Followers

Search Here...

Friday 24 March 2023

ஜனமேஜெயன் செய்த சர்ப யாகத்தில், உயிர் விட்ட சர்ப்பங்களின் பெயர்கள் என்னென்ன? அறிவோம் மஹாபாரதம்....

ஸூத பௌரானிகரிடம், "ஜனமேஜெயன் செய்த சர்ப யாகத்தில் விழுந்து, உயிர் விட்ட சர்ப்பங்களின் பெயர்களை சொல்லுமாறு" கேட்டார் சௌனகர்.

எண்ணிலடங்காத அளவுக்கு கோடிக்கணக்கான சர்ப்பங்கள் அக்னியில் விழுந்து உயிர் விட்டன.

அனைத்து சர்ப்பங்களின் பெயர்களையும் சொல்வது இயலாது என்பதால், அதில் குறிப்பாக சிலவற்றை பௌரானிகர் சொல்ல ஆரம்பிக்கிறார்.


வாசுகி என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகள் அக்னியில் விழுந்து பொசுங்கின, அவைகளின் பெயர்கள் ..

  1. கோடிஸன், 
  2. மானஸன், 
  3. பூர்ணன், 
  4. சலன், 
  5. பாலன், 
  6. ஹலீமகன், 
  7. பிச்சலன், 
  8. கௌனபன், 
  9. சக்ரன், 
  10. காலவேகன், 
  11. ப்ரகாலனன், 
  12. ஹிரண்யபாஹு, 
  13. ஸரணன், 
  14. கக்ஷகன், 
  15. காளதந்தகன்,

वासुकेः कुलजातांस्तु प्राधान्येन निबोध मे।

नील रक्तान् सितान्घोरान् महाकायान् विषोल्बणान्।।

अवशान् मातृ वाग्दण्ड पीडितान् कृपणान् हूतान्।

कोटिशो मानसः पूर्णः शलः पालो हलीमकः।।

पिच्छलः कौणपः चक्रः कालवेगः प्रकालनः।

हिरण्यबाहुः शरणः कक्षकः कालदन्तकः।।

एते वासुकिजा नागाः प्रविष्टा हव्यवाहने।

अन्ये च बहवो विप्र तथा वै कुलसंभवाः।

प्रदीप्ताग्नौ हुताःसर्वे घोर-रूपा महाबलाः।।

தக்ஷகன் என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகளும் அக்னியில் விழுந்து பொசுங்கின.

அவைகளின் பெயர்கள் ..

  1. புச்சாண்டகன், 
  2. மண்டலகன், 
  3. பிண்டஸேக்தா, 
  4. ரபேனகன், 
  5. உச்சிகன், 
  6. சரபன், 
  7. பங்கன், 
  8. பில்வதேஜஸ், 
  9. விரோஹனன், 
  10. ஸிலி, 
  11. ஸலகரன், 
  12. மூகன், 
  13. சுகுமாரன், 
  14. ப்ரவேபனன்,
  15. முத்கரன், 
  16. சிசுரோமன்,
  17. ஸுரோமன், 
  18. மஹாஹனு

तक्षकस्य कुले जातान् प्रवक्ष्यामि निबोध तान्।

पुच्छाण्डको मण्डलकः पिण्डसेक्ता रभेणकः।।

उच्छिखः शरभो भङ्गो बिल्वतेजा विरोहणः।

शिली शलकरो मूकः सुकुमारः प्रवेपनः।।

मुद्गरः शिशुरोमा च सुरोमा च महाहनुः।

एते तक्षकजा नागाः प्रविष्टा हव्यवाहनम्।


ஐராவத என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகளும் அக்னியில் விழுந்து பொசுங்கின, அவைகளின் பெயர்கள் ..

  1. பாராவதன், 
  2. பாரியாத்ரன், 
  3. பாண்டரன், 
  4. ஹரினன், 
  5. க்ருஷன், 
  6. விஹங்கன், 
  7. ஸரபன், 
  8. மோதன், 
  9. ப்ரமோதன், 
  10. சம்ஹதாபனன்

पारावतः पारियात्रः पाण्डरो हरिणः कृशः।

विहङ्गः शरभो मोदः प्रमोदः संहतापनः।।

ऐरावत कुलादेते प्रविष्टा हव्यवाहनम्।

கௌரவ்ய என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகளும் அக்னியில் விழுந்து பொசுங்கின, அவைகளின் பெயர்கள் ..

  1. ஏரகன், 
  2. குண்டலன், 
  3. வேணி, 
  4. வேணீஸ்கந்தன், 
  5. குமாரகன், 
  6. பாஹுகன், 
  7. ஶ்ருங்கபேரன், 
  8. தூர்தகன், 
  9. ப்ராதன், 
  10. ராதகன்

कौरव्य कुलजान् नागाञ्शृणु मे त्वं द्विजोत्तम।।

एरकः कुण्डलो वेणी वेणीस्कन्धः कुमारकः।

बाहुकः शृङ्गबेरः च धूर्तकः प्रातरातकौ।।

कौरव्य कुलजास्त्वेते प्रविष्टा हव्यवाहनम्।



த்ருதராஷ்டிரன் என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகளும் அக்னியில் விழுந்து பொசுங்கின, அவைகளின் பெயர்கள் ..

  1. சங்கு கர்ணன், 
  2. பிடரகன், 
  3. குடாரமுகன், 
  4. ஷேசகன், 
  5. பூர்ணாங்கதன், 
  6. பூர்ணமுகன், 
  7. ப்ரஹாஸன், 
  8. சகுனி, 
  9. தரி, 
  10. அமாஹடன், 
  11. காமடகன், 
  12. சுஷேணன், 
  13. மானஸன், 
  14. அவ்யயன், 
  15. அஷ்டாவக்ரன், 
  16. கோமலகன், 
  17. ஸ்வசனன், 
  18. மௌனவேபகன், 
  19. பைரவன், 
  20. முண்டவேதாங்கன், 
  21. பிசங்கன், 
  22. உதபாரகன், 
  23. ரிஷபன், 
  24. வேகவான், 
  25. பிண்டாரகன், 
  26. மஹாஹனு, 
  27. ரக்தாங்கன், 
  28. ஸர்வ சாரங்கன், 
  29. ஸம்ருத்தன், 
  30. படவாசகன், 
  31. வராஹகன், 
  32. வீரணகன், 
  33. சுசித்ரன், 
  34. சித்ரவேகிகன், 
  35. பராசரன், 
  36. தருநகன், 
  37. மணி, 
  38. ஸ்கந்தன், 
  39. ஆருணி

