பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன், ப்ரம்ம தீர்த்தத்தால், ரிஷி தீர்த்தத்தால், தேவ தீர்த்தத்தால் ஆசமனம் செய்து கொள்ளலாம். ஆனால், பித்ருவுக்கு விட்ட தீர்த்தத்தால் ஆசமனம் செய்ய கூடாது.
हृद्गाभिः पूयते विप्रः
कण्ठगाभिस्तु भूमिपः ।
वैश्यो अद्भिः प्राशिताभिस्तु
शूद्रः स्पृष्टाभि: अन्ततः ॥
- மனு ஸ்ம்ருதி
ஆசமனம் செய்யும்போது,
பிராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன், தன் இதயத்துக்கு செல்லும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவன், கழுத்துக்கு செல்லும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
வைஸ்ய வர்ணத்தில் இருப்பவன், வாய்க்குள் போகும் அளவுக்கு ஜலத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
இப்படி செய்யும் போது, அவரவர்கள் பரிசுத்தமாகிறார்கள்
एतद् अक्षरम् एतां च जपन्
व्याहृति पूर्विकाम् ।
सन्ध्ययोः वेदविद् विप्रो
वेदपुण्येन युज्यते ॥
- மனு ஸ்ம்ருதி
ஸந்த்யாவந்தன காலத்தில் ஓங்காரம் (ஓம்), பிறகு வ்யாஹ்ருதி (பூ புவ ஸுவ) சொல்லி, அதனோடு காயத்ரீ மந்திரத்தை சொல்லும் வேதியன் என்ற விப்ரன், புண்ணியத்தை அடைகிறான்.
वेदास: त्याग यज्ञाश्च
नियमाश्च तपांसि च ।
न विप्र दुष्ट भावस्य
सिद्धिं गच्छति कर्हि चित् ॥
- மனு ஸ்ம்ருதி
புலன்களை அடக்க முடியாத மனம் கொண்ட வேதியன் என்ற விப்ரன், வேதத்தையே அத்யயனம் செய்தாலும், தானங்களே செய்தாலும், யாகங்கள் செய்தாலும், நியமங்களோடு வாழ்ந்தாலும், தவ வாழ்க்கையே வாழ்ந்தாலும், பலன் தராது ("ஸித்தி" என்ற பலன் கிடைக்காது)
यमेव तु शुचिं विद्यान्नियतं ब्रह्मचारिणम्
तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ॥
- மனு ஸ்ம்ருதி
சத்தியம் பேசுதல், பிற உயிருக்கு தீங்கு செய்யாமல் இருத்தல், , பொறுமையாக இருத்தல். இதற்கு யமம் என்று பெயர். "நீ கற்ற கல்வியை மன தூய்மை (யமம்), உடல் தூய்மை இரண்டையும் காப்பாற்றும் பிரம்மச்சாரி எவனோ அவனிடம் என்னை கொடுப்பாயாக" என்று வித்யா தேவதை வேதியன் என்ற விப்ரனிடம் கேட்கிறாள்.
सावित्री मात्रसारो अपि वरं विप्रः सुयन्त्रितः ।
नायन्त्रित स्त्रि वेदो अपि सर्वाशी सर्व विक्रयी ॥
- மனு ஸ்ம்ருதி
காயத்ரீ மந்திரத்தை மட்டும் ஜபித்து கொண்டு, புலன் அடக்கத்தோடு இருக்கும் வேதியன் என்ற விப்ரன், மூன்று வேதமும் அறிந்த, புலன் அடக்கமில்லாத, அனைத்தையும் உண்ணும், எதையும் விற்கும் மனிதனை விட மேலானவன்.
अभिवादात् परं विप्रो ज्यायां सम अभिवादयन् ।
असौ नामाहम् अस्मीति स्वं नाम परिकीर्तयेत् ॥
- மனு ஸ்ம்ருதி
வேதியன் என்ற விப்ரன், தன்னை விட பெரியவரை கண்டால், அவருக்கு அபிவாதனம் செய்து, தன் பெயர், குலம், கோத்திரம் கூறி வணங்க வேண்டும்.
आयुष्मान् भव सौम्यैति वाच्यो विप्रो अभिवादने ।
अकार: च अस्य नाम्नो अन्ते वाच्यः पूर्वाक्षरः प्लुतः ॥
- மனு ஸ்ம்ருதி
"ஆயுஷ்மான் பவ ஸௌம்யா" (நீடூழி வாழ் நல்ல பிள்ளாய்) என்று, அபிவாதனம் செய்பவனை பார்த்து வேதியன் என்ற விப்ரன் சொல்ல வேண்டும். அபிவாதனம் செய்தவன் பெயர் "அ"காரத்தில் முடிந்தால், இதையே நீட்டி சொல்ல வேண்டும்.
यो न वेत्ति अभिवादस्य विप्रः प्रति अभिवादनम् ।
न अभिवाद्यः स विदुषा यथा शूद्र: तथैव सः ॥
- மனு ஸ்ம்ருதி
எந்த வேதியன் என்ற விப்ரன் அபிவாதனம் செய்தவனுக்கு பதில் சொல்ல அறியாமல் இருக்கிறானோ, அவனை சூத்திரனாக (employee) கருத வேண்டும். அவனுக்கு அபிவாதனம் செய்ய அவசியமில்லை.
भ्रातु: भार्यौपसङ्ग्राह्या स-वर्णा अहन्यहन्यपि ।
विप्रोष्य तूप सङ्ग्राह्या ज्ञाति सम्बन्धियोषितः ॥
- மனு ஸ்ம்ருதி
தன் வர்ணத்திலேயே மணம் புரிந்து கொண்ட அண்ணனின் மனைவியின் காலில், வேதியன் என்ற விப்ரன் தினமும் விழுந்து வணங்க வேண்டும். மற்றபடி உறவினர்களை அவரவர்கள் வெளியூர் செல்லும் போது மட்டும் வணங்க வேண்டும்.
निषेकादीनि कर्माणि यः करोति यथाविधि ।
सम्भावयति चान्नेन स विप्रो गुरु: उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி
எந்த வேதியன் என்ற விப்ரன் கர்ப்ப காலங்களில் செய்யப்படும் பும்ஸவனம் போன்ற ஸம்ஸ்காரங்களை செய்து வைத்து, சம்பாவனையாக காய் கறி உணவாக வாங்கி கொள்கிறாரோ, அவரை "குரு" என்று அழைக்க வேண்டும். பாவங்களை அழித்து தான் வாங்கி கொள்வதால் அவருக்கு, குரு என்று பெயர்.
उत्पादक ब्रह्मदात्रो गरीयान् ब्रह्मदः पिता ।
ब्रह्मजन्म हि विप्रस्य प्रेत्य चैह च शाश्वतम् ॥
- மனு ஸ்ம்ருதி
இரண்டாவது பிறப்பு என்பதை கொடுப்பது உபநயனம். அதை செய்து வைத்த ஆசாரியன் தந்தையை விட உயர்ந்தவர். பிரம்மத்தை உபாசிக்கும் வேதியன் என்ற விப்ரனே நிரந்தரமான ப்ரம்ம பதத்தை (மோக்ஷத்தை) அடைகிறான்.
ब्राह्मस्य जन्मनः कर्ता स्वधर्मस्य च शासिता ।
बालो अपि विप्रो वृद्धस्य पिता भवति धर्मतः ॥
- மனு ஸ்ம்ருதி
தனக்கு உபநயனம் செய்து ப்ரம்ம பதத்தை நோக்கி செல்ல வழியையும் காண்பித்து, வேதத்தின் அர்த்தத்தையும் சொல்லி கொடுத்த வேதியன் என்ற விப்ரன், தன்னை விட வயது குறைந்தவராக இருந்தாலும், தர்மப்படி, அவரையும் தந்தைக்கு நிகரானவராக கருத வேண்டும்.
சூத்திர வர்ணத்தில் (employee) இருப்பவனுக்கு வயது முதிர்ச்சியால் (work experience) மதிப்பு.
यथा काष्ठमयो हस्ती यथा चर्ममयो मृगः ।
यश्च विप्रो अनधीयानस्त्रयस्ते नाम बिभ्रति ॥
- மனு ஸ்ம்ருதி
மரத்தால் செய்யப்பட்ட யானை, தோலால் செய்யப்பட்ட மான் பொம்மை, வேதத்தை கற்காத விப்ரன் என்ற வேதியன் மூவரும் பெயர் அளவில் 'இது யானை, இது மான், நான் விப்ரன் (பிராம்மணன்)" என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர, மதிப்பு கிடைக்காது.
यथा षण्ढो अफलः स्त्रीषु
यथा गौ: गवि च अफला ।
यथा चाज्ञे अफलं दानं
तथा विप्रो अनृचो अफलः ॥
- மனு ஸ்ம்ருதி
நபும்ஸகன் (ஆண்மை அற்றவன்) பெண்கள் விஷயத்தில் எப்படி பயனற்றவனோ, பசுவிடம் பசு எப்படி பயனற்றதோ, தகுதி இல்லாதவனுக்கு கொடுக்கப்பட்ட தானம் எப்படி பயனற்றதோ, அது போல, வேதத்தை கற்காத விப்ரன் என்ற வேதியன் (பிராம்மணனும்) பயனற்றவனே !
वेदम् एव सदा अभ्यस्येत् तपस्तप्यन् द्विजोत्तमः ।
वेद अभ्यासो हि विप्रस्य तपः परम् इह उच्यते ॥
- மனு ஸ்மிருதி
பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் என்ற இரு பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) தவம் போல எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டு இருக்க வேண்டும். குருகுல வாசம் முடிந்த பிறகும், வேதியன் என்ற விப்ரனுக்கு (பிராம்மணன்) ஆயுள் முழுவதும் வேதம் ஓதுவதே கடமை.
विप्रोष्य पाद ग्रहणम् अन्वहं च अभिवादनम् ।
गुरुदारेषु कुर्वीत सतां धर्मम् अनुस्मरन् ॥
- மனு ஸ்மிருதி
குருவின் பத்னி வயது மூத்தவளாக இருந்தால், வேதியன் என்ற விப்ரன் எப்பொழுது பார்த்தாலும், காலை தொட்டு நமஸ்கரிக்க வேண்டும்.
आ समाप्तेः शरीरस्य यस्तु शुश्रूषते गुरुम् ।
स गच्छति अञ्जसा विप्रो ब्रह्मणः सद्म शाश्वतम् ॥
- மனு ஸ்மிருதி
உடல் பூமியில் விழும் வரை குருவுக்கு சேவை செய்தே வாழும் வேதியன் என்ற விப்ரன், நிரந்தரமாக பிரம்மத்தை (மோக்ஷம்) அடைவான்.
एवं चरति यो विप्रो ब्रह्मचर्यम् अविप्लुतः ।
स गच्छति उत्तम स्थानं न चैह जायते पुनः ॥
- மனு ஸ்மிருதி
"ப்ரம்மச்சாரியாகவே இருப்பேன்" என்று வாழும் வேதியன் என்ற விப்ரன், நித்யமான ப்ரம்மத்தை அடைவான். அவனுக்கு மறுஜென்மம் கிடையாது.
பாகம் 12
तापसा यतयो विप्रा ये च वैमानिका गणाः ।
नक्षत्राणि च दैत्याश्च प्रथमा सात्त्विकी गतिः ॥
- மனு ஸ்மிருதி
ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான தபஸ்விகள், சந்யாசிகள், வேத விற்பன்னர்கள், விமானத்தில் பறக்கும் கல்விமான்கள், தைத்யர்கள், நக்ஷத்திரங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்.
लूता अहिसरटानां च तिरश्चां चाम्बुचारिणाम् ।
हिंस्राणां च पिशाचानां स्तेनो विप्रः सहस्रशः ॥
- மனு ஸ்மிருதி
தங்கத்தை திருடிய வேதியன் என்ற விப்ரன், சிலந்தியாகவும், பாம்பு, ஓணான், நீரில் வாழும் உயிரினமாகவும், கொடிய மிருகமாகவும், பிசாசாகவும் பிறவிகளை எடுப்பான்.
संयोगं पतितै: गत्वा परस्यैव च योषितम् ।
अपहृत्य च विप्रस्वं भवति ब्रह्म-राक्षसः ॥
- மனு ஸ்மிருதி
நாடு கடத்தப்பட்டவனோடு உறவு கொண்டவர்கள், பிறர் மனைவியை அடைந்தவர்கள், வேதியன் என்ற விப்ரனின் பொருளை திருடியவர்கள், அடுத்த பிறவியில் ப்ரம்ம-ராக்ஷஸனாகவும் அலைவார்கள்.
वान्ताश्युल्कामुखः प्रेतो
विप्रो धर्मात् स्वकाच्च्युतः ।
अमेध्यकुणपाशी च क्षत्रियः कटपूतनः ॥
- மனு ஸ்மிருதி
பிராம்மண வர்ணத்தில் வேதியன் என்ற விப்ரனாக இருந்தும், தன் தர்மத்தை விட்டவர்கள், அடுத்த பிறவியில் கொள்ளிவாய் பிசாசாக பிரேத சரீரத்தோடு இருந்து, மனிதர்களின் வாந்தியை சாப்பிடும் ஜென்மத்தை அடைவார்கள்.
க்ஷத்ரிய வர்ணத்தில் (army, police, defence) இருந்தும், தன் தர்மத்தை விட்டவர்கள், மலத்தையும், பிணத்தையும் தின்னும் கடபூதமாக அலைவார்கள்.
एष सर्वः समुद्दिष्टः कर्मणां वः फलोदयः ।
नैःश्रेयसकरं कर्म विप्रस्येदं निबोधत ॥
- மனு ஸ்மிருதி
இது வரை, சாஸ்திரம் சொல்லும் முறையையும், அதற்கு விரோதமான காரியங்கள் செய்வதால் ஏற்படும் துன்பங்களை பற்றியும் சொன்னேன். இனி, விப்ரன் என்று சொல்லப்படும் வேதியன் செய்ய வேண்டிய நன்மை பயக்கும் காரியங்களை சொல்கிறேன்.
