Followers

Search Here...

Friday 30 July 2021

பகவான் எதை சாப்பிடுகிறார்? தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

 பகவான் எதை சாப்பிடுகிறார்? 

தெய்வ சாந்நித்யம் நிலைக்க, நாம் என்ன செய்ய வேண்டும்?

கோவிலிலோ, நம்முடைய வீட்டிலோ உள்ள தெய்வத்துக்கு, நாம் சமைத்த உணவை சமர்ப்பிக்கிறோம் (நெய்வேதயம் செய்கிறோம்)

சமர்ப்பித்த பிறகு? 

பகவான், நாம் சமர்பித்ததை பார்த்து அதில் உள்ள தோஷங்களை நீக்கி அனுக்கிரஹம் செய்கிறார்.

வெறும் சாதத்தை, தெய்வத்துக்கு காட்டிய பிறகு, பிரசாதமாக நமக்கே அது வந்து விடுகிறது.


ஒரு ஊதுபத்தி கொளுத்தினாலும், மனம் நமக்கு வந்து விடுகிறது..




பூ அபிஷேகம் செய்தாலும், அவர் திருமேனியில் பட்ட பூவை நாம் எடுத்து கொண்டு விடுகிறோம்.


இப்படி எது கொடுத்தாலும், அதை அனுக்கிரஹம் செய்து, பகவான் நமக்கே  திருப்பி கொடுத்து விடுகிறார்.


அவர் உண்மையில் திருப்பி கொடுக்காமல் சாப்பிட்டு விடுவது ஒன்றே ஒன்று தான்...

பகவானை நினைத்து கொண்டு "ரமா ரமண கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா..." என்று சொல்லிவிட்டால், அந்த நாமத்தை அப்படியே சாப்பிட்டு விடுகிறார் பகவான்.


நாமத்தை சொன்ன மாத்திரம்... அப்படியே மறைந்து விடுகிறது... பிரசாதம் போல திரும்ப வருவதே இல்லை...

நாம் செய்ய கூடிய இந்த மங்களாசாசனம் தான்... பகவானை கோவிலிலோ, நமது வீட்டிலோ சாந்நித்யத்துடன் நிற்க செய்கிறது.


எந்த கோவிலில்! எந்த வீட்டில்! பகவன் நாமத்தை சொல்வதில்லையோ, அந்த இடத்தில பகவத் சாந்நித்யம் இருக்கவே இருக்காது.


வேத மந்திரத்தை கொண்டு, பகவன் நாமத்தை மங்களாசாசனம் செய்கிறோம்.


அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் போன்றவற்றை கொண்டும், பகவன் நாமத்தை தான் மங்களாசாசனம் செய்கிறோம்.


"கோடி அர்ச்சனை செய்தால், பகவானுக்கு சாந்நித்யம் ஏற்படும்" என்று பல கோவில்களில் செய்வார்கள்.


"கோடி பூவை பகவானுக்கு அர்ச்சனை செய்தால், பகவான் அங்கு தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்" என்று நினைத்து விட கூடாது.




"அந்த கோடி அர்ச்சனையில் என்ன சொல்லி அரச்ச்னை செய்தோம்?" என்று பார்க்க வேண்டும்..


கோடி அர்ச்சனையில்... "விஸ்வஸ்மை நம: ! விஷ்ணவே நம: !..." என்று எவ்வளவு நாமத்தை நாம் சொல்கிறோம். 

நாமத்தை சொல்ல சொல்ல, பகவான் நாம் சொல்லுமிடத்தில் சாந்நித்யத்தை காட்டுகிறார்.





கோவிலில் அர்ச்சனை செய்கிறோம். கொடுக்கும் துளசி, பூ, தேங்காய் போன்றவற்றிலா தெய்வத்துக்கு சாந்நித்யம் ஏற்படுகிறது? இல்லை..

அந்த அர்ச்சனையில் நாம சங்கீர்த்தனம் உள்ளது. 

அந்த நாம சங்கீர்த்தனமே பகவானை அங்கு சாநித்யத்தோடு இருக்க செய்கிறது.


எத்தனைக்கு எத்தனை கோவிலில், நம் வீட்டில், நாமம் ஒலிக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை கோவிலில் தெய்வ சாந்நித்யம் அதிகரிக்கும்.


எததனைக்கு எத்தனை நாம் நமக்குளேயே "ராம... ராம... ராம..." என்று நாம ஜபம் செய்து கொண்டே இருக்கிறோமோ! அத்தனைக்கு அத்தனை நம் இதயத்துக்குளேயே தெய்வம் வந்து அமர்ந்து இருப்பதை அறிய முடியும்..

நாமசங்கீர்த்தனம் செய்து, ஹிந்துக்கள் தெய்வ சக்தியை எங்கும் நிலைபெற செய்ய வேண்டும். 

போலி பிரச்சாரங்கள் தானாக ஒழிந்து விடும்.

Thursday 29 July 2021

ஸ்ரீரங்கம் பெருமை... பாசுரம் (அர்த்தம்) - "பச்சை மா-மலை போல் மேனி". ஸ்ரீரங்கத்தில் (திருச்சி மாவட்டம்) வீற்று இருக்கும் ரங்கநாத பெருமாளை தொழும் பாசுரம். தொண்டரடிப்பொடியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

ஸ்ரீரங்கத்தின் பெருமை....

பச்சை மா-மலை போல் மேனி!
பவள-வாய் கமல-செங்கண்!
அச்சுதா!
அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே! என்னும்,
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம்  ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்!
அரங்க மாநகர் உளானே!

வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை  ஆண்டு,
பேதை பாலகன்  அதாகும்
பிணி! பசி! மூப்பு! துன்பம்!
ஆதலால், "பிறவி வேண்டேன்"
அரங்கமா நகர் உளானே !
- திருமாலை (தொண்டரடிப்பொடியாழ்வார்)

ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் ரங்கநாதரை பார்த்து 
"எனக்கு பரலோகமும் வேண்டாம், இக லோகமும் வேண்டாம்" என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

பெருமாளுக்கு இகலோகம், பரலோகம் - என்ற இரு சொத்துக்கள் தானே உள்ளது !!




நமக்கு இகலோகம் பிடிக்கவில்லை என்றால், "சரி.. பரலோகம் செல்" என்பார்.

பரலோகம் செல்ல நம்மில் பலருக்கு இன்னும் ஆசை வரவே இல்லை! 
ஆதலால், "சரி.. இகலோகத்திலேயே இரு" என்று நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க செய்கிறார்.

ஆழ்வாரோ, தனக்கு "அச்சுவை பெறினும் வேண்டேன்" என்று சொல்லி "பரலோகம் கூட வேண்டாம்' என்கிறார்.

"சரி... இகலோகம் தரட்டுமா?' என்றால்... 'அதுவும் வேண்டாம்' என்கிறார்.

'ஏன் இகலோகம் வேண்டாம்?' என்று பெருமாள் கேட்டால்,

ஆழ்வார் தன் மனசாட்சியையே கேட்டு பதில் சொல்கிறார்..
"உலகத்திற்கு எத்தனை ஆயுசு கொடுக்கப்பட்டு இருக்கிறது?
ஆகாசத்திற்கு எத்தனை ஆயுசு? ஆகாசம் எவ்வளவு காலம் இருக்கிறது? 
இந்த பூமி எவ்வளவு காலம் இருக்க போகிறது? 
கடல் எவ்வளவு காலம் இருக்கப்போகிறது? 
மலை எவ்வளவு காலம் இருக்கப்போகிறது?

இவைகளின் ஆயுசை பார்க்கும் போது, இவ்வளவு பெரிய உலகத்தில், இந்த மனிதனுக்கு எத்தனை சொற்ப காலம் ஆயுசு உள்ளது !!

ஆகாசம் அளவுக்கு ஆயுசு இல்லாவிட்டாலும், ஒரு ஆயிரம் வருடமாவது மனிதனுக்கு ஆயுசு இருந்தால் பரவாயில்லை.

நூறு வயது காலம் தான் "மனித ஆயுசு" என்று எல்லை வைக்கிறதே!! (வேதநூல் பிராயம் நூறு)

வேதம், 'மனிதனுக்கு 100 வயது' என்று சொன்னாலும், அந்த நூறு வயதை தொடுபவன் கூட கோடியில் ஒரு சிலர் தானே !




50 வயதிலோ, 25 வயதிலோ, குழந்தையாக இருக்கும் போதோ, 'பட்' என்று ஆயுசு முடிந்து விடுகிறது.

கல்யாணம் ஆன பிறகு சிலருக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது. கல்யாணம் ஆகாமலேயே மரணம் சிலருக்கு.

சொந்த வீட்டில் இறந்து போகிறான்.
வீடு இருந்தும் எங்கேயோ விபத்தில் இறந்து விடுகிறான். 

பந்துக்கள் சூழ்ந்து இருக்கும் போது இறந்து போகிறான். அனாதையாக இறந்து போகிறான்.

ஆஸ்பத்திரியில் இறந்து விடுகிறான். மாரடைப்பு ஏற்பட்டு மரணம். 
கொடுக்கப்பட்ட 100 வயதை கழிப்பதற்குள், வித விதமான வழிகளில் மனிதனுக்கு மரணம் ஏற்பட்டு விடுகிறது.

ஒன்று நிச்சயாமாகிறது.

'ஒரு நாள், இந்த உயிர், இந்த உடலை விட்டு கிளம்பி விடும்' என்று நிச்சயமாக தெரிகிறது.

சரி.. கிடைத்த ஆயுசை என்ன செய்கிறான் என்று பார்த்தால்!! பாதி நாள் தூக்கத்திலேயே கழிக்கிறான்.

வாழ்ந்த நாட்களில் "பகல் முழுக்க முழித்து கொண்டு இருந்தான்" என்பது தான் மனித பிறவியின் ப்ரயோஜனமா?

சரி..  முழித்து கொண்டு இருக்கும் வேளையில் நன்றாகவே இருக்கிறானா? அதுவும் இல்லை.. 

முதல் 15 வருடங்கள் பாலகனாக விளையாடி வீணடித்து விடுகிறான்.

பிறகு, மிச்ச ஆயுசை பிணியாலும், பசியாலும், மூப்பினாலும், பல வித விதமான துன்பங்களாலும் அனுபவித்து செலவு செய்கிறான்.

சீ ! இந்த உலக வாழ்க்கை வெறுக்கத்தக்கதாக இருக்கிறதே !

ஏதோ பூர்வ கர்மாவால், இந்த ஜென்மாவை எடுத்து விட்டேன். எனக்கு இக லோகமும் பிடிக்கவில்லை.

பரலோகமான இந்திர லோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன்!"
(ஆதலால், "பிறவி வேண்டேன்") என்று பிரார்த்திக்கிறார்.

