ஆட்சி எப்படி செய்ய வேண்டும்? வியாசர் 'ராஜ நீதியை' யுதிஷ்டினுக்கு உபதேஸிக்கிறார்.
வ்யாசர் சொல்கிறார்..
आदाय बलिषड् भागं यॊ राष्ट्रं नाभिरक्षति
प्रतिगृह्णाति तत् पापं चतुर्थांशेन पार्थिवः
- வியாசர் மஹாபாரதம்
6ல் ஒரு பங்கு வரியாக (15% to Army/Police) பெற்றுக்கொண்டும் ராஜ்யத்தை காப்பாற்ற முடியாமல் போனால், அந்த ராஜ்யத்தின் மக்கள் செய்த பாவத்தில் 4ல் ஒரு பங்கு பாகத்தை ஆட்சி செய்பவன் பெறுகிறான்.
निग्रहाद् धर्मशास्त्राणाम् अनुरुध्यन्न अपेतभीः
कामक्रॊधाव् अनादृत्य पितेव समदर्शनः
- வியாசர் மஹாபாரதம்
எந்த பயமும் இல்லாமல் தர்ம சாஸ்திரப்படி தண்டனை கொடுத்து, தனிப்பட்ட ஆசையும் இல்லாமல், தனிப்பட்ட கோபமும் இல்லாமல், பாகுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் ஒரு தகப்பன் போல சமமாக பார்த்து கொண்டு, ஆட்சி செய்பவன் இருக்க வேண்டும்.
दैवेनॊपहते राजा कर्मकाले महाद्युते
प्रमादयति तत् कर्म न तत्राहु: अति करमम्
- வியாசர் மஹாபாரதம்
ஒரு நியாயமான ஒரு காரியத்தை ஆரம்பித்து, விதி வசத்தால் அந்த காரியம் தடைபட்டு நின்றால், ஆட்சி செய்பவன் குற்றவாளி ஆகமாட்டான்.
तरसा बुद्धिपूर्वं वा निग्राह्या एव शत्रवः
पापैः सह न संदध्याद् राष्ट्रं पण्यं न कारयेत्
- வியாசர் மஹாபாரதம்
ஆட்சி செய்பவன், தன் புத்தியாலும், தண்டனையாலும் எதிரிகளை அடக்க வேண்டும். குற்றம் செய்தவர்களுடன், பாவத் தொழில் செய்பவர்களுடன் ஆட்சி செய்பவன் சேர கூடாது. அரசாட்சியை தர்மப்படி நடத்த வேண்டும்.
शूरा: चार्या: च सत्कार्या विद्वांसश च युधिष्ठिर
गॊमतॊ धनिन: चैव परिपाल्या विशेषतः
- வியாசர் மஹாபாரதம்
மஹாவீரர்களையும், பண்புள்ளவர்களையும், அறிவுள்ளவர்களையும் ஆட்சி செய்பவன் கௌரவிக்க வேண்டும்.
யுதிஷ்டிரா!
செல்வந்தர்களையும், பசுக்களை ரக்ஷிப்பவர்களையும் ப்ரத்யேகமாக ஆட்சி செய்பவன் கௌரவிக்க வேண்டும்.
व्यवहारेषु धर्म्येषु नियॊज्या: च बहुश्रुताः
गुणयुक्ते ऽपि नैकस्मिन् विश्वस्याच् च विचक्षणः
- வியாசர் மஹாபாரதம்
ப்ரத்யேகமாக சாஸ்திரம் (specialist) கற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் கற்ற துறையில் அதிகாரியாக அமர்த்தி தர்மப்படி காரியங்களை செய்ய நியமிக்க வேண்டும். எவ்வளவு நல்ல குணம் கொண்டவனாலும், ஒரே ஒரு மனிதனை மட்டும் ஆட்சி செய்பவன் நம்புவது நியாய தர்மம் அன்று.
अरक्षिता दुर्विनीतॊ मानी स्तब्धॊ ऽभ्यसूयकः
एनसा युज्यते राजा दुर्दान्त इति चॊच्यते
- வியாசர் மஹாபாரதம்
மக்களை காப்பாற்றாமல், மதிக்கத்தக்கவர்களை மதிக்காமல், அடக்கமில்லாமல், திமிரோடும், பொறாமையோடும் ஆட்சி செய்பவன் பாவத்தை அடைவதோடு, கெட்டவன் என்று பேசப்படுவான்.
ये ऽरक्ष्यमाणा हीयन्ते दैवेनॊपहते नृपे
तस्करै: चापि हन्यन्ते सर्वं तद् राजकिल्बिषम्
- வியாசர் மஹாபாரதம்
தெய்வ குற்றத்தாலும், திருடர்களாலும் ரக்ஷிக்கப்படாமல் எவர்கள் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுடைய கஷ்டமெல்லாம் அரசனை சேர்ந்த பாவமாகும்.
