Followers

Search Here...

Friday 25 November 2022

குளிப்பதற்கும் ரிக் வேதம்....இனி ரிக் வேத மந்திரம் சொல்லி கொண்டு குளிக்கலாமே? (சோப்புக்கு முன் மார்ஜனம், சோப்புக்கு பின் புனர்மார்ஜனம்) சொல்லலாமே? அறிவோம் அர்த்தம்

இனி ரிக் வேத மந்திரம் சொல்லி கொண்டு குளிக்கலாமே? (சோப்புக்கு முன் மார்ஜனம், சோப்புக்கு பின் புனர்மார்ஜனம்)

வேத மந்திரங்களை முடிந்தவரை அர்த்தங்கள் புரிந்து சொல்வோமே! 


1st Bath (Before Soap): 

மார்ஜனம் (मार्जनं) (maarjanam):

आपो हिष्ठा मयोभुव: (आपः हि स्थ मय: अभुवः)

ஆபோ ஹிஷ்டா மயோபுவ:

ஜலமே! நீ நிச்சயமாக எனக்கு சுகத்தை தருகிறாய்.

ता न: ऊर्जे दधातन

தா ந: ஊர்ஜே ததாதன

எனக்கு உயிர்ப்பலத்தை கொடுத்து எழுப்புகிறாய்

महे रणाय चक्षसे

மஹே ரநாய சக்ஷஸே 

உன்னை பார்க்கும் பொழுதே ஆனந்தம் தருகிறாய்

यो वः शिवतमो रस:

யோ வ: ஷிவதமோ ரஸ:

எந்த மங்களமயமான சுவை உன்னிடம் உள்ளதோ!

तस्य भाजयतेह नः (तस्य भाजयतेह इह न:)

தஸ்ய பாஜயதேஹ ந:

அதை நான் அனுபவித்து குடிக்கவும் முடிகிறது

उशतीरिव मातरः (उशती: इव मातरः)

உஷதீரிவ மாதர:

பால் கொடுக்கும் தாயை போல எனக்கு அழகாக தெரிகிறாய்



तस्मा अरं गमाम व:

தஸ்மா அரம் கமாம வ:

ஜலமே! நான் பூர்ணமாக உட்கொள்ளுகிறேன்.

यस्य क्षयाय जिन्वथ:

யஸ்ய க்ஷயாய ஜின்வத:

நீ யாரிடம் வசிக்கிறாயோ!

आपो जनयथा च नः

ஆபோ ஜநயதா ச ந:

ஜலமே! நீ அவர்களை நிச்சயமாக மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்து வாழ செய்கிறாய்

ऋग्वेदः मण्डल १० - सूक्तं ९   

Rigveda: Mandala 10 - Suktam 9  Mantra 1-3

YajurVeda: Chapter 11 Mantra 50-52

YajurVeda: Chapter 36 Mantra 14-16

Samaveda : Mantra 1837

Samaveda: (Gauthama Sakhaa) Uttaraarchikah » Prapaataka » 9; ardha-Prapaataka » 2; dashatiḥ » ; Sukta » 10; Mantra » 1-3

Samaveda: (Ranaaneeya Sakhaa) Uttaraarchika: » Chapter (adhyaaya) » 20; Clause (kanda) » 7; Sukta » 2; Mantra » 1-3

अथर्ववेद - काण्ड » 1; सूक्त » 5; मन्त्र » 1-3

Atarvaveda - Kanda 1 Sukta 5 Mantra 1-3

ॐ भू: भुव: सुव:



2nd Bath (After Soap):

புனர்-மார்ஜனம் (पूण: मार्जनं) (punar-maarjanam)


दधिक्राव्णो॑ अकारिषं

ததிக்ராவ்ணோ: அகாரிஷம்

என்னை தூக்கி கொண்டு செல்லும் (ததிக்ராவே) பகவானே ! நான் காரியங்கள் செய்யவில்லை.

