Followers

Search Here...

Thursday 9 June 2022

யார் கர்த்தா? Secret revealed...

யார் கர்த்தா?

ஸ்ரீகிருஷ்ணர் தியானத்தில் இருந்தார். 

யுதிஷ்டிரர், "யாரை தியானம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?" என்று வினவினார்.


ஸ்ரீகிருஷ்ணர் "பீஷ்மரை தியானித்து கொண்டு இருக்கிறேன். தர்ம அர்த்த காம அறிந்தவர். ராஜ தர்மம் போன்றவற்றை அவரிடம் விரிவாக கேட்க புறப்படுங்கள்" என்றார். 


அப்போது யுதிஷ்டிரர் சொல்கிறார்...

भवां च कर्ता लॊकानां 

यद् व्रवीत्य अरु सूदन |

तथा तद् अनभिध्येयं 

वाक्यं यादव नन्दन ||

- வியாச மஹாபாரதம்

சத்ருக்களை அழிப்பவரே! அனைத்து உலகங்களுக்கும் கர்த்தாவான நீங்கள் சொல்லும்போது, யாதவ நந்தனா! உங்கள் வாக்குக்கு மறுப்பு ஏது?


यत: त्व अनुग्रह कृता 

बुद्धि: ते मयि माधव |

त्वाम् अग्रतः पुरस्कृत्य 

भीष्मं पश्यामहे वयम् ||

- வியாச மஹாபாரதம்

மாதவா! எனக்கு அணுகிரஹம் கிடைக்க உங்களுக்கு சங்கல்பம் இருக்கும் பட்சத்தில், உங்களை முன்னிட்டு கொண்டு, நாங்கள் பீஷ்மரிடம் போகிறோம்.


5000 வருடங்களுக்கு முன் யாதவ குலத்தில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராக யாதவ குலத்தில் அவதரித்தார்.

மதுரா வரும்வரை, 12 வயது வரை, யாதவ சிறுவர்களோடு பிருந்தாவனத்தில் மாடு மேய்த்தார். 


ஸ்ரீ கிருஷ்ணர் மறைவதற்கு முன், அனைத்து யாதவ குடிமக்களையும் துவாரகை விட்டு செல்ல சொன்னார்.

யாதவ மக்கள் நான்கு புறமும் சென்று ஆங்காங்கு பல தேசங்களில் குடிபுகுந்தனர்.

யாதவர்களால், உலகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரின் சரித்திரம் பேசப்பட்டது. 

3000 வருடத்திற்கு பிறகு, யவன தேசமாக இருந்த தேசங்களில் யூதர்கள் என்றும் யஹுதிகள் என்றும் அழைக்கப்படும் குலத்தில், 'ஒரு கடவுள் இருக்கிறார். அவரே கர்த்தா! அவர் ஆடு மேய்த்தார்" என்று சொல்லிக்கொண்டு பாரத தேசம் வந்தனர். 


எப்படி "சிந்து" என்று கூட சொல்ல முடியாமல், ஹிந்து, இந்து என்று உளறி கொட்டினார்களோ!

எப்படி "கொல்கத்தா" என்று சொல்ல முடியாமல், கல்கட்டா என்று உளறி கொட்டினார்களோ!

எப்படி "திருச்சிராப்பள்ளி" என்று சொல்ல முடியாமல், ட்ரிசி என்று உளறி கொட்டினார்களோ!

அது போல,

யவன தேசத்தில், ஹிந்துக்களின் பெயர்கள் உருமாறி, கிருஷ்ணர் பெயர் சிறிது உருமாறி, மாடு ஆடாகி, கதைகள் உருமாறி விட்டன.

இதை அறிவுள்ள பாரத மக்கள் அறிகின்றனர். 

Tuesday 7 June 2022

கவலைகள் தீர வழி என்ன? தெய்வம் நம்மை பார்க்க, என்ன செய்ய வேண்டும்?.. திருமங்கையாழ்வார் சொல்கிறார்... அறிவோம்..

மனசு, வாக்கு, காயம் - நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் இவை.

இந்த மூன்றையும் நமக்கு கொடுத்த எம்பெருமான் நாராயணன்,'இந்த மூன்றினாலும் தன்னை ஆட்படுத்தி கொள்கிறானா?' என்று பார்க்கிறார்.

மனசு:

எப்பொழுதும் தன்னை மனதில் தியானித்து (நினைத்து) கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

வாக்கு:

எப்பொழுதும் தன்னை பற்றியே பேசிக்கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

காயம்:

சரீரத்தால் எப்பொழுதும் தனக்கு தொண்டு செய்து கொண்டே இருக்கிறானா? என்று பார்க்கிறார் பகவான்.

மனசு, காயம், வாக்கு இந்த மூன்றும் ஒழுங்காக தானே நமக்கு இருக்கிறது. 

இவை ஒழுங்காக இருக்குமாறு செய்த தன்னை நன்றியுடன் பார்க்கிறானா என்று எதிர்பார்க்கிறார் பகவான். 

இவை மூன்றும் ஒழுங்காக இல்லாத போது, எத்தனை கஷ்டங்களை ஜனங்கள் அனுபவிக்கிறார்கள்? என்று உலகத்தை பார்த்தாலேயே நமக்கு புரிந்து விடுமே!


காயம்:

கை கால்கள் இழுத்து, முடமாகி படுத்து கிடந்தோமானால், பகவானுக்கும், பாகவதர்களுக்கும் கைங்கர்யம் செய்ய முடியுமா?

நமக்கோ, கை கால்களை நன்றாக தானே பகவான் கொடுத்து இருக்கிறார்!

மனசு:

மனசு பித்து பிடித்து போய் விட்டால், பகவானை பற்றி சொல்ல முடியுமா?, பகவானை பற்றி கேட்கவும் முடியுமா?

நமக்கோ, மனசை நன்றாக தானே பகவான் வைத்து இருக்கிறார்

வாக்கு:

வாக்கு சிலருக்கு குளறிபோய் விடுகிறது. 

சிலர் பிறக்கும் போதே ஊமையாக பிறக்கிறார்கள். 

சிலருக்கு ரத்த கொதிப்பு உண்டாகி திடீரென்று பேச்சு நின்று விடுகிறது. 

வாக்கு போய் விட்டால், பகவந்நாமா சொல்ல முடியுமா?

நமக்கோ, வாக்கையும் நன்றாக தானே பகவான் கொடுத்து இருக்கிறார்.


