீடரான வைசம்பாயனரை பார்த்து இவ்வாறு பேசலானார்,

सौति: उवाच।

तस्य तद् वचनं श्रुत्वा कृष्णद्वैपायनस्श: तदा।

शशास शिष्यम् आसीनं वैशंपायनम् अन्तिके।।

"முன்பு கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் இருந்த பிரிவை, நீ என்னிடம் எவ்வாறு கேட்டறிந்தாயோ, அவ்வாறே, மன்னனுக்கு (ஜனமேஜயனுக்கு) முழுமையாக அப்படியே சொல்என்றார்.

व्यास उवाच।

कुरूणां पाण्डवानां च यथा भेदो अभवत्पुरा।

तद् अस्मै सर्वम् आचक्ष्व यन्मत्तः श्रुतवानसि।।

गुरो: वचनम् आज्ञाय स तु विप्रर्षभस: तदा।

आचचक्षे ततः सर्वम् इतिहासं पुरातनम्।।

राज्ञे तस्मै सदस्येभ्यः पार्थिवेभ्य: च सर्वशः।

भेदं सर्व विनाशं च कुरु पाण्डवयो स: तदा।।

Adi parva 60


வைசம்பாயணர் (வியாசரின் சிஷ்யர்) சுருக்கமாக மஹாபாரத சரித்திர நிகழ்வை ஜனமேஜெயனுக்கு சொன்னார்.

"தனக்கு விரிவாக சொல்ல வேண்டும்" என்று ஜனமேஜெயன் கேட்க, 

வைசம்பாயணர் பாரதத்தின் பெருமையை ஜனமேஜெயனுக்கு விரிவாக சொல்ல ஆரம்பிக்கிறார்.

அரசே! கொஞ்ச நேரம் (ஓய்வு) எடுத்து கொண்டு வாருங்கள். இந்த புண்ணியமான சரித்திரத்தை பற்றி எவ்வாறு கிருஷ்ண த்வைபாயணர் (வியாசர்) சொன்னாரோ, அப்படியே விவரமாக சொல்கிறேன்.

वैशंपायन उवाच।

क्षणं कुरु महाराज विपुलो अयमनुक्रमः।

पुण्याख्यानस्य वक्तव्यः कृष्णद्वैपायनेरितः।।

வியாச மஹரிஷி அனைத்து லோகங்களிலும் பூஜிக்க்கபடுகிறார். மகாத்மாவாகிய வியாசரின் அபிப்ராயத்தை அப்படியே விளக்க போகிறேன்.  

महर्षेः सर्व-लोकेषु पूजितस्य महात्मनः।

प्रवक्ष्यामि मतं कृत्स्नं व्यासस्य अमित तेजसः।।

சத்யவதி புத்ரனான  வியாச பகவான் புண்ய கர்மமான இந்த மகாபாரதத்தை, நூறு ஆயிரம் (100000) ஸ்லோகங்களாக இயற்றி உள்ளார். 

इदं शतसहस्रं हि श्लोकानां पुण्य कर्मणाम्।

सत्यवति आत्मजेनेह व्याख्यातम् अमितौजसा।।

இந்த மகாபாரதத்தை உபாக்யானங்கள் (பல உதாரணங்கள்) மூலமும் மேலும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இப்போது நான் உங்களுக்கு வியாசர் கொடுத்த கிரந்தபடியே அப்படியே சொல்லப்போகிறேன். 

उपाख्यानैः सह ज्ञेयं श्राव्यं भारतम् उत्तमम्।

संक्षेपेण तु वक्ष्यामि सर्वमेतन् नराधिप।।

200 (100*2) அத்தியாயங்களும், 100 (100*1) பர்வங்களும், நூறு ஆயிரம் (1,00,000) ஸ்லோகங்களும் உள்ளன. மகரிஷி வியாசர் 100 பர்வங்களையும் 18 (8+10) பெரும் பர்வங்களுக்குள் தொகுத்து கொடுத்துள்ளார்.

अध्यायानां सहस्रे-द्वे पर्वणां शतम्-एव च।

श्लोकानां तु सहस्राणि नवतिश्च दशैव च।

ततो अष्टा-दशभिः पर्वैः संगृहीतं महर्षिणा'।।

இந்த வியாச மஹாபாரதத்தை சொல்லும் மனிதனும், அதை கேட்கும் மனிதனும், பூலோக ஆயுசு முடிந்த பிறகு, ப்ரம்ம லோகமான சத்ய லோகம் சென்று, பிரம்மாவுக்கு நிகரான ஆனந்தத்தை பெறுவார்கள்.

य इदं श्रावयेद् विद्वान्ये चेदं शृणुयुः नराः।

ते ब्रह्मणः स्थानमेत्य प्राप्नुयुः देव-तुल्यताम्।।

மகாபாரதம் வேதத்திற்கு நிகரானது. புண்ணியங்களுக்குள் உத்தமமானது. கேட்கத்தக்கவைகளில் மிகவும் உத்தமமானது. இந்த புராணம் ரிஷிகளால் மிகவும் போற்றப்படுகிறது.

इदं हि वेदैः समितं पवित्रम् अपि च उत्तमम्।

श्राव्याणाम् उत्तमं च इदं पुराणम् ऋषि संस्तुतम्।।

இந்த மஹாபுண்யமான இதிகாசத்தில் பொருள், இன்பம் போன்ற புருஷார்த்தங்கள் விரிவாக உபதேசிக்கப்பட்டுள்ளது 

अस्मिन् अर्थ: च काम: च निखिलेन: उपदेक्ष्यते।

इतिहासे महापुण्ये बुद्धिश्च परिनैष्ठिकी।।

உயர்ந்த குணம் உடையவர்களிடமோ, சுயநலமின்றி மற்றவருக்கு கொடுப்பதில் ஆர்வம் உள்ளவரிடமோ, உண்மையிலிருந்து விலகாதவரிடமோ, கடவுளை நம்பாத நாஸ்தீகனாக இல்லாமல் இருப்பவரிடமோ, வேதமாகிய இந்த மகாபாரதத்தை சொல்லி, அதன் மூலம் அர்த்தம் (பொருள்) சம்பாதிக்கலாம். 

अक्षुद्रान् दानशीलांश्च सत्यशीलान् अ-नास्तिकान्।

कार्ष्णं वेदम् इमं विद्वान् छ्रावयित्वा अर्थम् अश्नुते।।

ப்ரூண ஹத்தி (கருவில் இருக்கும் குழந்தையை தெரிந்தே கொல்லுதல்) செய்வதால் ஏற்படும் பாபத்தை, வியாச மஹாபாரதம் கேட்பதாலேயே நிச்சயமாக போக்கி கொள்ள முடியும். 

भ्रूणहत्या कृतं च अपि पापं जह्याद् असंशयम्।

इतिहासम् इमं श्रुत्वा पुरुष: अपि सुदारुणः।।

வியாச மகாபாரதத்தை படிப்பவர்கள், ராகுவால் விழுங்கபட்ட சந்திரன் எப்படி கிரகணம் முடிந்து பிரகாசமாக வெளிப்படுகிறானோ அது போல, பாபங்கள் அனைத்தும் விலகி, புண்ணிய ஆத்மாவாக ஆகிறார்கள் 

मुच्यते सर्व पापेभ्यो राहुणा चन्द्रमा यथा।

இந்த வியாச மஹாபாரதம் வெற்றிக்கான இதிகாசம். வெற்றி அடைய ஆசைப்படுபவர்கள், இந்த இதிஹாசத்தை கேட்க வேண்டும்.

जयो नाम इतिहासो अयं श्रोतव्यो विजिगीषुणा।।

நாட்டை ஆள ஆசைபடுபவன், வியாச மகாபாரதத்தை கேட்டால் எதிரிகளை ஜெயித்து பூமியை தன் வசப்படுத்தி கொள்வான்.

महीं विजयते राजा शत्रूं च अपि पराजयेत्।

வியாச மகாபாரதத்தை கேட்டால், நிச்சயம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

इदं पुंसवनं श्रेष्ठम् इदं स्वस्त्ययनं महत्।।

தேசத்தின் அரசியும், யுவராஜனும் அவசியம் கேட்க வேண்டியது வியாச மஹாபாரதம். இதை கேட்பதால், தேசத்தின் அரசி வீரமிகுந்த புத்திரனையோ, ராஜ்யத்தை நடத்தும் திறன் படைத்த பெண்ணையோ பெற்றெடுப்பாள். 

महिषी युवराजाभ्यां श्रोतव्यं बहुशस्तथा।

वीरं जनयते पुत्रं कन्यां वा राज्य भागिनीम्।।

வ்யாசரால் கொடுக்கப்பட்ட இந்த மஹாபாரதத்தில், புண்ணியங்களை கொடுக்கும் தர்ம சாஸ்திரமும் (அறம்), அர்த சாஸ்திரமும் (பொருள்), மோக்ஷ சாஸ்திரமும் (வீடு) நிரம்ப கிடக்கிறது.

धर्म-शास्त्रम् इदं पुण्यम् अर्थ-शास्त्रम् इदं परम्।

मोक्ष-शास्त्रम् इदं प्रोक्तं व्यासेनामित बुद्धिना।

அறம், பொருள், இன்பம், வீடு போன்றவற்றை பற்றி இந்த இதிகாசத்தில் என்னென்ன சொல்லப்பட்டு இருக்கிறதோ, அது தான் மற்ற தர்ம சாஸ்திரங்களில் உள்ளது. இதில் இல்லாதது என்று ஏதுமில்லை.

