Followers

Search Here...

Monday 27 September 2021

சமஸ்க்ரிதம்" என்ன சொல்கிறதோ, அதையே தமிழ் மொழியும் பேசுகிறது... ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை சொல்கிறது...

வேத மொழியான "சமஸ்க்ரிதம்" என்ன சொல்கிறதோ, அதையே தமிழ் மொழியும் பேசுகிறது.

சமஸ்க்ரித மொழி -  

"தர்ம, அர்த்த, காம, மோக்ஷ" என்று சொல்கிறது.

அதை அப்படியே தமிழும், மொழி பெயர்த்து சொல்கிறது.

தமிழ் மொழி - 

"அறம், பொருள், இன்பம், வீடு" என்று சொல்கிறது.


 


சமஸ்க்ரித மொழி - 

வேத மந்திரங்களுக்கு 6 அங்கங்கள் உண்டு.

வேத  மந்திரத்துக்கு, 

கை எது? கால் எது? கண்  எது? காது எது? மூக்கு எது? முகம் எது? என்று கேட்கும் போது,

"கல்பம்" கையாக இருக்கிறது.

"சந்தஸ்" காலாக இருக்கிறது.

"ஜ்யோதிஷம்" கண்ணாக இருக்கிறது.

"நிருத்தம்" காதாக இருக்கிறது.

"சிக்ஷை" மூக்காக இருக்கிறது.

"வியாகரணம்" முகமாக இருக்கிறது.

என்று சொல்கிறது.


சங்கத்தமிழ் இலக்கியமான மணிமேகலை, சமஸ்க்ரித சொற்களையே தமிழோடு ஏற்று, அப்படியே சொல்கிறது.

கற்பம் கை

சந்தம் கால்

எண் கண்

தெற்றென் நிருத்தம் செவி

சிக்கை மூக்கு,

உற்ற வியாகரணம் முகம் பெற்று

சார்பில் தோன்றா ஆரண வேதக்கு

ஆதி அந்தம் இல்லை

அது நெறி எனும் வேதியன்

உரையின் விதியும் கேட்டு

- சங்கத்தமிழ் (மணிமேகலை)

சங்க தமிழ் இலக்கியமான மணிமேகலை, "ஆதி அந்தம் இல்லாத வேதமே சிறப்புடையது. அந்த வேத மந்திரங்களுக்கு 6 அங்கங்கள் உண்டு" என்று சொல்லும் பாடல் இது.

"மனிதர்களால் உருவாக்கப்படாத,  ஆகாசத்தில் ஒலி ரூபமாக என்றுமே இருக்கும், ஆதி அந்தம் இல்லாத வேத மந்திரங்களுக்கு,

'கற்பம்' என்ற 'கல்பம்' கையாக இருக்கிறது.

'சந்தம்' என்ற 'சந்தஸ்' காலாக இருக்கிறது.

'எண்'  என்ற 'ஜ்யோதிஷம்' கண்ணாக இருக்கிறது.

'நிருத்தம்' காதாக இருக்கிறது.

'சிக்கை' என்ற 'சிக்ஷை' மூக்காக இருக்கிறது.

'வியாகரணம்' முகமாக இருக்கிறது."

என்று மணிமேகலை பாடல், சமஸ்க்ரிதம் சொல்வதை அப்படியே சொல்கிறது.





தமிழ் மொழியில் "சமஸ்க்ரிதம்", 

தமிழ் பெயர்களில் "சமஸ்க்ரிதம்", 

சங்க இலக்கியங்களை எங்கு பார்த்தாலும் 'சமஸ்க்ரிதம்" இருக்கிறது.

'தமிழையும் சமஸ்க்ரிதத்தையும்  பிரிக்கவே முடியாது" என்பது சங்க இலக்கியங்கள்  காட்டுகிறது.


இன்றைய தமிழனுக்கு, "சூத்திரன்" சமஸ்க்ரித சொல் என்று கூட தெரியாது.

இன்றைய தமிழனுக்கு, "சுபவீர" சமஸ்க்ரித சொல் என்று கூட தெரியாது.

இன்றைய தமிழனுக்கு, மணிமேகலை,  புறநானூறு, பரிபாடல் போன்ற சங்கத்தமிழை படிக்க சொன்னால், அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது.

இன்றைய தமிழனுக்கு, சமஸ்க்ரித மொழியும், புரிந்து கொள்ள முடியாது.

சங்க காலத்தில் இருந்தே தமிழில் கலந்துள்ள சமஸ்க்ரிதமும், தமிழும் தெரியாத மூடர் கூட்டம்,

தனக்கே "கருணா, நிதி, உதய, சூரிய, ஆதித்யன், ராம, ஸ்வாமி (சாமி), ராஜா (ராசா), கலா"  என்று பெயர் வைத்துக்கொண்டு, 

"ஸ்தோத்திரம், பூஜை (பூசை), பலம், திராவிட" என்று சமஸ்க்ரித மொழியையே பயன்படுத்தி கொண்டு, 

"தான் பயன்படுத்துவது தமிழ்" என்று நினைத்து பயன்படுத்தி கொண்டு, சமஸ்க்ரித மொழி எதிர்ப்பு செய்கின்றனர்.

சமஸ்க்ரித பெயர், சமஸ்க்ரிதம் கலந்த தமிழ் பேசி கொண்டு, சமஸ்க்ரிதம் கூடாது என்று பிதற்றும் இந்த மூடர் கூட்டம் தான், "தன் மனைவிக்கு தாலி கட்டி விட்டு, தாலி  கட்டிக்கொள்ள கூடாது" என்று போராட்டமும் செய்கிறார்கள்.


இந்த மூடர் கூட்டத்துக்கு, "உன்னுடைய பெயர், நீ பயன்படுத்தும் பல சொற்களும் சமஸ்க்ரித மொழி தான்' என்று சொல்லி உண்மையை உணர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.

"தமிழன் என்று சொல்லிக்கொண்டு, ஒரு முட்டாள் கூட தமிழ்நாட்டில் அலைய விடாமல் பார்த்து கொள்வது" உண்மையான தமிழர்களுக்குள்ள கடமை

வேத அங்கங்களை அறிந்து கொள்ள... இங்கே படிக்கவும்..

குருநாதர் துணை

Friday 24 September 2021

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் முகம், கண், காது, மூக்கு, கை, கால்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. அவை என்ன? சந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் ஏன் தொடுகிறோம்? தெரிந்து கொள்வோம்..