धृतराष्ट्र कुले जाताञ्शृणु नागान्यथातथम्।।

कीर्त्यमानान्मया ब्रह्मन् वातवेगान् विषोल्बणान्।

शङ्कु-कर्णः पिठरकः कुठारमुख सेचकौ।।

पूर्णाङ्गदः पूर्णमुखः प्रहासः शकुनि: दरिः।

अमाहठः कामठकः सुषेणो मानसो अव्ययः।।

अष्टावक्रः कोमलकः श्वसनो मौनवेपगः।

भैरवो मुण्डवेदाङ्गः पिशङ्ग च उदपारकः।

ऋषभो वेगवान् नागः पिण्डारक महाहनू।।

रक्ताङ्गः सर्वसारङ्गः समृद्ध पटवासकौ।

वराहको वीरणकः सुचित्र चित्रवेगिकः।।

पराशरः तरुणको मणिः स्कन्धः तथा आरुणिः।

इति नागा मया ब्रह्मन् कीर्तिताः कीर्ति वर्धनाः।।

Adi parva 57 - வ்யாஸ பாரதம்


இவ்வாறு இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை என்று பல வித விதமான கொடிய கோடிக்கணக்கான ஸர்ப்பங்கள், முக்கியமான இந்த 92 சர்ப்பங்களுடன் சேர்ந்து, ஜனமேஜெயன் செய்த சர்ப யாகத்தினால் இழுக்கப்பட்டு, அக்னியில் விழுந்து பொசுங்கின.

ஸூத குலத்தில் பிறந்தவர்களும் கல்வி அசாத்தியமான தேர்ச்சி பெற்று இருந்தார்கள்... "உலகில் பாம்புகளே இருக்க கூடாது" ஜனமேஜெயன் யாகம் செய்து பெரும்பாலும் அழித்தார். யார் சாபத்தால் பாதி பாம்புகள் அக்னியில் பொசுங்கின? அறிவோம் மகாபாரதம்.

"ஸூத குலத்தில் பிறந்தவர்களும் கல்வி அசாத்தியமான தேர்ச்சி பெற்று இருந்தார்கள்" என்று மகாபாரதம் காட்டுகிறது.

பரீக்ஷுத் "தக்ஷகன் என்ற நாக ராஜனால் கடிக்கப்பட்டு" மறைந்தார்.


அவர் மகனான, ஜனமேஜெயன் சர்ப யாகம் செய்து, "உலகில் இனி பாம்புகளே இருக்க கூடாது." என்று தீர்மானம் செய்தார். 


உதங்கர் மற்றும் மந்திரிகள் சம்மதிக்க, யாக சாலை அமைக்கும் பணி ஆரம்பம் ஆனது. 

அங்கு ஒரு ஸ்தபதியும் வேலை செய்து வந்தார்.


அப்போது,

ஸூத குலத்தில் பிறந்த அந்த சிற்பி, வாஸ்து சாஸ்திரப்படி நில அளவு நடந்த இடத்தையும், கால சூழ்நிலையையும் பார்த்து, 

"ஒரு பிராம்மணனால் இந்த யாகம் முழுமை அடையாமல் போகும்" என்றார்.


இதை கேட்ட ஜனமேஜெயன், யாக தீக்ஷை பெறுவதற்கு முன், வாயிற் காப்பாலனை பார்த்து, 

"எனக்கு தெரியாமல் யாரும் உள்ளே வர கூடாது

என்று கட்டளை இட்டார்.

स्थपति: बुद्धि-संपन्नो वास्तु-विद्या विशारदः।

इति अब्रवीत् सूत्र-धारः सूतः पौराणिक: तदा।।

एतच्छ्रुत्वा तु राजासौ प्राग् दीक्षा कालम् अब्रवीत्।

क्षत्तारं न हि मे कश्चिद् अज्ञातः प्रविशेदिति।।

Adi parva 1 51

கருப்பு துணியை கட்டி கொண்டு, புகையால் கண்கள் சிவக்க, மந்திர பூர்வமாக, ஜ்வலிக்கும் அக்னியில் சர்பயாகம் செய்ய ஆரம்பித்தனர்.

प्रावृत्य कृष्ण-वासांसि धूम्र संरक्त लोचनाः।

जुहुवु: मन्त्रवच्चैव समिद्धं जातवेदसम्।।

Adi parva 1 52


லட்சக்கணக்கான சர்ப்பங்கள் அக்னியில் வந்து வந்து விழுந்து உயிர் விட்டன.

குதிரைகள் போலவும், யானை துதிக்கை போலவும், மத யானைகள் போல பெரிய உடலுடனும், மிகுந்த பலமுள்ளதாகவும், ஈட்டிகளை போல பயத்தை உண்டு செய்யும் கொடிய விஷமுள்ள பல சர்ப்பங்கள், தாயின் (கத்ரு) சாபத்தால், தடியால் அடித்தது போல, கணக்கில்லாமல் தானாக அக்னியில் வந்து விழுந்தன.

घोरा: च परिघप्रख्या दन्दशूका महाबलाः।

प्रपेतुरग्नावुरगा मातृ-वाग्-दण्ड पीडिताः।।

Adi parva 1 52


அந்த சிற்பி கணித்தது போலவே, ஜரத்காருவின் மகனாக பிறந்த "ஆஸ்தீகர்" என்ற பிராம்மணர் வந்து ஜனமேஜெயனை சமாதானம் செய்து, யாகத்தை நிறுத்தினார்.


கொடிய விஷமுள்ள பல பாம்புகள், அதற்குள் அழிந்து விட்டன


யாகம் பாதியில் தடைபட்டதால், பல பாம்புகள் தப்பித்தன. 

ஏன் பல சர்ப்பங்கள் அழிய நேர்ந்தது? எந்த தாய் சாபம் கொடுத்தாள்?

இதற்கான காரணத்தை உலக ஸ்ருஷ்டி சமயத்தில் நடந்த சம்பவத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது.