वेद अभ्यास: तपो ज्ञानम् इन्द्रियाणां च संयमः ।
अहिंसा गुरु-सेवा च निःश्रेयसकरं परम् ॥
- மனு ஸ்மிருதி
வேதத்தை கற்று கொள்ளுதல்,
வேத அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்,
பிரம்மத்தை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல்,
ப்ரம்ம (மெய்) ஞானத்தை அடைதல்,
புலன் அடக்கதோடு இருத்தல்,
அஹிம்சையோடு இருத்தல்,
குரு சேவை செய்தல்.
இந்த 6 கடமைகளை, வேதியன் என்ற விப்ரன் செய்வதால் மோக்ஷத்தை அடைவான்.
सर्वेषाम् अपि चैतेषां शुभानाम् इह कर्मणाम् ।
किंचित् श्रेयस्करतरं कर्मोक्तं पुरुषं प्रति ॥
- மனு ஸ்மிருதி
இப்போது கூறிய 6 கடமைகளில் எது மிக மிக உயர்ந்தது? என்று சொல்கிறேன்.
வேதியன் என்ற விப்ரனின் 6 கடமைகளில், ப்ரம்ம (மெய்) ஞானத்தை அடைய முயற்சி செய்வதே மிக மிக உயர்ந்த கடமை. பகவானை அறியும் ஞானமே ப்ரம்மஞானம். இந்த ப்ரம்ம ஞானமே மோக்ஷத்திற்கு வழி.
षण्णाम् एषां तु सर्वेषां कर्मणां प्रेत्य चैह च ।
श्रेयस्करतरं ज्ञेयं सर्वदा कर्म वैदिकम् ॥
- மனு ஸ்மிருதி
வேதத்தை கற்று கொள்ளுதல்,
வேத அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்,
பிரம்மத்தை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல்,
ப்ரம்ம ஞானத்தை அடைதல்,
அஹிம்சையாகவே இருத்தல்,
குரு சேவை செய்தல்.
இந்த 6 காரியங்களை கடைபிடிக்கும் வைதீகன் (விப்ரன்) செய்யும் வைதீக காரியங்கள் அனைத்தும் இக லோகத்திலும் பலன் தரும், பரலோகத்திலும் பலன் தரும்.
वैदिके कर्मयोगे तु सर्वाणि एतानि अशेषतः ।
अन्तर्भवन्ति क्रमश तस्मिं तस्मिन् क्रियाविधौ ॥
- மனு ஸ்மிருதி
வைதீக கர்மாவை தான் செய்யவில்லை, பரமாத்மா உள்ளிருந்து செய்கிறார் என்று யோகமாக செய்யும், விப்ரனின் (வைதீக பிராம்மணன்) அனைத்து காரியமும் பெரும் பலன்களை அளித்திடும்.
सुखाभ्युदयिकं चैव नैःश्रेयसिकमेव च ।
प्रवृत्तं च निवृत्तं च द्विविधं कर्म वैदिकम् ॥
- மனு ஸ்மிருதி
யோகமாக வைதீக கர்மாக்களை விப்ரன் என்ற வேதியன் செய்தால் ப்ரவ்ருத்தி (இக உலக சௌக்கியம், சொர்க்க லோகம் சுகங்கள் முதலிய) பயன்களும் அடையலாம். நிவ்ருத்தி (மோக்ஷம்) பயன்களையும் அடையலாம்.
इह चामुत्र वा काम्यं प्रवृत्तं कर्म कीर्त्यते ।
निष्कामं ज्ञातपूर्वं तु निवृत्तमुपदिश्यते ॥
- மனு ஸ்மிருதி
இந்த உலகத்தில் சுகமாக இருப்பதற்காகவும், மேல் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவும் விப்ரன் என்ற வேதியன் செய்யும் வைதீக காரியங்களை "ப்ரவ்ருத்தி" என்று சொல்கிறோம். எந்த பலனையும் எதிர்பார்க்காமல், இறந்த பிறகும் வேறு பலனை எதிர்பார்க்காமல் விப்ரன் என்ற வேதியன் செய்யும் வைதீக காரியங்களை "நிவ்ருத்தி" என்று சொல்கிறோம்.
प्रवृत्तं कर्म संसेव्यं देवानामेति साम्यताम् ।
निवृत्तं सेवमानस्तु भूतान्यत्येति पञ्च वै ॥
- மனு ஸ்மிருதி
ப்ரவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்களை வேதியன் என்ற விப்ரன் செய்வதன் மூலம், தேவனாகவும், தேவனை போல சில காலங்கள் சொர்க்க லோகங்களில் வாசம் செய்யும் பலன்களை கூட அடையலாம்.
நிவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்களை வேதியன் என்ற விப்ரன் செய்வதன் மூலம், பஞ்சபூதங்களும் விலகி, மோக்ஷத்தை அடையலாம்.
सर्वभूतेषु च आत्मानं सर्वभूतानि च आत्मनि ।
समं पश्यन् न आत्मयाजी स्वाराज्यम् अधिगच्छति ॥
- மனு ஸ்மிருதி
சர்வ சரீரங்களிலும் ஆத்மா உள்ளது. ஒவ்வொரு சரீரங்களில் இருக்கும் இந்த ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் உரைகிறது. அந்த பரமாத்மா அனைத்து ஆத்மாவுக்கும் உறைவிடமாக இருக்கிறார் என்ற சம புத்தியோடு பார்க்க தெரிந்த வேதியன் என்ற விப்ரன், மோக்ஷம் (வீடு) செல்கிறான்.
यथोक्तान्यपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।
आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥
- மனு ஸ்மிருதி
இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜோத்தமர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதம் ஓதுவதே ஆத்ம ஞானத்தை கொடுக்கும்.
एतद् हि जन्म साफल्यं ब्राह्मणस्य विशेषतः ।
प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥
- மனு ஸ்மிருதி
பிறவி எடுத்த பலனை அடைய, ப்ராம்மண வர்ணத்தில் இருக்கும் வேதியன் என்ற விப்ரன், வேதம் ஓதியே அடைய வேண்டும். இதுவே மற்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும் வழி.
வேதம் பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் முன் இருப்பது. வேதம் கண் போன்று இருக்கிறது. வேதம் என்ற கண் கொண்டு தான், மனிதன், தேவன் என்று அனைவரும் தர்மம் எது? என்று அறிகிறார்கள். காலத்திற்கு அப்பாற்ப்பட்ட வேதத்தின் சக்தி எல்லையற்றது. 'வேதத்தின் தன்மை இது தான்' என்று எவராலும் அளவிட முடியாது.
या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः ।
सर्वास्ता निष्फलाः प्रेत्य तमोनिष्ठा हि ताः स्मृताः ॥
- மனு ஸ்ம்ருதி
வேதத்திற்கு விரோதமாக இயற்றப்பட்ட நூல்களும், தவறான கோட்பாடுகளும், திறம்பட ஒழுங்கு செய்யப்பட்டு எழுதப்பட்டு இருந்தாலும், அவை அனைத்தையும், "அஞானம் என்ற இருளில் இயற்றப்பட்டது" என்றே தள்ள வேண்டும்.
उत्पद्यन्ते च्यवन्ते च यान्यतो अन्यानि कानि चित् ।
तान्यर्वाक्कालिकतया निष्फलान्यनृतानि च ॥
- மனு ஸ்ம்ருதி
வேதத்தை ஆதாரமாக கொள்ளாத எந்த நூலும், வேகமாக தானே ஒரு சமயம் அழிந்து போகும். பொய்யை கற்பிக்கும் மற்ற நூல்களை கற்பதால் மனிதனுக்கு எந்த நற்பலனும் ஏற்பட போவதில்லை.
நான்கு வர்ணத்தை பற்றியும், மூவுலகங்கள் பற்றியும், நான்கு ஆஸ்ரமங்களை பற்றியும் வேதம் சொல்கிறது. நடந்ததும், நடப்பதும், நடக்க போவதை பற்றியும் வேதம் சொல்கிறது.
शब्दः स्पर्शश्च रूपं च रसो गन्धश्च पञ्चमः ।
वेदादेव प्रसूयन्ते प्रसूतिर्गुणकर्मतः ॥
- மனு ஸ்ம்ருதி
சப்தம் (ஒலி), ஸ்பரிசம் (தொடு உணர்வு), ரூபம், ரசம் (சுவை), கந்தம் (சுகந்தம்) என்னும் 5ம் வேதத்திலிருந்தே தோன்றின. இவைகளின் குணமும் செயல்களும் வேதத்திலேயே விளக்கப்பட்டுள்ளன.
बिभर्ति सर्वभूतानि वेदशास्त्रं सनातनम् ।
तस्माद् एतत् परं मन्ये यत्जन्तो: अस्य साधनम् ॥
- மனு ஸ்ம்ருதி
காலத்தை கடந்த வேத சாஸ்திரமே (தர்மம்) சகல உயிர்களையும் (நம்மை) தாங்குகிறது. மேலான நிலையை மனிதன் அடைய வேதமே சாதனமாகும்.
सेनापत्यं च राज्यं च दण्डनेतृत्वमेव च ।
सर्व लोकाधिपत्यं च वेदशास्त्र विदर्हति ॥
- மனு ஸ்ம்ருதி
வேத சாஸ்திரம் முழுவதும் எவன் அறிந்து கொள்கிறானோ, அவனால் பெரும் படையை சேனாபதியாக வழிநடத்த முடியும். ராஜ்யத்தை ஆளும் திறன் இருக்கும். இவ்வளவு ஏன், சகல உலகங்களையும் ஆட்சி செய்யும் தகுதியும் இருக்கும்.
यथा जातबलो वह्निः दहत्यार्द्रानपि द्रुमान् ।
तथा दहति वेदज्ञः कर्मजं दोषम् आत्मनः ॥
- மனு ஸ்ம்ருதி
கொழுந்து விட்டு எரியும் அக்னியானது, எப்படி பசுமையான மரங்களையும் எரித்து விடுமோ, அப்படியே வேதம் முழுவதும் கற்று 'அறிந்தவன்' கர்மாவினால் ஏற்படும் தோஷங்களை கூட எரித்து அழித்து விடும் சக்தி கொண்டிருப்பான்.
वेदशास्त्र अर्थ तत्त्वज्ञो यत्र तत्रा आश्रमे वसन् ।
इहैव लोके तिष्ठन् स ब्रह्म भूयाय कल्पते ॥
- மனு ஸ்ம்ருதி
வேத சாஸ்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்த தத்வ ஞானி, பிரம்மச்சாரியாக இருந்தாலும், க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், வானப்ரஸ்தனாக இருந்தாலும், உலகில் வாழ்ந்தபடியே ப்ரம்ம ஞானத்தோடு இருப்பான்.
अज्ञेभ्यो ग्रन्थिनः श्रेष्ठा
ग्रन्थिभ्यो धारिणो वराः ।
धारिभ्यो ज्ञानिनः श्रेष्ठा
ज्ञानिभ्यो व्यवसायिनः ॥
- மனு ஸ்ம்ருதி
ஏதோ சிறிது வேத மந்திரங்களை கற்றவர்களை விட, முழுமையாக வேதத்தை கற்றவர்கள் மேலானவர்கள்.
வேதத்தை நன்கு மனதில் பதிய வைத்து கொண்டவர்கள், முழுமையாக கற்றவர்களை விட மேலானவர்கள்.
வேதத்தின் அர்த்தம் புரிந்தவர்கள், நன்கு மனதில் பதிய வைத்தவர்களை விட மேலானவர்கள்.
வேதம் சொன்னபடி வாழ்க்கையில் நடந்து காட்டுபவர்கள், அர்த்தம் புரிந்தவர்களை விட மேலானவர்கள்.
தர்மத்தை அறிய 3 சாதனங்கள் உள்ளது. கண்ணால் பார்த்தும், அனுமானத்தாலும், சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றும் ஆராய்வதால் ஒருவன் தன்னை தர்ம வழியில் மேம்படுத்தி கொள்ள முடியும்.
आर्षं धर्मोपदेशं च वेदशास्त्रा अविरोधिना ।
यस् तर्केणा अनु सन्धत्ते स धर्मं वेद नैतरः ॥
- மனு ஸ்ம்ருதி
வேதத்தையும், தர்ம உபதேச ஸ்ம்ருதிகளையும், வேதத்துக்கு விரோதமில்லாத சாஸ்திரத்தையும் (உபநிஷத்), தர்க்க சாஸ்திரத்தையும் நன்கு படிப்பதால், தர்மங்கள் என்னென்ன என்று ஒருவன் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
வைசிய தொழிலோ, க்ஷத்ரிய தொழிலோ, பிராம்மண தொழிலோ செய்வதற்கு முன் - பூணூல் அணிந்து, காயத்ரீ உபதேசம் பெற்று, வேதம் கற்பவனே (த்விஜன்) என்று அழைக்கப்படுகிறார்கள்.
த்விஜர்களுக்காக சொல்லப்பட்ட தர்ம சாஸ்திரம் (நீதி நூல்) தெரிந்து கொள்வோம்..
பிறப்பால் அனைவரும் சூத்திரனே (Employee/கொடுத்த வேலை செய்வதற்காக பிறந்தோம்).
शूद्रेण हि समस्तावद् यावद् वेदे न जायते ॥
- மனு ஸ்மிருதி
உபநயனமாகி (பூணூல்) வேதம் கற்றுக்கொள்ளாத வரை, அனைவரும் சூத்திரனே (employee)
வைஸ்ய தொழில் செய்யவோ,
வேதம் ஓதி, யாகங்கள் செய்து, வேத தர்மமாக ப்ரம்ம விசாரம் செய்யவோ,
நாட்டை காக்கவோ செல்பவர்கள் அனைவரும, பூணூல் அணிந்த கொண்டார்கள்.
கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத சூத்திர வர்ணத்தை விட்டு, வேறு வர்ணம் செல்வதால், இவர்கள் இரு பிறப்பாளர்கள் என்றும் த்விஜர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
Employee (சூத்திரன்) தன் நேரத்தை முதலாளிக்கு (employer) கொடுத்து சம்பளம் பெறுகிறான்.
