Followers

Search Here...

Showing posts with label பாரதம். Show all posts
Showing posts with label பாரதம். Show all posts

Saturday 25 March 2023

அர்ஜுனன் காண்டீபத்தை எப்போது பெற்றான்? அறிவோம் மஹாபாரதம்..

அர்ஜுனன் காண்டீபத்தை எப்போது பெற்றான்? அறிவோம் மஹாபாரதம்.. 

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை முடித்து சுபத்ரையை மணம் செய்து கொண்ட பிறகு, ஶ்ரீ கிருஷ்ணரின் உதவியுடன், காண்டவ வனத்தை அழித்து அக்னிக்கு ஹோமம் செய்தான். 


இதனால் சந்தோஷமடைந்த அக்னி பகவான் நேரில் பிரத்யக்ஷமாகி, அர்ஜுனனுக்கு, 

  1. காண்டீபம் என்ற திவ்யமான வில்லையும், 
  2. பாணங்கள் குறையாத 2 அம்புரா துணியையும்
  3. ஹனுமன் கொடி பறக்கும் திவ்யமான தேரையும் கொடுத்தார்.

व्यवसाय सहायस्य विष्णोः शत्रु वधेषि इव।

पार्थाय अग्निः ददौ च अपि गाण्डीवं धनुः उत्तमम्।।

इषुधी च अक्षयैः बाणै रथं च कपिलक्षणम्।

मोक्षयामास बीभत्सुर्मयं यत्र महासुरम्।।

Adi Parva 61 - vyasa mahabharata

தமிழர்களுக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? மலயத்வஜ பாண்டிய வம்சம் எப்படி அர்ஜுனனோடு உறவு கொண்டது? அறிவோம் மகாபாரதம்

What is the connection between tamil people (Pandiya and chola) in mahabharat?

In 3 chapter, we see  this connection.
Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.

1st when Arjuna goes for theertha yatra,
2nd sahadeva when he goes for rajasuya yagya,
3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.

பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும்,
தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.

நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.

மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

1.
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.

அப்பொழுது, பாண்டிய தேசத்தில், மணலூர் வருகிறான். அப்பொழுது சித்ரவாகனன் என்ற பாண்டிய அரசன், தன் பெண்ணை (சித்ராங்கதை) நிபந்தனை பேரில் திருமணம் அர்ஜுனனுக்கு செய்து முடிக்கிறான்.
ஆதி பர்வம், 61, 235 அத்தியாயம்
https://www.proudhindudharma.com/2022/10/Pandya-king-dynasty-arjuna.html?m=1

2.
யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார்.
இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.
சபா பர்வம், அத்தியாயம் 33
https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1

3.
போர் முடிந்த பிறகு, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் முடிவு செய்கிறார்.
அப்போது, அர்ஜுனன் பாண்டிய தேசம் வருகிறான்.
பாண்டிய மன்னனான தன் மகனையும், தமிழ் பெண்ணான சித்ராங்கதையையும் பார்கிறான்.
அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79
https://www.proudhindudharma.com/2023/01/arjuna-killed-by-pandiya-king.html?m=1

Friday 24 March 2023

ஸூத குலத்தில் பிறந்தவர்களும் கல்வி அசாத்தியமான தேர்ச்சி பெற்று இருந்தார்கள்... "உலகில் பாம்புகளே இருக்க கூடாது" ஜனமேஜெயன் யாகம் செய்து பெரும்பாலும் அழித்தார். யார் சாபத்தால் பாதி பாம்புகள் அக்னியில் பொசுங்கின? அறிவோம் மகாபாரதம்.

"ஸூத குலத்தில் பிறந்தவர்களும் கல்வி அசாத்தியமான தேர்ச்சி பெற்று இருந்தார்கள்" என்று மகாபாரதம் காட்டுகிறது.

பரீக்ஷுத் "தக்ஷகன் என்ற நாக ராஜனால் கடிக்கப்பட்டு" மறைந்தார்.


அவர் மகனான, ஜனமேஜெயன் சர்ப யாகம் செய்து, "உலகில் இனி பாம்புகளே இருக்க கூடாது." என்று தீர்மானம் செய்தார். 


உதங்கர் மற்றும் மந்திரிகள் சம்மதிக்க, யாக சாலை அமைக்கும் பணி ஆரம்பம் ஆனது. 

அங்கு ஒரு ஸ்தபதியும் வேலை செய்து வந்தார்.


அப்போது,

ஸூத குலத்தில் பிறந்த அந்த சிற்பி, வாஸ்து சாஸ்திரப்படி நில அளவு நடந்த இடத்தையும், கால சூழ்நிலையையும் பார்த்து, 

"ஒரு பிராம்மணனால் இந்த யாகம் முழுமை அடையாமல் போகும்" என்றார்.


இதை கேட்ட ஜனமேஜெயன், யாக தீக்ஷை பெறுவதற்கு முன், வாயிற் காப்பாலனை பார்த்து, 

"எனக்கு தெரியாமல் யாரும் உள்ளே வர கூடாது

என்று கட்டளை இட்டார்.

स्थपति: बुद्धि-संपन्नो वास्तु-विद्या विशारदः।

इति अब्रवीत् सूत्र-धारः सूतः पौराणिक: तदा।।

एतच्छ्रुत्वा तु राजासौ प्राग् दीक्षा कालम् अब्रवीत्।

क्षत्तारं न हि मे कश्चिद् अज्ञातः प्रविशेदिति।।

Adi parva 1 51

கருப்பு துணியை கட்டி கொண்டு, புகையால் கண்கள் சிவக்க, மந்திர பூர்வமாக, ஜ்வலிக்கும் அக்னியில் சர்பயாகம் செய்ய ஆரம்பித்தனர்.

प्रावृत्य कृष्ण-वासांसि धूम्र संरक्त लोचनाः।

जुहुवु: मन्त्रवच्चैव समिद्धं जातवेदसम्।।

Adi parva 1 52


லட்சக்கணக்கான சர்ப்பங்கள் அக்னியில் வந்து வந்து விழுந்து உயிர் விட்டன.

குதிரைகள் போலவும், யானை துதிக்கை போலவும், மத யானைகள் போல பெரிய உடலுடனும், மிகுந்த பலமுள்ளதாகவும், ஈட்டிகளை போல பயத்தை உண்டு செய்யும் கொடிய விஷமுள்ள பல சர்ப்பங்கள், தாயின் (கத்ரு) சாபத்தால், தடியால் அடித்தது போல, கணக்கில்லாமல் தானாக அக்னியில் வந்து விழுந்தன.

घोरा: च परिघप्रख्या दन्दशूका महाबलाः।

प्रपेतुरग्नावुरगा मातृ-वाग्-दण्ड पीडिताः।।

Adi parva 1 52


அந்த சிற்பி கணித்தது போலவே, ஜரத்காருவின் மகனாக பிறந்த "ஆஸ்தீகர்" என்ற பிராம்மணர் வந்து ஜனமேஜெயனை சமாதானம் செய்து, யாகத்தை நிறுத்தினார்.


கொடிய விஷமுள்ள பல பாம்புகள், அதற்குள் அழிந்து விட்டன


யாகம் பாதியில் தடைபட்டதால், பல பாம்புகள் தப்பித்தன. 

ஏன் பல சர்ப்பங்கள் அழிய நேர்ந்தது? எந்த தாய் சாபம் கொடுத்தாள்?

இதற்கான காரணத்தை உலக ஸ்ருஷ்டி சமயத்தில் நடந்த சம்பவத்தை பார்க்கும் போது அறிய முடிகிறது.


உலக ஸ்ருஷ்டி உருவான காலம்...

கஷ்யபருக்கு பத்னிகளான

கத்ருவுக்கும் வினதாவுக்கும் ஒரு சமயம் அனாவசியமாக ஒரு போட்டி ஏற்பட்டது.


பாற்கடலில் அசுரர்கள், தேவர்கள் சேர்ந்து அமிர்தத்திற்காக கடைந்த போது, "உச்சைஸ்ரவஸ்" என்ற குதிரை வெளிப்பட்டது. 

இதை அசுரர்கள் எடுத்து பாதாள லோகம் சென்றார்கள்.


அதை எட்டி இருந்து பார்க்க சென்ற இருவரும், "அந்த திவ்யமான குதிரையின் வால் எப்படி உள்ளது?" என்று பேச ஆரம்பித்தனர். பிறகு திரும்பி செல்லும் போது, கருடனுக்கும், அருணனுக்கும் தாயான வினதா, "திவ்யமான அந்த குதிரையின் வால் மயிர் கூட வெள்ளையாக உள்ளதேஎன்றாள்.

வீண் வாதம் செய்ய ஆசைப்பட்ட கத்ரு, அனாவசியமாக அந்த "குதிரையின் வால் மயிர் கருப்பாக தான் இருந்தது" என்றாள்.


இது வாக்குவாதத்தில் முடிந்து, கடைசியில் பந்தயத்தில் முடிந்தது.


"யார் சொல்வது பொய்யோ அவர்கள் மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும்" என்று முடிவு செய்தனர்.


இந்த நிலையில், கோடிக்கணக்கான பாம்புகளை பெற்ற கத்ரு, தன் பிள்ளைகளை எல்லாம் அழைத்து, 

"நீங்கள் அனைவரும் அந்த குதிரையின் வாலில் ஏறி கொண்டு, அதன் வால்மயிர்கள் போல ஆகி, கருமையான நிறத்தோடு தொங்கி கொண்டு இருங்கள். நான் அடிமையாகாமல் இருக்க செய்யுங்கள்" என்றாள்.

