Followers

Search Here...

Sunday 17 April 2022

அஸூயை இல்லாதவர் ராமர். மாத்ஸர்யம் என்றால் பொறாமை. அஸூயை என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

 அஸூயை இல்லாத ராமபிரான்...

நமக்கு, சிலர் செய்யும் குற்றத்தை பார்த்து கோபம் வரும். 

அவர்கள் குற்றத்தை பார்த்த பிறகு, அவர்களிடம் உள்ள குணங்கள் கூட தோஷமாக தோன்றும்.

இதற்கு 'அஸூயை' என்று பெயர்.


ஒருவர் குற்றத்தை பார்த்த பிறகும், அவர்களிடம் உள்ள மற்ற குணங்கள் தோஷமாக பார்க்காமல் இருப்பதற்கு, 'அனஸூயை' என்று பெயர்.


'அஸூயை இல்லாதவர் ராமபிரான்' என்று தமிழ் முனிவரான வால்மீகி, 24 வயது ராமபிரானை பார்த்து  சொல்கிறார். 

स हि रूपोपपन्नश्च वीर्यवान् अनसूयकः |

भूमौ अनुपमः सूनुर्गुणै: दशरथोपमः || 

- வால்மீகி ராமாயணம்


ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து கிளம்பி, சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்கிறார்.


ராவணன் முதல் முறையாக ராமபிரானுடன் போர் செய்ய நேருக்கு நேர் வருகிறான்.

அன்று வரை, ராவணன் எந்த போரிலும் தோல்வியை பார்க்காதவன். மஹா வீரன்.

சீதாதேவியை கடத்தியது ராவணன் செய்த குற்றம். 

மற்றபடி, அவனும் மஹாவீரன் தான்.


இவன் செய்த ஒரு குற்றத்துக்காக, வீணாக இவன் வீரத்தை குற்றம் சொல்ல ஆசைப்படவில்லை ராமபிரான்.


முதல் முறை போர் புரிய வந்த ராவணனின் தேரை உடைத்து, கிரீடத்தை தட்டி, அவன் தேர் கொடியை உடைத்து தள்ள, யாரிடமும் இது வரை தோற்று அறியாத ராவணன், 38 வயது ராமபிரானிடம் தோற்றான். 


தன்னிடம் போர் புரிவதற்கு முன், ராவணன் சுக்ரீவனை, கவாக்ஷன், கவயன், ருஷபன், ஜ்யோதிமுகன், நபன், நீலன், ஹனுமான், லக்ஷ்மணன் அனைவரையும் கீழே விழ செய்து, கடைசியாக ராமபிரானிடம் போர் புரிய வந்தான்.


இவர்கள் அனைவரையும் தோற்கடித்த வீரன் என்பதால், ராமபிரான் தோற்று நிற்கும் ராவணனை பார்த்து,

"ராவணா! நீ பெரிய காரியத்தை செய்துள்ளாய். மஹாபலம் கொண்ட என் சேனையை எதிர்த்து வென்றுள்ளாய்.

பலருடன் போர் செய்ததால் நீ தோற்று இருக்கலாம். அதனால் உன்னை இன்று யமலோகம் அனுப்ப நான் நினைக்கவில்லை" என்று அஸூயையே இல்லாமல் சொல்கிறார்.

कृतं त्वया कर्म महत् सुभीमं

हतप्रवीरश्च कृतस्त्वयाऽहम् ।

तस्मात्परिश्रान्त इव व्यवस्य

न त्वां शरैर्मृत्युवशं नयामि ॥ 

- வால்மீகி ராமாயணம்

பெரும் அவமானத்தோடு திரும்பி நடந்து செல்கிறான் ராவணன்.

இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, அஸூயை கொண்டு, அவன் வீரத்தையும் கேலி செய்து, "பேடி ராவணா! நான் இல்லாத போது சீதாதேவியை கடத்தினாயே? நீயெல்லாம் ஒரு வீரனா?" என்று அவன் வீரத்தை குறையாக சொல்லி இருப்பான்.


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனிடம் உள்ள மற்ற நல்ல குணங்களையோ, திறமையையோ கேலியாகவோ, தோஷமாகவோ பேசவே இல்லை.


'ஒருவரிடம் உள்ள குற்றத்துக்காக, அவரிடம் உள்ள நல்ல குணத்தையும் தோஷமாக சொல்வது' - அஸூயை.


இந்த அஸூயையே இல்லாதவர் ராமபிரான் என்று வால்மீகி சொல்கிறார். 

மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்புகள் கொண்ட ராமபிரானை வணங்காமல் இருக்கமுடியாது.


What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.

Friday 15 April 2022

கள்ளழகர்... வைகை ஆற்றங்கரை வர காரணம்.... என்ன?

தன் பக்தர்களை பார்க்க, அவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள, புது புது பக்தர்களை உருவாக்க, மோக்ஷம் கொடுக்க, பக்தனிடம் தனக்கு இருக்கும் அன்பை காட்ட வருகிறார் கள்ளழகபெருமாள்...