धर्मे च अर्थे च कामे च मोक्षे च भरतर्षभ।

यदिहास्ति तद् अन्यत्र यन्नेहास्ति न कुत्रचित्।

இந்த வியாச மகாபாரதத்தை பிராம்மணர்கள் கேட்டு கொண்டும், சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இனியும் சொல்லிகொண்டே இருப்பார்கள். இனியும் கேட்டு கொண்டே இருப்பார்கள்.

इदं हि ब्राह्मणै: लोके आख्यातं ब्राह्मणेषु इह'।

संप्रत्याचक्षते चेदं तथा श्रोष्यन्ति चापरे।।

வியாச மகாபாரதத்தை கேட்பதால், பிள்ளைகள் தாய் தந்தையை கைவிடாதவர்களாக இருப்பார்கள். கொடுத்த வேலையை செய்பவர்கள் (employee) இதை கேட்பதால், எஜமானனுக்கு (employer) விருப்பபட்டதை செய்பவர்களாக இருப்பார்கள். பரத வம்சத்தில் பிறந்தவர்களை பற்றி பொறாமை இல்லாமல் கேட்பவர்களுக்கு வியாதியை கண்டு பயம் ஏற்படாது. அவர்களுக்கு பரலோகத்தை கண்டு பயமில்லை என்று சொல்லவும் வேண்டுமா?

पुत्राः शुश्रूषवः सन्ति प्रेष्या: च प्रियकारिणः।

भरतानां महज्जन्म शृण्वताम् अनसूयताम्।

न अस्ति व्याधि-भयं तेषां परलोकभयं कुतः।।

வியாச மஹாபாரதத்தை கேட்கும் மனிதன், உடலால், பேச்சினால், மனதால் செய்த பாபத்தை அழித்து கொள்கிறான்.

शरीरेण कृतं पापं वाचा च मनसैव च।

सर्वं संत्यजति क्षिप्रं य इदं शृणुयान् नरः।।

செல்வத்தையும், புகழையும், நீண்ட ஆயுளையும், புண்ணியத்தையும், ஸ்வர்க்கத்தையும் கொடுக்கக்கூடிய இந்த மகாபாரதம் என்ற புண்ணிய கிரந்தம், கிருஷ்ண த்வைபாயனரால் கொடுக்கப்பட்டது.

धन्यं यशस्यम् आयुष्यं पुण्यं स्वर्ग्यं तथैव च।

कृष्णद्वैपायनेनेदं कृतं पुण्य चिकीर्षुणा।।

இந்த மஹாபாரதத்தில், பாண்டவர்களின் புகழை உலகிற்கு காட்டினார். மேலும் இந்த பூலோகத்தில் ஆண்டு கொண்டிருந்த பல பொலிவுள்ள க்ஷத்ரியர்கள் பற்றியும் சொல்கிறார். 

कीर्तिं प्रथयता लोके पाण्डवानां महात्मनाम्।

अन्येषां क्षत्रियाणां च भूरिद्रविण तेजसाम्।।

அனைத்து கல்வியும் தரக்கூடிய, உலகத்திற்கு சம்மதமான இந்த இதிஹாசத்தை, உலகத்தில் எந்த மனிதன் புண்ணியத்தை விரும்பி பிராம்மணர்களுக்கு சொல்வானோ, அவன் அழியா புகழுடன் இருப்பான்.

सर्व विद्या वदातानां लोके प्रथित कर्मणाम्।

य इदं मानवो लोके पुण्यार्थे ब्राह्मणाञ्छुचीन्।।

மகாபுண்யத்தை தரும், சனாதனமான தர்மத்தை சொல்லும், குரு வம்சத்தின் சரித்திரத்தை யார் கேட்கிறார்களோ அவர்களுடைய வம்சம் பெரிய வளர்ச்சி அடையும். உலகத்தில் மிகவும் கொண்டாடப்படுவார்கள். 

श्रावयेत महापुण्यं तस्य धर्मः सनातनः।

कुरूणां प्रथितं वंशं कीर्तयन् सततं शुचिः।

वंशम् आप्नोति विपुलं लोके पूज्यतमो भवेत्।।

எந்த பிராம்மணன் நியமம் தவறாமல், வருடத்தில் 4 மாதங்கள் தொடர்ந்து வியாச மகாபாரதத்தை படிப்பானோ, அவன் செய்த அனைத்து பாபங்களும் அழிந்து போகும்.

योऽधीते भारतं पुम्यं ब्राह्मणो नियत व्रतः।

चतुरो वार्षिकान् मासान् सर्वपापैः प्रमुच्यते।।

வியாச மகாபாரதத்தை படித்தவன், வேதம் முழுவதும் கற்றவன் என்று அறியலாம்.

विज्ञेयः स च वेदानां पारगो भारतं पठन्।।

இந்த வியாச மகாபாரதத்தில், தேவர்கள், ராஜரிஷிகள், முனிவர்கள், தோஷமற்ற கேசவன் {கிருஷ்ணன்},(33) தேவாதி தேவனான விஷ்ணு, அவருடைய தேவி, பல தாயாரால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் {முருகன்} பிறப்பும், பிராம்மணர்கள் மற்றும் பசுக்களின் பெருமையும், விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

देवा राजर्षयो ह्यत्र पुण्या ब्रह्मर्षय: तथा।

कीर्त्यन्ते धूतपाप्मानः कीर्त्यते केशव: तथा।।

भगवां च अपि देवेशो यत्र देवी च कीर्त्यते।

अनेक जननो यत्र कार्तिकेयस्य संभवः।।

ब्राह्मणानां गवां च एव माहात्म्यं यत्र कीर्त्यते।

அனைத்து வேதமந்திரங்களின் தொகுப்பாக இருக்கும் இந்த வியாச மஹாபாரதத்தை, அறத்தில் (தர்மத்தில்) நாட்டமுள்ள அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.

सर्व श्रुति समूहोऽयं श्रोतव्यो धर्म बुद्धिभिः।।

எந்த வித்வான், புண்ணியமான காலங்களில், பிராம்மணர்களுக்கு, 18 மஹாபர்வங்கள் கொண்ட வியாச மகாபாரதத்தை சொல்வார்களோ, அவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு, சொர்க்கத்தையும் லட்சியம் செய்யாமல், பிரம்மத்துடன் நிலையாக மோக்ஷமடைவார்கள்.

य इदं श्रावयेद् विद्वान् ब्राह्मणान् इह पर्वसु।

धूतपाप्मा जित स्वर्गो ब्रह्म गच्छति शाश्वतम्।।

மறைந்த பெற்றோர்களுக்கு ஈடுபாட்டுடன் (ஸ்ரார்த்தம்) திவசம் செய்யும் போது, வியாச மஹாபாரதத்தில் உள்ள ஒரு ஸ்லோகதின் ஓர் அடியையாவது, வந்த பிராம்மணர்களை கேட்க செய்தால், அந்த ஸ்ரார்த்தம் அழியாத பயனுள்ளதாக வளர்ந்து, பித்ருக்களை போய் சேரும். பித்ருக்கள் மனநிறைவு பெற்று இருப்பர்.

श्रावयेद् ब्राह्मणान् श्राद्धे यश्चेमं पादम् अन्ततः।

अक्षय्यं तस्य तच्छ्राद्धम् उपावर्तेत् पितॄन् इह।।

ஒரு மனிதன் தெரிந்தோ, தெரியாமலோ உடலாலோ மனதாலோ செய்யும் பாபங்கள், வியாச மகாபாரதத்தை கேட்பதாலேயே அழிந்து போகும்.

अह्ना यदेनः क्रियते इन्द्रियै: मनसा अपि वा।

ज्ञानाद् अज्ञानतो व अपि प्रकरोति नर: च यत्।

तत् महाभारत आख्यानं श्रुत्वैव प्रविलीयते।।

மகத்தான பரத வம்ச இளவரசர்களின் வரலாறே "மஹாபாரதம்" என்றழைக்கப்படுகிறது.

இந்த பெயர் காரணத்தை அறிகிறவனை எல்லா பாபங்களும் விட்டு விடுகின்றன.

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।

भरतानां महत् जन्म महाभारतम् उच्यते।।

இந்த பாரத வம்சத்தின் வரலாறு மிகவும் அற்புதமானது. இந்த வியாச மகாபாரதத்தை சொல்லும்போது, மரணத்தை தவிர்க்க முடியாத மனிதர்களின் (அநித்யமானவர்கள்) பாவங்கள் உறுதியாக அழிந்து போகும்.

महतो ह्येनसो मर्त्यान् मोचयेद् अनुकीर्तितः।

சிறந்த பெருமைகள் உடைய, சாமர்த்தியம் அறிந்த கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், 3 வருட காலம் தூங்காமல், சுத்தமாக ஆசாரத்தோடு இருந்து, மகாபாரதத்தை முடித்தார். கடுமையான தவம் மற்றும் நியமத்துடன் இருந்து, வியாச மஹரிஷியான எங்கள் குரு இந்த மகாபாரதத்தை முடித்தார்.