सुमन्त्रिते सुनीते च विधिवच् चॊपपादिते
पौरुषे कर्मणि कृते नास्त्य अधर्मॊ युधिष्ठिर
- வியாசர் மஹாபாரதம்
ஓ யுதிஷ்டிரா! நன்றாக ஆலோசித்து நீதி தவறாமல் மனித முயற்சியோடு (ஜன ஆந்தோலன்) ஒரு காரியம் செய்தால், ஆட்சி செய்பவனுக்கு பாவம் நேராது.
शत्रून् हत्वा हतस्याजौ शूरस्याक्लिष्ट कर्मणः
असहायस्य धीरस्य निर्जितस्य युधिष्ठिर
- வியாசர் மஹாபாரதம்
நன்றாக ஆலோசித்து, நீதி தவறாமல், ஆட்சி செய்பவன் செய்யும் முயற்சிகள் தெய்வீகமாய் முடிவதுமுண்டு. பயனற்று போவதும் உண்டு.
विपद्यन्ते समारम्भाः सिध्यन्त्य अपि च दैवतः
कृते पुरुषकारे तु नैनॊ सपृशति पार्थिवम्
- வியாசர் மஹாபாரதம்
சிலசமயம் தர்மபடியான முயற்சிகள் பயனற்று போகலாம் என்பதால் முயற்சிகள் செய்யாமல் ஆட்சி செய்பவன் இருந்தால் பாவத்தை அடைகிறான். முயற்சி செய்தால், ஆட்சி செய்பவனுக்கு பாவம் சேராது.
இவ்வாறு வியாசர், யுதிஷ்டிர மஹாராஜனிடம் "ராஜ நீதியை" கூறி, சந்யாசியாக போக கூடாது, மக்களுக்காக 'தர்ம ஆட்சி செய்பவனாக இருக்க வேண்டும்' என்று உபதேசித்தார்.
சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில், இன்று இந்தியசட்டத்தின் (சாஸ்திரம்) படி ஆட்சியை வழிநடத்தும் MLA, MPக்கள் என்ற இன்றைய பிராம்மண வர்ணத்தார் (லௌகீக மற்றும் வைதீக பிராம்மண ஜாதியை இங்கு சொல்லவில்லை) சொல்லப்பட்ட அறிவுரை, ஒழுக்கம். அன்று பிராம்மண வர்ணத்தார் எப்படி வாழ்ந்தார்கள்? தெரிந்து கொள்வோம், மஹாபாரதம்.
பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.
பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.
அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர்.
அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்டயுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.
நிலத்திற்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும்,
'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்'
என்று சொல்லி விட்டார்.
'யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது' என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
அந்த சமயம்,
திரௌபதியும், பிறகு மீண்டும் அர்ஜுனனும், வ்யாசரும் "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினார்கள்.
அப்பொழுது,
அரசனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட தண்ட நீதியை, எப்படி இரண்டு ப்ராம்மணர்கள் மதித்தார்கள்?
அவர்களுடைய தவவாழ்க்கை எப்படி தூய்மையாக இருந்தது? என்று சொல்லதொடங்கினார்..
अत्राप्य उदाहरन्तीमम् इतिहासं पुरातनम् |
शङ्खः च लिखितः चास्तां भ्रातरौ संयत व्रतौ ||
- vyasa mahabharata
புராண காலத்தில் (ஒரு சமயம்), கடுமையான தவசீலர்களான சங்கர் மற்றும் லிகிதர் என்ற சகோதரர்கள் வாழ்ந்தார்கள்.
तयॊः आवसथाव् आस्तां रमणीयौ पृथक् पृथक् |
नित्यपुष्पफलैः वृक्षैरः उपेतौ बाहुदाम् अनु ||
- vyasa mahabharata
அவர்களுக்கு பாஹுதா என்ற நதிக்கரையில் பூக்களும், பழங்களும் நிறைந்து இருக்கும் இரு ஆஸ்ரமங்கள் தனித்தனியே இருந்தன.
ஒரு சமயம் லிகிதர், தன்னுடைய சகோதரர் சங்கர் ஆஸ்ரமத்துக்கு வந்தார். அப்பொழுது சங்கர் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே சென்று இருந்தார்.
सॊ ऽभिगम्याश्रमं भ्रातुः शङ्खस्य लिखितः तदा |
फलानि शातयाम् आस सम्यक् परिणतान्य उत ||
- vyasa mahabharata
தன்னுடைய சகோதரர் சங்கர் ஆஸ்ரமத்துக்குள் உலவி கொண்டிருந்த லிகிதர், அங்கு நன்றாக பழுத்திருந்த ஒரு பழத்தை பறித்தார்.
तान्य उपादाय विस्रब्धॊ भक्षयाम् आस स द्विजः |
तस्मिंश् च भक्षयत्य एव शङ्खॊ ऽपय् आश्रमम् आगमत् ||
- vyasa mahabharata
அருகில் யாரும் இல்லாத நிலையில், அந்த பழத்தை சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் சமயத்தில், சங்கர் வந்து விட்டார்.
भक्षयन्तं तु तं दृष्ट्वा शङ्खॊ भ्रातरम अब्रवीत् |
कुतः फलान्य अवाप्तानि हेतुना केन खादसि ||
- vyasa mahabharata
சங்கர், லிகிதரை பார்த்து, "இந்த பழங்கள் எங்கிருந்து கிடைத்தது? ஏன் இதை சாப்பிட்டாய்?" என்று கேட்டார்.