कद्रूरुवाच।  

कृष्णवालम् अहं मन्ये हयमेनं शुचिस्मिते।

एहि सार्धं मया दीव्य दासी-भावाय भामिनि।।

Adi parva 1-20

அவள் சொன்னதை ஏற்று கொள்ளாத சர்ப்பங்களை பார்த்து, "எதிர்காலத்தில், ஜனமேஜெயன் என்ற பாண்டவ வம்சத்து ராஜரிஷி, சர்ப்ப யாகம் செய்து, உங்களை பொசுக்குவான்" என்று சபித்தாள்.

सर्पसत्रे वर्तमाने पावको वः प्रधक्ष्यति।

जनमेजयस्य राजर्षेः पाण्डवेयस्य धीमतः।।

Adi parva 1 20


மகா கொடிய சர்ப்பங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதை கண்டு ப்ரம்ம தேவரும், "கத்ரு உலக நன்மையை கருதியே இப்படி ஒரு சாபத்தை தன் பிள்ளைகள் என்று பாராமல் கொடுத்தாள்" என்று அனைவரையும் சமாதானம் செய்தார். 

शापमेनं तु शुश्राव स्वयमेव पितामहः।

अतिक्रूरं समुत्सृष्टं कद्र्वा दैवादतीव हि।।

Adi parva 1 20


தேவ லோக பெண்ணான கத்ரு சொன்னபடியே, துவாபர யுக முடிவில், ஜனமேஜெயன் யாகம் செய்ய, தாய் பேச்சை மறுத்த அத்தனை சர்ப்பங்களும் அக்னியில் விழுந்து உயிர் விட்டன.


அன்று, அவள் (கத்ரு) சாபத்தை கேட்ட பிறகு, கார்கோடகன் என்ற நாகராஜன் கத்ருவிடம் "கருமை நிறத்தோடு அந்த குதிரையின் வால் மயிராக இருக்கிறேன்" என்றான். 

एवं शप्तेषु नागेषु कद्र्वातु द्विजसत्तम।

अद्विग्नः शापतस्तस्याः कद्रूं कर्कोटको अब्रवीत्।। 

Adi parva 1 20

"அப்படியே ஆகட்டும்" என்று கத்ரு மறுமொழி சொன்னாள். 

Wednesday 22 March 2023

கார்கோடகன், வாசுகி, தக்ஷகன், போன்ற பாம்புகள் பல. அதில் முக்கியமான பாம்புகள் என்னென்ன? அவைகள் பெயர்கள் என்ன? கத்ரு பெற்ற பிள்ளைகள் பற்றி அறிவோம்.. வியாசர் மகாபாரதம்...

ப்ரம்மாவின் மானஸ புத்திரர் "காஸ்யபர்". 

உலக ஸ்ருஷ்டி செய்யுமாறு ப்ரம்ம தேவன் சொன்னார்.

"தேவர்களை" அதிதியை கொண்டும், 

"அசுரர்களை" திதியை கொண்டும், 

"அருணன் மற்றும் கருடனை" வினதாவை கொண்டும்,

"கணக்கில்லாத ஸர்ப்பங்களை" கத்ருவை கொண்டும் படைத்தார்.


அருணன் சூரியனுக்கு தேர் ஓட்ட சென்றார்.


கருடன் விஷ்ணுவுக்கு வாகனமாக சென்றார்.

கணக்கில்லாத ஸர்ப்பங்கள் பெயர் அனைத்தையும் சொல்ல இயலாது. 

மிக முக்கியமான சில ஸர்ப்பங்கள் பெயரை ஸூத பௌராணிகர் சொல்ல ஆரம்பிக்கிறார்.


ஆதி சேஷன் விஷ்ணுவுக்கு படுக்கையாக பாற்கடல் சென்றார்.


வாசுகி பாற்கடல் கடையும் போது உதவி செய்தது. வாசுகியின் தங்கை "ஜரத்காரு"வை அதே பெயர் கொண்ட ஜரத்காருவுக்கு மணம் செய்து கொடுத்தார். அவர் பிள்ளை "ஆஸ்தீகர்" ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகத்தை தடுத்தார்.


தக்ஷகன் பரீக்ஷித் மரணத்திற்கு காரணமாக இருந்தது.


காளியன் கிருஷ்ணா அவதார சமயத்தில் ப்ருந்தாவனத்தில் வந்து ஸ்ரீ கிருஷ்ணரால் கண்டிக்கப்பட்டான்.


கர்கோடகன் கத்ருவின் சாபத்திற்கு பயந்து, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையின் வாலில் கருமையான மயிர் போல தொங்கினார்.

शेषः प्रथमतो जातो वासुकि: तदनन्तरम्।

ऐरावत: तक्षक: च कर्कोटक धनञ्जयौ।।

- vyasa Mahabharata (Adi parva 35)

ஆதி சேஷன் (1) மூத்தவர். ஆதி சேஷனுக்கு பிறகு பிறந்த ஸர்ப்பங்கள் பெயர்கள் பின்வருமாறு.... வாசுகி (2), ஐராவதன் (3), தக்ஷகன் (4), கார்கோடகன் (5), தனஞ்செயன் (6)


कालियो मणिनाग: च नाग: च आपूरण: तथा।

नाग: तथा पिञ्जरक एलापत्रो अथ वामनः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

காளியன் (7), மணிநாகன் (8),  ஆபூரணன் (9), பிஞ்சரகன் (10), ஏலாபத்ரன் (11), வாமனன் (12),


नील अनीलौ तथा नागौ कल्माष शबलौ तथा।

आर्यक: च उग्रक: चैव नागः कलशपोतकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

நீலன் (13), அநீலன் (14), கல்மாஷன் (15), சபலன் (16), ஆர்யகன் (17), உக்ரகன் (18), கலசபோதகன் (19)


सुमनाख्यो दधिमुख: तथा विमलपिण्डकः।

आप्तः कोटरक: चैव शङ्खो वालिशिख: तथा।।

- vyasa Mahabharata (Adi parva 35)

ஸுமனஸ் (20), ததிமுகன் (21), விமலபிண்டகன் (22), ஆப்தன் (23), கோடரகன் (24), சங்கன் (25), வாலிஸிகன் (26)

निष्टानको हेमगुहो नहुषः पिङ्गल: तथा।

बाह्यकर्णो हस्तिपद: तथा मुद्गरपिण्डकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

நிஷ்டானகன் (27), ஹேமகுஹன் (28), நஹுஷன் (29), பிங்கலன் (30), பாஹ்ய-கர்ணன் (31), ஹஸ்திபதன் (32), முத்கரபிண்டகன் (33), 


कम्बल: अश्वतरौ चापि नागः कालीयक: तथा।

वृत्त संवर्तकौ नागौ द्वौ च पद्माविति श्रुतौ।।

- vyasa Mahabharata (Adi parva 35)

கம்பலன் (34), அஸ்வதரன் (35), காளீயகன் (36), வ்ருத்தன் (37). ஸம்வர்த்தகன் (38), பத்மன் (39)என்ற பெயரில் இரு சர்ப்பங்கள்,


नागः शङ्खमुख: चैव तथा कूष्माण्डकोऽपरः।

क्षेमक: च तथा नागो नागः पिण्डारक: तथा।।

- vyasa Mahabharata (Adi parva 35)

சங்கமுகன் (40), கூஷ்மாண்டகன் (41), க்ஷேமகன் (42), பிண்டாரகன் (43)


करवीरः पुष्पदंष्ट्रो बिल्वको बिल्वपाण्डुरः।

मूषकादः शङ्खशिराः पूर्णभद्रो हरिद्रकः।।

- vyasa Mahabharata (Adi parva 35)

கரவீரன் (44), புஷ்ப-தம்ஷ்ட்ரகன் (45), பில்வகன் (46), பில்வபாண்டுரன் (47), மூக்ஷகாதன் (48), சங்கசிரஸ் (49), பூர்ண-பத்ரன் (50), ஹரித்ரகன் (51)


अपराजितो ज्योतिक: च पन्नगः श्रीवह: तथा।

कौरव्यो धृतराष्ट्र: च शङ्खपिण्ड: च वीर्यवान्।|

- vyasa Mahabharata (Adi parva 35)

அபராஜிதன் (52), ஜ்யோதிகன் (53), ஸ்ரீவஹன் (54), கௌரவ்யன் (55), த்ருதராஷ்ட்ரன் (56),    வீரனான சங்கபிண்டன் (57),


विरजा: च सुबाहु: च शालिपिण्ड: च वीर्यवान्।

हस्तिपिण्डः पिठरकः सुमुखः कौणपाशनः।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

விரஜன் (58), சுபாஹு (59), வீரனான சாலிபிண்டன் (60), ஹஸ்திபிண்டன் (61), பிடரகன் (62), ஸுமுகன் (63), கௌணபாசனன் (64)


कुठऱः कुञ्जर: चैव तथा नागः प्रभाकरः।

कुमुदः कुमुदाक्ष: च तित्तिरि: हलिक: तथा।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

குடரன் (65), குஞ்சரன் (66), ப்ரபாகரன் (67), குமுதன் (68), குமுதாக்ஷன் (69), தித்திரி (70), ஹலிகன் (71), 


कर्दम: च महानागो नाग: च बहुमूलकः।

कर्कर अकर्करौ नागौ कुण्डोदर महोदरौ।। 

- vyasa Mahabharata (Adi parva 35)

கர்தமன் (72), பகுமூலகன் (73), கர்கரன் (74), அகர்கரன் (75), குண்டோதரன் (76), மஹோதரன் (77).


இவ்வாறு முக்கியமான 77 சர்ப்பங்கள் பெயரை சொன்னார் ஸூத பௌராணிகர்.

