அவர், நம் ஒவ்வொருவர் இதயத்திலும் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார்.
நாம் ஒருவரிடம் பேசினால் கூட, அடுத்தவர் இதயத்தில் இருந்து கொண்டு, நம்மை பார்த்து கொண்டே இருக்கிறார்.
நாம் நாலு பேரிடம் பேசினால் கூட, இப்படி நம்மை அவர் பார்த்து கொண்டே இருக்கிறார் என்றால், நமக்கு பகவானிடத்தில் பயம் வருமா? பக்தி வருமா?
நம்மை கவனித்து கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்டாலேயே, பகவானிடத்தில் நமக்கு முதலில் பயம் தான் வரும்.
பயத்துக்கு பிறகு வருவது தான் ப்ரியம். அதனால் தான், "பய-பக்தி" என்று சொல்வது வழக்கம்.
பகவான் நம்மை பார்க்கிறார் என்றால் பயம் உண்டாக தான் செய்யும்.
பகவானிடத்தில் உறவு, பயத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான், அந்த பகவானின் மதிப்பு தெரியும். பயத்துக்கு பிறகு பகவானிடத்தில் ப்ரியம் உண்டாகும்.
இந்த பய-பக்திக்கு ராமகிருஷ்ணர் நெல்லை உதாரணமாக சொல்கிறார்.
பதருக்குள் அரிசி இருப்பதால், அதற்கு "நெல்" என்று பெயர்.
அரிசி உள்ளே இருப்பதால், நெல்லுக்கு பெருமை உண்டாகிறது.
நெல் அதை மூடி ரக்ஷிப்பதால், அரிசிக்கு பெருமை உண்டாகிறது.
உள்ளே அரிசி இல்லாமல் இருந்தால், நெல்லுக்கு "பதர்" என்று பெயர்.
ஆனால், இந்த மேல் உறையாக இருக்கும் பதர் இல்லாமல், அரிசி வளராது.
நமக்கு அரிசி தான் வேண்டும், என்பதற்காக நெல்லையே (பதரோடு) சாப்பிடுவோமா?
நமக்கு அரிசி தானே வேண்டும், என்பதற்காக, பதர் வேண்டாம் என்று, வெறும் அரிசியை மட்டும் நிலத்தில் போட்டாலும், அது முளைக்காது.
நிறைய அரிசி பயிர் செய்ய வேண்டுமென்றால், பதரோடு சேர்ந்த அரிசியை (நெல்லை) தான் பூமியில் தூவ வேண்டும்.
இதை பார்க்கும் போது, அரிசி முக்கியமா? நெல் முக்கியமா? என்ற கேள்வியை விட,
எந்த இடத்தில் எது முக்கியம்?
என்றே பார்க்க வேண்டும்.
சாப்பிடும் போது, நமக்கு அரிசி மட்டும் தேவைப்படுகிறது.
பயிர் செய்ய, நமக்கு பதரோடு சேர்ந்த அரிசி (நெல்) தேவைப்படுகிறது.
ஆக, நாம் புரிந்து கொள்ள வேண்டியது....என்ன?
நமக்கு பகவானிடத்தில் இருக்கும் பக்தி என்ற அரிசியை காத்து கொள்ள, பகவானிடத்தில் நமக்கு இருக்கும் பயம் என்ற கவசத்தை கொண்டு, பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும்.
UPANYASAM BY CUDDALORE BRAHMASHRI MURALIDHARA SHARMA - SriSri Anna's Disciple
யாரிடம் நட்பு வைத்து கொள்ள கூடாது? யாரை நண்பனாக கொள்ள கூடாது?
இப்படி யுதிஷ்டிரர் கேட்க, பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் பீஷ்மர்.
"யுதிஷ்டிரா! யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக ஏற்க கூடாது? என்று உண்மையாக சொல்கிறேன். கேள்.
लुब्धः क्रूर: त्यक्त धर्मा निकृतिः शठ एव च।
क्षुद्रः पापसमाचारः सर्व-शङ्की तथा अलसः।।
- மஹாபாரதம் (வியாசர்)श्रीमन्महाभारत-शान्तिपर्व
1. பேராசை குணத்தோடு இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
2. மஹா கோபக்காரனை நண்பனாக ஏற்க கூடாது.
3. தன் தர்மத்தை விட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.
4. பிறருக்கு ஹிம்ஸை செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
5. ரகசியமாக பிடிக்காததைசெய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
6. முயற்சி இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
7. சோம்பேறி குணமுள்ளவனை நண்பனாக ஏற்க கூடாது.