त्रिभिः वर्षैः महाभागः कृष्णद्वैपायनो अब्रवीत्।।

नित्योत्थितः शुचिः शक्तो महाभारतम् आदितः।

तपो नियमम् आस्थाय कृतम् एतत् महर्षिणा।।

ஆதலால், இந்த வியாச மஹாபாரதத்தை, அனைத்து பிராம்மணர்களும் உறுதியான நியமத்தில் இருந்து கொண்டு கேட்க வேண்டும்.  

तस्मात् नियम संयुक्तैः श्रोतव्यं ब्राह्मणै: इदम्।

कृष्णप्रोक्ताम् इमां पुण्यां भारतीम् उत्तमां कथाम्।।

கிருஷ்ண த்வைபாயனர் {வியாசர்} கொடுத்த இந்த மகாபாரதத்தை எந்த பிராம்மணன் சொல்கிறாரோ, அவருக்கும், அவர் சொல்லிக் கேட்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் செய்ததால், செய்யாமல் இருந்ததால் ஏற்பட போகும் கர்மங்கள் பலன்கள் நினைத்து கவலை அடைய அவசியம் இருக்காது.

श्रावयिष्यन्ति ये विप्रा ये च श्रोष्यन्ति मानवाः।

सर्वथा वर्तमाना वै न ते शोच्याः कृत अकृतैः।।

அறத்தில் (தர்மத்தில்), பொருளில் (அர்தத்தில்) விருப்பமுள்ள மனிதன், இந்த வியாச மகாபாரதத்தை முழுவதும் விடாமல் படிக்க வேண்டும். இப்படி செய்வதால், அவன் நினைத்த காரியங்கள் அனைத்தும் (தர்மமான ஆசைகள்) தானாக கைகூடும்

नरेण धर्म-कामेन सर्वः श्रोतव्य इति अपि।

निखिलेन इतिहासो अयं ततः सिद्धिम् अवाप्नुयात्।।

மஹாபுண்யத்தை தரும் வியாச மகாபாரதத்தை கேட்பதால் ஒரு மனிதன் அடைய போகும் சுகத்திற்கு நிகராக, சொர்க்கம் லோக சுகங்கள் கூட கிடையாது. 

न तां स्वर्गगतिं प्राप्य तुष्टिं प्राप्नोति मानवः।

यां श्रुत्वैवं महापुण्यम् इतिहासम् उपाश्नुते।।

ஈடுபாட்டுடன் இந்த வியாச மகாபாரதத்தை கேட்பவரும், இந்த அத்புதமான இதிகாசத்தை கேட்பிக்க செய்தவரும், ராஜசூய யாகம் செய்த பலனையும், அஸ்வமேத யாகம் செய்த பலனையும் அடைவார்கள். 

शृण्वञ्श्राद्धः पुण्यशीलः श्रावयं च इदम् अद्भुतम्।

नरः फलम् अवाप्नोति राजसूय अश्वमेधयोः।।

எப்படி கடலும், மேரு என்ற பெரிய மலையும் பல வகையான ரத்தினங்களை நிதியாக கொண்டுள்ளதோ, அது போல, இந்த வியாச மகாபாரதமும்  ரத்ன குவியல் போல பல தர்மங்களை நிதி போல வைத்து இருக்கிறது.

यथा समुद्रो भगवान् यथा मेरु: महा-गिरिः।

उभौ ख्यातौ रत्न-निधी तथा भारतम् उच्यते।।

இந்த வியாச மஹாபாரதம் வேதத்திற்கு சமமாக உள்ளது. இது, அனைத்தையும் காட்டிலும் உத்தமமான மங்களத்தை தரவல்லது. இதன் ஸ்லோகங்களை காதால் கேட்டாலேயே சுகத்தை தர வல்லது. செவிக்கு இனியது. மனதை பரிசுத்தமாக ஆக்க வல்லது. நல்ல ஒழுக்கத்தை வளர செய்ய வல்லது.

इदं हि वेदैः समितं पवित्रमषि च: उत्तमम्।

श्राव्यं श्रुति-सुखं च एव पावनं शील वर्धनम्।।

வியாசரின் மகாபாரதத்தை அனைவரும் அவசியம் கேட்க வேண்டும். ஜனமேஜெயா! அரசே! இந்த வியாச மகாபாரதத்தை படிப்பவனுக்கு, யார் தானம் கொடுக்கிறானோ அவன் சமுத்திரம் சூழ்ந்த இந்த பூமியையே தானம் செய்த புண்ணியத்தை அடைவான்.

य इदं भारतं राजन् वाचकाय प्रयच्छति।

तेन सर्वा मही दत्ता भवेत् सागरमेखला।।

பரிக்ஷித்தின் பிள்ளையே! புண்ணியத்தை அடைவதற்காகவும், வெற்றியையே அடைவதற்காகவும், நான் சொல்லப்போகும் இந்த உயர்ந்த இதிகாசத்தின் கதையை முழுவதுமாக கேளும். 

पारिक्षित कथां दिव्यां पुण्याय विजयाय च।

कथ्यमानां मया कृत्स्नां शृणु हर्षकरीम् इमाम्।।

ரிஷியான கிருஷ்ண த்வைபாயனர் 3 வருடங்கள் தூக்கத்தை விட்டு, அத்புதமான இந்த மகாபாரதத்தை கொடுத்தார். அதை அப்படியே நான் (வைசம்பாயானர்) உனக்கு சொல்ல போகிறேன். 

त्रिभि: वर्षैः सद उत्थायी कृष्णद्वैपायनो मुनिः।

महाभारतम् आख्यानं कृतवान् इदम् अद्भुतम्।।

शृणु कीर्तयतस्तन्म इतिहासं पुरातनम्।।

Adi parva 62 (Vyasa Mahabharata)

Wednesday 4 January 2023

மகாபாரதம் முதல் ஸ்லோகம். நாராயண தியான ஸ்லோகம்... அறிவோம் மகாபாரதம்

நாராயண தியான ஸ்லோகம்

श्रीवेद व्यासाय नमः।। 1

नारायणं नमस्कृत्य 

नरं चैव नरोत्तमम्।

देवीं सरस्वतीं व्यासं 

ततो जयम् उदीरयेत् ।। 2

नारायणं सुरगुरुं जगदेक-नाथं 

भक्त-प्रियं सकल-लोक-नमस्कृतं च।

त्रैगुण्य-वर्जितम् अजं विभुम् आद्यम् ईशं 

वन्दे भवघ्नम् अमर-असुर सिद्ध वन्द्यम्'।। 3

- மஹாபாரதம் (முதல் தியான ஸ்லோகம்) - வியாசர்

வேத வியாசரை வணங்குகிறேன் (1)

நாராயணனை நமஸ்கரிக்கிறேன். நரர்களில் உத்தமரான நரனையும் (அர்ஜுனனையும்) நமஸ்கரிக்கிறேன். நர-நாராயணனை நமஸ்கரிக்கிறேன். வாக்குக்கு தேவதையான சரஸ்வதியையும், வ்யாஸ பகவானையும் பல்லாண்டு பாடுகிறேன். (2)

தேவர்களுக்கு (சுரர்கள்) குருவும், உலகங்களுக்கு ஒரே நாதனும், பக்தர்களுக்கு ப்ரியமானவரும், அனைத்து உலகத்து மக்களும் நமஸ்கரிப்படுபவரும், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு நிர்குணமாக இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் ஜனனமில்லாதவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், முதல்வரும், தலைவனும் (ஈசன்), தேவர்களாலும் அசுரர்களாலும் ஸித்தர்களாலும் வந்தனம் செய்யப்படுகின்ற நாராயணனை நான் வந்தனம் செய்கிறேன். (3)


सौति: उवाच। (உக்கிரஸரவஸ் என்ற ஸூத பௌராணிகர் சொல்கிறார்)

आद्यं पुरुषम् ईशानं 

पुरुहूतं पुरुष्टुतम्।

ऋतम् एकाक्षरं ब्रह्म 

व्यक्त-अव्यक्तं सनातनम्।।

- மஹாபாரதம் - வியாசர்

ஆதி புருஷரும், தலைவரும் (ஈசனும்), அனைவராலும் யாகத்தில் அழைக்கப்பட்டவரும், அனைவராலும் ஸ்துதிக்கப்பட்டவரும், சத்யமே வடிவானவரும், அழிவில்லாத ஒரே பரப்ரம்மமாக இருப்பவரும், உலகமாக (ஸ்தூலமாக) தெரிபவரும் சூக்ஷ்மமாக (ஆத்மாவாக) இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் (சனாதனம்), 

असच्च सच्च एव च 

यद् विश्वं सदसतः-परम्

पर आवराणां स्रष्टारं 

पुराणं परम् अव्ययम्।।

- மஹாபாரதம் - வியாசர்

அஸத்யமாக இருப்பவரும் (இல்லை என்பவருக்கு தன்னை காட்டாமலும்), ஸத்யமாகவும் இருப்பவரும் (உண்டு என்பவருக்கு தன்னை காட்டுபவரும்), உலகமாக இருப்பவரும், உலகங்களுக்கு அப்பாற்பட்டவரும், மேலானவைகளையும் கீழானவைகளையும் படைத்தவரும், எப்பொழுதுமே புதிதாகவே இருப்பவரும், பரதத்துவமாக இருப்பவரும், மாறுதல் இல்லாதவரும், 

मङ्गल्यं मङ्गलं विष्णुं 

वरेण्यम् अनघं शुचिम्।

नमस्कृत्य हृषीकेशं 

चराचर गुरुं हरिम्।।

- மஹாபாரதம் - வியாசர்

என்றும் மங்களமானவரும், மங்களத்தை தருபவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், ப்ரார்த்திக்க தக்கவரும், பாபத்தை போக்குபவரும், பரிசுத்தமானவரும், 5 புலன்களை ஆள்பவரும், அசைகின்ற அசையாத உயிர்கள் அனைத்துக்கும் பிதாவாக இருக்கும் ஹரியை நான் நமஸ்கரிக்கிறேன்.