Friday 20 January 2023

பிராம்மணனுக்கு பேச்சும், க்ஷத்ரியனுக்கு இதயமும் கடுமையாக இருக்கும். மஹாபாரதத்தில் உள்ள அழகான உரையாடல்..

பிராம்மணனுக்கு பேச்சும், க்ஷத்ரியனுக்கு இதயமும் கடுமையாக இருக்கும். மஹாபாரதத்தில் உள்ள அழகான உரையாடல்.

பௌஷ்ய ராஜன், உதங்கரை பார்த்து, "பகவன் ! உங்களை போன்ற தகுந்தவர்கள் (யோக்கியதை உள்ளவர்) எளிதில் கிடைக்க மாட்டார்கள். நீங்கள் சிறந்த அதிதியாக இருப்பதால், உங்களுக்கு என் ஸ்ரத்தையை செய்ய விரும்புகிறேன். அதற்கு சிறிது நேரம் எனக்காக ஒதுக்க வேண்டும்" என்றார்

भगवंश्चिरेण पात्रम् आसाद्यते भवाश्च गुणवानतिथि:

तदिच्छे श्राद्धं कर्तुं क्रियतां क्षण इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர், "உனக்காக அவகாசம் கொடுக்கிறேன். உன் சக்திக்கு ஏற்ப சீக்கிரமாக அன்னத்தை தயார் செய்து கொடு" என்றார். "இதோ! தயார் ஆகி விடும்" என்று பௌஷ்ய ராஜன் சொல்லி தன் சக்திக்கு ஏற்ற அன்னத்தை கொடுத்து உதங்கருக்கு உணவு பரிமாறினார்.

तम् उत्तङ्कः प्रत्युवाच कृतक्षण एवास्मि

शीघ्रम् इच्छामि यथोप पन्नम् 

अन्नम् उपस्कृतं भवतेति

स तथेत्युक्त्वा यथोप

पन्नेनान्नेनैनं भोजयामास।।

- மஹாபாரதம் (வியாசர்)

தனக்கு பரிமாறப்பட்ட அன்னம், ஆறி போனதாகவும், அதில் தலைமுடி இருப்பதையும் கண்டு, "இது அசுத்தமான உணவாக உள்ளது" என்று நினைத்து "எனக்கு அசுத்தமான உணவை நீ கொடுத்ததால் நீ குருடனாக போவாய்" என்று அரசனை சபித்து விட்டார்.

अथ: उत्तङ्कः सकेशं शीतमन्नं दृष्ट्वा 

अशुचि एतदिति मत्वा तं पौष्यम् उवाच।

यस्मान्मे अशुच्यन्नं ददासि 

तस्माद् अन्धो भविष्यसीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி உதங்கர் சபித்ததும், பௌஷ்ய ராஜன் பதிலுக்கு "நீர் குறையில்லாத அன்னத்தை குறை சொல்லியதால் சந்ததி இல்லாமல் போவீர்" என்று பதிலுக்கு சபித்தார்.

तं पौष्यः प्रत्युवाच।

यस्मात् त्वम् अदुष्टम् अन्नं 

दूषयसि तस्माद् अनपत्यो

भविष्यसीति तम् उत्तङ्कः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே உதங்கர், "நீ அசுத்தமான அன்னத்தையும் கொடுத்து விட்டு, எனக்கு ப்ரதி-சாபம் கொடுத்தது சரியல்ல. அன்னத்தை கண்ணால் பார்" என்றார். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட அசுத்தமான உணவு உண்மையிலேயே அசுத்தமாக இருந்ததை கவனித்தார் அரசர்.

न युक्तं भवता अन्नम् अशुचि 

दत्त्वा प्रतिशापं दातुं तस्माद् 

अन्नम् एव प्रत्यक्षी कुरु।

ततः पौष्यस्तद् अन्नम् अशुचि दृष्ट्वा 

तस्या शुचिभावम् अपरोक्षयामास।।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த அன்னத்தில் பெண்ணின் கேசமும், ஆறிப்போனதாகவும் இருந்ததை கண்டு உதங்கரை பார்த்து, "பகவன், தெரியாமல் உங்களுக்கு ஆறிப்போன, கேசம் விழுந்த அன்னம் பரிமாறப்பட்டுள்ளது. நான் குருடனாக இல்லாமல் இருக்க வேண்டும். என்னை மன்னிக்கும் படி வேண்டுகிறேன்" என்றார்.

अथ तदन्नं मुक्त केश्या स्त्रियोपहृतमनुष्णं सकेशं

चाशुच्येतदिति मत्वा तम् ऋषिम् उत्तङ्कं प्रसादयामास।।

भघवन्नेतद् अज्ञानादन्नं सकेशम् उपाहृतं शीतं च।

तत्क्षामये भवन्तं न भवेयमन्ध इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே உதங்கர், "நான் சொன்னது பொய் போகாது. இருந்தாலும், நீ சிலகாலம் கண் தெரியாமல் இருந்து, பிறகு சீக்கிரத்தில் மீண்டும் கண் பெறுவாய்" என்றார். மேலும் "நீ எனக்கு கொடுத்த சாபம் தொடராமல் இருக்க வேண்டும்" என்றார்.

तम् उत्तङ्कः प्रत्युवाच।।

न मृषा ब्रवीमि भूत्वा त्वम् अन्धो 

नचिरादनन्धो भविष्यसीति।

ममापि शापो भवता दत्तो न भवेदिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அதற்கு பௌஷ்ய ராஜன் "நான் சாபத்திலிருந்து உங்களை விடுவிக்க மாட்டேன். எனக்கு கோபம் இன்னும் அடங்கவில்லை. ப்ராம்மணனுக்கு இதயம் வெண்ணெய் போன்றது. ப்ராம்மணனுக்கு வாக்கு கூரான கத்தி போன்றது. க்ஷத்ரியர்களான எங்களுக்கு இது மாற்றி வைக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு வாக்கு வெண்ணை போலவும், உள்ளம் கூர்மையான கத்தி போன்றதாகவும் இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா? ஆதலால் என் இதயம் கொடியதாக இருப்பதால், சாபத்தை நான் மாற்ற முடியாது. நீர் போகலாம்" என்றார்.

तं पौष्यः प्रत्युवाच न चाहं शक्तः शापं प्रत्यादातुं

न हि मे मन्यु: अद्याप्युपशमं गच्छति

किं चैतद्भवता न ज्ञायते यथा।।

नवनीतं हृदयं ब्राह्मणस्य

वाचि क्षुरो निहित: तीक्ष्णधारः।

तद् उभयम् एतद् विपरीतं क्षत्रियस्य

वाङ् नवनीतं हृदयं तीक्ष्ण-धारम् इति।।

तदेवंगते न शक्तोऽहं तीक्ष्ण हृदयत्वात्तं 

शापम् अन्यथा-कर्तुं गम्यतामिति।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட உதங்கர், "நீ கொடுத்த உணவு அசுத்தமாக இருந்ததை நீயே பார்த்து என்னிடம் மன்னிப்பு கேட்டாய். 'குற்றமில்லாத அன்னத்தை தூஷித்ததால் உனக்கு சந்ததி இல்லாமல் போகும் என்று சபித்தாய்'. ஆனால் இந்த அன்னம் அசுத்தமானது தான் என்பதால், உன் சாபம் என்னிடம் பலிக்காது. நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு குண்டலங்களை எடுத்து கொண்டு புறப்பட்டார் உதங்கர்.

तम् उत्तङ्कः प्रत्युवाच।।

भवता अहम् अन्नस्या शुचि

भावम् आलक्ष्य प्रत्यनुनीतः।

प्राक् च तेऽभिहितं यस्माद् अदुष्टम् अन्नं 

दूषयसि तस्माद् अनपत्यो भविष्यसीति।

दुष्टे चान्ने नैष मम शापो भविष्यतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)

Friday 13 January 2023

மகாபாரதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? அறிவோம்...

"மகாபாரதம்" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

ஸுத பௌராணிகரான உக்கிரஸ்ரவஸ், சௌனகர் மற்றும் குழுமி இருந்த ரிஷிகளுக்கும் வியாசர் கொடுத்த மஹாபாரத சரித்திரத்தை விவரித்தார்.


சுருக்கமாக மஹாபாரத நிகழ்வை சொல்லி விட்டு, எதற்காக "மகாபாரதம்" என்று பெயர் வைத்தார் வியாசர் என்று சொல்கிறார்.


पुर: अकिल सुरैः सर्वैः समेत्य तुलया धृतम्।

चतुर्भ्यः सरहस्येभ्यो वेदेभ्यो हि अधिकं यदा।।

तदाप्रभृति लोकेऽस्मिन् महाभारतम् उच्यते।

महत्त्वे च गुरुत्वे च ध्रियमाणं यत: अधिकम्।।

महत्त्वाद्भारवत्त्वाच्च महाभारतम् उच्यते।।

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।।

- மகாபாரதம் (வியாசர்)

தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு, வியாசரின் மகாபாரதம் கனமானதா? இல்லை நான்கு வேதங்கள் கனமானதா? என்று சோதித்தனர்.

நான்கு வேதங்களை காட்டிலும் பாரதம் கனமாக (விஷயங்களில், பலனில்) இருந்தது என்று நிர்ணயம் செய்தார்கள் 

அது முதல், இந்த உலகத்தில் இதற்கு "மஹாபாரதம்" என்று பெயர் கிடைத்தது 

இந்த பெயர் காரணத்தை அறிபவன் கூட, தான் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

तपो नकल्क: अध्ययनं नकल्कः

स्वाभाविको वेद विधि: नकल्कः।

प्रसह्य वित्ताहरणं नकल्क:

त: अन्येव भावोपहतानि कल्कः।।

- மகாபாரதம் (வியாசர்)

இதில் சொல்லப்பட்ட படி தவம் செய்தாலும் பாவம் போய் விடும்.