உலக ஸ்ருஷ்டி உருவான காலம்...

கஷ்யபருக்கு பத்னிகளான

கத்ருவுக்கும் வினதாவுக்கும் ஒரு சமயம் அனாவசியமாக ஒரு போட்டி ஏற்பட்டது.


பாற்கடலில் அசுரர்கள், தேவர்கள் சேர்ந்து அமிர்தத்திற்காக கடைந்த போது, "உச்சைஸ்ரவஸ்" என்ற குதிரை வெளிப்பட்டது. 

இதை அசுரர்கள் எடுத்து பாதாள லோகம் சென்றார்கள்.


அதை எட்டி இருந்து பார்க்க சென்ற இருவரும், "அந்த திவ்யமான குதிரையின் வால் எப்படி உள்ளது?" என்று பேச ஆரம்பித்தனர். பிறகு திரும்பி செல்லும் போது, கருடனுக்கும், அருணனுக்கும் தாயான வினதா, "திவ்யமான அந்த குதிரையின் வால் மயிர் கூட வெள்ளையாக உள்ளதேஎன்றாள்.

வீண் வாதம் செய்ய ஆசைப்பட்ட கத்ரு, அனாவசியமாக அந்த "குதிரையின் வால் மயிர் கருப்பாக தான் இருந்தது" என்றாள்.


இது வாக்குவாதத்தில் முடிந்து, கடைசியில் பந்தயத்தில் முடிந்தது.


"யார் சொல்வது பொய்யோ அவர்கள் மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும்" என்று முடிவு செய்தனர்.


இந்த நிலையில், கோடிக்கணக்கான பாம்புகளை பெற்ற கத்ரு, தன் பிள்ளைகளை எல்லாம் அழைத்து, 

"நீங்கள் அனைவரும் அந்த குதிரையின் வாலில் ஏறி கொண்டு, அதன் வால்மயிர்கள் போல ஆகி, கருமையான நிறத்தோடு தொங்கி கொண்டு இருங்கள். நான் அடிமையாகாமல் இருக்க செய்யுங்கள்" என்றாள்.

कद्रूरुवाच।  

कृष्णवालम् अहं मन्ये हयमेनं शुचिस्मिते।

एहि सार्धं मया दीव्य दासी-भावाय भामिनि।।

Adi parva 1-20

அவள் சொன்னதை ஏற்று கொள்ளாத சர்ப்பங்களை பார்த்து, "எதிர்காலத்தில், ஜனமேஜெயன் என்ற பாண்டவ வம்சத்து ராஜரிஷி, சர்ப்ப யாகம் செய்து, உங்களை பொசுக்குவான்" என்று சபித்தாள்.

सर्पसत्रे वर्तमाने पावको वः प्रधक्ष्यति।

जनमेजयस्य राजर्षेः पाण्डवेयस्य धीमतः।।

Adi parva 1 20


மகா கொடிய சர்ப்பங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதை கண்டு ப்ரம்ம தேவரும், "கத்ரு உலக நன்மையை கருதியே இப்படி ஒரு சாபத்தை தன் பிள்ளைகள் என்று பாராமல் கொடுத்தாள்" என்று அனைவரையும் சமாதானம் செய்தார். 

शापमेनं तु शुश्राव स्वयमेव पितामहः।

अतिक्रूरं समुत्सृष्टं कद्र्वा दैवादतीव हि।।

Adi parva 1 20


தேவ லோக பெண்ணான கத்ரு சொன்னபடியே, துவாபர யுக முடிவில், ஜனமேஜெயன் யாகம் செய்ய, தாய் பேச்சை மறுத்த அத்தனை சர்ப்பங்களும் அக்னியில் விழுந்து உயிர் விட்டன.


அன்று, அவள் (கத்ரு) சாபத்தை கேட்ட பிறகு, கார்கோடகன் என்ற நாகராஜன் கத்ருவிடம் "கருமை நிறத்தோடு அந்த குதிரையின் வால் மயிராக இருக்கிறேன்" என்றான். 

एवं शप्तेषु नागेषु कद्र्वातु द्विजसत्तम।

अद्विग्नः शापतस्तस्याः कद्रूं कर्कोटको अब्रवीत्।। 

Adi parva 1 20

"அப்படியே ஆகட்டும்" என்று கத்ரு மறுமொழி சொன்னாள். 

Wednesday 22 March 2023

கார்கோடகன், வாசுகி, தக்ஷகன், போன்ற பாம்புகள் பல. அதில் முக்கியமான பாம்புகள் என்னென்ன? அவைகள் பெயர்கள் என்ன? கத்ரு பெற்ற பிள்ளைகள் பற்றி அறிவோம்.. வியாசர் மகாபாரதம்...

ப்ரம்மாவின் மானஸ புத்திரர் "காஸ்யபர்". 

உலக ஸ்ருஷ்டி செய்யுமாறு ப்ரம்ம தேவன் சொன்னார்.

"தேவர்களை" அதிதியை கொண்டும், 

"அசுரர்களை" திதியை கொண்டும், 

"அருணன் மற்றும் கருடனை" வினதாவை கொண்டும்,

"கணக்கில்லாத ஸர்ப்பங்களை" கத்ருவை கொண்டும் படைத்தார்.


அருணன் சூரியனுக்கு தேர் ஓட்ட சென்றார்.


கருடன் விஷ்ணுவுக்கு வாகனமாக சென்றார்.

கணக்கில்லாத ஸர்ப்பங்கள் பெயர் அனைத்தையும் சொல்ல இயலாது. 

மிக முக்கியமான சில ஸர்ப்பங்கள் பெயரை ஸூத பௌராணிகர் சொல்ல ஆரம்பிக்கிறார்.


ஆதி சேஷன் விஷ்ணுவுக்கு படுக்கையாக பாற்கடல் சென்றார்.


வாசுகி பாற்கடல் கடையும் போது உதவி செய்தது. வாசுகியின் தங்கை "ஜரத்காரு"வை அதே பெயர் கொண்ட ஜரத்காருவுக்கு மணம் செய்து கொடுத்தார். அவர் பிள்ளை "ஆஸ்தீகர்" ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகத்தை தடுத்தார்.


தக்ஷகன் பரீக்ஷித் மரணத்திற்கு காரணமாக இருந்தது.