दीर्घसूत्रो अनृजुः क्रुष्टो गुरु-दार-प्रधर्पकः।
व्यसने यः परित्यागी दुरात्मा निरपत्रपः।।
- மஹாபாரதம் (வியாசர்)श्रीमन्महाभारत-शान्तिपर्व
8. கோணல் புத்திக்காரனை நண்பனாக ஏற்க கூடாது.
9. பிறரால் திட்டப்பட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.
10. தன் குருவின் தாரத்தை அடைய நினைத்தவனை நண்பனாக ஏற்க கூடாது.
11. துன்பம் ஏற்படும் சமயத்தில் விலகி செல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
12. கெட்ட புத்தியுள்ளவனை நண்பனாக ஏற்க கூடாது.
13. வெட்கமே இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
सर्वतः-पापदर्शी च नास्तिको वेदनिन्दकः।
संप्रकीर्ण इन्दियो-लोके यः कालनिरतश्चरेत्।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
14. யாரிடமும் குறை பார்ப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
15. கடவுள் இல்லை என்று சொல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
16. வேத மந்திரங்களை இகழ்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
17. புலன்களுக்கு கட்டுப்பட்டு உலகத்தோடு செல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
18. காமத்தில் பற்று கொண்டு உலகத்தில் அலைபவனை நண்பனாக ஏற்க கூடாது.
असभ्यो लोकविद्विष्टः समये चानवस्थितः।
पिशुनोऽथाकृतप्रज्ञो मत्सरी पापनिश्चयः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
19. பலர் கூடும் சபையில் இருக்க தகுதி இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
20. உலகத்தால் பகைக்கப்பட்டவனை நண்பனாக ஏற்க கூடாது.
21. கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் ஏமாற்றியவனை நண்பனாக ஏற்க கூடாது.
22. பிறரை பற்றி கோள் சொல்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
23. கல்வி அறிவு (Subject matter expert) இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
24. அடுத்தவன் நன்றாக இருப்பதை கண்டு பொறாமைப்படுபவனை நண்பனாக ஏற்க கூடாது.
25. கெட்ட எண்ணத்தோடு இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
दुःशीलो अथाकृत-आत्मा च नृशंसः कितवस्तथा।
मित्रै:-अपकृति: नित्यम्-अटते-अर्थं धनेप्सया।।
- மஹாபாரதம் (வியாசர்)श्रीमन्महाभारत-शान्तिपर्व
26. கெட்ட இயற்கையோடு (by nature) இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
27. நல்ல மனம் இல்லாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
28. ஆலோசிக்காமல், கொடுமையான செயல்கள் செய்ய தயங்காதவனை நண்பனாக ஏற்க கூடாது.
29. வேடதாரியை (கபடம்) நண்பனாக ஏற்க கூடாது.
30. நண்பர்களோடு விரோதம் செய்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
31. எப்பொழுதும் பொருளை பற்றியே நினைத்து அலைபவனை நண்பனாக ஏற்க கூடாது.
ददत:-च-यथा-शक्ति यो न तुष्यति मन्दधीः।
अधैर्यम् अपि यो युङ्क्ते सदा मित्रं नराधमः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
32. தனக்கு ஒருவன் தன் சக்திக்கு உட்பட்டு உதவி செய்தாலும், அதை கண்டு சந்தோஷமடையாமல் இருக்கும் அல்பனை நண்பனாக ஏற்க கூடாது.
33. எப்பொழுதும் நண்பனுக்கு பயத்தை உண்டு பண்ணுபவனை நண்பனாக ஏற்க கூடாது.
अस्थान-क्रोधनो यश्च अकस्माच्च विरज्यते।
सुहृद: च एव कल्याणानाशु त्यजति किल्बिपी।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
34. காரணமில்லாமல் கோபப்படுபவனை நண்பனாக ஏற்க கூடாது.
35. காரணமில்லாமல் வெறுப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
36. நண்பர்களையும், நல்ல காரியங்களையும் திடீரன்று விலக்குபவனை நண்பனாக ஏற்க கூடாது.
अल्पेऽप्यपकृते मूढे न संस्मरनि यत्कृतम्।
कार्यसेवी-च-मित्रेषु मित्रद्वेषी नराधिप।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
37. அறியாமல் செய்த அல்ப உதவியானாலும், அதை நினைத்து பார்க்காமல் இருப்பவனை நண்பனாக ஏற்க கூடாது.
38. தன் காரியம் நடக்க வேண்டுமென்றால், நண்பர்களை கூட்டி கொள்ளும் த்வேஷியை நண்பனாக ஏற்க கூடாது.