இந்த மூன்றும் சரியாக இல்லாத போது, எத்தனை துன்பத்தை அனுபவிக்கிறார்கள்? என்று உலகத்தில் தினம் தினம் பார்க்கிறோமே!


வாக்கும், மனசும், காயமும் இன்று வரை நமக்கு ஸ்வாதீனமாக தானே இருக்கிறது? 

இதை கொடுத்தவரிடம் நமக்கு ஒரு நன்றி வேண்டாமா?


சரீரம்:

சரீரம் நன்றாக இருக்கும் போது, கண்ட இடத்துக்கெல்லாம் ஓடி சென்று பார்க்கிறோமே! ஓடி ஓடி சத்சங்கம் வரக்கூடாதா?

வாக்கு:

வாக்கு நன்றாக இருக்கும் போது, ஓயாமல் வம்பு பேசி கொண்டு, பிறரை நிந்தை செய்து கொண்டு, தற்புகழ்ச்சி செய்து கொண்டே இருக்கிறோமே! ஹரி நாமம் சொல்ல கூடாதா?

மனசு:

மனசு நன்றாக இருக்கும் போது, எதை எதையோ நினைக்கிறோமே! எதை எதையோ நினைத்து ஆசைப்படுகிறோமே! பெருமாளையே எப்பொழுதும் நினைத்து கொண்டு இருக்க கூடாதா? அவரை அடைய ஆசை படக்கூடாதா?

ஊமையாக பகவான் நம்மை படைக்கவில்லையே! 

அடிக்கடி உட்காரும் போதும், நடக்கும் போதும், எழுந்திருக்கும் போதும், சாப்பிடும் போதும், துயர் வரும் போதும், துயர் இல்லாத போதும், "நாராயணா" என்று எளிமையான நாமத்தை சொல்லக்கூடாதா?


'இந்த மூன்றையும் பகவானுக்கு ஆட்படுத்துவதே எனது லட்சியம்' என்று இருக்க வேண்டாமா?


உலகத்தில் எப்பொழுது நாம் பிறந்தோமோ! 

உடலால் உலக காரியங்கள் செய்து தான் ஆக வேண்டும், 

மனதால் உலக விஷயங்களை நினைத்து தான் ஆக வேண்டும்,

வாக்கால், உலக விஷயங்களை பேசி தான் ஆக வேண்டும்.


உலக விஷயங்களை தவிர்க்க முடியாது என்பது உண்மையானாலும், அதில் ஒரு கட்டுப்பாடு வைத்து கொள்ள வேண்டாமா?

வாக்கு:

இதை பேசலாம். இதை பேச கூடாது. 

பிறர் மனம் புண்படும்படி பேச வேண்டாமே! 

அடுத்தவர் குறையை பேச வேண்டாமே! 

பொய் பேச வேண்டாமே!

சத்தியத்தையே பேசுவோமே!

அடுத்தவருக்கு நன்மை உண்டாகும் படி பேசுவோமே!

பகவானை பற்றி பேசலாமே!

இப்படி நாம் வாக்கை கட்டுபடுத்தினால், அது தானே, வாக்கால் செய்யப்படும் "தவம்" என்று சொல்லப்படுகிறது.

மனசு:

பிறர் கெடவேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாமே!

உலகத்தில் எல்லோருமே சௌக்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாமே.

மனதால் பகவானை தியானம் செய்வது சிறந்தது. பகவானை மனதால் நினைக்கலாமே! 

இப்படி நாம் மனதை கட்டுபடுத்தினால், அது தானே, மனதால் செய்யப்படும் "தவம்" என்று சொல்லப்படுகிறது.


மனசு, வாக்கு, காயம் இந்த மூன்றையும் பகவான் நம் அனைவருக்கும் கொடுத்து இருக்கிறாரே!

இவையெல்லாம் நமக்கு உபயோகப்படும்படியாக, தாறுமாறாக போகாமல், பகவான் கொடுத்து இருக்கிறாரே! நமக்கு நன்றி உணர்ச்சி வேண்டாமா?

இதை அவருக்கு அர்ப்பணம் செய்வது தானே, நாம் பகவானுக்கு செய்யும் நன்றி


அப்படி பகவானுக்கு அர்ப்பணம் செய்யாமல், வாக்கு, மனசு, காயம் அனைத்தையும் உலக விஷயங்களுக்கே உபயோகம் செய்தால்,"நன்றிகெட்ட இவனை சுமப்பது வீண்" என்று பாரமாக நினைப்பாளே பூமா தேவி தாயார்.


பிரளயகாலத்தில் சரீரம், வாக்கு, மனசு இல்லாமல் இருளில் (தமஸ்) கிடந்த நம்மை,

உலகத்தை படைத்து, தூங்கும் குழந்தையை தாய் எழுப்பி பால் கொடுப்பது போல, நம்மை எழுப்பி, வாக்கு, சரீரம், மனசு கொடுத்தாரே!


சரீரத்தில் கண்ணை கொடுத்து, காதை கொடுத்து, மூக்கு கொடுத்து, நாக்கு கொடுத்து, எழுப்பி விட்டார்.

இப்படி ஒரு உதவி செய்த பிறகும், நன்றி கெட்டு பகவானை பார்க்காமல், இருக்கலாமா? 


நன்றி உடையவன், 

காதினால் பகவானை பற்றி கேட்க வேண்டும்,

வாயால் அவர் நாமத்தை சொல்ல வேண்டும்

மூக்கினால், அவர் மேனியில் பட்ட துளசியை முகர வேண்டும்.

நாக்கினால் அவருக்கு காண்பித்த பிரசாதத்தையே சாப்பிட வேண்டும்.

கைகளாலே அவருக்கு தொண்டு செய்ய வேண்டும்.

கால்களாலே அவர் இருக்கும் திவ்ய தேசம் தேசமாக செல்ல வேண்டும்.

மனதால், அவரையே தியானம் செய்ய வேண்டும்.


பொதுவாக மனசும், வாக்கும், காயம் மூன்றும் நன்றாக இருந்தாலும், நமக்கு பல சங்கடங்கள் கொடுத்து கொண்டே இருக்கும்.

காயம்:

சரீரம் அடிக்கடி நமக்கு தொந்தரவு கொடுத்து கொண்டே இருக்கும்.

பலவிதமான வியாதிகள் வந்து கொண்டே இருக்கும்.

முடியாத நிலை, தள்ளாமை போன்ற சங்கடங்கள் சரீரத்துக்கு வரும்.