जिष्णोरश्व॑स्य वाजिनः (जिष्णोः अश्व॑स्य वाजिनः)

ஜிஷ்ணோ: அஷ்வஸ்ய வாஜின:

எப்படி காரியங்கள் செய்யாமல் குதிரையில் அமர்ந்து இருப்பவனை, குதிரையையே தன் சக்தியால் அழைத்து கொண்டு செல்கிறதோ, அது போல நீங்களே கர்த்தாவாக இருந்து காரியங்கள் செய்கிறீர்கள்

सुरभि नो मुखा॑ करत्

ஸுரபி ந: முகா கரத்

நீங்கள் என்னுடைய வாக்கை சுகந்தமாக்குங்கள். (நல்லதையே பேச செய்யுங்கள்)

प्र न: आयूं॑षि तारिषत्

ப்ர ந: ஆயூம்ஷி தாரிஷத்

தீர்க்க ஆயுள் கொடுத்து உயர செய்யுங்கள்

ऋग्वेदः - मण्डल ४ - सूक्तं ४.३९. मंत्र ६

Rigveda: - Mandala 4 - Suktam 39  Mantra 6

Samaveda : Mantra 358

Samaveda: (Gauthama Sakhaa) Poorvaarchikah » Prapaataka » 4; ardha-Prapaataka » 2; dashatiḥ » 2; Mantra » 7

Samaveda: (Ranaaneeya Sakhaa) Poorvaarchika: » Chapter (adhyaaya) » 4; Clause (kanda) » 1; Mantra » 7

अथर्ववेद - काण्ड » 20; सूक्त » 137; मन्त्र » 3

AtarvaVeda - Kanda 20 Sukta 137 Mantra 3

आपो हिष्ठा मयोभुव: (आपः हि स्थ मय: अभुवः)

ஆபோ ஹிஷ்டா மயோபுவ:

ஜலமே! நீ நிச்சயமாக எனக்கு சுகத்தை தருகிறாய்.

ता न ऊर्जे दधातन

தா ந: ஊர்ஜே ததாதன



எனக்கு உயிர்ப்பலத்தை கொடுத்து எழுப்புகிறாய்

महे रणाय चक्षसे

மஹே ரநாய சக்ஷஸே

உன்னை பார்க்கும் பொழுதே ஆனந்தம் தருகிறாய்

यो वः शिवतमो रस:

யோ வ: ஷிவதமோ ரஸ:

எந்த மங்களமயமான சுவை உன்னிடம் உள்ளதோ!

तस्य भाजयतेह नः (तस्य भाजयतेह इह न:)

தஸ்ய பாஜயதேஹ ந:

அதை நான் அனுபவித்து குடிக்கவும் முடிகிறது

उशतीरिव मातरः (उशती: इव मातरः)

உஷதீரிவ மாதர:

பால் கொடுக்கும் தாயை போல எனக்கு அழகாக தெரிகிறாய்

तस्मा अरं गमाम व:

தஸ்மா அரம் கமாம வ:

ஜலமே! நான் பூர்ணமாக உட்கொள்ளுகிறேன்.

यस्य क्षयाय जिन्वथ

யஸ்ய க்ஷயாய ஜினவத

நீ யாரிடம் வசிக்கிறாயோ!

आपो जनयथा च नः

ஆபோ ஜநயதா ச ந:

ஜலமே! நீ அவர்களை நிச்சயமாக மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்து வாழ செய்கிறாய்

ऋग्वेदः मण्डल १० - सूक्तं ९   

Rigveda: Mandala 10 - Suktam 9  Mantra 1-3

YajurVeda: Chapter 11 Mantra 50-52

YajurVeda: Chapter 36 Mantra 14-16

Samaveda : Mantra 1837

Samaveda: (Gauthama Sakhaa) Uttaraarchikah » Prapaataka » 9; ardha-Prapaataka » 2; dashatiḥ » ; Sukta » 10; Mantra » 1-3

Samaveda: (Ranaaneeya Sakhaa) Uttaraarchika: » Chapter (adhyaaya) » 20; Clause (kanda) » 7; Sukta » 2; Mantra » 1-3

अथर्ववेद - काण्ड » 1; सूक्त » 5; मन्त्र » 1-3

Atarvaveda - Kanda 1 Sukta 5 Mantra 1-3


ॐ भू: भुव: सुव:

Thursday 24 November 2022

சிவ லிங்கம் பூமியில் இருக்க காரணம்... காமத்தை ஜெயித்தவர், ஞானத்தை தருபவர் சிவபெருமான். அறிவோம் மஹாபாரதம்

சிவ லிங்கம் பூமியில் இருக்க காரணம். 