शत्रुर्मित्रमुखो यश्च जिह्नप्रेक्षी विलोचनः।
न तुष्यति च कल्याणे यम्त्यजेत्तादृशं नरम्।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
39. நண்பனை போலவே இருக்கும் சத்ருவை நண்பனாக ஏற்க கூடாது.
40. கண்ணை நேருக்கு நேர் பார்க்காமல், கோணல் பார்வையோடு பேசுபவனை நண்பனாக ஏற்க கூடாது.
41. எப்பொழுதும் தனக்கு எதிரான பார்வை கொண்டவனை நண்பனாக ஏற்க கூடாது.
42. நன்றாக இருப்பதை பார்த்து சந்தோஷப்படாதவனை நண்பனாக ஏற்க கூடாது.
पानपो द्वेषणः क्रोधी निर्घृणः परुपस्तथा।
परोपतापी मित्रध्रुक् तथा प्राणिवधे रतः।।
कृतघ्नश्चाधमो लोके न सन्धेयः कथंचन।
मित्रद्वेषी ह्यसंधेयः सन्धेयानपि मे शृणु।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
குடிகாரர்களும், மனதில் பகை உணர்ச்சி உள்ளவர்களும், கோபமுள்ளவர்களும், இரக்கமில்லாதவர்களும், கெட்ட புத்தி உள்ளவர்களும், பிறரை துன்பப்படுத்துபவர்களும், நண்பனுக்கு துரோகம் செய்பவர்களும், மற்ற உயிர்களை கொல்பவர்களும், நன்றி கொன்றவர்களும், நண்பனாக கூட இருக்க தகுதி அற்றவர்கள்.
மற்ற நண்பர்களை பகையாக நினைப்பவனை நண்பனாக ஏற்கவே கூடாது.
இனி யாரிடம் ஸ்நேஹம் செய்து கொள்ள வேண்டும்? என்று சொல்கிறேன். கேள்.
कुलीना वाक्य-संपन्ना ज्ञानविज्ञानकोविदाः।
रूपवन्तो गुणोपेता: तथा अलुब्धा जित-श्रमाः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
1. தர்மம் அதர்மம் சொல்லி வளர்க்கப்பட்ட நல்ல குலத்தில் பிறந்தவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
2. இனிமையாக பேச்சு உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
3. அறிவிலும், அந்த அறிவில் மெய் எது என்று அறிந்தும் இருக்கும் சாமர்த்தியசாலியை நண்பனாக ஏற்க வேண்டும்.
4. அங்க குறை இல்லாமல், நல்ல ரூபம் உள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
5. நல்ல குணமுள்ளவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
6. ஆசை இல்லாதவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
7. தன் சிரமத்தை பாராட்டாது இருப்பவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
सन्मित्राश्च कृतज्ञाश्च सर्वज्ञा लोभवर्जिताः।
माधुर्यगुणसंपन्नाः सत्य-सन्धा जितेन्द्रियाः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
8. நல்ல நண்பரகளே கொண்டிருப்பவனை நண்பனாக ஏற்க வேண்டும்.
15. எப்பொழுதும் சிரமம் பார்க்காமல் காரியம் செய்பவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.
16. நல்ல குலத்தில் பிறந்த பிள்ளைகளை, நண்பனாக கொள்ள வேண்டும்.
17. நல்ல குலத்தில் தலையாக இருப்பவரை, நண்பனாக கொள்ள வேண்டும்.
18. எந்த குறையும் சொல்ல முடியாதபடி வாழ்பவர்களை, நண்பனாக கொள்ள வேண்டும்.
19. பிரபலமாக இருப்பவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.
20. அரசர்கள் நண்பனாக கொள்பவனை, நண்பனாக கொள்ள வேண்டும்.