இதை படித்தாலும் பாவம் போய் விடும்.

இதில் சொல்லப்பட்ட படி அவரவர் ஆஸ்ரம தர்மத்தில் வாழ்ந்தாலும் பாபங்கள் அழியும்.

இந்த மஹாபாரதத்தை சொல்வதால் செல்வம் கிடைத்தாலும் அது பாவத்தை தராது.

ஆனால்,

மஹாபாரதத்தில் சொல்லப்பட்டதை கெட்ட எண்ணத்தோடு செய்தால், அனைத்துமே பாவ காரியங்கள் ஆகி விடும்.

Wednesday 11 January 2023

கீழடி ரகசியம்: பாண்டிய மன்னனால் கொல்லப்பட்ட அர்ஜுனன். 5000 வருடம் முன் அன்ன கொடி கொண்டிருந்த பாண்டிய தேசத்துக்கும், அர்ஜுனனுக்கும் உள்ள உறவை அறிவோம்... மஹாபாரதம் அறிவோம்.

பாரத போர் முடிந்தது. யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79

அர்ஜுனன், அஸ்வமேத யாக குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ, அதை பின் தொடர்ந்து ஒவ்வொரு தேசத்து அரசர்களிடமும் சம்மதத்தை பெற்று பட்டாபிஷேகத்துக்கு அழைத்தார்.


புருஷ ஸ்ரேஷ்டரே, ஜனமேஜயா ! அஸ்வமேத குதிரை தன் இஷ்டத்துக்கு அங்குமிங்கும் சஞ்சரித்து, பாண்டவனான அர்ஜுனன் பின் தொடர, மணலூருக்கு (மேலும் படிக்க -> பாண்டியதேசம்) வந்து சேர்ந்தது.

क्रमेण स हयस्त्वेवं विचरन् पुरुषर्षभ।

मणलूरपते: देशम् उपायात्सह पाण्डवः।।

- மஹாபாரதம் (வியாசர்)

மணலூர் - இன்றைய மதுரைக்கு அருகில் 13கிமி தொலைவில் தான் உள்ளது. அருகில் கீழடி உள்ளது.

5000 வருடம் முன்பு, (மேலும் படிக்க ->) பாண்டிய தேசத்துக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவை நாம் காண்கிறோம். பாண்டிய தேசத்தை 'அர்ஜுனன் மகன் ஆண்டான்' என்பதையும் அறிகிறோம்.

பாண்டிய தேச அரசனான பப்ருவாகனன் தன்னுடைய தந்தை தன் தேசத்து பக்கம் வந்திருப்பதை கேள்விப்பட்டு, பெரியோர்களை, பிராம்மணர்களை  முன்னிட்டு கொண்டு, தன் நகரத்திலிருந்து கை கூப்பி கொண்டு வெளியில் வந்தான்.

श्रुत्वा तु नृपतिः प्राप्तं पितरं बभ्रु-वाहनः।

निर्ययौ विनयेनाथ ब्राह्मणार्यपुरःसरः।।

- மஹாபாரதம் (வியாசர்)


மணலூர் அரசனான பப்ருவாகனன் க்ஷத்ரியனாக இருந்து கொண்டு, இப்படி தன்னை வரவேற்றதை அர்ஜுனன் (தனஞ்செயன்) வெறுத்தார்.

मणलूरेश्वरं त्वेवमुपयातं धनंजयः।

नाभ्य नन्दत्स मेधावी क्षत्र धर्म म् अनुस्मरन्।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே அர்ஜுனன் அவனை பார்த்து, "நீ செய்வது உனக்கு தகுதியா? க்ஷத்ரிய தர்மத்தை விட்டு நிற்கிறாயே!!.   மகனே ! யுதிஷ்டிரருடைய யாக குதிரையை நான் காத்து கொண்டு வந்து இருக்கிறேன். உன்னுடைய தேசத்தின் எல்லையில் வந்திருக்கும் என்னிடம் ஏன் நீ போர் செய்யவில்லை?

க்ஷத்ரிய தர்மத்தை அறிந்தும், இப்படி புத்தி கெட்டு போனாயே! இதற்காக உன்னை நிந்திக்கிறேன்.

யுத்தத்திற்கு வந்திருக்கும் என்னிடம் நல்ல வார்த்தை சொல்லி வரவேற்க வந்துள்ளாயே? இப்படியும் நீ வாழ வேண்டுமா? இதனால் உனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது?

தீயகுணம் உள்ளவனே ! நான் ஒருவேளை ஆயுதம் இல்லாமல் வந்திருந்தால் நீ செய்த காரியத்தை ஏற்று இருக்கலாம்."என்று கடிந்து கொண்டார் அர்ஜுனன்.

यद् अहं न्यस्त शस्त्र: त्वां आगच्छेयं सुदुर्मते।

प्रक्रियेयं भवेद् युक्ता तावतव नराधम।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே! அர்ஜுனன் பேச்சை பொறுக்க முடியாமல், நாக கன்னிகையான உலூபி பூமியை பிளந்து கொண்டு வந்தாள்.

तमेवम् उक्तं भर्त्रा तु विदित्वा पन्नग आत्मजा।

अमृष्यमाणा भित्त्वोर्वीम् उलूपी समुपागमत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுத்தத்தை விரும்பும் தகப்பன் ஒருபுறம் நிற்க, மறுபுறம் தலை குனிந்து செய்வதறியாது யோசித்து கொண்டிருக்கும் பிள்ளையை கண்டாள்.

அந்த உலூபி, புத்ரனை நோக்கி, "க்ஷத்ரிய தர்மத்தை அறிந்தவனே! நீ என்னையும் உன் தாய் என்றும், பன்னகனின் மகளுமான உலூபி என்று தெரிந்து கொள்.

மகனே! நான் சொல்வதை கேள். உனக்கு மேலான தர்மத்தை சொல்கிறேன்.

उलूपीं मां निबोध त्वं मातरं पन्नग आत्मजाम्।

कुरुष्व वचनं पुत्र धर्मस्ते भविता परः।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ கௌரவ ஸ்ரேஷ்டரும் பகைவரை அடக்குபவரான தனஞ்ஜெயரிடம் போர் செய்.

நீ போர் செய்வதையே அவர் பெரிதும் விரும்புவார். உன்னிடம் பிரியம் காட்டுவார். சந்தேகப்படாதே!என்றாள்.

युध्यस्वैनं कुरुश्रेष्ठं धनंजयम् अरिन्दमम्।।

एवम् एष हि ते प्रीतो भविष्यति न संशयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி சொன்னதும், பப்ருவாகனன் யுத்தம் செய்ய மனம் கொண்டான்.

உடனே தங்க மயமான கவசம், தலை கவசம் அணிந்து கொண்டு, பற்பல பாணங்களுடன் தங்க மயமான அன்ன கொடி பறக்கும் தேரில் ஏறினான்.

परम अर्चितमु उच्छ्रित्य ध्वजं हंसं हिरण्मयम्।

प्रययौ पार्थम् उद्दिश्य स राजा बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

உடனேயே, தேர்ச்சி உள்ள தன் சேவகர்களை கொண்டு, யாக குதிரையை அடக்கி பிடித்து விட்டான்.

அஸ்வமேத யாக குதிரையை பிடித்து, கம்பீரமாக தேரில் நிற்கும் தன் மகனை கண்டு, அர்ஜுனன் மனம் மகிழ்ந்தார்.

உடனே தரையில் நின்று கொண்டு போரிடும் அர்ஜுனன், பாம்பின் விஷத்தை போன்று கக்கும் பாணங்களை தொடுத்தார்.

தகப்பனும், மைந்தனும் போர் செய்வது, தேவர்களும் அசுரர்களும் போர் செய்வது போல இருந்தது.

பப்ருவாகனன் சிரித்து கொண்டே, கூர்மையான பானங்களை கொண்டு, அர்ஜுனன் தோளில் அடித்தான்.

அந்த பாணம் எப்படி பாம்பு புற்றுக்குள் நுழையுமோ அது போல அர்ஜுனன் தோளை கிழித்து கொண்டு, பூமிக்கும் நுழைந்தது.


இதனால் நிலை குலைந்த அர்ஜுனன் ஒரு சில நிமிடம் தன் வில்லை பிடித்து கொண்டே மயங்கினார். உடனே தன்னை சுதாரித்து கொண்டு எழுந்து, பப்ருவாகனனை பார்த்து,

"சிறந்த கைகள் உடையவனே! குழந்தாய் ! சித்ராங்கதையின் மகனே!   அருமை. அருமை. மகனே! நீ உன் தர்மத்தில் இருப்பதை கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தேன். மகனே ! நான் இப்பொழுது உன் மீது பாணங்களை பிரயோகிக்க போகிறேன். யுத்தத்தில் கலங்காமல் போர் செய்" என்றார்.

साधुसाधु महाबाहो वत्स चित्राङ्गदात्मज।

सदृशं कर्म ते दृष्ट्वा प्रीतिमानस्मि पुत्रक।

विमुञ्चाम्येष ते बाणान्पुत्र युद्धे स्थिरो भव।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே, அர்ஜுனன் வஜ்ராயுதத்துக்கும் ஈடாக, பெரும் இடி போன்ற பாணங்களை வர்ஷித்தார். அது அனைத்தையும் பப்ருவாகனன் தன் பாணங்களால் அடித்து இரண்டு மூன்று துண்டாக உடைத்து எறிந்தான்.