हतेषु सर्व-सैन्येषु 

सौप्तिकै तै रथैस्त्रिभिः।

शोचन् युधिष्ठिरो राजा 

दाशार्हम् इदम् अब्रवीत्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

தூங்கிக்கொண்டிருந்த மஹாவீரர்களை, மூவரும்  (அஸ்வத்தாமா, கிருபர், க்ருதவர்மா) கொன்றுவிட்டார்கள் என்ற நிலையில், பெரும் துக்கத்தை அடைந்தார் யுதிஷ்டிரர்.


कथं नु कृष्ण पापेन 

क्षुद्रेण शठ-बुद्धिना।

द्रौणिना निहताः सर्वे 

मम पुत्रा महारथाः।।

तथा कृतास्‌र विक्रान्ताः 

सङ्ग्रामेष्वपलायिनः।

द्रुपदस्यात्मजाश्चैव 

द्रोणपुत्रेण पातिताः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

வாசுதேவ கிருஷ்ணரை பார்த்து, "கோவிந்தா!  பாவியும், அல்பனும், வஞ்சகபுத்தியுள்ள அஸ்வத்தாமனால், எப்படி மஹா ரதர்களான என்னுடைய புத்திரர்களை கொல்ல முடிந்தது? அனைத்து சாஸ்திரங்களும் அறிந்த, மஹா தைரியசாலியான, யுத்தத்தில் புறமுதுகிட்டு ஓடாத துருபத புத்ரனை எவ்வாறு துரோண புத்ரனால் கொல்ல முடிந்தது?

यस्य द्रोणो महेष्वासो 

न प्रादादाहवे मुखम्।

निजघ्ने रथिनां श्रेष्ठं 

धृष्टद्युम्नं कथं नु सः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

சிறந்த வில்லாளியான துரோணரே எவரை கண்டு முகம் கொடுத்து எதிர்க்கவில்லையோ, அப்படிப்பட்ட த்ருஷ்டத்யும்னனை எவ்வாறு இந்த துரோண புத்ரன் கொன்றான்?

किन्नु तेन कृतं कर्म 

तथायुक्तं नरर्षभ।

यदेकः समरे सर्वान्

अवधीन्नो गुरोः सुतः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

புருஷ ஸ்ரேஷ்டரே! ஒரே ஒருவனாக இருந்து கொண்டு, இத்தனை பேரையும் கொல்ல முடிந்த இந்த துரோண புத்திரனுக்கு எதனால் இத்தனை பலம் ஏற்பட்டது?" என்று வினவினார்.


श्रीभगवानुवाच

नूनं स देवदेवानाम् 

ईश्वर ईश्वरम् अव्ययम्।

जगाम शरणं द्रौणि:

एकस्तेनावधीद्बहून्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பகவான் சொல்கிறார்.

"அந்த அஸ்வத்தாமா தேவர்களுக்கும் தேவனான, ஈஸ்வரனுக்கு ஈஸ்வரனான, குறை ஒன்றும் இல்லாத மஹாதேவரை சரணமடைந்தான். அது நிச்சயம். அதனாலேயே, ஒருவனாக இருந்து கொண்டு அனைவரையும் கொல்ல முடிந்தது.




प्रसन्नो हि महादेवो 

दद्यादमरतामपि।

वीर्यं च गिरिशो दद्याद्येन्

इन्द्रमपि शातयेत्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மஹாதேவர் ப்ரஸன்னாமானால், மரணமில்லாமல் கூட செய்து விடுவார்.

அவர் ப்ரசன்னமானால், இந்திரனையும் ஜெயிக்கும் வீர்யத்தை கொடுத்து விடுவார்.

वेदाहं हि महादेवं 

तत्त्वेन भरतर्षभ।

यानि चास्यपुराणानि

कर्माणि विविधानि च।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

நான் மஹாதேவரை உள்ளது உள்ளபடி அறிவேன்.

புராதனமாகவும், பல விதமாகவும் இவர் செய்யும் லீலைகளை அறிவேன்.


आदिरेष हि भूतानां 

मध्यम् अन्तश्च भारत।

विचेष्टते जगच्चेदं 

सर्वमस्यैव कर्मणा।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பாரதா! மஹாதேவர் பூதங்களுக்கு  ஆதியாகவும்,மத்யமாகவும், அந்தமாகவும் இருக்கிறார்.