यथाशक्ति समाचाराः संप्रतुष्यन्ति हि प्रभो।
नास्थाने क्रोधवन्त: च न च अकस्माद् विरागिणः।।
विरक्ताश्च न दुष्यन्ति मनसा अपि अर्थ कोविदाः।
आत्मानं पीडयित्व अपि सुहृत्कार्यपरायणाः।
विरज्यन्ति न मित्रेभ्यो वासो रक्तमिवाविकम्।।
दोषां च लोभ-मोह आदीन् अर्थेषु युवतीपु च।
न दर्शयन्ति सुहृदो विश्वस्ता बन्धुवत्सलाः।।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
ப்ரபுவே ! இப்படிப்பட்ட நண்பர்கள், தன் சக்திக்கு உட்பட்ட காரியங்கள் செய்து, சந்தோஷப்படுத்துவார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், காரணமில்லாமல் கோபத்தையும், காரணமில்லாமல் வெறுப்பையும் காட்ட மாட்டார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், ஒருவேளை வெறுப்பு அடைந்தாலும், காரியத்தில் சாமர்த்தியசாலிகளாகவே இருப்பார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், மனத்தால் குற்றம் செய்ய மாட்டார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், தன்னை கஷ்டப்படுத்திக்கொண்டாவது, நண்பனுக்கு உதவி செய்வார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்கள், ஆட்டு முடியில் சிவப்பு வர்ணம் பூசப்பட்ட ஆடை எப்படி நிறம் மாறாமல் இருக்குமோ, அது போல, நிறம் மாறாமல் தன் நண்பனிடம் ஸ்நேஹம் மாறாமல் இருப்பார்கள்.
நம்பிக்கையும், குடும்பத்தில் நம்பிக்கையும் பெற்று இருக்கும் இப்படிப்பட்ட நண்பர்கள், நண்பனின் பொருளில் ஆசையோ, நண்பனின் பெண்ணிடமோ மோகம் அடைய மாட்டார்கள்.
लोष्ट-काञ्चनतुल्यार्थाः सुहृत्सु दृढबुद्धयः।
ये चरन्त्यनभीमाना निसृष्टार्थविभूषणाः।
संगृह्णन्तः परिजनं स्वाम्यर्थपरमाः सदा।।
ईदृशैः पुरुषश्रेष्ठैर्यः सन्धिं कुरुते नृपः।
तस्य विस्तीर्यते राज्यं ज्योत्स्ना ग्रहपतेरिव।।
सत्ववन्तो जितक्रोधा बलवन्तो रणे सदा।
जन्मशीलगुणोपेताः सन्धेयाः पुरुषोत्तमाः।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
மண்ணையும்-பொன்னையும் சமமாக பார்க்கும், நண்பனிடத்தில் உறுதியான புத்தியோடு இருக்கும், நம்பிக்கையை குணமாக கொண்டிருக்கும், செல்வத்திலும்-நகைகளிலும் ஆசையற்று இருக்கும், குடும்பத்தை சேர்க்க முயற்சிக்கும், தன் முதலாளியின் பொருளில்பெரும் மதிப்பு வைத்திருக்கும் உத்தமர்களை எந்த அரசன் நண்பனாக கொள்கிறானோ, அந்த அரசனுடைய அரசாட்சியானது, சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் மேலும் மேலும் பிரகாசிப்பது போல பிரகாசிக்கும். யுத்தத்தில் பலமுள்ளவர்களை, கற்றுக்கொடுக்காமல், பிறப்பிலேயே நல்ல குணத்தோடு இருக்கும் உத்தமர்களை அரசன் நேசித்து தன்னோடு சேர்த்து கொள்ள வேண்டும்.
ये च दोपसमायुक्ता नराः प्रोक्ता मयाऽन।
तेषामप्यधमा राजन्कृतघ्ना मित्रघातकाः।
त्यक्तव्यास्तु दुराचाराः सर्वेषामिति निश्चयः।
- மஹாபாரதம் (வியாசர்) श्रीमन्महाभारत-शान्तिपर्व
குற்றமில்லாத அரசனே! யாரை நண்பனாக சேர்த்து கொள்ள கூடாது? என்று நான் முன்பு சொன்னதில், குறிப்பாக, நன்றி கொன்றவனை, நட்புக்கு துரோகம் செய்தவனை மிகவும் தாழ்ந்தவன் (அதமன்) என்று தள்ள வேண்டும்.
கெட்ட நடத்தை உள்ளவனை, பொதுவாக யாருமே நிச்சயமாக சேர்த்து கொள்ள கூடாது
இவ்வாறு பீஷ்மர், "யாரை நண்பனாக கொள்ள வேண்டும்? யாரை நண்பனாக கொள்ள கூடாது?" என்று யுதிஷ்டிரருக்கு விளக்கினார்.
தர்மபுத்திரர் பீஷ்மரிடம், "ஒரு அரசன் எவ்வித குணங்கள் கொண்ட மந்திரிகளை தனக்கு வைத்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டார்.
பீஷ்மர் இதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.
