Followers

Search Here...

Showing posts with label அக்னி. Show all posts
Showing posts with label அக்னி. Show all posts

Saturday 25 March 2023

அர்ஜுனன் காண்டீபத்தை எப்போது பெற்றான்? அறிவோம் மஹாபாரதம்..

அர்ஜுனன் காண்டீபத்தை எப்போது பெற்றான்? அறிவோம் மஹாபாரதம்.. 

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை முடித்து சுபத்ரையை மணம் செய்து கொண்ட பிறகு, ஶ்ரீ கிருஷ்ணரின் உதவியுடன், காண்டவ வனத்தை அழித்து அக்னிக்கு ஹோமம் செய்தான். 


இதனால் சந்தோஷமடைந்த அக்னி பகவான் நேரில் பிரத்யக்ஷமாகி, அர்ஜுனனுக்கு, 

  1. காண்டீபம் என்ற திவ்யமான வில்லையும், 
  2. பாணங்கள் குறையாத 2 அம்புரா துணியையும்
  3. ஹனுமன் கொடி பறக்கும் திவ்யமான தேரையும் கொடுத்தார்.

व्यवसाय सहायस्य विष्णोः शत्रु वधेषि इव।

पार्थाय अग्निः ददौ च अपि गाण्डीवं धनुः उत्तमम्।।

इषुधी च अक्षयैः बाणै रथं च कपिलक्षणम्।

मोक्षयामास बीभत्सुर्मयं यत्र महासुरम्।।

Adi Parva 61 - vyasa mahabharata

Sunday 14 August 2022

அக்னி ஸ்துதி (ஸ்தோத்திரம்) - பாபங்கள் பொசுங்க - சஹாதேவன் செய்த அக்னி ஸ்துதி - வியாசர் மஹாபாரதம்

ராஜசூய யாகம் செய்ய சங்கல்பித்த யுதிஷ்டிரர், சஹாதேவனை தென் தேசம் நோக்கி திக்விஜயம் செய்ய அனுப்பினார். 

திக்விஜயம் செய்து பல வெற்றிகளோடு தென்திசை நோக்கி சென்று கொண்டிருந்த சஹாதேவன் 'மாஹிஷ்மதி' தேசத்தை நெருங்கினார்

அந்த தேசத்தையும், அரசனையும் அக்னி பகவானே காப்பதையும், திக்விஜயம் தடைபட்டு தன் சேனைகள் கொளுத்தப்படுவதையும் கண்ட சஹாதேவன், அக்னி தேவனை தியானித்து ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பிக்கிறார்.

सहदेव उवाच(சஹதேவ உவாச)

त्वद् अर्थ: अयं समारम्भः कृष्णवर्त्मन् नमोस्तु ते।

मुखं त्वम् असि देवानां यज्ञ: त्वम् असि पावक।।

த்வத் அர்த: அயம் சம ஆரம்ப: 

க்ருஷ்ணவர்த்மன் நமோஸ்து தே |

முகம் த்வம் அஸி தேவானாம்

யஞ: த்வம் அஸி பாவக ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அக்னி பகவானே! என்னுடைய இந்த முயற்சியே (திக் விஜயமே) உங்களுக்காக தானே! பவித்ரமானவரே! நீங்கள் தேவர்களுக்கு முகமாக இருக்கிறீர்கள். நீங்களே யஞ புருஷனாக இருக்கிறீர்கள்.

पावनात् पावक: च असि वहनाद् हव्यवाहनः।

वेदा:  त्वद् अर्थं जाता वै जातवेदा: ततो हि असि।।

பாவநாத் பாவக: ச அஸி

வஹநாத் ஹவ்ய-வாஹன: |

வேதா: த்வத் அர்தம் ஜாதா வை

ஜாதவேதா: ததோ ஹி அஸி ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அனைத்தையும் பரிசுத்தம் செய்பவராக இருக்கும் நீங்களே, ஹவ்ய வாஹனனாக இருந்து கொண்டு, ஹோமத்தில் கொடுக்கப்பட்டதை அந்தந்த தேவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறீர்கள். உங்களுக்காகவே வேதங்கள் உண்டானதால், நீங்கள் ஜாதவேதனாக இருக்கிறீர்கள்.

