குருக்ஷேத்ரத்துக்கு 'ஸமந்த-பஞ்சகம்' என்ற பெயர் எதனால் கிடைத்தது?
மஹாபாரத போரில், 18 அக்ஷௌணி சேனையில் எத்தனை போர் வீரர்கள் இருந்தனர்?
ரிஷிகள் ஸூதரிடம் "ஸமந்த-பஞ்சகம் என்ற இடத்தை பற்றி சொன்னீர்களே, அதை பற்றி மேலும் சொல்ல வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.
ஸூதர் பேசலானார்...
"அந்தணர்களே! கேளுங்கள், சொல்கிறேன்.
ஸாதுக்களே ! ஸமந்த-பஞ்சகம் பற்றி சொல்கிறேன்.
த்ரேதா யுகமும், துவாபர யுகமும் சந்தித்த சமயத்தில், அஸ்திரங்களில் சிறந்த பரசுராமர் கோபத்தினால் தூண்டப்பட்டு, பூமியில் அரசாளும் க்ஷத்ரியர்களை அடிக்கடி வதம் செய்தார்.
शृणुध्वं मम भो विप्रा ब्रुवतश्च कथाः शुभाः।
समन्त-पञ्चक आख्यं च श्रोतुमर्हथ सत्तमाः।।
त्रेता-द्वापरयोः सन्धौ रामः शस्त्रभृतां वरः।
असकृत्पार्थिवं क्षत्रं जघानामर्षचोदितः।।
- மஹாபாரதம் (வியாசர்)
அக்னியை போன்று இருந்த பரசுராமர், தன் பராக்ரமத்தால் க்ஷத்ரியர்களை அழித்து, ஸமந்த-பஞ்சகம் என்ற இடத்தில 5 ரத்த மடுக்களை (பள்ளம்) அமைத்து, கோபத்தால் அந்த மடுக்களில் தண்ணீர் போல ரத்தத்தையே நிரப்பினார். க்ஷத்ரியர்களின் ரத்தத்தினாலேயே பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தார் என்று கேள்விப்படுகிறோம்.
இப்படி இவர் செய்வதை கண்ட ரிஷிகர் போன்ற பித்ருக்கள் சேர்ந்து, இவர் முன் தோன்றி, "ராமா! ராமா! ப்ருகு குலத்தில் தோன்றியவனே! உன்னுடைய இந்த அதீத சக்தியை கண்டும், உன் பித்ரு பக்தியை கண்டும் ஆனந்தப்படுகிறோம்.
अथर्चीकादयोऽभ्येत्य पितरो रामम् अब्रुवन्।
राम राम महाभाग प्रीताः स्म तव भार्गव।।
- மஹாபாரதம் (வியாசர்)
பெரியசக்தி உள்ளவனே! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். வேண்டிய வரத்தை கேட்டு கொள்" என்றனர்.
பரசுராமர், "பித்ருக்களாகிய நீங்கள் என்னை கண்டு ப்ரீதி அடைந்து அனுகிரகம் செய்ய ஆசைப்பட்டால், நான் இது வரை க்ஷத்ரியர்களை அழித்ததாகிய பாவத்திலிருந்து விடுபட வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்." என்றார்.
यदि मे पितरः प्रीता यद्यनुग्राह्यता मयि।
यच्च रोषाभिभूतेन क्षत्रमुत्सादितं मया।।
अतश्च पापान्मुच्येऽहमेष मे प्रार्थितो वरः।
ह्रदाश्च तीर्थभूता मे भवेयुर्भुवि विश्रुताः।।
- மஹாபாரதம் (வியாசர்)
இதை கேட்ட பித்ருக்கள், "அப்படியே ஆகும். இனி நீ பொறுத்து கொள்ள வேண்டும்" என்று ஆசிர்வதித்தனர்.
இதை கேட்ட பிறகு, பரசுராமர் சாந்தமடைந்தார்.
ரத்தமே ஜலமாக இருந்த அந்த மடுக்கள் இருக்கும் இடமே "ஸமந்த-பஞ்சகம்" என்று பெயர் பெற்றது.
இதே இடத்தில், துவாபர யுகமும், கலி யுகமும் சந்தித்த சமயத்தில், கௌரவ சேனைக்கும், பாண்டவ சேனைக்கும் யுத்தம் உண்டாயிற்று.
अन्तरे चैव संप्राप्ते कलिद्वापरयोरभूत्।
समन्तपञ्चके युद्धं कुरुपाण्डवसेनयोः।।
- மஹாபாரதம் (வியாசர்)
தர்மத்தை நிலைநாட்டிய இந்த க்ஷேத்ரத்தில் யுத்தம் செய்வதற்காக 18 அக்ஷௌணிகள் சேர்ந்தனர்.
तस्मिन्परमधर्मिष्ठे देशे भूदोषवर्जिते।
अष्टादश समाजग्मुरक्षौहिण्यो युयुत्सया।।
- மஹாபாரதம் (வியாசர்)
ப்ராம்மணர்களே ! இந்த தர்ம க்ஷேத்ரத்திலேயே அனைத்து அக்ஷௌணிகளும் அழிந்தனர்.
இவ்வாறு இந்த க்ஷேத்ரம் 'ஸமந்த-பஞ்சகம்' என்று பெயர் பெற்றது." என்று சொன்னார்.
ரிஷிகள் அக்ஷௌணியின் எண்ணிக்கை பற்றி கேட்க, ஸூதர் மேலும் பேசலானார்..
"சேனை விதியில்,
1 தேர் (ரதம்), 1 யானை, 3 குதிரைகள், 5 காலாட்கள் சேர்ந்து - ஒரு பத்தி (1,1,3,5) என்று சொல்லப்படுகிறது.
एको रथो गज: च एको नराः पञ्च पदातयः।
त्रय: च तुरगा: तज्ज्ञैः पत्ति: इति अभिधीयते।।
- மஹாபாரதம் (வியாசர்)
3 பத்தி சேர்ந்து - ஒரு சேனாமுகம் (3,3,9,15) என்று சொல்லப்படுகிறது.
3 சேனாமுகம் சேர்ந்து - ஒரு குல்மம் (9,9,27,45) என்று சொல்லப்படுகிறது.
पत्तिं तु त्रि-गुणाम् एताम् आहुः सेनामुखं बुधाः।
त्रीणि सेनामुखान् एको गुल्म इति अभिधीयते।।
- மஹாபாரதம் (வியாசர்)
3 குல்மம் சேர்ந்து - ஒரு கணம் (27,27,81,135) என்று சொல்லப்படுகிறது.
3 கணம் சேர்ந்து - ஒரு வாஹினி (81,81,243,405) என்று சொல்லப்படுகிறது.
3 வாஹினி சேர்ந்து - ஒரு ப்ருதன் (243,243,729,1215) என்று சொல்லப்படுகிறது.
त्रयो गुल्मा गणो नाम वाहिनी तु गणा: त्रयः।
स्मृता: तिस्र: तु वाहिन्यः पृतनेति विचक्षणैः।।
- மஹாபாரதம் (வியாசர்)
3 ப்ருதன் சேர்ந்து - ஒரு சமு (729,729,2187,3645) என்று சொல்லப்படுகிறது.
3 சமு - ஒரு அனீகினீ (2187,2187,6561,10935) என்று சொல்லப்படுகிறது.
10 அனீகினீ - ஒரு அக்ஷௌணி (21870,21870,65610,109350) என்று சொல்லப்படுகிறது.
चमू: तु पृतन अस्ति स्रस्तिस्र: चमु अस्तु अनीकिनी।
अनीकिनीं दशगुणां प्राहु: अक्षौहिणीं बुधाः।।
- மஹாபாரதம் (வியாசர்)
ஒரு அக்ஷௌணியில், ஏறத்தாழ (ப்ரசங்க்யமாக) 20 ஆயிரத்துக்கும் மேல், ஆயிரத்துக்கும் மேல், நூற்றுக்கும் மேல் ரதங்களும், அதே எண்ணிக்கையில் யானைகளும், லட்சத்துக்கு மேல், ஆயிரத்துக்கும் மேல், காலாட் படையும், 50 ஆயிரத்துக்கும் மேல் முன்னூறுக்கும் மேல் குதிரைப்படைகளும் உள்ளனர்.