காளியன் கிருஷ்ணா அவதார சமயத்தில் ப்ருந்தாவனத்தில் வந்து ஸ்ரீ கிருஷ்ணரால் கண்டிக்கப்பட்டான்.


கர்கோடகன் கத்ருவின் சாபத்திற்கு பயந்து, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையின் வாலில் கருமையான மயிர் போல தொங்கினார்.

शेषः प्रथमतो जातो वासुकि: तदनन्तरम्।

ऐरावत: तक्षक: च कर्कोटक धनञ्जयौ।।

- vyasa Mahabharata (Adi parva 35)

ஆதி சேஷன் (1) மூத்தவர். ஆதி சேஷனுக்கு பிறகு பிறந்த ஸர்ப்பங்கள் பெயர்கள் பின்வருமாறு.... வாசுகி (2), ஐராவதன் (3), தக்ஷகன் (4), கார்கோடகன் (5), தனஞ்செயன் (6)


कालियो मणिनाग: च नाग: च आपूरण: तथा।

नाग: तथा पिञ्जरक एलापत्रो अथ वामनः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

காளியன் (7), மணிநாகன் (8),  ஆபூரணன் (9), பிஞ்சரகன் (10), ஏலாபத்ரன் (11), வாமனன் (12),


नील अनीलौ तथा नागौ कल्माष शबलौ तथा।

आर्यक: च उग्रक: चैव नागः कलशपोतकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

நீலன் (13), அநீலன் (14), கல்மாஷன் (15), சபலன் (16), ஆர்யகன் (17), உக்ரகன் (18), கலசபோதகன் (19)


सुमनाख्यो दधिमुख: तथा विमलपिण्डकः।

आप्तः कोटरक: चैव शङ्खो वालिशिख: तथा।।

- vyasa Mahabharata (Adi parva 35)

ஸுமனஸ் (20), ததிமுகன் (21), விமலபிண்டகன் (22), ஆப்தன் (23), கோடரகன் (24), சங்கன் (25), வாலிஸிகன் (26)

निष्टानको हेमगुहो नहुषः पिङ्गल: तथा।

बाह्यकर्णो हस्तिपद: तथा मुद्गरपिण्डकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

நிஷ்டானகன் (27), ஹேமகுஹன் (28), நஹுஷன் (29), பிங்கலன் (30), பாஹ்ய-கர்ணன் (31), ஹஸ்திபதன் (32), முத்கரபிண்டகன் (33), 


कम्बल: अश्वतरौ चापि नागः कालीयक: तथा।

वृत्त संवर्तकौ नागौ द्वौ च पद्माविति श्रुतौ।।

- vyasa Mahabharata (Adi parva 35)

கம்பலன் (34), அஸ்வதரன் (35), காளீயகன் (36), வ்ருத்தன் (37). ஸம்வர்த்தகன் (38), பத்மன் (39)என்ற பெயரில் இரு சர்ப்பங்கள்,


नागः शङ्खमुख: चैव तथा कूष्माण्डकोऽपरः।

क्षेमक: च तथा नागो नागः पिण्डारक: तथा।।

- vyasa Mahabharata (Adi parva 35)

சங்கமுகன் (40), கூஷ்மாண்டகன் (41), க்ஷேமகன் (42), பிண்டாரகன் (43)


करवीरः पुष्पदंष्ट्रो बिल्वको बिल्वपाण्डुरः।

मूषकादः शङ्खशिराः पूर्णभद्रो हरिद्रकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

கரவீரன் (44), புஷ்ப-தம்ஷ்ட்ரகன் (45), பில்வகன் (46), பில்வபாண்டுரன் (47), மூக்ஷகாதன் (48), சங்கசிரஸ் (49), பூர்ண-பத்ரன் (50), ஹரித்ரகன் (51)


अपराजितो ज्योतिक: च पन्नगः श्रीवह: तथा।

कौरव्यो धृतराष्ट्र: च शङ्खपिण्ड: च वीर्यवान्।|

- vyasa Mahabharata (Adi parva 35)

அபராஜிதன் (52), ஜ்யோதிகன் (53), ஸ்ரீவஹன் (54), கௌரவ்யன் (55), த்ருதராஷ்ட்ரன் (56),    வீரனான சங்கபிண்டன் (57),


विरजा: च सुबाहु: च शालिपिण्ड: च वीर्यवान्।

हस्तिपिण्डः पिठरकः सुमुखः कौणपाशनः।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

விரஜன் (58), சுபாஹு (59), வீரனான சாலிபிண்டன் (60), ஹஸ்திபிண்டன் (61), பிடரகன் (62), ஸுமுகன் (63), கௌணபாசனன் (64)


कुठऱः कुञ्जर: चैव तथा नागः प्रभाकरः।

कुमुदः कुमुदाक्ष: च तित्तिरि: हलिक: तथा।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

குடரன் (65), குஞ்சரன் (66), ப்ரபாகரன் (67), குமுதன் (68), குமுதாக்ஷன் (69), தித்திரி (70), ஹலிகன் (71), 


कर्दम: च महानागो नाग: च बहुमूलकः।

कर्कर अकर्करौ नागौ कुण्डोदर महोदरौ।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

கர்தமன் (72), பகுமூலகன் (73), கர்கரன் (74), அகர்கரன் (75), குண்டோதரன் (76), மஹோதரன் (77).


இவ்வாறு முக்கியமான 77 சர்ப்பங்கள் பெயரை சொன்னார் ஸூத பௌராணிகர்.

Monday 13 March 2023

ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி தமிழன்? தமிழன் வேத வழிபாடு செய்தானா? தெரிந்து கொள்வோம்.. பரிபாடல், திருமுருகாற்றுப்படை, புறநானூறு, மதுரை காஞ்சி, பதிற்றுபத்து, பெரும்பாணாற்றுப்படை என்ன சொல்கிறது?

தமிழன் வேத வழிபாடு செய்தானா? ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி தமிழன்?

சங்கத்தமிழும், வேதமும்.

"பரிபாடல்திருமுருகாற்றுப்படை, புறநானூறு, மதுரை காஞ்சி, பதிற்றுபத்து, பெரும்பாணாற்றுப்படை" போன்ற 6 தமிழ் இலக்கியங்களில் இதற்கான பதில் நமக்கு கிடைக்கிறது.

