தேவர்களுக்கு (சுரர்கள்) குருவும், உலகங்களுக்கு ஒரே நாதனும், பக்தர்களுக்கு ப்ரியமானவரும், அனைத்து உலகத்து மக்களும் நமஸ்கரிப்படுபவரும், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு நிர்குணமாக இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் ஜனனமில்லாதவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், முதல்வரும், தலைவனும் (ஈசன்), தேவர்களாலும் அசுரர்களாலும் ஸித்தர்களாலும் வந்தனம் செய்யப்படுகின்ற நாராயணனை நான் வந்தனம் செய்கிறேன். (3)
सौति: उवाच। (உக்கிரஸரவஸ் என்ற ஸூத பௌராணிகர் சொல்கிறார்)
आद्यं पुरुषम् ईशानं पुरुहूतं पुरुष्टुतम्।
ऋतम् एकाक्षरं ब्रह्म व्यक्त-अव्यक्तं सनातनम्।।
- மஹாபாரதம் - வியாசர்
ஆதி புருஷரும், தலைவரும் (ஈசனும்), அனைவராலும் யாகத்தில் அழைக்கப்பட்டவரும், அனைவராலும் ஸ்துதிக்கப்பட்டவரும், சத்யமே வடிவானவரும், அழிவில்லாத ஒரே பரப்ரம்மமாக இருப்பவரும், உலகமாக (ஸ்தூலமாக) தெரிபவரும் சூக்ஷ்மமாக (ஆத்மாவாக) இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் (சனாதனம்),
என்றும் மங்களமானவரும், மங்களத்தை தருபவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், ப்ரார்த்திக்க தக்கவரும், பாபத்தை போக்குபவரும், பரிசுத்தமானவரும், 5 புலன்களை ஆள்பவரும், அசைகின்ற அசையாத உயிர்கள் அனைத்துக்கும் பிதாவாக இருக்கும் ஹரியை நான் நமஸ்கரிக்கிறேன்.
கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்?
how many days krishna studied in shanthibini ashram?
பீஷ்மர் சொல்கிறார்...
ततस्तौ जग्मतुस्तत्र गुरुं सान्दीपिनिं पुनः।
गुरुशुश्रूषणायुक्तौ धर्मज्ञौ धर्मचारिणौ।।
व्रतम् उग्रं महात्मानौ विचरन्ताववन्तिषु।
अहोरात्रैश्च तुष्पष्ट्या साङ्गान्वेदानवापतुः।।
- மஹாபாரதம் (வியாசர்)
கிருஷ்ணரும், பலராமரும் சாந்தீபினி ஆஸ்ரமத்துக்கு சென்றனர். தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், கடுமையான ப்ரம்மச்சர்யத்தை கடைபிடித்து கொண்டு, குருவுக்கு இரவுபகல் பாராது சேவை செய்து, 64 நாட்களில் வேதம், வேத அங்கங்கள் (கலைகள்) முழுவதையும் கற்றனர்.
लेख्यं च गणितं चोभौ प्राप्नुतां यदुनन्दनौ।
गान्धर्ववेदं वैद्यं च सकलं समावापतुः।।
हस्तिशिक्षामश्विशिक्षां द्वादशाहेन चाप्नुताम्।
तावुभौ जग्मतुर्वीरौ गुरुं सान्दीपिनिं पुनः।।
- மஹாபாரதம் (வியாசர்)
அந்த யாதவர்கள், எழுத்து (writing), எண் (maths), சங்கீதம் (music), வைத்தியம் (medicine), யானை பயிற்சி (elephant handling / riding), குதிரை பயிற்சி (horse handling /ride) இவற்றையெல்லாம் 12 நாட்களில் கற்றனர்.
धनुर्वेदचिकीर्षार्थं धर्मज्ञौ धर्मचारिणौ।
ताविष्वासवराचार्यमभिगम्य प्रणम्य च।।
- மஹாபாரதம் (வியாசர்)
தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், தனுர் வேதம் (weaponary) கற்று கொள்ள மீண்டும் சாந்தீபினி ஆஸ்ரமம் வந்து, தன் ஆசாரியரை வணங்கினர்.
யுதிஷ்டிர ராஜன் ! வில் வித்தையில் தேர்ந்த அந்த சாந்தீபினியை நமஸ்கரித்து, அவரால் மிகவும் விரும்பப்பட்ட இந்த இருவரும், அவந்தி தேசத்தில் இருந்து கொண்டே, 50 நாட்களில் இரவு பகல் பாராமல் கற்று, 10 அங்கங்களோடு கூடிய தனுர் வேதத்தை அதன் ரஹஸ்யங்களோடு கூட அறிந்து கொண்டு, மனதில் ஆழமாக பதியும் படி கற்றனர்.
கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? 64+12+50=126 நாட்கள்.
ஸ்ரீ கிருஷ்ணராக பகவான்நாராயணனே வந்தார் என்பதால் 128 நாட்களில் படித்தார் என்பது கூட ஆச்சரியமில்லை.
இவை அனைத்தும் சாந்தீபினியே சொல்லி கொடுத்தார் என்று பார்க்கும் போது, அவர் பெருமையை நாம் உணரலாம்.
உஜ்ஜயினி என்று இன்று சொல்லப்படும் நகரமே அன்று அவந்தி தேசமாக இருந்தது.
யுதிஷ்டிரர் "ஆசாரம் பற்றி அறிய விரும்புகிறேன்" என்று கேட்க, பீஷ்மர் ஆசாரத்தை பற்றி விளக்குகிறார்.
दुराचारा दुर्विचेष्टा दुष्प्रज्ञाः प्रिय-साहसाः।
असन्तस्त्वभिविख्याताः सन्तश्च आचार-लक्षणाः।।
- வியாசர் (மஹாபாரதம்)
அயோக்கியர்கள் 'கெட்ட ஆசாரத்தோடும், கெட்ட நடத்தையோடும், கெட்ட புத்தியோடும், சாகசம் புரிய விருப்பத்தோடும் இருப்பார்கள்' என்பது போல,
சாதுக்கள் 'ஆசாரத்தில் விருப்பத்தோடு இருப்பார்கள்' என்பது ப்ரஸித்தம்.
पुरीषं यदि वा मूत्रं ये न कुवन्ति मानवाः।
राजमार्गे गवां-मध्ये धान्य-मध्ये शिवालये।
अग्न्यगारे तथा तीरे ये न कुर्वन्ति ते शुभाः।।
- வியாசர் (மஹாபாரதம்)
பெரிய சாலையிலும் (ராஜ மார்க்கம்), பசுக்களின் நடுவிலும், தானியத்தின் நடுவிலும், சிவாலயத்திலும், அக்னி சாலையிலும், நதி கரையிலும், மலம்-மூத்திரம் செய்யாத மனிதன் 'நல்லவன்' என்று அறியலாம்.