இவ்வாறு அக்ஷௌணியின் எண்ணிக்கையை மஹாபாரதத்தில் காண்கிறோம்.
சரியாக,
1 அக்ஷௌணிஎன்பது,
21,870 ரதங்களும்; 21,870 யானைகளும்; 65,610 குதிரைகளும்; 1,09,350 காலாட்படையும் சேர்ந்தது.
அது போல,
18 அக்ஷௌணி (2,18,700) என்பது, 3,93,660 ரதங்களும்; 3,93,660 யானைகளும்; 11,80,980 குதிரைகளும்; 19,68,300 காலாட்படையும் சேர்ந்தது.
(Nearly 39 lakh (39,36,600) mighty army men around the world, have died fighting each other in same place called kurukshetra @ samantha-panchakam in 18 days mahabharata War)
மஹாபாரத போரின் முடிவில், வெறும் 10 பேர் மட்டுமே இதில் உயிரோடு இருந்தனர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸாத்யகி, யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹதேவன், அஸ்வத்தாமன், க்ருதவர்மன், கிருபர்)
யுதிஷ்டிரர் "ஆசாரம் பற்றி அறிய விரும்புகிறேன்" என்று கேட்க, பீஷ்மர் ஆசாரத்தை பற்றி விளக்குகிறார்.
दुराचारा दुर्विचेष्टा दुष्प्रज्ञाः प्रिय-साहसाः।
असन्तस्त्वभिविख्याताः सन्तश्च आचार-लक्षणाः।।
- வியாசர் (மஹாபாரதம்)
அயோக்கியர்கள் 'கெட்ட ஆசாரத்தோடும், கெட்ட நடத்தையோடும், கெட்ட புத்தியோடும், சாகசம் புரிய விருப்பத்தோடும் இருப்பார்கள்' என்பது போல,
சாதுக்கள் 'ஆசாரத்தில் விருப்பத்தோடு இருப்பார்கள்' என்பது ப்ரஸித்தம்.
पुरीषं यदि वा मूत्रं ये न कुवन्ति मानवाः।
राजमार्गे गवां-मध्ये धान्य-मध्ये शिवालये।
अग्न्यगारे तथा तीरे ये न कुर्वन्ति ते शुभाः।।
- வியாசர் (மஹாபாரதம்)
பெரிய சாலையிலும் (ராஜ மார்க்கம்), பசுக்களின் நடுவிலும், தானியத்தின் நடுவிலும், சிவாலயத்திலும், அக்னி சாலையிலும், நதி கரையிலும், மலம்-மூத்திரம் செய்யாத மனிதன் 'நல்லவன்' என்று அறியலாம்.
शौचम् आवश्यकं कृत्वा देवतानां च तर्पणम्।
धर्ममाहु: मनुष्याणामुपस्पृश्य नदीं तरेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
அவசியமாக செய்ய வேண்டிய சுத்தியை செய்து கொண்டு, ஆசமனம் செய்த பிறகு, நதியில் இறங்கி ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு, தேவர்களை குறித்து தர்ப்பணம் செய்வது மனிதர்களுக்கு தர்மமென்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.
எப்பொழுதும் சூரியனை உபாஸிக்க வேண்டும். உதயகாலத்தில் உறங்க கூடாது. காலையிலும், மாலையிலும் காயத்ரீ மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். முதல் சந்தியில் நின்று கொண்டும், மாலை சந்தியில் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்.
न निन्द्याद् अन्नभक्ष्यांश्च स्वादुस्वादु च भक्षयेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
5 அங்கமும் அலம்பிக்கொண்டு, கிழக்கு முகமாக அமைதியாக போஜனம் செய்ய வேண்டும். அன்னத்தை, சாப்பிடும் போது நிந்திக்க கூடாது. மிகவும் ருசியாக உள்ளது என்று பூஜிக்க வேண்டும்.
न आर्द्र-पाणिः समुत्तिष्ठेन्न आर्द्र-पादः स्वपेन्निशि।
देवर्षि-र्नारदः प्राह एतदाचारलक्षणम्।।
- வியாசர் (மஹாபாரதம்)
கை ஈரமாக இருக்கும் போதே எழுந்திருக்க வேண்டும் (கை காய உட்கார்ந்து இருக்க கூடாது). இரவில் கால் அலம்பாமல் படுக்க கூடாது. தேவ-ரிஷியான நாரதர் இவ்விதம் ஆசாரத்தின் லக்ஷணத்தை சொல்கிறார்.
शोचिष्केशमनड्वाहं देव गोष्ठं चतुष्-पथम्।
ब्राह्मणं धार्मिकं च एव नित्यं कुर्यात् प्रदक्षिणम्।।
- வியாசர் (மஹாபாரதம்)
அக்னியையும், காளையையும், தேவதையையும், பசுமடத்தையும், நாற்-சந்தியையும், தர்மத்தில் இருக்கும் ப்ராம்மணனையும் பார்த்தால், ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். அதாவது, அவர்களை சுற்றி வலம் வர வேண்டும்
अतिथीनां च सर्वेषां प्रेष्याणां स्वजनस्य च।
सामात्यं भोजनं भृत्यैः पुरुषस्य प्रशस्यते।।
- வியாசர் (மஹாபாரதம்)
நேரம் சொல்லாமல் நம் வீட்டுக்கு வந்த அதிதியை, தான் சொல்லும் காரியத்தை செய்யும் ஏவலாளியை, உறவினர்களை வேற்றுமை பாராமல் உணவு கொடுப்பது மனிதனுக்கு சிறந்த தர்மமாகும்.
सायंप्रातर्मनुष्याणामशनं वेदनिर्मितम्।
नान्तरा भोजनं दृष्टम् उपवासी तथा भवेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
மனிதர்களுக்கு காலையிலும், மாலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் மத்தியில் உணவு உண்ண வேண்டும் என்று விதி இல்லை. அந்த விதிப்படி உபவாசம் இருப்பவன், பயனடைவான்.
होमकाले तथ्ना जुह्वन् ऋतुकाले तथा व्रजन्।
अनन्यस्त्रीजनः प्राज्ञो ब्रह्मचारी तथा भवेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
ஹோமம் செய்ய வேண்டிய காலங்களில் ஹோமம் செய்து கொண்டும், ருது காலத்தில் மட்டும் தன் மனைவியோடு சேருபவனும், வேறு பெண்களை நெருங்காதவனும், நல்ல அறிவுள்ளவனும், “பிரம்மச்சாரி”என்று கருத வேண்டும். மணமானாலும் ‘ப்ரம்மச்சர்யத்தில் இருக்கிறான்’ என்று பொருள்
अमृतं ब्राह्मण: उच्छिष्टं जनन्या हृदयं कृतम्।
तज्जनाः पर्युपासन्ते सत्यं सन्तः समासते।।
- வியாசர் (மஹாபாரதம்)
தர்மம்-அதர்மம் தெரிந்து வாழ்க்கையை நடத்தும் பிராம்மணன் சாப்பிட்ட பிறகு, சாப்பிடுவதால், அந்த உணவு அம்ருதமாகவும் (ஆயுள் கூட்டுவதாகவும்), இதயத்தில் நல்ல எண்ணத்தையும் உண்டு பண்ணுவதாகவும் அமையும். அந்த உணவை எந்த ஜனங்கள் அன்புடன் ஏற்கிறார்களோ, அந்த ஸாதுக்கள், ஸத்தியமான பிரம்மத்தை அடைகிறார்கள்.
लोष्टमदीं तृणच्छेदी नखखादी तु यो नरः।
नित्य:-उच्छिष्टः संकसुको नेह-आयु: विन्दते महत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
எவன் மண்ணை உதைக்கிறானோ (வீட்டை உடைப்பவன்), புற்களை கிள்ளுகிறானோ, நகத்தை கடிக்கிறானோ, எப்பொழுதும் பிறர் சாப்பிட்டதையே உண்கிறானோ, பேராசை கொண்டவனோ, அவன் நீண்ட ஆயுளை அடைய மாட்டான்.