ராம அவதாரம் செய்த பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் அரண்மனையை விட்டு விட்டு, 

ஆடை அலங்காரத்தை மாற்றி கொண்டு,  

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக லக்ஷ்மணனையும் சேர்த்து கொண்டு, 

தனக்காக காத்து கிடக்கும் பல ரிஷிகள், சபரி ஆஸ்ரமத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பழங்கள், கிழங்குகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்தினார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களான ஹனுமான், சுக்ரீவன், விபீஷணன் போன்றவர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி

மேலும் கோடிக்கணக்கான வானரர்கள், ராக்ஷஸர்கள், அணில் உட்பட பலரை தன் பக்தனாக்கி, 

உறவுகளால் விரட்டப்பட்ட தர்மாத்மாவான விபீஷணனுக்கு இலங்கையையே கொடுத்து, சகோதரனால் விரட்டப்பட்ட சுக்ரீவனுக்கு அவன் மனைவியோடு ராஜ்யத்தையும் கொடுத்து, 

ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அயோத்திக்கு திரும்பினார்.


ராம அவதாரம் செய்த போது தான் பெருமாள் இப்படி செய்தார் என்று நினைக்க கூடாது.


பெருமாள், இன்றும் மதுரையில், ஒவ்வொரு வருடமும் இந்த ஆச்சர்யமான நிகழ்வை செய்து காட்டுகிறார்.


கள்ளழகராக வீற்று இருக்கும் பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் கோவிலை விட்டு விட்டு, 

கையில் சாட்டை, கோடாலியோடு அலங்காரம் செய்து கொண்டு, 

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக பல போலீஸை சேர்த்து கொண்டு, 

தனக்காக மண்டகபடியில் காத்து கிடக்கும் பல பக்தர்களின் மண்டபத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பொங்கல் பழங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்துகிறார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி, 

மேலும் கோடிக்கணக்கான வெளியூர், வெளிநாட்டவர்களை தன் பக்தனாக்கி

உறவுகளால் விரட்டப்பட்டவர்கள், சகோதரனால் விரட்டப்பட்டவர்கள், ஏழைகள் என்று அனைவருக்கும் சுகமான வாழ்வு கிடைக்க அணுகிரஹம் செய்து

மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அழகர்மலைக்கு திரும்புகிறார்.


கள்ளழகருக்கு காவல் புரிபவர்கள் தன்னை லக்ஷ்மணன் போலவும்,

அவருக்காக மண்டகப்படியில் காத்து இருந்து வரவேற்பவர்கள், தங்களை ரிஷிகள் போலவும்,

அவருக்கு போகும் வழியில் சேவை செய்பவர்கள், தங்களை பலம்வாய்ந்த வானர சேனை போலவும்,

ஏதோ முடிந்தவரை சேவை செய்பவர்கள், தங்களை ராமபிரானுக்கு சேவை செய்த அணில் போலவும்,

துக்கத்தில் இருந்து பெருமாளை பார்ப்பவர்கள், தங்களை சுக்ரீவன் போலவும், விபீஷணன் போலவும், நினைக்கும் போது, கள்ளழகரை ராமராக தரிசிப்போம். 

Saturday 2 April 2022

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார். வைஷ்ணவர்கள் தினமும் உச்சரிக்கும் நாமங்கள் - சிவ, மஹேஸ்வர, மஹாதேவ, தேவேஸ (தேவ ஈஸ்வர)

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார்...

"மங்களம், பத்ரம், கல்யாணம், சுபம், பிரசன்னம், நிர்மலம்" என்ற அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் "சிவ". சமஸ்கரித நிகண்டு (dictionary) இந்த அர்த்தத்தை விளக்குகிறது.

"தன்மே மன: சிவ ஸங்கல்பமஸ்து"
என்னுடைய மனது கண்ட கண்ட சிந்தனைகள் கொள்ளாமல், நிர்மலமாக மங்களமாக ஆகட்டும்! என்று யஜுர் வேதத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் அடுத்த தெருவில், காஞ்சி மடாதிபதியாக போதேந்திராள் இருந்தார். ராம நாமத்தை பிரச்சாரம் செய்தார்.

பகவந் நாம போதேந்திராள் "ராம" நாமத்தை உலகம் முழுக்க சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், அருகிலேயே இருக்கும் ஸ்ரீதர ஐயாவாள் "சிவ சிவ சிவ சிவ..' என்று சொல்வார்.

இருவரும் மகாத்மாக்கள். ஸ்ரீதர ஐயாவாள் சாக்ஷாத் சிவபெருமான் அம்சம் என்றே சொல்வார்கள்.

ராம நாமத்தின் மகிமை தெரியாதவரில்லை ஸ்ரீதர ஐயாவாள்.
அவரிடம் கேட்டால், வாயை திறந்தால் "சிவ சிவ" என்று தான் வருகிறது என்றாராம்.

