Followers

Search Here...

Saturday, 10 September 2022

சிசுபாலன் வதம்... சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி திட்டுகிறான். கேட்பவர்கள் செவி சுடும் அளவிற்கு அநாகரீகமாக பேசி, இறுதியில் கிருஷ்ணர் கையால் மரணமடைகிறான். என்ன பேசினான்? என்ன நடந்தது? வியாசரின்... மஹாபாரதம் அறிவோம்.

शिशुपाल उवाच। (சிசுபாலன் பீஷமரை பார்த்து பேசினான்)

बिभीषिकाभिर्बह्वीभिर्भीषयन्भीष्म पार्थिवान्।

 व्यपत्रपसे कस्माद्वृद्धः सन्कुलपांसनः।।    

ஓய் பீஷ்மாகுலத்தை கெடுப்பவனேநீ இங்கு இருக்கும் அரசர்களை பயமுறுத்த நினைக்கிறாயா? உனக்கு வெட்கமாக இல்லை?

युक्तमेतत्तृतीयायां प्रकृतौ वर्तता त्वया।

वक्तुं धर्मादपेतार्थं त्वं हि सर्वकुरूत्तमः।।         

தர்மத்துக்கு எதிராக நீ இப்படி பேசுவது உன்னை பொறுத்தவரை சரி தான்நீ ஆணும் இல்லாதபெண்ணும் இல்லாத அலி தானேகௌரவ குலத்துக்கு நீ தலைவன் என்ற பெயர் வேறு.

नावि नौरिव सम्बद्धा यथान्धो वान्धमन्वियात्।

तथाभूता हि कौरव्या येषां भीष्म त्वमग्रणीः।।  

ஏய் பீஷ்மாஉன்னை தலைவனாக பெற்ற கௌரவர்கள்ஒரு படகோடு கட்டப்பட்ட மற்ற படகுகள் போலஓரு குருடன் பின்னால் செல்லும் குருடனை போல இருக்கின்றனரே!

पूतनाघातपूर्वाणि कर्माण्यस्य विशेषतः।

त्वया कीर्तयताऽस्माकं भूयः प्रव्यथितं मनः।।  

சிறு குழந்தையாக இருந்த போதுஇந்த கிருஷ்ணன் "பூதனையைகொன்றான் என்று ஸ்தோத்திரம் செய்து அவனை பற்றி பாட்டு பாடுகிறாயேஇதை கேட்க எனக்கு வெறுப்பாக இருக்கிறது.

अवलिप्तस्य मूर्शस्य केशवं स्तोतुमिच्छतः।

कथं भीष्म  ते जिह्वा शतधेयं विदीर्यते।।

ஏய் பீஷ்மாகர்வம்பிடித்தமுட்டாள் யாதவனான இந்த கிருஷ்ணனை நீ ஸ்தோத்திரம் செய்த போதேஉன் நாவானது ஏன் நூறாக வெடிக்காமல் போனது?

यत्र कुत्सा प्रयोक्तव्या भीष्म बालतरैर्नरैः।

तमिमं ज्ञानवृद्धः सन्गोपं संस्तोतुमिच्छसि।।     

பீஷ்மாஇவன் ஒரு பொடியன்மதிக்ககூட தகுதி இல்லாத இந்த இடையனைஉனக்கு அறிவு இருந்தும் துதிக்க நினைக்கிறாயே !

यद्यनेन हता बाल्ये शकुनिश्चित्रमत्र किम्।

तौ वाऽश्ववृषभौ भीष्ण यौ  युद्धविशारदौ।।    

குழந்தையாக இருந்த போதே ஒரு பறவையை (பகாசுரன்கொன்றான். 'பறவையை கொன்றான்..' என்று இவனை துதிக்கிறாயேஇதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறதுபீஷ்மாயுத்தம் செய்ய பயிற்சி இல்லாத குதிரையைகாளை மாட்டை இவன் குழந்தையாக இருந்த போது கொன்றான். அதையும் துதிக்கிறாயேஇதில் ஆச்சர்யபடும் அளவிற்கு ஒரு காரியமும் இல்லையே !

चेतनारहितं काष्ठं यद्यनेन निपातितम्।

पादेन शकटं भीष्ण तत्र किं कृतमद्भुतम्।।   

பிறந்த குழந்தையாக இருந்த போதேஉயிரில்லாத ஒரு மர தொட்டிலைகாலால் உதைத்தான்.  'அது உடைந்து விட்டது.. உடைந்து விட்டது.'. என்று பெரிதாக துதிக்கிறாயேஇதில் ஆச்சர்யபட என்ன இருக்கிறது?

अर्कप्रमाणौ तौ वृक्षौ यद्यनेन निपातितौ।

नागश्च दमितोऽनेन तत्र को विस्मयः कृतः।।     

ஏதோ உளுத்து போன இரு மரங்களுக்கு இடையே இவன் போன போதுஅது தானாக முறிந்து விட்டது. 'இரண்டு மருத மரத்தை முறித்தான்.. மரத்தையே முறித்தான்' என்று துதிக்கிறாயேபிறகுஒரு பாம்பை கொன்று இருக்கிறான்அதையும் பெரிதாக கொண்டாடுகிறாய்இதில் என்ன ஆச்சரியமான காரியம் இருக்கிறது

वल्मीकमात्रः सप्ताहं यद्यनेन धृतोऽचलः।

तदा गोवर्धनो भीष्म  तच्चित्रं मतं मम।।

ஏய் பீஷ்மா ! ஒரு புற்று போல இருக்கும் கோவர்தன மலையை இவன் 7 நாள் தூக்கினான் என்று கொண்டாடுகிறாயேஎனக்கு ஒரு ஆச்சர்யமும் இதில் தோன்றவில்லையே!

भुक्तमेतेन बह्वन्नं क्रीडता नगमूर्धनि।

इति ते भीष्ण शृण्वानाः परे विस्मयमागताः।।   

ஏய் பீஷ்மாமலைக்கு ஈடாக வைக்கப்பட்ட அன்னத்தைஇவன் ஒருவனே விழுங்கினான் என்று சொல்லி துதித்தாயே!  அதை கேட்டு மற்றவர்கள் வாய் பிளந்து கேட்கலாம்ஆனால் எனக்கு ஒரு ஆச்சர்யமும் தோன்றவில்லை!

यस्य चानेन धर्मज्ञ भुक्तमन्नं बलीयसः।

 चानेन हतः कंस इत्येतत्तु बलीयसः।             

தர்மம் தெரிந்த பீஷ்மாஇவன் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தவன்மகா பலசாலியான கம்ஸனுடைய  உணவையே தின்று விட்டுகம்சனையே கொன்றவன் இவன் என்பது தான் இவன் செய்த ஆச்சர்யமான வேலை

 ते श्रुतमिदं भीष्म नूनं कथयतां सताम्।         

यद्वक्ष्ये त्वामधर्मज्ञं वाक्यं कुरुकुलाधम।।

பீஷ்மாகுருவம்சத்தில் இழிவானவனேபெரியோர்கள் எது தர்மம்? என்று சொல்லி தரும் பொதுநீ அவர்கள் சொல்லை கேட்டதில்லை என்று தெரிகிறதுஆகையால் நான் உனக்கு தர்மத்தை சொல்லி தருகிறேன்.