यजुषा संस्कृतं मांसं निवृत्तो मांस-भक्षणात्।
भक्षयेन्न वृथामांसं पृष्ठमांसं च वर्जयेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், சாஸ்திர விதிப்படி பூஜித்து மாமிசம் உண்ணலாம். அனாவசியமாக விருப்பத்துக்காக சாப்பிட கூடாது. மிச்சப்பட்ட மாமிசத்தை, மாமிசத்தின் பின்-பாகத்தை சாப்பிட கூடாது.
स्वदेशे परदेशे वा अतिर्थि नोपवासयेत्।
काम्यकर्मफलं लब्ध्वा गुरूणाम् उपपादयेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
தன் தேசத்தில் இருந்தாலும், வெளி தேசத்தில் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்திற்கு அதிதியாக வந்தவனை சாப்பிடாமல் வைக்க கூடாது. ஆசையினால் சேர்க்கப்பட்ட பொருளை குருவிடம் கொடுத்து விட வேண்டும்.
गुरूणाम् आसनं देयं कर्तव्यं च अभिवादनम्।
गुरूनभ्यर्च्य युज्येत आयुषा यशसा श्रिया।।
- வியாசர் (மஹாபாரதம்)
குருவுக்கு ஆஸனம் கொடுத்து, அவருக்கு தன் ரிஷி பரம்பரையை பற்றி சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். குருவின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும். பெரியோர்களை பூஜித்ததால், ஆயுளும், புகழும், செல்வமும் கூடும்.
नेक्षेतादित्यमुद्यन्तं न च नग्नां परस्त्रियम्।
मैथुनं सततं धर्म्यं गुह्ये चैव समाचरेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
உதிக்கும் காலத்தில் சூரியனை கண்ணால் பார்க்க கூடாது. வேறு பெண்களையோ, ஆடையில்லாத பெண்ணையோ நோக்க கூடாது. தர்மத்தை மீறாத உடலுறவை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும்.
तीर्थानां हृदयं तीर्थं शुचीनां हृदयं शुचिः।
सर्वम् आर्यकृतं धर्म्यं वालसंस्पर्शनानि च।।
- வியாசர் (மஹாபாரதம்)
மனமே தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம்! சுத்தம் என்றால், மனசுத்தமே சிறந்த சுத்தம். பண்புள்ளவர்கள் செய்யும் அனைத்து காரியமும் தர்மமே. பசுவின் வாலை தொடுவதும் புண்யமே.
दर्शने-दर्शने नित्यं सुख-प्रश्नम् उदाहरेत्।
सायं प्रातश्च विप्राणां प्रदिष्टम् अभिवादनम्।।
- வியாசர் (மஹாபாரதம்)
வேத ப்ராம்மணனை காணும் போதெல்லாம், எப்பொழுதும் நலம் விசாரிக்க வேண்டும். காலையும் மாலையும் வேத ப்ராம்மணனை கண்டு நமஸ்கரிக்க வேண்டும்.
देवगोष्ठे गवां-मध्ये ब्राह्मणानां क्रियापथे।
स्वाध्याये भोजने चैव दक्षिणं पाणिम् उद्धरेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
தேவாலயத்திலும், பசுக்களின் நடுவிலும், ப்ராம்மணர்களின் நடுவிலும், கர்மானுஷ்டம் செய்யும் போதும், படிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலது கை வெளியே இருக்கும் படி (அதாவது பூணூலை இடது தோளில் இருப்பதாக வைத்து கொள்ள வேண்டும்) வைத்து கொள்ள வேண்டும்.
सायं प्रातश्च विप्राणां पूजनं च यथाविधि।
पण्यानां शोभते पण्यं कृषीणामृद्ध्यतां कृषिः।
बहुकारं च सस्यानां वाह्ये वाहो गवां तथा।।
- வியாசர் (மஹாபாரதம்)
காலையிலும், மாலையிலும் வேதத்தை ரக்ஷிக்கும் ப்ராம்மணர்களை முடிந்த வரை பூஜிப்பது, மதிப்புமிக்கதில் மதிப்புள்ளதை போற்றியதற்கு சமமாகும். விவசாயத்தில் சிறந்த கிருஷியை போற்றியதற்கு சமமாகும். அதிகமான தானியங்கள் சேர்ப்பதற்கு சமமாகும்.
संपन्नं भोजने नित्यं पानीये तर्पणं तथा।
सुशृतं पायसे ब्रूयाद्यवाग्वां कृसरे तथा।।
- வியாசர் (மஹாபாரதம்)
எப்பொழுதும், உணவு கொடுப்பவன், கொடுக்கும் போது "ஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். உணவை பெற்று கொள்பவன் "ஸுஸம்பன்னம்" என்று சொல்ல வேண்டும். குடிக்க ஜலம் கொடுப்பவன், கொடுக்கும் போது "தர்ப்பணம்" என்று சொல்லி கொடுக்க வேண்டும். தண்ணீரை பெற்று கொண்டவன் "ஸுதர்ப்பணம்" என்று சொல்ல வேண்டும். பாயசம் (கஞ்சி/அன்னம்) கொடுக்கும் போது, கொடுப்பவன் "ஸ்ருதம்" என்று சொல்ல வேண்டும். அதை பெறுபவன் "ஸுஸ்ருதம்" என்று சொல்லி பெற்று கொள்ள வேண்டும். சாப்பிடுபவனையோ / குளிப்பவனையோ தும்முகிறவனையோ சவரம் செய்பவனையோ பார்த்தால் "ஆயுஷ்யம்" என்று சொல்ல வேண்டும்.
प्रति आदित्यं न मेहेत न पश्येदात्मनः शकृत्।
सुतैः स्त्रिया च शयनं सह भोज्यं च वर्जयेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
சூரியனை பார்த்து மல-மூத்திரம் செய்ய கூடாது. மேலும் அப்போது மல (இட) கையை பார்க்க கூடாது. புத்ரியோடும், பெண்களோடும் சேர்ந்து படுக்கவோ, சாப்பிடவோ கூடாது.
त्वंकारं नामधेयं च ज्येष्ठानां परिवर्जयेत्।
अवराणां समानानाम् उभयं नैव दुष्यति।।
- வியாசர் (மஹாபாரதம்)
நீ என்ற ஒருமையிலோ, பெயரை சொல்லியோ வயதில் பெரியவர்களை கூப்பிட கூடாது. தன்னை விட வயதில் குறைந்தவர்களை, வயதில் சமமானவர்களே கூப்பிடுவது தவறில்லை.
हृदयं पापवृत्तानां पापम् आख्याति वैकृतम्।
ज्ञानपूर्वं विनश्यन्ति गूहमाना महाजने।।
- வியாசர் (மஹாபாரதம்)
பாபங்களை செய்யும் இதயம் கொண்டவனின் முகமே அவனுடைய பாப எண்ணத்தை வெளி காட்டி விடும். செயல்படுத்த முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதிகளை ஜனங்களுக்கு கொடுத்து, பாபங்களை மறைத்து செய்பவன்நாசமடைவான்
ज्ञानपूर्वकृतं पापं छादयन्त्यबहुश्रुताः।
नैनं मनुष्याः पश्यन्ति पश्यन्त्येव दिवौकसः।।
- வியாசர் (மஹாபாரதம்)
விஷய அறிவு இல்லாமல், தெரிந்தே பாபங்களை (தவறுகளையும்) செய்து விட்டு, அதை மறைத்தும் விடுவார்கள். இப்படி இவர்கள் சக மனிதர்களை ஏமாற்றினாலும், செய்த பாபத்தை தேவர்கள் அறிகிறார்கள்.