வேதத்தில் 'இடைச்சொறுகுகள் இருக்ககூடாது' என்பதாலும், 'உச்சரிப்பு ஸ்வரம் மாற கூடாது' என்பதாலும், குரு தன் வாயால் சொல்ல, அதை கேட்டு, சிஷ்யர்கள் திரும்ப திரும்ப சொல்லி மனப்பாடம் செய்தனர்.

'வாய்மொழி'யாகவே வேதம் ஓதப்பட்டது.

அந்த வேதத்தையே, "மாயா வாய்மொழி" என்று தமிழில் 'பரிபாடல்' சொல்கிறது.

திருமாலிடமிருந்து தோன்றிப் பரந்த பொருள்கள்

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து:

'வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை

- பரிபாடல்

சங்க தமிழான பரிபாடல் சொல்லும் அர்த்தம் இதோ:
"வாய்மொழி (4 வேதம்) நூல் தந்தவன்.
வாய்மொழி என்னும் ஓடையில் மலர்ந்தது தாமரை.
தாமரையில் பிறந்தவன் பிரம்ம தேவன்.
பிரம்மனின் தந்தை நீ என்று அந்தணர் வேதம் சொல்கிறது
" என்று பரிபாடல் வேதத்தை பற்றியும், பிரம்ம தேவன் தாமரையில் உண்டானதை பற்றியும் சொல்கிறது.

வேதம் - எழுத்து வடிவில் இல்லாமல், குரு சொல்ல, அதை  சிஷ்யர்கள் கவனத்துடன் காதால் கேட்டே மனப்பாடம் செய்ததால், "கேள்வி" என்றும் வேதத்தை பரிபாடல் தமிழில் சொல்கிறது.


வேதத்தை, "கேள்வி"க்கு ஈடாக "ஸ்ருதி" என்று சமஸ்கிருதமும், சொல்கிறது.

தோஷமற்ற நூல் வேதம் ("கெடு இல் கேள்வி") என்று வேதத்துக்கு மேலும் சான்றிதழ் கொடுக்கிறது பரிபாடல்.

ரிக் வேதம், "நித்யா வாக்" (இறப்பற்ற வேதம்) என்றும் வேதத்தை சொல்கிறது.

"அழியாத வேதம், வெளியோட்டமாக கர்மாவை செய்ய சொல்வது போல தோன்றினாலும், பரமாத்மாவையே துதிக்கிறது" என்று அறிகிறோம்.

எப்படி மரியாதை தெரிந்த பெண், அன்புள்ள தன் கணவன் பெயரையோ, அவரை பற்றியோ தயங்கி தயங்கி பேசுவாளோ, அப்படியே நேரடியாக பரமாத்மாவை பற்றி பேச தயங்கும் வேதம், பரமாத்மாவை மறைத்து மறைத்து பேசுவதால், வேதத்தை "மறை" என்றும் சொல்கிறது தமிழ் மொழி.

தத்துவங்களை மறைத்து பேசுவதால், வேதத்தை "மறை" என்று அழகாக அழைக்கிறது தமிழ் மொழி.

பரிபாடல், வேதம் என்ற சொல்லுக்கு ஈடான "மறை" என்ற சொல்லையும் பயன்படுத்துகிறது.

"வேதத்தில் வேள்விகள் சொல்லப்பட்டு இருக்கிறது" என்று புறநானூறு சொல்கிறது.

வேத வேள்வி

தொழில் முடித்ததுவும்

புறநானூறு

"வேதத்தில் சொல்லப்பட்ட விதிப்படி வேள்வியை செய்ய வேண்டும்என்று 'புறநானூறு' சொல்கிறது

அதேபோல, "வேதத்தை அந்தணர்கள் எப்படி ஓதுவார்கள்?" என்று 'மதுரைகாஞ்சி' சொல்கிறது.

தாதுண் தும்பி போது
முரன்றாங்கு ஒதல் 
அந்தணர் வேதம் பாட 
மதுரைகாஞ்சி

 "வண்டு ரீங்காரம் செய்வது போல (in resonance), அந்தணர்கள் வேதம் ஓதுகிறார்கள்" என்று சொல்கிறது மதுரை காஞ்சி

சங்க இலக்கியமான மதுரை காஞ்சி சொல்வதை போல தான், "பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும், இன்றும் தமிழ் அந்தணர்கள் வேதத்தை ஓதுகிறார்கள்" என்று பார்க்கிறோம். 

இன்று இருக்கும் வைதீக அந்தணர்கள், சங்க இலக்கியத்தில் சொல்வது போலவே இன்றுவரை உள்ளனர் என்று பார்க்கிறோம்..

வாழ்க தமிழ் பழங்குடி அந்தணர்கள்.

"உலக வாழ்க்கை, சம்பாத்தியம் போன்றவற்றில் ஈடுபடாமல், வேதத்தை ஓதும் பெரும் பொறுப்பை அந்தண சமூகம் ஏற்று இருந்தது" என்ற தொடர்பை சங்க இலக்கியங்கள் 'அந்தணர் அருமறை', 'அந்தணர் வேதம்' போன்ற வாக்குகள் மூலம், நமக்கு  சொல்கிறது.

அந்தணர்கள் யார்?
அந்தணர்கள் பண்பாடு எப்படி இருந்தது?

என்று சங்க இலக்கியமே சொல்கிறது.


இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது 

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

புலராக் காழகம் புலர் உடீஇ

உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து

ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி

விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிது உவந்து

ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று

திருமுருகாற்றுப்படை

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் இதற்கான பதில் வருகிறது…

இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது…

- திருமுருகாற்றுப்படை
என்று தொடங்கும் பாடலில், 'அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு' என்று சொல்கிறது.

வேதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம் அந்தணர்களுக்கு (ப்ராம்மணர்களுக்கு) சொல்லும் அதே 6 கடமைகளை, சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையும் சொல்கிறது.