स्त्रीषु गोषु  शस्त्राणि पातयेद्ब्राह्मणेषु च।        

इति सन्तोऽनुशासन्ति सञ्जना धर्मिणः सदा।

भीष्म लोके हि तत्सर्वं वितथं त्वयि दृश्यते।।    

'பெண்களையும்பசுக்களையும்ப்ராம்மணனையும்தன்னிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனையும் கொல்ல கூடாது' என்று தர்மம் அறிந்த அறிஞர்கள் எப்பொழுதும் உபதேசிக்கின்றனர்பீஷ்மாஉலகத்தில் உள்ள இந்த தர்மங்கள் எல்லாம் உன்னிடத்தில் இருப்பதாக கூட தெரியவில்லையே

ज्ञानवृद्धं  वृद्धं  भूयांसं केशवं मम।

अजानत इवाख्यासि संस्तुवन्कौरवाधम।।

அறிவு முதிர்ச்சி இல்லாமல்வயதும் முதிர்ந்து விட்ட நீ! கேசவனை எனக்கு எதிரில் பெருமை படுத்துகிறாய்இவனை பற்றி தெரியாதவன் என்று நினைத்துஎனக்கு சொல்கிறாய்.

गोघ्रः स्त्रीघ्नश्च सन्भीष्म त्वद्वाक्याद्यदि पूज्यते।

एवम्भूतश्च यो भीष्म कथं संस्तवमर्हति।।

பீஷ்மாவத்ஸாசுரன் என்று சொல்லி பசுவை கொன்ற இவனைபூதனை என்று சொல்லி பெண்ணை கொன்ற இவனை நீ உன் வாயால் எப்படி துதி செய்கிறாய்? 

 

असौ मतिमतां श्रेष्ठो  एष जगतः प्रभुः।

सम्भावयति चाप्येवं त्वद्वाक्याच्च जनार्दनः।

एवमेतत्सर्वमिति तत्सर्वं वितथं ध्रुवम्।।             

உன்னை போன்றோர்இவனை மஹா புத்திசாலி என்றும்உலகத்துதுக்கே ப்ரபு (ஜகந்நாதன்என்றும் சொல்லி புகழ்வதால்இவனும் நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான் என்று நினைத்துதன்னை ஜனார்தனன் என்று நினைக்கிறான்இவை அனைத்தும் பொய் என்பதே என் முடிவு.

 

आत्मानम् आत्मनाऽऽधातुं यदि शक्तो जनार्दनः।

अकामयन्तं तं भीष्म कथं साध्विव पश्यसि।।  

ஏய் பீஷ்மாஇவன் ஜனார்த்தனன்இவன் ஆத்மாவுக்கு ஆத்மாவாக இருக்கிறான்அனைத்தும் அறிய சக்தியுள்ளவன் என்று நீ சொல்கிறாயேதனக்கு முதல் மரியாதை கொடுப்பார்கள் என்று அவனுக்கே தெரியாத போதுநீ எதற்காக இவனுக்கு போய் முதல் மரியாதை செய்தாய்?

 गाथा गाथिनं शास्ति बहुचेदपि गायति।

प्रकृतिं यान्ति भूतानि कुलिङ्गशकुनिर्यथा।।     

எத்தனை முறை துதித்தாலும்அதற்கு சிலர் தகுதி இல்லாமல் தான் இருப்பார்கள்என்ன தான் பழக்கினாலும்குலிங்கசகுனி போன்ற  பறவைகள் அதனதன் மடத்தனமான குணத்தை விடாது

नूनं प्रकृतिरेषा ते जघन्या नात्र संशयटः।

नदीसुतत्वात्ते चित्तं चञ्चलं  स्थिरं स्मृतम् ।।    

அதுபோலஉன்னுடைய இயற்கையான குணமும் இழிவாக இருக்கிறதுஇதில் சந்தேகமே இல்லைநீ சஞ்சலமான கங்கை நதியின் பிள்ளை தானேஉன்னிடம் எப்படி ஸ்திரமான மனநிலையை எதிர்பார்க்க முடியும்?

अतः पापीयसी चैषां पाण्डवानामपीष्यते।

येषामर्च्यतमः कृष्णस्त्वं  येषां प्रदर्शकः।।      

இந்த கிருஷ்ணனை பூஜிப்பதும்அதற்காக நீ இவனை ஸ்தோத்திரம் செய்தும் இழிவானதுநீ சொன்னதை கேட்கும் இந்த பாண்டவர்கள் குணம் அதை விட இழிவானது என்று தெரிகிறது.

धर्मवांस्त्वमधर्मज्ञः सतां मार्गादवप्लुतः।

को हि धर्मिणमात्मानं जानञ्ज्ञानविदां वरः।।

உனக்கு தர்மமும் தெரியவில்லைபெரியவர்கள் சொன்ன வழியை பின்பற்றவும் தெரியவில்லை

நீயா தர்மிஷ்டன்பீஷ்மாஎந்த தர்மம் தெரிந்தவன்தெரிந்தே உன்னை போன்ற காரியத்தை செய்வான்?

कुर्याद्यथा त्वया भीषम कृतं धर्ममवेक्षता।

चेत्त्वं धर्मं विजानासि यदि प्राज्ञा मतिस्तव।।     

अन्यकामा हि धर्मज्ञा कन्यका प्राज्ञमानिना।

अम्बा नामेति भद्रं ते कथं साऽपहृता त्वया।।   

பெரிய தர்மம் தெரிந்தவன்பெரிய அறிவாளி என்று  சொல்லிக்கொள்கிறாயேபீஷ்மாவேறொருவனை காதலித்த அம்பாவை நீ தானே அபகரித்து கொண்டு சென்றாய்!

 

तां त्वयाऽपहृतां भीष्म कन्यां नैषितवान्नृपः।

भ्राता विचित्रवीर्यस्ते सतां मार्गमनुस्मरन्।।      

அப்படி அவளை கூட்டி சென்றும்பெரியோர்கள் காட்டிய தர்ம வழியை அறிந்த உன் சகோதரன் விசித்ரவீர்யன் உன்னுடைய இந்த அதர்மத்தை ஏற்கவில்லையேஅந்த கன்னிகையை ஏற்க மறுத்தானே!

 

भार्ययोर्यस्य चान्येन मिषतः प्राज्ञमानिनः।

तव जातान्यपत्यानि सज्जनाचरिते पथि।।         

அவன் மனைவிகளுக்கு (விசித்ரவீர்யன் இறந்த பிறகு), வேறொருவரால் சந்ததிகள் ஏற்பட்டதே தவிரநீ உயிரோடு இருந்தும் நீ ப்ரயோஜனப்படவில்லை.