இவர் அசைவினாலேயே இந்த உலகம் இயங்குகிறது.


एवं सिसृक्षु: भूतानि 

ददर्श प्रथमं विभुः।

पितामहो अब्रवीच्चैनं 

भूतानि सृज माचिरम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிரபுவான பிதாமஹர் (ப்ரம்ம தேவன்), ஒரு சமயம் பூதங்களை ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்து, இவரை பார்த்து, "காலத்தை கடத்தாமல், உடனே பூதங்களை ஸ்ருஷ்டி செய்யுங்கள்" என்று கேட்டார்.


हरि-केशस्तथेत्युक्‌वा 

दीर्घदर्शी तदा प्रभुः।

दीर्घकालं तपस्तेपे

मग्नोऽम्भसि महातपाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அப்பொழுது, நடக்க போவதை அறிந்த தீர்கதரிசியும், தவத்தில் நாட்டமுடையவரும், அழகான தலை கேசம்  உடையவரும்,பிரபுவாமான மஹாதேவர், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, ஜலத்தில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் செய்ய ஆரம்பித்து விட்டார்.


सुमहान्तं ततः कालं 

प्रतीक्ष्यैनं पितामहः।

स्रष्टारं सर्वभूतानां

ससर्ज मनसाऽपरम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிறகு, நெடு காலம் ஆகியும் மஹாதேவர் வராமல் போனதால், பூதங்களை ஸ்ருஷ்டி செய்ய வேறொருவரை (தக்ஷ ப்ரஜாபதி) மனதால் ஸ்ருஷ்டி செய்து விட்டார்.


सोऽब्रवीद्वातरं दृष्ट्वा 

गिरिशं सुप्तमम्भसि।

यदि मे नाग्रजोऽस्ति 

अन्यस्ततः स्रक्ष्याम्यहं प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை (சிவன்) கண்ட இரண்டாமவன் (தக்ஷ ப்ரஜாபதி), தன் தந்தையிடம்,  "எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால், நான் பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்கிறேன்" என்றார்.


तम् अब्रवीत्पिता नास्ति 

त्वदन्यः पुरुषोऽग्रजः।

स्थाणुरेष जले मग्नो

विस्रब्धः कुरु वै प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

ப்ரம்ம தேவர், "உன்னை  காட்டிலும் வேறு ஒரு ஆண் பிள்ளை இங்கு இல்லை. அந்த பிள்ளை ஜலத்தில் மூழ்கி இருக்கிறான். ஆதலால் மன அமைதியோடு நீ பிரஜைகளை ஸ்ருஷ்டி செய்" என்றார்




भूतान्यन्वसृजत्सप्त 

दक्षः क्षिप्रं प्रजापतिः।

यैरिमं व्यकरोत्सर्वं 

भूतग्रामं चतुर्विधम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

எந்த 7 பூதங்களை கொண்டு நால்வகை உயிரினங்கள் படைக்கப்பட்டதோ, அந்த பூதங்களை  இரண்டாமவன் (தக்ஷ ப்ரஜாபதி) விரைவாக படைக்க தொடங்கினார்

ताः सृष्टमात्राः क्षुधिताः 

प्रजाः सर्वाः प्रजापतिम्।

बिभक्षयिवो राजन्सहसा 

प्राद्रवंस्तदा।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையான தக்ஷ ப்ரஜாபதியையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.


स भक्ष्यमाणस्त्राणार्थी

पितामहमुपाद्रवत्।

आभ्यो मां भगवांस्त्रातु 

वृत्तिरासां विधीयताम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பிரம்ம தேவரால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள விரும்பி, ப்ரம்ம தேவராய் நோக்கி ஓடினார்.

அவர்  அந்தப் ப்ரம்ம தேவரிடம்,

"ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்" என்றார்.


ततस्ताभ्यो ददावन्नमोषधीः स्थावराणि च।

जङ्गमानि च भूतानि दुर्बलानि बलीयसाम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அப்போது தாத்தாவான ப்ரம்ம தேவர், செடி-கொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு (பலமிக்க உயிரினங்களின்) வாழ்வாதாரமாக (உணவாக) பலவீனர்களை (பலமற்ற உயிரினங்களை) நிர்ணயித்தார் 


विहितान्नाः प्रजास्तास्तु जग्मुस्तुष्टा यथागतम्।

ततो ववृधिरे राजन्प्रीतिमत्यः स्वयोनिषु।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

புதிதாக படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு வாழ்வாதாரம் நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் இனங்களுடன் கூடி (புணர்ந்து) பெருகினர்.