மனசு:

சந்தேகம், எதிலும் ஈடுபாடு இல்லாத தன்மை (அஸ்ரத்தை), உற்சாகமின்மை இவையெல்லாம் மனசுக்கு வரும் சங்கடங்கள்.

வாக்கு:

வம்பு பேச துள்ளும். ஆனால் பகவந்நாமம் சொல்ல சொன்னால் தூக்கம் வரும், இவை மனசுக்கு வரும் சங்கடங்கள்.

இந்த மூன்றும் நன்றாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்துவது என்பது நம்மால் ஆகாத காரியம்.


'பகவான் தான் நமக்கு சரீரம் கொடுத்தார், மனசு கொடுத்தார், வாக்கு கொடுத்தார்.

அவரிடம் இந்த மூன்றையும் அர்ப்பணிக்க வேண்டும்' என்று நன்றி உணர்ச்சி நமக்கு இருந்தாலும், 'அர்ப்பணிக்க முடியவில்லையே!' என்று பக்தன் வருத்தப்படுகிறான்.

இப்படி கவலைப்படும் பக்தனின் நிலையை பார்த்த

திருமங்கையாழ்வார், "கட்டுப்படுத்தும் அந்த வேலையை பகவானிடம் கொடு" என்கிறார்.


"எம்பெருமானே! உனக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று தானே இந்த சரீரத்தை பெற்றேன். நீயும் கொடுத்தாய்.

நீ கொடுத்த இந்த சரீரம், இந்த வாக்கு, இந்த மனசு உங்களுக்கு உபயோக பட வேண்டும்.

இது தான் என்னுடைய பிரார்த்தனையும் கூட.

இந்த மூன்றினாலும் தொண்டு செய்ய (தொண்டு எல்லாம்) வேண்டி கொண்டு (பரவி) உங்கள் உத்தரவுக்காக (நின்னை) நிற்கிறேன்.

'என்னை தொழுது கொண்டு, அடி பணிந்து (தொழுது அடி பணியுமாறு) இந்த கைங்கர்யத்தை "செய்" என்று நீங்கள் ஒருமுறை சொல்லி நியமித்து விட்டால், யாருக்கும் கட்டுப்படாத இந்த மூன்றும், கட்டுப்பட்டு உங்களுக்கு வேலை செய்யுமே!' என்கிறார் திருமங்கையாழ்வார்.


வைகுண்டத்திலும் நித்யசூரிகள் உங்களுக்கு கைங்கர்யமே செய்கிறார்கள். 

மோக்ஷம் அடைந்தவர்களே உங்களுக்கு கைங்கர்யம் செய்யும் போது, உலகத்தில் பிறந்துள்ள நாம் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல் இருக்கலாமா?


மனசு, காயம், வாக்கு மூன்றினாலும் நாம் கைங்கர்யம் செய்வதற்காக தான் கோவில் கோவிலாக அரச்சா மூர்த்தியாக பெருமாள் வீற்று இருக்கிறார்.


நம் சார்பாக ஆழ்வார் சொல்கிறார்,

"உலகத்தில் பிறந்தநாளாக, உங்களுக்கே வாக்கு, மனசு, காயத்தால் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற நன்றியோடு தான் இருக்கிறேன்.


இந்த சரீரத்தை கொடுத்த உங்களை தரிசிக்க, அருகில் இருக்கும் கோவிலுக்கு தினமும் செல்வோமே! என்று ஆசைப்படுவேன்.


அங்கு சென்று, கூட்டலாம், கோலம் போடலாம், ஒட்டடை அடிக்கலாம், புற்களை செதுக்கலாம், பூந்தோட்டம் போடலாம் என்று ஆசைப்படுவேன்.


சரி, இப்படி கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு தொண்டு செய்வோமே! என்று நினைத்தால், அப்புறம் குடும்பம் என்னாவது? என்று நினைவு வருகிறது.


கணவனாக இருந்தால், வீட்டில் மனைவிக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

மனைவியாக இருந்தால், வீட்டில் கணவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

பிள்ளையாக இருந்தால், வீட்டில் இருக்கும் அப்பா அம்மாவுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

அப்பா அம்மாவாக இருந்தால், வீட்டில் பிள்ளைகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்கிறது.

இவர்கள் எல்லோருக்கும் தொண்டு செய்த பிறகு, நேரம் கிடைத்தால் தானே, பகவானுக்கும், பாகவதர்களுக்கும் (அடியார்கள்) தொண்டு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.


பகவானை பார்க்க கோவிலுக்கு செல்வோம், தொண்டு செய்வோம் என்று நினைத்தால், இவர்கள் எல்லோரும் வீட்டில் இருந்து கொண்டு என் தொண்டை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்களே!


ஒரு வயசான கிழம், நான் வெந்நீர்போட்டு தருவேனா? என்று காத்து கிடக்கிறது.

மற்றொன்று மனம் பித்து பிடித்து என் தயவை நம்பியே வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

மற்றோன்று, மனம், வாக்கு, சரீரம் மூன்றும் ஒழுங்காக இருந்தும், ஒரு காரியமும் செய்யாமல், நான் செய்து தருவேன் என்று காத்து கொண்டு இருக்கிறது.

இப்படி தானே குடும்பம் இருக்கும். இவர்களுக்கு தேவையான தொண்டை செய்ய தானே வேண்டும். 

ஏகப்பட்ட குடும்ப கவலைகள் வேறு சேர்ந்து விடுகிறது.

இத்தனைக்கும் மத்தியில் 'பகவான் தானே நமக்கு வாக்கு, மனசு, சரீரம் கொடுத்து நன்றாக செயல்படும்படி வைத்து இருக்கிறார்' என்ற நன்றி உணர்ச்சி ஏற்பட்டு, எப்படியோ நேரத்தை ஒதுக்கி ஓடி கோவிலுக்கு வந்து, ஒரு விளக்கு மட்டும் ஏற்றுவேன். கோவிலில் உங்ககளை ஒழுங்காக தரிசித்தேனா? என்று கூட தெரியாது... உடனே திரும்பும் படியாக என் நிலைமை உள்ளதே! என்று பக்தன் தவிக்கிறான்..


மனசை கொடுத்து, சரீரம் கொடுத்து, வாக்கை கொடுத்தும், பகவானுக்கு நன்றி செய்யாமல் இருப்பவர்களை பூமாதேவி "பாரம்" என்று நினைக்கிறாள்.

பகவானுக்கு இந்த மூன்றையும் ஆட்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும், குடும்ப பாரம் சுமக்கும் பக்தனால் முடியவில்லையே! என்று பகவான் பார்க்கிறார்.