पापेनापिहितं पापं पापम् एव अनुवर्तते।
धर्मेणापिहितो धर्मो धर्मम् एव अनुवर्तते।
धार्मिकेण कृतो धर्मो धर्मम् एव अनुवर्तते।।
- வியாசர் (மஹாபாரதம்)
பாபத்தை செய்த இந்த பாபிகளை அவர்கள் பாபமே துரத்தி கொண்டு வரும். தர்மத்தை செய்த தர்மாத்மாவை, அவர்கள் செய்த தர்மமே துரத்தி கொண்டு வரும்.
पापं कृतं न स्मरतीह मूढो
विवर्तमानस्य तदेति कर्तुः।
राहुर्यथा चन्द्रमुपैति चापि
तथाऽबुधं पापमुपैति कर्म।।
- வியாசர் (மஹாபாரதம்)
பாபம் செய்வதிலேயே நாட்டம் கொண்ட மூடன் (அசடுகள்), நான் சொன்ன இந்த ஆசாரத்தை, நினைத்து கூட பார்க்காமல் இருக்கிறான். பாபமே செய்பவர்கள், சாஸ்திரத்துக்கு விரோதமாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எப்படி பொலிவு மிகுந்த சந்திரனை ராகு விழுங்குகிறதோ, அது போல புகழ் மங்கி, பொலிவை இழப்பார்கள்.
आशया संचितं द्रव्यं दुःखेनैवोपभुज्यते।
तद्बुधा न प्रशंसन्ति मरणं न प्रतीक्षते।।
- வியாசர் (மஹாபாரதம்)
பேராசையால் பெறப்பட்ட எந்த பொருளும், துக்கத்தையே தரும். அறிவாளி அப்படிப்பட்ட பொருளை கொண்டாடுவதில்லை, அதனால் ஏற்படும் மரணத்தை அவர்கள் ஏற்பதும் இல்லை.
मानसं सर्वभूतानां धर्ममाहु: मनीषिणः।
तस्मात्सर्वेषु भूतेषु मनसा शिवम् आचरेत्।।
- வியாசர் (மஹாபாரதம்)
பாராபட்சம் இல்லாமல் அனைவருக்கும் மனப்பூர்வமாக செய்வதே மனிதனுக்குரிய தர்மம். ஆகையால், எல்லா உயிர்களுக்கும் மனப்பூர்வமாக நல்லதை (மங்களத்தை) செய்ய வேண்டும்.
एक एव चरेद्धर्मं नास्ति धर्मे सहायता।
केवलं विधिमासाद्य सहायः किं करिष्यति।।
- வியாசர் (மஹாபாரதம்)
தர்மத்தை ஒருவனாகவே செய்யலாம். தர்மம் செய்ய துணை அவசியமில்லை. மனதில் தர்ம சிந்தனை இல்லாமல், துணைக்கு ஆள் கிடைத்தும் என்ன பயன் கிடைக்கப்போகிறது?
धर्मो योनि: मनुष्याणां देवानाम् अमृतं दिवि।
प्रेत्यभावे सुखं धर्माच्न्छश्वत्तैरुपभुज्यते।।
- வியாசர் (மஹாபாரதம்)
தர்மத்தில் இருப்பதற்காக தான் மனித-யோனியில் மனிதபிறவி கிடைத்துள்ளது.. அதன் மூலம் தேவர்களை போல அம்ருத நிலையை (அழியா புகழ்) அடையலாம். தர்மத்திலேயே இருப்பதால், மறு பிறவி எடுத்தாலும் அந்த தர்மத்தின் பலன் தொடர்ந்து வந்து க்ஷேமத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது.
இவ்வாறு பீஷ்மர், யுதிஷ்டிரரிடம் "ஆசாரம்" என்றால் என்ன? என்பது பற்றி விளக்கினார்.
யாரிடம் நட்பு வைத்து கொள்ள கூடாது? யாரை நண்பனாக கொள்ள கூடாது?
இப்படி யுதிஷ்டிரர் கேட்க, பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் பீஷ்மர்.
"யுதிஷ்டிரா! யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக ஏற்க கூடாது? என்று உண்மையாக சொல்கிறேன். கேள்.
लुब्धः क्रूर: त्यक्त धर्मा निकृतिः शठ एव च।
क्षुद्रः पापसमाचारः सर्व-शङ्की तथा अलसः।।
- மஹாபாரதம் (வியாசர்)श्रीमन्महाभारत-शान्तिपर्व
1. பேராசை குணத்தோடு இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
2. மஹா கோபக்காரனை நண்பனாக ஏற்க கூடாது.
3. தன் தர்மத்தை விட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.
4. பிறருக்கு ஹிம்ஸை செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
5. ரகசியமாக பிடிக்காததைசெய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
6. முயற்சி இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
7. சோம்பேறி குணமுள்ளவனை நண்பனாக ஏற்க கூடாது.
दीर्घसूत्रो अनृजुः क्रुष्टो गुरु-दार-प्रधर्पकः।
व्यसने यः परित्यागी दुरात्मा निरपत्रपः।।
- மஹாபாரதம் (வியாசர்)श्रीमन्महाभारत-शान्तिपर्व
8. கோணல் புத்திக்காரனை நண்பனாக ஏற்க கூடாது.
9. பிறரால் திட்டப்பட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.
10. தன் குருவின் தாரத்தை அடைய நினைத்தவனை நண்பனாக ஏற்க கூடாது.
11. துன்பம் ஏற்படும் சமயத்தில் விலகி செல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
12. கெட்ட புத்தியுள்ளவனை நண்பனாக ஏற்க கூடாது.
13. வெட்கமே இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
सर्वतः-पापदर्शी च नास्तिको वेदनिन्दकः।
संप्रकीर्ण इन्दियो-लोके यः कालनिरतश्चरेत्।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
14. யாரிடமும் குறை பார்ப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
15. கடவுள் இல்லை என்று சொல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
16. வேத மந்திரங்களை இகழ்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
17. புலன்களுக்கு கட்டுப்பட்டு உலகத்தோடு செல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
18. காமத்தில் பற்று கொண்டு உலகத்தில் அலைபவனை நண்பனாக ஏற்க கூடாது.
असभ्यो लोकविद्विष्टः समये चानवस्थितः।
पिशुनोऽथाकृतप्रज्ञो मत्सरी पापनिश्चयः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
19. பலர் கூடும் சபையில் இருக்க தகுதி இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
20. உலகத்தால் பகைக்கப்பட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.
21. கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் ஏமாற்றியவனை நண்பனாக ஏற்க கூடாது.
22. பிறரை பற்றி கோள் சொல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
23. கல்வி அறிவு (Subject matter expert) இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
24. அடுத்தவன் நன்றாக இருப்பதை கண்டு பொறாமைப்படுபவனை நண்பனாக ஏற்க கூடாது.
25. கெட்ட எண்ணத்தோடு இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
दुःशीलो अथाकृत-आत्मा च नृशंसः कितवस्तथा।
मित्रै:-अपकृति: नित्यम्-अटते-अर्थं धनेप्सया।।
- மஹாபாரதம் (வியாசர்)श्रीमन्महाभारत-शान्तिपर्व
26. கெட்ட இயற்கையோடு (by nature) இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
27. நல்ல மனம் இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
28. ஆலோசிக்காமல், கொடுமையான செயல்கள் செய்ய தயங்காதவனை நண்பனாக ஏற்க கூடாது.
29. வேடதாரியை (கபடம்) நண்பனாக ஏற்க கூடாது.
30. நண்பர்களோடு விரோதம் செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
31. எப்பொழுதும் பொருளை பற்றியே நினைத்து அலைபவனை நண்பனாக ஏற்க கூடாது.
ददत:-च-यथा-शक्ति यो न तुष्यति मन्दधीः।
अधैर्यम् अपि यो युङ्क्ते सदा मित्रं नराधमः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
32. தனக்கு ஒருவன் தன் சக்திக்கு உட்பட்டு உதவி செய்தாலும், அதை கண்டு சந்தோஷமடையாமல் இருக்கும் அல்பனை நண்பனாக ஏற்க கூடாது.
33. எப்பொழுதும் நண்பனுக்கு பயத்தை உண்டு பண்ணுபவனை நண்பனாக ஏற்க கூடாது.