'பகவானுடைய நாம உபதேசம்' பெறுவதாக தான் சாதாரண ஜனங்கள் நினைப்பார்கள்.
பகவன் நாமம் தான் உண்மையில் நம்மை பிடிக்கிறது.

சிலரை, "ராம" நாமம் பிடிக்கிறது.
சிலரை "சிவ" நாமம் பிடிக்கிறது.
சிலரை "திருவஷ்டாக்ஷரம்" பிடிக்கிறது.

மங்களாமான அந்த பரமாத்மாவை தியானத்து கொண்டே ஸ்ரீதர ஐயாவாள் ஒரு சமயம் "சிவ சிவ..' என்று சொல்ல, சிவபெருமானுக்கு பதிலாக "ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக புல்லாங்குழல் வைத்து கொண்டு" தரிசனம் கொடுத்து விட்டார்.

சொன்னதோ சிவ நாமம், தரிசனமோ கிருஷ்ண தரிசனம்..

சிவ சிவ என்று சொன்னதற்கு விஷ்ணு வந்தாரே! எப்படி?

மங்களமானவர், பிரசன்னமானவர் விஷ்ணு என்பதால், விஷ்ணுவுக்கும் "சிவ" என்று பெயர் உண்டு.

ஆயிரம் விஷ்ணு நாமத்தில், விஷ்ணுவுக்கு "சிவ" என்று பெயரும் உண்டு.

விஷ்ணு பக்தனும், மங்களமான விஷ்ணுவை "சிவ சிவ" என்றே ஜபிக்கிறான்..

அநிவர்தீ நிவ்ருத்தாத்மா
ஸம்-க்ஷேப்தா க்ஷேம-க்ருத் சிவ: |
ஸ்ரீவத்ஸ-வஷா: ஸ்ரீவாஸ:
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்-வர: ||

விஷ்ணு சஹஸ்ரநாமமும் அர்த்தமும்

Friday 1 April 2022

அன்று ப்ராம்மணர்கள் வேதம் படித்தீர்கள்? சூத்திரனுக்கு (employee) என்ன படிக்க கொடுத்தீர்கள்? படிக்க விட்டீர்களா? பெரியார் வந்ததால் தானே இன்று படிக்கிறோம்

அன்று ப்ராம்மணர்கள் வேதம் படித்தீர்கள்? சூத்திரனுக்கு (employee) என்ன படிக்க கொடுத்தீர்கள்? படிக்க விட்டீர்களா?  பெரியார் வந்ததால் தானே இன்று படிக்கிறோம்.

அன்று, பிராம்மணர்கள் 

4 வேதங்கள், அதனுடைய உபநிஷத்துக்கள், 

4 உப வேதங்கள், 6 சாஸ்திரங்கள்,

ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள்,  புராணங்கள், 

8 வேதாந்த சித்தாத்தங்கள், 

64 கலைகள் படித்தார்கள், 

படித்தார்களே தவிர, அதில் கிடைக்கும் பயனை மற்றவர்களுக்கு தான் கொடுத்தார்கள்..

64 கலைகளில் கோவில் சிற்பம் வடிப்பது ஒரு கலை. அதை செய்தது சூத்திரன் (empoyee) தானே?

அரசர்கள் தானே அஸ்திரங்கள், சஸ்திரங்கள் பயன்படுத்தினர்? 

அன்று வைத்தியம் செய்தவர்கள் பிராம்மணர்கள் இல்லையே? 

பெரிய பெரிய மாளிகைகள் அமைத்தது பிராம்மணன் இல்லையே? 

க்ஷத்திரியர்கள், உபநிஷத்தில் சொல்லப்படும் தனுர் வேதத்தை (Army/weaponry) ப்ராம்மணர்களிடம் கற்று கொண்டனர்.


சூத்திரனும், வைஸ்யர்களும் உபநிஷத்தில் சொல்லப்படும் ஆயுர்வேதம் (medicine), ஸ்தாபத்யம் (engineering), காந்தர்வ வேதத்தை (music) ப்ராம்மணர்களிடம் கற்று கொண்டனர்.

அது மட்டுமா, 

கீழே சொல்லப்பட்ட அனைத்தும் ப்ராம்மணர்களிடம் கற்றுக்கொண்டனர்.  


பணம் சம்பாதிக்கும் வழி அனைத்தையும், தொழில்களையும் மற்ற அனைவருக்கும் சொல்லிக்கொடுத்த பிராம்மணர்கள் தனக்கென்று புருஷ சூக்தம், ஸ்ரீ ருத்ரம் என்று தெய்வத்தை பற்றி பாடும் வேத மந்திரங்களை மட்டும் வைத்து கொண்டனர். 

அன்று சுயநலம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்த ப்ராம்மணர்களை, நன்றி உணர்ச்சியுடன் மற்றவர்கள் பொருள் உதவி செய்து  காப்பாற்றினார்கள்.