 

को हि धर्मोऽस्ति ते भीषम ब्रह्मचर्यमिदं वृथा।

यद्धारयसि मोहाद्वा क्लीबत्वाद्वा  संशयः।।

பீஷ்மா ! உனக்கு என்ன தர்மம் இருக்கிறது?  உன் ப்ரம்மச்சர்யமே ஒரு பொய்பகட்டுக்காக தான் ப்ரம்மச்சர்யம் என்று சொல்லி கொள்கிறாய்நீ ஆண்மையில்லாதவன் என்பதே உண்மைஅதில் சந்தேகமே இல்லை.

 

 त्वं तव धर्मज्ञ पश्याम्युपचरं क्वचित्।

 हि ते सेविता वृद्धा  एवं धर्ममब्रवीः।।

நீ எந்த தர்மத்திலும் இருப்பதாக எனக்கு தெரியவே இல்லைநீ பெரியோர்களுக்கு சேவை செய்ததாகவும் தெரியவில்லைதர்மமே தெரியாத நீ தர்மம் பேசுகிறாய்.


इष्टं दत्तमधीतं  यज्ञाश्च बहुदक्षिणाः।

सर्वमेतदपत्यस्य कलां नार्हन्ति षोडशीम्।।

தானங்கள் அள்ளி கொடுப்பதும்யாகங்கள் செய்வதும்தக்ஷிணைகள் அதிகமாக கொடுப்பதும் தர்மமே என்றாலும்சந்ததி என்னும் தர்மத்தை உருவாக்கியவனுக்கு முன்னால் இந்த தர்மங்கள் எல்லாம்,  16ல் ஒரு பங்கு தான்.

 

व्रतोपवासैर्बहुभिः कृतं भवति भीष्म यत्।

सर्वं तदनपत्यस्य मोघं भवति निश्चयात्।।         

பீஷ்மா!  சந்ததி இல்லாதவன்பலவகை விரதங்கள்உபவாசங்கள்  செய்தாலும் பயனற்றது என்று சாஸ்திரம் சொல்கிறது.

 

सोऽनपत्यश्च वृद्धश्च मिथ्याधर्मानुशासनात्।

हंसवत्त्वमपीदानीं ज्ञातिभ्यः प्राप्नुया वधम्।।

சந்ததியும் இல்லாமல்வயதாகி போன நீபொய்யான தர்மத்தை உபதேசித்த ஹம்ச பக்ஷி (அன்ன பறவை), தன் சுற்றத்தாராலேயே இறந்து போனது போலஇறந்து போக போகிறாய்.

 

एवं हि कथयन्त्यन्ये नरा ज्ञानविदः पुरा।

भीष्म यत्तदहं सम्यग्वक्ष्यामि तव शृण्वतः।।

பீஷ்மாமுன்னொரு காலத்தில் சொல்லப்பட்ட இந்த ஹம்சபக்ஷியின் கதையை சொல்கிறேன்இதையாவது ஒழுங்காக கேள்.

वृद्धः किल समुद्रान्ते कश्चिद्धंसोऽभवत्पुरा।

धर्मवागन्यथावृत्तः पक्षिणः सोऽनुशास्ति च।।   

धर्म चरत माऽधर्ममिति तस्य वचः किल।

पक्षिणः शुश्रुवुर्भीष्म सततं धर्मवादिनः।।          

முன்னொரு காலத்தில்மற்றவர்களுக்கு தர்மத்தை சொல்லிக்கொண்டும்தான் அதன் வழியில் வாழாமலும்ஒரு கிழ ஹம்ச பறவை ஒன்று இருந்ததுஅது மற்ற பறவைகளுக்கு தர்மத்தை உபதேசிப்பது வழக்கம்"தர்மத்தையே செய்யுங்கள். அதர்மம் செய்யாதீர்கள்" என்று அழகாக உபதேசம் செய்யும் அந்த பறவை. பீஷ்மா! இதை கேட்டு மற்ற பறவைகளும் நடந்தன.

 

हंसस्य तु वचः श्रुत्वा मुदिताः सर्वपक्षिणः।

ऊचुश्चैव स्वगा हंसं परिवार्य  सर्वशः।।

कथयस्व भवान्सर्वं पक्षिणां तु समासतः।

को हि नाम द्विजश्रेष्ठ ब्रूहि नो धर्म उत्तमः।।

எப்பொழுதும் தர்மத்தையே பேசும் இந்த அன்ன பறவையை கண்டு மற்ற பறவைகள் மகிழ்ந்தனஒருநாள்அந்த பறவைகள் எல்லாம் சேர்ந்து கொண்டு, "நீங்கள் எங்களுக்கு தர்மங்களை எல்லாம் தொகுத்து சொல்ல வேண்டும்எங்களுக்கு எது  சிறந்த தர்மம் என்று சொல்ல வேண்டும்?" என்று கேட்டு கொண்டன...

 

हंस उवाच।। (அந்த அன்னப்பறவை பேசியது)

प्रजास्वहिंसा धर्मो वै हिंसाऽधर्मः खगव्रजाः।

एतदेवानुबोद्धव्यं धर्माधर्मः समासतः।।

மற்ற பறவைகளை பார்த்து, "நம் மக்களுக்கு துன்பம் தராமல் இருப்பதே தர்மம்அவர்களுக்கு கஷ்டங்கள் கொடுப்பதே பாபம். பாவ புண்ணியங்களை சுருக்கமாக இவ்வாறே நீங்கள் அறிந்து கொள்ளலாம்என்று சொன்னது.

 

शिशुपाल उवाच।।  (சிசுபாலன் சொன்னான்)

वृद्धहंसवचः श्रुत्वा पक्षिणस्ते सुसंहिताः।

ऊचुश्च धर्मलुब्धास्ते स्मयमाना इवाण्डजाः।।

இந்த கிழ பறவை இப்படி தர்ம உபதேசம் செய்ததை கேட்ட மற்ற பறவைகள் பெரிதும் மகிழ்ந்தன.