வேத மந்திரம் கற்றுக்கொள்ளும் முறை என்ன?

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் அங்கம் உள்ளது.  

அவை 

"வ்யாகரணம், சிக்ஷை, நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம், சந்தஸ்".


முதலில்,

வேதத்தை பூரணமாக அத்யயனம் செய்து விட வேண்டும்.

பிறகு, 

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது, ஒவ்வொரு வேத மந்திரத்தின் 

  1. முகம் எது? 
  2. மூக்கு எது? 
  3. காது எது? 
  4. கண் எது? 
  5. கைகள் எது? 
  6. கால் எது? 

என்று வேத மந்திரத்தின் 6 அங்கங்களை படித்து அறிந்து கொண்டு சொல்பவன், ப்ரம்ம லோகத்தில் பூஜிக்கப்படுவான் என்று சொல்லப்படுகிறது.





புரிந்து கொள்வதற்காக, வேத மந்திரங்கள் அனைத்துக்கும் மாதாவான காயத்ரீ மந்திரம் மட்டும் எடுத்து கொள்வோம்.

காயத்ரீ மந்திரம், 3 பாதமாக உள்ளது. மொத்தம் 24 அக்ஷரம் உள்ளது.

தத் ஸ வி து: வ ரே ணி யம் (8 அக்ஷரம்)

பர் கோ தே வ ஸ்ய தீ ம ஹி (8 அக்ஷரம்)

தி யோ யோ ந: ப்ர சோ த யாத் (8 அக்ஷரம்)

பொதுவாக, 

காயத்ரீ மந்திரம் சொல்லி அர்க்யம் விடும் போது, 24 அக்ஷரமாக சொல்ல வேண்டும்.

அதே காயத்ரீயை, 

ஜபமாக செய்யும் போது, விச்வாமித்ரர் ஜபம் செய்தது போல, "ஒரு அக்ஷரம் குறைத்து, 23 அக்ஷரமாக சொல்லவேண்டும்" என்று சொல்லப்படுகிறது.

அதனால், "நிச்ருத் காயத்ரீ" என்று சொல்லி பிறகு ஜபம் செய்வது வழக்கம்.

நிச்ருத் காயத்ரீ (3 பாதம், 23 அக்ஷரம்)

தத் ஸ வி து: வ ரேண் யம் (7 அக்ஷரம்)

பர் கோ தே வ ஸ்ய தீ ம ஹி (8 அக்ஷரம்)

தி யோ யோ ந: ப்ர சோ த யாத் (8 அக்ஷரம்)

ஒவ்வொரு வேத மந்திரத்துக்கும் "6 அங்கங்கள்" உண்டு. அவை...

1. வ்யாகரணம் (வேத மந்திரத்தின் - முகம் (face) என்று தியானிக்க வேண்டும்)

வேத மந்திரத்தின் உண்மையான அர்த்தம் என்ன? என்று சொல்லித்தருவது வ்யாகரணம்.

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, அர்த்தம் புரிந்து சொல்ல வேண்டும். 

அந்த அர்த்தமே "காயத்ரீ மந்திரத்தின் முகம்" என்று தியானிக்க வேண்டும்.


2. சிக்ஷை (வேத மந்திரத்தின் - மூக்கு (nose) என்று தியானிக்க வேண்டும்)

ஸ்வரம் மாறாமல், அக்ஷரம் தவறாமல், மாத்ரை தவறாமல், எப்படி உச்சரிப்பது? என்று சொல்லித்தருவது சிக்ஷை. 

இப்படி சொல்லித்தர இங்கு குரு அவசியமாகிறார். அவர் சிஷ்யனுக்கு உச்சரிப்பு சொல்லித்தருக்கிறார்.

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, ஸ்வரம், அக்ஷரம், மாத்ரை மாறாமல், சரியான உச்சரிப்புடன் சொல்ல வேண்டும். 

அந்த உச்சரிப்பே, "காயத்ரீ மந்திரத்தின் மூக்கு" என்று தியானிக்க வேண்டும்.





3. நிருக்தம் (வேத மந்திரத்தின் - காது (ear) என்று தியானிக்க வேண்டும்)

விஷ்ணு, ருத்ரன், இந்திரன் என்று வேத மந்திரங்கள் தேவதைகள் பெயரை சொல்கிறது. 

வேத ஒலிகளை காதால் கேட்கிறோம். அந்த நாமங்கள் எதனால் அந்தந்த தேவதைக்கு ஏற்பட்டது? என்ற ஞானத்தை சொல்லித்தருவது நிருக்தம்

காயத்ரீ மந்திரம் "ஸவிதா" என்று பரமாத்மாவை அழைக்கிறது. 

இங்கு ஸவிதா என்பது சூரியனா? நம்மிடமும்சூரியனுக்கு உள்ளிருக்கும் நாராயணனா? என்ற ஞானத்தை நிருக்தம் கொடுக்கிறது. 

காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் போது, அதை கேட்கும் நாம், 'ஸவிதா என்பது சூரியநாராயணனே!' என்று உணர்ந்து சொல்ல வேண்டும்.

எந்த தேவதையை சொல்கிறோம் என்ற ஞானமே (அறிவே),  "காயத்ரீ மந்திரத்தின் காது" என்று தியானிக்க வேண்டும்.


4. ஜ்யோதிஷம் (வேத மந்திரத்தின் - கண் (eye) என்று தியானிக்க வேண்டும்)

எந்த வேத மந்திரத்தை எந்த காலத்தில் சொல்லவேண்டும்? என்று காலத்தை கணிக்க சொல்லித்தருவது ஜ்யோதிஷம்.

காயத்ரீ மந்திரம் இந்த வேளையில் தான் சொல்ல வேண்டும் என்று விதி உள்ளது. இந்த காலவிதியை ஜோதிஷம் கணித்து சொல்லித்தருகிறது.

சரியான காலத்தில் அதற்கான வேத மந்திரத்தை சொல்லும் போது, அந்த கால நிர்ணயமே,   "காயத்ரீ மந்திரத்தின் கண்" என்று தியானிக்க வேண்டும்.





5. கல்பம் (வேத மந்திரத்தின் - கை (hand) என்று தியானிக்க வேண்டும்)

எந்த வேத மந்திரத்தை எந்த யாகத்தில் சொல்ல வேண்டும்? என்று சொல்லித்தருவது கல்பம்.