शौचम् आवश्यकं कृत्वा देवतानां च तर्पणम्।
धर्ममाहु: मनुष्याणामुपस्पृश्य नदीं तरेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
அவசியமாக செய்ய வேண்டிய சுத்தியை செய்து கொண்டு, ஆசமனம் செய்த பிறகு, நதியில் இறங்கி ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு, தேவர்களை குறித்து தர்ப்பணம் செய்வது மனிதர்களுக்கு தர்மமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.
எப்பொழுதும் சூரியனை உபாஸிக்க வேண்டும். உதயகாலத்தில் உறங்க கூடாது. காலையிலும், மாலையிலும் காயத்ரீ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். முதல் சந்தியில் நின்று கொண்டும், மாலை சந்தியில் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்.
न निन्द्याद् अन्नभक्ष्यांश्च स्वादुस्वादु च भक्षयेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
5 அங்கமும் அலம்பிக்கொண்டு, கிழக்கு முகமாக அமைதியாக போஜனம் செய்ய வேண்டும். அன்னத்தை, சாப்பிடும் போது நிந்திக்க கூடாது. மிகவும் ருசியாக உள்ளது என்று பூஜிக்க வேண்டும்.
न आर्द्र-पाणिः समुत्तिष्ठेन्न आर्द्र-पादः स्वपेन्निशि।
देवर्षि-र्नारदः प्राह एतदाचारलक्षणम्।।
- வியாசர் (மஹாபாரதம்)
கை ஈரமாக இருக்கும் போதே எழுந்திருக்க வேண்டும் (கை காய உட்கார்ந்து இருக்க கூடாது). இரவில் கால் அலம்பாமல் படுக்க கூடாது. தேவ-ரிஷியான நாரதர் இவ்விதம் ஆசாரத்தின் லக்ஷணத்தை சொல்கிறார்.
शोचिष्केशमनड्वाहं देव गोष्ठं चतुष्-पथम्।
ब्राह्मणं धार्मिकं च एव नित्यं कुर्यात् प्रदक्षिणम्।।
- வியாசர் (மஹாபாரதம்)
அக்னியையும், காளையையும், தேவதையையும், பசுமடத்தையும், நாற்-சந்தியையும், தர்மத்தில் இருக்கும் ப்ராம்மணனையும் பார்த்தால், ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். அதாவது, அவர்களை சுற்றி வலம் வர வேண்டும்
अतिथीनां च सर्वेषां प्रेष्याणां स्वजनस्य च।
सामात्यं भोजनं भृत्यैः पुरुषस्य प्रशस्यते।।
- வியாசர் (மஹாபாரதம்)
நேரம் சொல்லாமல் நம் வீட்டுக்கு வந்த அதிதியை, தான் சொல்லும் காரியத்தை செய்யும் ஏவலாளியை, உறவினர்களை வேற்றுமை பாராமல் உணவு கொடுப்பது மனிதனுக்கு சிறந்த தர்மமாகும்.
सायंप्रातर्मनुष्याणामशनं वेदनिर्मितम्।
नान्तरा भोजनं दृष्टम् उपवासी तथा भवेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
மனிதர்களுக்கு காலையிலும், மாலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் மத்தியில் உணவு உண்ண வேண்டும் என்று விதி இல்லை. அந்த விதிப்படி உபவாசம் இருப்பவன், பயனடைவான்.
होमकाले तथ्ना जुह्वन् ऋतुकाले तथा व्रजन्।
अनन्यस्त्रीजनः प्राज्ञो ब्रह्मचारी तथा भवेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
ஹோமம் செய்ய வேண்டிய காலங்களில் ஹோமம் செய்து கொண்டும், ருது காலத்தில் மட்டும் தன் மனைவியோடு சேருபவனும், வேறு பெண்களை நெருங்காதவனும், நல்ல அறிவுள்ளவனும், “பிரம்மச்சாரி”என்று கருத வேண்டும். மணமானாலும் ‘ப்ரம்மச்சர்யத்தில் இருக்கிறான்’ என்று பொருள்
अमृतं ब्राह्मण: उच्छिष्टं जनन्या हृदयं कृतम्।
तज्जनाः पर्युपासन्ते सत्यं सन्तः समासते।।
- வியாசர் (மஹாபாரதம்)
தர்மம்-அதர்மம் தெரிந்து வாழ்க்கையை நடத்தும் பிராம்மணன் சாப்பிட்ட பிறகு, சாப்பிடுவதால், அந்த உணவு அம்ருதமாகவும் (ஆயுள் கூட்டுவதாகவும்), இதயத்தில் நல்ல எண்ணத்தையும் உண்டு பண்ணுவதாகவும் அமையும். அந்த உணவை எந்த ஜனங்கள் அன்புடன் ஏற்கிறார்களோ, அந்த ஸாதுக்கள், ஸத்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள்.
लोष्टमदीं तृणच्छेदी नखखादी तु यो नरः।
नित्य:-उच्छिष्टः संकसुको नेह-आयु: विन्दते महत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
எவன் மண்ணை உதைக்கிறானோ (வீட்டை உடைப்பவன்), புற்களை கிள்ளுகிறானோ, நகத்தை கடிக்கிறானோ, எப்பொழுதும் பிறர் சாப்பிட்டதையே உண்கிறானோ, பேராசை கொண்டவனோ, அவன் நீண்ட ஆயுளை அடைய மாட்டான்.
यजुषा संस्कृतं मांसं निवृत्तो मांस-भक्षणात्।
भक्षयेन्न वृथामांसं पृष्ठमांसं च वर्जयेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், சாஸ்திர விதிப்படி பூஜித்து மாமிசம் உண்ணலாம். அனாவசியமாக விருப்பத்துக்காக சாப்பிட கூடாது. மிச்சப்பட்ட மாமிசத்தை, மாமிசத்தின் பின்-பாகத்தை சாப்பிட கூடாது.
स्वदेशे परदेशे वा अतिर्थि नोपवासयेत्।
काम्यकर्मफलं लब्ध्वा गुरूणाम् उपपादयेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
தன் தேசத்தில் இருந்தாலும், வெளி தேசத்தில் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்திற்கு அதிதியாக வந்தவனை சாப்பிடாமல் வைக்க கூடாது. ஆசையினால் சேர்க்கப்பட்ட பொருளை குருவிடம் கொடுத்து விட வேண்டும்.