உடனே, அர்ஜுனன் தன் பாணங்களால் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு பனை மரம் போன்று உயர்ந்து இருந்த பப்ருவாகனன் தேர் கொடியை அறுத்து சாய்த்தார்.

तस्य पार्थः शरै: दिव्यै र्ध्वजं हेम परिष्कृतम्।

सुवर्णताल प्रतिमं क्षुरेणापाहरद्रथात्।।

- மஹாபாரதம் (வியாசர்)

மேலும், சிரித்து கொண்டே, மிகவும் வேகமுள்ளதும், பெரிய உடல் கொண்ட தேர் குதிரைகளை உயிரற்றதாக ஆக்கினார்.

हयां च अस्य महाकायान् महावेगान् अरिंदम।

चकार राजन् निर्जावान् प्रहसन्निव पाण्डवः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இதனால் பெரும் கோபம் கொண்ட அரசன் (பப்ருவாகனன்) தேரிலிருந்து கீழ் இறங்கி கடுமையான போர் புரிய தொடங்கினான்.

தன் மகனுடைய வீரத்தை கண்டு ஆனந்தம் அடைந்த இந்திர குமாரனும், பாண்டவனுமான  அர்ஜுனன் தன் மகனை கடுமையாக  தாக்காமல் போர் செய்தார்.

தன் மீது அர்ஜுனன் போடும் பாணங்களால் பெரும் கோபத்துடன் சர்ப்பம் போல பாயும் பானங்களை அர்ஜுனன் மேல் தொடுத்தான்.

இப்படி போர் செய்து கொண்டிருக்கும் போதே, சிறுபிள்ளைத்தனமாக மிகவும் கூர்மையான பாணத்தால் பிதாவான அர்ஜுனனின் மார்பில் பலமாக பப்ருவாகனன் அடித்து விட்டான்.

ततः स बाल्यात् पितरं विव्याध हृदि पत्रिणा।

निशेतेन सुपुङ्खेन बलवद् बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)


மார்பில் பட்ட பாணத்தால், அர்ஜுனன் உயிர் பிரிந்து, பூமியில் விழுந்தார்.

स तेनातिभृशं विद्धः पुत्रेण कुरुनन्दनः।

महीं जगाम मोहार्त: ततो राजन् धनंजयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கௌரவர்களில் சிறந்தவனான அந்த வீரன் விழுந்ததை பார்த்த சித்ராங்கதையின் மகனான பப்ருவாகனனும் மயங்கி விழுந்து விட்டான்.

तस्मिन् निपतिते वीरे कौरवाणां धुरंधरे।

सोपि मोहं जगामाथ तत: चित्राङ्गद: सुतः।।

- மஹாபாரதம் (வியாசர்)

சித்ராங்கதை தன்  கணவர் கொல்லப்பட்டும், தன் மகன் விழுந்து கிடப்பதையும் கேள்விப்பட்டு, பெரும் நடுக்கத்துடன் போர்க்களம் ஓடி வந்தாள்

भर्तारं निहतं दृष्ट्वा पुत्रं च पतितं भुवि।

चित्राङ्गदा परित्रस्ता प्रविवेश रणाजिरे।।

- மஹாபாரதம் (வியாசர்)

சோகத்தால் மூழ்கி இருந்த மணலூர் அரசனின் தாயானவள், கொல்லப்பட்டு இருக்கும் தன் கணவனை கண்டாள்

शोक संतप्त हृदया रुदती वेपती भृशम्।

मणलूरपते: माता ददर्श निहतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாமரை போன்ற கண்களுடைய சித்ராங்கதை பயத்துடனும், அதிகமாக புலம்பி அழுது மூர்ச்சை அடைந்து மயங்கி விழுந்தாள்.

சிறிது நேரம் கழித்து, எழுந்த சித்ராங்கதை, திவ்யமான தேகம் கொண்ட நாககன்னிகையான உலூபியை பார்த்து பேசலானாள்.

प्रतिलभ्य च सा संज्ञां देवी दिव्य वपुर्धरा।

उलूपीं पन्नग-सुतां दृष्ट्वेदं वाक्यमब्रवीत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

"உலூபி, உன்னால் ஏவப்பட்ட என் பிள்ளையால், யுத்தத்தில் பாணங்களால் அடிபட்டு கிடக்கும் கணவனை பார்.

उलूपि पश्य भर्तारं शयानं नितं रणे।

त्वत्कृते मम पुत्रेण बाणेन समितिंजयम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ தர்மம் அறிந்தவள் தானே! பதிவ்ரதை தானே! உன்னால் உன்னுடைய கணவன் இப்படி போரில் கொல்லப்பட்டு விழுந்து கிடக்கிறாரே !

ननु त्वम् आर्य धर्मज्ञा ननु चासि पतिव्रता।

यत्त्वत्कृतेऽयं पतितः पतिस्ते निहतो रणे।।

- மஹாபாரதம் (வியாசர்)

அறிவு கெட்டவளே! அர்ஜுனர் உனக்கு என்ன தீங்கு செய்தார்? ஒருவேளை தீங்கு செய்து இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவருடைய உயிரை பெற்று கொடு.

किंनु मन्दे अपकराद्धोऽयं यदि तेऽद्य धनंजयः।

क्षमस्व याच्यमाना वै जीवयस्व धनंजयम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

உன்னை பூஜிக்கிறேன்! தர்மம் அறிந்தவளே! நீ மூவுலங்களிலும் ப்ரஸித்தமானவளாயிற்றே! நல்லவளே! பிள்ளையால் கணவனை கொன்று விட்டு, கவலைப்படாமல் இருக்கிறாயே!

ननु त्वम् आर्ये धर्मज्ञे त्रैलोक्य विदिता शुभे।

यद्धातयित्वा पुत्रेण भर्तारं नानु शोचसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

பன்னகனின் மகளே! என் மகன் இப்படி கிடப்பதை பார்த்து கூட நான் கவலையடவில்லை. ஆனால், அதிதியாக திடீரென்று வந்த கணவருக்கு இப்படி அதிதி பூஜை செய்யப்பட்டு விட்டதே என்று துக்கப்படுகிறேன்." என்று அழுதாள்.

இப்படி உலூபியிடம் புலம்பி அழுது விட்டு, கீழே விழுந்து கிடக்கும் தன் கணவனான அர்ஜுனன் அருகில் வந்து புலம்பினாள்.

"யுதிஷ்டிரருக்கு மிக்க ப்ரியமானவரே! எனக்கு ப்ரியமானவரே! எழுந்திருங்கள். நீண்ட கைகள் உடையவரே! உந்த குதிரையை நான் உமக்காக விட்டு விட்டேன்.

उत्तिष्ठ कुरु-मुख्यस्य प्रियमुख्य मम प्रिय।

अयम् अश्वो महाबाहो मयो ते परिमोक्षितः।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! நீங்கள் தர்மராஜருடைய யாக குதிரை பின்னால் செல்ல வேண்டாமா? ஏன் பூமியில் படுத்து இருக்கிறீர்கள்?

குரு நந்தனா! என்னுடைய உயிரும், கௌரவர்கள் உயிரும் உங்களை நம்பி அல்லவா இருக்கிறது! மற்றவர்களுக்கு உயிரை கொடுப்பவரான நீங்கள் எந்த காரணத்தினால் உயிரை விட்டீர்கள்?

உலூபி ! பூமியில் கிடக்கும் கணவரையும், இந்த புத்திரனையும் பார்! இவர்களை கொன்று விட்டு, கொல்ல காரணமாகி விட்டு, நீ துயரம் அடையாமல் இருக்கிறாயே!

उलूपि साधु पश्येमं पतिं निपतितं भुवि।

पुत्रं चेमं समुत्साद्य घातयित्वा न शोचसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

என் குழந்தை மரணத்தின் பிடியில் அகப்பட்டு பூமியில் கிடக்கட்டும். சிவந்த கண்களும் குடாகேசனுமான விஜயர் வாழ வேண்டும்.

कामं स्वपितु बालोऽयं भूमौ मृत्युवशं गतः।

लोहिताक्षो गुडाकेशो विजयः साधु जीवतु।।

- மஹாபாரதம் (வியாசர்)

பாக்கியவதியே!  ஆண்களுக்கு பல பத்னிகள் இருந்தால் தோஷமில்லை. உனக்கு இதனால் ஏற்பட்ட புத்தி மாற்றம் குற்றமாகும்.

न अपराध अस्ति सुभगे नराणां बहु-भार्यता।

प्रमदानां भवत्येष मा ते भूद्बुद्धि: ईदृशी।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரம்மாவின் படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அழிவற்ற ஸ்நேகம் படைக்கப்பட்டது.

இந்த ஸ்நேகத்தை நீ புரிந்து கொள். உன்னுடைய ஸ்நேகம் உண்மையாக இருக்க வேண்டாமா?

सख्यं चैतत्कृतं धात्रा शश्वदव्ययमेव तु।

सख्यं समभिजानीहि सत्यं सङ्गतमस्तु ते।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ புத்திரனால் கொல்லப்பட்ட இவரை பிழைக்க செய்து எனக்கு காட்டாமல் இருந்தால், நான் இப்பொழுதே உயிரை விடுவேன்.

पुत्रेम घातयित्वैनं पतिं यदि न मेऽद्य वै।

जीवन्तं दर्शयस्यद्य परित्यक्ष्यामि जीवितम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தேவீ! கணவனையும், பிள்ளையையும் இழந்த சோகத்தில் இருக்கும் நான், நீ பார்க்கும் பொழுதே இங்கேயே உயிரை விட போகிறேன்" என்று அழுதாள்.