Tuesday 27 December 2022

கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? how many days krishna studied in shanthibini ashram?

கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்?

how many days krishna studied in shanthibini ashram?

பீஷ்மர் சொல்கிறார்...


ततस्तौ जग्मतुस्तत्र गुरुं सान्दीपिनिं पुनः।

गुरुशुश्रूषणायुक्तौ धर्मज्ञौ धर्मचारिणौ।।

व्रतम् उग्रं महात्मानौ विचरन्ताववन्तिषु।

अहोरात्रैश्च तुष्पष्ट्या साङ्गान्वेदानवापतुः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கிருஷ்ணரும், பலராமரும் சாந்தீபினி ஆஸ்ரமத்துக்கு சென்றனர். தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், கடுமையான ப்ரம்மச்சர்யத்தை கடைபிடித்து கொண்டு, குருவுக்கு இரவுபகல் பாராது சேவை செய்து, 64 நாட்களில் வேதம், வேத அங்கங்கள் (கலைகள்) முழுவதையும் கற்றனர்.

लेख्यं च गणितं चोभौ प्राप्नुतां यदुनन्दनौ।

गान्धर्ववेदं वैद्यं च सकलं समावापतुः।।

हस्तिशिक्षामश्विशिक्षां द्वादशाहेन चाप्नुताम्।

तावुभौ जग्मतुर्वीरौ गुरुं सान्दीपिनिं पुनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

அந்த யாதவர்கள், எழுத்து (writing), எண் (maths), சங்கீதம் (music), வைத்தியம் (medicine), யானை பயிற்சி (elephant handling  / riding), குதிரை பயிற்சி (horse handling /ride) இவற்றையெல்லாம் 12 நாட்களில் கற்றனர்.


धनुर्वेदचिकीर्षार्थं धर्मज्ञौ धर्मचारिणौ।

ताविष्वासवराचार्यमभिगम्य प्रणम्य च।।

- மஹாபாரதம் (வியாசர்)

தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், தனுர் வேதம் (weaponary) கற்று கொள்ள மீண்டும் சாந்தீபினி ஆஸ்ரமம் வந்து, தன் ஆசாரியரை வணங்கினர்.


तेन वै सत्कृतौ राजंश्चरन्तौ ताववन्तिषु।

पञ्चाशद्भिरहोरात्रैर्दशाङ्गं सुप्रतिष्ठितम्।।

स-रहस्यं धनुर्वेदं सकलं ताववापतुः।

दृष्ट्वा कृतार्थो विप्रेन्द्रो गुर्वर्थे तावचोदयत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுதிஷ்டிர ராஜன் ! வில் வித்தையில் தேர்ந்த அந்த சாந்தீபினியை நமஸ்கரித்து, அவரால் மிகவும் விரும்பப்பட்ட இந்த இருவரும், அவந்தி தேசத்தில் இருந்து கொண்டே, 50 நாட்களில் இரவு பகல் பாராமல் கற்று, 10 அங்கங்களோடு கூடிய தனுர் வேதத்தை அதன் ரஹஸ்யங்களோடு கூட அறிந்து கொண்டு, மனதில் ஆழமாக பதியும் படி கற்றனர்.


கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? 64+12+50=126 நாட்கள்.


ஸ்ரீ கிருஷ்ணராக பகவான் நாராயணனே வந்தார் என்பதால் 128 நாட்களில் படித்தார் என்பது கூட ஆச்சரியமில்லை.

இவை அனைத்தும் சாந்தீபினியே சொல்லி கொடுத்தார் என்று பார்க்கும் போது, அவர் பெருமையை நாம் உணரலாம்.

உஜ்ஜயினி என்று இன்று சொல்லப்படும் நகரமே அன்று அவந்தி தேசமாக இருந்தது. 

Tuesday 13 December 2022

"ஆசாரம்" (ஒழுக்கம்) என்றால் என்ன? இந்த கேள்விக்கு, பீஷ்மர் பதில் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்.

யுதிஷ்டிரர் "ஆசாரம் பற்றி அறிய விரும்புகிறேன்" என்று கேட்க, பீஷ்மர் ஆசாரத்தை பற்றி விளக்குகிறார்.

दुराचारा दुर्विचेष्टा दुष्प्रज्ञाः प्रिय-साहसाः।

असन्तस्त्वभिविख्याताः सन्तश्च आचार-लक्षणाः।।

- வியாசர் (மஹாபாரதம்)

அயோக்கியர்கள் 'கெட்ட ஆசாரத்தோடும், கெட்ட நடத்தையோடும், கெட்ட புத்தியோடும், சாகசம் புரிய விருப்பத்தோடும் இருப்பார்கள்' என்பது போல,

சாதுக்கள் 'ஆசாரத்தில் விருப்பத்தோடு இருப்பார்கள்' என்பது ப்ரஸித்தம்.


पुरीषं यदि वा मूत्रं ये न कुवन्ति मानवाः।

राजमार्गे गवां-मध्ये धान्य-मध्ये शिवालये।

अग्न्यगारे तथा तीरे ये न कुर्वन्ति ते शुभाः।। 

- வியாசர் (மஹாபாரதம்)

பெரிய சாலையிலும் (ராஜ மார்க்கம்), பசுக்களின் நடுவிலும், தானியத்தின் நடுவிலும், சிவாலயத்திலும், அக்னி சாலையிலும், நதி கரையிலும், மலம்-மூத்திரம் செய்யாத மனிதன் 'நல்லவன்' என்று அறியலாம்.

शौचम् आवश्यकं कृत्वा देवतानां च तर्पणम्।

धर्ममाहु: मनुष्याणामुपस्पृश्य नदीं तरेत्।

- வியாசர் (மஹாபாரதம்)

அவசியமாக செய்ய வேண்டிய சுத்தியை செய்து கொண்டு, ஆசமனம் செய்த பிறகு, நதியில் இறங்கி ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு, தேவர்களை குறித்து தர்ப்பணம் செய்வது மனிதர்களுக்கு தர்மமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

सूर्यं सदोपतिष्ठेन न स्वपेद् भास्कर-उदये।

सायंप्रात: जपेत्-सन्ध्यां तिष्ठन्पूर्वां तथेतराम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

எப்பொழுதும் சூரியனை உபாஸிக்க வேண்டும். உதயகாலத்தில் உறங்க கூடாது. காலையிலும், மாலையிலும் காயத்ரீ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். முதல் சந்தியில் நின்று கொண்டும், மாலை சந்தியில் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்.


पञ्चार्द्रो भोजनं भुञ्ज्यात्प्राद्भुखो मौनम् आस्थितः।

न निन्द्याद् अन्नभक्ष्यांश्च स्वादुस्वादु च भक्षयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

5 அங்கமும் அலம்பிக்கொண்டு, கிழக்கு முகமாக அமைதியாக போஜனம் செய்ய வேண்டும். அன்னத்தை, சாப்பிடும் போது நிந்திக்க கூடாது. மிகவும் ருசியாக உள்ளது என்று பூஜிக்க வேண்டும்.


न आर्द्र-पाणिः समुत्तिष्ठेन्न आर्द्र-पादः स्वपेन्निशि।

देवर्षि-र्नारदः प्राह एतदाचारलक्षणम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

கை ஈரமாக இருக்கும் போதே எழுந்திருக்க வேண்டும் (கை காய உட்கார்ந்து இருக்க கூடாது). இரவில் கால் அலம்பாமல் படுக்க கூடாது.  தேவ-ரிஷியான நாரதர் இவ்விதம் ஆசாரத்தின் லக்ஷணத்தை சொல்கிறார்.

शोचिष्केशमनड्वाहं देव गोष्ठं चतुष्-पथम्।

ब्राह्मणं धार्मिकं च एव नित्यं कुर्यात् प्रदक्षिणम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

அக்னியையும், காளையையும், தேவதையையும், பசுமடத்தையும், நாற்-சந்தியையும், தர்மத்தில் இருக்கும் ப்ராம்மணனையும் பார்த்தால், ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். அதாவது, அவர்களை சுற்றி வலம் வர வேண்டும்


अतिथीनां च सर्वेषां प्रेष्याणां स्वजनस्य च।

सामात्यं भोजनं भृत्यैः पुरुषस्य प्रशस्यते।।

- வியாசர் (மஹாபாரதம்)

நேரம் சொல்லாமல் நம் வீட்டுக்கு வந்த அதிதியை, தான் சொல்லும் காரியத்தை செய்யும் ஏவலாளியை, உறவினர்களை வேற்றுமை பாராமல் உணவு கொடுப்பது மனிதனுக்கு சிறந்த தர்மமாகும்.