भूतग्रामे विवृद्वे तु सृष्टे देवासुरे तदा।

उदतिष्ठज्जलाज्ज्येष्ठः प्रजाश्चेमा ददर्श सः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவரான (சிவபெருமான்) நீரில் இருந்து எழுந்து, பிரஜைகள் ஸ்ருஷ்டி  செய்யப்பட்டு இருப்பதை கண்டார்.


बहुरूपाः प्रजाः सृष्टा विवृद्धाश्च स्वतेजसा।

चुक्रोध बलवद्दृष्ट्वा लिङ्गं स्वं चाप्यविध्यत।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

அவர் (ருத்திரன்), பல வகை உயிரினங்கள் படைக்கப்பட்டு விட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டார்.

இதனால் கோபமடைந்த ருத்திரன், தன் லிங்கத்தை பூமியில் மறையும்படி விழ செய்தார்.  (காமத்தை வென்றவர் என்று நமக்கு உணர்த்தினார். ஆசைகள் அழிய, மெய்ஞானம் நமக்கு ஏற்பட, சிவபெருமானை வணங்குகிறோம்)


तत्प्रविद्धं तथा भूमौ तथैव प्रत्यतिष्ठत।

तमुवाचाव्ययो ब्रह्मा वचोभिः शमयन्निव।।

किं कृतं सलिले शर्व चिरकालस्थितेन ते।

किमर्थं चेदमुत्पाद्य लिङ्गं भूमौ प्रवेशितम्।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

மங்காதவரான பிரம்ம தேவர், அவரிடம் மென்மையான வார்த்தைகளில்,

"ஸர்வா! இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?

என்ன காரணத்தினால் உனது லிங்கம் பூமியில் நாட்டப்பட்டது?"

என்று கேட்டார்.


सो अब्रवीज्जातसंरम्भस्तथा लोकगुरुर्गुरुम्।

प्रजाः सृष्टाः परेणेमाः किं करिष्याम्यनेन वै।।

प्रजाः सृष्टाः परेणेमाः प्रजार्थं मे पितामह।

ओषध्यः परिवर्तेः अन्यथैवं सततं प्रजाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

உலகத்திற்கே தலைவனான சிவன், கோபத்துடன்  பிரம்ம தேவரிடம்,

"இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?

ஓ! பெரும்பாட்டனே!

கடுந்தவம் செய்ததின் மூலம், நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன்.

இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்" என்றார்




एवमुक्त्वा स सक्रोधो जगाम विमना भवः।

गिरेर्मुञ्जवतः पादं तपस्तप्तुं महातपाः।।

- व्यास महाभारतः (vyasa mahabharat)

பெரும் தவசீலரான, காமத்தை வென்றவரான அந்த சங்கரர், கோபத்தோடு இவ்வாறு உரைத்து விட்டு, மன அமைதி இல்லாதவராகி, தவம் செய்வதற்காக "முஞ்சிவான்" என்ற மலைச்சாரலை அடைந்தார். 

Monday 14 November 2022

சந்தியா வந்தனத்தில் கர்மயோகம், பிறகு ஞான யோகம், பக்தி யோகம், சரணாகதி அடங்கி இருக்கிறது.. சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை.... வ்யாச பகவான் கொடுத்த பொக்கிஷத்தை அறிவோம்.

சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை.... 

பகவத்கீதையில்...

  • கர்ம யோகம், 
  • ஞான யோகம், 
  • பக்தி யோகம், 
  • சரணாகதி 

சொல்லப்பட்டு இருக்கிறது.


பகவத்கீதை சொன்னவர், சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.


மஹாபாரதத்தில் வரும் பகவத்கீதையை நமக்கு அப்படியே கொடுத்தவர் பகவான் வியாசர்.

வியாசர் "நான்கு வேதமும் ஒருவரே கலியில் படிக்க முடியாது" என்று தெரிந்து, நான்கு சிஷ்யர்களை கொண்டு வேதத்தை பிரித்து கொடுத்தார்.