अस्थान-क्रोधनो यश्च अकस्माच्च विरज्यते।
सुहृद: च एव कल्याणानाशु त्यजति किल्बिपी।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
34. காரணமில்லாமல் கோபப்படுபவனை நண்பனாக ஏற்க கூடாது.
35. காரணமில்லாமல் வெறுப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
36. நண்பர்களையும், நல்ல காரியங்களையும் திடீரன்று விலக்குபவனை நண்பனாக ஏற்க கூடாது.
अल्पेऽप्यपकृते मूढे न संस्मरनि यत्कृतम्।
कार्यसेवी-च-मित्रेषु मित्रद्वेषी नराधिप।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
37. அறியாமல் செய்த அல்ப உதவியானாலும், அதை நினைத்து பார்க்காமல் இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
38. தன் காரியம் நடக்க வேண்டுமென்றால், நண்பர்களை கூட்டி கொள்ளும் த்வேஷியை நண்பனாக ஏற்க கூடாது.
शत्रुर्मित्रमुखो यश्च जिह्नप्रेक्षी विलोचनः।
न तुष्यति च कल्याणे यम्त्यजेत्तादृशं नरम्।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
39. நண்பனை போலவே இருக்கும் சத்ருவை நண்பனாக ஏற்க கூடாது.
40. கண்ணை நேருக்கு நேர் பார்க்காமல், கோணல் பார்வையோடு பேசுபவனை நண்பனாக ஏற்க கூடாது.
41. எப்பொழுதும் தனக்கு எதிரான பார்வை கொண்டவனை நண்பனாக ஏற்க கூடாது.
42. நன்றாக இருப்பதை பார்த்து சந்தோஷப்படாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
पानपो द्वेषणः क्रोधी निर्घृणः परुपस्तथा।
परोपतापी मित्रध्रुक् तथा प्राणिवधे रतः।।
कृतघ्नश्चाधमो लोके न सन्धेयः कथंचन।
मित्रद्वेषी ह्यसंधेयः सन्धेयानपि मे शृणु।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
குடிகாரர்களும், மனதில் பகை உணர்ச்சி உள்ளவர்களும், கோபமுள்ளவர்களும், இரக்கமில்லாதவர்களும், கெட்ட புத்தி உள்ளவர்களும், பிறரை துன்பப்படுத்துபவர்களும், நண்பனுக்கு துரோகம் செய்பவர்களும், மற்ற உயிர்களை கொல்பவர்களும், நன்றி கொன்றவர்களும், நண்பனாக கூட இருக்க தகுதி அற்றவர்கள்.
மற்ற நண்பர்களை பகையாக நினைப்பவனை நண்பனாக ஏற்கவே கூடாது.
இனி யாரிடம் ஸ்நேஹம் செய்து கொள்ள வேண்டும்? என்று சொல்கிறேன். கேள்.
कुलीना वाक्य-संपन्ना ज्ञानविज्ञानकोविदाः।
रूपवन्तो गुणोपेता: तथा अलुब्धा जित-श्रमाः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
1. தர்மம் அதர்மம் சொல்லி வளர்க்கப்பட்ட நல்ல குலத்தில் பிறந்தவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
2. இனிமையாக பேச்சு உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
3. அறிவிலும், அந்த அறிவில் மெய் எது என்று அறிந்தும் இருக்கும் சாமர்த்தியசாலியை நண்பனாக ஏற்க வேண்டும்.
4. அங்க குறை இல்லாமல், நல்ல ரூபம் உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
5. நல்ல குணமுள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
6. ஆசை இல்லாதவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
7. தன் சிரமத்தை பாராட்டாது இருப்பவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
सन्मित्राश्च कृतज्ञाश्च सर्वज्ञा लोभवर्जिताः।
माधुर्यगुणसंपन्नाः सत्य-सन्धा जितेन्द्रियाः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
8. நல்ல நண்பரகளே கொண்டிருப்பவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
15. எப்பொழுதும் சிரமம் பார்க்காமல் காரியம் செய்பவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.
16. நல்ல குலத்தில் பிறந்த பிள்ளைகளை, நண்பனாக கொள்ள வேண்டும்.
17. நல்ல குலத்தில் தலையாக இருப்பவரை, நண்பனாக கொள்ள வேண்டும்.
18. எந்த குறையும் சொல்ல முடியாதபடி வாழ்பவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.
19. பிரபலமாக இருப்பவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.
20. அரசர்கள் நண்பனாக கொள்பவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.
यथाशक्ति समाचाराः संप्रतुष्यन्ति हि प्रभो।
नास्थाने क्रोधवन्त: च न च अकस्माद् विरागिणः।।
विरक्ताश्च न दुष्यन्ति मनसा अपि अर्थ कोविदाः।
आत्मानं पीडयित्व अपि सुहृत्कार्यपरायणाः।
विरज्यन्ति न मित्रेभ्यो वासो रक्तमिवाविकम्।।
दोषां च लोभ-मोह आदीन् अर्थेषु युवतीपु च।
न दर्शयन्ति सुहृदो विश्वस्ता बन्धुवत्सलाः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
ப்ரபுவே ! இப்படிப்பட்ட நண்பர்கள், தன் சக்திக்கு உட்பட்ட காரியங்கள் செய்து, சந்தோஷப்படுத்துவார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், காரணமில்லாமல் கோபத்தையும், காரணமில்லாமல் வெறுப்பையும் காட்ட மாட்டார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், ஒருவேளை வெறுப்பு அடைந்தாலும், காரியத்தில் சாமர்த்தியசாலிகளாகவே இருப்பார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், மனத்தால் குற்றம் செய்ய மாட்டார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், தன்னை கஷ்டப்படுத்திக்கொண்டாவது, நண்பனுக்கு உதவி செய்வார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், ஆட்டு முடியில் சிவப்பு வர்ணம் பூசப்பட்ட ஆடை எப்படி நிறம் மாறாமல் இருக்குமோ, அது போல, நிறம் மாறாமல் தன் நண்பனிடம் ஸ்நேஹம் மாறாமல் இருப்பார்கள்.
நம்பிக்கையும், குடும்பத்தில் நம்பிக்கையும் பெற்று இருக்கும் இப்படிப்பட்ட நண்பர்கள், நண்பனின் பொருளில் ஆசையோ, நண்பனின் பெண்ணிடமோ மோகம் அடைய மாட்டார்கள்.
लोष्ट-काञ्चनतुल्यार्थाः सुहृत्सु दृढबुद्धयः।
ये चरन्त्यनभीमाना निसृष्टार्थविभूषणाः।
संगृह्णन्तः परिजनं स्वाम्यर्थपरमाः सदा।।
ईदृशैः पुरुषश्रेष्ठैर्यः सन्धिं कुरुते नृपः।
तस्य विस्तीर्यते राज्यं ज्योत्स्ना ग्रहपतेरिव।।
सत्ववन्तो जितक्रोधा बलवन्तो रणे सदा।
जन्मशीलगुणोपेताः सन्धेयाः पुरुषोत्तमाः।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
மண்ணையும்-பொன்னையும் சமமாக பார்க்கும், நண்பனிடத்தில் உறுதியான புத்தியோடு இருக்கும், நம்பிக்கையை குணமாக கொண்டிருக்கும், செல்வத்திலும்-நகைகளிலும் ஆசையற்று இருக்கும், குடும்பத்தை சேர்க்க முயற்சிக்கும், தன் முதலாளியின் பொருளில்பெரும் மதிப்பு வைத்திருக்கும் உத்தமர்களை எந்த அரசன் நண்பனாக கொள்கிறானோ, அந்த அரசனுடைய அரசாட்சியானது, சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் மேலும் மேலும் பிரகாசிப்பது போல பிரகாசிக்கும். யுத்தத்தில் பலமுள்ளவர்களை, கற்றுக்கொடுக்காமல், பிறப்பிலேயே நல்ல குணத்தோடு இருக்கும் உத்தமர்களை அரசன் நேசித்து தன்னோடு சேர்த்து கொள்ள வேண்டும்.