गुरूणाम् आसनं देयं कर्तव्यं च अभिवादनम्।
गुरूनभ्यर्च्य युज्येत आयुषा यशसा श्रिया।।
- வியாசர் (மஹாபாரதம்)
குருவுக்கு ஆஸனம் கொடுத்து, அவருக்கு தன் ரிஷி பரம்பரையை பற்றி சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். குருவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். பெரியோர்களை பூஜித்ததால், ஆயுளும், புகழும், செல்வமும் கூடும்.
नेक्षेतादित्यमुद्यन्तं न च नग्नां परस्त्रियम्।
मैथुनं सततं धर्म्यं गुह्ये चैव समाचरेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
உதிக்கும் காலத்தில் சூரியனை கண்ணால் பார்க்க கூடாது. வேறு பெண்களையோ, ஆடையில்லாத பெண்ணையோ நோக்க கூடாது. தர்மத்தை மீறாத உடலுறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும்.
तीर्थानां हृदयं तीर्थं शुचीनां हृदयं शुचिः।
सर्वम् आर्यकृतं धर्म्यं वालसंस्पर्शनानि च।।
- வியாசர் (மஹாபாரதம்)
மனமே தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம்! சுத்தம் என்றால், மனசுத்தமே சிறந்த சுத்தம். பண்புள்ளவர்கள் செய்யும் அனைத்து காரியமும் தர்மமே. பசுவின் வாலை தொடுவதும் புண்யமே.
दर्शने-दर्शने नित्यं सुख-प्रश्नम् उदाहरेत्।
सायं प्रातश्च विप्राणां प्रदिष्टम् अभिवादनम्।।
- வியாசர் (மஹாபாரதம்)
வேத ப்ராம்மணனை காணும் போதெல்லாம், எப்பொழுதும் நலம் விசாரிக்க வேண்டும். காலையும் மாலையும் வேத ப்ராம்மணனை கண்டு நமஸ்கரிக்க வேண்டும்.
देवगोष्ठे गवां-मध्ये ब्राह्मणानां क्रियापथे।
स्वाध्याये भोजने चैव दक्षिणं पाणिम् उद्धरेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
தேவாலயத்திலும், பசுக்களின் நடுவிலும், ப்ராம்மணர்களின் நடுவிலும், கர்மானுஷ்டம் செய்யும் போதும், படிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலது கை வெளியே இருக்கும் படி (அதாவது பூணூலை இடது தோளில் இருப்பதாக வைத்து கொள்ள வேண்டும்) வைத்து கொள்ள வேண்டும்.
सायं प्रातश्च विप्राणां पूजनं च यथाविधि।
पण्यानां शोभते पण्यं कृषीणामृद्ध्यतां कृषिः।
बहुकारं च सस्यानां वाह्ये वाहो गवां तथा।।
- வியாசர் (மஹாபாரதம்)
காலையிலும், மாலையிலும் வேதத்தை ரக்ஷிக்கும் ப்ராம்மணர்களை முடிந்த வரை பூஜிப்பது, மதிப்புமிக்கதில் மதிப்புள்ளதை போற்றியதற்கு சமமாகும். விவசாயத்தில் சிறந்த கிருஷியை போற்றியதற்கு சமமாகும். அதிகமான தானியங்கள் சேர்ப்பதற்கு சமமாகும்.
संपन्नं भोजने नित्यं पानीये तर्पणं तथा।
सुशृतं पायसे ब्रूयाद्यवाग्वां कृसरे तथा।।
- வியாசர் (மஹாபாரதம்)
எப்பொழுதும், உணவு கொடுப்பவன், கொடுக்கும் போது "ஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். உணவை பெற்று கொள்பவன் "ஸுஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். குடிக்க ஜலம் கொடுப்பவன், கொடுக்கும் போது "தர்ப்பணம்" என்று சொல்லி கொடுக்க வேண்டும். தண்ணீரை பெற்று கொண்டவன் "ஸுதர்ப்பணம்" என்று சொல்ல வேண்டும். பாயசம் (கஞ்சி/அன்னம்) கொடுக்கும் போது, கொடுப்பவன் "ஸ்ருதம்" என்று சொல்ல வேண்டும். அதை பெறுபவன் "ஸுஸ்ருதம்" என்று சொல்லி பெற்று கொள்ள வேண்டும். சாப்பிடுபவனையோ / குளிப்பவனையோ தும்முகிறவனையோ சவரம் செய்பவனையோ பார்த்தால் "ஆயுஷ்யம்" என்று சொல்ல வேண்டும்.
प्रति आदित्यं न मेहेत न पश्येदात्मनः शकृत्।
सुतैः स्त्रिया च शयनं सह भोज्यं च वर्जयेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
சூரியனை பார்த்து மல-மூத்திரம் செய்ய கூடாது. மேலும் அப்போது மல (இட) கையை பார்க்க கூடாது. புத்ரியோடும், பெண்களோடும் சேர்ந்து படுக்கவோ, சாப்பிடவோ கூடாது.
त्वंकारं नामधेयं च ज्येष्ठानां परिवर्जयेत्।
अवराणां समानानाम् उभयं नैव दुष्यति।।
- வியாசர் (மஹாபாரதம்)
நீ என்ற ஒருமையிலோ, பெயரை சொல்லியோ வயதில் பெரியவர்களை கூப்பிட கூடாது. தன்னை விட வயதில் குறைந்தவர்களை, வயதில் சமமானவர்களே கூப்பிடுவது தவறில்லை.
हृदयं पापवृत्तानां पापम् आख्याति वैकृतम्।
ज्ञानपूर्वं विनश्यन्ति गूहमाना महाजने।।
- வியாசர் (மஹாபாரதம்)
பாபங்களை செய்யும் இதயம் கொண்டவனின் முகமே அவனுடைய பாப எண்ணத்தை வெளி காட்டி விடும். செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதிகளை ஜனங்களுக்கு கொடுத்து, பாபங்களை மறைத்து செய்பவன்நாசமடைவான்
ज्ञानपूर्वकृतं पापं छादयन्त्यबहुश्रुताः।
नैनं मनुष्याः पश्यन्ति पश्यन्त्येव दिवौकसः।।
- வியாசர் (மஹாபாரதம்)
விஷய அறிவு இல்லாமல், தெரிந்தே பாபங்களை (தவறுகளையும்) செய்து விட்டு, அதை மறைத்தும் விடுவார்கள். இப்படி இவர்கள் சக மனிதர்களை ஏமாற்றினாலும், செய்த பாபத்தை தேவர்கள் அறிகிறார்கள்.