 

धर्मं यः कुरुते नित्यं लोके धीरतरोऽण्डजः।

 यत्र गच्छेद्धर्मात्मा तन्मे ब्रूहीह तत्त्वतः।।

அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து அந்த கிழப்பறவையிடம்  "தர்மாத்மாவாக இருந்து இந்த உலகில் தர்மத்தில் உறுதியாக இருந்து வாழ்க்கை நடத்துபவர்கள் எந்த கதியை அடைவார்கள் என்று தாங்கள் சொல்ல வேண்டும்என்று கேட்டன,

 

हंस उवाच।। (அன்னப்பறவை பேச ஆரம்பித்தது)

बाला यूयं  जानीध्वं धर्मसूक्ष्मं विहङ्गमाः।

धर्मं यः कुरुते लोके सततं शुभबुद्धिना।

 चायुषोऽन्ते स्वं देहं त्यक्त्वा स्वर्गं  गच्छति।।             

तथाऽहमपि  त्यक्त्वा काले देहमिमं द्विजाः।

स्वर्गलोकं गमिष्यामि इयं धर्मस्य वै गतिः।।      

एवं धर्मकथां चक्रे  हंसः पक्षिणां भृशम्।

पक्षिणः शुश्रुवुर्भीष्म सततं धर्ममेव ते।।             

"குழந்தைகளேதர்மம் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்எவன் இந்த உலகில் நல்ல எண்ணத்தோடுதர்ம சிந்தனையோடு வாழ்கிறானோஅவன் தன் வாழ்நாள் முடிவில் இந்த உடம்பை விடும் போதுஸ்வர்க லோகம் சென்று விடுவான்இதுவே தர்மத்தின் முடிவு." என்று மற்ற பறவைகளிடம் பலமுறை உபதேசம் செய்து கொண்டிருந்ததுபீஷ்மாஇது போன்று 100 முறை தர்ம உபதேசம் இந்த கிழ பறவையிடம் கேட்டு கொண்டு இருந்தது மற்ற பறவைகள்.

 

अथास्य भक्ष्यमाजह्रुः समुद्रजलचारिणः।

अण्डजा भीष्म तस्यान्ये धर्मार्थमिति शुश्रुम।।  

பீஷ்மா!  அந்த பறவைகள் பறந்து சென்று சமுத்திரத்தில் கிடைக்கும் உணவுகளை எடுத்து வந்துதர்ம உபதேசம் செய்யும் இந்த கிழ பறவைக்கு கொடுப்பது வழக்கம்.

 

ते  तस्य समभ्याशे निक्षिप्याण्डानि सर्वशः।

समुद्राम्भस्यमोदन्त चरन्तो भीष्म पक्षिणः।।

பீஷ்மாஅந்த பறவைகள் எல்லாம்தாங்கள் இட்ட முட்டைகளை அந்த கிழ அன்னத்துக்கு அருகில் வைத்து விட்டுகடல் நீரில் மகிழ்ச்சியோடு உலாவிக்கொண்டு இருந்தன.

 

तेषामण्डानि सर्वेषां भक्षयामास पापकृत्।

 हंसः सम्प्रमत्तानामप्रमत्तः स्वकर्मणि।।

தன் காரியத்தை நடத்தி கொள்வதில் கை தேர்ந்த அந்த கிழ பறவைஎச்சரிக்கை இல்லாத மற்ற பறவைகளின் முட்டைகளை தின்றது.

 

ततः प्रक्षीयमाणेषु तेषु तेष्वण्डजोऽपरः।

अशङ्कत महाप्राज्ञः  कदाचिद्ददर्श ह।।          

ஒரு நாள்எதேச்சையாக ஒரு புத்திசாலி பறவை மட்டும்முட்டைகள் குறைவதை உணர்ந்து சந்தேகம் அடைந்தது.

ततः सङ्कथयामास दृष्ट्वा हंसस्य किल्बिषम्।

तेषां परमदुःखार्तः  पक्षी सर्वपक्षिणाम्।। 

இப்படி இந்த கிழ பறவை முட்டைகளை தின்பதை கண்ட ஒரு நாள் பார்த்து விட்ட அந்த பறவைமற்ற பறவைகளிடம் நடக்கும் பாவ செயலை தெரிவித்து விட்டது.

 

ततः प्रत्यक्षतो दृष्ट्वा पक्षिणस्ते समीपगाः।

निजघ्नस्तं तदा हंसं मिथ्यावृत्तं कुरूद्वह।।

கௌரவனேஇப்படி அந்த பறவை சொன்னதும்மற்ற பறவைகளும் தன் கண்களால் நடப்பதை பார்த்ததுதாங்களே அந்த கிழ பறவையை கொன்று போட்டன.

 

एवं त्वां हंसधर्माणमपीमे वसुधाधिपाः।

निहन्युर्भीष्म सङ्क्रुद्धाः पक्षिणस्तं यथाण्डजम्।।          

ஏய் பீஷ்மாஅந்த கிழ பறவையின் ஒழுக்கத்தை போன்றே நீயும் இருப்பதால்ஒரு நாள் உன்னையும் இந்த அரசர்களே கொல்வார்கள்.

 

गाथामप्यत्र गायन्ति ये पुराणविदो जनाः।

भीष्म यां तां  ते सम्यक्वथयिष्यामि भारत।।  

अन्तरात्मन्यभिहते रौषि पत्ररथाशुचि।

अण्डभक्षणकर्मैतत्तव वाचमतीयते।।

பீஷ்மாஇப்படி இந்த அன்னப்பறவையின் கதையை புராண கதையாக பாடி அந்த பறவையை பார்த்து கடைசியாக பாடுகிறார்கள்அதன் அர்த்தத்தை சொல்கிறேன் கேள். " பறவையேமனம் கெட்டு மன தூய்மை இல்லாத பேச்சை பேசியே வாழ்ந்தாய்உன் மக்களின் முட்டைகளையே தின்றுசொல்வது ஒன்றுசெய்வது ஒன்று வாழ்ந்து கடைசியில் மரணித்தாய்"

 

शिशुपाल उवाच। (சிசுபாலன் மேலும் சொல்கிறான்)

 मे बहुमतो राजा जरासन्धो महाबलः।

योऽनेन युद्धं नेयेष दाक्षोऽयमिति संयुगे।।   

இந்த கிருஷ்ணன் ஒரு வேலைக்கார பயல் என்பதால் தானேமஹாபலசாலியான ஜராஸந்தன் இவனோடு மல்யுத்தம் செய்ய விரும்பவில்லைநான் ஜராஸந்தனை வெகுமானிக்கிறேன்

 

केशवेन कृतं कर्म जरासन्धवधे तदा।

भीमसेनार्जुनाभ्यां  कस्तत्साध्विति मन्यते।।

ஜராஸந்தனை கொல்வதற்காக இந்த கேசவன் செய்த காரியத்தையும் , பீம அர்ஜுனன் செய்த காரியத்தையும் அறிந்த எவன் இவர்களை மதிப்பான்?

 

उद्वारेण प्रविष्टेन छद्मना ब्रह्मवादिना।

दृष्टः प्रभावः कृष्णेन जरासन्धस्य भूपतेः।।

ஜராஸந்தனின்  பராக்ரமம் தெரிந்ததால் தானேபின் வாசல் வழியாக நுழைந்துதன்னை பிராம்மணன் என்று கூறிக்கொண்டான்  இந்த கிருஷ்ணன்.

 

येन धर्मात्मनाऽऽत्मानं ब्रह्मण्यमभिजानता।

प्रेषितं पाद्यमस्मै तद्दातुमग्रे दूरात्मने।।

மஹாத்மாவான ஜராஸந்தன்ப்ராம்மணர்களுக்கு தானம் கொடுக்க பாத்யம் கொடுக்கும் போதுபிராம்மண வேஷத்தில் இவன் முதலில் வந்து இந்த துராத்மா பாத்யம் பெற்றுக்கொண்டான்.