चित्रभानुः सुरेश: च अनल: त्वं विभावसो।

स्वर्गद्वार स्पृश: च असि हुताशो ज्वलनः शिखी।।

சித்ரபானு: சுரேஸ: ச

அனல: த்வம் விபாவசோ |

சுவர்க-த்வார ஸ்ப்ருஷ: ச

அஸி ஹுதாஸ: ஜ்வலன: சிகீ ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

நீரே சித்ரபானு என்று அறியப்படுகிறீர்கள். நீரே தேவர்களில் சிறந்தவர். நீரே அனலன் என்று அறியப்படுகிறீர்கள். சொர்க்க வாசலை திறப்பவர் தாங்களே! ஹோமங்களை புஜிப்பது தாங்களே! ஜ்வலிப்பவர் தாங்களே! நீரே சிகீ என்றும் அறியப்படுகிறீர்கள்.

वैश्वानर: त्वं पिङ्गेशः प्लवङ्गो भूरि-तेजसः।

कुमारसू: त्वं भगवान् ऋद्र-गर्भो हिरण्य-कृत्।।

வைஸ்வானர: த்வம் பிங்கேஸ:

ப்லவங்கோ பூரி-தேஜஸ: ||

குமாரஸூ: த்வம் பகவான்

ருத்ர-கர்போ ஹிரண்ய-க்ருத் ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

நீரே வைஸ்வான அக்னியாகவும் இருக்கிறீர்கள். நீரே பிங்கேசன் என்று அறியப்படுகிறீர்கள். நீரே ப்லவங்கன் என்று அறியப்படுகிறீர்கள். மஹா பொலிவோடு இருக்கும் நீரே பூரிதேஜன் என்று அறியப்படுகிறீர்கள். நீரே முருகப்பெருமானாக அறியப்படுகிறீர்கள். நீரே மகிமையுடையவராக இருக்கிறீர்கள். நீரே ருத்ர-கர்பன் என்று அறியப்படுகிறீர்கள். நீரே தங்கத்துக்கு காரணமாகவும் இருப்பதால், ஹிரண்ய-க்ருத் என்றும் அறியப்படுகிறீர்கள்.

अग्नि: ददातु मे तेजो वायुः प्राणं ददातु मे।

पृथिवी बलम् आदध्याच्छिवं चापो दिशन्तु मे।।

அக்னி: ததாது மே தேஜோ

வாயு: ப்ராணம் ததாது மே |

ப்ருதிவீ பலம் ஆதத்யாச் 

சிவம் சாபோ திஷந்து மே ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அக்னி தேவா நீங்களே எனக்கு பொலிவை (தேஜஸ்) அருள வேண்டும். வாயு பகவான் பிராணனை அருள வேண்டும். இந்த பூமி பலத்தை அருள வேண்டும், ஜலம் சுகத்தை அருள வேண்டும்.

अपां गर्भ महासत्व जातवेदः सुरेश्वर।

देवानां मुखम् अग्ने त्वं सत्येन विपुन् ईहि माम्।।

அபாம் கர்பம் மஹாஸத்வ

ஜாதவேத: சுரேஸ்வர |

தேவானாம் முகம் அக்னே த்வம்

சத்யேன விபுன் ஈஹி மாம் ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

ஜலத்தின் கர்ப்பமாக (வடவாமுக அக்னி) இருப்பவரே! மஹாசக்தி உள்ளவனே! ஜாதவேதனே! தேவர்களில் ஈஸ்வரனே! தேவர்களுக்கு முகமாக இருக்கும் அக்னி பகவானே, நான் சொல்வது சத்யமானால், என் முன்னே காட்சி கொடுத்து என்னை பரிசுத்தமாக்குங்கள்.