पापेनापिहितं पापं पापम् एव अनुवर्तते।
धर्मेणापिहितो धर्मो धर्मम् एव अनुवर्तते।
धार्मिकेण कृतो धर्मो धर्मम् एव अनुवर्तते।।
- வியாசர் (மஹாபாரதம்)
பாபத்தை செய்த இந்த பாபிகளை அவர்கள் பாபமே துரத்தி கொண்டு வரும். தர்மத்தை செய்த தர்மாத்மாவை, அவர்கள் செய்த தர்மமே துரத்தி கொண்டு வரும்.
पापं कृतं न स्मरतीह मूढो
विवर्तमानस्य तदेति कर्तुः।
राहुर्यथा चन्द्रमुपैति चापि
तथाऽबुधं पापमुपैति कर्म।।
- வியாசர் (மஹாபாரதம்)
பாபம் செய்வதிலேயே நாட்டம் கொண்ட மூடன் (அசடுகள்), நான் சொன்ன இந்த ஆசாரத்தை, நினைத்து கூட பார்க்காமல் இருக்கிறான். பாபமே செய்பவர்கள், சாஸ்திரத்துக்கு விரோதமாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எப்படி பொலிவு மிகுந்த சந்திரனை ராகு விழுங்குகிறதோ, அது போல புகழ் மங்கி, பொலிவை இழப்பார்கள்.
आशया संचितं द्रव्यं दुःखेनैवोपभुज्यते।
तद्बुधा न प्रशंसन्ति मरणं न प्रतीक्षते।।
- வியாசர் (மஹாபாரதம்)
பேராசையால் பெறப்பட்ட எந்த பொருளும், துக்கத்தையே தரும். அறிவாளி அப்படிப்பட்ட பொருளை கொண்டாடுவதில்லை, அதனால் ஏற்படும் மரணத்தை அவர்கள் ஏற்பதும் இல்லை.
मानसं सर्वभूतानां धर्ममाहु: मनीषिणः।
तस्मात्सर्वेषु भूतेषु मनसा शिवम् आचरेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
பாராபட்சம் இல்லாமல் அனைவருக்கும் மனப்பூர்வமாக செய்வதே மனிதனுக்குரிய தர்மம். ஆகையால், எல்லா உயிர்களுக்கும் மனப்பூர்வமாக நல்லதை (மங்களத்தை) செய்ய வேண்டும்.
एक एव चरेद्धर्मं नास्ति धर्मे सहायता।
केवलं विधिमासाद्य सहायः किं करिष्यति।।
- வியாசர் (மஹாபாரதம்)
தர்மத்தை ஒருவனாகவே செய்யலாம். தர்மம் செய்ய துணை அவசியமில்லை. மனதில் தர்ம சிந்தனை இல்லாமல், துணைக்கு ஆள் கிடைத்தும் என்ன பயன் கிடைக்கப்போகிறது?
धर्मो योनि: मनुष्याणां देवानाम् अमृतं दिवि।
प्रेत्यभावे सुखं धर्माच्न्छश्वत्तैरुपभुज्यते।।
- வியாசர் (மஹாபாரதம்)
தர்மத்தில் இருப்பதற்காக தான் மனித-யோனியில் மனிதபிறவி கிடைத்துள்ளது.. அதன் மூலம் தேவர்களை போல அம்ருத நிலையை (அழியா புகழ்) அடையலாம். தர்மத்திலேயே இருப்பதால், மறு பிறவி எடுத்தாலும் அந்த தர்மத்தின் பலன் தொடர்ந்து வந்து க்ஷேமத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு பீஷ்மர், யுதிஷ்டிரரிடம் "ஆசாரம்" என்றால் என்ன? என்பது பற்றி விளக்கினார்.
After war got over, Vyasa tells yudhistra on various dharma...
यथा दारु मयॊ हस्ती
यथा चर्ममयॊ मृगः
ब्राह्मण: चानधीयान:
त्रय: ते नाम धारकाः
- Vyasa mahabharata
மரத்தால் செய்யப்பட்ட யானை, தோலால் செய்யப்பட்ட மிருகம், வேத அத்யயனம் செய்யாத பிராம்மணன், இவர்கள் மூவரும் வெறும் யானை, மிருகம், பிராம்மணன் என்ற பெயரை வைத்து கொள்ளலாமே தவிர, அதனால் ஒரு பயனும் அடைய மாட்டார்கள்.
Elephant toy made of wood, animal toy made of skin, brahmin who have not recited veda can just hold the title of elephant, animal, brahmin but will never get any respect out of it.
यथा षण्ढॊ ऽफलः स्त्रीषु
यथा गौर् गवि चाफला
शकुनि: वाप्य अपक्षः स्यान्
निर्मन्त्रॊ ब्राह्मण: तथा
- Vyasa Mahabharata
ஆண்மையற்றவன் பெண்ணோடு சேருவது எப்படி பயனற்றதோ,
பசுவோடு மற்றொரு பசுவை சேர்ப்பது எப்படி பயனற்றதோ,
அது போல,
சிறகு இல்லாத பறவை போல, வேதம் ஓதாத பிராம்மணன் பயனற்றவன்.
Brahmin who don't recite veda are just equivalent to a bird without wings.
Just like how useless it is for an impotent man to merge with a woman,
Just like how useless it is for an cow to merge with another cow,
Like a bird without wings, a Brahmin who does not read the veda will be useless.
ग्रामधान्यं यथा शून्यं
यथा कूप: च निर्जलः
यथा हुतम् अनग्नौ च
तथैव स्यान् निराकृतौ
- Vyasa Mahabharata
தானியங்கள் இல்லாத கிடங்குகள் எப்படி பயன் இல்லையோ,
தண்ணீர் இல்லாத கிணறு எப்படி பயன் இல்லையோ,
அக்னி இல்லாத ஹோமம் எப்படி பயன் இல்லையோ,
அது போல,
இப்படிப்பட்டவனுக்கு (வேதம் அறியாத பிராம்மணனுக்கு) தானம் செய்வதால் ஒரு பயனும் இல்லை.
Just like that way, a kernel without grains is useless,
Just like the way, a well without water is useless,
Just like the way, a yagya without fire is useless,
It is useless to donate anything to such person (brahmin who don't recite veda)
देवतानां पितॄणां च
हव्यकव्य विनाशनः
शत्रु: अर्थहरॊ मूर्खॊ
न लॊकान प्राप्तुम् अर्हति
- Vyasa Mahabharata
தேவர்களுக்கு செய்யும் பூஜையை, பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம், ஸ்ரார்த்தம் போன்ற காரியங்களை கெடுப்பவன், அடுத்தவன் சொத்தை திருடும் மூர்க்கன் நல்ல லோகங்களை அடைய மாட்டான்.