வேலை கொடுப்பவன் (employer) கையில் சூத்திரனின் நேரம் கட்டுப்பட்டு இருப்பதால், சூத்திரனுக்கு, மனு எந்த ஒரு கடினமான சட்டத்தையும் விதிக்கவே இல்லை.
மிகுந்த சுதந்திரம் பெண்களுக்கும், சூத்திரனுக்கும் கொடுக்கிறார்
கடுமையான வாழ்க்கை முறையை,/சட்டத்தை இராணுவ, காவல்துறை, வியாபார, வைதீக, அரசியல், நீதி துறையில் உள்ளவர்களுக்கே விதிக்கிறார்.
பிராம்மண வர்ணத்தில் இன்று MP&MLAs, judge போன்றவர்கள் க்ஷத்ரிய, வைசிய, சூத்திரர்களுக்கு சட்டம் இயற்றுகின்றனர்.
க்ஷத்ரிய வர்ணத்தில் இன்று போலீஸ், ராணுவம் போன்றவர்கள் இருக்கின்றனர்.
வைஸ்ய வர்ணத்தில் இன்றும் சிறு/பெரு/சுய தொழில் நடத்துபவர்கள் பலர் உள்ளனர்.
இவர்களுக்கு விதிக்கப்பட்ட கடினமான சட்டங்களை இனி பார்ப்போம்.
இந்த 'கடுமையான சட்டங்கள் எதுவும் சூத்திரனுக்கும் இல்லை. பெண்களுக்கும் இல்லை' என்ற கவனத்தோடு படிக்கும் பொழுதே, "சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் ஹிந்து மதத்தில் (சனாதன தர்மத்தி்ல்) கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்ன?" என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும்
பாகம் 2
यो अवमन्येत ते मूले हेतु शास्त्र आश्रयाद् द्विजः ।
स साधुभि: बहिष्कार्यो नास्तिको वेद-निन्दकः ॥
- மனு ஸ்ம்ருதி
மனிதனுக்கு தர்மம் (நல்லது) எது? என்று நமக்கு எடுத்து சொல்லும் ஸ்ருதிகளையும் (வேதம்), ஸ்ம்ருதிகளையும் (தர்ம சாஸ்திரம்) எந்த இரு பிறப்பாளன் என்ற த்விஜன் அவமானப்படுத்தி பேசுகிறானோ, அப்படிப்பட்டவனை நாத்தீகனை போல கருதி, சாதுக்களாகிய மற்றவர்கள் அருகில் சேர்த்து கொள்ள கூடாது.
एतान् द्विजातयो देशान् संश्रयेरन् प्रयत्नतः ।
शूद्रस्तु यस्मिन् कस्मिन् वा निवसेद् वृत्ति कर्शितः ॥
- மனு ஸ்ம்ருதி
இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், முயற்சி செய்து யாகம் செய்வதற்கு ஏற்ற மான்கள் சஞ்சரிக்கும் பிரதேசங்களில் வாழ வேண்டும். சூத்திர வர்ணத்தில் இருப்பவர்கள் (In Today's world, Employees are in Sudra Varna) வேலையில் இருப்பதால், தொழில் நிமித்தமாக எந்த தேசத்திலும் வசிக்கலாம். கட்டுப்பாடு இல்லை
वैदिकैः कर्मभिः पुण्यैर्निषेकादिर्द्विजन्मनाम् ।
कार्यः शरीरसंस्कारः पावनः प्रेत्य चैह च ॥
- மனு ஸ்ம்ருதி
இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதிலிருந்தே வேத முறைப்படி (பும்ஸவனம் முதல்...) வைதீக காரியங்களை செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், மனத்தூய்மை அவர்களுக்கு இருக்கும். பரலோக வாழ்வுக்கு தேவையான புண்ணியத்தையும் அடைவார்கள்.
गार्भै: होमै: जातकर्म चौड मौञ्जी निबन्धनैः ।
बैजिकं गार्भिकं चैनं द्विजानामपमृज्यते ॥
- மனு ஸ்ம்ருதி
கர்ப்பத்தில் இருக்கும் போதே செய்ய வேண்டிய வேத ஹோமங்கள் (பும்ஸவனம்), பிறகு ஜாதகர்மா, சவுலம், மௌஞ்ஜீ-பந்தனம், உபநயனம் (பூணூல்) போன்ற சடங்குகள் செய்து கொள்ள வேண்டும். பெற்றோரால் ஏற்பட்ட பீஜ-தோஷம், கர்ப்பவாஸ தோஷம் போன்றவைகள், இதன் மூலம் இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்களுக்கு நீங்கி விடும்,
चूडाकर्म द्विजातीनां सर्वेषाम् एव धर्मतः ।
प्रथमे अब्दे तृतीये वा कर्तव्यं श्रुति चोदनात् ॥
- மனு ஸ்ம்ருதி
"சூடா-கர்மா" என்ற குடுமி வைக்கும் சடங்கை இரு பிறப்பாளர்களார்கள் என்ற த்விஜர்கள் முதல் ஆண்டோ, அல்லது 3ஆம் ஆண்டிலோ செய்ய வேண்டும் அல்லது அவரவர் வழக்கப்படி செய்து கொள்ள வேண்டும்.
गर्भा अष्टमे अब्दे कुर्वीत
ब्राह्मणस्य उपनायनम् ।
गर्भादे् एकादशे राज्ञो
गर्भात् तु द्वादशे विशः ॥
- மனு ஸ்ம்ருதி
பிராம்மண வர்ணத்தில் (MLA/MP) த்விஜர்களுக்கு 8வது வயதிலும், க்ஷத்ரிய வர்ணத்தில் (defence) த்விஜர்களுக்கு 11வது வயதிலும், வைஸ்ய வர்ணத்தில் (businessman) த்விஜர்களுக்கு 12வது வயதிலும், உபநயனம் /பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.
भवत्पूर्वं चरेद् भैक्षम् उपनीतो द्विजोत्तमः ।
भवन्मध्यं तु राजन्यो वैश्यस्तु भवद् उत्तरम् ॥
- மனு ஸ்ம்ருதி
இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள்,
பிரம்மச்சாரியாக பிராம்மண வர்ணத்தில் இருந்தால், "பவதி பிக்ஷாம் தேஹி" என்றும்,
பிரம்மச்சாரியாக க்ஷத்ரிய வர்ணத்தில் இருந்தால், "பிக்ஷாம் பவதி தேஹி" என்றும்,
பிரம்மச்சாரியாக வைஸ்ய வர்ணத்தில் இருந்தால், "பிக்ஷாம் தேஹி பவதி" என்று கூறி பிக்ஷை எடுத்து சாப்பிட வேண்டும்.
उपस्पृश्य द्विजो नित्यम् अन्नमद्यात् समाहितः ।
भुक्त्वा च: उपस्पृशेत् सम्यगद्भिः खानि च संस्पृशेत् ॥
- மனு ஸ்ம்ருதி
இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், 3 முறை ஜலம் கையில் எடுத்து ஆசமனம் செய்த (அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று சொல்லி குடித்த) பிறகே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு, கை கால்களை அலம்பி, வாய் கொப்பளிக்க வேண்டும். முறைப்படி ஆசமனம் செய்து, ஜலத்தால் இந்திரியங்களை துடைத்து கொள்ள வேண்டும்.
उद्धृते दक्षिणे पाणाव् उपवीती उच्यते द्विजः ।
सव्ये प्राचीनावीती निवीती कण्ठसज्जने ॥
- மனு ஸ்ம்ருதி
இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள் பூணூலை வலது தோள் வழியாக அணிந்து இருக்கும் போது "உபவீதம்" என்று பெயர். இடது தோள் வழியாக அணிந்து இருக்கும் போது "ப்ராசீனாவீதீ" என்று பெயர். கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டால், "நிவீதி" என்று பெயர்.
सहस्र कृत्वस्त्वभ्यस्य
बहि: एतत् त्रिकं द्विजः ।
महतो अपि एनसो मासात्
त्वचैवाहि: विमुच्यते ॥
- மனு ஸ்ம்ருதி
இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், சந்தியா காலத்திலும், மற்ற சமயங்களிலும் கிராமத்துக்கு வெளியே தனிமையில் இருந்து, ஓம் என்ற ஓங்காரமும், அதனோடு வ்யாஹ்ருதியும் (பூ புவ ஸுவ), அதனோடு காயத்ரீ மந்திரத்தையும் சேர்த்து, ஒரு மாத காலம் தினமும் 1000 முறை சொல்லி வந்தால், பாம்பு தன் சட்டையை கழட்டி போடுவது போல, மஹா பாபங்களிலிருந்து விடுபடலாம்.
न तिष्ठति तु यः पूर्वां नौपास्ते यश्च पश्चिमाम् ।
स शूद्रवद् बहिष्कार्यः सर्वस्माद् द्विजकर्मणः ॥
- மனு ஸ்ம்ருதி
த்விஜர்கள் என்ற இரட்டை பிறப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் எதுவும் சூத்திரனுக்கு (employee) கிடையாது. காலையில் சந்தியாவந்தனம், மாலையில் சந்தியாவந்தனம் செய்யாத த்விஜர்கள் என்ற இரட்டை பிறப்பாளர்களை, சூத்திரன் என்று கருதி, த்விஜர்களுக்கு விதிக்கப்பட்ட காரியங்களிலிருந்து விலக்க வேண்டும்.
अग्नीन्धनं भैक्षचर्यामधःशय्यां गुरोर्हितम् ।
आ समावर्तनात् कुर्यात् कृतोपनयनो द्विजः ॥
- மனு ஸ்ம்ருதி
இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்கள், கல்யாணம் ஆகி ஸமாவர்த்தன ஸ்நானம் செய்து கொள்ளும் வரை, அக்னி ஹோத்திரம் செய்து கொண்டு, பிக்ஷை வாங்கி சாப்பிட்டு, உயரமான படுக்கையில் படுக்காமல், குருவுக்கு நன்மை தரும் செயல்களே செய்து கொண்டு இருக்க வேண்டும்
(குருகுலத்தில் பாடம் படித்து விட்டு, அவருக்கு தக்ஷிணை கொடுத்து விட்டு, திரும்பி வந்து, விவாகம் செய்து கொள்ளும் போது, முதல் நாளோ, விவாக நாளன்றோ ஸமாவர்த்தனம் என்ற வேதோக்தமான ஸ்நான காரியங்கள் செய்ய வேண்டும். இப்படி சமாவர்த்தனம் ஆன பிறகு, அன்றிலிருந்து பஞ்சகஜம் கட்டி கொண்டு, இரண்டு பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். ஸமாவர்த்தனம் என்பது ஒரு "ஸ்நான கிரியை". கல்யாணம் ஆகி, ஸமாவர்த்தனம் ஆன பிறகு, இரு பிறப்பாளன் என்ற த்விஜன் "ஸ்நாதகன்" என்று பெயர் பெறுகிறான்)
उपनीय तु यः शिष्यं वेदम् अध्यापयेद् द्विजः ।
सकल्पं सरहस्यं च तमाचार्यं प्रचक्षते ॥
- மனு ஸ்ம்ருதி
த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனுக்கு, உபநயனம் செய்து வைத்து, வேதங்களை அத்யயனம் செய்து வைத்து, ஒழுக்கத்தை போதித்து, தானும் ஒழுக்கத்தில் வாழ்பவர் "ஆசார்யன்" என்ற அழைக்கப்படுகிறார்.
नारुन्तुदः स्यादार्तोऽपि
न परद्रोहकर्मधीः ।
ययाऽस्योद्विजते वाचा
नालोक्यां तामुदीरयेत् ॥
- மனு ஸ்ம்ருதி
த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன், தான் கஷ்டத்தில் இருந்தாலும், பிறர் மனம் நோக பேச கூடாது. பிறருக்கு துரோகம் விளைவிக்க கூடிய காரியத்தை நினைக்க கூட கூடாது. எந்த வார்த்தை பேசினால் அது மற்றவருக்கு பயத்தை தருமோ, அதை பேச கூடாது.
अनेन क्रमयोगेन संस्कृत आत्मा द्विजः शनैः ।
गुरौ वसन् सञ्चिनुयाद् ब्रह्माधिगमिकं तपः ॥
- மனு ஸ்மிருதி
இதுவரை சொல்லப்பட்ட பல விஷயங்களை, ஒரு கர்ம யோகி போல த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) தன் குருவிடம் வசிக்கும் போது கடைபிடித்து கொண்டு இருக்க வேண்டும்.
तपोविशेषै: विविधै: वृत्तैश्च विधिचोदितैः ।
वेदः कृत्स्नो अधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना ॥
- மனு ஸ்மிருதி
பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) இங்கு சொல்லப்பட்ட நியமங்களோடு (தபம்), விரதங்களை எல்லாம் கடைபிடித்துக்கொண்டு, வேதங்களை, உபநிஷத்துக்களை கற்க வேண்டும்.
वेदम् एव सदा अभ्यस्येत् तपस्तप्यन् द्विजोत्तमः ।
वेद अभ्यासो हि विप्रस्य तपः परम् इह उच्यते ॥
- மனு ஸ்மிருதி
த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) எப்போதும் வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டும். தபஸ்வியாக இருக்க வேண்டும். த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனில் பிரம்மச்சாரியாக இருக்கும் விப்ரனுக்கு (வேத பிராம்மணன்) வேதம் ஓதுதலே கடமை. அதாவது அவனுக்கு வியாபாரம், அஸ்திரம் போன்றவை கற்றாலும் அதில் ஈடுபட அனுமதி இல்லை.
த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன், தனது பிரம்மச்சர்ய வ்ரதம் முடிந்த பிறகும், தொடர்ந்து வேதத்தை தினமும் ஓதிகொண்டு இருந்தால், தலை முதல் கால் வரை தவம் செய்தவனாகிறான்.