सायंप्रातर्मनुष्याणामशनं वेदनिर्मितम्।

नान्तरा भोजनं दृष्टम् उपवासी तथा भवेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

மனிதர்களுக்கு காலையிலும், மாலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் மத்தியில் உணவு உண்ண வேண்டும் என்று விதி இல்லை. அந்த விதிப்படி உபவாசம் இருப்பவன், பயனடைவான்.


होमकाले तथ्ना जुह्वन् ऋतुकाले तथा व्रजन्।

अनन्यस्त्रीजनः प्राज्ञो ब्रह्मचारी तथा भवेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

ஹோமம் செய்ய வேண்டிய காலங்களில் ஹோமம் செய்து கொண்டும், ருது காலத்தில் மட்டும் தன் மனைவியோடு சேருபவனும், வேறு  பெண்களை நெருங்காதவனும், நல்ல அறிவுள்ளவனும், “பிரம்மச்சாரி”என்று கருத வேண்டும். மணமானாலும் ‘ப்ரம்மச்சர்யத்தில் இருக்கிறான்’ என்று பொருள்


अमृतं ब्राह्मण: उच्छिष्टं जनन्या हृदयं कृतम्।

तज्जनाः पर्युपासन्ते सत्यं सन्तः समासते।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மம்-அதர்மம் தெரிந்து வாழ்க்கையை நடத்தும் பிராம்மணன் சாப்பிட்ட பிறகு, சாப்பிடுவதால், அந்த உணவு அம்ருதமாகவும் (ஆயுள் கூட்டுவதாகவும்), இதயத்தில் நல்ல எண்ணத்தையும் உண்டு பண்ணுவதாகவும் அமையும். அந்த உணவை எந்த ஜனங்கள் அன்புடன் ஏற்கிறார்களோ, அந்த ஸாதுக்கள், ஸத்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள்.


लोष्टमदीं तृणच्छेदी नखखादी तु यो नरः।

नित्य:-उच्छिष्टः संकसुको नेह-आयु: विन्दते महत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

எவன் மண்ணை உதைக்கிறானோ (வீட்டை உடைப்பவன்), புற்களை கிள்ளுகிறானோ, நகத்தை கடிக்கிறானோ, எப்பொழுதும் பிறர் சாப்பிட்டதையே உண்கிறானோ, பேராசை கொண்டவனோ, அவன் நீண்ட ஆயுளை அடைய மாட்டான்.


यजुषा संस्कृतं मांसं निवृत्तो मांस-भक्षणात्।

भक्षयेन्न वृथामांसं पृष्ठमांसं च वर्जयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், சாஸ்திர விதிப்படி பூஜித்து மாமிசம் உண்ணலாம். அனாவசியமாக விருப்பத்துக்காக சாப்பிட கூடாது. மிச்சப்பட்ட மாமிசத்தை, மாமிசத்தின் பின்-பாகத்தை சாப்பிட கூடாது.


स्वदेशे परदेशे वा अतिर्थि नोपवासयेत्।

काम्यकर्मफलं लब्ध्वा गुरूणाम् उपपादयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

தன் தேசத்தில் இருந்தாலும், வெளி தேசத்தில் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்திற்கு அதிதியாக வந்தவனை சாப்பிடாமல் வைக்க கூடாது. ஆசையினால் சேர்க்கப்பட்ட பொருளை குருவிடம் கொடுத்து விட வேண்டும்.

गुरूणाम् आसनं देयं कर्तव्यं च अभिवादनम्।

गुरूनभ्यर्च्य युज्येत आयुषा यशसा श्रिया।।

- வியாசர் (மஹாபாரதம்)

குருவுக்கு ஆஸனம் கொடுத்து, அவருக்கு தன் ரிஷி பரம்பரையை பற்றி சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். குருவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். பெரியோர்களை பூஜித்ததால், ஆயுளும், புகழும், செல்வமும் கூடும்.

नेक्षेतादित्यमुद्यन्तं न च नग्नां परस्त्रियम्।

मैथुनं सततं धर्म्यं गुह्ये चैव समाचरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

உதிக்கும் காலத்தில் சூரியனை கண்ணால் பார்க்க கூடாது. வேறு பெண்களையோ, ஆடையில்லாத பெண்ணையோ நோக்க கூடாது. தர்மத்தை மீறாத உடலுறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும்.

तीर्थानां हृदयं तीर्थं शुचीनां हृदयं शुचिः।

सर्वम् आर्यकृतं धर्म्यं वालसंस्पर्शनानि च।।

- வியாசர் (மஹாபாரதம்)

மனமே தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம்! சுத்தம் என்றால், மனசுத்தமே சிறந்த சுத்தம். பண்புள்ளவர்கள் செய்யும் அனைத்து காரியமும் தர்மமே. பசுவின் வாலை தொடுவதும் புண்யமே.

दर्शने-दर्शने नित्यं सुख-प्रश्नम् उदाहरेत्।

सायं प्रातश्च विप्राणां प्रदिष्टम् अभिवादनम्।।

- வியாசர் (மஹாபாரதம்)

வேத ப்ராம்மணனை காணும் போதெல்லாம், எப்பொழுதும் நலம் விசாரிக்க வேண்டும். காலையும் மாலையும் வேத ப்ராம்மணனை கண்டு நமஸ்கரிக்க வேண்டும்.


देवगोष्ठे गवां-मध्ये ब्राह्मणानां क्रियापथे।

स्वाध्याये भोजने चैव दक्षिणं पाणिम् उद्धरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

தேவாலயத்திலும், பசுக்களின் நடுவிலும், ப்ராம்மணர்களின் நடுவிலும், கர்மானுஷ்டம் செய்யும் போதும்,  படிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலது கை வெளியே இருக்கும் படி (அதாவது பூணூலை இடது தோளில் இருப்பதாக வைத்து கொள்ள வேண்டும்) வைத்து கொள்ள வேண்டும்.

सायं प्रातश्च विप्राणां पूजनं च यथाविधि।

पण्यानां शोभते पण्यं कृषीणामृद्ध्यतां कृषिः।

बहुकारं च सस्यानां वाह्ये वाहो गवां तथा।।

- வியாசர் (மஹாபாரதம்)

காலையிலும், மாலையிலும் வேதத்தை ரக்ஷிக்கும் ப்ராம்மணர்களை முடிந்த வரை பூஜிப்பது, மதிப்புமிக்கதில் மதிப்புள்ளதை போற்றியதற்கு சமமாகும். விவசாயத்தில் சிறந்த கிருஷியை போற்றியதற்கு சமமாகும். அதிகமான தானியங்கள் சேர்ப்பதற்கு சமமாகும். 


संपन्नं भोजने नित्यं पानीये तर्पणं तथा।

सुशृतं पायसे ब्रूयाद्यवाग्वां कृसरे तथा।।

- வியாசர் (மஹாபாரதம்)

எப்பொழுதும், உணவு கொடுப்பவன், கொடுக்கும் போது "ஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். உணவை பெற்று கொள்பவன் "ஸுஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். குடிக்க ஜலம் கொடுப்பவன், கொடுக்கும் போது "தர்ப்பணம்" என்று சொல்லி கொடுக்க வேண்டும். தண்ணீரை பெற்று கொண்டவன் "ஸுதர்ப்பணம்" என்று சொல்ல வேண்டும். பாயசம் (கஞ்சி/அன்னம்) கொடுக்கும் போது, கொடுப்பவன் "ஸ்ருதம்" என்று சொல்ல வேண்டும். அதை பெறுபவன் "ஸுஸ்ருதம்" என்று சொல்லி பெற்று கொள்ள வேண்டும். சாப்பிடுபவனையோ / குளிப்பவனையோ தும்முகிறவனையோ சவரம் செய்பவனையோ பார்த்தால் "ஆயுஷ்யம்" என்று சொல்ல வேண்டும்.


प्रति आदित्यं न मेहेत न पश्येदात्मनः शकृत्।

सुतैः स्त्रिया च शयनं सह भोज्यं च वर्जयेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

சூரியனை பார்த்து மல-மூத்திரம் செய்ய கூடாது. மேலும் அப்போது மல (இட) கையை பார்க்க கூடாது. புத்ரியோடும், பெண்களோடும் சேர்ந்து படுக்கவோ, சாப்பிடவோ கூடாது.


त्वंकारं नामधेयं च ज्येष्ठानां परिवर्जयेत्।

अवराणां समानानाम् उभयं नैव दुष्यति।।

- வியாசர் (மஹாபாரதம்)

நீ என்ற ஒருமையிலோ, பெயரை சொல்லியோ வயதில் பெரியவர்களை கூப்பிட கூடாது.  தன்னை விட வயதில் குறைந்தவர்களை, வயதில் சமமானவர்களே கூப்பிடுவது தவறில்லை.


हृदयं पापवृत्तानां पापम् आख्याति वैकृतम्।

ज्ञानपूर्वं विनश्यन्ति गूहमाना महाजने।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபங்களை செய்யும் இதயம் கொண்டவனின் முகமே அவனுடைய பாப எண்ணத்தை வெளி காட்டி விடும். செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதிகளை ஜனங்களுக்கு கொடுத்து, பாபங்களை மறைத்து செய்பவன் நாசமடைவான்


ज्ञानपूर्वकृतं पापं छादयन्त्यबहुश्रुताः।

नैनं मनुष्याः पश्यन्ति पश्यन्त्येव दिवौकसः।।

- வியாசர் (மஹாபாரதம்)

விஷய அறிவு இல்லாமல், தெரிந்தே பாபங்களை (தவறுகளையும்) செய்து விட்டு,  அதை மறைத்தும் விடுவார்கள். இப்படி இவர்கள் சக மனிதர்களை ஏமாற்றினாலும், செய்த பாபத்தை தேவர்கள் அறிகிறார்கள்.