"தர்மம் எது, அதர்மம் எது என்று வேதத்தை கொண்டு கற்று அறிந்தவனும், ஸாமர்த்தியசாலியும், ப்ரம்மச்சர்யத்தில் சுத்தமாக இருந்தவனுமான பிராம்மண வர்ணத்தில் இருக்கும் 4 பிராம்மணர்களையும்,
பலசாலியும், ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றவனுமான க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கும் 18 க்ஷத்ரியர்களையும் தேர்ந்தெடுத்து சேர்த்து கொள்ள வேண்டும்,
நிறைந்த பொருள் கொண்ட வைஸ்ய வர்ணத்தில் இருக்கும் 21 வைஸ்யர்களையும் (Businessman/Employer), மரியாதைக்கு பாத்திரமாகவுள்ள, வாழ்க்கையில் எந்த ஸமயத்திலும் பரிசுத்தமாகவே இருக்கும் 3 சூத்திரர்களையும் (Employee),
மற்றவர் சொல்வதை அமைதியாக கேட்பதில் ஆர்வமும், கேட்பதிலும், அறிவதிலும், அதை நடைமுறை படுத்திக்கொள்வதிலும், செய்யக்கூடாததை புத்தியால் விலக்குவதிலும், ஆராய்ச்சியிலும், சாரம் எது என்று அறிந்து கொள்வதிலும்/தத்வ-ஞானம், ஆகிய 8 குணங்களுடன் இருக்கும், புராணங்களை கற்றவரும், 50 வயதாவது ஆனவரும், ஸாமர்த்தியசாலியும், பிறரிடம் உள்ள நல்ல குணத்தை தோஷமாக பார்க்காதவரும்/அஸூயை,
வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் (20 ஸ்ம்ருதிகள்) அறிந்தவரும், அகம்பாவம் இன்றி பணிவு உள்ளவரும், ஸமமாக பார்ப்பவரும், விவாவதம் என்று வரும் போது சக்தியுடன் தன் பக்கத்தை பேச தெரிந்தவரும், பொருளில் ஆசை இல்லாதவரும்,
மிகவும் தவறான 7 காரியங்கள் (வேட்டை ஆடுதல், சூதாட்டம் விளையாடுதல், பெண் மோகம் கொண்டிருத்தல், மது அருந்துதல், பிறரை அடித்தல், கீழ்த்தரமான சொற்களை பேசுதல், பிறர் பொருளை அபகரித்தல்) செய்யாதவருமான ஸூதரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களில் எட்டு பேரை (4 பிராம்மணன், 3 சூத்திரன், 1 சூதன்) மந்திரிகளாக (cabinet minister) வைத்து கொண்டு நடுவில் அரசன் இருந்து கொண்டு ஆலோசனையை தீர்மானிக்க வேண்டும்.
अष्टाभि: च गुणै:-युक्तं सूतं-पौराणिकं तथा।
पञ्चाशद् वर्ष वयसं प्रगल्भम् अनसूयकम्।।
श्रुति-स्मृति समायुक्तं विनीतं सम-दर्शिनम्।
कार्ये विवदम् आनानां शक्तम् अर्थेष्वलोलुपम्।।
वर्जितं च एव व्यसनैः सुघोरैः सप्तभिर्भृ भृशम्।
अष्टानां मन्त्रिणां मध्ये मन्त्रं राजोप-धारयेत्।।
- மஹாபாரதம் (வியாஸர்)
இந்த மந்திரிகளுடன் ஆலோசனை செய்து முடிக்கப்பட்ட தீர்மானத்தை ராஜ்யத்தில் இருக்கும் மற்ற பிரதான அதிகாரிகளிடம் அனுப்பி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அரசனாக நீயும் எப்பொழுதும் பிரஜைகளை பார்த்து கொள்ள வேண்டும்.
ततः संप्रेषयेद् राष्ट्रे राष्ट्रीयाय च दर्शयेत्।
अनेन व्यवहारेण द्रष्टव्यास्ते प्रजाः सदा।।
- மஹாபாரதம் (வியாஸர்)
யாருக்கும் தெரியாமல், எந்த சமயத்திலும் எந்த பொருளையும் ரகசியமாக நீ (அரசன்) எடுத்து கொள்ள கூடாது.
சர்ச்சையுள்ள விஷயங்களில், அதில் சம்பந்தப்பட்ட பொருளை நீ எடுக்க கூடாது. அப்படி எடுத்தால், அரசனுக்கும், அது சம்பந்தப்பட்டவர்களுக்கும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.