காயத்ரீ மந்திரம் தெரியும் என்பதற்காக, யாகம் செய்யும் போதெல்லாம் சொல்ல கூடாது. 

எந்த மந்திரத்தை எங்கு சொல்லவேண்டும்? என்று நமக்கு வழிகாட்ட, ஒரு "கை" போல, கல்பம் உதவுகிறது.

இந்த இடத்தில் காயத்ரீ மந்திரம் சொல்ல வேண்டும் என்பதையே, "காயத்ரீ மந்திரத்தின் கை" என்று தியானிக்க வேண்டும்.


6. சந்தஸ் (வேத மந்திரத்தின் - கால் (leg) என்று தியானிக்க வேண்டும்)

வேத மந்திரம் ஒவ்வொன்றும் எத்தனை அக்ஷரமாக சொல்ல வேண்டும்? என்கிற விதியை சொல்லித்தருவது சந்தஸ். 

இந்த வேத மந்திரத்தை காயத்ரீ சந்தஸில் சொல்ல வேண்டும், என்றால், 

உடனேயே அந்த மந்திரத்தை 3 பாதமாக பிரித்து, 8,8,8 அக்ஷரமாக பிரித்து, 24 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று புரிந்து விடும்.

ரிக் வேதத்தின் முதல் மந்திரமான ‘அக்னீமீளே’ ஸூக்தமும் காயத்ரீ சந்தஸில் தான் அமைந்துள்ளது

அக்  நி மீ ளே பு ரோ ஹி தம் 

யக் ஞஸ் ய தே வம் ருத் வி ஜம் 

ஹோ தா ரம் ரத் ந தா த மம்

அர்த்தம்

யக்ஞத்தின் தேவனும், யக்ஞத்தில் வரிக்கப்பட்டவரும், முதன்மையாக இருப்பவரும், எல்லா தேவர்களையும் கூப்பிடுபவரும், செல்வத்தை தருபவரும், ஸ்ரேஷ்டமாக இருப்பவருமான அக்னி பகவானே ! பூ: புவ: ஸுவ: என்று விராட் ரூபத்தையே நாராயணனாக பார்க்கும் போது, அவருடைய கண்களாக இருக்கும் அக்னியே உன்னை துதிக்கிறேன்


ஒவ்வொரு மந்திரத்துக்கும் உள்ள சந்தஸ் என்ன? என்று தெரிந்தால், வேத மந்திரத்தை அதற்கேற்ப சொல்ல முடியும்.

காயத்ரீ சந்தஸ் போல பல சந்தஸ் உள்ளன..

சில வேத மந்திரங்களை, "உஷ்ணிக்" சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 3 பாதமாக பிரித்து, முதல் 2 பாதத்தை 8, 8 அக்ஷரமாக, 3வது பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 28 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 


சில வேத மந்திரங்களை, அனுஷ்டுப் சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 8 அக்ஷரமாக, மொத்தம் 32 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, ப்ருஹதி சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, முதல் மூன்று பாதத்தை 8 அக்ஷரமாக, 4வது பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 36 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, ப்ங்க்தி சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 10 அக்ஷரமாக, மொத்தம் 40 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

சில வேத மந்திரங்களை, த்ரிஷ்டுப் சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 11 அக்ஷரமாக, மொத்தம் 44 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 


சில வேத மந்திரங்களை, ஜகதீ சந்தஸில் படிக்க வேண்டும்.

அந்த வேத மந்திரங்களை, 4 பாதமாக பிரித்து, ஒவ்வொரு பாதத்தை 12 அக்ஷரமாக, மொத்தம் 48 அக்ஷரமாக சொல்ல வேண்டும் என்று உள்ளது. 

இப்படி பல சந்தஸ் உள்ளன. 


"அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காச்யப, அங்கீரஸ"

என்ற 7 ரிஷிகள், 

"காயத்ரீ, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதீ"

என்ற 7 சந்தஸ் கொண்ட பல வேத மந்திரங்களை கொண்டு,

அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்த்ர, விச்வே தேவர்கள் 

என்ற 7 தேவதைகளை ஆராதனை செய்கிறார்கள்.


சந்தியா வந்தனத்தில், 

அந்த 7 ரிஷிகளின் பெயர்களை சொல்லும் போது, தலையை தொட்டு, ரிஷிகளை வணங்குகிறோம்.

அவர்கள் வேத மந்திரங்களை 7 சந்தஸை கொண்டு ஸ்வரம், அக்ஷரம், மாத்திரை மாறாமல் சொன்னார்கள் என்பதை நாமும் தியானிக்க, மூக்கை தொடுகிறோம்.

அந்த 7 ரிஷிகள் வழிபட்ட தேவதைகளை நாமும் இதயத்தில் வழிபடுவதாக நினைத்து இதயத்தை தொட்டு கொள்கிறோம்.


இவ்வாறு, ரிஷிகளை, தேவதைகளை தியானிக்கும் பாக்கியத்தை சந்தியா வந்தனம் நமக்கு தருகிறது.


Sunday 19 September 2021

தமிழா! பழங்குடி தமிழன் யாரை முதலில் வணங்கினான்? வேதத்தை பற்றி ஆதிகுடி தமிழன் என்ன சொல்கிறான்? தமிழா! நீ தெரிந்து கொள்ள வேண்டாமா? சங்க இலக்கியம் பரிபாடல் சொல்கிறது...

தமிழா! "பழங்குடி தமிழன்" யாரை முதலில் வணங்கினான்? 

வேதத்தை பற்றி ஆதிகுடி தமிழன் என்ன சொல்கிறான்?

எழுத்து வடிவில் இல்லாமல், காதால் கேட்டு கேட்டு, வாயால் சொல்லி சொல்லியே மனனம் செய்வதால், பரமாத்மாவின் அறிவு என்று அழைக்கப்படும், ஆகாசத்தில் என்றுமே இருக்கும் வேத ஒலிகளை, சமஸ்க்ரித மொழி "ஸ்ருதி" என்றும், தமிழ் மொழி "மாயா வாய்மொழி" என்றும் அழைக்கிறது.

'உண்மையான தமிழன் யாரை வணங்கினான்?" என்று சங்க இலக்கியங்கள் நமக்கு காட்டுகிறது.

1.