ऋषिभि:  ब्राह्मणै: च एव दैवतै: असुरै: अपि।

नित्यं सुहुत यज्ञेषु सत्येन विपुन् ईहि माम्।।

ரிஷிபி: ப்ராஹ்மணை: ச ஏவ

தைவதை: அசுரை: அபி |

நித்யம் சுஹுத யஞேஸு

சத்யேன விபுன் ஈஹி மாம் ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

ரிஷிகளாலும், ப்ராம்மணர்களாலும், தேவர்களாலும், அசுரர்களாலும் யாகங்களில் எப்போதும் நன்றாக ஹோமம் செய்யப்பட்டவரே! இந்த சத்யத்தினால் என்னை காப்பீராக. 

धूमकेतुः शिखी च त्वं पापहाऽनि सम्भवः।

सर्वप्राणिषु नित्यस्थः सत्येन विपुन् ईहि माम्।।

தூமகேது: சிகீ ச த்வம்

பாபஹானி சம்பவ: |

சர்வ-ப்ராணிஷு நித்யஸ்த:

சத்யேன விபுன் ஈஹி மாம் ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

புகையையே கொடியாக உள்ளவரே! ஜ்வலிக்கும் கேசமுடையவரே! பாவங்களை அழிப்பவரே! எல்லா பிராணிகளிடத்திலும் எப்போதும் இருப்பவரே! அக்னி பகவானே! சத்யமாக என்னை நீங்கள் காக்க வேண்டும்.

एवं स्तुतोऽसि भगवन्प्रीतेन शिचिना मया।

तुष्टिं पुष्टिं श्रुतं चैव प्रीति च अग्ने प्रयच्छ मे।।

ஏவம் ஸ்துதோஸி பகவன்

ப்ரீதேன ஸிசினா மயா |

துஷ்டிம் புஷ்டிம் ஸ்ருதம் ச ஏவ

ப்ரீதி ச அக்னே ப்ரயச்ச மே ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அக்னி பகவானே! நான் உங்களை பரிசுத்தமாக பக்தியோடு துதிக்கிறேன். எனக்கு சந்தோஷமும், ஆரோக்கியமும், சாஸ்திர ஞானமும், மென்மேலும் அன்பும் வளர எனக்கு அருள வேண்டும்.

वैशम्पायन उवाच  (வைசம்பாயனர் சொல்கிறார்)

इत्येवं मन्त्रम् आग्नेयं पठन्यो जुहुयाद् विभुम्।

ऋद्धिमान् सततं द अन्तः सर्वपापैः प्रमुच्यते।।

இத்யேவம் மந்த்ரம் ஆக்நேயம்

படன்யோ ஜுஹுயாத் விபும் ||

ருத்திமான் சததம் த அந்த:

சர்வபாபை: ப்ரமுச்யதே ||

- மஹாபாரதம் (வ்யாஸர்)

அக்னி பகவானை குறித்து சஹதேவரால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை படித்து, அக்னியில் ஹோமம் செய்பவன், அழியாத செல்வ செழிப்புடன் எப்போதும் புலன்களை வென்றவனாக, எல்லா பாவங்களாலும் விடுபடுவான்.

Friday 9 July 2021

உலக படைப்பு - வரிசையை தெரிந்து கொள்வோம்...

உலக படைப்பு - வரிசையை தெரிந்து கொள்வோம்...

"உலகம் தட்டை" என்று உருட்டி கலிலியோ போன்றவர்களை கொன்ற மதங்கள் ஒரு புறம் இருக்க,

ஹிந்துக்களின் சொத்தான வேதம், உலக படைப்பின் வரிசையை பற்றி சொல்கிறது...  

தெரிந்து கொள்வோம்...

* ஆகாயத்தில் இருந்து 'காற்று'.

* காற்றிலிருந்து 'அக்னி'.

* அக்னியில் இருந்து 'நீர்'.

* நீரில் இருந்து 'நிலம்'.