பிராம்மணன் தொழில் திறன் இருந்தும், அஸ்திர சஸ்திர அறிவு இருந்தும் பிறர் தொழில் செய்ய வழி விட்டு,  தினமும் யாசகம் செய்து வாழ்ந்தான்.

இதனால், பிராம்மணர்கள் மற்றவர்களால் காப்பாற்றப்பட்டனர். 


1000 வருட இஸ்லாமிய, மற்றும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், செல்வம் கொழித்த பாரத மண்ணில் கோவிலை தாக்கிய  இவர்கள்,கோவிலில் இருந்த ப்ராம்மணர்களை முதலில் கொன்று  குவித்தனர். 

கோவில்களை இடித்தனர். தங்கள் ஸ்தூபங்களை கட்டினர். பொது மக்களை கொன்று குவித்தனர். ஊரில் உள்ள பெண்களின் மானத்தை அழித்தனர். எதிர்த்த பொது மக்களை தலை சீவினர். பயந்த பொது மக்களை மதம் மாற்றினர். பெண்களை கர்ப்பமாக்கி தன் மதத்துக்கு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை உருவாக்கி, பாரத மக்களாக வாழ்ந்த நமக்குள்ளே மத வேறுபாட்டை விதைத்து சண்டையிட வைத்தனர். 

பாரத மண்ணில் இருந்த க்ஷத்ரிய அரசர்களை நேரில் எதிர்த்தால் தோற்க வேண்டி இருக்கிறது என்றதும், சமயம் பார்த்து, இரவு நேரத்தில் திடீரென்று ஊரில் புகுந்து பொது மக்களை, கோவிலை பிடித்து அரசர்களை கீழ் படிய வைத்து, பிறகு தலை சீவி நாட்டை மெது மெதுவாக பிடித்தனர். 

க்ஷத்ரிய அரசர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்ட போது, வைஸ்யர்களும், சூத்திரர்களும் அனாதை  ஆகினர்.

தங்களை காத்து கொள்ள முடியாத  நிலையில், பிராம்மணர்கள் கைவிட பட்டனர். 


முகம்மது பின் துக்ளக் - கடுமையான வரியை ஹிந்துக்களுக்கு விதித்து, மதம் மாற சம்மதித்த பாரத மக்களுக்கு வரி சலுகை செய்து ஆட்சி செய்தான்.

அப்பொழுது, தங்கத்தில் நாணயம் வைப்பதை காட்டிலும், செம்பு நாணயம் செய்தால் எளிதாக இருக்கும் நினைத்து நாணயத்தை மாற்றினான்.

அப்பொழுது பாரத நாட்டில் இருந்த அனைத்து ஹிந்துக்களும் தாங்களே செம்பு நாணயம் செய்து விட்டனர். இதனால், பெரும் குழப்பம் ஏற்பட, துக்ளக் மீண்டும் தங்கத்துக்கே நாணயத்தை மாற்றினான் என்று பார்க்கிறோம்.


64 கலைகளும் சர்வ சாதாரணமாக ஹிந்துக்கள் தெரிந்து வைத்து இருந்தனர் என்பது இந்த ஒரு நிகழ்விலேயே  தெரிகிறது.


இத்தனை கலைகளும் கற்ற சூத்திரர்கள், வைசியர்கள், தாங்கள் கற்ற கலைகளை முடிந்த அளவு 1800 வரை  காத்தனர்.  கிறிஸ்தவ ஆட்சி பாரதம் முழுவதும் ஏற்பட்டதும், இதுவும் நசுக்கப்பட்டு, பாரத மக்கள் அனைவரும் ஏழையாக்கப்பட்டனர். 

இந்த உண்மையை உணரும் போது, தான் சூத்திரர்களும், வைஸ்யர்களும் எத்தனை படித்து இருந்தார்கள் என்பது நமக்கு புரியும்.


இதோ சூத்திரனும், வைஸ்யர்களும் கற்று கொண்டவைகள்:

இசை, வாத்யம், ந்ருத்தம், நாட்டியம், ஆலேக்யம், விசேஷ கச்சேத்யம், தண்டுல குஸுமபலி விகாரா, புஷ்பா ஸ்தரணம், தசன வஸனாங்கராகா, மணி பூமிகாகர்ம, சயன ரசனம், உதக வாத்யம் உதககாத, சித்ர யோகா, மால்யக் ரதன விகல்பா, சேகரா பீட யோஜனம், நேபத்ய யோகா, கர்ணபத்ர பங்க, ஸுகந்த யுக்தி, பூஷண யோஜனம், இந்த்ர ஜாலம், கௌதுமார யோகா, ஹஸ்தலா கவம், விசித்ர சாகா பூப பக்ஷ்ய க்ரியா, பானக ரஸ ராகா ஸவ யோஜனம், ஸூசீவாயக கர்ம, ஸூத்ர க்ரீடா, வாத்ய க்ரியா, ப்ரஹேலிகா, ப்ரதிமாலா, துர்வசன யோகா, புஸ்தக வாசனம், நாடகாக் யாயிகா தர்சனம், காவ்ய ஸமஸ்யா பூரணம், பட்டிகா வேத்ர பாணி விகல்பா, தர்க்க கர்மாணி, தக்ஷணம், வாஸ்து வித்யா, ரத்ன பரீஷா, தாது வாத, மணி ராக ஞானம், ஆகார ஞானம், வ்ருஷ ஆயுர்வேத யோகா, மேஷ குக்குடலாவ யுத்த விதி, சுக ஸாரிகா பிரலாபனம், உத் ஸாதனம், கேச மார்ஜன கோசலம், அக்ஷர முஷ்டி காகதனம், தாரண-மாத்ருகா, தேச பாஷா ஞானம், நிர்மிதி ஞானா, யந்த்ர மாத்ருகா, மிலேச்ச பாஷை / மிலேச்ச குதர்க்கம், ஸம் வாச்யம், மானஸ காவ்ய க்ரியா, க்ரியா விகல்பர், ச்சலித யோகா, அபிதான கோச சந்தோ ஞானம், வஸ்த்ர கோபனம், த்யூத விசேஷா, ஆகர்ஷ க்ரீடா, பால க்ரீடா, நௌகா நிர்மாண கலா, புஷ்பச கடிகா நிர்மாணம், விமான நிர்மாண கலா

சாந்தீபிணி என்ற ப்ராம்மணர், குசேலன் என்ற ப்ராம்மணனுக்கும், இடையனான ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அனைத்தையும் சொல்லி கொடுத்தார்.


குசேலன் ஏழையாக வாழ்ந்தாலும், தொழில் செய்ய திறன் இருந்தும், தெய்வத்தை பற்றி சொல்லும் வேதத்தை மட்டுமே ஓதி வந்தார். 


'சூத்திரன் அடிமுட்டாளாக இருந்தார்கள்' என்று உளறி, 1000 வருடத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில் கற்ற கல்வியை இழந்தனர் என்பதை மறைப்பதற்காக, அனைத்தையும் கற்று கொடுத்த ப்ராம்மண சமுதாயத்தை பழிப்பது, முட்டாள்தனம்.


அன்று, அனைத்து கலைகளும் தெரிந்தவர்களாக அனைவருமே இருந்தார்கள்


 

மேலும் இந்த கலைகளை பற்றி அறிய ..   இங்கே படிக்கவும் 

x

Monday 28 March 2022

அன்று சூத்திரனை (emoloyee) படிக்க விட்டீர்களா?.. ப்ராம்மணர்கள் தானே வேலைக்கு சென்றீர்கள்?....

அன்று சூத்திரனை (emoloyee) படிக்க விட்டீர்களா?.. ப்ராம்மணர்கள் தானே வேலைக்கு சென்றீர்கள்?..

வேதத்தில் தனுர் வேதம் க்ஷத்ரியன் கற்றான்..

வேதத்தில் ஆயுர் வேதம் வைசியன் கற்றான்.

வேதத்தில் ஆயுர்வேதம் (medicine), ஸ்தாபத்யம் (engineering), காந்தர்வ வேதம் (music), தனுர் வேதம்(Army/weaponry), இசை, வாத்தியம், நாட்டியம், ந்ருத்தம், ஆலேக்யம்,  விசேஷ கச்சேத்யம், சயன ரசனம் என்று பல தொழில் கல்வியை அனைவரும் கற்றார்கள்.


அனைவரும் பூணூவ் அணிந்து இருந்தார்கள்.


பிராம்மணன் சம்பாதிக்க இயலாத 'தெய்வத்தை பற்றி சொல்லும் வேதம் மந்திரத்தை மட்டும்' தனக்கு வைத்து கொண்டு, அனைத்தையும் பிறருக்கு சொல்லி கொடுத்து சம்பாதிக்க சொல்லி கொடுத்தான். 

தான் தெய்வத்தை பற்றி சொல்லும் வேத மந்திரத்தை மட்டும் காப்பாற்றி வந்தான். 

இதனால், 

மற்ற அனைவரும் ப்ராம்மணனை காப்பாற்றினர், உதவினர்.   

தொழில் தெரிந்தும் செய்யாமல் இருந்தான் பிராம்மணன். 


'ஒரு வகுப்பினர் செய்யும் தொழிலை மற்ற வகுப்பினர் தெரிந்தாலும் செய்ய கூடாது' என்று க்ஷத்ரியன் கட்டுப்பாடு விதித்தான். இதன்மூலம் அவரவர்களுக்கு வேலை நிச்சயமாக கிடைத்தது. 

நொண்டியும் வாழ முடிந்தது.



1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரம்பிப்பில் கோவில்கள் கொள்ளையடிக்க பட, அதை காத்த அரசர்கள் கொல்லப்பட்டு, கோவிலில் வேதம் ஓதி கொண்டிருந்த பிராம்மணனும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

மற்ற சிற்ப சாஸ்திரம், ஆயுர்வேதம் தெரிந்த பாரத மக்கள், அரசன் இல்லாமல் ஏழையாகினர். இவர்களால் பிராமணனை காக்க முடியவில்லை. 