यो अनधीत्य द्विजो वेदमन्यत्र कुरुते श्रमम् ।
स जीवन् एव शूद्रत्वम् आशु गच्छति सान्वयः ॥
- மனு ஸ்மிருதி
வேதம் ஓதாமல், மற்ற சாஸ்திரங்களை படிக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) சூத்திரனாகிறான் (employee). மேலும் அவன் வம்சத்தில் உள்ளவர்களையும் சூத்திரனாக்குகிறான்.
मातु: अग्रे अधिजननं द्वितीयं मौञ्जि-बन्धने ।
तृतीयं यज्ञ-दीक्षायां द्विजस्य श्रुतिचोदनात् ॥
- மனு ஸ்மிருதி
த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளனுக்கு (க்ஷத்ரியன், வைசியன், பிராம்மணன்) 3 பிறப்புகள் ஏற்படுகிறது. தாயிடமிருந்து பிறந்த போது ஒரு பிறப்பு. உபநயனம் ஆன பிறகு, 2வது பிறப்பு. யக்ஞம் செய்யும் போது 3வது பிறப்பு ஏற்படுகிறது.
स्नात्वा अर्कम: च इत्वा त्रिः पुनर्मामित्यृचं जपेत् ॥
- மனு ஸ்மிருதி
காம எண்ணம் இல்லாமல், கனவில் எதேச்சையாக ரேதஸ் வெளிப்பட்டு விட்டால், மறுநாள் பிரம்மச்சாரியாக இருக்கும் த்விஜன் என்ற இரட்டை பிறப்பாளன் காலையில் நீராடி, சூரிய பகவானை பூஜித்து, "புனர்மா" என்ற ரிக்கை (வேத மந்திரம்) 3 முறை ஜபிக்க வேண்டும்.
பாகம் 12
यथोक्तानि अपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।
आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥
- மனு ஸ்மிருதி
இரட்டை பிறப்பாளன் என்ற த்விஜோத்தமர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதத்தை ஓதுவதாலேயே ஆத்ம ஞானம் ஏற்படும்.
एतद् हि जन्म साफल्यं ब्राह्मणस्य विशेषतः ।
प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥
- மனு ஸ்மிருதி
ப்ராம்மண வர்ணத்தில் இருப்பவன், பிறவி எடுத்த பலனை அடைய வேதம் ஓதுவதே வழியாகும். இதுவே மற்ற இரு பிறப்பாளர்கள் என்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும் வழி.
एको अपि वेदविद् धर्मं यं व्यवस्येद् द्विजोत्तमः ।
स विज्ञेयः परो धर्मो न अज्ञानाम् उदितो अयुतैः ॥
- மனு ஸ்ம்ருதி
வேதத்தை நன்கு அறிந்தவன் ஒருவன் மட்டுமே இருந்தாலும், அந்த இரு பிறப்பாளன் என்ற த்விஜனிடமே தர்மம் எது? என்று கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டும். வேதமோ, சாஸ்திரமோ அறியாத பல பேர் சேர்ந்து கொண்டு "இது தான் தர்மம்" என்று சொன்னாலும் ஏற்கக்கூடாது.
எப்பொழுதும் மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வது கணவனின் கடமை. மனைவியை தவிர அந்நிய பெண்ணை நினைக்க கூட கூடாது. பௌர்ணமி, அமாவாசை மற்றும் சில நாட்கள் தவிர்த்து, மனைவியிடம் சேரலாம்.
ऋतुः स्वाभाविकः स्त्रीणां
रात्रयः षोडश स्मृताः ।
चतुर्भि: इतरैः सार्धम्
अहोभिः सद्विगर्हितैः ॥
- மனு ஸ்மிருதி (manu smriti)
ரஜஸ் வலை (3 day period) முடிந்த பிறகு, பொதுவாக (least) பெண்ணுக்கு அடுத்த 16 நாட்கள் ருது காலம் என்று சொல்லப்படுகிறது. ருது காலத்தின் முதல் 4 நாட்களும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும்.
तासाम् आद्याश्चतस्रस्तु
निन्दित: एकादशी च या ।
त्रयोदशी च शेषास्तु
प्रशस्ता दशरात्रयः ॥
- மனு ஸ்மிருதி (manu smriti)
ருது காலத்தின் முதல் 4 நாட்களும், அதே போல 11வது நாளும், 13வது நாளும் கணவன் மனைவியோடு சேர கூடாத நாட்களாகும். இந்த 6 நாட்கள் தவிர்த்து, மற்ற 10 நாட்களில் மனைவியோடு சேரலாம்.
युग्मासु पुत्रा जायन्ते
स्त्रियो अयुग्मासु रात्रिषु ।
तस्माद् युग्मासु पुत्रार्थी
संविशेदार्तवे स्त्रियम् ॥
- மனு ஸ்மிருதி (manu smriti)
அனுமதிக்கப்பட்ட 10 நாட்களில், 6வது அல்லது 8வது நாளில் மனைவியோடு சேர்ந்தால், மகன் பிறப்பான்.
மீதி உள்ள 8 நாட்களில் சேர்ந்தால், மகள் பிறப்பாள்.
மகனை விரும்புபவர்கள், மகளை விரும்புபவர்கள் தகுந்த படி சேரலாம்.
पुमान् पुंसो अधिके शुक्रे
स्त्री भवति अधिके स्त्रियाः ।
समे अपुमान् पुं।स्त्रियौ वा
क्षीणे अल्पे च विपर्ययः ॥
- மனு ஸ்மிருதி (manu smriti)
ஆணின் அணுக்கள் (Y) அதிகமாக இருந்தால், மகன் பிறப்பான்.
பெண்ணின் ஶ்ரோணிதம் (X) அதிகமாக இருந்தால், மகள் பிறப்பாள். (இதையும் மாற்ற பும்ஸவனம் என்ற வைதீக கர்மாவை சரியான காலத்தில் செய்தால், மகனாக பிறப்பான்)
இரண்டும் சமமாக இருந்தால், அலி பிறப்பான், அல்லது இரட்டையாக குழந்தைகள் பிறக்கும்.
குறைவாக இருந்தால், கர்ப்பம்ஏற்படாது.
निन्द्यास्वष्टासु चान्यासु
स्त्रियो रात्रिषु वर्जयन् ।
ब्रह्मचार्येव भवति यत्र
तत्र आश्रमे वसन् ॥
- மனு ஸ்மிருதி (manu smriti)
இப்படி எந்த கணவன் தன் மனைவியின் ருது காலத்தில் முதல் 4 நாட்களும், 11வது, 13வது நாட்களில் சேராமல், மற்ற நாட்களில் மட்டும் சேர்கிறானோ, அவன் க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிப்பவனே. அவன் பிரம்மச்சாரியே!
अमावास्याम् अष्टमीं च पौर्णमासीं चतुर्दशीम् ।
ब्रह्मचारी भवेन् नित्यमप्यर्तौ स्नातको द्विजः ॥
- மனு ஸ்மிருதி (manu smriti)
அமாவாசை, அஷ்டமி, பௌர்ணமி, சதுர்தசி போன்ற நாட்களில், மனைவி ருது காலத்தில் இருந்தாலும், பூணூல் காயத்ரீ உபதேசம் பெற்ற வைசியன்/பிராம்மணன்/க்ஷத்ரியன் (த்விஜன்) மனைவியுடன் படுக்க கூடாது.
தான் அறத்தோடு (தர்மம்) வாழ்ந்து வறுமையில் வாடும் போது, அதே சமயம் அதர்மத்தோடு வாழும் ஒருவன் சௌக்கியமாக வாழ்கிறானே என்று மனம் தடுமாற கூடாது. "அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்" என்று அறிந்து, தானும் அதர்ம வழியில் செல்ல மனத்தை செலுத்தவே கூடாது.
न अधर्म: चरितो लोके सद्यः फलति गौरिव ।
शनैरावर्त्य मानस्तु कर्तुर्मूलानि कृन्तति ॥
- மனு ஸ்ம்ருதி (manu smriti)
அதர்மம் செய்பவன் அதற்கான பாப பலனை உடனே அடைந்து விடுவதில்லை. ஆனால், காலம் கனியும் போது அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்.
यदि न आत्मनि पुत्रेषु न चेत् पुत्रेषु नप्तृषु ।
न त्वेव तु कृतो अधर्मः कर्तुर्भवति निष्फलः ॥
- மனு ஸ்ம்ருதி (manu smriti)
ஒருவேளை, அதர்மம் செய்தவன் பாபத்தின் பலனை அழிவை சந்திக்காமல் போனாலும், அவன் பிள்ளையோ, பேரனோ அல்லது அவனது பிள்ளையோ அதன் பலனை அடைந்து அழிந்து போவார்கள். ஒரு நாளும் ஒருவன் செய்த அதர்மம் பலன் தராமல் போகாது.
अधर्मेणैधते तावत् ततो भद्राणि पश्यति ।
ततः सपत्नान् जयति समूलस्तु विनश्यति ॥
- மனு ஸ்ம்ருதி (manu smriti)
ஒருவன் செய்த அதர்மங்கள் ஒரு நிலையை அடையும் வரை, அவன் சுகமாக சௌக்கியமாக வாழ்ந்து கொண்டு இருப்பான். தன்னை விட குறைந்த எதிரிகளையும் ஒழிப்பான். எப்பொழுது இவன் செய்த பாபம் ஒரு பரிபக்குவத்தை அடைகிறதோ, அப்போது தன்னுடைய சொத்து, சுகம், பிள்ளைகளோடு சேர்த்து, தானும் அழிந்து போவான்.
நான்கு வர்ணத்தில் இருப்பவர்களின் விதிமுறையை சொன்னீர்கள். இனி எங்களுக்கு செயல்களால் (கர்மா/action) விளையும் பலனை (கர்மவினை/reaction) பற்றி விவரிக்க வேண்டும்.
स तानुवाच धर्मात्मा महर्षीन् मानवो भृगुः ।
अस्य सर्वस्य शृणुत कर्मयोगस्य निर्णयम् ॥
மனு ஸ்மிருதி
மனுவின் புத்ரனான ப்ருகு ரிஷிகளை பார்த்து "அனைத்து கர்மாவுக்கும் ஏற்படும் பலனை விவரிக்கிறேன்" என்றார்.
शुभ: अशुभ फलं कर्म मनो-वाग्-देह सम्भवम् ।
कर्मजा गतयो नॄणाम् उत्तम अधम मध्यमः ॥
நாம் மனதினாலும், சொல்லினாலும், உடலாலும் செய்யும் செயலை பொறுத்து, நல்லதும் கெட்டதும் நடக்கிறது. இந்த செயல்களை பொறுத்தே, ஒருவனுக்கு உத்தம வாழ்க்கையும், கீழ்த்தரமான வாழ்க்கையும், நடுத்தரமான வாழ்க்கையும் அமைகிறது.
तस्यैह त्रिविधस्यापि त्र्यधिष्ठानस्य देहिनः ।
दश-लक्षण युक्तस्य मनो विद्यात् प्रवर्तकम् ॥
மனம், வாக்கு, தேகம் இந்த மூன்றினாலும் 10 வகையான வினைகள் உண்டாகின்றன. மனமே எந்த செயலுக்கும் மூல காரணமாக இருக்கிறது.
परद्रव्येष्वभिध्यानं मनसा अनिष्ट चिन्तनम् ।
वितथा अभिनिवेशश्च त्रिविधं कर्म मानसम् ॥
பிறர் பொருளை பார்த்து ஆசைப்படும் போது, மனம் 3 விதமான பாவ காரியங்களை செய்ய தூண்டும்.
पारुष्यम् अनृतं चैव
पैशुन्यं चापि सर्वशः ।
असम् बद्ध-प्रलापश्च
वाङ्मयं स्याच् चतुर्विधम् ॥
- மனு ஸ்மிருதி
கடுமையாக பேசுதல், பொய் பேசுதல், பழி சுமத்துதல், ஊர்வம்பு பேசுதல். இந்த 4ம் வாக்கினால் செய்யப்படும் பாவ செயல்கள்.
अदत्तानामुपा आदानं हिंसा चैव अविधानतः ।
परदारोपसेवा च शारीरं त्रिविधं स्मृतम् ॥
பிறர் சொத்தை பறித்து அனுபவித்தல், ஹிம்சை செய்தல், பிறர் மனைவியை அடைதல், இந்த 3ம் உடலால் செய்யப்படும் பாவ செயல்கள்.
मानसं मनसेवा अयमुपभुङ्क्ते शुभाशुभम् ।
वाचा वाचा कृतं कर्म कायेनेव च कायिकम् ॥
மனத்தால் செய்த நல்ல செயல்களின் பலனையும், கெட்ட செயல்களின் பலனையும், மனத்தினால் அனுபவித்தாக வேண்டும்.
பேசியதால் செய்த நல்ல செயல்களின் பலனையும், கெட்ட செயல்களின் பலனையும், வாக்கிலேயே அனுபவித்தாக வேண்டும்.
शरीरजैः कर्मदोषैः
याति स्थावरतां नरः ।
वाचिकैः पक्षिमृगतां
मानसैः अन्त्य जातिताम् ॥
-மனு ஸ்மிருதி
மனிதன் உடலால் செய்யும் பாவ செயல்களுக்கு, மரம், செடியாக அடுத்த பிறவி எடுப்பான்.
பேசியதால் செய்த பாவ செயல்களுக்கு, மனிதன் அடுத்த பிறவியில் மிருகமாகவும், பறவையாகவும் பிறவி எடுப்பான்.
மனதால் செய்த பாவ செயல்களுக்கு, மனிதன் அடுத்த பிறவியில் மிகவும் இகழ தக்க ஜாதிகளில் பிறப்பான்.
वाग्दण्डोऽथ मनोदण्डः कायदण्डस्तथैव च ।
यस्यैते निहिता बुद्धौ त्रिदण्डीति स उच्यते ॥
வாக்கையும், மனதையும், தேகத்தையும் கட்டுப்படுத்தி வைத்து இருப்பவனே த்ரிதண்டி (சந்நியாசி) என்று பெருமையை அடைகிறான்.