पापेनापिहितं पापं पापम् एव अनुवर्तते।

धर्मेणापिहितो धर्मो धर्मम् एव अनुवर्तते।

धार्मिकेण कृतो धर्मो धर्मम् एव अनुवर्तते।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபத்தை செய்த  இந்த பாபிகளை அவர்கள் பாபமே  துரத்தி கொண்டு வரும். தர்மத்தை செய்த தர்மாத்மாவை, அவர்கள் செய்த தர்மமே துரத்தி கொண்டு வரும்.

पापं कृतं न स्मरतीह मूढो

विवर्तमानस्य तदेति कर्तुः।

राहुर्यथा चन्द्रमुपैति चापि

तथाऽबुधं पापमुपैति कर्म।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாபம் செய்வதிலேயே நாட்டம் கொண்ட மூடன் (அசடுகள்), நான் சொன்ன இந்த ஆசாரத்தை, நினைத்து கூட பார்க்காமல் இருக்கிறான். பாபமே செய்பவர்கள், சாஸ்திரத்துக்கு விரோதமாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எப்படி பொலிவு மிகுந்த சந்திரனை ராகு விழுங்குகிறதோ, அது போல புகழ் மங்கி, பொலிவை இழப்பார்கள்.


आशया संचितं द्रव्यं दुःखेनैवोपभुज्यते।

तद्बुधा न प्रशंसन्ति मरणं न प्रतीक्षते।।

- வியாசர் (மஹாபாரதம்)

பேராசையால் பெறப்பட்ட எந்த பொருளும், துக்கத்தையே தரும். அறிவாளி அப்படிப்பட்ட பொருளை கொண்டாடுவதில்லை, அதனால் ஏற்படும் மரணத்தை அவர்கள் ஏற்பதும் இல்லை.

मानसं सर्वभूतानां धर्ममाहु: मनीषिणः।

तस्मात्सर्वेषु भूतेषु मनसा शिवम् आचरेत्।।

- வியாசர் (மஹாபாரதம்)

பாராபட்சம் இல்லாமல் அனைவருக்கும் மனப்பூர்வமாக செய்வதே மனிதனுக்குரிய தர்மம். ஆகையால், எல்லா உயிர்களுக்கும் மனப்பூர்வமாக நல்லதை (மங்களத்தை) செய்ய வேண்டும்.


एक एव चरेद्धर्मं नास्ति धर्मे सहायता।

केवलं विधिमासाद्य सहायः किं करिष्यति।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மத்தை ஒருவனாகவே செய்யலாம். தர்மம் செய்ய துணை அவசியமில்லை. மனதில் தர்ம சிந்தனை இல்லாமல், துணைக்கு ஆள் கிடைத்தும் என்ன பயன் கிடைக்கப்போகிறது?


धर्मो योनि: मनुष्याणां देवानाम् अमृतं दिवि।

प्रेत्यभावे सुखं धर्माच्न्छश्वत्तैरुपभुज्यते।।

- வியாசர் (மஹாபாரதம்)

தர்மத்தில் இருப்பதற்காக தான் மனித-யோனியில் மனிதபிறவி கிடைத்துள்ளது.. அதன் மூலம் தேவர்களை போல அம்ருத நிலையை (அழியா புகழ்) அடையலாம். தர்மத்திலேயே இருப்பதால், மறு பிறவி எடுத்தாலும் அந்த தர்மத்தின் பலன் தொடர்ந்து வந்து க்ஷேமத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது. 


இவ்வாறு பீஷ்மர், யுதிஷ்டிரரிடம் "ஆசாரம்" என்றால் என்ன? என்பது பற்றி விளக்கினார்.

Thursday 26 May 2022

Non-Vedic Brahmin are just name sake Brahmins. லௌகீக பிராம்மணன், பெயரளவில் வெறும் ப்ராம்மணன். அவ்வளவே! Vyasa says .. Let us read Mahabharata

After war got over, Vyasa tells yudhistra on various dharma...

यथा दारु मयॊ हस्ती 

यथा चर्ममयॊ मृगः

ब्राह्मण: चानधीयान: 

त्रय: ते नाम धारकाः

- Vyasa mahabharata

மரத்தால் செய்யப்பட்ட யானை, தோலால் செய்யப்பட்ட மிருகம், வேத அத்யயனம் செய்யாத பிராம்மணன், இவர்கள் மூவரும் வெறும் யானை, மிருகம், பிராம்மணன் என்ற பெயரை வைத்து கொள்ளலாமே தவிர, அதனால் ஒரு பயனும் அடைய மாட்டார்கள்.

Elephant toy made of wood, animal toy made of skin, brahmin who have not recited veda can just hold the title of elephant, animal, brahmin but will never get any respect out of it.


यथा षण्ढॊ ऽफलः स्त्रीषु 

यथा गौर् गवि चाफला

शकुनि: वाप्य अपक्षः स्यान् 

निर्मन्त्रॊ ब्राह्मण: तथा

- Vyasa Mahabharata

ஆண்மையற்றவன் பெண்ணோடு சேருவது எப்படி பயனற்றதோ, 

பசுவோடு மற்றொரு பசுவை சேர்ப்பது எப்படி பயனற்றதோ,

அது போல, 

சிறகு இல்லாத பறவை போல, வேதம் ஓதாத பிராம்மணன் பயனற்றவன்.

Brahmin who don't recite veda are just equivalent to a bird without wings. 

Just like how useless it is for an impotent man to merge with a woman, 

Just like how useless it is for an cow to merge with another cow, 

Like a bird without wings, a Brahmin who does not read the veda will be useless.

ग्रामधान्यं यथा शून्यं 

यथा कूप: च निर्जलः

यथा हुतम् अनग्नौ च

तथैव स्यान् निराकृतौ

- Vyasa Mahabharata

தானியங்கள் இல்லாத கிடங்குகள் எப்படி பயன் இல்லையோ,

தண்ணீர் இல்லாத கிணறு எப்படி பயன் இல்லையோ,

அக்னி இல்லாத ஹோமம் எப்படி பயன் இல்லையோ,

அது போல, 

இப்படிப்பட்டவனுக்கு (வேதம் அறியாத பிராம்மணனுக்கு) தானம் செய்வதால் ஒரு பயனும் இல்லை.

Just like that way, a kernel without grains is useless,

Just like the way, a well without water is useless,

Just like the way, a yagya without fire is useless,

It is useless to donate anything to such person (brahmin who don't recite veda)

देवतानां पितॄणां च

हव्यकव्य विनाशनः

शत्रु: अर्थहरॊ मूर्खॊ

न लॊकान प्राप्तुम् अर्हति

- Vyasa Mahabharata

தேவர்களுக்கு செய்யும் பூஜையை, பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம், ஸ்ரார்த்தம் போன்ற காரியங்களை கெடுப்பவன், அடுத்தவன் சொத்தை திருடும் மூர்க்கன் நல்ல லோகங்களை அடைய மாட்டான்.

A gift become useless if it is given to such a person who do not offer and perform daily duties on god and pitru.  

He is, therefore, like unto a robber (of other people's wealth). He can never succeed in acquiring upper worlds of bliss.


Wednesday 25 May 2022

தர்மத்தின் 8 குணங்கள் என்ன? தர்மத்தில் இருப்பவனின் குணங்கள் என்னென்ன? வியாசர் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்

தர்மத்தின் 8 குணங்கள் என்ன? தர்மத்தில் இருப்பவனின் குணங்கள் என்னென்ன? வியாசர் சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்

வியாசர் யுதிஷ்டிரனுக்கு சொல்ல ஆரம்பித்தார்.


अदत्तस्यानुपादानं 

दानम् अध्ययनं तपः |

अहिंसा सत्यम् अक्रोधं 

क्षमा धर्मस्य लक्षणम् ||

- வியாசர் மஹாபாரதம்

  1. பிறர் கொடுக்காத பொருள், கண் எதிரே இருந்தாலும் எடுக்கும் விருப்பமில்லாதவனாகவும்,
  2. தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்பவனாகவும், 
  3. ரிஷிகள், தேவர்கள், பரமாத்மா சம்பந்தமான வேத, இதிகாச புராணங்கள், ஸ்தோத்திரங்களை தினமும் படிப்பவனாகவும்
  4. தெய்வத்தை பற்றிய சிந்தனை, தவம் உள்ளவனாகவும்
  5. எந்த உயிருக்கும் ஹிம்சை செய்ய விரும்பாதவனாகவும்
  6. சத்தியத்தில் வாழ விருப்பமுள்ளவனாகவும்,
  7. கோபமில்லாதவனாகவும்,
  8. பொறுமை உடையவனாகவும்

எவன் இருக்கிறானோ! அவனை தர்மத்தில் இருப்பவன் என்று அறிந்து கொள்ளலாம்.

இந்த குணங்களே, தர்மத்தின் லக்ஷணங்கள் என்று அறிவாய்.


இவ்வாறு வியாசர் யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேசித்தார்

Sunday 22 May 2022

மனம் தூய்மை பெற என்ன செய்ய வேண்டும்? வியாசர் சொல்கிறார். அறிவோம் பாரதம்.