साऽहं दुःखान्विता देवि पतिपुत्रविनाकृता।

इहैव प्रायमाशिष्ये प्रेक्षन्त्यास्ते न संशयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி புலம்பி கொண்டு, தன் கணவருடைய கால்களை பிடித்து கொண்டு, புத்திரனை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டும் செய்வதறியாது உட்கார்ந்து இருந்தாள்.

इत्युक्त्वा पन्नग-सुतां सपत्नी चैत्रवाहनी।

ततः प्रायम् उपासीना तूष्णीमासीज्जनाधिप।।

ततो विलप्य विरता भर्तुः पादौ प्रगृह्य सा।

उपविष्टा भवद्दीना सोच्छ्वासं पुत्रम् ईक्षती।।

- மஹாபாரதம் (வியாசர்)

சிறிது நேரத்தில், பப்ருவாகனன் நினைவு வந்து எழுந்தான். அப்போது தன் தாய் வந்திருப்பதை பார்த்து, "சுகமாகவே வளர்ந்தவளான என் தாயார், பூமியில் உயிரற்று கிடக்கும் தன் கணவன் அருகில் படுத்து இருக்கிறாளே! இதை விட பெரிய துக்கம் எனக்கு ஏது?

इतो दुःखतरं किंनु यन्मे माता सुखैधिता।

भूमौ निपतितं वीरमनुशेते मृतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஆ! சஸ்திரங்களில் சிறந்தவரான, பகைவரை ஒழிப்பவரான, யாராலும் கொல்லப்படாதவரான  இவர் என்னால் கொல்லப்பட்டு அதை என் தாய் பார்க்கும் படியாக ஆகி விட்டதே!

निहन्तारं रणेऽरीणां सर्वशस्त्रभृतां वरम्।

मया विनिहतं सङ्ख्ये प्रेक्षते दुर्मरं बत।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஐயோ! பரந்த மார்பும், நீண்ட கைகளும் உடைய தன் பர்த்தா பூமியில் கிடப்பதை பார்த்தும் என் தாயார் நெஞ்சம் உடையாமல் உறுதியாக இருக்கிறாளே! 

अहोऽस्या हृदयं देव्या दृढं यन्न विदीर्यते।

व्यूढोरस्कं महाबाहुं प्रेक्षन्त्या निहतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

மரண காலம் வராமல் யாருக்கும் மரணம் ஏற்படாது என்று உணர்கிறேன்.

எங்களுக்கு அந்த காலம் வராததால் தானே, நானும் என் தாயும் இதை கண்டும் உயிரோடு இருக்கிறோம் !

दुर्मरं पुरुषेणेह मन्ये काले ह्यनागते।

यत्र नाहं न मे माता न वियुक्तौ स्वजीवितात्।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஆ! ஆ! என்னை நான் வெறுக்கிறேன்! பெற்ற பிள்ளையால் கொல்லப்பட்டு கிடக்கும் அர்ஜுனருடைய கிரீடமானது மண்ணில் கிடக்கிறதே!

हाहा धिक्-कुरुवीरस्य किरीटं काञ्चनं भुवि।

अपविद्धं हतस्येह मया पुत्रेम पश्यत।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஓ! ஓ! ப்ராம்மணர்களே! பெற்ற பிள்ளையால் கொல்லப்பட்டு கிடக்கும் அர்ஜுனருடைய கிரீடமானது மண்ணில் கிடப்பதை பாருங்கள்.

भोभो पश्यत मे वीरं पितरं ब्राह्मणा भुवि।

शयानं वीरशयने मया पुत्रेण पातितम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுதிஷ்டிரரால் அனுப்பப்பட்ட யாக குதிரையுடன் கூடவே வந்த ப்ரம்மம்மணர்கள் என்ன சாந்தியை சொல்வீர்கள்? கொடியவனும், பாபியும், போர்க்களத்தில் பெற்ற தகப்பனை கொன்ற எனக்கு பிராமணர்களே எனக்கு என்ன பிராயச்சித்தம் சொல்வீர்கள்?

பெற்ற தந்தையை கொன்ற எனக்கு, இவருடைய தோலையே ஆடையாக, இவரது கபாலத்தை கொண்டே பிச்சை எடுத்து போஜனம் செய்து கொண்டு, 12 வருட காலம் கடுமையாக அலைந்து கொண்டிருப்பதே எனக்கு பிராயச்சித்தமாக படுகிறது.

दुश्चरा द्वादश समा हत्वा पितरमद्य वै।

ममेह सुनृशंसस्य संवीतस्यास्य चर्मणा।।

शिरःकपाले चास्यैव भुञ्जतः पितुरद्य मे।

प्रायश्चित्तं हि नास्त्यन्यद्धत्वाऽद्य पितरं मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

நாகராஜனின் பெண்ணே! என்னால் கொல்லப்பட்ட உன் கணவரை பார்.

நான் உன் சொல்படி என் தகப்பனோடு போர் செய்து அர்ஜுனரை கொன்று, உனக்கு ப்ரீதி செய்தேன்!

மங்களமானவளே ! நானும் என் தந்தை இருக்கும் இடத்திற்கு செல்ல போகிறேன்.

இனி என்னால் தைரியமாக வாழ முடியாது. உயிரை தரிக்க முடியாது.

सोऽहम् अद्य गमिष्यामि गतिं पितृ निषेविताम्।

न शक्नोम्य आत्मना आत्मानम् अहं दारयितुं शुभे।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாயே! தேவீ! உன் மீது ஆணை. நானும் காண்டீவம் தரித்த அர்ஜுனரும் மரணித்த பின், சந்தோஷமாக இருஎன்று கதறினான்.

सा त्वं मयि मृते मातस्तथा गाण्डीव धन्वनि।

भव प्रीतिमती देवि सत्येन आत्मानमालभे।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி துக்கத்தால் பேசி, ஆசமனம் செய்து பிறகு மீண்டும் உலூபியை பார்த்து,

"நாக கன்னிகையே! நன்றாக கேளுங்கள். என்னுடைய தந்தை இந்த போர் களத்தில் இருந்து எழுந்திருக்காத வரை, இந்த இடத்திலேயே கிடந்து என் உடலை வருத்தி கொள்வேன்.

शृण्वन्तु सर्व भूतानि स्थावराणि चराणि च।

त्वं च मातर्यथा सत्यं ब्रवीमि भुजगोत्तमे।।

यदि न: उत्तिष्ठति जयः पिता मे नर-सत्तमः।

अस्मिन् एव रणो-द्देशे शोषयिष्ये कलेवरम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தந்தையை கொன்ற எனக்கு வேறு பிராயச்சித்தம் தெரியவில்லை. நான் நரகத்தை அடைய போகிறேன்.

नहि मे पितरं हत्वा निष्कृतिर्विद्यते क्वचित्।

नरकं प्रतिपत्स्यामि ध्रुवं गुरु वधार्दितः।।

- மஹாபாரதம் (வியாசர்)

வீரனான க்ஷத்திரியனை ஒருவன் கொன்றால், 100 பசு தானம் செய்து பாபத்தை கழித்து கொள்ளலாம்.

ஆனால், பிதாவாகவும் உள்ள இவரை கொன்றதால், எனக்கு ப்ராயச்சித்தமே கிடையாது.

वीरं हि क्षत्रियं हत्वा गोशतेन प्रमुच्यते।

पितरं तु निहत्यैवं दुर्लभा निष्कृतिर्मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

யாருக்கும் நிகரில்லாதவர் ஆயிற்றே இவர்! சிறந்த பொலிவு உடையவராயிற்றே இவர்! என்னுடைய பிதாவாயிற்றே! தர்ம சிந்தனை உடையவராயிற்றே! இவரை கொன்ற எனக்கு ஏது பிராயச்சித்தம்?என்று கதறி அழுதான்.

இவ்வாறு மணலூர் அரசன் (மதுரை மஹாபாரத காலத்தில் மணிபூரம் என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் பெரியாழ்வார் இங்கு வந்து வசித்த போது, கள்ளழகர் இருக்கும் இடத்தை பார்த்தால் கோகுலம் போலவும், அங்குள்ள மலையை பார்த்தால் பிருந்தாவனம் போலவும், இந்த தலைநகரை பார்த்தால் மதுரை போலவும் தெரிய, அங்கேயே வசித்தார். மணிபூரம் மதுரை போல இருக்க, பல இடங்களில் உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிஜமான மதுராவை வடமதுரை என்று குறிப்பிட்டு பாடுகிறார்) பித்ரு சோகத்தால் அகப்பட்டு, தாயுடன் சேர்ந்து உயிரை போர்க்களத்திலேயே விட்டு விட அமர்ந்து இருக்க, உலூபியானவள், "சஞ்ஜீவனம்" என்ற மணியை நினைத்தாள்.

प्रायोपविष्टे नृपतौ मणिपूर ईश्वरे तदा।

पितृ-शोक समाविष्टे सह मात्रा परंतप।।

उलूपी चिन्तयामास तदा संजीवनं मणिम्।

स चोपातिष्ठत तदा पन्नगानां परायणम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

பன்னகர்களிடமே இருக்கும் அந்த திவ்யமான மணியானது, தோன்றியது.

கௌரவரே! ஜனமேஜயா! நாகராஜ பெண்ணான உலூபி அதை எடுத்து கொண்டு, மனம் மகிழும்படியான வார்த்தையை சொன்னாள்.

"மகனே! எழுந்திரு! துக்கப்படாதே! அர்ஜுனர் உன்னால் கொல்லப்படவில்லை. அர்ஜுனர் மனிதர்களாலும், தேவர்களாலும் ஜெயிக்க முடியாதவர்.