"இவனுக்கு சம்சாரத்தில் எத்தனை பொறுப்பு, சங்கடங்கள் உள்ளது. எத்தனை சரீர சங்கடங்கள், மன சங்கடங்கள்.

இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில், எப்படியோ தப்பித்து, என் கோவிலுக்கு வந்து, ஒரு நிமிடம் வந்து நின்று விட்டானே!" என்று பெருமாள், நம்மை பார்த்து விடுவாராம் (கண்டு).


இருக்கும் குடும்ப வேலைகளில், கோவிலுக்கு வந்து இவன் ஒரு நிமிடம் பெருமாள் முன் நின்றானேவொழிய, இவன் பெருமாளை ஒழுங்காக பார்க்கவில்லையாம். 

ஆனால், பெருமாள் இந்த பக்தனை பார்த்து (கண்டு) விடுவாராம்.


"இத்தனை கஷ்டத்திலும், தவறாமல் எனக்கு ஒரு தீபம் ஏற்ற நேரம் ஒதுக்கி வருகிறானே! 

இவனுக்கு இருக்கும் கஷ்டங்களை, குடும்ப சூழ்நிலையை சரி செய்து கொடுத்தால், இன்னும் உற்சாகமாக நமக்கு கைங்கர்யம் செய்ய காலையும் வருவான், மாலையும் வருவான். என்னையே சுற்றிக்கொண்டு இருப்பானே!" என்று எம்பெருமான் நினைப்பாராம்.


"இவனுடைய 'யோக க்ஷேமத்தை' நாம் பார்த்து கொண்டால், இவன் 'அனன்யா சிந்தையோ மாம்' என்றபடி நிம்மதியாக எனக்கு தொண்டுசெய்து கொண்டிருப்பானே!" என்று எம்பெருமான் நினைப்பாராம்.


"பெருமாள் நம்மை பார்த்து விட்டால், பக்தனுக்கு இருந்த கவலைகள் எல்லாம் தானாக விலகுமே. 

'நான் பார்த்து கொள்கிறேன்.. நீ கோவிலுக்கு போய் வா' என்று சொல்லும்படியாக அனுகூலம் செய்து விடுவாரே.

'உடல் சரியில்லை' என்று படுத்து கிடந்தவர்கள், 'இப்பொழுது பரவாயில்லை' என்று சொல்லி அனுகூலமாக ஆகி விடுவார்களே!

குடும்ப கஷ்டங்கள் தானாக தொலையுமே! (தான் கவலை தீர்ப்பான்)"

என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.


நம் குடும்ப, மன கஷ்டங்கள் தீர, நன்றி உணர்ச்சியை மட்டுமே, எம்பெருமான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.


"வாக்கு, மனம், காயம் இதை கொடுத்த எம்பெருமானுக்கு, இதை ஆட்படுத்த ஆசையும், நன்றி உணர்ச்சியுமே நமக்கு இருக்க வேண்டும்" என்று குருநாதரை பிரார்த்திப்போம்.

தொண்டெல்லாம் பரவி நின்னை தொழுது அடி பணியுமாறு

'கண்டு' தான் கவலை தீர்ப்பான் 

- திருமங்கையாழ்separatorவார்



Thursday 2 June 2022

ஏன் காது குத்துகிறோம்? பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை ஏன் தொடுகிறோம்? தெரிந்து கொள்வோம்...

ஏன் காது குத்துகிறோம்?

ஓம் என்ற மந்திரம் அனைத்துக்கும் மூல (பீஜ) மந்திரம்.

ஓம் என்ற மந்திரத்துக்குள், காயத்ரீ மந்திரம் அடக்கம்.

காயத்ரீ மந்திரத்துக்குள் நான்கு வேதமும் அடக்கம்.


விநாயகர் திருமுகத்தை பார்த்தாலேயே ஓங்காரம் போல தெரியும் 

நாராயணன் வைத்து இருக்கும் பாஞ்சசன்யமும் (சங்கு) ஓங்காரம் போல இருக்கும்.

அது மட்டுமல்ல,

நம் காதை பாருங்கள்..  அதுவும் ஓங்காரம் போல இருக்கும்.


அஉம என்ற 3 அக்ஷரங்கள் சேரும் போது, ஓம் என்ற பிரணவம் பிறக்கிறது.

என்ற அக்ஷரம், ம் என்று புள்ளியோடு முடிப்பதால், ஓம் என்று சொல்கிறோம்.


அந்த புள்ளியை உணர்த்துவதற்காக, பிரணவ வடிவத்தில் இருக்கும் நமது காதில் ஒரு புள்ளியாக காது குத்துகிறோம்.


நம் காதே ஓம்காரம் என்று காட்டுகிறது சனாதன தர்மம்.

ஆதலால், 

ஓங்காரத்திலேயே அனைத்து மந்திரங்களும் அடங்கி இருப்பதால், வலது காதில் உபதேசம் செய்வார்கள்.

வலது காதில் உபதேசம் செய்வதற்கு காரணம்.. முருகன்.

முருகப்பெருமான் சிவபெருமான் வலது காதில் பிரணவத்தை சொன்னார் என்பது பிரஸித்தி.

கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் சொல்கிறார். 

அது போல, 

பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை ஏன் தொடுகிறோம்? 

வலது காதை தொட்டால் கங்கையை தொட்டதாக ஐதீகம்.


த்ரிவிக்ரம அவதாரம் நடந்த சமயத்தில், பெருமாள் ப்ரம்ம லோகம் வரை தூக்கி அளந்து விட்டார். 

அப்பொழுது பிரம்மா கங்கையை கொண்டு பாத பூஜை செய்தார். 

கங்கையும் பெருமாள் பாதம் பட்ட ஆனந்தத்தில் சத்ய லோகத்திலிருந்து, கீழ் லோகங்களான தப லோகம், பிறகு ஜன லோகம், பிறகு மகர லோகம் பிறகு சுவர்க்க லோகம் வரை வந்தாள்.

அதற்கு பிறகு இருக்கும் பூலோகம் வர பிடிக்காமல் அங்கேயே தங்கி விட்டாள்.

"பாபிகள் வந்து ஸ்நானம் செய்வார்களே!" என்று அருவெறுத்தாள்.

பரமாத்மா நாராயணன், பகீரதன் வம்சத்தில், ராமனாக அவதரித்தார்.