இப்படி ஆழ்வார் "இகலோகமும் வேண்டாம், பரலோகமும் வேண்டாம்" என்று சொல்ல, 
ஸ்ரீரங்கநாதர், 'இகலோகம், பரலோகம் என்ற இரண்டு சொத்து தானே என்னிடம் இருக்கிறது. இரண்டுமே வேண்டாம் என்றால் எப்படி? இப்படி பிடிவாதம் செய்ய கூடாது.' என்றார்




தாய் தன் குழந்தையை மடியில் வைத்து கொண்டாள். "மடியில் இருக்க மாட்டேன்" என்று கத்தி பிடிவாதம் செய்தது.

"சரி..." என்று கீழே இறக்கிவிட்டாள். 
"கீழே இறக்கி விடாதே" என்று அழுதது.

'குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது?' என்று புரியாமல் தாய் தவிப்பது போல, 
'எனக்கு இகமும் வேண்டாம்.. பரமும் வேண்டாம்' என்று புலம்பி அழும் தொண்டரடிப்பொடியாழ்வாரை சமாதானம் செய்ய முடியாமல் பெருமாள் திகைக்க, ஆழ்வாரே தனக்கு வேண்டியதை ரகசியமாக கேட்கிறார்.

'அரங்க மாநகர் உளானே' என்று சொல்லும் போது... "எனக்கு இக லோகமும் வேண்டாம்.. பரலோகமும் வேண்டாம் .. ஆனால், யாருக்கும் தெரியப்படுத்தாமல், ரகசியமாக வைத்து இருக்கும் உங்கள் மூன்றாவது சொத்தான ஸ்ரீரங்கத்தில் நீங்கள் வாசம் செய்ய, உங்களுக்கு ஏதாவது சிறு கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீரங்க வாசம் செய்யும் பாக்கியத்தை தாருங்கள்" 
என்று கேட்காமல் கேட்கிறார்.

"ஸ்ரீரங்கம் இகலோகத்தில் தானே இருக்கிறது..  நீர் தான் இகலோகம் வேண்டாம் என்கிறீரே?" என்று பெருமாள் கேட்க...

"ஸ்ரீரங்கநாதருக்கு கைங்கர்யம் செய்பவருக்கு இக லோக துக்கமே தெரியவில்லையே!" என்கிறார்.

"சரி.. ஸ்ரீரங்கம் பரமபதத்தை காட்டிலும் உயர்ந்ததோ?" என்று கேட்க..

"பரமபதம் உயர்ந்தது தான் என்றாலும்..  அங்கு பரமபத நாதன் எப்பொழுதும் தரிசன ஆனந்தம் மட்டும் தானே தருகிறார். 
இங்கோ ! 
அதே பரமபத நாதன் 'ரங்கநாதனாக' இருந்து கொண்டு, தரிசன ஆனந்தம் கொடுத்து, பற்பல உற்சவங்கள் செய்து கொண்டு பஞ்ச இந்திரியங்களுக்கும் ஆனந்தம் கொடுக்கிறாரே! 
அவருக்கு விதவிதமான கைங்கர்யம் செய்வதால், கைங்கர்ய ஆனந்தமும் கிடைக்கிறதே!. பரமபதத்தை விட, எனக்கு ஸ்ரீரங்கம் பேரானந்தத்தை தருகிறதே!" என்கிறார்.

இப்படி. ஆச்சர்யமாக, ஆழ்வார், 'எனக்கு ஸ்ரீ ரங்கநாதரே போதும்.. ஸ்ரீரங்கமே போதும்... வேறு எதுவும் வேண்டாம்' 
என்று சொல்லி கதறி அழும் பாசுரம் இது.

'பக்தி என்றால் என்ன?
என்பதை ஆழ்வார் பாசுரங்களை படித்து அர்த்தம் தெரிந்து கொண்டாலே நாம் புரிந்து கொள்ள முடிகிறது..

தமிழனாய் பிறந்தவன் - வாழும் சில வருட வாழ்நாளில், ஒரு வருடமாவது 4000 தமிழ் பாசுரங்களை அர்த்தம் தெரிந்து படிக்க முயற்சிக்க வேண்டும்.

குருநாதர் துணை

Tuesday 27 July 2021

ராமபிரானுக்கு துணையாக எத்தனை கோடி வானர சேனை கலந்து கொண்டனர்? வால்மீகி ராமாயணம் .. தெரிந்து கொள்வோம்..

ராமபிரானுக்கு துணையாக எத்தனை கோடி வானர சேனை கலந்து கொண்டனர்? 

குறைந்த பட்சம் - 20 ஆயிரம் கோடி வானரர்கள், ராம சேவைக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டனர்.


வாலியின் மாமனார், தாரையின் தந்தை சுசேனா - 10,000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார். 

ततः कांचन शैल आभः ताराया वीर्यवान् पिता |

अनेकैः बहु साहस्रैः कोटिभिः प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


சுக்ரீவனின் மாமனார் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

तथा अपरेण कोटीनाम् साहस्रेण समन्वितः |

पिता रुमयाः संप्राप्तः सुग्रीव श्वशुरो विभुः ||

- वाल्मीकि रामायण





ஹனுமானின் தந்தை கேசரி - ஆயிரக்கணக்கான வானரர்களுடன் வந்திருந்தார்.