त्रिदण्डमेतन्निक्षिप्य सर्वभूतेषु मानवः ।
कामक्रोधौ तु संयम्य ततः सिद्धिं नियच्छति ॥
இப்படி த்ரிதண்டியாக சொல், மனம், தேகம் மூன்றையும் கட்டுப்படுத்தி, எந்த உயிரிடத்திலும் வெறுப்பு காட்டாமல், ஆசையும், கோபமும் தன்னை நெருங்க விடாமல் பார்த்து கொள்பவன், "ஸித்தி" அடைகிறான்.
य: अस्य आत्मनः कारयिता तं क्षेत्रज्ञं प्रचक्षते ।
यः करोति तु कर्माणि स भूतात्म: उच्यते बुधैः ॥
உள்ளிருக்கும் ஆத்மா, உடலை (க்ஷேத்ரம்) காரியங்கள் செய்ய வைப்பதால், அதற்கு "க்ஷேத்ரஞன்" என்று பெயர். இந்த உடல் 5 பூதங்களால் ஆனது. காரியங்கள் செய்வதால், உடலுக்கு "பூதாத்மா" என்றும் பெயர்.
जीवसञ्ज्ञो अन्तरात्मा अन्यः सहजः सर्वदेहिनाम् ।
येन वेदयते सर्वं सुखं दुःखं च जन्मसु ॥
இந்த உடலுக்குள் வசித்து கொண்டிருக்கும் ஆத்மா அலாதியானது. பிறவியில் சுக துக்க அனுபவம் இந்த ஆத்மா இருப்பதாலேயே ஏற்படுகிறது.
तावुभौ भूतसम्पृक्तौ महान् क्षेत्रज्ञ एव च ।
उच्चावचेषु भूतेषु स्थितं तं व्याप्य तिष्ठतः ॥
பூதாத்மாவில் இருக்கும் க்ஷேத்ரஞனும் (soul), பூதாத்மாவும் (nature/body), எங்கும் வியாபித்து, அனைத்துக்கும் அப்பாற்ப்பட்டு இருக்கும் பரமாத்மாவிடம் அடங்கி இருக்கிறது.
असङ्ख्या मूर्तयः तस्य
निष्पतन्ति शरीरतः ।
उच्चावचानि भूतानि
सततं चेष्टयन्ति याः ॥
- மனு ஸ்மிருதி
பரமாத்மாவிடமிருந்து கணக்கற்ற ஆத்மாக்கள் (க்ஷேத்ரஞர்கள்), அக்னியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி போல நூற்றுக்கணக்காக வெளிப்பட்டு, பல சரீரங்களில் புகுந்து கொண்டு, இயங்குகிறது.
பஞ்ச பூதங்களால் ஆன மனிதன் பாவ காரியங்கள் செய்தால், மனித உடலை விட்ட (மரணித்த) பிறகு, நரகங்களில் கொடுக்கப்படும் தண்டனையை தாங்கும் படியான சரீரமான "யாதனா" என்ற சரீரத்தை பெறுகிறான்.
तेनानुभूय ता यामीः शरीरेणैह यातनाः ।
तास्वेव भूतमात्रासु प्रलीयन्ते विभागशः ॥
- மனு ஸ்மிருதி
தான் செய்த பாவ காரியங்களுக்கு தண்டனையை அனுபவித்த ஜீவன், தண்டிக்கப்பட்ட பிறகு, யாதனா சரீரத்தை பஞ்ச பூதங்களில் இழந்து விடுவான்.
सो अनुभूय असुखोदर्कान् दोषान् विषयसङ्गजान् ।
व्यपेत कल्मषो अभ्येति तावेवोभौ महौ जसौ ॥
- மனு ஸ்மிருதி
விஷய சுகங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை பெற்று, பாபம் நீங்கிய பிறகு, மீண்டும் மஹத் (பஞ்ச பூதங்கள்) மற்றும் பரமாத்மாவுடன் சேர்ந்து பயணிக்கிறான்.
तौ धर्मं पश्यतस्तस्य पापं चातन्द्रितौ सह ।
याभ्यां प्राप्नोति सम्पृक्तः प्रेत्येह च सुखासुखम् ॥
- மனு ஸ்மிருதி
எங்கும் இருக்கும் மஹத்தும், பரமாத்மாவும், இந்த ஜீவன் இந்த உடலை கொண்டு செய்யும் தர்மம், அதர்மம், அதனால் இந்த ஜீவன் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
यद्याचरति धर्मं स प्रायशोऽधर्ममल्पशः ।
तैरेव चावृतो भूतैः स्वर्गे सुखमुपाश्नुते ॥
- மனு ஸ்மிருதி
பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை கொண்டு ஜீவன் தர்மத்தை அதிகமாகவும், அதர்மத்தை கொஞ்சமாகவும் செய்து இருந்தால், ஸ்வர்க லோகத்தை அடைந்து சுகத்தை அனுபவிப்பான்.
यदि तु प्रायशोऽधर्मं सेवते धर्ममल्पशः ।
तैर्भूतैः स परित्यक्तो यामीः प्राप्नोति यातनाः ॥
- மனு ஸ்மிருதி
பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலை கொண்டு ஜீவன் அதர்மத்தை அதிகமாகவும், தர்மத்தை கொஞ்சமாகவும் செய்து இருந்தால், யாதனா சரீரத்தை பெற்று நரக லோகத்தை அடைந்து தண்டனைகளை அனுபவிப்பான்.
यामीस्ता यातनाः प्राप्य स जीवो वीतकल्मषः ।
तान्येव पञ्च भूतानि पुनरप्येति भागशः ॥
- மனு ஸ்மிருதி
இப்படி ஜீவன் நரகத்தில் தண்டனை அனுபவித்து, பாபங்கள் கழிந்த பிறகு, மீண்டும் பஞ்ச பூதங்களோடு சேருகிறான்.
एता दृष्ट्वाऽस्य जीवस्य गतीः स्वेनैव चेतसा ।
धर्मतोऽधर्मतश्चैव धर्मे दध्यात् सदा मनः ॥
- மனு ஸ்மிருதி
'தர்ம காரியங்கள் மூலம் சுகங்களையும், அதர்ம காரியங்களால் துக்கத்தையும் ஜீவன் பெறுகிறான்' என்ற கதியை உணர்ந்து, மனதை எப்பொழுதும் தர்ம காரியங்கள் செய்வதிலேயே ஈடுபடுத்த வேண்டும்.
இனி, ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களின் தன்மைகளை சொல்கிறேன். இந்த மூன்றும் அனைத்து உயிரிடத்திலும் வியாபித்து இருக்கிறது.
यो यदेषां गुणो देहे साकल्येनातिरिच्यते ।
स तदा तद्गुणप्रायं तं करोति शरीरिणम् ॥
- மனு ஸ்மிருதி
ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற 3 குணங்களும் அனைவரிடத்திலும் இருந்தாலும், யாருக்கு எந்த குணம் அதிகம் நிரம்பி உள்ளதோ, அவனை அந்த குணம் கொண்டவனாக பார்க்க வேண்டும்.
सत्त्वं ज्ञानं तमो अज्ञानं
रागद्वेषौ रजः स्मृतम् ।
एतद् व्याप्तिमदेतेषां
सर्वभूताश्रितं वपुः ॥
- மனு ஸ்மிருதி
ஸத்வ குணம் அதிகமாக இருக்கும் போது, ஞானம் (மெய் அறிவு) உண்டாகும். தமஸ் என்ற குணம் அதிகமாக இருக்கும் போது, அஞ்ஞானம் உண்டாகும். ரஜோ குணம் அதிகமாகும் போது, விருப்பு வெறுப்பு உண்டாகும். இந்த மூன்றுமே அனைத்து உயிரிடத்திலும் பரவி இருக்கிறது.
तत्र यत् प्रीतिसंयुक्तं किं चिदात्मनि लक्षयेत् ।
प्रशान्तमिव शुद्धाभं सत्त्वं तदुपधारयेत् ॥
- மனு ஸ்மிருதி
பரமாத்மாவை நினைத்து கொண்டும், ப்ரஸன்னமாகவும், தூய்மையாகவும் இருக்கும் ஜீவன், ஸத்வ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.
यत् तु दुःख समायुक्तम्
अप्रीतिकरमात्मनः ।
तद् रजो प्रतीपं विद्यात्
सततं हारि देहिनाम् ॥
- மனு ஸ்மிருதி
எப்பொழுதும் துக்கப்பட்டு கொண்டும், ப்ரியமில்லாமலும், விஷய சுகங்களிலேயே ஈடுபடும் ஜீவன், ரஜோ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.
यत् तु स्यान् मोहसं युक्तम्
अव्यक्तं विषय आत्मकम् ।
अप्रतर्क्यम् अविज्ञेयं
तमस्तदुपधारयेत् ॥
- மனு ஸ்மிருதி
மோகம் கொண்டும், நல்லது கெட்டது அறியும் விவேகமில்லாமலும், புலன்களை பற்றிய அறியாமையோடும் இருக்கும் ஜீவன், தமோ குணத்தில் இருக்கிறான் என்று அறியலாம்.
त्रयाणामपि चैतेषां गुणानां यः फलोदयः ।
अग्र्यो मध्यो जघन्यश्च तं प्रवक्ष्याम्यशेषतः ॥
- மனு ஸ்மிருதி
இந்த மூன்று குணங்களும் (ஸத்வ, ரஜோ, தமஸ்) உயர்ந்த பலனையும், மத்யமான பலனையும், கீழான பலனையும் தருகிறது. அதை பற்றி சொல்கிறேன்.
वेदाभ्यासस्तपो ज्ञानं शौचमिन्द्रियनिग्रहः ।
धर्मक्रियाऽत्मचिन्ता च सात्त्विकं गुणलक्षणम् ॥
- மனு ஸ்மிருதி
வேத மந்திரங்கள் ஜபம் செய்வதில் ஈடுபாடும், புலன்களை அடக்கி தவம் செய்வதில் (விரதங்களில்) ஈடுபாடும், ஆத்மா நான் என்ற அறிவோடும், உள்ளும் புறமும் தூய்மையோடும், புலனடக்கத்தோடும், தர்மமான செயல்கள் செய்து கொண்டும், ஆத்மாவை பற்றி சிந்தித்து கொண்டும் இருக்கும் ஜீவன் ஸத்வ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.
आरम्भरुचिता अधैर्यम्
असत्कार्य परिग्रहः ।
विषयोपसेवा चाजस्रं
राजसं गुण-लक्षणम् ॥
- மனு ஸ்மிருதி
பலனை எதிர்பார்த்தே காரியங்கள் செய்து கொண்டும், நினைத்தது நடக்காத பட்சத்தில் அதைரியம் அடைந்தும், செய்ய கூடாத செயல்கள் செய்தும், விஷய சுகங்களில் நாட்டம் கொண்டும், இருக்கும் ஜீவன், ரஜோ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.
लोभः स्वप्नोऽधृतिः क्रौर्यं
नास्तिक्यं भिन्नवृत्तिता ।
याचिष्णुता प्रमादश्च
तामसं गुणलक्षणम् ॥
- மனு ஸ்மிருதி
பேராசை கொண்டும், அதிகம் தூங்கி கொண்டும், கோழையாகவும், குறை சொல்லி கொண்டும், தெய்வத்தை பழித்து கொண்டும், ஒழுக்கமான வாழ்க்கையில் நாட்டமில்லாமலும், பிறர் பொருளை வாங்கி கொள்வதிலும், போதையோடு இருப்பதிலும் நாட்டம் கொண்டும் இருக்கும் ஜீவன், தமோ குணத்தில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம்.
यत् कर्म कृत्वा कुर्वंश्च करिष्यंश्चैव लज्जति ।
तज् ज्ञेयं विदुषा सर्वं तामसं गुणलक्षणम् ॥
- மனு ஸ்மிருதி
ஒரு காரியத்தை செய்த பிறகும், செய்யும் போதும், செய்ய போகும் போதும், மனம் வெட்கப்படுமானால், அந்த காரியங்கள் தமோ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.
येनास्मिन् कर्मणा लोके ख्यातिमिच्छति पुष्कलाम् ।
न च शोचत्यसम्पत्तौ तद् विज्ञेयं तु राजसम् ॥
- மனு ஸ்மிருதி
பரலோகத்தில் சௌக்கியம் கொடுக்காத காரியமாக இருந்தாலும், இந்த உலகில் பெரும் புகழை பெறுவதற்காக செய்யப்படும் காரியங்கள், ரஜோ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.
यत् सर्वेणेच्छति ज्ञातुं यन्न लज्जति चाचरन् ।
येन तुष्यति चात्माऽस्य तत् सत्त्वगुणलक्षणम् ॥
- மனு ஸ்மிருதி
ஒரு காரியத்தை செய்த பிறகும், செய்யும் போதும், செய்ய போகும் போதும், மனம் சுகப்படுமானால், அந்த காரியங்கள் ஸத்வ குணத்தின் லக்ஷணம் என்று அறிய வேண்டும்.
तमसो लक्षणं कामो रजसस्त्वर्थ उच्यते ।
सत्त्वस्य लक्षणं धर्मः श्रैष्ठ्यमेषां यथोत्तरम् ॥
- மனு ஸ்மிருதி
தமோ குணத்தில், காமமே முக்கியமான லக்ஷணமாக இருக்கும். ரஜோ குணத்தில், பொருளே முக்கியமான லக்ஷணமாக இருக்கும். ஸத்வ குணத்தில், அறமே (தர்மமே) முக்கியமான லக்ஷணமாக இருக்கும். தமோ குணத்தை விட ரஜோ குணம் சிறந்தது. ரஜோ குணத்தை விட ஸத்வ குணம் சிறந்தது.
येन यस्तु गुणेनैषां संसरान् प्रतिपद्यते ।
तान् समासेन वक्ष्यामि सर्वस्यास्य यथाक्रमम् ॥
- மனு ஸ்மிருதி
இந்த குணங்களால் ஜீவன் எத்தகைய நிலைகளை அடைகிறான் என்பதை பற்றி முழுமையாக வரிசைப்படி கூறுகிறேன். கேளுங்கள்.