सॊ ऽब्रवीद् भ्रातरं ज्येष्ठम् उपस्पृश्याभिवाद्य च |
इत एव गृहीतानि मयेति प्रहसन्न इव ||
- vyasa mahabharata
தனது சகோதரர் வந்ததை பார்த்த லிகிதர் அருகில் சென்று நமஸ்காரம் செய்தார். "அண்ணா! இங்கிருந்து தான் இந்த பழங்களை எடுத்துக்கொண்டேன்" என்று சகஜமாக சிரித்து கொண்டே சொன்னார்.
तम् अब्रवीत् तदा शङ्खः तीव्रकॊप समन्वितः |
स्तेयं त्वया कृतम् इदं फलान्य आददता स्वयम् |
गच्छ राजानम् आसाद्य स्वकर्म प्रथयस्व वै |
अदत्तादानम् एवेदं कृतं पार्थिव सत्तम |
स्तेनं मां त्वं विदित्वा च स्वधर्मम अनुपालय |
शीघ्रं धारय चौरस्य मम दण्डं नराधिप ||
- vyasa mahabharata
கடுமையான கோபத்துடன் சங்கர் "நீயாகவே பழங்களை எடுத்த காரணத்தால், இந்த காரியம் திருட்டாகும். ஆகையால் நீ அரசனிடம் சென்று 'அரசே! கொடுக்காத பழத்தை எடுத்ததால், நான் திருடனாகிறேன். என்னை திருடன் என்ற ரீதியில் பார்த்து, எனக்கு தகுந்த தண்டனையை வழங்கி, உன் தண்ட நீதியை காப்பாற்று' என்று தெரிவித்து கொள்" என்றார்.
इत्य उक्तस् तस्य वचनात् सुद्युम्नं वसुधाधिपम् |
अभ्यगच्छन् महाबाहॊ लिखितः संशितव्रतः ||
- vyasa mahabharata
வாழ்க்கையை நெறியோடு வாழ விரும்பும் லிகிதர், சகோதரர் சொன்னது தர்மமே என்று ஏற்று, அப்பொழுது தர்மப்படி அரசாட்சி செய்து கொண்டிருந்த ஸுத்யும்னரிடம் சென்றார்.
உடனே ஸுத்யும்னரை பார்த்து, "மகாராஜன்! சகோதரர் கொடுக்காத பழத்தை, நானே எடுத்து சாப்பிட்டு விட்டேன். அந்த குற்றத்துக்காக என்னை தாமதமின்றி தண்டிக்க வேண்டும்" என்றார்.
प्रमाणं चेन मतॊ राजा भवतॊ दण्डधारणे |
अनुज्ञायाम् अपि तथा हेतुः स्याद् ब्राह्मणर्षभ |
स भवान् अभ्यनुज्ञातः शुचि कर्मा महाव्रतः |
ब्रूहि कामान् अतॊ ऽन्यांस तवं करिष्यामि हि ते वचः ||
- vyasa mahabharata
இதை கேட்ட அரசர் ஸுத்யும்னர், "ப்ராம்மணர்களில் உத்தமரே! ஒருவனுக்கு 'தண்டனை விதிப்பது அரசன் கடமை' என்பது உண்மையே என்றாலும், 'அனுமதி கொடுப்பதும்' அரசனுக்கு உரியதே! ஆகையால், கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கும் நீங்கள் குற்றமற்றவர் என்று அனுமதி அளிக்கிறேன். ஆகையால், நீங்கள் வேண்டியதை கேளுங்கள். நான் உங்கள் இஷ்டம் போல செய்கிறேன்" என்றார்.
छन्द्यमानॊ ऽपि ब्रह्मर्षिः पार्थिवेन महात्मना |
नान्यं वै वरयाम् आस तस्माद् दण्डाद् ऋते वरम् |
ततः स पृथिवीपालॊ लिखितस्य महात्मनः |
करौ प्रच्छेदयाम् आस धृतदण्डॊ जगाम सः ||
- vyasa mahabharata
இப்படி மஹாத்மாவான அரசர் சொல்லியும், தனக்கு 'தண்டனையை தவிர வேறு ஏதும் வேண்டாம்' என்று சொல்லிவிட்டார் லிகிதர்.
இப்படி சொன்னதால், உலகில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய அரசனாக இருந்து, திருட்டுத்தனத்துக்கு உரிய தண்டனையாக லிகிதரின் இரு கையையும் வெட்டி தண்டனை கொடுத்து விட்டார்.
स गत्वा भ्रातरं शङ्खम् आर्तरूपॊ ऽब्रवीद् इदम् |
धृतदण्डस्य दुर्भुद्धे: भगवन् क्षन्तुम अर्हसि ||
- vyasa mahabharata
கை அறுபட்ட நிலையில், தன் சகோதரரான சங்கரை பார்க்க சென்றார். அவரிடம் 'எனது குற்றத்துக்காக தண்டனை பெற்றேன். என் புத்தி குறைவை நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.