மாயா வாய்மொழி

உரைதர வலந்து

வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ என மொழியுமால் அந்தணர் அருமறை

- பரிபாடல் (சங்கத்தமிழ்)

அர்த்தம்:

வேதத்தை தந்தவன் திருமால். 

வேதம் என்னும் வாய்மொழி ஓடையில் மலர்ந்தது தாமரை. 

தாமரையில் வெளிப்பட்டார் ப்ரம்ம தேவன்

அந்த ப்ரம்ம தேவனின் தந்தை நீங்கள்! என்று அந்தணர் வாய்மொழியாக வரும் வேதம் சொல்கிறது





இப்படி சங்க இலக்கியமான பரிபாடல், வேதத்தை பற்றி சொல்லி, ப்ரம்ம தேவனை பற்றி, நாராயணன் பற்றி பேசுகிறது.

2.

பரிபாடல், "கெடு இல் கேள்வி" (தோஷமற்ற நூல் வேதம்) என்று வேதத்துக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது.

வடு இல் கொள்கையின்

உயர்ந்தோர் ஆய்ந்த

கெடு இல் கேள்வியுள்

நடு ஆகுதலும்

- பரிபாடல் (சங்கத்தமிழ்)

அர்த்தம்

மாசு இல்லாத (வடு இல்) கொள்கையுடைய உயர்ந்தோர், நன்கு ஆராய்ந்த பிறகு, "ஒரு குறையும் இல்லாதது வேதம். இந்த குறைவில்லாத வேதத்தில் (கெடு இல் கேள்வி) நடுவாக, உட்பொருளாக (நடு ஆகுதலும்) திருமால் இருக்கிறார்" என்கிறார்கள்.


ஆகாசத்தில் என்றுமே இருக்கும் அழியாத வேத ஒலிகள், வெளியோட்டமாக யாகம், ஜபம், பூஜை போன்ற கர்மாவை செய்ய சொல்வது போல தோன்றினாலும், பரமாத்மாவையே விராட் புருஷனாக பல விதத்தில் துதிக்கிறது.

நேரடியாக பரமாத்மாவை பற்றி சொல்ல தயங்கி, மறைத்து பேசுகிறது வேதம்

தமிழ்மொழி, வேதத்தை "மறை" என்றும் அழகாக சொல்கிறது.

தத்துவங்களை, உட்கருத்தை மறைத்து பேசுவதால், வேதத்துக்கு "மறை" என்று பெயர் கொடுக்கிறது நம் தமிழ் மொழி.




3.

பரிபாடல், 'வேதம்' என்ற சொல்லுக்கு ஈடாக "மறை" என்றும் சொல்கிறது. 

வேதத்து மறை நீ!

பூதத்து முதலும் நீ!

வெஞ்சுடர் ஒளியும் நீ!

திங்களுள் அளியும் நீ!

அனைத்தும் நீ!

அனைத்தின் உட்பொருளும் நீ! 

- பரிபாடல்

அர்த்தம்

பரிபாடல் திருமாலை பற்றி சொல்லும் போது, 

"வேதம் முழுவதின் உட்கருத்தாக, தத்துவமாக (மறை) நீயே இருக்கிறாய்" என்று "வேதத்தின் மறை நீ" என்கிறது.

மேலும்,

"உலக படைப்பிற்கும் முன் இருந்த ஆதி புருஷன் நீ !

ஒளிக்கு ஒளியானவன் நீ!

சந்திரனுக்கும் குளிர் தருபவன் நீ!

மொத்தத்தில் நீ தான் அனைத்துமாக இருக்கிறாய்.

அனைத்துக்கும் உள்ளிருந்து கொண்டு நீயே செயல்படுகிறாய்"

என்று பரிபாடல் நாராயணனை பற்றி சொல்லும் போது, "வேதத்தின் உட்கருத்து நீ" என்று சொல்கிறது.

Thursday 16 September 2021

வயோதிகம் (முதுமை) சாபமா?

வயோதிகம் நமக்கு கொடுக்கப்பட்ட சாபமா?

பகவான் நம்மை 'குழந்தையாக' பிறக்க செய்கிறான்.

விளையாடி மகிழ்கிறோம். 

"பகவான் கருணை உள்ளவன்" என்று சொல்கிறோம்.

பகவான் நமக்கு பிறகு நல்ல 'இளமையான உடல், அழகு' கொடுக்கிறார்.

அங்கும் இங்கும் ஓடி பொருள் சேர்க்கிறோம். 

கல்யாணம் செய்து கொண்டு, காமத்தில் ஈடுபட்டு குழந்தை பெற்று, குடும்பமாக மகிழ்கிறோம்.

"பகவான் கருணை உள்ளவன்" என்று சொல்கிறோம்.





பிறகு, பகவான் நமக்கு உடலை இளைக்க செய்து, உடலால் எதையும் செய்ய முடியாதவனாக ஆக்கி 'வயோதிகம்' கொடுக்கிறார்.

ஓடி ஆட முடியாமல், காமத்திற்கு உடல் ஒத்துழைக்காமல், உடல் சோர்ந்து விட, குடும்பத்தில் உள்ளவர்களும் நம் தேவையை அதிகம் பொருட்படுத்தாமல் இருக்க, 'இந்த நிலை வந்ததே!' என்று புலம்பி, "பகவான் கருணை இல்லாதவன்" என்று சொல்லி விடுறோம்.

"வார்தக்யே முனி வர்தீனாம்" என்று மஹாகவி காளிதாசன் 'பகவானை தியானம் செய்யத்தான், வ்யோதிகமே வருகிறது" என்று சொல்கிறார்.

பகவான் என்ன நினைத்து நமக்கு இந்த வயோதிகம் கொடுக்கிறார்?

"போதும் நீ மற்றவருக்காக, உலகத்துக்காக உழைத்தது.  போதும் உனக்கு இந்த உலக ஆசைகள். 

இனியாவது என்னோடு வந்து விட கடு முயற்சி செய்.

என் கோவிலே கதியாக இரு. என்னை பற்றி பஜனையோ, சத்சங்கமோ நடந்தால், அங்கு சென்று கேள்.

இளமை காலத்தில் கோவிலுக்கு சென்றால், சத்சங்கத்தில் ஈடுபட்டால் "வீட்டில் வேலை இல்லையா? குடும்பம் இல்லையா?" என்று கேள்வி கேட்டு கொண்டே இருப்பார்கள்.

இதோ தானாக கிடைத்தது வயோதிகம்.  