யாராலும் காப்பாற்ற முடியாதவனாக ஆகி ஏழையானான் பிராம்மணன். இருந்தும் தெய்வத்தை பற்றிய வேத மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தான்.

மற்றவர்கள் 1947 வரை அவர்கள் கற்ற தொழிலை செய்து வந்தனர். 


1800ல் கிறிஸ்தவன் 'பிராம்மணன் பொய் சொல்ல பயப்படுவான்' என்று தெரிந்து, அவன் நிர்வாகத்துக்கு வேலை செய்ய இழுத்தான்.. 

மற்றவர்களை வேலைக்கு சேர்க்கவில்லையா?


போலீஸாகவும், அவர்கள் வீட்டில் பணியாட்களாகவும் அனைவரும் வேலை பார்த்தனர்.

வஉசியை ஜெயிலில் தள்ளியது கிறிஸ்தவன் தான் என்றாலும், அவனுக்கு கீழ் வேலை பார்த்த ஹிந்து போலீஸ் தானே அவரை ஜெயிலில் தள்ளினார்கள்.

பிராம்மணன் மட்டுமா வேலை செய்தான் அப்போது? சுதந்திர போராட்ட தியாகிகளை சிறைப்படுத்திய மற்ற இந்தியர்களும் வேலை தானே செய்தார்கள் !  

வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட கிறித்தவன் சொன்ன போது, தலை அசைத்து செய்தவன் பாரத மண்ணில் பிறந்தவன் தானே.

உதவி செய்ய ஆள் இன்றி இருந்த பிராம்மணன் மெதுவாக வேலை செய்து தன்னை காத்து கொள்ள ஆரம்பித்தான்.

பாரதியார், வாஞ்சி நாதன் போன்றவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று இருந்தனர். 


1947ல் விடுதலை கிடைத்த போது, அனைவருக்கும் வேலை கிடைக்க சட்டம் இயற்றப்பட்டது. 

ராஜாஜி, நேரு போன்ற ப்ராம்மணர்கள் எதிர்க்கவில்லை. 


'குல தொழிலை விடாதீர்கள்' என்று சொன்னார் ராஜாஜி. எதிர்த்தார்கள் தமிழகத்தில் இருந்த பெரியார் ராமசாமி. 

'சரி' என்று விட்டு விட்டார்.





'பிராம்மணன் மட்டும் வேலைக்கு செல்கிறான்' என்று சொல்லி, 'நமக்கு வேலை கொடுக்கவில்லை' என்று நாட்டை விட்டு போன கிறிஸ்தவனை எதிர்க்காமல், வேலை செய்த பிராம்மணன் மேல் பழியை போட்டனர் இந்த முட்டாளாகள். 


குல தொழிலை விட்டு விட்டு, 'அனைவருக்கும் கல்வி' என்றதும், அனைவரும் தன் தொழிலை விட்டனர். 

பிராம்மணன் தான் காத்து வந்த வேதத்தையும் விட்டான். 


சிற்ப சாஸ்திரம், ஆயுர் வேதம், வான சாஸ்திரம் என்று கற்று இருந்த மற்ற ஜாதியினர் தங்கள் தொழிலை விட்டனர். 

64 கலைகளும் அழியும் படி குல தொழிலை விட்டனர்.

அனைவரும் 1லிருந்து 12 வரை ஒரே கல்வியை படித்தனர். 

வேலை இல்லா திண்டாட்டம் அதிகமானது. 


சுயதொழில் செய்து கஞ்சியானாலும் குடும்பத்தோடு குடித்து நிம்மதியாக வாழ்ந்த மக்கள், கிராமங்களை விட்டனர். குடும்பத்தை விட்டனர். சொந்தங்களை விட்டனர். விவசாயத்தை விட்டனர். கோவிலை விட்டனர். 

வேலை தேடினர். 



தானாக வாழ தெரிந்த, சுய காலில் நிற்க தெரிந்த பாரத மக்கள், 'வேலை யார் கொடுப்பார்கள்?' என்று பார்க்கும் நிலையை அடைந்தனர். 

சொந்த ஊரை காலி செய்தனர். நாடோடி வாழ்க்கையை ஏற்றனர். அடையாளம் இழந்தனர். 


நாடோடி வாழ்க்கையையும் வெறுத்தனர். குடும்பம் இல்லாமல் அலைந்தனர். 

பலருக்கு திருமணம் ஆகாமல் தனித்து நின்றனர்.

திருமணம் ஆனாலும் தன் காலில் நிற்க தொழில் திறன் இல்லாததால், எதிர்கால பயம் கொண்டனர்.

'எப்பொழுது வேலை போகுமோ?' என்று பயந்தனர்.