न कुप्ये तव धर्मज्ञ न च दूषयसे मम |
धर्मॊ तु ते व्यतिक्रान्तः ततः ते निष्कृतिः कृता |
स गत्वा बाहुदां शीघ्रं तर्पयस्व यथाविधि |
देवान् पितॄन ऋषींश् चैव मा चाधर्मे मनॊ कृथाः ||
- vyasa mahabharata
சங்கர் "தர்மம் தெரிந்தவனே! உன்னிடத்தில் எனக்கு ஒரு கோபமும் இல்லை. நீ ஒரு குற்றமும் இப்பொழுது செய்யவில்லை. நீ தர்மத்தை மீறியதால், அந்த குற்றத்துக்கு ப்ராயச்சித்தம் தேவைப்பட்டது. நீ உடனேயே பாஹுதை என்ற நதிக்கரைக்கு சென்று, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்மப்படி தர்ப்பணம் செய். இனி அதர்மத்தில் மனதை செலுத்தாதே!" என்றார்.
तस्य तद् वचनं श्रुत्वा शङ्खस्य लिखितः तदा |
अवगाह्यापगां पुण्याम् उदकार्धं प्रचक्रमे |
प्रादुरास्तां ततः तस्य करौ जलज संनिभौ |
ततः स विस्मितॊ भ्रातुः दर्शयाम आस तौ करौ ||
- vyasa mahabharata
இவ்வாறு சங்கர் சொன்னதும், அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, லிகிதர் அந்த நதியில் சென்று நீராடி, தர்ப்பணம் செய்ய இறங்கினார்.
அப்பொழுது, தண்ணீரில் தாமரை மலர்வது போல, அவரின் இரு கைகளும் உண்டாகி விட்டன.
ततः तम् अब्रवीच छङ्खः तपसेदं कृतं मया |
मा च ते ऽत्र वि शङ्का भूद् दैवम् एव विधीयते ||
- vyasa mahabharata
உடனே சங்கர், "இது என் தபோ பலத்தால் செய்யப்பட்டது. உனக்கு சந்தேகம் வேண்டாம். அதிருஷ்டம் (விதி) இப்படியாக உள்ளது" என்றார்.
किं नु नाहं त्वया पूतः पूर्वम् एव महाद्युते |
यस्य ते तपसॊ वीर्यम् ईदृशं द्विजसत्तम ||
- vyasa mahabharata
உடனே லிகிதர், "மஹாதேஜஸ்வியே ! உமது தவத்துக்கு இப்படி ஒரு சக்தி இருக்குமானால், என்னை அப்பொழுதே பரிசுத்தமாக ஆக்கி இருக்கலாமே?" என்று கேட்டார்.
एवम् एतन् मया कार्यं नाहं दण्डधरस तव |
स च पूतॊ नरपतिः त्वं चापि पितृभिः सह ||
- vyasa mahabharata
சங்கர், "என்னால் உன்னை சுத்தனாக ஆக்கி இருக்கமுடியும் என்றாலும், தண்டனை தரும் அதிகாரம் எனக்கு இல்லையே. மக்களின் அரசனுக்கு தானே பாவத்திற்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தண்டனை கொடுத்ததால், அந்த அரசரும் தன்னுடைய தண்ட நீதியை காப்பாற்றினார். செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றதால், நீயும் பரிசுத்தமானாய்." என்று சொன்னார்.
स राजा पाण्डवश्रेष्ठ श्रेष्ठॊ वै तेन कर्मणा |
प्राप्तवान परमां सिद्धिं दक्षः प्राचेतसॊ यथा ||
- vyasa mahabharata
பாண்டவர்களில் உத்தமனே! அந்த உத்தம அரசரான ஸுத்யும்னர் தண்ட நீதியை பரிபாலனம் செய்ததால், ப்ராசேதஸ், தக்ஷனை போல உயர்வான ஸித்தி பெற்றார்.
एष धर्मः क्षत्रियाणां प्रजानां परिपालनम् |
उत्पथे ऽस्मिन् महाराज मा च शॊके मनॊ कृथाः ||
- vyasa mahabharata
"மக்கள் தீய வழியில் செல்லாமல் பாதுகாப்பது" அரசனின் பெரிய தர்மமாகும்.
மகாராஜன்! சோகத்தை மனதில் அனுமதிக்காதீர்.
भ्रातुः अस्य हितं वाक्यं शृणु धर्मज्ञ सत्तम |
दण्ड एव हि राजेन्द्र क्षत्रधर्मॊ न मुण्डन ||
- vyasa mahabharata
தர்மம் தெரிந்த உத்தமனே! உனது தம்பியான அர்ஜுனன் சொன்ன "தண்டநீதியை" கேள். தர்மத்தை காக்க அரசாட்சி செலுத்துவதே, க்ஷத்ரிய அரசனின் தர்மம் (கடமை). சந்யாசிகளுக்கு உரியது சந்நியாச தர்மம். சந்நியாச தர்மம் க்ஷத்ரியனான உனது தர்மம் அன்று" என்று கூறினார்.
பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.
பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.
அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர்.
அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்ட யுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.
நிலத்திற்க்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும்,
'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்'
என்று சொல்லி விட்டார்.
யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
அந்த சமயம், திரௌபதியும், "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினாள்.
இப்படி பலர் சொன்ன பிறகு, வியாசர் யுதிஷ்டிரரிடம் உபதேஸிக்கிறார்.
तपॊ यज्ञ: तथा विद्या भैक्षम् इन्द्रिय निग्रहः |
ध्यानम् एकान्तशीलत्वं तुष्टिर दानं च शक्तितः |
ब्राह्मणानां महाराज चेष्टाः संसिद्धि कारिकाः ||
- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)
மஹாராஜனே! தவம், யக்ஞம், ஆத்மாவை பற்றிய அறிவு, உயிர் தக்க வைக்க பிக்ஷை வாழ்க்கை, புலன் அடக்கம், தியானம், தனிமையை விரும்புவது, ஆத்ம சுகத்தில் இருப்பது, கிடைத்ததில் திருப்தி, தன் சக்திக்கு தகுந்த தானம் செய்வது,
இந்த தர்மங்கள் அனைத்தும், ப்ராம்மணர்களுக்கு ப்ராம்மணத்துவம் 'ஸித்தி' அடைவதற்காக விதிக்கப்பட்டவை.
क्षत्रियाणां च वक्ष्यामि तवापि विदितं पुनः |
यज्ञॊ विद्या समुत्थानम् असंतॊषः श्रियं प्रति |
दण्डधारणम् अत्युग्रं प्रजानां परिपालनम् |
वेद ज्ञानं तथा कृत्स्नं तपॊ सुचरितं तथा |
द्रविणॊपार्जनं भूरि पात्रेषु प्रतिपादनम् |
एतानि राज्ञां कर्माणि सुकृतानि विशां पते |
इमं लॊकम् अमुं लॊकं साधयन्तीति नः श्रुतम ||
- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)
க்ஷத்ரியர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம் உனக்கு தெரிந்தாலும், மீண்டும் சொல்கிறேன்.
யாகம் செய்வதிலும், உலகம் மற்றும் ஆத்மா பற்றிய அறிவு, பொருள் சேர்ப்பதில் திருப்தி இல்லாமலும், புகழில் ஆசையும், ஆட்சியில் பாராபட்சம் இல்லாமல் தண்ட நீதியோடு நிர்வாகமும், அனைத்து உயிர்களையும் காப்பதும், வேதனையை அறிவதும், தவமும், ஒழுக்கமான தனிமனித வாழ்க்கையும், பொருள் ஈட்டுவதில் திறனும், அந்த பொருளை நல்ல தர்மங்களுக்கு கொடுப்பதும், அரசர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம்.
இப்படி க்ஷத்திரியன் க்ஷத்ரியத்துவம் அடையும் போது, இவ்வுலகில் மட்டுமல்ல, மேல் உலகிலும் புகழோடு இருப்பான்.
போர் முடிந்த பிறகு, 100 பிள்ளைகளை இழந்த த்ருதராஷ்டிரன், அருகில் வந்த பீமனை ஆத்திரத்தில் கொல்ல நினைத்தான்.
வாசுதேவ கிருஷ்ணர், த்ருதராஷ்டிரன் மனநிலை அறிந்து, இரும்பினால் செய்யப்பட்ட பீமனின் சிலையை அருகில் நிறுத்த, அதை இறுக கட்டி உடைத்து விட்டான்.
கிருஷ்ணர், பிறகு விதுரர் தர்ம உபதேசம் செய்து சமாதானம் செய்தனர்.
காந்தாரிக்கு திவ்ய ஞானம் கொடுத்தார் வியாசர்.
காந்தாரி, போர்க்களம் சென்று இறந்து கிடக்கும் தன் பிள்ளைகளையும், பாண்டவர் பக்கம் இறந்த அபிமன்யு போன்றவர்களையும் பார்த்து புலம்பினாள்.
கோபத்தில், 'யாதவ வீரர்கள் அடித்து கொண்டு மடிவார்கள், குல பெண்கள் கதறி அழுவார்கள். கிருஷ்ணா! வனத்தில் அனாதை போன்று சென்று மறைவாய்', என்று சபித்தாள்.
ஸ்ரீகிருஷ்ணர் சமாதானம் செய்தார்.
பிறகு,
அனைவருக்கும் தகனம் முறையாக செய்து, கங்கை கரையில் ஜல தர்ப்பணம் செய்ய கிளம்பினார் யுதிஷ்டிரர்.
அனைவருக்கும் தர்ப்பணம் செய்த பிறகு, குந்தி தனது மகனான கர்ணனுக்கும் தர்ப்பணம் செய்ய சொன்னாள்.
'கர்ணன் தன்னுடைய மூத்த சகோதரன்' என்று தெரிந்ததும் இதுவரை இருந்த துக்கத்தை காட்டிலும், மீள முடியாத துக்கத்தில் மூழ்கி விட்டார் யுதிஷ்டிரர்.