இனி நீ கோவிலுக்கு போனாலும், "ஏன் கோவிலுக்கு போனாய்?" என்று யாரும் கேட்க மாட்டார்கள். "எப்படியோ நிம்மதியாக இருந்தால் சரி. நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி" என்று தான் நினைப்பார்கள். 

பாகவதம், பகவத் கீதை, ராமாயணம், 4000 பாசுரங்கள், சிவபக்தனாக இருந்தால் பதிகங்கள், கந்த புராணம், முக்தி தரும் வராஹ அவதாரம் படித்து கொண்டே இருக்கலாமே! நடக்க முடிந்தால், கோவில் வாசலில் சென்று அமர்ந்து, பகவத்தியானம் செய்யலாமே! 




அருமையாக வயோதிகம் தானாக கிடைத்தும், மீண்டும் உலக விஷயத்தில் செலவு செய்வானா ஒருவன்?

இளமை காலம் வரை தெய்வத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலையில், தானாக வரும் வயோதிகம் வரமல்லவா?"

வயோதிகம் "பகவத் பக்தி செய்ய தானாக கிடைத்த வரம்

என்று உணர வேண்டும். 


திருமழிசை ஆழ்வாரின் அணுகிரஹத்தால், அரசனின் பட்டத்துமஹிஷிக்கு இளமை திரும்பிவிட்டது. 

காஞ்சியை ஆண்டு வந்த அரசன், சிஷ்யரான கணிகண்ணனை அழைத்து, 'தனக்கும் இளமை கிடைக்க வேண்டும்" என்று கேட்க, இப்படி ஒரு ஞான உபதேசம் செய்தார்.

"இளமை தர முடியாது என்றால் காஞ்சியில் இருக்க கூடாது" என்று அரசன் சொல்ல, 

கணிகண்ணன் தன் குருவிடம் சொல்லிவிட்டு கிளம்ப, 'தானும் வருகிறேன்' என்று திருமழிசை ஆழ்வாரும் கிளம்ப, வேகாசேது என்ற பெருமாள் திருவெஃகாவில்  பள்ளி கொண்டு இருக்க, பாம்பு பையை சுருட்டி கொண்டு என்னோடு வாருங்கள் என்று ஆழ்வார் அழைக்க, பெருமாள் கல் ரூபத்தோடு எழுந்து ஆழ்வாரோடு நடக்க ஆரம்பித்தார்.

காஞ்சியை விட்டு, சுமார் 4 km தள்ளி இருக்கும் ஓரிருக்கை என்ற இடம் வர, சாயங்காலம் ஆனதால், அந்த இரவை அங்கு கழிக்க ஆழ்வார் நினைக்க, பெருமாள் அங்கேயே படுத்து விட்டார். 

ஒரு நாள் அங்கு பெருமாள் தங்கியதால், இந்த ஊருக்கு "ஓரிருக்கை" என்ற பெயர் ஏற்பட்டது.

பெருமாளே சென்று விட்டதால், காஞ்சியை விட்டு சகல தேவதைகளும் கிளம்பி விட, திடீரென்று காஞ்சியே சூன்யமாக காட்சி அளித்தது.

அரசன் 'ஆழ்வாருக்கு செய்த அபசாரம் தான் காரணம்' என்று உணர்ந்து, அந்த இரவே ஓடி சென்று ஆழ்வாரை மீண்டும் காஞ்சி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் அரசன்.




துவேஷம் இல்லாத ஆழ்வார், "கிளம்பு என்று சொன்னதால் கிளம்பினோம். வர சொன்னால் வருகிறோம்" என்று கிளம்ப, கனிகண்ணனோடு பெருமாளும் பின் தொடர்ந்து வந்து மீண்டும் காஞ்சிக்கு வந்து படுத்துக்கொண்டார்.

குரு சொன்னால், சிஷ்யன் கேட்க வேண்டும்.

பகவான் சொன்னால், நாம் அனைவரும் கேட்க வேண்டும்.

அது மட்டுமல்ல, 

"உத்தம பக்தன் எது சொன்னாலும், மறுக்காமல் பகவானும் கேட்பார்" என்று காட்ட, பெருமாள் இப்படி ஒரு லீலை செய்தார். 

வேகாசேது என்ற பெருமாள், அன்றிலிருந்து யதோக்தகாரி என்றும், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்றும் பெயர் பெற்றார்.

Friday 10 September 2021

இந்தியாவுக்குள் கால் வைக்கும் முன், வெளிநாட்டவர்கள் சமுதாயத்திற்கு ப்ரயோஜனமாக என்ன கண்டுபிடித்தார்கள்? பாரத தேச ஒப்பீடு.. ஒரு அலசல்...

 "சூரியன் ஒரே இடத்தில் தான் உள்ளது. சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றுகிறது" என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர் இன்றைய விஞ்ஞானிகள்.

சூரியன் உதிப்பதும், மறைவதும் நம்மை பொறுத்து உண்மை போல தெரிகிறதே தவிர,  மஹாமேருவில் கஸ்யபரின் புத்ரனான சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. எப்போதும் தெரிந்து கொண்டே இருக்கிறான் என்று என்றோ ஆராய்ச்சி செய்து அன்றைய விஞ்ஞானிகளான ரிஷிகள் சொல்லிவிட்டனர்.

கஸ்யப: அஷ்டம:

ஸ மஹாமேரும் ந ஜஹாதி

- தைத்தரீய (யஜு வேதம்)

"உலகம் உருண்டை" என்று வராக அவதாரத்திலேயே சொல்லிவிட்டது நம் வேதம்.


"செவ்வாய் (mars) சிவப்பு கிரகம்" என்று அறிவியல் சொல்கிறது. 

சர்வ சாதாரணமாக, நவக்ருஹ சன்னதியில், செவ்வாய் தேவதைக்கு "சிவப்பு துணி கட்டி", என்றோ நம்முடைய இந்த உண்மையை வேதம் சொல்லி விட்டது.


வேத ஒலியே, ஆகாசத்தில் நிரம்பி உள்ளது. (Sound that exist in space is Veda)

வேத ஒலியே, தன் அதிர்வினால் காற்றை உண்டாக்கியது. (Sound vibration created Air)

காற்றின் அதிர்வே, அக்னியை உண்டாக்கியது. (Air vibration created Fire)

அக்னியின் அதிர்வே, நீரை உண்டாக்கியது. (Fire vibration created water)

நீரின் அதிர்வே, மண் என்ற பல உலகங்களை உண்டாக்கியது. (Water vibration created sand)

இது படைப்பின் வரிசை.