 

भुज्यतामिति तेनोक्ताः कृष्णबीमधनञ्जयाटः।

जरासन्धेन कौरव्य कृष्णेन विकृतं कृतम्।।     

பிராம்மணர்கள் போல வந்த இந்த கிருஷ்ணனைபீமனை ஜராசந்தன் பூஜித்துதானம் செய்ய முற்பட்டான்தானத்திற்கு பதிலாக இந்த கிருஷ்ணன் காரியங்கள் செய்தான்.

 

यद्ययं जगतः कर्ता यथैनं मूर्ख मन्यसे।

कस्मान्न ब्राह्मणं सम्यगात्मानमवगच्छति।।

மூர்க்கனேஇவனை நீ எப்படி உலகத்தை படைத்தவன் என்று சொல்லி திரிகிறாய்இவன் முதலில் தான் பிராம்மணன் இல்லை என்று கூட அறியவில்லையே!

इदं त्वाश्चर्यभूतं मे यदिभे पाण्डवास्त्वया।

अपकृष्टाः सतां मार्गान्मन्यन्ते तच्च साध्विति।। 

अथवा नैतदाश्चर्यं येषां त्वमसि भारत।

स्त्रीसधर्मा  वृद्धश्च सर्वार्थानां प्रदर्शकः।।

இந்த பாண்டவர்களும்நல்லவர்கள் சொல்லும் வழியை பின்பற்றாமல்நீ சொல்வதை சரி என்று நினைத்து இழுக்கப்பட்டு இருக்கிறார்கள்பாரதனேஇது எனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருந்தாலும்பெண் தன்மை கொண்ட கிழவனான உன்னிடம்  உபதேசம் பெற்ற இவர்கள்செய்யும் இந்த செயலை கண்டு எனக்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை.

 

वैशम्पायन उवाच।।             (வைசம்பாயனர் ஜனமேஜெயனிடம் சொல்கிறார்)

तस्य तद्वचनं श्रुत्वा रूक्षं रूक्षाक्षरं बहु।

चकोप बलिनां श्रेष्ठो भीमसेनः प्रतापवान्।।      

இப்படி சிசுபாலன் சபையில் மிக்க கோபத்தோடும்கடுமையான சொற்களாலும் பேசியதும்பலவான்களில் சிறந்தவனும்பராக்ரமசாலியுமான பீமசேனன் கோபித்தான்.

 

तथा पद्मप्रतीकाशे स्वभावायतविस्तृते।

भूयः क्रोधाभिताम्राक्षे रक्ते नेत्रे बभूवतुः।। 

இயற்கையாகவே தாமரை போன்று நீண்ட கண்களும்சிவந்தும் காணப்படும் பீமனின் கண்கள் மேலும் சிவந்து காணப்பட்டது

 

त्रिशिखां भ्रकुटीं चास्य ददृशुः सर्वपार्थिवाः।

ललाटस्थां त्रिकूटस्थां गङ्गां त्रिपथगामिव।।

அவன் கோபத்தில் புருவத்தை உயர்த்தி கோபத்தோடு பார்த்த போதுஅவன் நெற்றியில் ஏற்பட்ட மூன்று கோடுகள்த்ரிகூட மலையில் மூன்று பிரிவாக ஓடும் கங்கை போல அங்கு இருந்த மற்ற அரசர்கள் கண்டனர்.

 

दन्तान्सन्दशतस्तस्य कोपाद्ददृशुराननम्।

युगान्ते सर्वभूतानि कालस्येव जिघत्सतः।।

கோபத்தால் பீமசேனன் பற்களை கடிப்பதை பார்த்துபிரளய காலத்தில் அனைத்து உயிர்களையும் விழுங்க வந்த காலன் போல தெரிந்தது அங்கு இருந்தவர்களுக்கு.

 

उत्पतन्तं तु वेगेन जग्राहैनं मनस्विन्।

भीष्म एव महाबाहुर्महासेनमिवेश्वरः।।             

கோபம் தாங்காமல் குபீரென்று வேகமாக கிளம்பிய பீமனைமஹா சேனனான குமரனை (முருகனைசிவபெருமான் தடுத்தது போல தடுத்தார்.

 

तस्व भीमस्य भीष्मेण वार्यमाणस्य भारत।

गुरुणा विविधैर्वाक्यैः क्रोधः प्रशममागतः।।

அந்த பீமனுக்கு பல வார்த்தைகள் சொல்லி பீஷ்மர் சமாதானம் செய்த பிறகுபீமனின் கோபம் அடங்கியது.

 

नातिचक्राम भीष्मस्य  हि वाक्यमरिन्दमः।

समुद्वृत्तो घनापाये वेलामिव महोदधिः।।

எப்படி சமுத்திர ஜலம் கரையை கடக்காமல் கட்டுப்பட்டு இருக்குமோஅது போலபீஷ்மரின் வார்த்தையை மீற முடியாமல் பீமன் கட்டுப்பட்டு இருந்தான்.

शिशुपालस्तु सङ्क्रुद्धे भीमसेने जनाधिप।

नाकम्पत तदा वीरः पौरुषे व्यवस्थितः।। 

தன் பராக்ரமத்தில் அதீத நம்பிக்கை கொண்ட சிசுபாலனோபீமசேனன் கோபித்த போதும் துளியும் கலங்கவில்லை.

 

उत्पतन्तं तु वेगेन पुनः पुनररिन्दमः।

  तं चिन्तयामास सिंहः क्रुद्धो मृगं यथा।।    

பீமசேனன் கோபப்பட்டு சிசுபாலனை நோக்கி வேகமாக வர முயன்ற போதெல்லாம்கோபமுள்ள சிங்கம் எப்படி மற்ற மிருகத்தை மதிக்காதோஅது போலபீமஸேனனின் கோபத்தை பொருட்படுத்தாமலேயே இருந்தான்.

 

प्रहसंश्चाब्रवीद्वाक्यं चेदिराजः प्रतापवान्।

भीमसेनमभिक्रुद्धं दृष्ट्वा भीमपराक्रमम्।।

मुञ्चैनं भीष्म पश्यन्तु यावदेनं नराधिपः।

मत्प्रभावविनिर्दग्धं पतङ्गमिव वह्निना।।

அது மட்டுமில்லாமல்கோபத்தோடு காணப்பட்ட பீமனை பார்த்துசிரித்து கொண்டே, "ஏய் பீஷ்மாஇவனை ஏன் தடுக்கிறாய்இவனை விடுவிளக்கில் தானாக வந்து விழும் விட்டிற்பூச்சி போலஎன் பராக்ரமம் என்ற அக்னியில் விழுந்து இவன் எரியப்போவதை இங்கு இருக்கும் அரசர்கள் பார்க்கட்டும்என்று கர்ஜித்தான்.