ந்தணர்களின் 6 கடமைகள் என்ன?:

  • ஓதல் (அத்யயனம் - வேதத்தை கற்பது),
  • ஓதுவித்தல் (அத்யாபனம் - வேதத்தை கற்று வைத்தல்) , 
  • வேட்டல் (யஜனம் - வேள்வியை நடத்துதல்) ,
  • வேட்பித்தல் (யாஜனம் -வேள்வியை மற்றவருக்கு நடப்பித்தல்),
  • ஏற்றல் (ப்ரதிகிரஹம் - தானத்தை ஏற்றுக்கொள்ளுதல்),
  • ஈதல் (தானம் - தானம் கொடுத்தல்),
ஆகிய "6ம்  அந்தணர்கள் விடக்கூடாத கடமைகள்" என்று சங்க இலக்கியம், தர்ம சாஸ்திரம் சொன்னபடியே சொல்கிறது.

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில்
'6 கடமைகள் என்று தானே சொல்லி உள்ளது.  அது தர்ம சாஸ்திரம் சொன்ன இந்த 6 கடமையை தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?'
என்ற கேள்விக்கு பதிலை, மற்றொரு சங்க இலக்கியமான, பதிற்றுபத்து சொல்கிறது.

ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், எற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்
பதிற்றுபத்து

இதில் தெளிவாக அந்தணர்களின் 6 கடமைகள் என்னென்ன? என்று பதில் சொல்கிறது.

மேலும்,
"இருவர் சுட்டிய" என்ற பதம் மூலம், 'இந்த அந்தணனை, பெற்ற தாய்-தந்தையர்கள் தூய்மையான நடத்தை உடையவர்களாக இருந்தார்கள்' என்று கொண்டாடுகிறது 
திருமுருகாற்றுப்படை

பழங்குடியினருக்கு பல சலுகைகளை இன்று அரசாங்கம் கொடுக்கிறது.

ஆனால், உண்மையான தமிழ் பழங்குடியான பிராம்மணர்களுக்கு பழங்குடியினருக்கான சலுகைகள் இன்றைய அரசாங்கம் கொடுக்கவில்லை. 

சங்க இலக்கியங்களை இவர்கள் படித்ததாக தெரியவில்லை.

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "அந்தணர்களே தமிழகத்தில் இருந்த பழங்குடியினர் (தொல்குடி)" என்று தெளிவாக சொல்கிறது. 

அதிலும்,
இந்த அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள். (ஸாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி)) என்று சொல்கிறது.

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்கள்” என்று தெளிவாக சொல்கிறது.

இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது

இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

- திருமுருகாற்றுப்படை

இந்த பாடலில்,
"அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு.
அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள்.
இந்த அந்தணர்கள் ஆதியில் இருந்தே இந்த தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தொல்குடியினர்"
என்று சான்றிதழ் கொடுக்கிறது.

வாழ்க திருமுருகாற்றுப்படை..


இதிலிருந்தே ஆதி தமிழன் யார்? யார் ஆதிகுடி? என்று கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடுகிறது.

மேலும், "முத்தீ" என்று சொல்லுமிடத்தில், இந்த அந்தணர்கள், 'மூன்று அக்னிகுண்டத்தில் வேள்வி தீயை வளர்ப்பவர்கள்' என்றும் திருமுருகாற்றுப்படை சொல்கிறது.

யாகம் செய்ய நாற்சதுரம், முக்கோணம், வில் வடிவம் என்ற அமைப்பில் அக்னிகுண்டங்கள் அமைத்து, கார்ஹ-பத்தியம், ஆகவனீயம், தக்ஷிணாக்னியம் என்ற மூன்று வேள்வி தீ, அக்னிஹோத்ரியான  பிராம்மணர்கள் வீட்டில் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். இதையே 'முத்தீ' என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகிறது.

இதே சொல்லை, "மூத்தீ மறையாவான்" என்று இரண்டாம் திருவந்தாதியில், பூதத்தாழ்வார் பயன்படுத்துகிறார் என்று பார்க்கலாம்.


மேலும், சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", "இருபிறப்பாளர்" என்று சொல்லுமிடத்தில், 'அந்தணர்கள், இரு முறை பிறக்கிறார்கள்' என்றும் சொல்கிறது.

பிராம்மண குழந்தைகள், "காயத்ரி மந்த்ர" உபதேசம் பெறும் போது, "இரண்டாவது பிறவி கொள்கிறார்கள்" என்று சொல்வதுண்டு.
இதையே சங்க இலக்கியமும் நமக்கு ஊர்ஜித படுத்துகிறது.

இது மட்டுமல்ல,
சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "மூன்று புரி நுண்ஞாண்" என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள், மூன்று நூல்கள் சேர்ந்த பூணூலை அணிந்து உள்ளார்கள்" என்று அந்தணர்களின் அடையாளத்தை காட்டுகிறது.

மேலும், சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை, "உச்சிக்கூப்பிய கையினர்" என்று சொல்லுமிடத்தில், "இந்த அந்தணர்கள், சுவாமிமலையில் (ஏரகத்து) வீற்று இருக்கும் முருகப்பெருமான் சந்நிதியில் கையை தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்கரித்து நிற்கின்றனர்" என்று அவர்களின் முருக பக்தியை காட்டுகிறது.

அந்தணர்கள் கையை தலைக்கு மேலே உயர்த்தி, முருகப்பெருமானை நமஸ்கரித்து கொண்டு மேலும்,

வேத மந்திரங்களை (அருமறைக் கேள்வி) மிகவும் சத்தமாக சொல்லாமல் நாக்கும் வாயும் அசைய, ஜபம் செய்வது போல அழகாக முருகப்பெருமானை நோக்கி பாடினார்கள், என்று "அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி" என்று திருமுருகாற்றுப்படை பாடுகிறது.

மேலும்,

  • அந்தணர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?
  • அவர்கள் வீடு எப்படி  இருந்தது?
என்று மற்றொரு சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு சொல்கிறது.