"அழிவு" என்பது இதற்கு எதிராக செல்கிறது.

மண்ணில் உருவாகிய அனைத்து உடல்களும் மண்ணுக்குள்ளேயே மறைந்து விடுகிறது. 

அக்னியில் உருவான தேவதைகள், தங்கள் பதவி காலம் முடிந்தவுடன், அக்னியில் மறைந்து விடுவார்கள்..


'இப்படி உருவான மண் உலகம், அதே வரிசையில் அழிக்கப்பட்டு வேதத்தில் அடங்கி விடும்' என்று சொல்கிறது நம் வேதம்.

பிரளயம் ஏற்படும் போது, 

  • மண் உலகம் நீரில் கரைந்து, 
  • நீர் அக்னியில் மறைந்து,
  • அக்னி காற்றில் மறைந்து,
  • காற்று, சப்த ப்ரம்மம் என்று சொல்லப்படும் வேத ஒலியில் மறைந்து விடும்.
  • 'அந்த வேதம், பரவாசுதேவனின் ஞானம் (அறிவு) என்பதால், அனைத்தும் பரமாத்மாவில் அடங்கி விடும்' 

என்று படைப்பையும், பிரளயத்தையும் சொல்கிறது வேதம்.

வேதம் சொல்லும் பல விஷயங்களில், ஒரு அளவுக்கு தான் இன்று அறிவியல் அடி எடுத்து வைத்து கண்டுபிடித்துள்ளது. 

காற்றிலிருந்து, அக்னியிலிருந்து, தண்ணீர் எடுக்க இன்று முயற்சிகள் நடக்கிறது. 

இந்த வரிசையை படைப்பு சொல்லும் போதே வேதம் சொல்லிவிட்டது.

ஆனால், 

'மூலமான வேத ஒலிகளை ஆராய்ச்சி செய்தால், காற்றினால், அக்னியால், நீரால், மண்ணால் வரும் வியாதிகள், மாறுபாடுகளை சரி செய்ய முடியும்' என்ற ஆராய்ச்சியை இன்றைய அறிவியல் இன்னும் தொடங்கவில்லை.


ஜெர்மனி போன்ற நாடுகள் வேத ஒலியை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து உள்ளனர் என்று அறிகிறோம்.


வேதத்தை எழுதி படித்தால், படிக்க முடியுமே தவிர, ரிஷிகள் ஆகாசத்தில் எந்த ஒலி அதிர்வில் கேட்டார்களோ, அதே போல உச்சரிக்க முடியாது.

சரியான வேத உச்சரிப்பே, சரியான ஒலி அலைகளை உண்டாக்கி, காற்று, அக்னி, நீர், மண் போன்றவற்றால் உண்டாகும் மாறுபாட்டை, வியாதிகளை குணப்படுத்தும்.

அந்த உச்சரிப்பை இன்று வரை காப்பாற்றி வரும் ஒரே சமூகம் 'வேத ப்ராம்மணர்கள்' மட்டுமே. 

வேதத்தை விட்டு விட்டு, வேலைக்கு, வியாபாரத்துக்கு, நாட்டுக்கு வேலை செய்யும் பிராம்மணர்கள்

வியாபாரிகள் (வைஸ்யர்கள்), 

வேலைக்கு செல்பவர்கள் (employee/சூத்ரர்கள்), 

நாட்டை காப்பவர்கள் (க்ஷத்ரியர்கள்) அனைவரும், 

இன்று 1000 கணக்கில் மட்டுமே உள்ள வேத ப்ராம்மணர்களை சரியான முறையில் பயன்படுத்தினால், இருக்கும் கொஞ்சம் வேத ஒலிகளின் பலனையாவது இன்று பெறலாம்.

ராமாயண காலத்தில், 'பலை அதிபலை' என்ற இரு மந்திரங்கள் விசுவாமித்திரர் சொன்னார் என்று வருகிறது.

இந்த மந்திரம் பசி தூக்கம் ஏற்படாமல் செய்து விடும் என்று பலன் சொல்லப்படுகிறது.

அந்த மந்திரத்தை ராம லக்ஷ்மணர்களுக்கு விசுவாமித்திரர் உபதேசம் செய்தார்.

இன்று, 

இந்த மந்திரத்தை ஸித்தி செய்ய, ஆராய்ச்சி செய்ய ஆள் இல்லை. 

மந்திரம் கிடைத்தாலும், அதன் உண்மையான வேத ஒலி எப்படி இருக்க வேண்டும்? என்று தெரியாமல் போய் விட்டது. 

'த்ரேதா யுகத்தில், சுமார் 8 லட்சம் வருடங்கள் முன், குபேரன் அன்றே flight வைத்து இருந்தான். அதை ராவணன் பிடுங்கி வைத்து இருந்தான்' என்று ராமாயணம் காட்டுகிறது.

இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விட்டனர்.

அதே சமயம்,

ராவணன், தன் உருவை மாற்றி கொள்ளும் சக்தி கொண்டிருந்தான்.  

இந்த ரகசியத்தை கண்டுபிடிக்க இன்னும் முடியவில்லை.

மேலும்,

போரில், இவர்கள், வேடுவன் போல வெறும் அம்பு விட்டு சண்டை செய்யவில்லை.. 

அஸ்திரம், சஸ்திரம் என்று பல விதமான அணுகுண்டு பயன்படுத்தி உள்ளனர்.




அஸ்வத்தாமன் ப்ரம்மாஸ்திரம் விட்ட போது, அர்ஜுனன் பதிலுக்கு ப்ரம்மாஸ்திரம் எடுக்க, "உலகமே அழிந்து விடும்" என்று தடுத்தார் என்று பார்க்கிறோம்.

அந்த அஸ்திரங்களை "தனுர் வேதம்" என்ற பகுதியில் இருந்து கற்று கொண்டனர் என்று பார்க்கிறோம்.

இன்று அந்த வேத ஒலிகள் தொலைந்து விட்டது. 

காரணம்?

1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரமிப்பால், வடக்கில் இருந்த பல வேத ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டனர்.