மனம் தூய்மையடைய என்ன செய்ய வேண்டும்? என்று யுதிஷ்டிரர் வியாசரை கேட்டார்.

तैर एवम् उक्तॊ भगवान्

मनुः स्वायम्भुवॊ ऽब्रवीत् |

शुश्रूषध्वं यथावृत्तं

धर्मं व्यास समासतः ||

- வியாசர் மஹாபாரதம்

க்ருத யுகத்தில் ரிஷிகளுக்கு ஸ்வாயம்பு மனு சொன்னதை, வியாசர் யுதிஷ்டிரனுக்கு சொல்ல ஆரம்பித்தார்.


अनादेशे जपो होम

उपवास: तथैव च |

आत्मज्ञानं पुण्यनद्यो

यत्र प्रायश्च तत्पराः ||

अनादिष्टं तथैतानि

पुण्यानि धरणीभृतः |

सुवर्ण-प्राशनम् अपि

रत्नादि-स्नानम् एव च ||

देवस्थान् अभिगमनम् आज्यप्राशनमेव च |

एतानि मेध्यं पुरुषं

कुर्वन्त्याशु न संशयः ||

- வியாசர் மஹாபாரதம்

சரியான காலங்களில்

  • ஜபம் செய்வது
  • ஹோம் செய்வது
  • விரதம் இருப்பது 
  • ஆத்ம ஞானத்தை கொடுக்கும் படிப்பை படிப்பது,
  • மகான்கள் இருக்கும் இடத்திற்கு செல்வது.
  • புண்ணிய நதியில் நீராடுவது.
  • தெய்வ சாந்நித்யம் உள்ள மலைகளில் ஏறுவது.
  • தங்கபஸ்பம் மற்றும், நெய் உண்பது,
  • ரத்னங்கள் ஜலத்தில் போட்டு குளிப்பது,
  • கோவிலுக்கு செல்வது,

இதை எப்பொழுதும் கடைபிடிக்கும் மனிதன், சீக்கிரத்தில் சுத்தி அடைவான் என்பதில் சந்தேகமில்லை.

Sunday 15 May 2022

துக்கப்பட கூடாது.... 'மூடனே துக்கப்படுவான்' - வியாசர் சொல்கிறார். மஹாபாரதம் அறிவோம்

துக்கப்பட கூடாது.... 'மூடனே துக்கப்படுவான்' - வியாசர் சொல்கிறார். மஹாபாரதம் அறிவோம்.

பாரத போர் முடிந்த பிறகு, 'இப்படி ஒரு க்ஷத்ரிய குல உலகநாசம் என்னை காரணமா கொண்டு நடந்து விட்டதே! பூமியை ஆள வேண்டும் என்ற தன்னுடைய ஆசையால் இப்படி ஆகி விட்டதே! பல பெண்கள் விதவையாகி விட்டனரே!' என்று புலம்பி, யுதிஷ்டிர மஹாராஜா துவண்டு விட்டார்.

அவரை அர்ஜுனன், நகுலன், பீமன், சகாதேவன், திரௌபதி என்று பலரும் சமாதானம் செய்து பார்த்தனர். 

வியாசர் ராஜ தர்மம் உபதேசித்தார். இருந்தும் யுதிஷ்டிரருக்கு சமாதானம் கிடைக்கவில்லை.

அப்போது, வியாசர், ஞான உபதேசம் செய்ய தொடங்கினார்.

न कर्मणा लभ्यते चिन्तया वा; नाप्य अस्य दाता पुरुषस्य कश् चित्

पर्याय यॊगाद् विहितं विधात्रा; कालेन सर्वं लभते मनुष्यः

வியாசர் மஹாபாரதம்

எந்த ஒரு மனிதனும் உண்மையில் தன் செயலாலோ, தன் தியாகத்தாலோ, தன் வழிபாட்டாலோ எதையும் பெற முடியாது. எந்த மனிதனும், சக மனிதனுக்கு எதையும் கொடுக்கவும் முடியாது. காலமே அனைத்தையும் செய்கிறது. மனிதன் காலத்தின் தூண்டுதலால் தான் அனைத்தையும் செய்கிறான்.

न बुद्धिशास्त्राध्ययनेन शक्यं; प्राप्तुं विशेषै: मनुजै: अकाले

मूर्खॊ ऽपि प्राप्नॊति कदा चिद् अर्थान्; कालॊ हि कार्यं प्रति निर्विशेषः

வியாசர் மஹாபாரதம்

காலம் சரியில்லை என்றால், எத்தனை புத்தி இருந்தாலும், கல்வி இருந்தாலும் மனிதன் விரும்பினாலும் அடைய முடியாது. 

நல்ல காலம் இருந்தால், மூடன் கூட பல பொருளை அடைகிறான்.

மனிதனுக்கு அனைத்தையும் கொடுப்பது காலம் தான்.

नाभूति काले च फलं ददाति; शिल्पं न मन्त्रा: च तथौषधानि

तान्य एव कालेन समाहितानि; सिध्यन्ति चेध्यन्ति च भूतकाले

வியாசர் மஹாபாரதம்

பூமியும் மருந்தும் மந்திரமும்  மற்ற தொழில்களும் அகாலத்தில் பயன் கொடுப்பதில்லை. அவைகளே நல்ல காலத்தில் பயன் தருகிறது.

कालेन शीघ्राः प्रविवान्ति वाताः; कालेन वृष्टि: जलदान् उपैति

कालेन पद्मॊत्पलवज जलं च; कालेन पुष्यन्ति नगा वनेषु

வியாசர் மஹாபாரதம்

காற்று வேகமாக வீசுவதும் காலத்தினால் தான்.

மேகங்கள் மழை கொடுப்பதும் காலத்தினால் தான்.

குளத்தில் தாமரை பூப்பதும் காலத்தினால் தான்.

காடுகளில் மரங்கள் செழிப்பதும் காலத்தினால் தான்.

कालेन कृष्णा: च सिता: च रात्र्यः; कालेन चन्द्रः परिपूर्णबिम्बः

नाकालतः पुष्पफलं नगानां; नाकालवेगाः सरितॊ वहन्ति

வியாசர் மஹாபாரதம்

காலம் தான் இருட்டையும், வெளிச்சத்தையும், இரவையும் கொடுக்கிறது. 

சந்திரன் ஒரு சமயம் முழுமையாக தெரிவதும் காலத்தினால் தான்.

அகாலத்தில், மரத்தில் பூக்கள் உண்டாவதில்லை

அகாலத்தில் ஆறுகள் வேகமாக பெருகுவதில்லை

नाकालमत्ताः खग पन्नगा: च; मृगद्विपाः शैलमहाग्रहा: च

नाकालतः स्त्रीषु भवन्ति गर्भा: नायान्त्य अकाले शिशिरॊष्ण वर्षाः

வியாசர் மஹாபாரதம்

மலைகளில், கிராமங்களில் உள்ள பறவைகளும், பாம்புகளும், மிருகங்களும் யானைகளும் அகாலத்தில் மதமடைவது இல்லை.

அகாலத்தில், பெண்கள் கர்ப்பம் அடைவதில்லை.

குளிரும், வெயிலும் மழையும் அகாலத்தில் வருவதில்லை.

नाकालतॊ म्रियते जायते वा नाकालतॊ व्याहरते च बालः

नाकालतॊ यौवनम् अभ्युपैति: नाकालतॊ रॊहति बीजम् उप्तम्

வியாசர் மஹாபாரதம்

அகாலத்தில் மனிதன் பிறப்பதும் இல்லை. (குறித்த 10 மாதத்தில் பிறக்கிறான்)

அகாலத்தில் குழந்தை பேசுவதும் இல்லை

அகாலத்தில் இளமை பருவம் அடைவதும் இல்லை.

அகாலத்தில் விதைக்கப்பட்ட விதை, முளைப்பதும் இல்லை

नाकालतॊ भानु: उपैति यॊगं नाकालतॊ ऽस्तं गिरिम् अभ्युपैति

नाकालतॊ वर्धते हीयते च; चन्द्रः समुद्र: च महॊर्मिमाली

வியாசர் மஹாபாரதம்

அகாலத்தில் சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை.

அகாலத்தில் சந்திரனும் பெரிய அலைகளை சமுத்திரத்தில் உண்டாக்குவது இல்லை. குறைப்பதும் இல்லை.

अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम्

गीतं राज्ञा सेनजिता दुःखार्तेन युधिष्ठिर

வியாசர் மஹாபாரதம்

யுதிஷ்டிரா! முன்பு ஒரு சமயம் வாழ்ந்த, துக்கத்தால் கஷ்டப்பட்ட ஸேனஜித் என்ற அரசர் சொன்னதை சொல்கிறேன் கேள்!

सर्वान एवैष पर्यायॊ मर्त्यान् स्पृशति दुस्तरः

कालेन परिपक्वा हि म्रियन्ते सर्वमानवाः

வியாசர் மஹாபாரதம்

மரணம் என்ற காலகதியானது,  ஒருவரையும் விடாமல் அனைவரையும் பிடிக்கிறது. காலத்தின் பிடியில் சிக்கி, அனைத்து அரசர்களும் மரணிக்கிறார்கள்.