நாரதர், கர்ணனை பற்றியும், அவன் பெற்ற பல சாபத்தை பற்றியும் சொல்லி, 'துக்கப்பட வேண்டாம்' என்று சொன்னார்.
அப்பொழுதும், சமாதானம் அடைய முடியாமல் இருந்த யுதிஷ்டிரரிடம் குந்திதேவி மீண்டும் வந்து சமாதானம் செய்ய முயற்சித்தாள்.
"நானும், சூரிய தேவனும் கர்ணனிடம் உள்ள ஒற்றுமையை கண்டும், உன்னிடம் சொல்ல சக்தி இல்லாமல் இருந்தோம். தர்மத்தை காப்பதில் சிறந்த கர்ணன், உங்களிடம் விரோதம் பாராட்ட ஆரம்பித்த பிறகு, நானும் அவனை பற்றி உன்னிடம் சொல்லாமல் இருந்து விட்டேன்' என்று சொன்னாள்.
தர்ம புத்தி உள்ளவரும், கண்ணீரால் நிரம்பிய கண்களை உடையவரும், மிக்க தேஜஸ் உடையவருமான யுதிஷ்டிரர், தாயார் இப்படி சொன்னதும், சோகத்தின் மிகுதியால்,
"ரகசியத்தை மூடி வைத்து கொண்டதால் உன்னால் இப்பொழுது நாங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறோம்" என்று சொல்லி, மேலும் துக்கம் தாளாமல்,
"எல்லா உலகங்களிலும் இன்று முதல் பெண்களிடம் ரகசியம் தங்காமல் போகட்டும்" என்று சாபமிட்டார்.
காந்தாரி 'யாதவ வீரர்கள் அழிந்து, அவர்களின் பெண்கள் கதறி அழ வேண்டும், ஸ்ரீ கிருஷ்ணர் வனத்தில் மறைய வேண்டும்' என்று சபிக்கிறாள்... மஹாபாரதம் பேசுகிறது..
पाण्डवा धार्तराष्ट्रा: च द्रुग्धाः कृष्ण परस्परम् |
उपेक्षिता विनश्यन्त: त्वया कस्माज जनार्दन ||
- வியாசர் மஹாபாரதம்
கிருஷ்ணா! பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவருக்கொருவர் பகை கொண்டிருந்தனரே. ஜனார்தனா ! இவர்கள் இருவருமே அழிந்து போகட்டும் என்று ஏன் இருவரையுமே புறக்கணித்தாய்?
शक्तेन बहु भृत्येन विपुले तिष्ठता बले |
उभयत्र समर्थेन श्रुतवाक्येन चैव ह ||
- வியாசர் மஹாபாரதம்
கிருஷ்ணா! உனக்கு சக்தி இருந்தும், உனக்காக போர் செய்ய மகா பராக்கிரமசாலிகளான யாதவ வீரர்கள் இருந்தும், இப்படி ஒரு பெரு நாசத்தை தடுக்காமல் இருந்து விட்டாயே!
इच्छतॊपेक्षितॊ नाशः कुरूणां मधुसूदन |
यस्मात् त्वया महाबाहॊ फलं तस्माद् अवाप्नुहि ||
- வியாசர் மஹாபாரதம்
மதுசூதனா! நீ விருப்பப்பட்டு தான் இவர்களை உபேக்ஷித்து, குரு வம்சத்தின் நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். இப்படி ஒரு குலநாசத்தை ஏற்படுத்தியதன் பலனை நீ அடைந்தே தீர வேண்டும்.
पतिशुश्रूषया यन् मे तपः किं चिद् उपार्जितम् |
तेन त्वां दुरवापात्मञ शप्स्ये चक्रगदाधर ||
- வியாசர் மஹாபாரதம்
என்னுடைய கணவனுக்கு இதுநாள் வரை பணிவிடை செய்த தவத்தின் பயனை கொண்டு, சக்கரமும், கதையும் தரித்து இருக்கும் உன்னை சபிக்கிறேன்.
यस्मात् परस्परं घ्नन्तॊ ज्ञातयः कुरुपाण्डवाः |
उपेक्षितास ते गॊविन्द तस्माज् ज्ञातीन वधिष्यसि ||
- வியாசர் மஹாபாரதம்
எப்படி உறவுக்காரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் தங்களுக்குள் அடித்து கொண்டு இருக்கும் போது, அவர்களை பார்த்து கொண்டே இருந்தாயோ, அது போல, உன்னுடைய உறவுகள் தங்களுக்குள் அடித்து கொண்டு மடிவதை காண்பாய். நீயே உன்னுடையவர்களை வதமும் செய்வாய்.
त्वम् अप्य उपस्थिते वर्षे षट्त्रिंशे मधुसूदन |
हतज्ञाति: हतामात्यॊ हतपुत्रॊ वनेचरः |
कुत्सितेनाभ्युपायेन निधनं समवाप्स्यसि ||
- வியாசர் மஹாபாரதம்
மதுசூதனா! இன்றிலிருந்து 36வது வருடம் வரும் போது, உன்னுடைய உறவுகளும், மந்திரிகளும், புத்ரர்களும் மடிந்து போவார்கள். நீயும் அனாதை போன்று வனத்தில் சஞ்சரித்து மறைவாய்.