கில்ஜி மற்றும் துக்ளக் காலத்தில் 80 வருடம் மட்டுமே சிக்கிய தமிழகத்தை, மராட்டிய மன்னர்களும், பிறகு விஜயநகர மன்னர்களும் காப்பாற்றி விட்டனர்

(கில்ஜியை தொடர்ந்து துக்ளக் காலத்தில் தமிழகத்தை கைப்பற்றி இருந்த இஸ்லாமியர்கள் என்ன செய்தார்கள் என்ற ஒரே ஒரு சம்பவம் இதோ... )

ஹிந்துகளாக உள்ள தமிழர்கள் ஆந்திர தேசத்துக்கும், கன்னட தேசத்துக்கும், மராட்டிய தேசத்துக்கும் என்றும் கடமைப்பட்டு இருக்கிறோம். 

ஹிந்துக்களாக இல்லாத மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்று நினைப்பது கூட அறிவீனம்.


1000 வருடம் முன்பு இருந்த கோவில்கள் இன்றும் தமிழகத்தில் மட்டும் தான் அப்படியே உள்ளது.

1000 வருடம் முன்பு இருந்த வேத பிராம்மண பரம்பரை இன்றும் தமிழகத்தில் மட்டும் தான் அப்படியே உள்ளனர்.


வடக்கில் (பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட), கோவில்களும், ப்ராம்மணர்களும் 1000 வருட காலத்தில் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதால், பல ஆராய்ச்சி குறிப்புகள், வேத சம்ஹிதைகள், ப்ராஹ்மண பாகங்கள் தொலைந்து விட்டது.


வடக்கில், இன்று நாம் காணும் கோவில்கள் அமைப்பும், ப்ராம்மணர்கள் வேதம் உச்சரிப்பதும் வித்யாசமாக இருப்பதற்கு இதுவே காரணம். இதை சரி செய்ய செல்வந்தர்கள் முன் வர வேண்டும். 


தமிழகத்தில் உள்ள கோவில்கள் போன்றே பாரத தேசம் முழுவதும் கட்டப்பட வேண்டும்.

வடக்கில் உள்ள வேத ப்ராம்மணர்களை தமிழகம் வந்து கற்று கொள்ள செய்ய வேண்டும்.


ஆந்திர தேசமும், உத்கல தேசமும் (ஒடிசா) சந்திக்கும் மகாநதி கரையில் உள்ள "ஜயமங்களம்" என்ற ஊரில், குமரிலபட்டர், தைத்தரீய யஜுர் வேத பிராம்மண குடும்பத்தில் பிறந்தார். 

அவரை ஆதிசங்கரர் சந்தித்தார் என்று பார்க்கிறோம்.

புண்ய ஸ்லோக மஞ்சரி என்ற நூல், ஆதி சங்கரர் கி.மு. 477ல் அவதரித்தார் என்று சொல்கிறது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் நுழையாத  காலத்தில், மலையாள தேசத்தில் உதித்த ஆதி சங்கரர், மொழி பிரச்சனை இல்லாமல்,  குமரில பட்டருடன் பேசினார். 




பிறகு காஷ்மீர் சென்று அங்கு இருந்த காஷ்மீரி ப்ராம்மணரான மண்டல மிஸ்ரரை சந்தித்து வேதத்தின் ஞான மார்க்கத்தை பற்றி பேசினார் என்று பார்க்கிறோம்.

மொழி பிரச்சனை இல்லாத தேசமாக இருந்துள்ளது நம் தேசம். 

அதனால் வியாபாரிகள் எங்கு சென்றும் வியாபாரம் செய்துள்ளனர் என்றும் தெரிகிறது.

அன்று இருந்த ப்ராம்மணர்களை, அவர்கள் காப்பாற்றி வைத்து இருந்த பல சாஸ்திரங்களை கொளுத்தி, அவர்களை கொன்று, கோவிலை இடித்து சர்வ நாசம் செய்தனர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்.

947ADக்கு முன்,, நம்முடைய தேசத்துக்குள் நுழைவதற்கு முன், எந்த உருப்படியான கண்டுபிடிப்பும் செய்யாத இவர்கள், பல வேத சூத்திரங்களை (formula) அர்த்தம் தெரிந்து வாங்கி கொண்டு, சொல்லி கொடுத்த ப்ராம்மணர்களை கொன்று விடும் பழக்கம் கொண்டிருந்தனர்.


குதுப்மினார் என்ற ஸ்தூபத்தை சிற்ப சாஸ்திரம் தெரிந்த ஹிந்துக்களை வைத்து கட்டிய பிறகு, "இதே போல நீ வேறு எங்கும் கட்டி விட கூடாது" என்று சொல்லி, கட்டிய அனைத்து ஹிந்துக்களையும் கொன்று விட்டான் குதுப்தின் ஐபக்.


இதே போல, 

தாஜ் மஹால் கட்டிய போது, ஸாஜஹான், கட்டிய ஹிந்துக்களை கொல்ல உத்தரவிட்டான்.


இப்படி வேத ஒலியால் பல ஆச்சர்யங்களை, சாஸ்திரங்கள், மந்திரங்கள், சூத்திரங்கள் (formula) என்று வைத்து இருந்த க்ஷத்ரியர்கள், ப்ராம்மணர்கள், வைஸ்யர்கள் அழிக்கப்பட்டு, தமிழ்நாட்டை தவிர மீதம் உள்ள அனைத்து தேசத்திலும் இருந்த பல ரகசிய சூத்திரங்கள் கடத்தப்பட்டன. 



இந்த சூத்திரங்களால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மாளிகைகள், கோவில்கள் தரை மட்டம் ஆக்கப்பட்டன. 

அறிவோடு எவர் இருந்தாலும் உயிரோடு விடாமல், கொலை செய்யப்பட்டனர்.

அல்லது தனக்கு அடிமையாகவோ, தனக்கு வேலை செய்யவோ அமர்த்தி கொண்டனர்.


ஆச்சர்யம்...  

இந்தியாவை நோக்கியே பிச்சை எடுத்து வந்து உலக மக்கள், திடீரென்று செல்வந்தர்கள் ஆனார்கள். 

தேனையும், ரொட்டியையும், பஞ்சு துணியை சுற்றி கொண்டும், தொப்பி அணிந்து கொண்டும் அலைந்த உலக மக்கள், 

திடீரென்று தங்க வைர நகைகள், கிராம்பு, மிளகு, ஏலக்காய், சுவையான உணவு, அலங்காரம், நாகரீகம் என்று பேச ஆரம்பித்தனர்.