पद्म केसर संकाशः तरुण अर्क निभ आननः |

बुद्धिमान् वानर श्रेष्ठः सर्व वानर सत्तमः ||

अनीकैः बहु साहस्रैः वानराणाम् समन्वितः |

पिता हनुमतः श्रीमान् केसरी प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


கோலங்குளர்களின் அரசன் கவாக்ஷன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

गो लांगूल महाराजो गवाक्षो भीम विक्रमः |

वृतः कोटि सहस्रेण वानराणाम् अदृश्यत ||

- वाल्मीकि रामायण


தூம்ரா - 2000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ऋक्षाणाम् भीम वेगानाम् धूम्रः शत्रु निबर्हणः |

वृतः कोटि सहस्राभ्याम् द्वाभ्याम् समभिवर्तत || 

- वाल्मीकि रामायण


பனசன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

महा अचल निभैः घोरैः पनसो नाम यूथपः |

आजगाम महावीर्यः तिसृभिः कोटिभिः वृतः |

- वाल्मीकि रामायण


நீலன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

नील अंजन चय आकारो नीलो नाम अथ यूथपः |

अदृश्यत महावीर्य: तिसृभि: कोटिभिः वृतः ||

- वाल्मीकि रामायण


கவயன் - 5 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः कांचन आभो गवयो नाम यूथपः |

आजगाम महावीर्यः कोटिभिः पंचभिः वृतः ||

- वाल्मीकि रामायण


தரீமுகன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

दरीमुखः च बलवान् यूथपो अभ्याययौ तदा |

वृतः कोटि सहस्रेण सुग्रीवम् समुपस्थितः ||

- वाल्मीकि रामायण


மைந்தனும், த்விவிதனும் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

मैन्दः च द्विविदः च उभौ अश्वि पुत्रौ महाबलौ |

कोटि कोटि सहस्रेण वानराणाम् अदृश्यताम् ||

- वाल्मीकि रामायण


கஜன் - 3 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

गजः च बलवान् वीरः त्रिसृभिः कोटिभिः वृतः |

आजगाम महातेजाः सुग्रीवस्य समीपतः ||

- वाल्मीकि रामायण


ஜாம்பவான் - 10 கோடி கரடி படையுடன் வந்திருந்தார்.

ऋक्ष राजो महातेजा जांबवान् नाम नामतः |

कोटिभिः दशभिः व्याप्तः सुग्रीवस्य वशे स्थितः |

- वाल्मीकि रामायण


ருமணன் - 100 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

रुमणो नाम तेजस्वी विक्रान्तैः वानरैः वृतः |

आगतो बलवान् तूर्णम् कोटि शत समावृतः ||

- वाल्मीकि रामायण


கந்தமாதன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः कोटि सहस्राणाम् सहस्रेण शतेन च |

पृष्ठतो अनुगतः प्राप्तो हरिभिः गंधमादनः ||

- वाल्मीकि रामायण


வாலியின் பிள்ளை அங்கதன் - ஆயிரக்கணக்கான பத்மங்களுடன், நூற்றுக்கணக்கான சங்கங்களுடன் வந்திருந்தார்.

ततः पद्म सहस्रेण वृतः शन्कु शतेन च |

युव राजो अंगदः प्राप्तः पितृ तुल्य पराक्रमः ||

- वाल्मीकि रामायण





தாரா - 5 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततः तारा द्युतिः तारो हरिः भीम पराक्रमः |

पंचभिः हरि कोटीभिः दूरतः प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


இந்த்ரஜானு - 11 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

इन्द्रजानुः कपिः वीरो यूथपः प्रत्यदृश्यत |

एकादशानाम् कोटीनाम् ईश्वरः तैः च सम्वृतः || 

- वाल्मीकि रामायण


ரம்பன் - 1100 ஆயுத வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो रंभः तु अनुप्राप्तः तरुण आदित्य संनिभः |

आयुतेन वृतः चैव सहस्रेण शतेन च ||

- वाल्मीकि रामायण


துர்முகா - 2  கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो यूथ पतिः वीरो दुर्मुखो नाम वानरः |

प्रत्यदृश्यत कोटिभ्याम् द्वाभ्याम् परिवृतो बली ||

- वाल्मीकि रामायण


ஹனுமான் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

कैलास शिखर आकारैः वानरैः भीम विक्रमैः |

वृतः कोटि सहस्रेण हनुमान् प्रत्यदृश्यत ||

- वाल्मीकि रामायण


நலன் - 1000 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

नलः च अपि महावीर्यः संवृतो द्रुम वासिभिः |

कोटी शतेन संप्राप्तः सहस्रेण शतेन च ||

- वाल्मीकि रामायण


சுக்ரீவனுக்கு பிடித்தமான ததிமுகன் - 10 கோடி வானரர்களுடன் வந்திருந்தார்.

ततो दधिमुखः श्रीमान् कोटिभिः दशभिः वृतः |

संप्राप्तो अभिनदन् तस्य सुग्रीवस्य महात्मनः || 

- वाल्मीकि रामायण


சரபன், குமுதன், வன்ஹி மேலும் பல வானரர்கள் இப்படி நிற்க,  மலைகள், மரங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியாதபடி, எண்ண முடியாத அளவுக்கு வானர சேனை நின்று கொண்டிருந்து.

शरभः कुमुदो वह्निः वानरो रंहः एव च |

एते च अन्ये च बहवो वानराः काम रूपिणः ||

आवृत्य पृथिवीम् सर्वाम् पर्वतान् च वनानि च |

यूथपाः समनुप्राप्ता एषाम् संख्या न विद्यते ||

- वाल्मीकि रामायण


Friday 9 July 2021

உலக படைப்பு - வரிசையை தெரிந்து கொள்வோம்...

உலக படைப்பு - வரிசையை தெரிந்து கொள்வோம்...

"உலகம் தட்டை" என்று உருட்டி கலிலியோ போன்றவர்களை கொன்ற மதங்கள் ஒரு புறம் இருக்க,

ஹிந்துக்களின் சொத்தான வேதம், உலக படைப்பின் வரிசையை பற்றி சொல்கிறது...  

தெரிந்து கொள்வோம்...

* ஆகாயத்தில் இருந்து 'காற்று'.

* காற்றிலிருந்து 'அக்னி'.