ये च दोपसमायुक्ता नराः प्रोक्ता मयाऽन।
तेषामप्यधमा राजन्कृतघ्ना मित्रघातकाः।
त्यक्तव्यास्तु दुराचाराः सर्वेषामिति निश्चयः।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
குற்றமில்லாத அரசனே! யாரை நண்பனாக சேர்த்து கொள்ள கூடாது? என்று நான் முன்பு சொன்னதில், குறிப்பாக, நன்றி கொன்றவனை, நட்புக்கு துரோகம் செய்தவனை மிகவும் தாழ்ந்தவன் (அதமன்) என்று தள்ள வேண்டும்.
கெட்ட நடத்தை உள்ளவனை, பொதுவாக யாருமே நிச்சயமாக சேர்த்து கொள்ள கூடாது
இவ்வாறு பீஷ்மர், "யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக கொள்ள கூடாது?" என்று யுதிஷ்டிரருக்கு விளக்கினார்.
தர்மபுத்திரர் பீஷ்மரிடம், "ஒரு அரசன் எவ்வித குணங்கள் கொண்ட மந்திரிகளை தனக்கு வைத்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டார்.
பீஷ்மர் இதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.
"தர்மம் எது, அதர்மம் எது என்று வேதத்தை கொண்டு கற்று அறிந்தவனும், ஸாமர்த்தியசாலியும், ப்ரம்மச்சர்யத்தில் சுத்தமாக இருந்தவனுமான பிராம்மண வர்ணத்தில் இருக்கும் 4 பிராம்மணர்களையும்,
பலசாலியும், ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றவனுமான க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கும் 18 க்ஷத்ரியர்களையும் தேர்ந்தெடுத்து சேர்த்து கொள்ள வேண்டும்,
நிறைந்த பொருள் கொண்ட வைஸ்ய வர்ணத்தில் இருக்கும் 21 வைஸ்யர்களையும் (Businessman/Employer), மரியாதைக்கு பாத்திரமாகவுள்ள, வாழ்க்கையில் எந்த ஸமயத்திலும் பரிசுத்தமாகவே இருக்கும் 3 சூத்திரர்களையும் (Employee),
மற்றவர் சொல்வதை அமைதியாக கேட்பதில் ஆர்வமும், கேட்பதிலும், அறிவதிலும், அதை நடைமுறை படுத்திக்கொள்வதிலும், செய்யக்கூடாததை புத்தியால் விலக்குவதிலும், ஆராய்ச்சியிலும், சாரம் எது என்று அறிந்து கொள்வதிலும்/தத்வ-ஞானம், ஆகிய 8 குணங்களுடன் இருக்கும், புராணங்களை கற்றவரும், 50 வயதாவது ஆனவரும், ஸாமர்த்தியசாலியும், பிறரிடம் உள்ள நல்ல குணத்தை தோஷமாக பார்க்காதவரும்/அஸூயை,
வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் (20 ஸ்ம்ருதிகள்) அறிந்தவரும், அகம்பாவம் இன்றி பணிவு உள்ளவரும், ஸமமாக பார்ப்பவரும், விவாவதம் என்று வரும் போது சக்தியுடன் தன் பக்கத்தை பேச தெரிந்தவரும், பொருளில் ஆசை இல்லாதவரும்,
மிகவும் தவறான 7 காரியங்கள் (வேட்டை ஆடுதல், சூதாட்டம் விளையாடுதல், பெண் மோகம் கொண்டிருத்தல், மது அருந்துதல், பிறரை அடித்தல், கீழ்த்தரமான சொற்களை பேசுதல், பிறர் பொருளை அபகரித்தல்) செய்யாதவருமான ஸூதரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களில் எட்டு பேரை (4 பிராம்மணன், 3 சூத்திரன், 1 சூதன்) மந்திரிகளாக (cabinet minister) வைத்து கொண்டு நடுவில் அரசன் இருந்து கொண்டு ஆலோசனையை தீர்மானிக்க வேண்டும்.
अष्टाभि: च गुणै:-युक्तं सूतं-पौराणिकं तथा।
पञ्चाशद् वर्ष वयसं प्रगल्भम् अनसूयकम्।।
श्रुति-स्मृति समायुक्तं विनीतं सम-दर्शिनम्।
कार्ये विवदम् आनानां शक्तम् अर्थेष्वलोलुपम्।।
वर्जितं च एव व्यसनैः सुघोरैः सप्तभिर्भृ भृशम्।
अष्टानां मन्त्रिणां मध्ये मन्त्रं राजोप-धारयेत्।।
- மஹாபாரதம் (வியாஸர்)
இந்த மந்திரிகளுடன் ஆலோசனை செய்து முடிக்கப்பட்ட தீர்மானத்தை ராஜ்யத்தில் இருக்கும் மற்ற பிரதான அதிகாரிகளிடம் அனுப்பி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அரசனாக நீயும் எப்பொழுதும் பிரஜைகளை பார்த்து கொள்ள வேண்டும்.
ततः संप्रेषयेद् राष्ट्रे राष्ट्रीयाय च दर्शयेत्।
अनेन व्यवहारेण द्रष्टव्यास्ते प्रजाः सदा।।
- மஹாபாரதம் (வியாஸர்)
யாருக்கும் தெரியாமல், எந்த சமயத்திலும் எந்த பொருளையும் ரகசியமாக நீ (அரசன்) எடுத்து கொள்ள கூடாது.
சர்ச்சையுள்ள விஷயங்களில், அதில் சம்பந்தப்பட்ட பொருளை நீ எடுக்க கூடாது. அப்படி எடுத்தால், அரசனுக்கும், அது சம்பந்தப்பட்டவர்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.
न च अपि गूढं द्रव्यं ते ग्राह्यं कार्योपघातकम्।
कार्ये खलु विपन्ने त्वां यो धर्मस्तं च पीडयेत्।।
- மஹாபாரதம் (வியாஸர்)
(இவ்வாறு பொருளை அபகரிப்பதால்) பருந்திடமிருந்து பறவை கூட்டங்கள் விலகுவது போல, உன் ராஜ்ஜியம் உன்னை விட்டு விலகி ஓடும். தர்மத்தை மீறி, முறை தவறி மக்களை பரிபாலிக்கும் அரசனுடைய ஆட்சி, கடலில் வழி தவறி சிதறி போன கப்பல் போல, வழி தவறி அலையும்
विद्रवेच्चैव राष्ट्रं ते श्येनात् पक्षिगणा इव।
परिस्रवेच्च सततं नौर्विशीर्णेव सागरे।।
- மஹாபாரதம் (வியாஸர்)
தர்மத்தை மூலமாக கொண்டு ஆட்சி செய்ய வேண்டிய அரசன், எப்பொழுது அதர்மமாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறானோ, அவன் உள்ளத்தில் பயம் உண்டாகும். இறந்த பிறகு, சொர்க்கமும் கிடைக்காது.
प्रजाः पालयतोऽसम्यग् अधर्मेण इह भूपतेः।
हार्दं भयं संभवति स्वर्गश्चस्य विरुध्यते।।
- மஹாபாரதம் (வியாஸர்)
இப்படிப்பட்ட அரசனை பின் தொடர்ந்து செல்பவர்களும், அரசனோடு அதோகதி ஆவார்கள்.
अथ यो धर्मतः पाति राजाऽमात्योऽथवा आत्मजः।
धर्मासने सन्नियुक्तो धर्ममूले नरर्षभ।।
- மஹாபாரதம் (வியாஸர்)
இவ்வாறு பீஷ்மர் யுதிஷ்டிர மஹாராஜனுக்கு "அரசன் எப்படி மந்திரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்? யார் யாரை தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும்? யாரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்? அரசனுக்கு எதனால் பயம் ஏற்படும்?" என்று அரச தர்மத்தை எடுத்துரைத்தார்.
ஒரு சமயம், கஷ்யபர், புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்.
யாகத்துக்கு தேவையான உதவிகளை தேவர்களும், ரிஷிகளும்,கந்தர்வர்களும் செய்தனர்.