 

ततश्चेदिपतेर्वाक्यं श्रुत्वा तत्कुरुसत्तमः।

भीमसेनमुवाचेदं भीष्मे मतिमतां वरः।।

இப்படி சேதி நாட்டு அரசன் சிசுபாலன் சொன்னதும்கௌரவர்களில் உத்தமரான பீஷ்மர்பீமனை பார்த்து இவ்வாறு பேசலானார்.

 

नैषा चेदिपतेर्बुद्धिर्यत्त्वामाह्वयतेऽच्युतम्।

भीमसेन महाबाहो कृष्णस्यैव विनिश्चयः।।

"பீமஸேனாயுத்தத்தில் தோல்வியே அடையாத உன்னைஇவன் யுத்தத்திற்கு அழைக்கிறான் பார் ! இப்பொழுது இவன் சுய புத்தியோடு பேசவில்லை என்று அறிந்து கொள்இவன் இப்படி பேச வேண்டும் என்று கிருஷ்ணன் சங்கள்பித்து விட்டான்என்று சொன்னார்.

 

भीष्म उवाच।।      (பீஷ்மர் மேலும் சொல்கிறார்)

चेदिराजकुले जातख्यक्ष एष चतुर्भुजः।

रासभारावसदृशं ररास  ननाद च।।

பீமாஇந்த சிசுபாலன் சேதி ராஜனுக்கு பிறக்கும் போதுமூன்று கண்களோடு, நான்கு கைகளோடு பிறந்தான்பிறக்கும் போது கழுதை போல இரைந்து ஊளையிட்டான்.

 

तेनास्य मातापितरौ त्रेसतुस्तौ सबान्धवौ।

वैकृतं तस्यत तौ दृष्ट्वा त्यागायाकुरुतां मतिम्।। 

ततः सभार्यं नृपतिं सामात्यं सपुरोहितम्।

चिन्तासंमूढहृदयं वागुवाचाशरीरेणी।।

இப்படி இவன் பிறந்ததை பார்த்த இவன் தாய் தந்தை இருவரும்இவனை தியாகம் செய்ய முடிவு செய்தனர்அந்த அரசர், தன் மனைவியோடும், மந்திரிகளோடும், புரோஹிதர்களோடும் கலந்து இதை பற்றி ஆலோசித்து கொண்டு இருந்த போது, அசரீரி வாக்கு கேட்டது.

 

एष ते नृपते पुत्रः श्रीमाञ्जातो बलाधिकः।

तस्मादस्मान्न भेतव्यमव्यग्रः पाहि वै शिशुम्।।

  वै तस्य मृत्युस्त्वं  कालः प्रत्युपस्थितः।

यश्च शस्त्रेण हन्ताऽस्य  चोत्पन्नो नराधिप।।

संश्रुत्योदाहृतं वाक्यं भूतमन्तर्हितं ततः।

पुत्रस्नेहाभिसन्तप्ता जननी वाक्यमब्रवीत्।।

"ராஜன்உன்னுடைய புத்ரன் பலம் மிகுந்தவனாக பிறந்து இருக்கிறான்ஆதலால்இவனை கண்டு பயப்பட வேண்டாம்கலக்கமில்லாமல் இவனை காப்பாற்றுஇவனுக்கு உன்னால் மரணமில்லைமரணகாலம் இவனுக்கு இப்போது இல்லை.

ராஜன்இவனை ஆயுதத்தால் கொல்ல போகிறவன் எவனோஅவனும் பிறந்து இருக்கிறான்என்று அசரீரி வாக்கு கேட்டது.

 

येनेदमीरितं वाक्यं ममैतं तनयं प्रति।

प्राञ्जलिस्तं नमस्यामि ब्रवीतु  पुनर्वचः।।

याथातथ्येन भगवान्देवो वा यदि वेतरः।

श्रोतुमिच्छामि पुत्रस्य कोऽस्य मृत्युर्भविष्यति।।

இப்படி தன் மகனை பற்றி அசரீரி வாக்கு கேட்டதும்புத்ர பாசம் உள்ளதாயானவள், "என் புத்ரனை பற்றி இவ்வாறு பேசியவர் யாரோஅவரை நான் கை கூப்பி வணங்கி கேட்கிறேன்மஹிமையுள்ள தேவ புருஷராகிய நீங்கள் யாராக இருந்தாலும்எனக்காக மறுபடியும்  விரிவாக சொல்ல வேண்டுகிறேன்என் பிள்ளைக்கு காலனாக போகிறவன் யார் என்று அறிய விருபுகிறேன்என்று பிரார்த்தனை செய்தாள்.

 

अन्तर्भूतं ततो भूतमुवाचेदं पुनर्वचः।

यस्योत्सङ्गे गृहीतस्य भुजावभ्यधिकावुभौ।।     

पतिष्यतः क्षितितले पञ्चशीर्षाविवोरगौ।

तृतीयमेतद्बालस्य ललाटस्थं तु लोचनम्।।        

தன்னை மறைத்து கொண்டு பேசிய அந்த தேவன்மேலும் இவ்வாறு பேசலானான்

"எவன் தன் மடியில் இந்த குழந்தையை எடுத்து கொள்ளும் போதுஇயற்கைக்கு மாறான  அதிகப்படியான இரண்டு கைகளும், 5 தலை நாகம் போல தரையில் விழுமோஎவனை இந்த குழந்தை பார்த்தவுடனேயே மூன்றாவது கண்ணும் மறைந்து போகுமோ!  அவனே இவனுக்கு காலனாக அமைவான்என்று சொல்லி மறைந்தது.

 

निमज्जिष्यति यं दृष्ट्वा सोऽस्य मृत्युर्भविष्यति।

त्र्यक्षं चतुर्भुजं श्रुत्वा तथा  समुदाहृतम्।।

पृथिव्यां पार्थिवाः सर्वे अभ्यागच्छन्दिदृक्षवः।

तान्पूजयित्वा सम्प्राप्तान्यथार्हं  महीपतिः।।

இப்படி அசரீரி சொன்ன பிறகுநான்கு கைகளோடும்மூன்று கண்களோடும் இருந்த இவனை பூமியில் இருக்கும் அனைத்து அரசர்களும் வந்து வந்து பார்த்தனர்

 

एकैकस्य नृपस्याङ्के पुत्रमारोपयत्तदा।

एवं राजसहस्राणा पृथक्त्वेन यथाक्रमम्।।

சேதி அரசன்வந்த அரசர்கள் ஒவ்வொருவரையும் தகுந்த மரியாதையோடு பூஜித்துஒவ்வொரு அரசனின் மடியிலும் தன் பிள்ளையை கொடுத்து பார்த்தான்இது போல, அநேக ஆயிரம் அரசர்கள் மடியில் குழந்தையை கொடுத்து பார்த்தான்.