கிடைத்த வேலையில் 'எப்படியாவது கோடி சம்பாதிக்க வழி என்ன?' என்று தேடினர். 

தவறான வேலை என்றாலும் துணிந்து பணத்துக்காக செய்தனர்.

வேலை கொடுப்பவன் வருமானத்தை கண்டு பொறாமை கொண்டனர். விசுவாசம் இன்றி உழைத்தனர். 


10 கோடி மக்களில் 4 கோடி மக்கள் சுயதொழில் செய்த காலம் போய், 

10 கோடி பேரில் 5 பேர் தொழில் செய்கின்றனர் இப்போது.


தொழிலார்கள் இவர்களிடம் விசுவாசம் இன்றி பணத்துக்காக உழைக்க, தொழில் செய்பவனும் கசக்கி பிழிய ஆரம்பித்தனர்.

மனைவி ஒரு ஊரில் வேலை. கணவன் ஒரு ஊரில் வேலை. மனைவி பகலில் வேலை. கணவன் இரவில் வேலை. 

தாய் தகப்பன் அனாதை ஆஸ்ரமத்தில். 

பிள்ளை தருதலை. பாசம் தொலைத்த குடும்பங்கள். கொஞ்சம் அசந்தால் விவாகரத்து. 

நோய், முதுமை.. மரணம்.


தமிழன் டெல்லியில் வேலை செய்ய ஆரம்பித்தான். அவன் பிள்ளை அங்கேயே வளர்ந்தான். அவன் பிள்ளை தமிழனா? டெல்லி காரனா? யார் சொல்வார்கள்.

அடையாளம் இழந்தனர்.


இன்று இன்னும் போய், வெளிநாட்டில் வசிக்கிறான். அவன் பிள்ளை 'இந்தியாவே வர மாட்டேன்' என்கிறான். இப்போது யார் தமிழன்?.


'குல தொழில் செய்தால் அவமானம். நான் என்ன செருப்பு தொழில் செய்ய வேண்டுமா? 12ம் கிளாஸ் படிப்பேன். இன்ஜினியர் ஆகுவேன்" 

என்று கிளம்பி, ஒரு முட்டாள் மூத்திரசட்டி சொல்லை நம்பி, அனைவரும் 12ம் வகுப்பு வரை வேறு தொழில் செய்யாமல் படிக்க ஆரம்பித்தனர். 

"செருப்பு தெய்ப்பது என் குல தொழிலா?" என்று மறுத்தான்.. 


அவன் தொழிலை மற்றவன் கற்று கொண்டு பெரிய செருப்பு தொழிற்சாலை அமைத்து, அவனையே தன் கடையில் வேலைகாரனாக அமர்த்தி விட்டான்.


"கோவிலில் பூஜை செய்து மற்றவன் போடும் காசை தட்டில் நான் ஏன் வாங்க வேண்டும்? நானும் இந்த பிரிட்டிஷ் கல்விமுறையை படிக்கிறேன். கூகுல் தலைவன் ஆகிறேன். விமான நிறுவனத்துக்கு தலைவன் ஆகிறேன்" என்று ப்ராம்மணனும் கோவிலை விட்டான். அக்ரஹாரத்தை விட்டான்.


அன்னார்ந்து பார்க்கும் கோவிலை கட்டிய சிற்பி குடும்பத்தில் பிறந்தவன் இன்று 120 கோடி மக்களோடு சண்டை போட்டு வேலை தேடுகிறான்.

சீனாகாரன் சிற்பங்கள் செய்து, அவனுக்கே விற்கிறான். 

இந்த முட்டாள்தனத்துக்கு வித்து பெரியார் ராமசாமி.. 


ராஜாஜி என்ற பிராம்மணன் செய்த ஒரே தவறு, முட்டாளுக்கு மரியாதை கொடுத்து, அவரவர் குல தொழிலை சுதந்திர இந்தியாவில் செய்ய  வழி வகுக்காததே..  


சுதந்திர இந்தியாவில் அன்று இருந்த மக்கள் தங்கள் குல தொழிலை செய்து கொண்டே பிரிட்டிஷ் கல்விமுறையை படித்து இருந்தால், இன்று ஒவ்வொரு பாரத மக்களும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டே கோடிக்கணக்கான சுயவியாபாரம் செய்து, தன்னிறைவு பெற்ற தேசமாக ஆக்கி இருப்பார்கள்.

இன்றோ, 

மோட்டார் ரிப்பேர் செய்ய ஆள் இல்லை, விவசாயம் செய்ய ஆள் இல்லை. மாடு வளர்த்து பால் கறக்க ஆள் இல்லை. 120 கோடி மக்கள் இருந்தும், வேலை தெரிந்தவர்கள், வேலை செய்பவர்கள் இல்லை.


தமிழ் படிக்க ஆளில்லை. 

'தமில்' என்று பேசுபவன் தமிழனுக்கு தலைவன் ஆகிறான்.