பகீரதன் கடும் தவம் செய்து தனது பித்ருக்கள் கரையேற கங்கையை வரவழைத்தார். 

"ஹரி நாமத்தை சொல்லி கொண்டே பாகவதர்கள் ஸ்நானம் செய்வார்களே, அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டாமா?" என்று கேட்டதும், உற்சாகமாக மஹா வேகத்தோடு பூலோகத்தில் விழுந்தாள். 

சிவபெருமான் அவளை தன் தலையில் விழச்செய்து, தன் கேசத்தால் வேகத்தை கட்டுப்படுத்தி, ஒரு கேசத்தை மட்டும் விலக்க, அதன் வழியாக துள்ளி குதித்து பூலோகத்தில் ஓடினாள். அப்பொழுது அலகநந்தா என்று பெயர் பெற்றாள்.

ஒரு சிறுமி போல, பகீரதன் மடியில் அமர, கங்கை 'ஊர்வசி' என்ற பெயரும் பெற்றாள்.

அப்பொழுது, ஜன்ஹு என்ற முனிவரின் ஆஸ்ரமத்தை கவனிக்காமல், படுவேகமாக ஓடி வந்தாள்.

கங்கை தன் ஆசிரமத்தை அழித்து விடுவாள் போல இருக்கிறதே என்று நினைத்த ஜன்ஹு, தன் தபோ பலத்தால், வந்த கங்கையை குடித்து விட்டார்.

நடந்த விபரீதத்தை பார்த்த பகீரதன், கங்கை வந்த காரணத்தை கூறி பிரார்த்திக்க, அந்த கங்கையை தன் வலது காது வழியாக விட்டு விட்டார்.

அப்பொழுது கங்கைக்கு "ஜான்ஹவி" என்ற பெயர் ஏற்பட்டது.

கங்கையில் நீராடினால் மட்டும் தான் நாம்  சுத்தமாவோம் என்றில்லை. பெருமாளின் பாதத்தை தொட்டு, சிவபெருமான் தலையிலிருந்து ஓடி வரும் கங்கையை நினைத்தால் கூட நாம் சுத்தமாகி விடுவோம். 

ஜன்ஹு மகரிஷியின் வலது காதிலிருந்து வந்த புனிதமான கங்கையை நினைத்து கொண்டு, நாமும் பிராணாயாமம் செய்த பிறகு, வலது காதை தொடுகிறோம்.

இப்படி ஓடி வந்த கங்கை, பகீரதன் பின்னால் நல்ல பெண்ணாக அமைதியாக வந்தாள். அப்பொழுது அவளுக்கு "பாகீரதி" என்று பெயர் உண்டாயிற்று.

அந்த கங்கையில் தன் பித்ருக்களுக்கு காரியங்கள் செய்து, புண்ணியமான லோகங்கள் கிடைக்க செய்தார் பகீரதன்.



Saturday 28 May 2022

துக்கம் உண்டாவதற்கு காரணம் என்ன? மரணமும், முதுமையும் நமக்கு என்ன சொல்கிறது? அறிவோம் மஹாபாரதம்

"யுதிஷ்டிரா! மரணத்தை பற்றியும், முதுமை பற்றியும் ஜனகருக்கு, அஸ்மர் என்ற பிராம்மணர் ஒரு சமயம் சொன்னதை, இப்பொழுது உனக்கு சொல்கிறேன்" என்று வியாசர் ஆரம்பித்தார்.          

जनक उवाच

आगमे यदि वाऽपाये 

ज्ञातीनां द्रविणस्य च |

नरेण प्रतिपत्तव्यं 

कल्याणं कथमिच्छता || 

- வியாசர் மஹாபாரதம்

"சொந்தங்கள், செல்வங்கள் நம்மிடம் சேரும் போதும், சுகமாக இருக்கிறது. ஒருநாள் சொந்தங்களை இழக்கும் போது, சேர்த்த செல்வங்களை இழக்கும் போது, துக்கம் பீடிக்கிறது. சுகத்தையே விரும்பும் மனிதன் இந்த இரண்டு நிலையையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?" என்று ஜனகர் கேட்டார். 

अश्म उवाच  (அஸ்மர் பேசலானார்)

उत्पन्नमिममात्मानं

नरस्यानन्तरं ततः |

तानितान्यनुवर्तन्ते 

दुःखानि च सुखानि च ||

- வியாசர் மஹாபாரதம்

ஜனக ராஜன்! எப்பொழுது இந்த ஆத்மா சரீரம் பெற்றதோ, அன்றிலிருந்தே பல துன்பங்கள், பல இன்பங்கள் உண்டாகி விடுகிறது.

तेषामन्यतरापत्तौ 

यद्यदेवोपसेवते |

तदस्य चेतनामाशु 

हरत्यभ्रमिवानिलः ||

- வியாசர் மஹாபாரதம்

எப்படி காற்று மேகத்தை இழுத்துக்கொண்டு செல்லுமோ, அதுபோல, மனம் எதை (சுகம்/துக்கம்) அதிகம் பற்றிக்கொள்கிறதோ, அதை  புத்தியும் இழுத்துக்கொண்டு சென்று விடும். 

मानसानां पुनर्योनि

दुःखानां चित्तविभ्रमः |

अनिष्टोपनिपातो वा 

तृतीयं नोपपद्यते ||

- வியாசர் மஹாபாரதம்

மனதில் துக்கம் ஏற்பட இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.

ஒன்று, மனதில் ஏற்படும் எண்ணங்கள்.

இரண்டு, இருக்கும் துன்பத்தை மேலும் மேலும் தானே வளர்த்து கொள்வது.

இதை தவிர மூன்றாவது காரணம் ஏதுமில்லை.

एवमेतानि दुःखानि

तानि तानीह मानवम् |

विविधान्युपवर्तन्ते 

तथा संस्पर्शजान्यपि ||

- வியாசர் மஹாபாரதம்

உலக விஷயங்களில் அதிக ஓட்டுதல் உடைய மனிதனுக்கு மனம் கட்டுப்படாது. ஆதலால், அவன் மனதே அவனை  இது போன்ற துக்கங்களில் விழ செய்கிறது.

जरामृत्यू हि भूतानां 

खादितारौ वृकाविव |

बलिनां दुर्बलानां च 

ह्रस्वानां महतामपि ||

- வியாசர் மஹாபாரதம்

பலமானவனோ, பலமில்லாதவனோ, உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, யாரையும் பாரபட்சம் பார்க்காமல், உலகில் உள்ள அனைவரையும், இரண்டு ஓநாய் (செந்நாய்) போல முதுமையும், மரணமும் விழுங்கி விடுகிறது.