शिशुरङ्के समारूढो  तत्प्राय निदर्शनम्।

एतदेव तु संश्रुत्य द्वारवत्यां महाबलौ।।

இத்தனை முயற்சி செய்தும்குழந்தையின் அதிகப்படியான அங்கங்கள் மறையவில்லைமஹாபலசாலிகளானயாதவர்களான ராமனும் கிருஷ்ணனும் துவாரகா நகரத்தில் இதை பற்றி கேள்விப்பட்டனர்.

 

ततश्चेदिपुरं प्राप्तौ सङ्कर्षणजनार्दनौ।

यादवौ यादवीं द्रुष्टुं स्वसारं तौ पितुस्तदा।।

अभिवाद्य यथान्यायं यथाश्रेष्ठं नृपं  ताम्।

कुशलानामयं पृष्ट्वा निषण्णौ रामकेशवौ।।

யாதவ குல பெண்ணானதன் தகப்பனார் "வசுதேவரின்தங்கையான சேதி நாட்டு அரசியை பார்க்க பலராமரும்கிருஷ்ணனும் வந்தனர்ராமரும்கிருஷ்ணனும் தன் தந்தைக்கு சமமான அந்த அரசரை வந்தனம் செய்து க்ஷேமத்தை விஜாரித்தார்.

 

साऽभ्यर्च्य तौ तदा वीरौ प्रीत्या चाभ्यधिकं ततः।

पुत्रं दामोदरोत्सङ्गे देवी संन्यदधात्स्वयम्।। 

வந்திருந்த ராமகிருஷ்ணன் இருவரையும் ஆசையோடு வரவேற்றுதன் பிள்ளையை தானே கிருஷ்ணன் மடியில் வைத்தாள்

 

न्यस्तमात्रस्य तस्याङ्के भुजावभ्यधिकावुभौ।

पेततुस्तच्च नयनं न्यमज्जत ललाटजम्।।

கிருஷ்ணன் மடியில் வைத்த மாத்திரத்தில்அந்த குழந்தையின் அதிகப்படியான இரண்டு கைகளும் விழுந்தனஅதன் நெற்றியில் (லலாடம்இருந்த கண்ணும் உடனே மறைந்தன.

 

तद्दृष्ट्वा व्यथिता त्रस्ता वरं कृष्णमयाचत।

ददस्व मे वरं कृष्ण भयार्ताया महाभुज।।

त्वं हि आर्तानां सम आश्वासो भीतानाम् अभयप्रदः।

एवम् उक्तस्ततः कृष्णः अब्रवीद् मदुनन्दनः।।  

இதை கண்ட அந்த அரசிபெரும் துக்கமும்பயமும் அடைந்தாள்கிருஷ்ணனை பார்த்து, "கிருஷ்ணாஉறுதியான புஜங்கள் கொண்டவனேபயத்தினால் தவிக்கும் எனக்கு நீ ஒரு வரம் தருவாயோநீ துயரப்படுபவர்களுக்கு ஆறுதலும்பயத்தில் உள்ளவர்களுக்கு அபயமும் அளிப்பவன் ஆயிற்றே! " என்றாள் 

 

मा भैस्त्वं देवि धर्मज्ञे  मत्तोऽस्ति भयं तव।

ददामि कं वरं किं  करवाणि पितृष्वसः।।     

शक्यं वा यदि वाऽशक्यं करिष्याणि वचस्तव।

एवमुक्ता ततः कृष्णमब्रवीद्यदुनन्दनम्।।         

இவ்வாறு இவள் சொன்னதை கேட்ட கிருஷ்ணன் "அரசியேதர்மம் தெரிந்தவளேநீங்கள் பயப்பட வேண்டாம்என்னால் உங்களுக்கு  பயம் வேண்டாம்என் தகப்பனாரின் சகோதரியேஉங்களுக்கு என்ன வரம் நான் கொடுக்க வேண்டும்அல்லது நான் என்ன செய்ய வேண்டும்செய்ய முடிந்ததாக இருந்தாலும்செய்ய முடியாததாக இருந்தாலும் நீங்கள் சொன்னால் செய்வேன்என்று வாக்கு கொடுத்தார்.

 

शिशुपालस्यापराधान्क्षमेथास्त्वं महाबल।

मत्कृते यदुशार्दूल विद्ध्येनं मे वरं प्रभो।।

இப்படி சொன்ன கிருஷ்ணனை பார்த்து, "மஹா பலசாலியேயது குலத்தில் உயர்ந்தவனேப்ரபோசிசுபாலன் செய்யும் பிழைகளை எனக்காக பொறுப்பாயாகஇதுவே நான் கேட்கும் வரம்என்றாள்.

 

कृष्ण उवाच। (கிருஷ்ணர் சொல்கிறார்)

अपराधशतं क्षाम्यं मया ह्यस्य पितृष्वसः।

पुत्रस्य ते वधार्हस्य मा त्वं शोके मनः कृथाः।।

"அத்தைஉன்னுடைய பிள்ளை என்னை பார்த்து 100 முறை ஏசும் வரைஅவன் அபராதத்தை பொறுத்து கொண்டு இருப்பேன்.நீ துக்கத்தில் மனதை செலுத்தாதே!" என்று சமாதானம் செய்து வாக்குறுதி கொடுத்தார்.

 

भीष्म उवाच।  (பீஷ்மர் பீமனிடம் சொன்னார்)

 जानन्नात्मनो मृत्युं कृष्णं यदुसुखावहम्।

एवमेष नृपः पापः शिशुपाः सुमन्दधीः।

त्वां समाह्वयते वीर गोविन्दवरदर्पितः।।

வீரனான பீமஸேனாயாதவ மக்களை காப்பாற்றி சுகப்படுத்தும் ஸ்ரீகிருஷ்ணன் தான் 'தனக்கு ம்ருத்யுவை தர போகிறான்என்று தெரிந்த இந்த பாவியான சிசுபாலன்கிருஷ்ணன் கொடுத்த வரத்தினால் பாதுகாக்க படுவதால்கர்வப்பட்டுமதி இழந்து உன்னை வேண்டுமென்றே யுத்தத்திற்கு அழைக்கிறான்.

 

भीष्म उवाच।।      (மேலும் பீஷ்மர் சொன்னார்)

नैषा चेदिपतेर्बुद्धिर्यया त्वाह्वयतेऽच्युतम्।

नूनमेव जगद्भर्तुः कृष्णस्यैव विनिश्चयः।            

பீமஸேனாநீ எந்த யுத்தத்திலும் தோல்வி அடையாதவன் என்று தெரிந்தும்இந்த சேதி நாட்டு அரசன் உன்னை யுத்தம் செய்ய அழைக்கிறான் என்றால்இவன் இவனுடைய புத்தியால பேசவில்லை என்று புரிந்து கொள்லோகநாதனாகிய கிருஷ்ணனின் எண்ணத்தின் படி தான் இவன் இப்போது பேசி கொண்டு இருக்கிறான்.