ஒரு உருப்படியான ஆராய்ச்சியும் செய்யாத இவர்கள், இந்தியாவில் கால் எடுத்து வைத்த பிறகு, 

"Flight" கண்டுபிடிக்கின்றனர்.

"உலகை அழிக்கும் அஸ்திரங்கள்" கண்டுபிடிக்கின்றனர்.

"உலகம் உருண்டை" என்று கண்டுபிடிக்கின்றனர்.

"செவ்வாய் கிரகம் சிவப்பு" என்று கண்டுபிடிக்கின்றனர்.

"வாரத்தில் ஏழு நாள் தான்" என்று ஒப்புக்கொண்டனர்.

"வருடம், மாதம் எல்லாம் ஒத்து கொள்ள" ஆரம்பித்தனர்.

ஒலி அலைகளின் மகத்துவத்தை உணர்ந்து ரேடியோ கண்டுபிடித்தனர்.

"ஒலி மூலமாக தகவல்களை பரிமாற்ற முடியும்" என்று கண்டுபிடித்தனர்.


அடடா..  என்ன கண்டுபிடிப்பு...


நம் தேசத்துக்குள் நுழைந்து நாசம் செய்த பிறகு, தாங்கள் கண்டுபிடித்து விட்டது போல காட்டி விட்டனர்.


'வெளிநாட்டவன் கண்டுபிடித்தான்' என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் இந்தியாவுக்குள் காலடி வைப்பதற்கு முன் என்ன கிழித்தார்கள்? என்று ஹிந்துக்கள் கேட்க வேண்டும்.


இன்று இந்தியர்கள் பல தேசங்களுக்கு சென்று சம்பாதிப்பது நடக்கிறது.

அன்று,

இந்தியாவை நோக்கியே உலகம் வந்தது. 


பிச்சை எடுப்பவன் தானே அடுத்தவன் ஊருக்கு செல்வான். நம்மை நோக்கியே அரேபிய குதிரைகளும், போர்சுகல், பிரெஞ்ச், இங்கிலாந்து பாவாடைகளும், ஏன் அன்று படை எடுத்தார்கள்?  என்று ஹிந்துக்கள் கேட்க வேண்டும். 


கோடீஸ்வரர்களாக இருந்த நம்மை அழிக்க, நமக்கு ஆதாரமாக இருந்த அறிவை (வேத சூத்திரங்களை) மொழி பெயர்த்து தெரிந்து கொண்டு, 

விஷயம் அறிந்தவர்களை கொன்று விட்டு, 

முடிந்தவரை கோவில்களை இடித்து, கொள்ளை அடித்து, 

ப்ராம்மணர்களை வேதம் படிக்க விடாமல், ஆராய்ச்சி செய்ய விடாமல் தடுக்க, தங்கள் வேலைக்கு பணி அமர்த்தி, அறிவை அழித்தனர். 


அறிவுக்கு ஆதாரமாக இருந்த வேத ஒலிகளை ஒழிக்க, ப்ராம்மணர்களை கொன்றனர்.


ஸாம வேதத்தில் 100க்கும் மேற்பட்ட சம்ஹிதைகள் இருந்துள்ளது.

இன்று,

வெறும் இரண்டே இரண்டு சம்ஹிதைகள் மட்டும் தான் உள்ளன.

அதிலும் ஜைமினி சம்ஹிதை அறிந்துள்ள வேதியர்கள் அழியும் நிலையில் உள்ளனர். 

அவர்களிடம் பேசி, அவர்களை பாதுகாத்து, அதில் ஆராய்ச்சி செய்ய ஆள் இல்லை.


ஜைமினி சம்ஹிதை கற்றுள்ள ப்ராம்மணர்கள், தங்கள் பிள்ளையை வேதம் கற்று கொள்ள வேண்டாம் என்று ABCD கற்று சம்பாதிக்கட்டும் என்று அனுப்பி விட்டனர்.


இதனால் ஹிந்துக்களுக்கு பெரும் நஷ்டம்..

வேத ஒலிகள் எப்படி ரிஷிகள் கேட்டார்களோ, 

அதே முறையில் வேத ஒலி எழும்பினால், ஆரோக்கியம் உண்டாகும், வெற்றி உண்டாகும், 

செல்வம் தானாக தேடி வரும். 

தெய்வங்களை ஆகர்ஷிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

இந்த பல ரகசியங்கள் அவர்களோடு அழிந்து போய் விடும்


அனைத்தையும் இழந்து விட்டால், மீண்டும் ஆராய்ச்சி செய்து செய்து தான் வாழ வேண்டி வரும்.


மழை வேண்டுமானால், அதற்கான வேத ஒலிகள் இன்றும் உள்ளது. 

சரியான உச்சரிப்பில் மழைக்கான வேத ஒலிகள் உச்சரிக்கப்படும் போது, அந்த ஒலி அலைகள், காற்றை உருவாக்கி, மழையை கொண்டு வந்து விடும்.

இன்றும் வருண ஜபம் செய்தே, மழையை கொண்டு வரும் வேதியர்கள் உள்ளனர்.

இவர்களை காக்க மறந்து விட்டால், அந்த வேத ஒலிகள் மறைந்து விடும்.


எழுதி படித்தால், அறிவு உண்டாகுமே தவிர, மழையை உருவாக்கும் படி எப்படி அந்த வேத ஒலிகள் ஒலிக்க வேண்டும்? என்று தெரியாமல் போய் விடும்.


பிறகு மழை வேண்டுமென்றால், அறிவியல் ஆராய்ச்சி மூலம் மழை வரவழைக்க, கோடிக்கணக்கில் செலவு செய்ய நேரும்.


1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரம்பிப்பால், ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டதால், வேத ஒலிகள் பல இழந்து விட்டோம். 

இருக்கும் சில வேத சம்ஹிதையையாவது காப்பாற்ற வேத ப்ராம்மணர்களை காக்க வேண்டும்.


ஒலி அலையை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.


சம்ஸ்க்ரித மொழியை அறிந்து கொண்டால், 120 கோடி மக்களில் குறைந்தது 100 பேராவது ஆராய்ச்சி செய்து தொலைந்து போன பல ரகசிய அஸ்திரங்கள், சிற்ப சாஸ்திரங்கள், தெய்வத்தை வரவழைக்கும் சாமர்த்தியம்  உண்டாகும்.