யாகத்துக்கு தேவையான ஸமித்துக்களை சேகரிக்க இந்திரனும், மற்ற தேவர்களும் உதவினர்.
இந்திரன் தன் சக்திக்கு ஏற்றார் போல, மலை அளவுக்கு ஸமித்துக்களை அள்ளி கொண்டு, சிரமமில்லாமல் வந்து கொண்டிருந்தான்
வரும் வழியில், ஆகாரம் இல்லாமல் உடல் மெலிந்து, உடலில் சக்தி இல்லாத நிலையில் வாலகில்ய ரிஷிகளை கண்டான்.
அவர்களை பார்த்து சிரித்து கொண்டே, அவர்களுக்கு மரியாதை செய்யாமல் விரைந்து சென்றான்.
இதை கண்ட அந்த ரிஷிகள், "இந்திரனின் கர்வத்தை அடக்க, அவனுக்கே பயத்தை கொடுக்கும், இந்திரனை காட்டிலும் பலம் வாய்ந்த மற்றொரு இந்திரன் (தலைவன்) உருவாகட்டும்" என்று சபித்து விட்டனர்.
இதை அறிந்த இந்திரன், கஷ்யபரிடம் முறையிட்டு, வழி கேட்டு பிரார்த்தனை செய்தான்.
நிலைமையை சமாளிக்க, கஷ்யபர், வாலகில்ய ரிஷிகளிடம் சென்றார்.
"ப்ரம்மா மூவுலகத்தையும் நிர்வாகம் செய்யட்டும் என்று இந்திர பதவி கொடுத்து இருக்கிறார். உங்களுக்கு இந்திரனிடம் ஏற்பட்ட கோபம் நியாயமே என்றாலும், இன்னொரு இந்திரனை உருவாக்கினால், அது பிரம்மாவுக்கு ஏற்புடையதாக இருக்காதே! ஆதலால் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.
வாலகில்ய ரிஷிகள், "கொடுத்த வாக்கை திரும்ப பெற முடியாதே! நீங்களே இதற்கு மாற்று வழியை சொல்லுங்கள்" என்றனர்.
காஷ்யபர் "அப்படியென்றால், பிறக்க போகும் அந்த மஹாபலசாலி பக்ஷிகளுக்கு இந்திரனாக இருக்கட்டும். நரர்களுக்கு இந்திரனாக இப்பொழுது இருக்கும் இந்திரனே இருக்கட்டும்" என்று சொன்னார்.
இதற்கு சம்மதம் தெரிவித்தனர் ரிஷிகள்.
அப்பொழுது வினதா தனக்கு புத்ரர்கள் வேண்டும் என்று விரதத்தில் இருந்தாள். அவள் கர்ப்பம் தரித்தாள்.
அவளிடம் "உனக்கு 2 புத்ரர்கள் பிறப்பார்கள். இருவருமே மஹா பலசாலிகளாக இருப்பார்கள். இவர்களில் ஒருவன், உலகத்தாரால் பூஜிக்கப்படுபவனாக, நினைத்த ரூபம் எடுத்து கொள்பவனாக, மஹா வீரனாக, அனைத்து பக்ஷிகளுக்கும் இந்திரனாக இருக்க போகிறான்" என்று கஷ்யபர் தெரிவித்தார்.
இந்திரனை பார்த்து, "பிறக்கபோவது சகோதரர்களாக இருக்க போவதால், பயப்பட வேண்டாம்" என்று சொல்லி சமாதானம் செய்து அனுப்பினார்.
அந்த வினதாவுக்கு அருணன் பிறந்தான். அருணன் சூரியனுக்கு சாரதியாக சென்றான்.
பிறகு, கருடன் பிறந்தார். கருடன் பக்ஷி ராஜனாக ஆனார்.
ஒரு சமயம், கருடன் தேவலோகம் சென்றார். கருடனை பார்த்த தேவர்கள் பயந்து நடுங்கினர்.
அமிர்த கலசத்தை "பௌமன்" என்ற தேவன் பாதுகாத்து கொண்டிருந்தான்.
கருடன் இறக்கைகளை அடித்து கொண்டு பறக்க, புழுதி கிளம்பி யார் எதிரில் நிற்கிறார்கள்? என்பதே தெரியாமல் போனது.
உடனே வாயு தேவனை கூப்பிட்டு கலைக்க சொல்லி, பெரும் யுத்தம் செய்தனர் தேவர்கள்.
கடைசியில்,
சாத்யர்களும், கந்தர்வர்களும் - கிழக்கு நோக்கியும்,
வசுக்களும், ருத்ரர்களும் - தெற்கு நோக்கியும்,
ஆதித்யர்கள் - மேற்கு நோக்கியும்,
நாசத்யர்கள் என்ற அஸ்வினீ தேவர்கள் - வடக்கு நோக்கியும், கருடனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஓடினர்.
साध्याः प्राचीं स-गन्धर्वा
वसवो दक्षिणां दिशम् |
प्रजग्मुः सहिता रुद्राः
पतगेन्द्र प्रधर्षिताः |
दिशं प्रतीचीम् आदित्या
नासत्या: उत्तरां दिशम् ||
- வியாச மஹாபாரதம்
கடைசியாக அம்ருத கலசம் இருக்கும் இடத்துக்கு வந்த போது, நான்கு புறமும் தீ வானளாவி இருந்தது. இதற்கு நடுவில் அம்ருத கலசத்தை தேவர்கள் பாதுகாத்து வைத்து இருந்தனர்.
உடனே கருடன் 8100 வாய்களை எடுத்து கொண்டு, பல நதிகளை குடித்து, ஜ்வாலை விட்டு எறிந்து கொண்டிருந்த அக்னியை நனைத்தார்.
உடனே தன் உருவத்தை சிறியதாக ஆக்கி கொண்டு, சமுத்திரத்துக்குள் வேகமாக நதிகள் புகுந்து கொள்வது போல, பிரவேசித்தார்.
அப்பொழுது கூர்மையான கத்தி முனைகள் கொண்ட சக்கரம் சுழல்வதை கண்டார்.
சிறிது நேரம் அதனோடு தானும் சுற்றி பறந்து கொண்டே, சாமர்த்தியமாக அந்த இடைவெளியில் புகுந்து சென்று விட்டார்.
அங்கு, அந்த கலசத்தை காத்து கொண்டு இரண்டு மஹா சர்ப்பங்கள் கண்களில் விஷத்தோடு இருந்தன.
இதை கண்டு சிறிது கலங்கிய கருடன், புழுதியை கிளப்பி, அந்த சர்ப்பங்களின் கண்களை மறைக்க, அந்த சமயத்தில் உடனே பறந்து அந்த இரண்டு சர்ப்பங்களையும் பிடித்து கிழித்து எறிந்தார்.
அம்ருதத்தை தான் எடுத்து கொள்ளாமல், அங்கிருந்த அம்ருத கலசத்தை எடுத்து கொண்டு உயரே பறக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது, வைனதேயர் என்று அழைக்கப்படும் கருடனை, 'அம்ருதத்தில் ஆசையற்ற' கருடனை கண்டு சந்தோஷமடைந்த விஷ்ணு பகவான் அவர் முன் காட்சி கொடுத்தார்.
கருடனை பார்த்து, "உனக்குநான் வரம் கொடுக்கிறேன். கேள்" என்றார்.
உடனே கருடன், "நான் உங்களுக்கு மேல் இருக்க ஆசைப்படுகிறேன். மேலும் அம்ருதம் உண்ணாமலேயே முதுமையும், மரணமும் இல்லாமல் இருக்க வேண்டும்" என்றார்.
"அப்படியே ஆகட்டும்" என்றார் பகவான்.
एवमस्त्विति तं विष्णुरुवाच विनतासुतम्।
प्रतिगृह्य वनौ तौ च गरुडो विष्णुम् अब्रवीत्।।
भवतेपि वरं दद्यां वृणोतु भगवानपि।
तं वव्रे वाहनं विष्णुर्नरुत्मन्तं महाबलम्।।
- வியாச மஹாபாரதம்
உடனே கருடன், "நான் உங்களுக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன். நீங்களும் கேட்க வேண்டும்" என்றார்.