न कश्चिज्जात्वतिक्रामेज्

जरामृत्यू हि मानवः |

अपि सागरपर्यन्तां 

विजित्येमां वसुंधराम् ||

- வியாசர் மஹாபாரதம்

கடல் சூழ்ந்த இந்த உலகையே ஒருவன் ஜெயித்து ஆண்டாளும், முதுமையையும், மரணத்தையும் ஒருபோதும் ஜெயிக்க முடியாது.

सुखं वा यदि वा दुःखं 

भूतानां पर्युपस्थितम् |

प्राप्तव्यमवशैः सर्वं 

परिहारो न विद्यते ||

- வியாசர் மஹாபாரதம்

அரசே! இந்த சரீரத்தோடு சேர்ந்து வந்தது சுகமும், துக்கமும். ஆதலால், சுகம் வருவதையும், துக்கம் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. அவ்வப்போது வரும் சுகத்தையும், துக்கத்தையும் அந்த சமயத்தில் அனுபவிக்க வேண்டுமே அன்றி, விலக்க முடியாது.

पूर्वे वयसि मध्ये वा

ऽप्युत्तरे वा नराधिप |

अवर्जनीयास्तेऽर्था वै 

काङ्क्षिता ये ततोऽन्यथा ||

- வியாசர் மஹாபாரதம்

ராஜன்! மனிதனுக்கு இளமையிலோ, நடுத்தர வயதிலோ, முதுமையிலோ எந்த சமயம் வேண்டுமானாலும் துக்கம் ஸம்பவிக்கலாம்.  இதை தடுக்கவே முடியாது. துக்கம் மட்டுமல்ல, சுகமும் அப்படித்தான்.

अप्रियैः सह संयोगो 

विप्रयोगश्च सुप्रियैः |

अर्थानर्थौ सुखं दुःखं 

विधानमनुवर्तते ||

- வியாசர் மஹாபாரதம்

நாம் ஆசைப்பட்டது நடக்காமல் போவதும், ஆசைப்படாதது கண் முன்னே நடப்பதும், நல்லதும், கெட்டதும், அனுகிரஹமும், சாபமும்  எல்லாம் அதிர்ஷ்ட விஷயம் (முன் ஜென்மங்களில் செய்த செயலுக்கு கிடைத்தவை) என்று புரிந்து, ஒரு வெளி மனிதனை போல பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.

प्रादुर्भावश्च भूतानां 

देहत्यागस्तथैव च |

प्राप्तिव्यायामयोगश्च 

सर्वमेतत्प्रतिष्ठितम् ||

- வியாசர் மஹாபாரதம்

அந்த அதிர்ஷ்ட விஷயத்தின் (முன் செய்த செயல் (கர்மா)) காரணமாகவே, ஒருவனுக்கு பிறப்பு ஏற்படுகிறது, மரணம் ஏற்படுகிறது, பல விஷயங்களை அடைய வாய்ப்பு கிடைக்கிறது, பல வித முயற்சிகளில் ஈடுபட வைக்கிறது.

गन्धवर्णरसस्पर्शा 

निवर्तन्ते स्वभावतः |

तथैव सुखदुःखानि 

विधानमनुवर्तते ||

- வியாசர் மஹாபாரதம்

வாசனை, வண்ணம், சுவை, தொடு உணர்ச்சி. இவையெல்லாம், அவ்வப்போது இயற்கையாக வருவது போல, அந்தந்த சமயத்தில் சுகமும், துக்கமும், அதிர்ஷ்ட விஷயத்தை (முன் செய்த செயல் (கர்மா)) பொறுத்து வரும்.

आसनं शयनं यानमुत्थानं पानभोजनम् |

नियतं सर्वभूतानां 

कालेनैव भवत्युत ||

- வியாசர் மஹாபாரதம்

காலமே இந்த உலகில் உள்ள அனைவருக்கும் சில காலம்  உட்காரவும், படுக்கவும், நடக்கவும், எழுந்திரிக்கவும், குடிக்கவும், சாப்பிடவும் அனுமதிக்கிறது,

वैद्याश्चाप्यातुराः सन्ति 

बलवन्तश्च दुर्बलाः |

स्त्रीमन्तश्चापरे षण्ढा 

विचित्रः कालपर्ययः ||

- வியாசர் மஹாபாரதம்

வைத்தியனே நோய்வாய்ப்படுவதை பார்க்கும் போது, பெரிய பலசாலி பலமிழந்து போகும் போது, ஒரு ஆண் பிள்ளை, நபும்ஸகனாக (அலி) ஆகி விடும் போது, காலத்தின் வலிமை புரிகிறது.

कुले जन्म तथा

वीर्यमारोग्यं रूपमेव च |

सौभाग्यमुपभोगश्च 

भवितव्येन लभ्यते ||

- வியாசர் மஹாபாரதம்

நல்ல குடும்பத்தில் பிறப்பதும், நோய் இல்லாமல் வாழ்வதும், அழகும், வீரியமும், நல்ல உடல் அமைப்பும், சுகமான வாழ்க்கையும் அவனவன் அதிர்ஷடத்தை (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) கொண்டே நடக்கும்.

सन्ति पुत्राः सुबहवो 

दरिद्राणामनिच्छताम् |

नास्ति पुत्रः समृद्धानां 

विचित्रं विधिचेष्टितम् ||

- வியாசர் மஹாபாரதம்

தரித்திரனுக்கு விருப்பமில்லாவிட்டாலும் பல பிள்ளைகள் பிறந்து விடுகிறது. ஏராளமான சொத்து வைத்து இருப்பவனுக்கு குழந்தையே பிறக்காமல் இருக்கிறது. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது. 

व्याधिरग्निर्जलं शस्त्रं 

बुभुक्षाश्चापदो विषम |

ज्वरश्च मरणं 

जन्तोरुच्चाच्च पतनं तथा ||

- வியாசர் மஹாபாரதம்

நோயாலும், அக்னியாலும், நீராலும், ஆயுதத்தாலும், பசியாலும், விஷத்தாலும், காய்ச்சலாலும், மேலிருந்து விழுந்தும், பல வித மரணம் ஏற்படுகிறது.

யாருக்கு எந்த அபாய வழியை, காலம் வகுத்துள்ளதோ அதன் வழியில் தான் அவரவர்கள் மரணம் அடைய போகிறார்கள்.