उत्तिष्ठ मा शुचः पुत्र नैव जिष्णुस्त्वया हतः।

अजेयः पुरुषै: एष तथा देवैः सवासवैः।।

- மஹாபாரதம் (வியாசர்)

புகழ் பெற்ற புருஷரான உன் பிதாவுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு மாயை செய்தேன்.

मया तु मोहनी नाम मायैषा सम्प्रदर्शिता।

प्रियार्थं पुरुषेन्द्रस्य पितुस्तेऽद्य यशस्विनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கௌரவா! அரசே! எதிரிகளை கொல்பவரான இவர், போரில் உன்னுடைய பலத்தை பார்க்க விரும்பினார்.

புத்ரா! அதனால் தான் உன்னை யுத்தம் செய்ய தூண்டினேன்.

जिज्ञासुर्ह्येष पुत्रस्य बलस्य तव कौरव।

सङ्ग्रामे युद्ध्यतो राजन् आगतः परवीरहा।।

- மஹாபாரதம் (வியாசர்)


புத்ரா! ராஜன்! உன் மீது சிறிது கூட பாபம் உண்டானதாக எண்ணாதே! உனது தந்தை, மஹாத்மா, புராணமானவர், சாஸ்வதமானவர், அழிவற்றவர், ரிஷி போன்றவர்.

மகனே! இவரை இந்திரனே வந்தாலும் போரில் ஜெயிக்க முடியாது.

ऋषिरेष महानात्मा पुराणः शाश्वतोऽक्षरः।

नैनं शक्तो हि सङ्ग्रामे जेतुं शक्रोऽपि पुत्रक।।

- மஹாபாரதம் (வியாசர்)

வேந்தே! நான் திவ்யமான ஒரு மணியை வரவழைத்து இருக்கிறேன்.

இது பன்னகர்களாகிய எங்களை மரித்தாலும் மீண்டும் மீண்டும் பிழைக்க செய்யும்.

अयं तु मे मणिर्दिव्यः समानीतो विशांपते।

मृतान्मृतान् पन्नगेन्द्रान्यो जीवयति नित्यदा।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரபுவே! நீ இந்த மணியை உன் தந்தையின் மார்பில் வை. அப்பொழுதே, நீ குந்தி புத்திரரான பாண்டவரை உயிரோடு பார்ப்பாய்என்றாள்.

एनमस्योरसि त्वं च स्थापयस्व पितुः प्रभो।

संजीवितं तदा पार्थं स त्वं द्रष्टासि पाण्डवम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

இவ்விதம் கேட்டதும், பராக்ரமமும், பாவமற்றவனுமான பப்ருவாகனன், அந்த மணியை எடுத்து அர்ஜுனன் மார்பில் வைத்தான்.

इत्युक्तः स्थापयामास तस्योरसि मणिं तदा।

पार्थस्यामिततेजाः स पितुः स्नेहादपापकृत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

அந்த மணியை வைத்த உடனேயே, வீரனான அர்ஜுனன் உயிர் பெற்று, நீண்ட நேரம் தூங்கி எழுந்தவனை  போல, தன் சிவந்த கண்களை துடைத்து கொண்டு எழுந்தார்.

तस्मिन्न्यस्ते मणौ वीरो जिष्णु: उज्जीवितः प्रभुः।

चिरसुप्त हवोत्तस्थौ मृष्ट लोहित-लोचनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

சுயநினைவு பெற்று எழுந்திருந்த அர்ஜுனனை கண்ட பப்ருவாகனன் நமஸ்காரம் செய்தான்.

तमुत्थितं महात्मानं लब्धसंज्ञं मनस्विनम्।

समीक्ष्य पितरं स्वस्थं ववन्दे बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரபுவே! ஜனமேஜயா! இப்படி அர்ஜுனன் எழுந்ததும், இந்திரன் தேவலோக புஷ்பங்களை பொழிந்தான்துந்துபிகள் அடிக்கப்படாமலேயே, மேகங்கள் மோதி சப்தம் கொடுத்தது. ஆகாயத்தில், "நல்லது.. நல்லது" என்று மிகப்பெரிய ஒலி கேட்டது.

உறுதியான கைகளை உடைய அர்ஜுனன் எழுந்திருந்து களைப்பாறி, தன் பிள்ளையான பப்ருவாகனனை உச்சி முகர்ந்து கொஞ்சினார்.

उत्थाय च महाबाहुः पर्याश्वस्तो धनंजयः।।

बभ्रुवाहनम् आलिङ्ग्य समाजिघ्रत मूर्धनि।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிறகு, தனஞ்சயன் சோகத்தால் இளைத்த உலூபியுடன் தூரத்தில் நிற்கும் சித்ராங்கதையை பார்த்தார்.

ददर्श च अपि दूर अस्य मातरं शोक-कर्शिताम्।

उलूप्या सह तिष्ठन्तीं ततोऽपृच्छद् धनंजयः।।

- மஹாபாரதம் (வியாசர்)


அப்பொழுது தன் மகனை நோக்கி, "போர்க்களம் முழுவதும் சோகமும், ஆச்சர்யமும், சந்தோஷமும் கலந்து காணப்படுகிறதே! இது என்ன? உனக்கு தெரியுமானால் எனக்கு சொல்.

உன்னுடைய தாயான சித்ராங்கதை இந்த போர்க்களத்துக்கு ஏன் வந்தாள்? நாகராஜனின் புத்ரியான உலூபியும் ஏன் இங்கு வந்தாள்? என்னுடைய உத்தரவால் நீ என்னிடம் போர் செய்தாய் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் இந்த பெண்கள் போர்க்களத்துக்கு வந்ததற்கான காரணம் என்ன? என்று அறிய விரும்புகிறேன்!என்று கேட்டான்.

இதை கேட்ட மணலூர் அரசன், தலை வணங்கி நமஸ்கரித்து விட்டு, "உலூபியை கேளுங்கள்" என்றான்.

तम् उवाच तथा पृष्टो मणिपूरपति: तदा।

प्रसाद्य शिरसा विद्वान् उलूपी पृच्छ्यताम् इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அர்ஜுனன் உலூபியை பார்த்து, "கௌரவ குலத்தை ஆனந்தப்படுத்துபவளே!  நீயும் மணலூர் அரசனுடைய தாயும் இந்த போர் களத்திற்கு வந்த காரணம் என்ன? 

किमागमनकृत्यं ते कौरव्य-कुलनन्दिनि।

मणलूरपते: मातुस्तथैव च रणाजिरे।।

- மஹாபாரதம் (வியாசர்)

நாக பெண்ணே! இந்த அரசனுடைய க்ஷேமத்துக்காக இங்கு வந்தாயா? மான் போன்ற விழி கொண்டவளே! அல்லது நீ என்னுடைய க்ஷேமத்திற்காக வந்தாயா?

அழகிய இடை கொண்டவளே! மங்களமாக இருப்பவளே! நானோ, பப்ருவாகனனோ அறியாமல் உனக்கு ஏதாவது அபசாரம் ஏதாவது செய்து விட்டோமா?

कच्चित्ते पृथुलश्रोणि नाप्रियं प्रियदर्शने।

अकार्षमहमज्ञानादयं वा बभ्रुवाहनः।।     

- மஹாபாரதம் (வியாசர்)

ராஜகுமாரியும், சித்ரவாகனனுடைய மகளும், உத்தமியுமான, உன்னுடைய ஸபத்னியுமான சித்ராங்கதை ஏதாவது தீங்கு செய்து விட்டாளா?" என்று வினவினான்.

कच्चिन्नु राजपूत्री ते सपत्नी चैत्रवाहनी।

चित्राङ्गदा वरारोहा नापराध्यति किञ्चन।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி கேட்டதும், சிரித்து கொண்டே, உரகராஜனின் பெண்ணான உலூபி, "நீங்கள் எனக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. பப்ருவாகனனும் தீங்கு செய்யவில்லை. நான் கேட்கும் உதவிகளை கேட்டு செய்யும் சித்ராங்கதையும் எனக்கு எந்த தீமையும் செய்யவில்லை.

तमुवाचोरगपतेर्दुहिता प्रहसन्त्यथ।

न मे त्वमपराद्धोसि न हि मे बभ्रुवाहनः।

न जनित्री तथाऽस्येयं मम यो प्रेष्य वत्थिता।।

- மஹாபாரதம் (வியாசர்)

நான் செய்ததை உள்ளபடி உங்களுக்கு சொல்கிறேன். கேளுங்கள்.

நீங்கள் என்னை கோபித்து கொள்ள கூடாது. இதற்காக உங்களை தலைவணங்கி பிரார்த்திக்கிறேன்.

श्रूयतां यद्यथा चेदं मया सर्वं विचेष्टितम्।

न मे कोपस्त्वया कार्यः शिरसा त्वां प्रसादये।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! தனஞ்சயரே! உங்களுடைய ப்ரியத்துக்காகவே இதனை நான் செய்தேன்!  முழுமையாக கேளுங்கள்.

பார்த்தரே ! நீங்கள் மஹாபாரத யுத்தத்தில் சந்தனுவின் பிள்ளையான பீஷ்மரை அதர்மமாக கொன்றீர்கள். அதற்கு பிராயச்சித்தமாக இந்த காரியத்தை நான் செய்தேன்.

महाभारत-युद्धे यत्त्वया शान्तनवो नृपः।

अधर्मेण हतः पार्थ तस्यैषा निष्कृतिः कृता।।

- மஹாபாரதம் (வியாசர்)

வீரரே! யுத்தத்தில் பீஷ்மர் யுத்தம் செய்த போது, நீங்கள் அவரை கொல்லவில்லை.

நீங்கள் சிகண்டியுடன் சேர்ந்து, அவனை முன்னிட்டு, பீஷ்மரை கொன்றீர்கள். 