घ्नन्ति चान्यान नरा राजंस तान् अप्य अन्ये नरा: तथा

संज्ञैषा लौकिकी राजन् न हिनस्ति न हन्यते

வியாசர் மஹாபாரதம்

அரசனே! சிலர், 'என்னை இவர் அடிக்கிறார்' என்றும், சிலர் 'நான் இவரை அடித்தேன்' என்றும் காரியங்களுக்கு பெயர் கொடுக்கிறார்கள்.

हन्तीति मन्यते क: चिन् न हन्तीत्य अपि चापरे

स्वभावत: तु नियतौ भूतानां प्रभवाप्ययौ

வியாசர் மஹாபாரதம்

உண்மையில், அடிப்பவனும் இல்லை. அடிக்கப்படுபவனும் இல்லை. 'நான் அடித்தேன்' என்று ஒருவன் நினைக்கிறான். 'நான் அடிக்கப்படுகிறோம்' என்று மற்றொருவன் நினைக்கிறான். உண்மையில், அனைத்தையும் காலமே செய்கிறது.

नष्टे धने वा दारे वा पुत्रे पितरि वा मृते

अहॊ कष्टम् इति ध्यायञ शॊकस्यापचितिं चरेत्

வியாசர் மஹாபாரதம்

சேர்த்த சொத்துக்கள் தொலைந்தாலும், பிள்ளைகள், மனைவி, தந்தை மரணித்தாலும், அப்பொழுது ஏற்படுகின்ற துக்கத்தை நன்றாக ஆலோசனை செய்து, விலக்கிக்கொள்ள வேண்டும்.

स किं शॊचसि मूढः सन् शॊच्यः किम् अनुशॊचसि

पश्य दुःखेषु दुःखानि भयेषु च भयान्य अपि

வியாசர் மஹாபாரதம்

காலம் தான் அனைத்தையும் செய்கிறது என்ற உண்மையை உணராமல், மூடன் போல விவேகமற்று ஏன் சோகப்படுகிறாய்?

ஒரு துக்கத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.

ஒரு பயத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு பயம் உண்டாகும். யுதிஷ்டிரா! கவனமாக இரு.

आत्मापि चायं न मम सर्वापि पृथिवी मम

यथा मम तथान्येषाम् इति पश्यन् न मुह्यति

வியாசர் மஹாபாரதம்

உனக்கு சுகமும், துக்கமும் எப்படியோ, அது போல மற்றவருக்கும் உண்டு.

ஆகையால், "நான் தான் துக்கப்படுகிறேன். நான் தான் சுகப்படுகிறேன், என்ற மமதையை விடு". நான் என்ற அபிமானத்தை விடு. 

'நான் என்ற அபிமானம் இருப்பதால் தான் உலகமே என்னுடையது என்று நினைத்து கொண்டு' அவிவேகத்துடன் ஒவ்வொரு மனிதனும் தவிக்கிறான்.

शॊकस्थान सहस्राणि हर्षस्थान शतानि च

दिवसे दिवसे मूढम् आविशन्ति न पण्डितम्

வியாசர் மஹாபாரதம்

'நான் துக்கப்படுகிறேன். நான் சுகப்படுகிறேன்' என்ற மமதையுடைய மூடன், தினம் தினம், ஆயிரம் (அதிக) சோகத்துடனும், நூறு (கொஞ்சம்) சந்தோஷத்துடன் வாழ்கிறான். "காலமே செய்கிறது' என்ற விவேகம் உள்ள பண்டிதனோ, அப்படி வாழ்வதில்லை.

एवम् एतानि कालेन प्रिय द्वेष्याणि भागशः

जीवेषु परिवर्तन्ते दुःखानि च सुखानि च

வியாசர் மஹாபாரதம்

காலத்தின் வலிமையால் ஆசைப்பட்டது நடக்காமல் போகலாம், ஆசைப்படாதவைகள் நடக்கலாம், துக்கமே சிலசமயம் சுகமாகலாம், சுகமே சிலசமயம் துக்கமாகலாம். 

दुःखम् एवास्ति न सुखं तस्मात् तद् उपलभ्यते

तृष्णार्ति प्रभवं दुःखं दुःखार्ति प्रभवं सुखम् 

வியாசர் மஹாபாரதம்

உண்மையில் சுகத்தை விட இந்த உலகில் துக்கமே அதிகம். ஆகையால், பெரும்பாலும் துக்கமே அனுபவிக்கப்படுகிறது. ஆசையால் தான் துக்கம் உண்டாகிறது. துக்கம் முடியும் போது சுகம் தோன்றுகிறது.

सुखस्यानन्तरं दुःखं दुःखस्यानन्तरं सुखम्

न नित्यं लभते दुःखं न नित्यं लभते सुखम्

வியாசர் மஹாபாரதம்

சுகத்திற்கு பின் துக்கமும், துக்கத்திற்கு பின் சுகமும் உண்டாகிறது. நிலையான சுகத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. நிலையான துக்கத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. 

सुखम् अन्ते हि दुःखानां दुःखम् अन्ते सुखस्य च

तस्माद् एतद् द्वयं जह्याद् य इच्छेच् छाश्वतं सुखम्

  - வியாசர் மஹாபாரதம்

சுகத்தின் முடிவில் துக்கமும், துக்கத்தின் முடிவில் சுகமும் என்றுமே உள்ளது. நிலையான ஆத்ம சுகத்தை (ஆனந்தம்) விரும்புபவன், சரீர சம்பந்தமான இந்த இரண்டையையும் (சுகம், துக்கம்) விட வேண்டும்.

यन्निमित्तं भवे: छॊक: तापॊ वा दुःखमूर्छितः

आयसॊ वापि यन् मूल: तद् एकाङ्गम् अपि त्यजेत्

வியாசர் மஹாபாரதம்

சோகமும், தாபமும், அதிக துன்பத்தை தரும் சோம்பேறித்தனமும், எந்த காரணத்தால் உண்டானாலும், அதை சரீரத்தில் தேவையில்லாத ஒரு அங்கம் (நகம் போல) அதை தள்ள வேண்டும்.

सुखं वा यदि वा दुःखं प्रियं वा यदि वा अप्रियम्

प्राप्तं प्राप्तम् उपासीत हृदयेन अपराजितः

வியாசர் மஹாபாரதம்

சுகமோ, துக்கமோ, விருப்போ, வெறுப்போ எது வந்தாலும் மனம் மாறுபாடு அடையாமல், வருவதை அனுபவிக்க வேண்டும்.

ईषद् अप्य अङ्ग दाराणां पुत्राणां वा चराप्रियम्

ततॊ ज्ञास्यसि कः कस्य केन वा कथम् एव वा

வியாசர் மஹாபாரதம்

மனைவிக்கும், பிள்ளைக்கும் பிடித்த விஷயத்தை செய்யாமல், கொஞ்சம் நீ விலகி நின்றாலேயே, உண்மையில் யார் யாருடையவர்கள், ஏன், எதற்காக என்று தெரிந்து கொள்வாய்.

ये च मूढतमा लॊके ये च बुद्धेः परं गताः

त एव सुखम् एधन्ते मध्यः क्लेशेन युज्यते

வியாசர் மஹாபாரதம்

உலகத்தில் மஹா மூடனும் சுகமாக இருக்கிறான், காலமே அனைத்தும் செய்கிறது என்ற ஞானம் உள்ள புத்திமானும் சுகமாக இருக்கிறான். 'நான் துக்கப்படுகிறேன், நான் சுகமாக இருக்கிறேன்' என்று நடுவில் இருப்பவன் தான் கஷ்டப்படுகிறான்

इत्य अब्रवीन् महाप्राज्ञॊ युधिष्ठिर स सेनजित्

परावरज्ञॊ लॊकस्य धर्मवित् सुखदुःखवित्

வியாசர் மஹாபாரதம்

யுதிஷ்டிரா! தர்மம் அறிந்தவனும், சுகம் என்ன? துக்கம் என்ன? என்று தெரிந்தவனும், உலகத்தில் முன் பின் அறிந்தவனும், அறிவுள்ளவனுமான ஸேனஜித் இவ்வாறு சொன்னார்.

सुखी परस्य यॊ दुःखे न जातु स सुखी भवेत्

दुःखानां हि क्षयॊ नास्ति जायते हय अपरात् परम्

வியாசர் மஹாபாரதம்

பிறருடைய துக்கத்தை சரி செய்யாமல், பார்த்து கொண்டு தானும் துக்கப்படுபவன், ஒரு காலத்திலும் சுகமடையமாட்டான். துக்கத்திற்கு முடிவே இல்லை. ஒரு துக்கத்திலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.

सुखं च दुःखं च भवाभवौ च; लाभालाभौ मरणं जीवितं च

पर्यायशः सर्वम् इह स्पृशन्ति; तस्माद् धीरॊ नैव हृष्येन् न कुप्येत्

வியாசர் மஹாபாரதம்

உலகத்தில் சுகமும்-துக்கமும், நல்லதும்-கெட்டதும், லாபமும்-நஷ்டமும், மரணமும்-ஜனனமும் காலத்தால் வருகின்றன. 

ஆகையால் மோகமும் அடைய கூடாது, சந்தோஷத்தையும் அடைய கூடாது.

பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு முன்பு போர் களத்தில் கீதை உபதேசித்தார்.

இங்கு, கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், துவண்டு கிடக்கும் யுதிஷ்டிர மகாராஜனுக்கு வியாச கீதை உபதேசித்தார்.