Followers

Search Here...

Saturday 27 May 2023

திவசத்தில் யார் யாரை சாப்பிட அழைக்கலாம்? ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி

திவசத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்களை, மேலும் உறவினர்களையும் அழைத்து உணவு கொடுக்கலாம். ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி

प्रक्षाल्य हस्ता वाचाम्य

ज्ञाति प्रायं प्रकल्पयेत् ।

ज्ञातिभ्यः सत्कृतं दत्त्वा

बान्धवान् अपि भोजयेत् ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ஸ்ரார்த்தம் செய்தவர், பித்ரு ரூபமாக பிராம்மணர்கள் சாப்பிட்டு சென்ற பிறகு, கை கால் அலம்பி கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

பிறகு இரத்த சம்பந்த பங்காளிகள் (ஞாதி) அனைவருக்கும் உபசரித்து உணவு கொடுக்க வேண்டும். மற்ற உறவினர் அனைவரையும் (பாந்தவான்) அப்படியே உபசரித்து, உணவு அளிக்க வேண்டும்

ஆண் குழந்தை பெற வழி என்ன? பெண் குழந்தை பெற வழி என்ன? அலியை பெறுவது எப்படி? ஸ்வாயம்பு மனு சொல்கிறார். அறிவோம் மனு ஸ்மிருதி...

ஆண் குழந்தை பெற வழி என்ன? 

பெண் குழந்தை பெற வழி என்ன?

அலியை பெறுவது எப்படி?

இரட்டை குழந்தைகளை பெறுவது எப்படி?

ஸ்வாயம்பு மனு சொல்கிறார்.

அறிவோம் மனு ஸ்மிருதி...


ऋतुकाल अभिगामी स्यात् 

स्व-दार निरतः सदा ।

पर्ववर्जं व्रजेच्चैनां 

तद्व्रतो रतिकाम्यया ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

எப்பொழுதும் மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வது கணவனின் கடமை. மனைவியை தவிர அந்நிய பெண்ணை நினைக்க கூட கூடாது. பௌர்ணமி, அமாவாசை மற்றும் சில நாட்கள் தவிர்த்து, மனைவியிடம் சேரலாம்.

ऋतुः स्वाभाविकः स्त्रीणां 

रात्रयः षोडश स्मृताः ।

चतुर्भि: इतरैः सार्धम् 

अहोभिः सद्विगर्हितैः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ரஜஸ் வலை (3 day period) முடிந்த பிறகு, பொதுவாக (least) பெண்ணுக்கு அடுத்த 16 நாட்கள் ருது காலம் என்று சொல்லப்படுகிறது. ருது காலத்தின் முதல் 4 நாட்களும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும்.


तासाम् आद्याश्चतस्रस्तु 

निन्दित: एकादशी च या ।

त्रयोदशी च शेषास्तु 

प्रशस्ता दशरात्रयः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ருது காலத்தின் முதல் 4 நாட்களும், அதே போல 11வது நாளும், 13வது நாளும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும். இந்த 6 நாட்கள் தவிர்த்து, மற்ற 10 நாட்களில் மனைவியோடு சேரலாம்.

युग्मासु पुत्रा जायन्ते 

स्त्रियो अयुग्मासु रात्रिषु ।

तस्माद् युग्मासु पुत्रार्थी 

संविशेदार्तवे स्त्रियम् ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

அனுமதிக்கப்பட்ட 10 நாட்களில், 6வது அல்லது 8வது நாளில் மனைவியோடு சேர்ந்தால், மகன் பிறப்பான்.

மீதி உள்ள 8 நாட்களில் சேர்ந்தால், மகள் பிறப்பாள்

மகனை விரும்புபவர்கள், மகளை விரும்புபவர்கள் தகுந்த படி சேரலாம்.


पुमान् पुंसो अधिके शुक्रे 

स्त्री भवति अधिके स्त्रियाः ।

समे अपुमान् पुं।स्त्रियौ वा 

क्षीणे अल्पे च विपर्ययः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

ஆணின் அணுக்கள் (Y) அதிகமாக இருந்தால், மகன் பிறப்பான்.

பெண்ணின் ஶ்ரோணிதம் (X) அதிகமாக இருந்தால், மகள் பிறப்பாள். (இதையும் மாற்ற பும்ஸவனம் என்ற வைதீக கர்மாவை சரியான காலத்தில் செய்தால், மகனாக பிறப்பான்)

இரண்டும் சமமாக இருந்தால், அலி பிறப்பான், அல்லது இரட்டையாக குழந்தைகள் பிறக்கும். 

குறைவாக இருந்தால், கர்ப்பம் ஏற்படாது.


निन्द्यास्वष्टासु चान्यासु 

स्त्रियो रात्रिषु वर्जयन् ।

ब्रह्मचार्येव भवति यत्र 

तत्र आश्रमे वसन् ॥ 

- மனு ஸ்மிருதி (manu smriti)

இப்படி எந்த கணவன் தன் மனைவியின் ருது காலத்தில் முதல் 4 நாட்களும், 11வது, 13வது நாட்களில் சேராமல், மற்ற நாட்களில் மட்டும் சேர்கிறானோ, அவன் க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிப்பவனே. அவன் பிரம்மச்சாரியே!