A gift become useless if it is given to such a person who do not offer and perform daily duties on god and pitru.
He is, therefore, like unto a robber (of other people's wealth). He can never succeed in acquiring upper worlds of bliss.
பாரத போர் முடிந்த பிறகு, 'இப்படி ஒரு க்ஷத்ரிய குல உலகநாசம் என்னை காரணமா கொண்டு நடந்து விட்டதே! பூமியை ஆள வேண்டும் என்ற தன்னுடைய ஆசையால் இப்படி ஆகி விட்டதே! பல பெண்கள் விதவையாகி விட்டனரே!' என்று புலம்பி, யுதிஷ்டிர மஹாராஜா துவண்டு விட்டார்.
அவரை அர்ஜுனன், நகுலன், பீமன், சகாதேவன், திரௌபதி என்று பலரும் சமாதானம் செய்து பார்த்தனர்.
வியாசர் ராஜ தர்மம் உபதேசித்தார். இருந்தும் யுதிஷ்டிரருக்கு சமாதானம் கிடைக்கவில்லை.
पर्याय यॊगाद् विहितं विधात्रा; कालेन सर्वं लभते मनुष्यः
- வியாசர் மஹாபாரதம்
எந்த ஒரு மனிதனும் உண்மையில் தன் செயலாலோ, தன் தியாகத்தாலோ, தன் வழிபாட்டாலோ எதையும் பெற முடியாது. எந்த மனிதனும், சக மனிதனுக்கு எதையும் கொடுக்கவும் முடியாது. காலமே அனைத்தையும் செய்கிறது. மனிதன் காலத்தின் தூண்டுதலால் தான் அனைத்தையும் செய்கிறான்.
न बुद्धिशास्त्राध्ययनेन शक्यं; प्राप्तुं विशेषै: मनुजै: अकाले
मूर्खॊ ऽपि प्राप्नॊति कदा चिद् अर्थान्; कालॊ हि कार्यं प्रति निर्विशेषः
- வியாசர் மஹாபாரதம்
காலம் சரியில்லை என்றால், எத்தனை புத்தி இருந்தாலும், கல்வி இருந்தாலும் மனிதன் விரும்பினாலும் அடைய முடியாது.
நல்ல காலம் இருந்தால், மூடன் கூட பல பொருளை அடைகிறான்.
மனிதனுக்கு அனைத்தையும் கொடுப்பது காலம் தான்.
नाभूति काले च फलं ददाति; शिल्पं न मन्त्रा: च तथौषधानि
तान्य एव कालेन समाहितानि; सिध्यन्ति चेध्यन्ति च भूतकाले
- வியாசர்மஹாபாரதம்
பூமியும் மருந்தும் மந்திரமும் மற்ற தொழில்களும் அகாலத்தில் பயன் கொடுப்பதில்லை. அவைகளே நல்ல காலத்தில் பயன் தருகிறது.
नाकालतॊ वर्धते हीयते च; चन्द्रः समुद्र: च महॊर्मिमाली
- வியாசர் மஹாபாரதம்
அகாலத்தில் சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை.
அகாலத்தில் சந்திரனும் பெரிய அலைகளை சமுத்திரத்தில் உண்டாக்குவது இல்லை. குறைப்பதும் இல்லை.
अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम्
गीतं राज्ञा सेनजिता दुःखार्तेन युधिष्ठिर
- வியாசர் மஹாபாரதம்
யுதிஷ்டிரா! முன்பு ஒரு சமயம் வாழ்ந்த, துக்கத்தால் கஷ்டப்பட்ட ஸேனஜித் என்ற அரசர் சொன்னதை சொல்கிறேன் கேள்!
सर्वान एवैष पर्यायॊ मर्त्यान् स्पृशति दुस्तरः
कालेन परिपक्वा हि म्रियन्ते सर्वमानवाः
- வியாசர் மஹாபாரதம்
மரணம் என்ற காலகதியானது, ஒருவரையும் விடாமல் அனைவரையும் பிடிக்கிறது. காலத்தின் பிடியில் சிக்கி, அனைத்து அரசர்களும் மரணிக்கிறார்கள்.
घ्नन्ति चान्यान नरा राजंस तान् अप्य अन्ये नरा: तथा
संज्ञैषा लौकिकी राजन् न हिनस्ति न हन्यते
- வியாசர்மஹாபாரதம்
அரசனே! சிலர், 'என்னை இவர் அடிக்கிறார்' என்றும், சிலர் 'நான் இவரை அடித்தேன்' என்றும் காரியங்களுக்கு பெயர் கொடுக்கிறார்கள்.
हन्तीति मन्यते क: चिन् न हन्तीत्य अपि चापरे
स्वभावत: तु नियतौ भूतानां प्रभवाप्ययौ
- வியாசர் மஹாபாரதம்
உண்மையில், அடிப்பவனும் இல்லை. அடிக்கப்படுபவனும் இல்லை. 'நான் அடித்தேன்' என்று ஒருவன் நினைக்கிறான். 'நான் அடிக்கப்படுகிறோம்' என்று மற்றொருவன் நினைக்கிறான். உண்மையில், அனைத்தையும் காலமே செய்கிறது.
नष्टे धने वा दारे वा पुत्रे पितरि वा मृते
अहॊ कष्टम् इति ध्यायञ शॊकस्यापचितिं चरेत्
- வியாசர் மஹாபாரதம்
சேர்த்த சொத்துக்கள் தொலைந்தாலும், பிள்ளைகள், மனைவி, தந்தை மரணித்தாலும், அப்பொழுது ஏற்படுகின்ற துக்கத்தை நன்றாக ஆலோசனை செய்து, விலக்கிக்கொள்ள வேண்டும்.
स किं शॊचसि मूढः सन् शॊच्यः किम् अनुशॊचसि
पश्य दुःखेषु दुःखानि भयेषु च भयान्य अपि
- வியாசர் மஹாபாரதம்
காலம் தான் அனைத்தையும் செய்கிறது என்ற உண்மையை உணராமல், மூடன் போல விவேகமற்று ஏன் சோகப்படுகிறாய்?
ஒரு துக்கத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.
ஒரு பயத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து மற்றொரு பயம் உண்டாகும். யுதிஷ்டிரா! கவனமாக இரு.
आत्मापि चायं न मम सर्वापि पृथिवी मम
यथा मम तथान्येषाम् इति पश्यन् न मुह्यति
- வியாசர்மஹாபாரதம்
உனக்கு சுகமும், துக்கமும் எப்படியோ, அது போல மற்றவருக்கும் உண்டு.