திருக்குறள், திருவாசகம், கம்பராமாயணம் கொடுத்து 'அர்த்தம் சொல்' என்றால், 'கோனார் உரை கொடு' என்கிறான் இன்றைய தமிழன்.


தமிழ் உணர்வு மட்டும் கொண்டு இருக்கிறான். தமிழ் மொழி தெரியாதவனாக இருக்கிறான். 


தனக்கே திருக்குறளுக்கு கோனார் உரை வேண்டும் என்கிற நிலையில் இருந்து கொண்டு, பார்லிமென்டில் "தமிழ் படியுங்கள்" என்கிறான்.


பிராமணன் 'கிறித்தவ காலத்தில் வேலை செய்தான்' என்று பொறாமைப்பட்டு, அன்று அடிமை பாரதத்தில் சுய காலில் நின்ற சகோதரன், மூத்திர சட்டியினால் இழுக்கப்பட்டு, அருமையாக செய்து கொண்டிருந்த சுய தொழிலை விட்டு, வேலைக்கு நாயாக அலைகிறான். 


பெற்றவர்களை விட்டு விட்டு பணத்திற்காக எதுவும் செய்ய துணிந்து, வழிபட்ட தெய்வதையே விட்டு விட்டு மதம் மாறி கிடக்கிறான். 


தொழில் செய்ய தெரியாமல், லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தும், ஒன்றுமே புரியாமல், 'அரசாங்கமே வேலை கொடு' என்று நிற்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.


'படிப்பு வரவில்லையா? சினிமாவில் சேர்வோம். ஆடி பாடி பணம் சம்பாதிப்போம்' என்று ஆணும் பெண்ணும் கோமாளி ஆகி விட்டனர். பெண்கள் கலைத்துறையில் மானத்தை இழக்கின்றனர்.


படிப்பே வராமல் சினிமாவுக்குள் நுழைந்து பணம் சம்பாதித்தவன், "நீ இந்த 120 கோடி மக்களோடு படி. படித்து விட்டு வேலைக்கு நில்" என்று அறிவுரை கூறுகிறான்.

அதுவும் வரவில்லையா...  நெறியாளர், சமூக நீதியாளர் என்று சோறு கிடைக்க என்ன செய்தாலும் சரி என்று ஆகி விட்டனர்.


"சுய தொழில் செய்யுங்கள்" என்று சொல்லி இருந்தால், பிராம்மணன் கோவிலோடு இருந்து இருப்பான். 

இன்று பிராம்மணன் உலகம் முழுவதும் வேலை செய்கிறான். அரசியலுக்கும் வருகிறான்.  

அவன் இழந்த வேத மந்திரங்களை அவனே மீட்டு கொண்டு விட்டான். 

ஆனால், 

மூத்திர சட்டியின் பேச்சை கேட்டு உலகம் வியக்கும் சிற்ப சாஸ்திரம் கற்ற சகோதரன், வான சாஸ்திரம், தனுர் வேதம் கற்ற சகோதரன், இந்த 64 கலைகள் கொண்ட கல்வியை தொலைத்து விட்டு, 'வேதம் சொல்லிக்கொடுத்தாயா?' என்று உளறுகிறான்.


'புருஷ சூக்தம்' என்ற வேதம் படித்தால் 'பரமாத்மா யார்?' என்று தான் தெரியும். 

சிற்ப சாஸ்திரம் கற்றால் பணமும் கிடைக்கும்.


பணம் கொடுக்கும், சுயதொழில் சொல்லிக்கொடுத்த வேதத்தை  விட்டு விட்டு, புருஷ சூக்தம் என்ற வேதம் படிக்கும் சில பிராம்மணன் மீது இன்று பொறாமைப்படுகிறான். இவன் என்ன பைத்தியமா?


தெய்வத்தை பற்றி சொல்லும் வேத மந்திரங்களை சொல்லி வரும் பிராம்மணன் சம்பாதிக்க இன்றும் இயலாது. 

அவனை இன்றும் மற்றவர்கள் தான் பணம் கொடுத்து காக்கின்றனர்.


தொழில் சொல்லித்தரும் வேதத்தை விட்டு, தான் படித்தது என்ன? பிராம்மணன் வைத்து இருப்பது என்ன? என்றே தெரியாமல், 'வேதம் எங்களுக்கு கிடையாதா?' என்று உளறுகிறான்.


அற்புதமான கோவில் சிற்பங்களை வடிக்க சொன்ன வேத மந்திரங்களை தொலைத்ததற்கு வருத்தப்படாமல், சம்பந்தமே இல்லாமல் பிராம்மணன் மீது பொறாமைப்படுகிறான்.


சுய தொழில் செய்து வந்த பாரத மக்களை, வேலைக்கு அலைய விட்ட மூத்திர சட்டியை ஓரமாக வைத்து விட்டால், சுய தொழில் பெருகும். 


தானாக மக்கள் குடும்பத்தோடு நிம்மதியாக வாழ ஆரம்பிப்பார்கள்.