देवत्वं सात्त्विका यान्ति मनुष्यत्वं च राजसाः ।
तिर्यक्त्वं तामसा नित्यमित्येषा त्रिविधा गतिः ॥
- மனு ஸ்மிருதி
ஸத்வ குணத்திலேயே (அறத்தில் விருப்பம்) இருப்பவன், தேவனாகிறான். ரஜோ குணத்திலேயே (பொருளில் விருப்பம்) இருப்பவன் மனித பிறவியே மீண்டும் எடுக்கிறான். தமோ குணத்திலேயே (காமத்தில் விருப்பம்) இருப்பவன் பறவை மிருகம் போன்ற கீழ் பிறவிகளை எடுக்கிறான்.
त्रिविधा त्रिविधैषा तु विज्ञेया गौणिकी गतिः ।
अधमा मध्यमाग्र्या च कर्मविद्याविशेषतः॥
- மனு ஸ்மிருதி
3 குணங்களால் (ஸத்வ, ரஜோ, தமோ) கிடைக்கும் இந்த 3 பிறவிகளும் (தேவ, மனித, மிருக), அந்தந்த ஜீவன் செய்த காரியத்தை பொறுத்து, மேல் நிலை, நடுநிலை, கீழ் நிலை என்ற விதிப்படி பிறவிகளை பெறுகிறார்கள்.
स्थावराः कृमिकीटाश्च
मत्स्याः सर्पाः सकच्छपाः ।
पशवश्च मृगाश्चैव
जघन्या तामसी गतिः ॥
- மனு ஸ்மிருதி
தமோ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான அசையாத செடிகளாகவும், மரங்களாகவும், புழு, பூச்சி, மீன், பாம்பு, ஆமை, வளர்ப்பு மிருகங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்
தமோ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான யானை, குதிரை, சிங்கம், புலி போன்ற பிறவிகள் ஏற்படும். ஒருவன் சூத்திரனாக (employee), மிலேச்சனாக (வேத சாஸ்திரம் அறியாதவனாக) பிறப்பதும் முன் ஜென்மத்தில் அந்த ஜீவனுக்கு இருந்த தமோ குணமே காரணம். சூத்திரனாக (employee), மிலேச்சனாக பிறப்பதும் நடு நிலையான பிறவிகளே.
चारणाश्च सुपर्णाश्च पुरुषाश्चैव दाम्भिकाः ।
रक्षांसि च पिशाचाश्च तामसीषूत्तमा गतिः ॥
- மனு ஸ்மிருதி
தமோ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான சாரணர்கள், கருடன் போன்ற பறவைகள், கர்வம் பிடித்த மனிதர்கள், ராக்ஷஸர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்
झल्ला मल्ला नटाश्चैव पुरुषाः शस्त्रवृत्तयः ।
द्यूतपानप्रसक्ताश्च जघन्या राजसी गतिः ॥
- மனு ஸ்மிருதி
ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான இரும்பை வைத்து கொண்டு சண்டை செய்பவர்கள், மல் யுத்தம் செய்பவர்கள், நடிகர்கள், ஆயுதம் செய்பவர்கள், சூதாடிகள், குடிகாரர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்
राजानः क्षत्रियाश्चैव राज्ञां चैव पुरोहिताः ।
वादयुद्धप्रधानाश्च मध्यमा राजसी गतिः ॥
- மனு ஸ்மிருதி
ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான அரசர்கள், க்ஷத்ரியனாக பிறந்தவர்கள், அரச புரோகிதர்கள், வாதம்-விவாதம் நடத்துபவர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்
गन्धर्वा गुह्यका यक्षा विबुधानुचराश्च ये ।
तथैवाप्सरसः सर्वा राजसीषूत्तमा गतिः ॥
- மனு ஸ்மிருதி
ரஜோ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான கந்தர்வர்கள், குஹ்யர்கள், யக்ஷர்கள், விபுதர்கள், அப்சரஸ்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்
तापसा यतयो विप्रा ये च वैमानिका गणाः ।
नक्षत्राणि च दैत्याश्च प्रथमा सात्त्विकी गतिः ॥
- மனு ஸ்மிருதி
ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, கீழ் நிலையான தபஸ்விகள், சந்யாசிகள், வேத விற்பன்னர்கள், விமானத்தில் பறக்கும் கல்விமான்கள், தைத்யர்கள், நக்ஷத்திரங்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்
यज्वान ऋषयो देवा वेदा ज्योतींषि वत्सराः ।
पितरश्चैव साध्याश्च द्वितीया सात्त्विकी गतिः ॥
- மனு ஸ்மிருதி
ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, நடு நிலையான யக்ஞம் செய்பவர்கள், ரிஷிகள், தேவர்கள், வேதரூபமான தெய்வங்கள், கிரக தெய்வங்கள், பித்ரு தெய்வங்கள், சாத்யர்கள் போன்ற பிறவிகள் ஏற்படும்
ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च ।
उत्तमां सात्त्विकीमेतां गतिमाहुर्मनीषिणः ॥
- மனு ஸ்மிருதி
ஸத்வ குணத்தின் அளவை பொறுத்து, மேல் நிலையான ப்ரம்ம தேவன், பிரஜாபதி, தர்ம தேவன், மஹத் (ப்ரக்ருதி), அவ்யக்தம் போன்ற பிறவிகள் ஏற்படும்
एष सर्वः समुद्दिष्टस्त्रिप्रकारस्य कर्मणः ।
त्रिविधस्त्रिविधः कृत्स्नः संसारः सार्वभौतिकः ॥
- மனு ஸ்மிருதி
இவ்வாறு மூன்றினால் (வாக்கு, செயல், மனம்) செய்யப்படும் காரியங்களால் மூன்று விதமான குணங்களால், பல விதமான பிறவிகள் எவ்வாறு ஏற்படுகிறது என்று கூறினேன். இதில் சில பிறவிகளை கூறினேன். மற்ற பிறவிகளை இதை அனுசரித்து ஊகித்து கொள்ள வேண்டும்.
इन्द्रियाणां प्रसङ्गेन धर्मस्यासेवनेन च ।
पापान् संयान्ति संसारानविद्वांसो नराधमाः ॥
- மனு ஸ்மிருதி
எந்த மனிதன் புலன்களை அடக்காமலும், அந்த புலன்கள் வழியே சென்று விஷய சுகங்களிலேயே வாழ்ந்து, தர்ம வழியிலும் நடக்காமலும், செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளாமலும் வாழ்கிறானோ, அவன் அடுத்த பிறவியில் கீழ்த்தரமான நிலையை பெறுவான்.
यां यां योनिं तु जीवोऽयं येन येनैह कर्मणा ।
क्रमशो याति लोकेऽस्मिंस्तत् तत् सर्वं निबोधत ॥
- மனு ஸ்மிருதி
ஜீவன் எந்த எந்த கர்ம வினைகளை செய்து எந்தெந்த உலகத்தை அடைகிறான். எந்தெந்த பிறவியை அடைகிறான் என்பதை முழுவதும் கூறுகிறேன். கேளுங்கள்.
बहून् वर्षगणान् घोरान्नरकान् प्राप्य तत्क्षयात् ।
संसारान् प्रतिपद्यन्ते महापातकिनस्त्विमान् ॥
- மனு ஸ்மிருதி
மிக கொடிய பாபம் செய்தவர்கள், பல்லாயிரம் வருடங்கள் பயங்கரமான நரகங்களில் வேதனையை அனுபவிப்பார்கள். அதற்கு பிறகு மிஞ்சிய பாபங்களை எந்த பிறவிகள் எடுத்து அனுபவிப்பார்கள் என்று கூறுகிறேன்.
श्वसूकरखरोष्ट्राणां गोऽजाविमृगपक्षिणाम् ।
चण्डालपुक्कसानां च ब्रह्महा योनिमृच्छति ॥
- மனு ஸ்மிருதி
ப்ராம்மணனை கொன்றவன் கொடிய நரகத்தை அனுபவித்த பிறகு, நாய், பன்றி, கழுதை ஒட்டகம், ஆடு நாடாகவும், பறவையாகவும் பிறப்பார்கள். மனிதனாக நாயை தின்று வாழும் சண்டாளனாகவும், புக்கஸர்களாகவும் தாழ்ந்த பிறவிகளை எடுப்பார்கள்.
कृमिकीट पतङ्गानां
विड्भुजां चैव पक्षिणाम् ।
हिंस्राणां चैव सत्त्वानां
सुरापो ब्राह्मणो व्रजेत् ॥
- மனு ஸ்மிருதி
மதுபானம் (சுராபானம்) செய்த பிராம்மணன், கொடிய நரகத்தை அனுபவித்த பிறகு, புழு பூச்சியாகவும், அணில், மலம் உண்ணும் ஜந்துவாகவும், புலி முதலிய கொடிய மிருகமாகவும் பிறவிகளை எடுப்பார்கள்.
लूताऽहिसरटानां च तिरश्चां चाम्बुचारिणाम् ।
हिंस्राणां च पिशाचानां स्तेनो विप्रः सहस्रशः ॥
- மனு ஸ்மிருதி
தங்கத்தை திருடிய விப்ரன் , சிலந்தியாகவும், பாம்பு, ஓணான், நீரில் வாழும் உயிரினமாகவும், கொடிய மிருகமாகவும், பிசாசாகவும் பிறவிகளை எடுப்பார்கள்.
तृणगुल्मलतानां च क्रव्यादां दंष्ट्रिणामपि ।
क्रूरकर्मकृतां चैव शतशो गुरुतल्पगः ॥
- மனு ஸ்மிருதி
தன் குருவின் பத்னியை அடைய நினைத்தவன், புல்லாகவும், புதராகவும், கொடியாகவும், மாமிசம் உண்ணும் மிருகங்களாகவும் பிறவிகளை பலமுறை அடைவான்.
हिंस्रा भवन्ति क्रव्यादाः कृमयोऽमेध्यभक्षिणः ।
परस्परादिनः स्तेनाः प्रेत्यान्त्यस्त्रीनिषेविणः ॥
- மனு ஸ்மிருதி
விலங்குகளை கொல்வதையே தங்கள் வேலையாக கொண்டிருப்பவர்கள், மிருகங்களை உண்ணும் விலங்காகவும், மலத்தை உண்ணும் புழுக்களாகவும், திருடர்களாகவும், தம் இனத்தையே உண்ணும் பிராணிகளாகவும் பிறப்பார்கள். சண்டாள பெண்ணுடன் உறவு கொண்டவர்கள் ப்ரேத சரீரத்தோடு அலைவார்கள்.
संयोगं पतितैर्गत्वा परस्यैव च योषितम् ।
अपहृत्य च विप्रस्वं भवति ब्रह्मराक्षसः ॥
- மனு ஸ்மிருதி
நாடு கடத்தப்பட்டவனோடு உறவு கொண்டவனும், பிறர் மனைவியை அடைந்தவனும், ப்ராம்மணனின் பொருளை திருடியவனும், அடுத்த பிறவியில் ப்ரம்ம-ராக்ஷஸனாகவும் அலைவார்கள்.
मणिमुक्ताप्रवालानि हृत्वा लोभेन मानवः ।
विविधाणि च रत्नानि जायते हेमकर्तृषु ॥
- மனு ஸ்மிருதி
ரத்தினங்கள், முத்துக்கள், பவழங்கள் பல வகையான உயர்ந்த ரத்தின கற்கள் முதலியவனற்றை திருடியவன், அடுத்த பிறவியில் பொற்கொல்லனாக பிறப்பான்.
धान्यं हृत्वा भवत्याखुः कांस्यं हंसो जलं प्लवः ।
मधु दंशः पयः काको रसं श्वा नकुलो घृतम् ॥
- மனு ஸ்மிருதி
தானியங்களை திருடியவன் எலியாக பிறப்பான். வெண்கலத்தை திருடியவன் அன்னமாக பிறப்பான். தண்ணீர் திருடியவன் தவளையாக பிறப்பான். பால் திருடியவன் காக்கையாக பிறப்பான். தேன் திருடியவன் ஈயாக பிறப்பான். ரசமான (சுவையான) பொருட்களை திருடியவன் நாயாக பிறப்பான்.
நெருப்பை திருடியவன் நாரையாக பிறப்பான். முறம், உரல் போன்ற வீட்டுக்கு தேவையான பொருளை திருடியவன் குளவியாக பிறப்பான். சிவப்பு நிறமுள்ள துணிகளை திருடியவன் சகோர பறவையாக பிறப்பான்.
நான்கு வர்ணத்தில் இருப்பவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை செய்யாமல் வாழ்ந்தால், அடுத்த பிறவியில் தன்னை ஒழிக்க நினைக்கும் எதிரியை எதிர்க்க முடியாமல், அவன் சொல்படி நடக்கும் படியான பிறவியை அடைவார்கள்.
वान्ताश्युल्कामुखः प्रेतो
विप्रो धर्मात् स्वकाच्च्युतः ।
अमेध्यकुणपाशी च क्षत्रियः कटपूतनः ॥
- மனு ஸ்மிருதி
பிராம்மண வர்ணத்தில் (MLA, MP, Advocate, Judiciary) இருந்தும், தன் தர்மத்தை விட்டால், அடுத்த பிறவியில் கொள்ளிவாய் பிசாசாக பிரேத சரீரத்தோடு இருந்து, மனிதர்களின் வாந்தியை சாப்பிடும் ஜென்மத்தை அடைவான். க்ஷத்ரிய வர்ணத்தில் (army, police, defence) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், மலத்தையும், பிணத்தையும் தின்னும் கடபூதமாக அலைவான்.
मैत्राक्षज्योतिकः प्रेतो वैश्यो भवति पूयभुक् ।
चैलाशकश्च भवति शूद्रो धर्मात् स्वकाच्च्युतः ॥
- மனு ஸ்மிருதி
வைஸ்ய வர்ணத்தில் (employer, business, self-employed) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், புண்ணில் வழிகின்ற சீழை உண்ணும் மைத்ராஷ ஜோதி என்னும் பிரேத ஜென்மாவை எடுப்பான்.