மந்தஹாசம் செய்து கொண்டே பகவான், "நீ எனக்கு வாகனமாக இரு" என்றார்.
இப்படி உடன்படிக்கை ஆன பிறகு, கருடன் விஷ்ணு பகவானுக்கு வாகனமாகவும், பகவானுக்கு மேலே கருட கொடியாகவும் இருந்தார்.
விஷ்ணு பகவானிடம் தான் வந்த காரியத்தை முடித்து விட்டு வருவதாக சொல்லி அனுமதி பெற்று, மீண்டும் அம்ருத கலசத்தோடு கிளம்பினார்.
வழியில், இந்திரன் பறந்து கொண்டிருக்கும் கருடனை நோக்கி வஜ்ராயுதத்தை வீசினான்.
वज्रस्य च करिष्यामि तवैव च शतक्रतो।
एतत् पत्रं त्यजाम् एकं यस्यान्तं नोपलप्स्यसे।।
- வியாச மஹாபாரதம்
வஜ்ராயுதம் பட்டும் கலங்காத கருடன், இந்திரனை பார்த்து, "இந்திரா! இந்த வஜ்ராயுதம் எந்த ரிஷியின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த ரிஷிக்கும், இந்த வஜ்ராயுதத்துக்கும், உனக்கும் மரியாதை செலுத்துவதற்காக, இதோ என்னுடைய ஒரே ஒரு சிறகை விடுகிறேன்" என்று சொல்லி ஒரு சிறகை மட்டும் கீழே போட்டார்.
सुरूपं पत्रमालक्ष्य सुपर्णो अयं भवत्विति।
- வியாச மஹாபாரதம்
அந்த ஒரு சிறகின் அழகை கண்டே சொக்கி போன தேவர்கள் அனைவரும் "இவர் ஸுபரணர்" என்று கருடருக்கு பெயரிட்டு ஜெயகோஷம் செய்தனர்.
இந்திரன் கருடனின் பராக்கிரமத்தை பார்த்து, தன்னோடு தோழமை கொள்ளுமாறு கேட்டு கொண்டான். மேலும் கருடனின் உண்மையான பலம் தான் என்ன? என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டு கருடனிடமே கேட்டான்.
இப்படி சொன்ன தேவேந்திரனை பார்த்து, "தேவனே! புரந்தரனே ! நீ விரும்பியபடி உனக்கும் எனக்கும் ஸ்நேஹம் இருக்கட்டும். என்னுடைய பலம் பெரியது, தாங்க முடியாதது என்றும் அறிந்து கொள்.
தன் பலத்தை அறிந்தவர்கள், தன் பலத்தை குறித்து பெருமையாக பேசிக்கொள்வதில்லை.
தன்னை பற்றி தானே பெருமை சொல்லி கொள்பவன், பிறரால் தூஷணைக்கு உள்ளாகிறான்.
ஆனால், பிறர் கேட்டால், அவர்களுக்கு தன்னை பற்றி சொல்லலாம்.
தானாக சொல்வது கூடாது.
நீ கேட்டதால், உனக்கு என்னை பற்றி சொல்கிறேன்.
மலைகள், காடுகள் கடல்கள் கொண்ட இந்த பூமியை, இதில் இருக்கும் உன்னையும் சேர்த்து, மற்ற உயிரைகளோடு சேர்த்து, ஒரே ஒரு சிறகினால் தூக்கி விடுவேன். இது என்னுடைய பலம் என்று அறிந்து கொள்" என்றார் கருடன்.
இதை கேட்ட தேவேந்திரன், "உம்முடைய பலத்தை ஒப்புக்கொள்கிறேன். எங்களிடம் ஸ்நேஹம் கொள்ளுங்கள். உமக்கு இந்த அம்ருதம் தேவையென்றால் எடுத்து கொள்ளுங்கள். தேவை இல்லையென்றால், எங்களுக்கு திருப்பி தந்து விடுங்கள். இதை மற்றவர்களுக்கு கொடுத்தால், அதன் பலத்தை கொண்டு எங்களை எதிர்ப்பார்கள்" என்றான்.
கருடன், "இதை நான் ஒரு காரணமாக கொண்டு செல்கிறேன். நான் இந்த அம்ருத கலசத்தை ஒரு இடத்தில் வைக்கும் போது, அதை நீங்கள் எடுத்து செல்லுங்கள்" என்றார்
இதை கேட்ட இந்திரன் சந்தோஷமடைந்து, "கருடா ! நீ என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான்.
கருடன், "நான் சர்வ வல்லமை உடையவன் என்றாலும், நீ கேட்பதால் சொல்கிறேன். மிகுந்த வலிமையான சர்ப்பங்கள் எனக்கு உணவாக ஆகட்டும்" என்றார்.
"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, கொடுத்த வரத்தை பற்றி விஷ்ணு பகவானிடம் தெரிவித்து, அவர் சம்மதத்தையும் பெற்றான்.
கருடன் கடைசியாக வினதையிடம் வந்து "அம்மா! தேவலோகத்தில் இருந்து அம்ருதத்தை கொண்டு வந்துள்ளேன். என்ன செய்ய வேண்டும். கட்டளை இடுங்கள்" என்றார்.
தாயான வினதா, "பெரிதும் மகிழ்ந்தேன். நீ மூப்பு இல்லாமல், மரணமில்லாமல் தேவர்களுக்கு அன்பானவனாக இருப்பாய்" என்றாள்
உடனே அங்கிருந்த கத்ருவின் பிள்ளைகளான சர்ப்பங்களை பார்த்து, "இதோ அம்ருதம். இதை இந்த தர்ப்பை பாயில் வைக்கிறேன். ஸ்நானம் செய்து விட்டு, இதை உண்ணுங்கள். நீங்கள் சொன்னபடி அம்ருதத்தை கொண்டு வந்து விட்டேன். ஆதலால் நீங்கள் அமர்ந்து இப்பொழுதே 'என் தாய் உங்கள் தாயாரான கத்ருவுக்கு அடிமை இல்லை' என்று ஆக வேண்டும்" என்றார்.
அந்த சர்ப்பங்கள் "அப்படியே ஆகட்டும்" என்று கருடனின் தாயான வினதாவின் அடிமை விலங்கை விலக்கினார்கள்
இப்படி இவர்கள் சொல்லி விட்டு ஸ்நானம் செய்ய கிளம்ப, உடனே தேவேந்திரன் அங்கு வந்து அம்ருத கலசத்தை எடுத்து கொண்டு மீண்டும் தேவலோகம் சென்று விட்டான்.
ஸ்நானம் செய்து விட்டு, திரும்பி வந்த சர்ப்பங்கள், அம்ருத கலசம் காணாமல் போனதை கண்டன.
सोमस्थानम् इदं चेति दर्भांस्ते लिलिहु: तदा।
ततो द्विधा कृता जिह्वाः सर्पाणां तेन कर्मणा।
अभवंश्च अमृत स्पर्शाद् दर्भास्तेऽथ पवित्रिणः।।
- வியாச மஹாபாரதம்
அம்ருதம் இருந்த இடம் என்பதால், போட்டி போட்டு கொண்டு அந்த தர்ப்பை பாயை நக்கின.
இதனால், பாம்பின் நாக்குகள் இரண்டாக பிளந்தன.
யாராலும் எதிர்க்க முடியாத கருடனை பார்த்து பயந்த சர்ப்பங்கள் ஓடி ஒளிந்தன. எதிர்த்த சர்ப்பங்களை உணவாக உண்டு விட்டார் கருடன்.
பிறகு தன் தாயோடு வசித்து கொண்டு, பக்ஷிகளுக்கு ராஜனாக இருந்து கொண்டு, ப்ரஸித்தியோடு இருந்தார் கருடன்.
இந்த சரித்திரத்தை கேட்பவன், படிப்பவன், கருடனுடைய சங்கீர்த்தனத்தால் நிச்சயம் ஸ்வர்க்கம் அடைவான்.