ஆகையால், "நான் தான் துக்கப்படுகிறேன். நான் தான் சுகப்படுகிறேன், என்ற மமதையை விடு". நான் என்ற அபிமானத்தை விடு.
'நான் என்ற அபிமானம் இருப்பதால் தான் உலகமே என்னுடையது என்று நினைத்து கொண்டு' அவிவேகத்துடன் ஒவ்வொரு மனிதனும் தவிக்கிறான்.
शॊकस्थान सहस्राणि हर्षस्थान शतानि च
दिवसे दिवसे मूढम् आविशन्ति न पण्डितम्
- வியாசர் மஹாபாரதம்
'நான் துக்கப்படுகிறேன். நான் சுகப்படுகிறேன்' என்ற மமதையுடைய மூடன், தினம் தினம், ஆயிரம் (அதிக) சோகத்துடனும், நூறு (கொஞ்சம்) சந்தோஷத்துடன் வாழ்கிறான். "காலமே செய்கிறது' என்ற விவேகம் உள்ள பண்டிதனோ, அப்படி வாழ்வதில்லை.
உண்மையில் சுகத்தை விட இந்த உலகில் துக்கமே அதிகம். ஆகையால், பெரும்பாலும் துக்கமே அனுபவிக்கப்படுகிறது. ஆசையால் தான் துக்கம் உண்டாகிறது. துக்கம் முடியும் போது சுகம் தோன்றுகிறது.
सुखस्यानन्तरं दुःखं दुःखस्यानन्तरं सुखम्
न नित्यं लभते दुःखं न नित्यं लभते सुखम्
- வியாசர்மஹாபாரதம்
சுகத்திற்கு பின் துக்கமும், துக்கத்திற்கு பின் சுகமும் உண்டாகிறது. நிலையான சுகத்தையும் யாரும் அனுபவித்ததில்லை. நிலையான துக்கத்தையும் யாரும் அனுபவித்ததில்லை.
சுகத்தின் முடிவில் துக்கமும், துக்கத்தின் முடிவில் சுகமும் என்றுமே உள்ளது. நிலையான ஆத்ம சுகத்தை (ஆனந்தம்) விரும்புபவன், சரீர சம்பந்தமான இந்த இரண்டையையும் (சுகம், துக்கம்) விட வேண்டும்.
यन्निमित्तं भवे: छॊक: तापॊ वा दुःखमूर्छितः
आयसॊ वापि यन् मूल: तद् एकाङ्गम् अपि त्यजेत्
- வியாசர் மஹாபாரதம்
சோகமும், தாபமும், அதிக துன்பத்தை தரும் சோம்பேறித்தனமும், எந்த காரணத்தால் உண்டானாலும், அதை சரீரத்தில் தேவையில்லாத ஒரு அங்கம் (நகம் போல) அதை தள்ள வேண்டும்.
सुखं वा यदि वा दुःखं प्रियं वा यदि वा अप्रियम्
प्राप्तं प्राप्तम् उपासीत हृदयेन अपराजितः
- வியாசர் மஹாபாரதம்
சுகமோ, துக்கமோ, விருப்போ, வெறுப்போ எது வந்தாலும் மனம் மாறுபாடு அடையாமல், வருவதை அனுபவிக்க வேண்டும்.
ईषद् अप्य अङ्ग दाराणां पुत्राणां वा चराप्रियम्
ततॊ ज्ञास्यसि कः कस्य केन वा कथम् एव वा
- வியாசர் மஹாபாரதம்
மனைவிக்கும், பிள்ளைக்கும் பிடித்த விஷயத்தை செய்யாமல், கொஞ்சம் நீ விலகி நின்றாலேயே, உண்மையில் யார் யாருடையவர்கள், ஏன், எதற்காக என்று தெரிந்து கொள்வாய்.
ये च मूढतमा लॊके ये च बुद्धेः परं गताः
त एव सुखम् एधन्ते मध्यः क्लेशेन युज्यते
- வியாசர் மஹாபாரதம்
உலகத்தில் மஹா மூடனும் சுகமாக இருக்கிறான், காலமே அனைத்தும் செய்கிறது என்ற ஞானம் உள்ள புத்திமானும் சுகமாக இருக்கிறான். 'நான் துக்கப்படுகிறேன், நான் சுகமாக இருக்கிறேன்' என்று நடுவில் இருப்பவன் தான் கஷ்டப்படுகிறான்
इत्य अब्रवीन् महाप्राज्ञॊ युधिष्ठिर स सेनजित्
परावरज्ञॊ लॊकस्य धर्मवित् सुखदुःखवित्
- வியாசர் மஹாபாரதம்
யுதிஷ்டிரா! தர்மம் அறிந்தவனும், சுகம் என்ன? துக்கம் என்ன? என்று தெரிந்தவனும், உலகத்தில் முன் பின் அறிந்தவனும், அறிவுள்ளவனுமான ஸேனஜித் இவ்வாறு சொன்னார்.
सुखी परस्य यॊ दुःखे न जातु स सुखी भवेत्
दुःखानां हि क्षयॊ नास्ति जायते हय अपरात् परम्
- வியாசர் மஹாபாரதம்
பிறருடைய துக்கத்தை சரி செய்யாமல், பார்த்து கொண்டு தானும் துக்கப்படுபவன், ஒரு காலத்திலும் சுகமடையமாட்டான். துக்கத்திற்கு முடிவே இல்லை. ஒரு துக்கத்திலிருந்து மற்றொரு துக்கம் உண்டாகும்.
सुखं च दुःखं च भवाभवौ च; लाभालाभौ मरणं जीवितं च
पर्यायशः सर्वम् इह स्पृशन्ति; तस्माद् धीरॊ नैव हृष्येन् न कुप्येत्
- வியாசர் மஹாபாரதம்
உலகத்தில் சுகமும்-துக்கமும், நல்லதும்-கெட்டதும், லாபமும்-நஷ்டமும், மரணமும்-ஜனனமும் காலத்தால் வருகின்றன.
ஆகையால் மோகமும் அடைய கூடாது, சந்தோஷத்தையும் அடைய கூடாது.
பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு முன்பு போர் களத்தில் கீதை உபதேசித்தார்.
இங்கு, கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், துவண்டு கிடக்கும் யுதிஷ்டிர மகாராஜனுக்கு வியாச கீதை உபதேசித்தார்.
சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில், இன்று இந்தியசட்டத்தின் (சாஸ்திரம்) படி ஆட்சியை வழிநடத்தும் MLA, MPக்கள் என்ற இன்றைய பிராம்மண வர்ணத்தார் (லௌகீக மற்றும் வைதீக பிராம்மண ஜாதியை இங்கு சொல்லவில்லை) சொல்லப்பட்ட அறிவுரை, ஒழுக்கம். அன்று பிராம்மண வர்ணத்தார் எப்படி வாழ்ந்தார்கள்? தெரிந்து கொள்வோம், மஹாபாரதம்.
பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.
பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.
அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர்.
அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்டயுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.
நிலத்திற்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும்,
'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்'
என்று சொல்லி விட்டார்.
'யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது' என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
அந்த சமயம்,
திரௌபதியும், பிறகு மீண்டும் அர்ஜுனனும், வ்யாசரும் "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினார்கள்.
அப்பொழுது,
அரசனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தண்ட நீதியை, எப்படி இரண்டு ப்ராம்மணர்கள் மதித்தார்கள்?
அவர்களுடைய தவவாழ்க்கை எப்படி தூய்மையாக இருந்தது? என்று சொல்லதொடங்கினார்..
अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम् |
शङ्खः च लिखितः चास्तां भ्रातरौ संयत व्रतौ ||
- vyasa mahabharata
புராண காலத்தில் (ஒரு சமயம்), கடுமையான தவசீலர்களான சங்கர் மற்றும் லிகிதர் என்ற சகோதரர்கள் வாழ்ந்தார்கள்.
तयॊः आवसथाव् आस्तां रमणीयौ पृथक् पृथक् |
नित्यपुष्पफलैः वृक्षैरः उपेतौ बाहुदाम् अनु ||
- vyasa mahabharata
அவர்களுக்கு பாஹுதா என்ற நதிக்கரையில் பூக்களும், பழங்களும் நிறைந்து இருக்கும் இரு ஆஸ்ரமங்கள் தனித்தனியே இருந்தன.
ஒரு சமயம் லிகிதர், தன்னுடைய சகோதரர் சங்கர் ஆஸ்ரமத்துக்கு வந்தார். அப்பொழுது சங்கர் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே சென்று இருந்தார்.
सॊ ऽभिगम्याश्रमं भ्रातुः शङ्खस्य लिखितः तदा |
फलानि शातयाम् आस सम्यक् परिणतान्य उत ||
- vyasa mahabharata
தன்னுடைய சகோதரர் சங்கர் ஆஸ்ரமத்துக்குள் உலவி கொண்டிருந்த லிகிதர், அங்கு நன்றாக பழுத்திருந்த ஒரு பழத்தை பறித்தார்.
तान्य उपादाय विस्रब्धॊ भक्षयाम् आस स द्विजः |
तस्मिंश् च भक्षयत्य एव शङ्खॊ ऽपय् आश्रमम् आगमत् ||
- vyasa mahabharata
அருகில் யாரும் இல்லாத நிலையில், அந்த பழத்தை சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் சமயத்தில், சங்கர் வந்து விட்டார்.
भक्षयन्तं तु तं दृष्ट्वा शङ्खॊ भ्रातरम अब्रवीत् |
कुतः फलान्य अवाप्तानि हेतुना केन खादसि ||
- vyasa mahabharata
சங்கர், லிகிதரை பார்த்து, "இந்த பழங்கள் எங்கிருந்து கிடைத்தது? ஏன் இதை சாப்பிட்டாய்?" என்று கேட்டார்.
सॊ ऽब्रवीद् भ्रातरं ज्येष्ठम् उपस्पृश्याभिवाद्य च |
इत एव गृहीतानि मयेति प्रहसन्न इव ||
- vyasa mahabharata
தனது சகோதரர் வந்ததை பார்த்த லிகிதர் அருகில் சென்று நமஸ்காரம் செய்தார். "அண்ணா! இங்கிருந்து தான் இந்த பழங்களை எடுத்துக்கொண்டேன்" என்று சகஜமாக சிரித்து கொண்டே சொன்னார்.
तम् अब्रवीत् तदा शङ्खः तीव्रकॊप समन्वितः |
स्तेयं त्वया कृतम् इदं फलान्य आददता स्वयम् |
गच्छ राजानम् आसाद्य स्वकर्म प्रथयस्व वै |
अदत्तादानम् एवेदं कृतं पार्थिव सत्तम |
स्तेनं मां त्वं विदित्वा च स्वधर्मम अनुपालय |
शीघ्रं धारय चौरस्य मम दण्डं नराधिप ||
- vyasa mahabharata
கடுமையான கோபத்துடன் சங்கர் "நீயாகவே பழங்களை எடுத்த காரணத்தால், இந்த காரியம் திருட்டாகும். ஆகையால் நீ அரசனிடம் சென்று 'அரசே! கொடுக்காத பழத்தை எடுத்ததால், நான் திருடனாகிறேன். என்னை திருடன் என்ற ரீதியில் பார்த்து, எனக்கு தகுந்த தண்டனையை வழங்கி, உன் தண்ட நீதியை காப்பாற்று' என்று தெரிவித்து கொள்" என்றார்.
इत्य उक्तस् तस्य वचनात् सुद्युम्नं वसुधाधिपम् |
अभ्यगच्छन् महाबाहॊ लिखितः संशितव्रतः ||
- vyasa mahabharata
வாழ்க்கையை நெறியோடு வாழ விரும்பும் லிகிதர், சகோதரர் சொன்னது தர்மமே என்று ஏற்று, அப்பொழுது தர்மப்படி அரசாட்சி செய்து கொண்டிருந்த ஸுத்யும்னரிடம் சென்றார்.
உடனே ஸுத்யும்னரை பார்த்து, "மகாராஜன்! சகோதரர் கொடுக்காத பழத்தை, நானே எடுத்து சாப்பிட்டு விட்டேன். அந்த குற்றத்துக்காக என்னை தாமதமின்றி தண்டிக்க வேண்டும்" என்றார்.
प्रमाणं चेन मतॊ राजा भवतॊ दण्डधारणे |
अनुज्ञायाम् अपि तथा हेतुः स्याद् ब्राह्मणर्षभ |
स भवान् अभ्यनुज्ञातः शुचि कर्मा महाव्रतः |
ब्रूहि कामान् अतॊ ऽन्यांस तवं करिष्यामि हि ते वचः ||
- vyasa mahabharata
இதை கேட்ட அரசர் ஸுத்யும்னர், "ப்ராம்மணர்களில் உத்தமரே! ஒருவனுக்கு 'தண்டனை விதிப்பது அரசன் கடமை' என்பது உண்மையே என்றாலும், 'அனுமதி கொடுப்பதும்' அரசனுக்கு உரியதே! ஆகையால், கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கும் நீங்கள் குற்றமற்றவர் என்று அனுமதி அளிக்கிறேன். ஆகையால், நீங்கள் வேண்டியதை கேளுங்கள். நான் உங்கள் இஷ்டம் போல செய்கிறேன்" என்றார்.