तवाप्य एवं हतसुता निहतज्ञातिबान्धवाः |
स्त्रियः परिपतिष्यन्ति यथैता भरत स्त्रियः ||
- வியாசர் மஹாபாரதம்
எப்படி பரத குல பெண்கள் இப்பொழுது கண்ணீர் வடித்து அழுகிறார்களோ, அது போல, உன் குல பெண்களும், தங்கள் கணவனை, பிள்ளையை, சொந்தங்களை இழந்து அழுவார்கள்.
இவ்வாறு, 100 புத்ரர்களை இழந்த சோகத்தில், தன்னையும் மீறி காந்தாரி இப்படி பேசிவிட்டாள்.
மஹாபாரத சரித்திரத்தை, மன்னன் ஜனமேஜெயனுக்கு சொல்லிக்கொண்டு வந்த வைசம்பாயனர் மேலும் சொல்கிறார்.
तच छ्रुत्वा वचनं घॊरं वासुदेवॊ महामनाः |
उवाच देवीं गान्धारीम् ईषद अभ्युत्स्मयन्न इव ||
- வியாசர் மஹாபாரதம்
உதார குணம் கொண்ட வாசுதேவன், இப்படி கடுமையான சாபத்தை வழங்கிய காந்தாரியை பார்த்து, புன்சிரிப்புடன் பேசலானார்..
संहर्ता वृष्णिचक्रस्य नान्यॊ मद् विद्यते शुभे |
जाने ऽहम् एतद् अप्य एवं चीर्णं चरसि क्षत्रिये ||
- வியாசர் மஹாபாரதம்
க்ஷத்ரிய ஸ்திரீயே! நான் இவ்வாறு நடக்கப்போவதை அறிவேன். என்னுடைய சங்கல்பத்தையே, நீ இப்பொழுது சொன்னாய். இப்படி ஒரு சாபத்தை ஏன் கொடுத்தோம் என்று நீ உன்னையே சந்தேகிக்க அவசியமில்லை.
अवध्यास् ते नरैर् अन्यैर् अपि वा देवदानवैः |
परस्परकृतं नाशम् अतः प्राप्स्यन्ति यादवाः ||
- வியாசர் மஹாபாரதம்
என்னை தவிர வேறொருவனால் யாதவ (வ்ருஷணீ வீரர்கள்) கூட்டத்தை அழிக்க முடியாது. என்னுடைய யாதவ வீரர்களை மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களாலும், தானவர்களாலும் கூட அழிக்க முடியாது. யாராலும் கொல்லப்படாதவர்கள். யாதவர்கள் தங்களுக்குள் அடித்து கொண்டு தான் மடிவார்கள்
इत्य उक्तवति दाशार्हे पाण्डवा: त्रस्तचेतसः |
बभूवु: भृशसंविग्ना निराशा: चापि जीविते ||
- வியாசர் மஹாபாரதம்
இவ்வாறு தாஸார்ஹன் (கிருஷ்ணர்) கூறியவுடன், பாண்டவர்கள் மனதில் நடுக்கமும், பெரும் துயரும் கொண்டனர். உலகில் உயிர் வாழ ஆசையில்லாதவர்களாகவும் ஆகினர்.
'தன் பக்கம் நிறைய ஆள் சேர்த்து கொள்ளவேண்டும்' என்பதற்காக பலமில்லாதவன், திறமையில்லாதவன், பேச தெரியாதவன், படிக்க தெரியாதவனை எல்லாம் சேர்த்து கொண்டு, தானும் பெரும் கூட்டத்திற்கு 'தலைவன்' என்று தன்னை சொல்லிக்கொள்பவர்கள் உண்டு.
பெருமாளோ, தன்னுடைய சேனையில், ஒவ்வொரு வீரனும் தோற்கடிக்க முடியாத சூரர்களாகவே வைத்து இருக்கிறார்.
பொதுவாக எந்த அரசனும், தன்னுடைய சேனையில் இருப்பவர்களிடையே, பலம்குறைந்தவரையே தூதுக்கு அனுப்புவார்கள்.
மலையையே ஒரு கையால் தூக்கும், சாதிக்க முடியாத (அஸாத்ய) காரியங்கள் அனைத்தையும் சாதிக்க கூடியவரான ஹனுமானை தூதுக்கு அனுப்புகிறார், ராமபிரான்.
இலங்கைக்குள் ராவணன் அனுமதி இல்லாமல் கால் வைக்க இந்திரனும், சூரியனும் பயந்து கொண்டு எல்லையில் நிற்க, ஹனுமான் சீதாதேவியை அசோகவனம் வரை சென்று பார்த்து விட்டார்.
சீதாதேவியிடம் "ராமபிரான்வைத்திருக்கும் கோடிக்கணக்கான வானர சேனையில் கடைசி வரிசையில் நிற்கும் ஒரு சாதாரண வானரன் நான். என்னை விட பலசாலிகளான வானரர்களை கோடிக்கணக்கில் அழைத்து கொண்டு பிரபு ஸ்ரீராமர் உங்களை மீட்க வந்து கொண்டு இருக்கிறார்" என்று சொல்கிறார்.