சூத்திர வர்ணத்தில் (employee) இருந்தும், தன் தர்மத்தை விட்டவன், பேன்களை தின்னும் சைலாஷகம் என்னும் பிரேத ஜென்மாவை எடுப்பான்.
यथा यथा निषेवन्ते विषयान् विषयात्मकाः ।
तथा तथा कुशलता तेषां तेषूपजायते ॥
- மனு ஸ்மிருதி
உலக விஷயங்களில் மூழ்கி எத்தனைக்கு எத்தனை சுகங்களை அனுபவிக்கிறானோ, அத்தனைக்கு அத்தனை அதிலேயே மூழ்கி கிடப்பான்.
तेऽभ्यासात् कर्मणां तेषां पापानामल्पबुद्धयः ।
सम्प्राप्नुवन्ति दुःखानि तासु तास्विह योनिषु ॥
- மனு ஸ்மிருதி
தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி, பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், அதன் தன்மையை பொறுத்து, கீழான, மிகவும் கீழான பிறவிகளை பெற்று பலவிதமான துன்பங்களை அனுபவிப்பார்கள்
तामिस्रादिषु चोग्रेषु नरकेषु विवर्तनम् ।
असिपत्रवनादीनि बन्धनछेदनानि च ॥
- மனு ஸ்மிருதி
தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி, பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், தாமிஸ்ரம் போன்ற கொடிய நரகங்களுக்கு சென்று நரக வேதனை அனுபவிப்பார்கள். அசிபத்ர வனம் (இலைகளே முள் போல இருக்கும் ஈச்ச மரம் போன்றவை இருக்கும் காடு) கொண்ட நரகங்களை அடைந்து, கட்டப்பட்டும், வெட்டப்பட்டும், பல வேதனைகளை அனுபவிப்பார்கள்.
विविधाश्चैव सम्पीडाः काकोलूकैश्च भक्षणम् ।
करम्भवालुकातापान् कुम्भीपाकांश्च दारुणान् ॥
- மனு ஸ்மிருதி
தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி, பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், காக்கை கோட்டான் போன்றவற்றால் கொத்தி தின்னப்பட்டு, எரியும் மணலில் புரட்டப்பட்டு, பெரிய பாத்திரத்தில் வேக வைத்து கொடிய நரகத்தில் சித்ரவதை செய்யப்படுவார்கள்.
सम्भवांश्च वियोनीषु दुःखप्रायासु नित्यशः ।
शीतातपाभिघातांश्च विविधानि भयानि च ॥
- மனு ஸ்மிருதி
தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை மீறி, பாவச் செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யும் மனிதர்கள், அடுத்த பிறவியில், கீழ்தரமான வாழ்க்கையில் பிறந்தும், பெரும் துன்பங்களை அனுபவித்து கொண்டும், வெப்பம் குளிரினால் துன்பப்பட்டும், பல்வேறு வகையான பயங்களோடு வாழும்படியாக பிறப்பான்.
असकृद् गर्भवासेषु वासं जन्म च दारुणम् ।
बन्धनानि च काष्ठानि परप्रेष्यत्वमेव च ॥
- மனு ஸ்மிருதி
தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், மீண்டும் மீண்டும் கர்ப வாசம் செய்து பிறந்து, உலக விஷயங்களில் பந்தப்பட்டு, துன்பங்களை அனுபவித்து, பிறருக்கு அடிமையாகவே வாழ்வார்கள்.
बन्धु-प्रिय वियोगांश्च
संवासं चैव दुर्जनैः ।
द्रव्यार्जनं च नाशं च
मित्र अमित्रस्य चार्जनम् ॥
- மனு ஸ்மிருதி
தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், அடுத்த பிறவியில் உறவினர்கள், பிரியப்பட்டவர்கள் பிரிவதை கண்டும், தீயவர்களோடு சேர்ந்து வாழும் நிலையையும், பணத்தை சேர்ப்பதில்- பெரும் துன்பத்தை அனுபவித்தும், சேர்த்த செல்வம் செலவழிந்து போவதையும், நண்பர்கள் பகைவர்களாக ஆவது போன்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
जरां चैवाप्रतीकारां व्याधिभिश्चोपपीडनम् ।
क्लेशांश्च विविधांस्तांस्तान् मृत्युमेव च दुर्जयम् ॥
- மனு ஸ்மிருதி
தன் தர்மத்தை மீறி பாபம் செய்பவர்கள், முதுமையால் தளர்ந்தும், தீராத வியாதிகளால் பீடிக்கப்பட்டும், பலவகையான மன கலக்கத்துடன் வாழும்படியாகவும், தவிர்க்க முடியாத மரணத்தையும் அடைவார்கள்.
यादृशेन तु भावेन यद् यत् कर्म निषेवते ।
तादृशेन शरीरेण तत् तत् फलमुपाश्नुते ॥
- மனு ஸ்மிருதி
எந்த எண்ணத்தோடு எந்த காரியத்தை ஒருவன் செய்கிறானோ, அதற்கு ஏற்ற தேகத்தோடு பிறவிகள் எடுத்து அதற்கான பலனை அடைகிறான்.
एष सर्वः समुद्दिष्टः कर्मणां वः फलोदयः ।
नैःश्रेयसकरं कर्म विप्रस्येदं निबोधत ॥
- மனு ஸ்மிருதி
இது வரை, சாஸ்திரம் சொல்லும் முறையையும், அதற்கு விரோதமான காரியங்கள் செய்வதால் ஏற்படும் துன்பங்களை பற்றியும் சொன்னேன். இனி, விப்ரன் என்று சொல்லப்படும் வேதமோதுபவன் செய்ய வேண்டிய காரியங்களை பற்றி சொல்கிறேன்.
वेद अभ्यास: तपो ज्ञानम् इन्द्रियाणां च संयमः ।
अहिंसा गुरु-सेवा च निःश्रेयसकरं परम् ॥
- மனு ஸ்மிருதி
வேதத்தை கற்று கொள்ளுதல், அதை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், ப்ரம்ம ஞானத்தை அடைதல், புலன் அடக்கதோடு இருத்தல், அஹிம்சையாகவே இருத்தல், குரு சேவை செய்தல். இந்த 6 காரியங்களை, வேதமோதும் விப்ரன் செய்தால் மோக்ஷத்தை அடைவான்.
सर्वेषाम् अपि चैतेषां शुभानाम् इह कर्मणाम् ।
किंचित् श्रेयस्करतरं कर्मोक्तं पुरुषं प्रति ॥
- மனு ஸ்மிருதி
இப்போது கூறிய இவற்றில் மிக மிக உயர்ந்தது என்று பார்ப்போம்.
இந்த அனைத்திலும் ப்ரம்ம ஞானத்தை அடைவதே மிக மிக உயர்ந்தது. பகவானை அறியும் ஞானமே ப்ரம்மஞானம். இந்த ப்ரம்ம ஞானமே மோக்ஷத்திற்கு முக்கிய காரணம்.
षण्णामेषां तु सर्वेषां कर्मणां प्रेत्य चैह च ।
श्रेयस्करतरं ज्ञेयं सर्वदा कर्म वैदिकम् ॥
- மனு ஸ்மிருதி
வேதத்தை கற்று கொள்ளுதல், அதை பற்றிய நினைவுடனேயே தபஸில் இருத்தல், ப்ரம்ம ஞானத்தை அடைதல், அஹிம்சையாகவே இருத்தல், குரு சேவை செய்தல். இந்த 6 காரியங்களை கடைபிடிக்கும் வைதீகன் (விப்ரன்) செய்யும் வைதீக காரியங்கள் இக லோகத்திலும் பலன் தரும், பரலோகத்திலும் பலன் தரும்.
இந்த உலகத்தில் சுகமாக இருப்பதற்காகவும், மேல் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவும் செய்யப்படும் காரியங்கள் "ப்ரவ்ருத்தி" வைதீக கர்மா என்று சொல்கிறோம். எந்த பலனையும் எதிர்பார்க்காமல், இறந்த பிறகும் வேறு பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படும் காரியங்கள் "நிவ்ருத்தி" வைதீக கர்மா என்று சொல்கிறோம்.
प्रवृत्तं कर्म संसेव्यं देवानामेति साम्यताम् ।
निवृत्तं सेवमानस्तु भूतान्यत्येति पञ्च वै ॥
- மனு ஸ்மிருதி
ப்ரவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்கள் செய்வதன் மூலம், தேவனாகவும், தேவனை போல சில காலங்கள் சொர்க்க லோகங்களில் வாசம் செய்யும் பலன்களை கூட அடையலாம்.
நிவ்ருத்தி மார்க்க வைதீக கர்மாக்கள் செய்வதன் மூலம், பஞ்சபூதங்களும் விலகி, மோக்ஷத்தை அடையலாம்.
सर्वभूतेषु चात्मानं सर्वभूतानि चात्मनि ।
समं पश्यन्नात्मयाजी स्वाराज्यमधिगच्छति ॥
- மனு ஸ்மிருதி
சர்வ சரீரங்களிலும் ஆத்மா உள்ளது. ஒவ்வொரு சரீரங்களில் இருக்கும் இந்த ஆத்மாக்கள் பரமாத்மாவிடம் உரைகிறது. அந்த பரமாத்மா அனைத்து ஆத்மாவுக்கும் உறைவிடமாக இருக்கிறார் என்ற சம புத்தியோடு பார்க்க தெரிந்தவன், மோக்ஷம் (வீடு) செல்கிறான்.
यथोक्तान्यपि कर्माणि परिहाय द्विजोत्तमः ।
आत्मज्ञाने शमे च स्याद् वेदाभ्यासे च यत्नवान् ॥
- மனு ஸ்மிருதி
த்விஜோத்மர்கள் (பிராம்மண, வைசிய, க்ஷத்ரிய) தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விட்டாவது, ஆத்ம ஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும். வேதத்தை ஓதுவதில் முயற்சியோடு இருக்க ஆத்ம ஞானம் ஏற்படும்.
एतद् हि जन्मसाफल्यं ब्राह्मणस्य विशेषतः ।
प्राप्यैतत् कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा ॥
- மனு ஸ்மிருதி
பிறவி எடுத்த பலனை அடைய, ப்ராம்மண வர்ணத்தில் இருப்பவனுக்கு வேதம் ஓதுவதே வழி. இதுவே மற்ற த்விஜர்களான க்ஷத்ரியர்களுக்கும், வைஸ்யர்களுக்கும்.
पितृदेव मनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।
अशक्यं च अप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥
- மனு ஸ்ம்ருதி
பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் வேதம் கண் போன்று இருக்கிறது. அதாவது, மனிதன் வேதம் என்ற கண் கொண்டு தர்மம் எது? என்று அறிகிறான்.காலத்திற்கு அப்பாற்பட்ட வேதத்தின் சக்தி எல்லையற்றது. வேதத்தின் தன்மை 'இது தான்' என்று எவராலும் அளவிட முடியாது.
या वेदबाह्याः स्मृतयो याश्च काश्च कुदृष्टयः ।
सर्वास्ता निष्फलाः प्रेत्य तमोनिष्ठा हि ताः स्मृताः ॥
- மனு ஸ்ம்ருதி
வேதம் சொல்வதற்கு விரோதமாக இயற்றப்பட்ட நூல்களும், தவறான கோட்பாடுகளும், திறம்பட ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தாலும், அவை அனைத்தையும், அஞானம் என்ற இருளில் இயற்றப்பட்டது என்றே தள்ள வேண்டும்.
उत्पद्यन्ते च्यवन्ते च यान्यतोऽन्यानि कानि चित् ।
तान्यर्वाक्कालिकतया निष्फलान्यनृतानि च ॥
- மனு ஸ்ம்ருதி
வேதத்தை ஆதாரமாக கொள்ளாத எந்த நூலாக இருந்தாலும், வேகமாக தானே அழிந்து போகும். பொய்யை கற்பிக்கும் இதை கற்பதால் நற்பலன் எதுவும் ஏற்பட போவதில்லை.
நான்கு வர்ணத்தை பற்றியும், மூவுலகங்கள் பற்றியும், நான்கு ஆசிரமங்களை பற்றியும் வேதம் சொல்கிறது. நடந்ததும், நடப்பதும், நடக்க போவதை பற்றியும் வேதம் சொல்கிறது.
शब्दः स्पर्शश्च रूपं च रसो गन्धश्च पञ्चमः ।
वेदादेव प्रसूयन्ते प्रसूतिर्गुणकर्मतः ॥
- மனு ஸ்ம்ருதி
சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் (சுவை), கந்தம் (சுகந்தம்) என்னும் 5ம் வேதத்திலிருந்தே தோன்றின. இவைகளின் குணமும் செயல்களும் வேதத்திலேயே விளக்கப்பட்டுள்ளன.
बिभर्ति सर्वभूतानि वेदशास्त्रं सनातनम् ।
तस्मादेतत् परं मन्ये यत्जन्तोरस्य साधनम् ॥
- மனு ஸ்ம்ருதி
காலத்தை கடந்த வேத சாஸ்திரமே சகல பூதங்களையும் (நம்மை) தாங்குகிறது. மேலான நிலையை மனிதன் அடைய வேதமே சாதனமாகும்.
सेनापत्यं च राज्यं च दण्डनेतृत्वमेव च ।
सर्वलोकाधिपत्यं च वेदशास्त्रविदर्हति ॥
- மனு ஸ்ம்ருதி
வேத சாஸ்திரம் முழுவதும் எவன் அறிந்து கொள்கிறானோ, அவனால் பெரும் படையை சேனாபதியாக வழிநடத்த முடியும். ராஜ்யத்தை ஆளும் திறன் இருக்கும். இவ்வளவு ஏன், சகல உலகங்களையும் ஆட்சி செய்யும் தகுதியும் இருக்கும்.
यथा जातबलो वह्निः
दहत्यार्द्रानपि द्रुमान् ।
तथा दहति वेदज्ञः
कर्मजं दोषम् आत्मनः ॥
- மனு ஸ்ம்ருதி
கொழுந்து விட்டு எரியும் அக்னியானது, எப்படி பசுமையான மரங்களையும் எரித்து விடுமோ, அப்படியே வேதம் முழுவதும் கற்று 'அறிந்தவன்' கர்மாவினால் ஏற்படும் தோஷங்களை கூட எரித்து அழித்து விடும் சக்தி கொண்டிருப்பான்.