* நிலத்தில் இருந்து 'மனித உடல்கள், மிருக, தாவர உடல்கள்'


நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, இன்று நீருக்கு ஆதாரமாக உள்ள அக்னியிலிருந்தும், காற்றிலிருந்தும் எடுக்க அறிவியல் முயற்சி நடக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.





உலக படைப்பின் வளர்ச்சி :

1. ஒரு குணம்: (ஆகாயம்)

* ஆகாயம் ஒலியால் நிரம்பி உள்ளது. 

ஆகார நியமம் மேலும் கடுமையான தியானத்தால், ரிஷிகள் ஆகாயத்தில் இருக்கும் ஒலிகளை கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர். 

அதுவே 'வேதம்' என்றும் 'சப்த பிரம்மம்' என்று சொல்கிறோம்.

வேதங்கள் அனைத்தும் இந்த ஆகாயத்தில் இருக்கும் ஒலி அலைகளே !

இருக்கும் வித விதமான அனைத்து வேத ஒலிகளும் "ஓம்" என்ற பிரணவ ஒலியில் இருந்து வெளிப்பட்டவை என்று ரிஷிகள் கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர்.

(ரிஷிகளை 'விஞ்ஞானிகள்' என்று பொருள் கொள்ளலாம்) 


2. இரண்டு குணம்: (காற்று)

ஆகாயத்திலிருந்து உண்டான காற்றுக்கு 2 குணங்கள் உண்டு. 

* காற்றில் ஒலி உண்டு.

மேலும்,

* காற்று, நம் தோலில் படும் போது, அதை உணர முடிகிறது.


3. மூன்று குணம்: (அக்னி)

காற்றிலிருந்து உருவான அக்னிக்கு 3 குணங்கள் உண்டு.

* அக்னிக்கும் ஒலி உண்டு. 

* அக்னி நம் மீது படும் போது, உணரவும் முடிகிறது.. 

மேலும்,

* அக்னியை கண்ணால் பார்க்கவும் முடிகிறது. அக்னிக்கு ஒளி உண்டு.


4. நான்கு குணம்: (நீர்)

அக்னியிலிருந்து உருவான நீர் என்ற ரசத்துக்கு 4 குணங்கள் உண்டு.

* நீருக்கும் ஒலி உண்டு.

* நீர் நம் மீது படும் போது உணர முடிகிறது..

* நீரை பார்க்கவும் முடிகிறது..

மேலும்

* நீரை நாக்கால் சுவைக்கவும் முடிகிறது.


'ரசம்' என்ற சொல் நீருக்கு பயன்படுத்தப்படுகிறது.  

நாம் சாப்பிடும் எந்த பொருளாக இருந்தாலும், அதில் சுவை (ரசம்) இருப்பதற்கு காரணம் அதில் இருக்கும் நீரே என்று அறிந்து கொள்ளலாம்.


5. ஐந்து குணம்: (நிலம்)

நீரிலிருந்து உருவான நிலத்துக்கு 5 குணங்கள் உண்டு.

* நிலத்தில் ஒலி உண்டு.

* நிலத்தில் நம் உடல் படும் போது உணர முடிகிறது..

* நிலத்தை பார்க்கவும் முடிகிறது..

மேலும்

* நிலத்தை நாக்கால் சுவைக்கவும் முடிகிறது.

மேலும்

* நிலத்திற்கு வாசனை உண்டு.


நிலத்தில் உருவான மனித உடல்களுக்கு இந்த 5 குணங்களை உணர 5 கருவிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


1. ஒலி இருப்பதை கேட்க காதும்,

2. தொடுவதை உணர தோலும்,

3. பார்ப்பதற்கு கண்ணும்,

4. சுவைப்பதற்கு நாக்கும்,

5. முகர்வதற்கு மூக்கும் உள்ளது.


உயிர் இல்லாத, இறந்து போன மனித உடலில் இந்த 5 கருவியும் இருந்தாலும், பயனில்லை...


இந்த மனித உடலில் உள்ள கருவியை பயன்படுத்தி, வெளியில் காணப்படும் பஞ்ச பூதங்களை அனுபவித்து வந்தவனுக்கு "ஜீவன்" என்று பெயர் என்று வேதம் சொல்கிறது.