யாராலும் தோற்கடிக்க முடியாத சூரர்களையே தன் சேனையில் வைத்து கொண்டு இருப்பவர் என்பதால் பெருமாளுக்கு "ஸூரஸேன:" என்று பெயர் உண்டு.
ராம அவதாரத்தில் தான் அப்படி ஒரு சூரசேனையை வைத்து இருந்தார் என்று நாம் நினைத்து விட கூடாது.
கிருஷ்ண அவதாரத்திலும் இவருடைய யாதவ சேனை அழிக்கவே முடியாத சேனையாக இருந்தது.
பாரத போர் முடிந்த பிறகு உலகத்தில் இருந்த அனைத்து க்ஷத்ரிய வீரர்களும் அழிந்து போன நிலையில், யாதவ சேனை மட்டும் அப்படியே இருந்தனர்.
கிருஷ்ணரோடு இருந்த சாத்யகியும் போரில் மடியவில்லை..
கௌரவர்களுக்காக போர் செய்த ஸ்ரீ கிருஷ்ணரின் யாதவ சேனையும் அழியவில்லை. கௌரவர்கள் பக்கம் நின்று போர் செய்த க்ருதவர்மனும் போரில் மடியவில்லை.
இப்படிப்பட்ட அழிக்கவே முடியாத, அடக்க முடியாத யாதவ வீரர்கள், கிருஷ்ணருக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள் என்றால், கிருஷ்ணனின் பலம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? என்று நாம் அனுமானிக்கலாம்.
அவதார காரியம் முடிந்து விட்டதால், தான் வைகுண்டம் செல்ல முடிவு செய்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
யாராலும் அழிக்க முடியாத யாதவ வ்ருஷ்ணீ சேனையை பூலோகத்தில் விட்டு விட்டு சென்றால், உலகம் தாங்காது என்பதால், தனக்கு முன்னால் இவர்கள் அனைவரையும் முதலில் அனுப்ப முடிவு செய்தார்.
இவர்களே தங்களுக்குள் அடித்து கொண்டு அழிந்து போகும் படியாக சங்கல்பித்து, போர் முடிந்த சமயத்திலேயே காந்தாரியை சாபமிடும் படி செய்வித்து, தன் கையாலேயே மிச்சமிருந்த யாதவ சேனையையும் காலம் வந்தபோது அழித்தார்.
One regards others to be ignorant fools, but seldom takes a survey of one’s own self. One attributes faults to others but is never desirous to punish one’s own self.
இந்த மூன்றினால் தானே, மூர்க்கனாக இருந்து கொண்டு, மற்றவன் எப்படி? என்று எடை போடுகிறான். ஆனால், தான் யார் (ஆத்மா) என்று உணருவதில்லையே!
இந்த மூன்றினால் தானே, அடுத்தவர் குறையை பார்த்து அறிவுரை சொல்ல ஆசைப்படுகிறான்.
இந்த மூன்றினால் தானே, தான் செய்யும் தவறுக்கு தனக்கு புத்திமதி சொல்லிக்கொள்ள ஆசைப்படாமல் இருக்கிறான் !
अध्रुवे जीवलॊके ऽस्मिन् यॊ धर्मम् अनुपालयन् |
जन्मप्रभृति वर्तेत प्राप्नुयात परमां गतिम् ||
- vyasa mahabarata (Stri Parva)
Whoever listens to this sruti (this sentence uttered by the widower) and protects and follow essense of dharma from the birth will attains the ultimate destiny (Salvation).
எவன் இந்த ஸ்ருதியை (விதுரர் சொன்ன இந்த வாக்கியம்) கேட்டு, நிலையற்றதான இந்த பூலோக வாழ்க்கையில் பிறந்தது முதல் தர்மத்தை காத்து வருவானோ அவன் உத்தம கதியை அடைகிறான்.
एवं सर्वं विदित्वा वै यस् तत्त्वम् अनुवर्तते |
स प्रमॊक्षाय लभते पन्थानं मनुजाधिप ||
- vyasa mahabarata
O king (Drutharashtra)!
Whoever knows the philosophy of Dharma and lives dharmic life, gets free himself from the path of samsara.
அரசே (த்ருதராஷ்டிரா) !
எவன் தர்மத்தின் தத்துவத்தை அறிந்து, வாழ்க்கையை வாழ்கிறானோ! அவன் தன்னை சம்சார பாதையில் இருந்து விடுவித்து கொள்கிறான்.
இவ்வாறு விதுரனாக அவதரித்திருந்த யம தர்மன், த்ருதராஷ்டிரன் மூலமாக பேராசை, கோபம், அகங்காரம் என்ற மூன்றின் அபாயத்தை சொல்லி, சம்சார சக்கரத்தில் இருந்து தப்பிக்க வழியை சொன்னார்.
Yama Dharma, thus incarnated as Vithura, told us, the three dangers "greed, anger, and pride" through Drudharashtra, and the way to escape from the wheel of samsara (to attain moksha).