वेदशास्त्र अर्थ तत्त्वज्ञो यत्र तत्रा आश्रमे वसन् ।
इहैव लोके तिष्ठन् स ब्रह्म भूयाय कल्पते ॥
- மனு ஸ்ம்ருதி
வேத சாஸ்திரத்தின் அர்த்தத்தை உணர்ந்த தத்வ ஞானி, பிரம்மச்சாரியாக இருந்தாலும், க்ருஹஸ்தனாகவே இருந்தாலும், வானப்ரஸ்தனாக இருந்தாலும், உலகில் வாழ்ந்தபடியே ப்ரம்ம ஞானத்தை பெற்று இருப்பான்.
अज्ञेभ्यो ग्रन्थिनः श्रेष्ठा
ग्रन्थिभ्यो धारिणो वराः ।
धारिभ्यो ज्ञानिनः श्रेष्ठा
ज्ञानिभ्यो व्यवसायिनः ॥
- மனு ஸ்ம்ருதி
ஏதோ சிறிது வேத மந்திரங்களை கற்றவர்களை விட, முழுமையாக வேதத்தை கற்றவர்கள் மேலானவர்கள். அதை நன்கு மனதில் பதிய வைத்து கொண்டவர்கள், முழுமையாக கற்றவர்களை விட மேலானவர்கள். அர்த்தம் புரிந்தவர்கள், நன்கு மனதில் பதிய வைத்தவர்களை விட மேலானவர்கள். வேதம் சொன்னபடி வாழ்க்கையில் நடந்து காட்டுபவர்கள், அர்த்தம் புரிந்தவர்களை விட மேலானவர்கள்.
3 சாதனங்கள் உள்ளது. கண்ணால் பார்த்தும், அனுமானத்தாலும், சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றும் ஆராய்வதால் ஒருவன் தன்னை தர்ம வழியில் மேம்படுத்தி கொள்ள முடியும்.
आर्षं धर्मोपदेशं च वेदशास्त्रा अविरोधिना ।
यस् तर्केणा अनु सन्धत्ते स धर्मं वेद नैतरः ॥
- மனு ஸ்ம்ருதி
வேதத்தையும், தர்ம உபதேச ஸ்ம்ருதிகளையும், வேதத்துக்கு விரோதமில்லாத சாஸ்திரத்தையும் (உபநிஷத்), தர்க்க சாஸ்திரத்தையும் நன்கு படிப்பதால், தர்மங்கள் என்னென்ன என்று ஒருவன் புரிந்து கொள்ள முடியும்.
नैःश्रेयसमिदं कर्म यथोदितमशेषतः ।
मानवस्यास्य शास्त्रस्य रहस्यमुपदिश्यते ॥
- மனு ஸ்ம்ருதி
இதுவரை மோக்ஷத்திற்கு சாதனமான விஷயங்கள் சொல்லப்பட்டது. இனி, மனிதர்களுக்கு இக வாழ்வில் தேவையான தர்மத்தை சொல்கிறேன்.
अनाम्नातेषु धर्मेषु कथं स्यादिति चेद् भवेत् ।
यं शिष्टा ब्राह्मणा ब्रूयुः स धर्मः स्यादशङ्कितः ॥
- மனு ஸ்ம்ருதி
படித்த தர்ம சாஸ்திரத்தில் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நான் கூறப்போகும் லக்ஷணங்கள் பொருந்திய ப்ராம்மணர்களிடம் சந்தேகத்தை கேட்க வேண்டும். அதுவே தர்மம் என்று ஏற்று கொள்ள வேண்டும்.
धर्मेणाधिगतो यैस्तु वेदः सपरिबृंहणः ।
ते शिष्टा ब्राह्मणा ज्ञेयाः श्रुतिप्रत्यक्षहेतवः ॥
- மனு ஸ்ம்ருதி
வேதங்கள், வேத-அங்கங்கள் (உபநிஷத்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்ம்ருதிகள்), புராணங்கள், மீமாம்ஸை, தர்க்கம் அனைத்தும் படித்தவரும், அவற்றின் பொருளை முழுமையாக அறிந்தவருமாக இருக்கின்ற ப்ராம்மணரிடம், கேட்டு, அவர் சொல்படி நடக்க வேண்டும்.
दशावरा वा परिषद्यं धर्मं परिकल्पयेत् ।
त्र्य्ऽवरा वाऽपि वृत्तस्था तं धर्मं न विचालयेत् ॥
- மனு ஸ்ம்ருதி
ஆசாரத்தில் இருக்கும் 10 பேர் சேர்ந்திருக்கும் சபையில், அவர்கள் எதை தர்மம் என்று நிர்ணயித்து சொல்கிறார்களோ, அதையே தர்மமாக ஏற்கலாம்.
10 பேர் கிடைக்காத பட்சத்தில் 3 பேர் சேர்ந்து சொன்னாலும், அதையே தர்மமாக ஏற்கலாம்.
त्रैविद्यो हेतुकस्तर्की नैरुक्तो धर्मपाठकः ।
त्रयश्चाश्रमिणः पूर्वे परिषत् स्याद् दशावरा ॥
- மனு ஸ்ம்ருதி
வேதங்களில் 3 சாகை ஓதியவன், தர்க்கம் மீமாம்சை போன்ற சாஸ்திரங்களை படித்தவன், தர்மசாஸ்திரங்கள் (ஸ்ம்ருதி) அறிந்தவன், பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன், சந்நியாசி போன்றவர்கள் சேர்ந்த 10 பேருக்கு குறையாமல் இருக்கும் சபைக்கு "பரிஷத்" என்று பெயர்.
ऋग्वेदविद् यजुर्विद्च सामवेदविदेव च ।
त्र्य्ऽवरा परिषद्ज्ञेया धर्मसंशयनिर्णये ॥
- மனு ஸ்ம்ருதி
ரிக் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், யஜுர் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஸாம வேதத்தை நன்கு அறிந்தவர்கள் சேர்ந்து இருக்கும் சபைக்கும் "பரிஷத்" என்று பெயர். படித்த தர்ம சாஸ்திரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், இவர்களின் பரிக்ஷித்தில் கேட்டு தெளிவு பெறலாம்.
एकोऽपि वेदविद् धर्मं यं व्यवस्येद् द्विजोत्तमः ।
स विज्ञेयः परो धर्मो न अज्ञानामुदितोऽयुतैः ॥
- மனு ஸ்ம்ருதி
வேதத்தை நன்கு அறிந்த ஒருவன் மட்டுமே இருந்தாலும், அந்த த்விஜனிடமே தர்மம் எது என்று கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். வேதமோ, சாஸ்திரமோ அறியாத பல பேர் சேர்ந்து கொண்டு "இது தான் தர்மம்" என்று சொன்னாலும் ஏற்கக்கூடாது.
अव्रतानाममन्त्राणां जातिमात्रोपजीविनाम् ।
सहस्रशः समेतानां परिषत्त्वं न विद्यते ॥
- மனு ஸ்ம்ருதி
பிரம்மச்சர்யம், ஏகாதசி போன்ற விரதங்கள் இல்லாமல், ஜாதியை மட்டுமே வைத்து கொண்டு ஆயிரம் பேர் கூடி தர்ம எது என்று பேசினாலும், அதை "பரிஷத்" என்று ஏற்க முடியாது.
यं वदन्ति तमोभूता मूर्खा धर्ममतद्विदः ।
तत्पापं शतधा भूत्वा तद्वक्तॄननुगच्छति ॥
- மனு ஸ்ம்ருதி
தர்மம் தெரியாமல், வேத அர்த்தம் தெரியாமல், தமோ குணம் கொண்டவர்கள் "இது தான் தர்மம்" என்று சொன்னால், இதை கேட்டவன் கொண்டுள்ள பாபங்கள், 100 மடங்காக சொன்னவனை அடையும்.
एतद् वोऽभिहितं सर्वं निःश्रेयसकरं परम् ।
अस्मादप्रच्युतो विप्रः प्राप्नोति परमां गतिम् ॥
- மனு ஸ்ம்ருதி
இதுவரை சர்வ நிச்சயமாக நன்மையை தரும் விஷயங்களை சொன்னேன். நான் சொன்னபடி வாழ்க்கையை நடத்துபவர்கள் பரமபதத்தை நிச்சயம் அடைவார்கள்.
एवं स भगवान् देवो लोकानां हितकाम्यया ।
धर्मस्य परमं गुह्यं ममेदं सर्वमुक्तवान् ॥
- மனு ஸ்ம்ருதி
உலகத்தாருக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த பரம ரகசியமான தர்மத்தை. பகவான் மனு ரிஷிகளாகிய எங்களுக்கு சொன்னார்.
सर्वमात्मनि सम्पश्येत् सत् च असत् च समाहितः ।
सर्वं ह्यात्मनि सम्पश्यन्नाधर्मे कुरुते मनः ॥
- மனு ஸ்ம்ருதி
ஸத் (இருக்கிறார்), அஸத் (இல்லாதது போல இருக்கிறார்) இரண்டுமாகவும் பரமாத்மா இருக்கிறார். ஒவ்வொருவர் உடம்பிற்குள்ளும் இருக்கிறார் என்ற சத்யத்தை உணர்ந்து, தன் ஆத்ம ஸ்வரூபத்திலேயே இருப்பவன் மனது எப்பொழுதுமே அதர்மத்தில் செல்லாது.
आत्मैव देवताः सर्वाः सर्वमात्मन्यवस्थितम् ।
आत्मा हि जनयत्येषां कर्मयोगं शरीरिणाम् ॥
- மனு ஸ்ம்ருதி
சகல தேவர்களுக்குள்ளும் பரமாத்மாவே இருக்கிறார். உடலெடுத்த அனைவருக்கும் கர்ம பலனை தருவதும் அந்த பரமாத்மாவே
खं संनिवेशयेत् खेषु चेष्टनस्पर्शनेऽनिलम् ।
पक्तिदृष्ट्योः परं तेजः स्नेहेऽपो गां च मूर्तिषु ॥
- மனு ஸ்ம்ருதி
வெளியிலுள்ள ஆகாசத்தை, தன் உடம்பில் இருக்கும் ஆகாசமாக (இடைவெளி) தியானிக்க வேண்டும். வெளியிலுள்ள காற்றை (வாயு), தன் உடம்பில் இருக்கும் காற்றாக தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள அக்னியை, தன் உடம்பில் இருக்கும் அக்னியாக தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள நீரை, தன் உடம்பில் இருக்கும் நீரோடு தியானிக்க வேண்டும். இவ்வாறே, வெளியில் உள்ள மண்ணை (பூமி), தன் மாமிச உடம்பாகவே தியானிக்க வேண்டும்.
வெளியிலுள்ள சந்திரனை, தன் மனதாக தியானிக்க வேண்டும். வெளியிலுள்ள திசைகளை காதுகளாக தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணுவை தன் கால்களாக தியானிக்க வேண்டும். சிவபெருமானை தன்னிடம் உள்ள பலமாக தியானிக்க வேண்டும். அக்னி பகவானே தன்னுடைய நாக்காக தியானிக்க வேண்டும். மித்ரன் என்ற தேவதையே ஆசன பாகமாக தியானிக்க வேண்டும். பிறப்புறுப்பை ப்ரஜாபதியாக தியானிக்க வேண்டும்.
प्रशासितारं सर्वेषामणीयांस मणोरपि ।
रुक्माभं स्वप्नधीगम्यं विद्यात् तं पुरुषं परम् ॥
- மனு ஸ்மிருதி
இப்படி தியானம் செய்து, அனைத்தையும் ஆள்பவரும், அணுவுக்கும் அணுவாக இருப்பவரும், தங்கம் போன்று ப்ரகாசமானவரும், ஞானகண்ணால் மட்டுமே காணக்கூடியவருமான பரமாத்மாவை மெய் அறிவை (ஞானம்) கொண்டு காண வேண்டும்.
एतमेके वदन्त्यग्निं मनुमन्ये प्रजापतिम् ।
इन्द्रमेके परे प्राणमपरे ब्रह्म शाश्वतम् ॥
- மனு ஸ்மிருதி
சிலர், பரமாத்மாவை அக்னி ஸ்வரூபமாக உபாசனை செய்கிறார்கள். சிலர் பரமாத்மாவை பிராஜாபதிகளாக உபாசனை செய்கிறார்கள். சிலர் தேவேந்திரனாக உபாசனை செய்கிறார்கள். சிலர் தன்னுள் இருக்கும் ப்ராணனாக உபாசனை செய்கிறார்கள். சிலர் ப்ரம்ம ஸ்வரூபமாக உபாசனை செய்கிறார்கள்.
एष सर्वाणि भूतानि पञ्चभिर्व्याप्य मूर्तिभिः ।
जन्मवृद्धिक्षयैर्नित्यं संसारयति चक्रवत् ॥
- மனு ஸ்மிருதி
பரமாத்மா, உயிர்களை பஞ்ச பூதங்களோடு சேர்த்து பிறப்பு, வளர்ச்சி, மறைவு என்று சக்கரம் போல சுழற்றி இயங்க வைக்கிறார்.
एवं यः सर्वभूतेषु पश्यत्यात्मानमात्मना ।
स सर्वसमतामेत्य ब्रह्माभ्येति परं पदम् ॥
- மனு ஸ்மிருதி
எவன் எல்லா பூதங்களுக்கும் உள்ளே இருக்கும் ஆத்மாவையே பார்க்கிறானோ, அவனே ப்ரம்ம ஞானத்தை அடைகிறான். அவன் மேலான பரப்ரம்மத்தின் பதமான பரமபதத்தை அடைகிறான்.
இவ்வாறு ஸ்வாயம்னு மனு தர்ம சாஸ்திரமான "மனு ஸ்ம்ருதி"யை ரிஷிகளுக்கு உபதேசம் செய்தார்.