* அக்னியில் இருந்து 'நீர்'.

* நீரில் இருந்து 'நிலம்'.

* நிலத்தில் இருந்து 'மனித உடல்கள், மிருக, தாவர உடல்கள்'


நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, இன்று நீருக்கு ஆதாரமாக உள்ள அக்னியிலிருந்தும், காற்றிலிருந்தும் எடுக்க அறிவியல் முயற்சி நடக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.





உலக படைப்பின் வளர்ச்சி :

1. ஒரு குணம்: (ஆகாயம்)

* ஆகாயம் ஒலியால் நிரம்பி உள்ளது. 

ஆகார நியமம் மேலும் கடுமையான தியானத்தால், ரிஷிகள் ஆகாயத்தில் இருக்கும் ஒலிகளை கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர். 

அதுவே 'வேதம்' என்றும் 'சப்த பிரம்மம்' என்று சொல்கிறோம்.

வேதங்கள் அனைத்தும் இந்த ஆகாயத்தில் இருக்கும் ஒலி அலைகளே !

இருக்கும் வித விதமான அனைத்து வேத ஒலிகளும் "ஓம்" என்ற பிரணவ ஒலியில் இருந்து வெளிப்பட்டவை என்று ரிஷிகள் கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர்.

(ரிஷிகளை 'விஞ்ஞானிகள்' என்று பொருள் கொள்ளலாம்) 


2. இரண்டு குணம்: (காற்று)

ஆகாயத்திலிருந்து உண்டான காற்றுக்கு 2 குணங்கள் உண்டு. 

* காற்றில் ஒலி உண்டு.

மேலும்,

* காற்று, நம் தோலில் படும் போது, அதை உணர முடிகிறது.


3. மூன்று குணம்: (அக்னி)

காற்றிலிருந்து உருவான அக்னிக்கு 3 குணங்கள் உண்டு.

* அக்னிக்கும் ஒலி உண்டு. 

* அக்னி நம் மீது படும் போது, உணரவும் முடிகிறது.. 

மேலும்,

* அக்னியை கண்ணால் பார்க்கவும் முடிகிறது. அக்னிக்கு ஒளி உண்டு.


4. நான்கு குணம்: (நீர்)

அக்னியிலிருந்து உருவான நீர் என்ற ரசத்துக்கு 4 குணங்கள் உண்டு.

* நீருக்கும் ஒலி உண்டு.

* நீர் நம் மீது படும் போது உணர முடிகிறது..

* நீரை பார்க்கவும் முடிகிறது..

மேலும்

* நீரை நாக்கால் சுவைக்கவும் முடிகிறது.


'ரசம்' என்ற சொல் நீருக்கு பயன்படுத்தப்படுகிறது.  

நாம் சாப்பிடும் எந்த பொருளாக இருந்தாலும், அதில் சுவை (ரசம்) இருப்பதற்கு காரணம் அதில் இருக்கும் நீரே என்று அறிந்து கொள்ளலாம்.


5. ஐந்து குணம்: (நிலம்)

நீரிலிருந்து உருவான நிலத்துக்கு 5 குணங்கள் உண்டு.

* நிலத்தில் ஒலி உண்டு.

* நிலத்தில் நம் உடல் படும் போது உணர முடிகிறது..

* நிலத்தை பார்க்கவும் முடிகிறது..

மேலும்

* நிலத்தை நாக்கால் சுவைக்கவும் முடிகிறது.

மேலும்

* நிலத்திற்கு வாசனை உண்டு.


நிலத்தில் உருவான மனித உடல்களுக்கு இந்த 5 குணங்களை உணர 5 கருவிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


1. ஒலி இருப்பதை கேட்க காதும்,

2. தொடுவதை உணர தோலும்,

3. பார்ப்பதற்கு கண்ணும்,

4. சுவைப்பதற்கு நாக்கும்,

5. முகர்வதற்கு மூக்கும் உள்ளது.


உயிர் இல்லாத, இறந்து போன மனித உடலில் இந்த 5 கருவியும் இருந்தாலும், பயனில்லை...


இந்த மனித உடலில் உள்ள கருவியை பயன்படுத்தி, வெளியில் காணப்படும் பஞ்ச பூதங்களை அனுபவித்து வந்தவனுக்கு "ஜீவன்" என்று பெயர் என்று வேதம் சொல்கிறது.


இந்த ஜீவன் 

"ஆகாயத்திலிருந்தோ! 

காற்றிலிருந்தோ! 

அக்னியிலிருந்தோ! 

நீரிலிருந்தோ! 

நிலத்திலிருந்தோ! 

வந்தவன் இல்லை.." 

என்று சொல்கிறது வேதம்...


இந்த ஜீவனும் (living), ஆகாயமும் (nature) பரமாத்மாவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்கிறது வேதம்.

எப்படி கடல், பல அலைகளை உருவாக்குமோ! அது போல, பரமாத்மா என்ற பரமபுருஷன், தன் அம்சமாக கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை வெளிப்படுத்தினார்.

அதில் முதலாவதாக படைக்கப்பட்டவர் ப்ரம்ம தேவன் என்று வேதம் ஆரம்பிக்கிறது.

ஜீவாத்மாக்களை படைத்த பரமாத்மா, வாழ்வதற்கு ஏற்ற பஞ்ச பூதங்களையும் படைத்தார்..





பரமாத்மா 'அவ்யக்தத்தில் இருந்து 'ஓம்' என்ற ஒலி ரூபமான ஆகாயத்தை' படைத்தார். 

ஓம் என்ற பிரணவ ஒலியிலிருந்து, வேத ஒலிகள் வெளிப்பட்டன..