செழுங் கன்று யாத்த சிறுதாட் பந்தர்

என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள் வீட்டில் புஷ்டியான கன்றுகள் வீட்டின் வாசலில் சிறு பந்தல் போட்டு நின்று கொண்டிருக்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
பைஞ்சேறு மெழுகிய 

என்று சொல்லும் போது, "அந்தணர்கள் வீடே, பசுஞ்சாணியால் மெழுகப்பட்டு இருக்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
படிவ நல்நகர்

என்று சொல்லும் போது, "தெய்வத்துக்கு பூஜைகள் செய்ய ஒரு அறை வைத்து இருக்கிறார்கள்என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,

மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது

என்று சொல்லும் போது, "அந்தணர்கள், கோழி, நாய் வளர்க்க மாட்டார்கள்" என்றும்,

மேலும்
வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்

என்று சொல்லும் போது,, "அந்த வீட்டில் உள்ள அந்தணர்கள் வேதம் சொல்லி சொல்லி, அந்த வீட்டில் உள்ள கிளிகள் கூட திரும்ப சொல்கிறது" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்

என்று சொல்லும் போது, "வேதத்தை காப்பாற்றி வரும் இந்த அந்தணர்களின் வீட்டுக்கு சென்று பார்த்தால்...."

பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்

என்று சொல்லும் போது, "மிக பெரிய வானத்தில் ஜொலிக்கும் அருந்ததி நக்ஷத்திரம் போன்ற கற்புக்கரசியான அந்தண பெண், கைகளில் வலைகள் குலுங்க, ராஜ ஹம்சம் என்ற அன்னபறவை பெயர் கொண்ட ராசான்னம் என்ற ஆஹுதிக்கு ஏற்றதான அரிசியை மட்டுமே, பதம் அறிந்து சோறு சமைத்து வைத்து இருக்கிறாள்" என்று  பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது.

மேலும்,
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்

என்று சொல்லும் போது, "கருவேப்பிலை, மிளகு கலந்து சமைக்கப்பட்ட காய்கறியோடு, மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு, மாதுளம் பழம் சேர்த்த மோர் சாதத்தை அந்தணர்கள் சாப்பிடுகிறார்கள்என்று பெரும்பாணாற்றுப்படை நமக்கு தெளிவாக  காட்டுகிறது..

இவ்வாறு, அந்தணர் வீடு எப்படி இருந்தது? அந்தணர் உணவு முறையும் எப்படி இருந்தது? என்ற வர்ணனையை சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு தெளிவாக  காட்டுகிறது. 

இன்றுவரை பிராம்மணர்களை  "தயிர் சாதம்" என்று கிண்டலாக பேசுகிறார்கள்.
சங்க காலத்தில் ஆரம்பித்து, இன்று வரை இந்த பழக்கத்தை கொண்ட பிராம்மண சமுதாயமே "ஆதிகுடி (பழங்குடி)" என்ற தெரிகிறது.

தமிழ்நாட்டின் "ஆதி குடிமகன் யார்?" என்ற கேள்விக்கு "பிராம்மணனே ஆதிகுடி" என்று சான்று கொடுக்கிறது சங்க இலக்கியங்கள்.

இதை பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய..  pls Listen to Speech of Sri Ranganji -  வேதம் நிறைந்த தமிழ்நாடு....

மேலும்,

"காலையில் கோவிலுக்கு சென்று, எப்படி பக்தியோடு மக்கள் இருந்தார்கள்?" என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.

பாடல்:

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

- திருவெம்பாவை (மாணிக்கவாசக பெருமான்)

அர்த்தம்:

"ஒரு பக்கம் பக்தர்கள், வீணை கொண்டும், யாழ் கொண்டும் இனிய இசை இசைகிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், ருக் வேத மந்திரங்களை ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், நிறைய மலர்களை பறித்து, மாலை தொடுத்து கொண்டு காத்து கொண்டு இருக்கிறார்கள்

ஒரு பக்கம் பக்தர்கள், நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  மேலும் சிலர் அன்பின் மிகுதியால் உங்களை தரிசிக்க போகும் ஆனந்தத்தில் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஒரு பக்கம் பக்தர்கள், தலை மேல் கை கூப்பி நமஸ்கரித்து கொண்டே காத்து இருக்கிறார்கள்.

திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே ! 

(இவர்களோடு) ஒன்றுமே செய்யாது இருக்கும்,  மாணிக்கவாசகனான  என்னையும் சேர்த்து (ஆண்டு) கொண்டு, இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்வாய்  !"

என்று பக்தி சொட்ட பாடுகிறார், மாணிக்கவாசகர்.

இதன் அர்த்தத்தையும், மேலும் ராமாயணம் பற்றி கேட்கவும், pls Listen to - the explanation:  


Saturday 18 February 2023

குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்? பெயர் அழகாக இருக்கிறது, என்று பெயர் வைக்கலாமா?

குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்?

ஹிந்துக்கள் பெயர் கவர்ச்சியாக இருக்கிறது, என்ற காரணத்தால் மட்டும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில்லை.

எந்த காரியத்தையும் ஆன்மீகத்தோடு இணைத்து செய்யும் ஹிந்துக்கள், குழந்தைகளுக்கு பெயர் வைப்பதையும் காரணத்தோடு தான் செய்கின்றனர்.  

"5 விதமான கடனோடு தான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்" என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும், தேவதைகளுக்கு, பெற்றோருக்கு, ரிஷிகளுக்கு, பரமாத்மாவுக்கு, அனைத்து உயிர்களுக்கும் (ஜீவாத்மா) கடன் படுகிறான்.

இந்த 5 கடனையும்,

  1. தேவ யக்ஞம், 
  2. பித்ரு  யக்ஞம், 
  3. ப்ரம்ம யக்ஞம், 
  4. மனுஷ்ய யக்ஞம், 
  5. பூத யக்ஞம் 

என்ற 5 விதமான யாகங்கள் மூலம் அடைக்க வேண்டும்.


இந்த 5 கடனையும் எந்த மனிதன் அடைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு தகுதி பெறுகிறான்.

இந்த 5 கடனில் ரிஷி கடனை அடைப்பது எப்படி?

ரிஷிகளுக்கு நாம் எப்படி கடன் பட்டோம்?

  • நாம் எப்படி மனிதனாக வாழ வேண்டும்? 
  • உலகத்தில் எப்படி வாழ்ந்தால் நமக்கு நன்மை? 
  • கிடைத்த பிறவியில் என்ன செய்தால் பரலோகத்துக்கு அடைய முடியும்? 
  • மோக்ஷம் அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? 
  • எது தர்மம் (righteaous)? 
  • எது அதர்மம்? 