न च अपि गूढं द्रव्यं ते ग्राह्यं कार्योपघातकम्।
कार्ये खलु विपन्ने त्वां यो धर्मस्तं च पीडयेत्।।
- மஹாபாரதம் (வியாஸர்)
(இவ்வாறு பொருளை அபகரிப்பதால்) பருந்திடமிருந்து பறவை கூட்டங்கள் விலகுவது போல, உன் ராஜ்ஜியம் உன்னை விட்டு விலகி ஓடும். தர்மத்தை மீறி, முறை தவறி மக்களை பரிபாலிக்கும் அரசனுடைய ஆட்சி, கடலில் வழி தவறி சிதறி போன கப்பல் போல, வழி தவறி அலையும்
विद्रवेच्चैव राष्ट्रं ते श्येनात् पक्षिगणा इव।
परिस्रवेच्च सततं नौर्विशीर्णेव सागरे।।
- மஹாபாரதம் (வியாஸர்)
தர்மத்தை மூலமாக கொண்டு ஆட்சி செய்ய வேண்டிய அரசன், எப்பொழுது அதர்மமாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறானோ, அவன் உள்ளத்தில் பயம் உண்டாகும். இறந்த பிறகு, சொர்க்கமும் கிடைக்காது.
प्रजाः पालयतोऽसम्यग् अधर्मेण इह भूपतेः।
हार्दं भयं संभवति स्वर्गश्चस्य विरुध्यते।।
- மஹாபாரதம் (வியாஸர்)
இப்படிப்பட்ட அரசனை பின் தொடர்ந்து செல்பவர்களும், அரசனோடு அதோகதி ஆவார்கள்.
अथ यो धर्मतः पाति राजाऽमात्योऽथवा आत्मजः।
धर्मासने सन्नियुक्तो धर्ममूले नरर्षभ।।
- மஹாபாரதம் (வியாஸர்)
இவ்வாறு பீஷ்மர் யுதிஷ்டிர மஹாராஜனுக்கு "அரசன் எப்படி மந்திரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்? யார் யாரை தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும்? யாரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்? அரசனுக்கு எதனால் பயம் ஏற்படும்?" என்று அரச தர்மத்தை எடுத்துரைத்தார்.
என்னை தூக்கி கொண்டு செல்லும் (ததிக்ராவே) பகவானே ! நான் காரியங்கள் செய்யவில்லை.
जिष्णोरश्व॑स्य वाजिनः (जिष्णोः अश्व॑स्य वाजिनः)
ஜிஷ்ணோ: அஷ்வஸ்ய வாஜின:
எப்படி காரியங்கள் செய்யாமல் குதிரையில் அமர்ந்து இருப்பவனை, குதிரையையே தன் சக்தியால் அழைத்து கொண்டு செல்கிறதோ, அது போல நீங்களே கர்த்தாவாக இருந்து காரியங்கள் செய்கிறீர்கள்
सुरभि नो मुखा॑ करत्
ஸுரபி ந: முகா கரத்
நீங்கள் என்னுடைய வாக்கை சுகந்தமாக்குங்கள். (நல்லதையே பேச செய்யுங்கள்)
தூங்கிக்கொண்டிருந்த மஹாவீரர்களை, மூவரும் (அஸ்வத்தாமா, கிருபர், க்ருதவர்மா) கொன்றுவிட்டார்கள் என்ற நிலையில், பெரும் துக்கத்தை அடைந்தார் யுதிஷ்டிரர்.
कथं नु कृष्ण पापेन
क्षुद्रेण शठ-बुद्धिना।
द्रौणिना निहताः सर्वे
मम पुत्रा महारथाः।।
तथा कृतास्र विक्रान्ताः
सङ्ग्रामेष्वपलायिनः।
द्रुपदस्यात्मजाश्चैव
द्रोणपुत्रेण पातिताः।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
வாசுதேவ கிருஷ்ணரை பார்த்து, "கோவிந்தா! பாவியும், அல்பனும், வஞ்சகபுத்தியுள்ள அஸ்வத்தாமனால், எப்படி மஹா ரதர்களான என்னுடைய புத்திரர்களை கொல்ல முடிந்தது? அனைத்து சாஸ்திரங்களும் அறிந்த, மஹா தைரியசாலியான, யுத்தத்தில் புறமுதுகிட்டு ஓடாத துருபத புத்ரனை எவ்வாறு துரோண புத்ரனால் கொல்ல முடிந்தது?
यस्य द्रोणो महेष्वासो
न प्रादादाहवे मुखम्।
निजघ्ने रथिनां श्रेष्ठं
धृष्टद्युम्नं कथं नु सः।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
சிறந்த வில்லாளியான துரோணரே எவரை கண்டு முகம் கொடுத்து எதிர்க்கவில்லையோ, அப்படிப்பட்ட த்ருஷ்டத்யும்னனை எவ்வாறு இந்த துரோண புத்ரன் கொன்றான்?