छन्द्यमानॊ ऽपि ब्रह्मर्षिः पार्थिवेन महात्मना |
नान्यं वै वरयाम् आस तस्माद् दण्डाद् ऋते वरम् |
ततः स पृथिवीपालॊ लिखितस्य महात्मनः |
करौ प्रच्छेदयाम् आस धृतदण्डॊ जगाम सः ||
- vyasa mahabharata
இப்படி மஹாத்மாவான அரசர் சொல்லியும், தனக்கு 'தண்டனையை தவிர வேறு ஏதும் வேண்டாம்' என்று சொல்லிவிட்டார் லிகிதர்.
இப்படி சொன்னதால், உலகில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய அரசனாக இருந்து, திருட்டுத்தனத்துக்கு உரிய தண்டனையாக லிகிதரின் இரு கையையும் வெட்டி தண்டனை கொடுத்து விட்டார்.
स गत्वा भ्रातरं शङ्खम् आर्तरूपॊ ऽब्रवीद् इदम् |
धृतदण्डस्य दुर्भुद्धे: भगवन् क्षन्तुम अर्हसि ||
- vyasa mahabharata
கை அறுபட்ட நிலையில், தன் சகோதரரான சங்கரை பார்க்க சென்றார். அவரிடம் 'எனது குற்றத்துக்காக தண்டனை பெற்றேன். என் புத்தி குறைவை நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.
न कुप्ये तव धर्मज्ञ न च दूषयसे मम |
धर्मॊ तु ते व्यतिक्रान्तः ततः ते निष्कृतिः कृता |
स गत्वा बाहुदां शीघ्रं तर्पयस्व यथाविधि |
देवान् पितॄन ऋषींश् चैव मा चाधर्मे मनॊ कृथाः ||
- vyasa mahabharata
சங்கர் "தர்மம் தெரிந்தவனே! உன்னிடத்தில் எனக்கு ஒரு கோபமும் இல்லை. நீ ஒரு குற்றமும் இப்பொழுது செய்யவில்லை. நீ தர்மத்தை மீறியதால், அந்த குற்றத்துக்கு ப்ராயச்சித்தம் தேவைப்பட்டது. நீ உடனேயே பாஹுதை என்ற நதிக்கரைக்கு சென்று, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்மப்படி தர்ப்பணம் செய். இனி அதர்மத்தில் மனதை செலுத்தாதே!" என்றார்.
तस्य तद् वचनं श्रुत्वा शङ्खस्य लिखितः तदा |
अवगाह्यापगां पुण्याम् उदकार्धं प्रचक्रमे |
प्रादुरास्तां ततः तस्य करौ जलज संनिभौ |
ततः स विस्मितॊ भ्रातुः दर्शयाम आस तौ करौ ||
- vyasa mahabharata
இவ்வாறு சங்கர் சொன்னதும், அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, லிகிதர் அந்த நதியில் சென்று நீராடி, தர்ப்பணம் செய்ய இறங்கினார்.
அப்பொழுது, தண்ணீரில் தாமரை மலர்வது போல, அவரின் இரு கைகளும் உண்டாகி விட்டன.
ततः तम् अब्रवीच छङ्खः तपसेदं कृतं मया |
मा च ते ऽत्र वि शङ्का भूद् दैवम् एव विधीयते ||
- vyasa mahabharata
உடனே சங்கர், "இது என் தபோ பலத்தால் செய்யப்பட்டது. உனக்கு சந்தேகம் வேண்டாம். அதிருஷ்டம் (விதி) இப்படியாக உள்ளது" என்றார்.
किं नु नाहं त्वया पूतः पूर्वम् एव महाद्युते |
यस्य ते तपसॊ वीर्यम् ईदृशं द्विजसत्तम ||
- vyasa mahabharata
உடனே லிகிதர், "மஹாதேஜஸ்வியே ! உமது தவத்துக்கு இப்படி ஒரு சக்தி இருக்குமானால், என்னை அப்பொழுதே பரிசுத்தமாக ஆக்கி இருக்கலாமே?" என்று கேட்டார்.
एवम् एतन् मया कार्यं नाहं दण्डधरस तव |
स च पूतॊ नरपतिः त्वं चापि पितृभिः सह ||
- vyasa mahabharata
சங்கர், "என்னால் உன்னை சுத்தனாக ஆக்கி இருக்கமுடியும் என்றாலும், தண்டனை தரும் அதிகாரம் எனக்கு இல்லையே. மக்களின் அரசனுக்கு தானே பாவத்திற்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தண்டனை கொடுத்ததால், அந்த அரசரும் தன்னுடைய தண்ட நீதியை காப்பாற்றினார். செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றதால், நீயும் பரிசுத்தமானாய்." என்று சொன்னார்.
स राजा पाण्डवश्रेष्ठ श्रेष्ठॊ वै तेन कर्मणा |
प्राप्तवान परमां सिद्धिं दक्षः प्राचेतसॊ यथा ||
- vyasa mahabharata
பாண்டவர்களில் உத்தமனே! அந்த உத்தம அரசரான ஸுத்யும்னர் தண்ட நீதியை பரிபாலனம் செய்ததால், ப்ராசேதஸ், தக்ஷனை போல உயர்வான ஸித்தி பெற்றார்.
एष धर्मः क्षत्रियाणां प्रजानां परिपालनम् |
उत्पथे ऽस्मिन् महाराज मा च शॊके मनॊ कृथाः ||
- vyasa mahabharata
"மக்கள் தீய வழியில் செல்லாமல் பாதுகாப்பது" அரசனின் பெரிய தர்மமாகும்.
மகாராஜன்! சோகத்தை மனதில் அனுமதிக்காதீர்.
भ्रातुः अस्य हितं वाक्यं शृणु धर्मज्ञ सत्तम |
दण्ड एव हि राजेन्द्र क्षत्रधर्मॊ न मुण्डन ||
- vyasa mahabharata
தர்மம் தெரிந்த உத்தமனே! உனது தம்பியான அர்ஜுனன் சொன்ன "தண்டநீதியை" கேள். தர்மத்தை காக்க அரசாட்சி செலுத்துவதே, க்ஷத்ரிய அரசனின் தர்மம் (கடமை). சந்யாசிகளுக்கு உரியது சந்நியாச தர்மம். சந்நியாச தர்மம் க்ஷத்ரியனான உனது தர்மம் அன்று" என்று கூறினார்.