வேத ஒலிகள் மூலம், காற்று, அக்னி, நீர், நிலங்களை படைத்தார்.  

வேதம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதால், வேத சப்தத்தை மனனம் செய்து வந்த ப்ராம்மணர்களை அரசர்கள் மதித்தனர்.

காற்று, அக்னி, நீர், நிலங்களில் ஏற்படும் கோளாறுகளைநோய்களை வேத ஓத ஒலிகளை மாத்திரை பிசகாமல் ஓதி சமன் செய்தனர்.

மேலும், 

ப்ரம்ம தேவனிடம் இந்த வேதத்தை கொடுத்து, படைக்கப்பட்ட பல லோகங்களில் தேவர்கள், ரிஷிகள், மேலும் பூலோக நிலங்களில் மனித, மிருக, தாவர உடல்களை படைத்தார்.

பரமாத்மா அழிக்கும் அம்சத்துடன், தானே ருத்ரனாக ப்ரம்ம தேவன் நெற்றியில் இருந்து வெளிப்பட்டார்.

பரமாத்மா படைக்கும் அம்சத்துடன், தானே விஷ்ணுவாக ஸ்வயமாக அவதரித்தார். 

பரமாத்மாவால் படைக்கப்பட்ட கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இந்த உடல்களில் புகுந்து கொண்டு, பஞ்ச பூதங்களான தன் உடல்களை கொண்டு, பஞ்ச பூதங்களால் ஆன உலகை அனுபவிக்கின்றன.


"எந்த ஜீவாத்மாக்கள் இந்த பஞ்ச பூதங்களால் கிடைக்கும் அனுபவங்கள் போதும், தனக்கு பரமாத்மாவே போதும்" என்று நினைக்கிறதோ! அந்த ஜீவாத்மாவுக்கு விடுதலை கொடுத்து, தன்னுடன் சேர்த்து கொண்டு விடுகிறார்..

இதுவே மோக்ஷம்.

ப்ரம்ம தேவனை படைத்த, நம்மையும் படைத்த, பஞ்ச பூதங்களுக்கு காரணமான அந்த பரமாத்மா "நாராயணன்" என்று அறிவோம்.

நாராயணன் என்ற சொல்லுக்கு "நரர்கள் யாவருக்கும் அடைக்கலம் தருபவர்" என்று பொருள்.

'அந்த பரமபுருஷனை, மஹாலக்ஷ்மி மணந்தாள்' என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லி அடையாளமும் காட்டுகிறது.


வாழ்க ஹிந்துக்கள்..

Sunday 27 June 2021

சீதையின் பெருமை.. கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்

"14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.


அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். 

ராமபிரானை தரிசித்த பிறகு,  சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.


சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியை பார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர். 





स: अयं ब्राह्मण भूयिष्ठो 

वानप्रस्थ गणो महान् |

त्वन्नाथ: अनाथवद् राम 

राक्षसै: वध्यते भृशम् ||

- वाल्मीकि रामायण

ஸ: அயம் ப்ராஹ்மண பூயிஷ்டோ

வான ப்ரஸ்த கணோ மஹான் |

த்வன்நாத: அனாதவத் ராம

ராக்ஷஸை: வத்யதே ப்ருஸம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! We are a group of great sages, mostly brahmins, leading a vanaprastha life. Yet with a protector like you, we are slaughtered in large numbers like orphans by rakshasas.

ராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.


एहि पश्य शरीराणि 

मुनीनां भावित आत्मनाम् |

हतानां राक्षसै र्घोरै: 

बहूनां बहुधा वने ||

- वाल्मीकि रामायण

யேஹி பஸ்ய சரீராணி

முனீனாம் பாவித ஆத்மநாம் |

ஹதானாம் ராக்ஷஸை கோரை: 

பஹுனாம் பஹுதா வனே ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! Come and see the huge number of dead bodies, who had perceived the Supreme Spirit, killed in large numbers in the forest by the fierce rakshasa.This is a veritable Holocaust.

ராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. 


पम्पा नदी निवासानाम् 

अनु-मन्दाकिनीम् अपि |

चित्रकूट आलयानां च 

क्रियते कदनं महत् ||

- वाल्मीकि रामायण

பம்பா நதீ நிவாஸானாம்

அனு-மந்தாகினீம் அபி |

சித்ரகூட ஆலயானாம் ச

க்ரியதே கதனம் மஹத் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama ! A great slaughter is taking place amongst those residing on the bank of the Pampa lake, near the river Mandakini, and on mount Chitrakuta.

ராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.


एवं वयं न मृष्यामो 

विप्रकारं तपस्विनाम् |

क्रियमाणं वने घोरं 

रक्षोभि: भीम कर्मभिः ||

- वाल्मीकि रामायण

ஏவம் வயம் ந ம்ருஷ்யாமோ

விப்ரகாரம் தபஸ்வினாம் |

க்ரியமானம் வனே கோரம்

ரக்ஷோபி: பீம கர்மபி: ||

- வால்மீகி ராமாயணம்

We are not able to tolerate the fearful deeds perpetrated by the dreadful rakshasas in the forest.

ராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 





तत: त्वां शरणार्थं च 

शरण्यं सम उपस्थिताः |

परिपालय नो राम 

वध्यमानान् निशाचरैः ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் சரணார்தம் ச

சரண்யம் ஸம உபஸ்திதா: |

பரிபாலய நோ ராம

வத்யமானான் நிஸாசரை: ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! you are worthy of refuge. Hence we have come to you seeking your protection. We are being killed by the night stalkers. Save us.

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.