இந்த ஜீவன் 

"ஆகாயத்திலிருந்தோ! 

காற்றிலிருந்தோ! 

அக்னியிலிருந்தோ! 

நீரிலிருந்தோ! 

நிலத்திலிருந்தோ! 

வந்தவன் இல்லை.." 

என்று சொல்கிறது வேதம்...


இந்த ஜீவனும் (living), ஆகாயமும் (nature) பரமாத்மாவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்கிறது வேதம்.

எப்படி கடல், பல அலைகளை உருவாக்குமோ! அது போல, பரமாத்மா என்ற பரமபுருஷன், தன் அம்சமாக கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை வெளிப்படுத்தினார்.

அதில் முதலாவதாக படைக்கப்பட்டவர் ப்ரம்ம தேவன் என்று வேதம் ஆரம்பிக்கிறது.

ஜீவாத்மாக்களை படைத்த பரமாத்மா, வாழ்வதற்கு ஏற்ற பஞ்ச பூதங்களையும் படைத்தார்..





பரமாத்மா 'அவ்யக்தத்தில் இருந்து 'ஓம்' என்ற ஒலி ரூபமான ஆகாயத்தை' படைத்தார். 

ஓம் என்ற பிரணவ ஒலியிலிருந்து, வேத ஒலிகள் வெளிப்பட்டன..

வேத ஒலிகள் மூலம், காற்று, அக்னி, நீர், நிலங்களை படைத்தார்.  

வேதம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதால், வேத சப்தத்தை மனனம் செய்து வந்த ப்ராம்மணர்களை அரசர்கள் மதித்தனர்.

காற்று, அக்னி, நீர், நிலங்களில் ஏற்படும் கோளாறுகளைநோய்களை வேத ஓத ஒலிகளை மாத்திரை பிசகாமல் ஓதி சமன் செய்தனர்.

மேலும், 

ப்ரம்ம தேவனிடம் இந்த வேதத்தை கொடுத்து, படைக்கப்பட்ட பல லோகங்களில் தேவர்கள், ரிஷிகள், மேலும் பூலோக நிலங்களில் மனித, மிருக, தாவர உடல்களை படைத்தார்.

பரமாத்மா அழிக்கும் அம்சத்துடன், தானே ருத்ரனாக ப்ரம்ம தேவன் நெற்றியில் இருந்து வெளிப்பட்டார்.

பரமாத்மா படைக்கும் அம்சத்துடன், தானே விஷ்ணுவாக ஸ்வயமாக அவதரித்தார். 

பரமாத்மாவால் படைக்கப்பட்ட கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இந்த உடல்களில் புகுந்து கொண்டு, பஞ்ச பூதங்களான தன் உடல்களை கொண்டு, பஞ்ச பூதங்களால் ஆன உலகை அனுபவிக்கின்றன.


"எந்த ஜீவாத்மாக்கள் இந்த பஞ்ச பூதங்களால் கிடைக்கும் அனுபவங்கள் போதும், தனக்கு பரமாத்மாவே போதும்" என்று நினைக்கிறதோ! அந்த ஜீவாத்மாவுக்கு விடுதலை கொடுத்து, தன்னுடன் சேர்த்து கொண்டு விடுகிறார்..

இதுவே மோக்ஷம்.

ப்ரம்ம தேவனை படைத்த, நம்மையும் படைத்த, பஞ்ச பூதங்களுக்கு காரணமான அந்த பரமாத்மா "நாராயணன்" என்று அறிவோம்.

நாராயணன் என்ற சொல்லுக்கு "நரர்கள் யாவருக்கும் அடைக்கலம் தருபவர்" என்று பொருள்.

'அந்த பரமபுருஷனை, மஹாலக்ஷ்மி மணந்தாள்' என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லி அடையாளமும் காட்டுகிறது.


வாழ்க ஹிந்துக்கள்..