निर्याणे यस्य यद्दिष्टं तेन गच्छति सेतुना |

दृश्यते नाप्यतिक्रामन्न निष्क्रान्तोऽथवा पुनः |

दृश्यते चाप्यतिक्रामन्न निग्राह्योऽथवा पुनः ||

- வியாசர் மஹாபாரதம்

காலத்தை தாண்டி எவனும் வாழ்ந்ததில்லை. காலத்தால் அகப்படாதவனும் இல்லை. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது.

दृश्यते हि युवैवेह विनश्यन्वसुमान्नरः |

दरिद्रश्च परिक्लिष्टः शतवर्षो जरान्वितः ||

- வியாசர் மஹாபாரதம்

பெரும் சொத்துக்கு சொந்தக்காரன், ஆனால் இளமையிலேயே மரணமடைந்து விடுகிறான்.

மஹா ஏழை. ஒன்றுமே இல்லாதவன். ஆனால் 100 வயது காலம் வாழ்கிறான. அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது. 

अकिञ्चनाश्च दृश्यन्ते पुरुषाश्चिरजीविनः |

समृद्धे च कुले जाता विनश्यन्ति पतङ्गवत् ||

- வியாசர் மஹாபாரதம்

கையில் ஒரு காசு இல்லாத வாழ்க்கை. ஆனால் சிரஞ்சீவியாக நெடுநாள் வாழ்கிறான்.

பெரும் சொத்துடன் , சிறந்த குலத்தில், சிறந்த ஜாதகத்தோடு பிறக்கிறான். விட்டிற்பூச்சி போல சிறிது காலத்தில் மரணிக்கிறான். அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது. 

प्रायेण श्रीमतां लोके 

भोक्तुं शक्तिर्न विद्यते |

दरिद्राणां तु भूयिष्ठं 

काष्ठमश्मा हि जीर्यते ||

- வியாசர் மஹாபாரதம்

பெரும்பாலான செல்வந்தர்களுக்கு, எதுவும் ஜீரணம் ஆகாமல், சாப்பிட தகுந்த உணவையும் உண்ண முடிவதில்லை.

ஏழைக்கோ, மரக்கட்டையையோ, கல்லையோ உண்டால் கூட ஜீரணித்து விடுகிறது.  அதிர்ஷ்டத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) செயல் அற்புதமானது. 

अहमेतत्करोमीति

मन्यते कालनोदितः |

यद्यदिष्टमसंतोषाहुरात्मा पापमाचरेत् ||

- வியாசர் மஹாபாரதம்

செய்யக்கூடாத காரியத்தை, செய்யக்கூடிய காரணமாக நினைத்து, செய்து முடித்து, "நான் தான் இதை செய்கிறேன்" என்று கர்வத்தோடு பேசுகிறான். உண்மையில் காலம் தான் ((முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா))) இவனை செய்ய வைத்து, அழிக்கிறது.

मृगयाक्षाः स्त्रियः पानं 

प्रसङ्गा निन्दिता बुधैः |

दृश्यन्ते पुरुषाश्चात्र 

संप्रयुक्ता बहुश्रुताः ||

- வியாசர் மஹாபாரதம்

வேட்டையாடியும், சூதாடியும், பெண் ஆசையாலும், குடியாலும், நிந்தனை செய்தும்,  காலத்தின் (முன் ஜென்மங்களில் செய்த செயல் (கர்மா)) பிடியில், தர்மம் தெரிந்தவர்கள் கூட சில சமயம் அகப்பட்டு விடுகிறார்கள்.

इति कालेन सर्वार्थानीप्सितानीप्सितानिह |

स्पृशन्ति सर्वभूतानि निमित्तं नोपलभ्यते ||

- வியாசர் மஹாபாரதம்

இதையெல்லாம் கவனிக்கும் போது, உலகில் அனைவருக்கும் கிடைக்கும் சுகமும், துக்கமும், காலத்தால் தான் ஏற்படுகிறது என்று புலப்படுகிறது. வேறு காரணம் காணப்படவில்லை.

वायुमाकाशमग्निं च 

चन्द्रादित्यावहः क्षपे |

ज्योतींषि सरितः शैलान्कः 

करोति बिभतिं च ||

- வியாசர் மஹாபாரதம்

காற்று, ஆகாசம், அக்னி, சந்திரன், சூரியன், பகல், இரவு, நக்ஷத்திரங்கள், ஆறுகள், மலைகள் இவையனைத்தையும் யார் படைத்தானோ, அவனே அனைத்தையும் நடத்துகிறான்.

शीतमुष्णं तथा वर्षं 

कालेन परिवर्तते |

एवमेव मनुष्याणां 

सुखदुःखे नरर्षभ ||

- வியாசர் மஹாபாரதம்

குளிரும், வெயிலும், மழையும் காலத்தால் தான் உருவாகிறது. மனிதர்களில் உத்தமரே! அது போல சுகமும், துக்கமும் காலத்தால் தான் உண்டாகிறது.

नौषधानि न शस्त्राणि 

न होमा न पुनर्जपाः |

त्रायन्ते मृत्युनोपेतं 

जरया चापि मानवम् ||

- வியாசர் மஹாபாரதம்

எந்த மருந்தும், எந்த ஆயுதமும், எந்த ஹோமமும், எந்த ஜபமும்,  முதுமையையோ, மரணத்தையோ தடுக்க முடியாது.

यथा काष्ठं च काष्ठं च समेयातां महोदधौ |

समेत्य च व्यपेयातां तद्वद्भूतसमागमः ||

- வியாசர் மஹாபாரதம்

பெருங்கடலில் மிதக்கும் இரண்டு மரக் கட்டைகள், எப்படி ஒரு சமயம் ஒன்றாக சேர்ந்து பயணித்து, பிறகு மீண்டும் (நேரம் வரும்போது) பிரிந்து செல்லுமோ, அது போல, சம்சாரம் என்ற பெரிய கடலில் மிதக்கும் நம்மோடு மற்ற உயிர்கள் (உறவாக, நண்பனாக, கணவன் மனைவியாக, தாய்-தந்தையாக, மகன் மகளாக, பேரன்-பேத்தியாக, தெரிந்தவனாக) சில காலம் சேர்ந்து பயணித்து, அவரவர்கள் காலம் வரும் பொழுது, அந்த காலத்தால் பிரிக்கப்படுகின்றனர்.

As two logs of wood floating on the great ocean, come together and are again (when the time comes) separated, even so creatures come together and are again (when the time comes) separated.