अमावास्याम् अष्टमीं च पौर्णमासीं चतुर्दशीम् ।

ब्रह्मचारी भवेन् नित्यमप्यर्तौ स्नातको द्विजः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி, சதுர்தசி போன்ற நாட்களில், மனைவி ருது காலத்தில் இருந்தாலும், பூணூல் காயத்ரீ உபதேசம் பெற்ற வைசியன்/பிராம்மணன்/க்ஷத்ரியன் (த்விஜன்) மனைவியுடன் படுக்க கூடாது.


ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை . ஸ்வாயம்பு மனு ஸ்மிருதி

ஶ்ரார்த்தம் : (அம்மா/அப்பாவுக்கு ஸ்ரார்த்த கர்மாவை செய்த பிறகு, கடைசியில் செய்ய வேண்டிய பிரார்த்தனை)

विसृज्य ब्राह्मणांस्तांस्तु 

नियतो वाग्यतः शुचिः ।

दक्षिणां दिशम् आकाङ्क्षन् 

याचेतैमान् वरान् पितॄन् ॥ 

- மனு ஸ்மிருதி

சாப்பிட்ட பிராம்மணர்கள் கிளம்பிய பிறகு, அமைதியாக அவர்களை சிறிது தூரம் பின் தொடர்ந்து, பிறகு தெற்கு முகமாக நின்று இவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்..

दातारो नो अभिवर्धन्तां 

वेदाः सन्तति: एव च ।

श्रद्धा च नो मा व्यगमद् 

बहुदेयं च नो अस्त्विति ॥

தாதாரோ நோ அபி-வர்தந்தாம்

வேதா சந்ததி: ஏவ ச |

ஸ்ரத்தா ச நோ மாவ்யகமத்

பஹுதேயம் ச நோ அஸ்த்விதி ||

- மனு ஸ்மிருதி

அள்ளி தானம்  கொடுக்கும் குணமுள்ள புத்திரர்களால் என் குலம் பெருக வேண்டும்.

வேதம் ஓதுவதிலும், அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்வதிலும், யாகங்களில் செய்வதிலும் ஆர்வமுள்ள சந்ததிகளால் என் குலம் பெருக வேண்டும்.

எங்கள் அனைவருக்கும் வேதத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் குறையாமல் இருக்கட்டும். 

மற்றவர்களுக்கு அள்ளி கொடுக்கும்படியான செல்வம் எங்களுக்கு கிடைக்கட்டும்.


இவ்வாறு பிரார்த்தனை செய்து ஸ்ரார்த்தம் முடிக்க வேண்டும்...


What is muhurtA (முகூர்த்தம்), kAshtai (காஷ்டை)? மனு ஸ்மிருதி ஸ்லோகத்தை பார்போம்.... What Manu smriti says..

What is Day (நாள்), muhurtA (முகூர்த்தம்), kalA (கலை),  kAshtai (காஷ்டை) என்றால் என்ன? மனு ஸ்மிருதி ஸ்லோகத்தை பார்போம்....  What Manu smriti says..

निमेषा दश च अष्टौ च काष्ठा 

त्रिंशत् तु ताः कला ।

त्रिंशत् कला मुहूर्तः स्याद् 

अहोरात्रं तु तावतः ॥

- மனு ஸ்மிருதி (Manu Smriti)

18 முறை கண் இமைக்கும் நேரத்தை, 1 காஷ்டை (3.2 sec) என்று சொல்கிறோம்.

30 காஷ்டை , 1 கலை (இன்றைய கணக்குப்படி 96 sec) என்று சொல்கிறோம்.

30 கலைகள், 1 முகூர்த்தம் (இன்றைய கணக்குப்படி 48 min/2880 sec) என்று சொல்கிறோம்.

30 முகூர்த்தம், இரவும் பகலும் சேர்ந்த ஒரு நாள் என்று சொல்கிறோம்.

18 times blinking eyes = 1 kAshtai

30 kAshtai = 1 kalA

30 kalA = 1 muhurtA

30 muhurtA = 1 full day (day+night)

Friday 26 May 2023

Manu smriti says "Plants experience happiness and sorrow". Let us know the sloka...

Million of yrs ago, manu has already said "Plants experience happiness and sorrow".  Let us know the sloka...

तमसा बहु-रूपेण वेष्टिताः कर्महेतुना ।

अन्तस्सञ्ज्ञा भवन्त्येते सुख-दुःख समन्विताः ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

தாவரங்கள் தமோ குணத்தோடும், உணர்ச்சியோடு சேர்ந்த மனதை கொண்டிருப்பதால், சுக துக்கத்தை அனுபவிக்கின்றன. 

Plants experience happiness and sorrow because they have a spirit and emotional mind.