किन्नु तेन कृतं कर्म
तथायुक्तं नरर्षभ।
यदेकः समरे सर्वान्
अवधीन्नो गुरोः सुतः।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
புருஷ ஸ்ரேஷ்டரே! ஒரே ஒருவனாக இருந்து கொண்டு, இத்தனை பேரையும் கொல்ல முடிந்த இந்த துரோண புத்திரனுக்கு எதனால் இத்தனை பலம் ஏற்பட்டது?" என்று வினவினார்.
श्रीभगवानुवाच।
नूनं स देवदेवानाम्
ईश्वर ईश्वरम् अव्ययम्।
जगाम शरणं द्रौणि:
एकस्तेनावधीद्बहून्।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
பகவான் சொல்கிறார்.
"அந்த அஸ்வத்தாமா தேவர்களுக்கும் தேவனான, ஈஸ்வரனுக்கு ஈஸ்வரனான, குறை ஒன்றும் இல்லாத மஹாதேவரை சரணமடைந்தான். அது நிச்சயம். அதனாலேயே, ஒருவனாக இருந்து கொண்டு அனைவரையும் கொல்ல முடிந்தது.
प्रसन्नो हि महादेवो
दद्यादमरतामपि।
वीर्यं च गिरिशो दद्याद्येन्
इन्द्रमपि शातयेत्।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
மஹாதேவர் ப்ரஸன்னாமானால், மரணமில்லாமல் கூட செய்து விடுவார்.
அவர் ப்ரசன்னமானால், இந்திரனையும் ஜெயிக்கும் வீர்யத்தை கொடுத்து விடுவார்.
वेदाहं हि महादेवं
तत्त्वेन भरतर्षभ।
यानि चास्यपुराणानि
कर्माणि विविधानि च।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
நான் மஹாதேவரை உள்ளது உள்ளபடி அறிவேன்.
புராதனமாகவும், பல விதமாகவும் இவர் செய்யும் லீலைகளை அறிவேன்.
आदिरेष हि भूतानां
मध्यम् अन्तश्च भारत।
विचेष्टते जगच्चेदं
सर्वमस्यैव कर्मणा।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
பாரதா! மஹாதேவர் பூதங்களுக்கு ஆதியாகவும்,மத்யமாகவும், அந்தமாகவும் இருக்கிறார்.
இவர் அசைவினாலேயே இந்த உலகம் இயங்குகிறது.
एवं सिसृक्षु: भूतानि
ददर्श प्रथमं विभुः।
पितामहो अब्रवीच्चैनं
भूतानि सृज माचिरम्।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
பிரபுவான பிதாமஹர் (ப்ரம்ம தேவன்), ஒரு சமயம் பூதங்களை ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்து, இவரை பார்த்து, "காலத்தை கடத்தாமல், உடனே பூதங்களை ஸ்ருஷ்டி செய்யுங்கள்" என்று கேட்டார்.
हरि-केशस्तथेत्युक्वा
दीर्घदर्शी तदा प्रभुः।
दीर्घकालं तपस्तेपे
मग्नोऽम्भसि महातपाः।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
அப்பொழுது, நடக்க போவதை அறிந்த தீர்கதரிசியும், தவத்தில் நாட்டமுடையவரும், அழகான தலை கேசம் உடையவரும்,பிரபுவாமான மஹாதேவர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, ஜலத்தில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
सुमहान्तं ततः कालं
प्रतीक्ष्यैनं पितामहः।
स्रष्टारं सर्वभूतानां
ससर्ज मनसाऽपरम्।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
பிறகு, நெடு காலம் ஆகியும் மஹாதேவர் வராமல் போனதால், பூதங்களை ஸ்ருஷ்டி செய்ய வேறொருவரை (தக்ஷ ப்ரஜாபதி) மனதால் ஸ்ருஷ்டி செய்து விட்டார்.
सोऽब्रवीद्वातरं दृष्ट्वा
गिरिशं सुप्तमम्भसि।
यदि मे नाग्रजोऽस्ति
अन्यस्ततः स्रक्ष्याम्यहं प्रजाः।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை (சிவன்) கண்ட இரண்டாமவன் (தக்ஷ ப்ரஜாபதி), தன் தந்தையிடம், "எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால், நான் பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்கிறேன்" என்றார்.