என்று நமக்கு தேவையான அனைத்து சாஸ்த்திரத்தையும் ரிஷிகள் நமக்காக எழுதி ஒரு பெரிய அறிவு களஞ்சியத்தை நமக்கு கொடுத்து விட்டார்கள்.


அப்படி ஒரு வழி காட்டுதலை நமக்கு ரிஷிகள் கொடுக்காது போய் இருந்தால், நாம் மிருகம் போல தானே வாழ்ந்து கொண்டு இருப்போம்.

  • இவள் என் மனைவி, 
  • இவர்கள் என் பிள்ளைகள், 
  • இவள் சகோதரி 

என்ற கட்டுப்பாடு இந்த ரிஷிகளின் வழிகாட்டுதலில் தானே நம் வரை வந்து இருக்கிறது. 

  • நாம் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
  • பெற்றோர் தன் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
  • கணவன் எப்படி மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டும்? 
  • மனைவி கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
  • அரசன் எப்படி மக்களை காப்பாற்ற வேண்டும்? 
  • மக்கள் எப்படி அரசனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 

என்று பல தர்மங்களையும் பல நூல்களாக ரிஷிகள் நமக்கு அள்ளி கொடுத்து விட்டனர்.

  • தர்மம், அதர்மம் இரண்டுக்கும் அப்பாற்பட்ட மோக்ஷத்தையும் எப்படி அடைய வேண்டும்? என்ற பாதையையும், 
  • நமக்கு பக்தியையும், ஞானத்தையும் தரக்கூடிய ப்ரம்ம வித்யை, பகவத் வித்யையும் 

நமக்கு கொடுத்தவர்கள் ரிஷிகள்.


இப்படி எப்படி வாழ வேண்டும்? என்று நமக்கு வழி காட்டிய ரிஷிகளுக்கு நாம் நன்றி செய்ய வேண்டாமா?

மனு, வால்மீகி, வியாசர், ஆழ்வார்கள் அனைவருமே 'ரிஷிகள்' தான்.

4000 பாசுரங்களை கொடுத்த ஆழ்வார்களுக்கு, நாம் என்ன பதில் செய்து விட முடியும்?

அப்படி ஒரு ராம குணத்தை நமக்கு "ராமாயண காவியமாக" நமக்கு கொடுத்த தமிழரான வால்மீகிக்கு (அவதாரம் இடம் : அன்பில்) நாம் என்ன செய்ய முடியும்?


ஆளவந்தார், "பராசர பகவான் இப்படி ஒரு அற்புதமான 'ஸ்ரீ விஷ்ணு புராணம்' கொடுத்தாரே, அவருக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்?" என்று நினைத்தார். பராசர ரிஷிக்கு நன்றி செய்ய ஆசைப்பட்டார்.

ராமானுஜர் வந்த பொழுது, ஆளவந்தார் பரமபதம் சேர்ந்து விட்டார். 

அப்பொழுது அவரது திருமேனியில் மூன்று விரல்கள் மட்டும் மடிந்து இருந்ததை கண்டு, "ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு பாஷ்யம் செய்வேன்" என்றதும், ஆளவந்தார் திருமேனியில் மடிந்து இருந்த ஒரு விரல் திறந்தது. ஒரு பிள்ளைக்கு பராசரர் என்று பெயர் வைப்பேன் என்றதும் மற்றொரு விரலும் நேரானது.  


இப்படி ஆளவந்தார், பராசரருக்கு கைமாறு செய்ய ஆசைப்பட, ராமானுஜர் அதை நிறைவேற்றி கொடுத்தார். கூரத்தாழ்வார் பிள்ளைக்கு 'பராசரர்' என்று பெயர் வைத்தார்.


அது போல, பாகவதத்தை நமக்கு தந்த சுக ப்ரம்மத்துக்கு நாம் என்ன கைமாறு செய்து விட முடியும்? 

சுக ப்ரம்ம ரிஷி இல்லையென்றால், நமக்கு கிருஷ்ண அவதாரம் என்ன என்றே தெரிந்து இருக்காதே! கிருஷ்ண பக்தியே நமக்கு தெரியாமல் போய் இருக்குமே!


ஆழ்வார்கள் இல்லையென்றால், நமக்கு 108 திவ்ய தேசத்தின் மகிமையும் தெரிந்து இருக்காதே!


இப்படி அள்ளி அள்ளி நமக்கு கொடுத்த ரிஷிகளுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்?


நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்? என்று ரிஷிகள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், நமக்கு ஒரு நன்றி உணர்வு வேண்டாமா?

அந்த நன்றியை காட்டுவதற்காக, தானே ராமானுஜர், 'பராசரர் என்று பெயர் வைத்து காட்டினார்.


ரிஷிகள் நமக்கு கொடுத்த நிதிக்கு, பதில் செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் பெயரையாவது வைக்கலாமே!


அதனால் தானே, நம் குழந்தைகளுக்கு "ராமானுஜன்" என்று பெயர் வைக்கிறோம். "சடகோபன்" என்று பெயர் வைக்கிறோம்.


இந்த பெயரெல்லாம் ஏன் வைக்கிறோம்?

நமக்கு வழிகாட்டியாக இருக்கும் இந்த ரிஷிகளுக்கு, நன்றியை காட்ட தானே நம் குழந்தைகளுக்கு அவர்கள் பெயரை வைக்கிறோம்.

இதன் மூலம் ரிஷி கடனை நாம் அடைக்க முடியும்.


ரிஷிகள் கொடுத்த சாஸ்திரங்களை தினமும் படிப்பதாலும் நாம் அவர்களுக்கு நன்றி செய்து ரிஷி கடனை அடைகிறோம்.


அதே நன்றி உணர்ச்சியால் தான், 

நம் பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயரையும் வைக்கிறோம். இதன் மூலமும் தெய்வ கடனை அடைக்கிறோம்.


அதே நன்றி உணர்ச்சியால் தான், 

நம் பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டியின் பெயரையும் வைக்கிறோம். அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு சேவை செய்து கொண்டு, போன பிறகும் திவசம் தர்ப்பணம் போன்ற காரியங்கள் செய்து நன்றியை காட்டி பித்ரு கடனை அடைக்கிறோம்.


இந்த 5 கடனையும் எந்த மனிதன் அடைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்கு தகுதி பெறுகிறான்.