 

को हि मां भीमसेनाद्य क्षितावर्हति पार्थिवः।

क्षेप्तुं कालपरीतात्मा यथैष कुलपांसनः।।

இவன் குலத்தை நாசம் செய்து கொள்ளகெட்ட காலத்தின் பிடியினால் மதி கேட்டு பேசும் இந்த சிசுபாலன்யாருமே தூஷிக்க துணியாத என்னை பார்த்து தூஷிக்கிறான்

 

एष ह्यस्य महाबाहुस्तेर्जोशश्च हरेर्ध्रुवम्।

तमेव पुनरादातुं कुरुतेऽत्र मतिं हरिः।।

உறுதியான புஜங்களை கொண்ட இந்த சிசுபாலனும்ஸ்ரீ கிருஷ்ணனின் சக்தியில் ஒரு பாகம் தான் என்பது மறுக்கமுடியாத நிஜமேஸ்ரீ கிருஷ்ணன் இப்போது அந்த சக்தியை தன்னோடு சேர்த்து கொள்ள முடிவு செய்து விட்டார் என்று தெரிகிறது.           

येनैष कुरुशार्दूल शार्दूल इव चेदिराट्।

गर्जत्यतीव दुर्बुद्धिः सर्वानस्मानचिन्तयन्।।

குரு வம்சத்தில் உதித்த உத்தமனேஅதனால் தான் இன்று இந்த மதி கெட்ட சிசுபாலன்நாம் எல்லோரையும் மதிக்காமல் புலி போல கர்ஜித்து கொண்டு இருக்கிறான்இவ்வாறு பீஷ்மர் சொன்னார்

 

वैशम्पायन उवाच।। (வைசம்பாயனர் சொல்கிறார்)

ततो  ममृषे चैद्यस्तद्भीष्मवचनं तदा।

उवाच चैन सङ्क्रुद्धः पुनर्भीष्ममथोत्तरम्।।

இப்படி பீஷ்மர் சொல்வதை கேட்ட சேதி நாட்டு அரசன் சிசுபாலன்பொறுக்க முடியாமல்மறுபடியும் பீஷ்மரை பார்த்து கோபமாக பேசலானான்.

 

शिशुपाल उवाच।।   (சிசுபாலன் பேசுகிறான்)

द्विषतां नोऽस्तु भीष्मैष प्रभावः केशवस्य यः।

यस्य संस्तववक्ता त्वं बन्दिवत्सततोत्थितः।।

ஏய் பீஷ்மாநீ இந்த கேசவனை துதி பாடியதை எல்லாம் என் மீது பாட கற்றுக்கொள்நீ ராஜாக்களுக்கு துதி பாடும் பந்திக்கள் போலஓயாமல் இவனையே ஸ்துதி செய்கிறாயே !

 

संस्तवे चमनो भीष्म परेषां रमते यदि।

तदा संस्तुहि राज्ञस्त्वमिमं हित्वा जनार्दनम्।।

ஏய் பீஷ்மா ! உனக்கு அப்படி தான் வெளியாளான ஜனார்தனனை துதிக்க பழக்கம் இருந்தால்அதை மாற்றி கொண்டுமற்ற வெளி அரசர்களை துதி செய்து கொண்டு இருக்கலாமே!

 

दरदं स्तुहि बाह्लीकमिमं पार्थिवसत्तमम्।

जायमानेन येनेयभवद्दारिता मही।। 

உனக்கு யாரையாவது துதி பாடி கொண்டே இருப்பது பழக்கம் என்றால்இதோ பாஹ்லீக தேச அரசர் இருக்கிறார்அவரை துதி செய்இவர் பிறக்கும் போதே இந்த பூமியை பிளந்தவர்.

 

वङ्गाङ्गविषयाध्यक्षं सहस्राक्षसमं बले।

स्तुहि कर्णमिमं भीष्म महाचापविकर्षणम्।।

ஏய் பீஷ்மா!  உனக்கு மேலும் துதி பாட வேண்டுமென்றால்இதோ வங்க தேசத்தையும்அங்க தேசத்தையும் ஆண்டு கொண்டுபலத்தில் இந்திரனுக்கு நிகராக இருக்கும் சிறந்த வில்லாளியான கர்ணனை துதி பாடு.

 

यस्येमे कुण्डले दिव्ये सहजे देवनिर्मिते।

कवचं  महाबाहो बालार्कसदृशप्रभम्।।

वासवप्रतिमो येन जरासन्धोऽतिदुर्जयः।

विजितो बाहुयुद्धेन देहभेदं  लम्भितः।।

பெரிய கைகள் உடைய பீஷ்மா!  இந்த கர்ணன் பிறக்கும் போதே திவ்யமான குண்டலங்களுடன்இளஞ் சூரியனை போல ஜொலிக்கும் கவசத்தையும் தெய்வ அனுகிரஹத்தால் பெற்றவன்.

இந்திரனுக்கு நிகராக பராக்ரமம் கொண்ட ஜராஸந்தனுடன் மல்யுத்தம் செய்துஅவன் உடலை கிழித்து போட்ட மஹா வீரன் கர்ணன்.

 

द्रोणं द्रौणिं  साधु त्वं पितापुत्रौ महारथौ।

स्तुहि स्तुत्यावुभौ भीष्म सततं द्विजसत्तमौ।।

ஏய் பீஷ்மாபோர் செய்வதில் மஹாரதர்களாகவும்ப்ராம்மணர்களில் உத்தமராகவும் இருக்கும் துரோணரும்அவர் பிள்ளை அஸ்வத்தாமனும் இருக்கிறார்களேநீ அவர்களை இடைவிடாமல் துதி செய்து கொண்டு இருக்கலாமேஅப்படி செய்தால் உனக்கு நன்றாக இருக்குமே!

 

ययोरन्यतरो भीष्म सङ्क्रुद्धः सचराचराम्।

इमां वसुमतीं कुर्यान्निः शेषामिति मे मतिः।।     

இந்த இருவரில் ஒருவர் கோபப்பட்டாலும்இந்த உலகில் எந்த பிராணியும் உயிரோடு இருக்க முடியாத படிஅஸ்திரங்கள் மூலம்உலகத்தையே சர்வநாசம் செய்ய சக்தி படைத்தவர்கள் என்பது என் கருத்து.

 

द्रोणस्य हि समं युद्धे  पश्यामि नराधिपम्।

नाश्वत्थाम्नः समं भीष्म   तौ स्तोतुमिच्छसि।

पृथिव्यां सागरान्तायां यो वैप्रतिसमो भवेत्।।

ஏய் பீஷ்மாநான் இன்று வரைதுரோணரையும் அஸ்வத்தாமனையும் எதிர்க்க, இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் எந்த ஒரு அரசனும் துணிந்து பார்த்ததே இல்லை. அப்படிப்பட்ட இவர்களை, நீ துதிக்க நினைக்கவில்லை.