तम् अब्रवीत्पिता नास्ति
त्वदन्यः पुरुषोऽग्रजः।
स्थाणुरेष जले मग्नो
विस्रब्धः कुरु वै प्रजाः।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
ப்ரம்ம தேவர், "உன்னை காட்டிலும் வேறு ஒரு ஆண் பிள்ளை இங்கு இல்லை. அந்த பிள்ளை ஜலத்தில் மூழ்கி இருக்கிறான். ஆதலால் மன அமைதியோடு நீ பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்" என்றார்
भूतान्यन्वसृजत्सप्त
दक्षः क्षिप्रं प्रजापतिः।
यैरिमं व्यकरोत्सर्वं
भूतग्रामं चतुर्विधम्।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
எந்த 7 பூதங்களை கொண்டு நால்வகை உயிரினங்கள் படைக்கப்பட்டதோ, அந்த பூதங்களை இரண்டாமவன் (தக்ஷ ப்ரஜாபதி) விரைவாக படைக்க தொடங்கினார்
ताः सृष्टमात्राः क्षुधिताः
प्रजाः सर्वाः प्रजापतिम्।
बिभक्षयिवो राजन्सहसा
प्राद्रवंस्तदा।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையான தக்ஷ ப்ரஜாபதியையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.
स भक्ष्यमाणस्त्राणार्थी
पितामहमुपाद्रवत्।
आभ्यो मां भगवांस्त्रातु
वृत्तिरासां विधीयताम्।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
பிரம்ம தேவரால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள விரும்பி, ப்ரம்ம தேவராய் நோக்கி ஓடினார்.
அவர் அந்தப் ப்ரம்ம தேவரிடம்,
"ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்" என்றார்.
ततस्ताभ्यो ददावन्नमोषधीः स्थावराणि च।
जङ्गमानि च भूतानि दुर्बलानि बलीयसाम्।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
அப்போது தாத்தாவான ப்ரம்ம தேவர், செடி-கொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு (பலமிக்க உயிரினங்களின்) வாழ்வாதாரமாக (உணவாக) பலவீனர்களை (பலமற்ற உயிரினங்களை) நிர்ணயித்தார்
विहितान्नाः प्रजास्तास्तु जग्मुस्तुष्टा यथागतम्।
ततो ववृधिरे राजन्प्रीतिमत्यः स्वयोनिषु।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
புதிதாக படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு வாழ்வாதாரம் நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் இனங்களுடன் கூடி (புணர்ந்து) பெருகினர்.
भूतग्रामे विवृद्वे तु सृष्टे देवासुरे तदा।
उदतिष्ठज्जलाज्ज्येष्ठः प्रजाश्चेमा ददर्श सः।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவரான (சிவபெருமான்) நீரில் இருந்து எழுந்து, பிரஜைகள் ஸ்ருஷ்டி செய்யப்பட்டு இருப்பதை கண்டார்.
बहुरूपाः प्रजाः सृष्टा विवृद्धाश्च स्वतेजसा।
चुक्रोध बलवद्दृष्ट्वा लिङ्गं स्वं चाप्यविध्यत।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
அவர் (ருத்திரன்), பல வகை உயிரினங்கள் படைக்கப்பட்டு விட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டார்.
இதனால் கோபமடைந்த ருத்திரன், தன் லிங்கத்தை பூமியில் மறையும்படி விழ செய்தார். (காமத்தை வென்றவர் என்று நமக்கு உணர்த்தினார். ஆசைகள் அழிய, மெய்ஞானம் நமக்கு ஏற்பட, சிவபெருமானை வணங்குகிறோம்)
तत्प्रविद्धं तथा भूमौ तथैव प्रत्यतिष्ठत।
तमुवाचाव्ययो ब्रह्मा वचोभिः शमयन्निव।।
किं कृतं सलिले शर्व चिरकालस्थितेन ते।
किमर्थं चेदमुत्पाद्य लिङ्गं भूमौ प्रवेशितम्।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
மங்காதவரான பிரம்ம தேவர், அவரிடம் மென்மையான வார்த்தைகளில்,
"ஸர்வா! இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
என்ன காரணத்தினால் உனது லிங்கம் பூமியில் நாட்டப்பட்டது?"
"இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?
ஓ! பெரும்பாட்டனே!
கடுந்தவம் செய்ததின் மூலம், நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன்.
இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்" என்றார்
एवमुक्त्वा स सक्रोधो जगाम विमना भवः।
गिरेर्मुञ्जवतः पादं तपस्तप्तुं महातपाः।।
- व्यास महाभारतः (vyasa mahabharat)
பெரும் தவசீலரான, காமத்தை வென்றவரான அந்த சங்கரர், கோபத்தோடு இவ்வாறு உரைத்து விட்டு, மன அமைதி இல்லாதவராகி, தவம் செய்வதற்காக "முஞ்சிவான்" என்ற மலைச்சாரலை அடைந்தார்.