परा त्वत्तो गतिर्वीर 

पृथिव्यां न: उपपद्यते |

परिपालय न सर्वान् 

राक्षसेभ्यो नृप आत्मज ||

- वाल्मीकि रामायण

பரா த்வத்தோ கதி வீர

ப்ருதிவ்யாம் ந: உபபத்யதே |

பரிபாலய ந சர்வான்

ராக்ஷஸேப்யோ ந்ருப ஆத்மஜ ||

- வால்மீகி ராமாயணம்

O great warrior ! Here on this earth, there is no protector as mighty as you. So, O prince ! Save us all from these demons raakshas.

பராக்ரமசாலியே ! ராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். 


एतत् श्रुत्वातु काकुत्स्थ: 

तापसानां तपस्विनाम् |

इदं प्रोवाच धर्मात्मा 

सर्वान् एव तपस्विनः ||

- वाल्मीकि रामायण

ஏதத் ஸ்ருத்வாது காகுத்ஸ்த:

தாபஸானாம் தபஸ்வினாம் |

இதம் ப்ரோவாச தர்மாத்மா

சர்வான் ஏவ தபஸ்வின: ||

- வால்மீகி ராமாயணம்

Having heard this, righteous Rama of the Kakutstha dynasty said to all the ascetics engaged in penance.

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ராமபிரான் கம்பீரமாக பேசலானார்.. 


नैवम् अर्हथ मां वक्तुम् 

आज्ञाप्य अहं तपस्विनाम् |

केवलेन् आत्म कार्येण 

प्रवेष्टव्यं मया वनं ||

- वाल्मीकि रामायण

நைவம் அர்ஹத மாம் வக்தும்

ஆஞாப்ய அஹம் தபஸ்வினாம் |

கேவலேன ஆத்ம கார்யேன

ப்ரவேஷ்டவ்யம் மயா வனம் ||

- வால்மீகி ராமாயணம்

You should not speak to me this way. I deserve to be commanded to do this task. I am at your service. I came to the forest only for my work.

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.


विप्रकारम् अपाक्रष्टुं 

राक्षसै:  भवताम् इमम् |

पितु: तु निर्देश-करः 

प्रविष्ट: अहमिदं वनम् ||

- वाल्मीकि रामायण

விப்ரகாரம் அபாக்ரஷ்டும்

ராக்ஷஸை: பவதாம் இமம் |

பிது: து நிர்தேச கர:

ப்ரவிஷ்ட: அஹம் இதம் வனம் ||

- வால்மீகி ராமாயணம்

I came into this forest in obedience to my father's orders to repel the aggression of demons against you.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.


भवताम् अर्थ सिद्ध्यर्थम् 

आगत: अहं यदृच्छया |

तस्य मे अयं वने 

वासो भविष्यति महाफलः ||

- वाल्मीकि रामायण

பவதாம் அர்த சித்தார்தம்

ஆகத: அஹம் யத்ருச்சயா |

தஸ்ய மே அயம் வனே

வாஸோ பவிஷ்யதி மஹாபல: ||

- வால்மீகி ராமாயணம்

But by good fortune, I have got a chance to accomplish your mission. Therefore, My forest life shall become greatly fruitful by this.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.




तपस्विनां रणे शत्रून् 

हन्तुम् इच्छामि राक्षसान् |

पश्यन्तु वीर्यम् ऋषय: 

सभ्रातु: मे तपोधनाः ||

- वाल्मीकि रामायण

தபஸ்வினாம் ரணே சத்ரூன்

ஹந்தும் இச்சாமி ராக்ஷஸான் |

பஸ்யந்து வீர்யம் ருஷய:

ஸ-ப்ராது: மே தபோதன: ||

- வால்மீகி ராமாயணம்

I wish to kill those raakshasas who are your enemies. O great rishis !, you may witness my valor supported by my brother.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.


दत्त्वा अभयं च अपि तपोधनानां 

धर्मे धृतात्मा सह लक्ष्मणेन।

तपोधनै: च अपि सभाज्यवृत्तः 

सुतीक्ष्णमेव अभिजगाम वीरः ||

- वाल्मीकि रामायण

தத்வா அபயம் ச அபி தபோதனானாம்

தர்மே த்ருதாத்மா சஹ லக்ஷ்மணேன |

தபோதனை: ச அபி ஸபாஜ்ய வ்ருத்த:

சுதீக்ஷ்ண மேவ அபி-ஜகாம வீர: ||

- வால்மீகி ராமாயணம்

Brave Rama who is Steadfast in righteousness, worthy of honour, gave assurance to protect the rishis endowed with the wealth of penance, and proceeded towards sage Suteekshna.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.


சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...


त्रीण्येव व्यसनानि 

अत्र कामजानि भवन्ति उत |

मिथ्या वाक्यं परमकं 

तस्माद् गुरुतरौ उभौ ||

परदार अभिगमनं 

विना वैरं च रौद्रता ||

- वाल्मीकि रामायण

த்ரீன் ஏவ வ்யஸனானி

அத்ர காமஜானி பவந்தி உத |

மித்யா வாக்யம் பரமகம்

தஸ்மாத் குருதரௌ உபௌ ||

பரதார அபிகமனம் 

வினா வைரம் ச ரௌத்ரதா ||

- வால்மீகி ராமாயணம்

O Man of Truth! Three things born out of lust. 

speaking untruth, 

having sexual relation with others' wives and

resorting to violence with no enmity. 

The later two are worst than the 1st.

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. 

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான். 

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். 

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.