ये च निष्परुषैरुक्त

गीतवाद्यैरुपस्थिताः |

ये चानाथाः परान्नादाः 

कालस्तेषु समक्रियः ||

- வியாசர் மஹாபாரதம்

இனிமையான கீதத்தோடு, வாத்தியத்தோடு உபசரிக்கப்படும் அரசனிடமும்,  எப்பொழுதும் மற்றவர்  கொடுக்கும் உணவையே  உண்ணும் நிலையில் உள்ளவனிடமும், காலம் சமமாகவே செயல்படுகிறது.

मातापितृसहस्राणि पुत्रदारशतानि च |

संसारेष्वनुभूतानि 

कस्य ते कस्य वा वयम् ||

नैवास्य कश्चिद्भविता 

नायं भवति कस्यचित् |

पथि संगतमेवेदं दारबन्धुसुहृज्जनैः ||

- வியாசர் மஹாபாரதம்

இந்த உலகில் ஆயிரக்கணக்கான தாய், தந்தை, பிள்ளைகள், மனைவிகள் என்ற உறவுகளில் அனைவரும் பயணிக்கின்றனர்.

நிஜத்தில் நாம்  யாருடையவர்கள்? அவர்கள் யாருடையவர்கள்?

யாரும் யாரையும் உரிமை கொள்ள முடியாதபடி, யாருக்கும் யாரும் சொந்தம் ஆக முடியாதபடி காலம் கொண்டு சென்று விடுகிறதே !

क्वासे क्व च गमिष्यामि कोऽन्वहं किमिहास्थितः |

कस्मात्किमनुशोचेयमित्येवं स्थापयेन्मनः ||

- வியாசர் மஹாபாரதம்

நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போக போகிறோம்? நாம் யார்? எப்படி இங்கே வந்தோம்? எதற்காக, யாருக்காக கவலைப்பட வேண்டும்? இந்த கேள்விகளை தியானிக்க தியானிக்க, மனதில் அமைதி ஏற்பட்டு விடும்.

अनित्ये प्रियसंवासे संसारे चक्रवद्गतौ |

पथि संगतमेवैतद्धाता माता पिता सखा ||

- வியாசர் மஹாபாரதம்

வாழ்க்கை ஒரு சக்கரம் போல தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது, இதில் நமக்கு கிடைக்கும் அன்பானவர்களின் நட்பு அனைத்தும் தற்காலிகமானதே ! அண்ணன், அம்மா, அப்பா, நண்பன் ஆகியோருடன் இருக்கும் சங்கமம் ஒரு சத்திரத்தில் பயணிப்பதைப் போன்றது தான்.


இப்படி பலவித தர்ம உபதேசங்கள் ப்ராம்மணரான அஸ்மர், ஜனகருக்கு சொன்னார்.


இந்த உரையாடலை, வியாசர், துக்கத்தில் மூழ்கி கிடக்கும் யுதிஷ்டிரருக்கு சொல்லி, சமாதானம் செய்தார்.

Thursday 26 May 2022

Non-Vedic Brahmin are just name sake Brahmins. லௌகீக பிராம்மணன், பெயரளவில் வெறும் ப்ராம்மணன். அவ்வளவே! Vyasa says .. Let us read Mahabharata

After war got over, Vyasa tells yudhistra on various dharma...

यथा दारु मयॊ हस्ती 

यथा चर्ममयॊ मृगः

ब्राह्मण: चानधीयान: 

त्रय: ते नाम धारकाः

- Vyasa mahabharata

மரத்தால் செய்யப்பட்ட யானை, தோலால் செய்யப்பட்ட மிருகம், வேத அத்யயனம் செய்யாத பிராம்மணன், இவர்கள் மூவரும் வெறும் யானை, மிருகம், பிராம்மணன் என்ற பெயரை வைத்து கொள்ளலாமே தவிர, அதனால் ஒரு பயனும் அடைய மாட்டார்கள்.

Elephant toy made of wood, animal toy made of skin, brahmin who have not recited veda can just hold the title of elephant, animal, brahmin but will never get any respect out of it.


यथा षण्ढॊ ऽफलः स्त्रीषु 

यथा गौर् गवि चाफला

शकुनि: वाप्य अपक्षः स्यान् 

निर्मन्त्रॊ ब्राह्मण: तथा

- Vyasa Mahabharata

ஆண்மையற்றவன் பெண்ணோடு சேருவது எப்படி பயனற்றதோ, 

பசுவோடு மற்றொரு பசுவை சேர்ப்பது எப்படி பயனற்றதோ,

அது போல, 

சிறகு இல்லாத பறவை போல, வேதம் ஓதாத பிராம்மணன் பயனற்றவன்.

Brahmin who don't recite veda are just equivalent to a bird without wings. 

Just like how useless it is for an impotent man to merge with a woman, 

Just like how useless it is for an cow to merge with another cow, 

Like a bird without wings, a Brahmin who does not read the veda will be useless.

ग्रामधान्यं यथा शून्यं 

यथा कूप: च निर्जलः

यथा हुतम् अनग्नौ च

तथैव स्यान् निराकृतौ

- Vyasa Mahabharata

தானியங்கள் இல்லாத கிடங்குகள் எப்படி பயன் இல்லையோ,

தண்ணீர் இல்லாத கிணறு எப்படி பயன் இல்லையோ,

அக்னி இல்லாத ஹோமம் எப்படி பயன் இல்லையோ,

அது போல, 

இப்படிப்பட்டவனுக்கு (வேதம் அறியாத பிராம்மணனுக்கு) தானம் செய்வதால் ஒரு பயனும் இல்லை.

Just like that way, a kernel without grains is useless,

Just like the way, a well without water is useless,

Just like the way, a yagya without fire is useless,

It is useless to donate anything to such person (brahmin who don't recite veda)

देवतानां पितॄणां च

हव्यकव्य विनाशनः

शत्रु: अर्थहरॊ मूर्खॊ

न लॊकान प्राप्तुम् अर्हति

- Vyasa Mahabharata

தேவர்களுக்கு செய்யும் பூஜையை, பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம், ஸ்ரார்த்தம் போன்ற காரியங்களை கெடுப்பவன், அடுத்தவன் சொத்தை திருடும் மூர்க்கன் நல்ல லோகங்களை அடைய மாட்டான்.

A gift become useless if it is given to such a person who do not offer and perform daily duties on god and pitru.  

He is, therefore, like unto a robber (of other people's wealth). He can never succeed in acquiring upper worlds of bliss.