न हि भीष्मस्त्वया वीर युद्ध्यमानो हि पातितः।

शिखण्डिना तु संयुक्तस्तमाश्रित्य हतस्त्वया।।

- மஹாபாரதம் (வியாசர்)

இந்த காரியத்துக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளாமல் உயிரை விட்டால், நிச்சயமாக நரகத்தில் விழுவீர்கள். நீங்கள் உங்கள் புத்ரனிடம் தோல்வி அடைவது ப்ராயச்சித்தமாக ஏற்படுத்தப்பட்டது.

तस्य शान्तिमकृत्वा त्वं त्यजेथा यदि जीवितम्।

कर्मणा तेन पापेन पतेथा निरये ध्रुवम्।

एषा तु विहिता शान्तिः पुत्राद्यां प्राप्तवानसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

உலகை காப்பவரே ! சிறந்த புத்திமானே !

நான் வஸுக்களையும் கங்கையையும் சந்தித்த போது, உங்களை பற்றி வஸுக்கள் பேசிக்கொண்டதை சொல்கிறேன், கேளுங்கள்.

वसुभि: वसुधापाल गङ्गया च महामते।

पुरा हि श्रुतमेतत्ते वसुभिः कथितं मया।।

- மஹாபாரதம் (வியாசர்)

அரசரே! பீஷமர் கொல்லப்பட்ட போது, வஸுக்கள் என்ற தேவர்கள்,  ஒன்று சேர்ந்து, கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு, கங்கா தேவியிடம் கடுமையான வார்த்தைகளை கூறினர்.

गङ्गाया: तीरम् आश्रित्य हते शान्तनवे नृप।

आप्लुत्य देवा वसवः समेत्य च महानदीम्।

इदमूचुर्वचो घोरं भागीरथ्या मते तदा।।

- மஹாபாரதம் (வியாசர்)

அவர்கள் கங்கையிடம், "அம்மா! அர்ஜுனன் சந்தனு மஹாராஜனின் மகனான பீஷ்மரிடம் நேருக்கு நேர் யுத்தம் செய்யாமல், வேறொருவருடன் யுத்தம் செய்யும் போது கொன்றான். ஆகையால், நாங்கள் அர்ஜுனனை சபிக்க நினைக்கிறோம்" என்றனர். அந்த கங்கையும், "அப்படியே செய்யுங்கள்" என்று சம்மதித்து விட்டாள்.

एष शान्तनवो भीष्मो निहतः सव्यसाचिना।

अयुद्ध्यमानः सङ्ग्रामे संसक्त: अन्येन भामिनि।।

तदनेनानुषङ्गेण वयमद्य धनञ्जयम्।

शापेन योजयामेति तथाऽस्त्विति च सा अब्रवीत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட நான், பெரிதும் துக்கப்பட்டு, என் தகப்பனாரிடம் சென்று தெரிவித்தேன். இதை கேட்டு அவரும் பெரிதும் துக்கப்பட்டார்.

என் தகப்பனார் இதற்காக பல முறை அந்த வஸுக்களிடம் சென்று, அருள் புரியும் படி பிரார்த்தித்தார்.

पिता तु मे वसून्गत्वा त्वदर्थे समयाचत।

पुनः पुनः प्रसाद्यैतांस्त एनमिदमब्रुवन्।।

- மஹாபாரதம் (வியாசர்)

கடைசியாக, அவர்கள், "பாக்கியவானே! அர்ஜுனனுக்கு மணலூர்புரத்தில் வாலிபனான ஒரு பிள்ளை இருக்கிறான்.

पुत्रस्तस्य महाभाग मणलूर् ईश्वरो युवा।

स एनं रणमध्यस्थः शरैः पातयिता भुवि।।

- மஹாபாரதம் (வியாசர்)

அவன், அர்ஜுனனை போர்க்களத்தில் நின்று தன் பாணங்களால் அடித்து பூமியில் தள்ளுவான்இப்படி நடக்கும் போது, அர்ஜுனனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும். நீ கிளம்பலாம்" என்றனர்.

एवं कृते स नागेन्द्र मुक्तशापो भविष्यति।

गच्छेति वसुभिश्चोक्तो मम चेदं शशंस सः।।

- மஹாபாரதம் (வியாசர்)

வஸுக்கள் சொன்னதை, என் தந்தை எனக்கும் சொன்னார்.

அதை கேட்ட நான், உங்களை இந்த சாபத்தில் இருந்து விடுவித்தேன். உங்களை தேவர்களே நினைத்தாலும் தோற்கடிக்க முடியாது.

तच्छ्रुत्वा त्वं मया तस्माच्छापादसि विमोक्षितः।

न हि त्वां देवराजोऽपि समरेषु पराजयेत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

சாஸ்திரம் "புத்திரனும் நீயே" என்று சொல்கிறது. அப்படி  இருப்பதால், நீங்கள் உங்கள் புத்திரனால் வெற்றி கொள்ளப்பட்டதால் உங்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது. பிரபுவே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?என்று கேட்டாள்.

आत्मा पुत्रः स्मृतस्तस्मात्तेनेहासि पराजितः।

न हि दोषो मम मतः कथं वा मन्यसे विभो।।

- மஹாபாரதம் (வியாசர்)

நடந்த விஷயங்களை தெளிவாக அறிந்து கொண்ட அர்ஜுனன், "தேவீ! நீ செய்த காரியங்கள் அனைத்தும் என் ப்ரியத்துக்காகவே செய்யப்பட்டது" என்றான்.

इत्येवमुक्तो विजयः प्रसन्नात्माऽब्रवीदिदम्।

सर्वं मे सुप्रियं देवि यदेतत्कृतवत्यसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி  சொல்லி கொண்டே, தன் மகனான மணலூர் அரசனை பார்த்து, "அரசனே! வரும் சித்ராபூர்ணிமாவில் யுதிஷ்டிரருக்கு அஸ்வமேதம் நடக்க போகிறது. அதற்கு நீ, உன் மந்திரிகளோடும், இரண்டு தாயாருடனும் வர வேண்டும்" என்றார்.

इत्युक्त्वा सोऽब्रवीत्पुत्रं मणलूरपतिं जयः।

चित्राङ्गदायाः शृण्वन्त्याः कौरव्यदुहितुस्तदा।।

युधिष्ठिरस्य अश्वमेधः परिचैत्रीं भविष्यति।

तत्रागच्छेः सहामात्यो मातृभ्यां सहितो नृप।।

- மஹாபாரதம் (வியாசர்)

பார்த்தன் இப்படி சொன்னதும், கண்களில் கண்ணீருடன், தன் தகப்பனாரை பார்த்து,

"தர்மம் அறிந்தவரே! உம்முடைய உத்தரவை ஏற்று வருகிறேன். அஸ்வமேதம் என்னும் மஹாயாகத்தில், இரட்டை பிறப்பாளர்களுக்கு பரிமாறும் சேவையை நானே செய்கிறேன்.

उपयास्यामि धर्मज्ञ भवतः सासनादहम्।

अश्वमेधे महायज्ञे द्विजाति परिवेषकः।।

- மஹாபாரதம் (வியாசர்)

தர்மம் அறிந்தவரே! நீங்கள் உங்கள் இரண்டு மனைவியோடு சேர்ந்து உங்களுடையதான இந்த நகருக்குள் வர வேண்டும். நீங்கள் இதில் ஆலோசிக்க அவசியமே இல்லை.

मम त्वनुग्रहार्थाय प्रविशस्व पुरं स्वकम्।

भार्याभ्यां सह धर्मज्ञ माभूत्तेऽत्र विचारणा।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! இங்கு ஒரு இரவு உங்கள் மாளிகையில் சுகமாக வஸிக்க வேண்டும். பிறகு மீண்டும் யாக குதிரையை பின் தொடர்ந்து செல்லுங்கள்என்று பிரார்த்தித்தான்.

उषित्वेह निशामेकां सुखं स्वभवने प्रभो।

पुनरश्वानुगमनं कर्तासि जयतांवर।।

- மஹாபாரதம் (வியாசர்)

வானர கொடி உடைய அர்ஜுனன் தன் பிள்ளையை பார்த்து சிரித்து கொண்டே, "உறுதியான புஜங்களை உடையவனே! நான் அஸ்வமேத யாகத்தில்  தீக்ஷை பெற்று வந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியும்.

इत्युक्ताः स तु प्रत्रेण तदा वानर केतनः।

स्मयन्प्रोवाच कौन्तेयस्तदा चित्राङ्गदा-सुतम्।।

विदितं ते महाबाहो यथा दीक्षां चराम्यहम्।

न स तावत् प्रवेक्ष्यामि पुरं ते पृथुलोचन।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாமரை போன்ற கண்கள் உடையவனே! இப்போது உன்னுடைய நகரத்துக்குள் நான் வர கூடாது.

இந்த யாக குதிரை தன் இஷ்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். நான் செல்கிறேன். நான் இப்பொழுதே போக வேண்டும்" என்றார்

यथाकामं व्रजत्येष यज्ञिय अश्वो नरर्षभ।

स्वस्ति तेऽस्तु गमिष्यामि न स्थानं विद्यते मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

அப்பொழுது அர்ஜுனன் பப்ருவாகனனாலும், அவனது இரண்டு மனைவிகளாலும் விதிப்படி பூஜிக்கப்பட்டு, அவர்கள் அனுமதியோடு மேலும் தன் பயணத்தை பின் தொடர்ந்தார்

स तत्र विधिवत्तेन पूजितः पाकशासनिः।

भार्याभ्यामभ्यनुज्ञातः प्रायाद्भरतसत्तमः।।

- மஹாபாரதம் (வியாசர்)