मिथ्यावाक्यं न ते भूतं 

न भविष्यति राघव |

कुत: अभिलाषणं स्त्रीणां 

परेषां धर्म नाशनम् ||

- वाल्मीकि रामायण

மித்யா வாக்யம் ந தே பூதம்

ந பவிஷ்யதி ராகவ |

குத: அபிலாஷனம் ஸ்த்ரீணாம்

பரேஷாம் தர்ம நாஸனம் ||

- வால்மீகி ராமாயணம்

O Raghava! you never spoke untruth in the past nor you will speak in future. 

Also, you will never desire other man's wife both in past and future.

ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது. 

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.


तव नास्ति मनुष्येन्द्र 

न च अभूत् ते कदाचन |

मनस्यपि तथा राम 

न च एतद् विद्यते क्वचित् ||

- वाल्मीकि रामायण

தவ நாஸ்தி மனுஷ்யேந்த்ர

ந ச அபூத் தே கதாசன |

மனஸ்யபி ததா ராம

ந ச ஏதத் வித்யதே க்வசித் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You hadn't desire for other women in the past. You havn't it now. Never does it exist even in your mind

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை.  இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.


स्वदार-निरत: त्वं 

च नित्यमेव नृपात्मज |

धर्मिष्ठ: सत्य-सन्धश्च 

पितु र्निर्देश कारकः ||

- वाल्मीकि रामायण

ஸ்வதார நிரத: த்வம்

ச நித்யம் ஏவ ந்ருப ஆத்மஜ |

தர்மிஷ்ட: சத்ய சந்த: ச

பிது நிர்தேஸ காரக: ||

- வால்மீகி ராமாயணம்

O prince! you are always faithful to your wife. You are righteous, truthful and obedient to your father's orders.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.


सत्यसन्ध महाभाग 

श्रीमन् लक्ष्मण पूर्वज |

त्वयि धर्मश्च सत्यं च 

त्वयि सर्वं प्रतिष्ठितम् ||

- वाल्मीकि रामायण

சத்யசந்த மஹாபாக

ஸ்ரீமந் லக்ஷ்மண பூர்வஜ |

த்வயீ தர்ம: ச சத்யம் ச

த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Rama! O Man of truth! O auspicious one! O brother of lakshmana! In you,  truth and righteousness are ever present.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.


तत् च सर्वं महाबाहो 

शक्यं धर्तुं जितेन्द्रियैः |

तव वश्येन्द्रिय त्वं 

च जानामि शुभ-दर्शन ||

- वाल्मीकि रामायण

தத் ச ஸர்வம் மஹாபாஹோ

சக்யம் தர்த்தும் ஜிதேந்த்ரியை: |

தவ வஸ்யேந்த்ரிய த்வம்

ச ஜானாமி சுப தர்சன ||

- வால்மீகி ராமாயணம்

Only those who restrain their senses can hold all these features. I know that you have control over your senses.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.





तृतीयं यदिदं रौद्रं 

पर-प्राणाभि हिंसनम् |

निर्वैरं क्रियते मोहात् 

तत् च ते समुपस्थितम् ||

- वाल्मीकि रामायण

த்ருதீயம் யதீதம் ரௌத்ரம்

பர- ப்ரானாபி ஹிம்ஸனம் |

நிர்வைரம் க்ரியதே மோஹாத் 

தத் ச தே சமுபஸ்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

But i find the 3rd blemish of harming others without any direct enmity in you.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!! 


प्रतिज्ञात: त्वया वीर 

दण्डकारण्य वासिनाम् |

ऋषीणां रक्षणार्थाय 

वध: संयति रक्षसाम् ||

- वाल्मीकि रामायण

ப்ரதிஞாத: த்வயா வீர

தண்டக ஆரண்ய வாஸினாம் |

ருஷீணாம் ரக்ஷண அர்தாய

வத: ஸம்யதி ரக்ஷஸாம் ||

- வால்மீகி ராமாயணம்

O Rama! You have promised the forest dwellers that you will kill the rakshasas in the battle, in order to protect the rishis, residing in the Dandaka forest.

ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!


एत: निमित्तं च वनं 

दण्डका इति विश्रुतम् |

प्रस्थित: त्वं सह भ्रात्रा 

धृत बाण शरासनः ||

- वाल्मीकि रामायण

ஏத: நிமித்தம் ச வனம்

தண்டகா இதி விஸ்ருதம் |

ப்ரஸ்தித: த்வம் சஹ ப்ராத்ரா

த்ருத பாண சராஸந: ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! It is very evident to see that you want to kill the rakshasas in dandaka forest and hence you have started entering dandaka forest with bow and arrows along with your brother.

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.


ततस्त्वां प्रस्थितं दृष्ट्वा 

मम चिन्ताकुलं मनः |

त्वद् वृत्तं चिन्तयन्त्या वै 

भवेन् निश्श्रेयसं हितम् ||

- वाल्मीकि रामायण

தத: த்வாம் ப்ரஸ்திதம் த்ருஷ்டவா

மம சிந்தாகுலம் மன: |

த்வத் வ்ருத்தம் சிந்தயந்த்யா வை

பவேந் நிஸ் ஸ்ரேயஸம் ஹிதம் ||

- வால்மீகி ராமாயணம்

Raghava ! I am worried that this will bring you no good.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன். 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன்,  என்றாள் சீதாதேவி.


பரமாத்மா தர்மத்தை காப்பவர்.

தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.


தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.


ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே!' என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.

சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.


தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது. 

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.

'இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே!' என்று கோபப்படுவார்.


தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.


மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.


'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை. 

ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன். 

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன். 

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.


"கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.


நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன?' என்று கவனித்து விடுவார்.

நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே! 

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே, 

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுகிரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது... 

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை. 

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'.