அவரே சந்தியாவந்தனத்தையும் கலிக்கு தகுந்தாற்போல முறை செய்து கொடுத்தார்

பகவத்கீதை கேட்டு மஹாபாரதம் எழுதி விட்டு,  வியாசர் நமக்காக முறை செய்து கொடுத்த சந்தியாவந்தனத்தில், பகவத்கீதை இல்லாமல் இருக்க முடியுமா?


அவர் வகுத்து கொடுத்து, நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் பகவத்கீதை இருப்பதை நாம் காணலாம், அனுபவிக்கவும் செய்யலாம்.




1. கர்ம யோகம்

ஆசமனம், அங்க ரக்ஷை, பிராணாயாமம், பிறகு 2 குளியல் இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு, ஏதோ ஒரு வேலை (கர்மா) செய்வது போல தெரியும்.

ரக்ஷை இட்டு கொண்டாலும், குளித்தாலும், குடித்தாலும் நாம் அனைத்து கர்மாவையும் தெய்வத்தின் பெயரால் செய்வதால், செய்பவனுக்கு "கர்மயோகம்" என்பது புரியும்.

2. ஞான யோகம்

இப்படி தண்ணீரை வைத்து கொண்டு ஏதோ வேலை (கர்மா) செய்து கொண்டிருந்தவன், திடீரென்று அமைதியாக நின்று கொண்டு இருப்பான். பார்த்தால் "ஞானி" போன்று இருக்கும்.

செய்பவனோ, உண்மையில் காயத்ரீ ஜபம் செய்து கொண்டு பகவானை தியானம் செய்கிறான். அப்பொழுது நாம் "ஞானயோகம்" செய்கிறோம் என்பது புரியும்.


3. பக்தி யோகம்

தெளிந்த ஞானம் ஏற்பட்ட பிறகு, பகவானிடம் பக்தி ஏற்படும்.

இது வரை அமைதியாக நின்று கொண்டு இருந்தவன், திடீரென்று நான்கு திசையையும் வணங்கி, அபிவாதயே என்று நமஸ்காரம் செய்வதை பார்த்தால், பக்தி போல தோன்றும்.

செய்பவனும் 'பகவான் அனைத்து திசையிலும் இருக்கிறார்' என்று அனைத்து திசையையும், உள்ளும் புறமும் பொய் இல்லாமல் இருந்தால் நமக்கு காட்சி கொடுப்பார் (ரிதகும் சத்யம்) என்று சொல்லிக்கொண்டும், அவர் எப்படி இருக்கிறார் என்று வர்ணித்து கொண்டும் சொல்வதை கவனித்தால், "பக்தியோகம்" இது தானே என்று புரியும்.

4. சரணாகதி

பக்தியின் முடிவு சரணாகதி (surrender to god). பகவத்கீதையில் "ஸர்வ தர்மான்.." என்று சொல்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

பக்தனை பார்த்து, "அனைத்தையும் எனக்கு சமர்ப்பணம் செய்து விடு" என்கிறார்.

அது போல, "காயேன வாசா.." சொல்லி அனைத்தையும் "நரர்களுக்கு ஆதியாக இருக்கும் அந்த நாராயணனிடம் அனைத்தையும் ஸமர்ப்பிக்கிறேன்" என்று சொல்வதை பார்த்தால், சரணாகதி செய்கிறோம் என்பது அனுபவத்தில் நமக்கு புரியும்.


பகவத்கீதையில் உள்ள கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், சரணாகதி போன்றவற்றை நம் அனுபவத்தில் கொடுக்கும் இந்த சந்தியாவந்தனத்தை, அதன் அருமையை தெரிந்தும், யார் செய்யாமல் இருப்பார்கள்?


English Meaning Sandhya Vandanam:
Afternoon(to live 100yrs)
https://www.youtube.com/watch?v=0SYdzobuSYE
Evening (to avoid accidental death)
https://www.youtube.com/watch?v=iWyHeXyI8s0
Morning
https://www.youtube.com/watch?v=F9b31khruk4

தமிழ் அர்த்தம் சந்தியா வந்தனம்:
மதியம் (100 வயது வாழ)
https://www.youtube.com/watch?v=xszkkP3vB-0
மாலை (அகால மரணம் தவிர்க்க, நீண்ட காலம் வாழ
https://www.youtube.com/watch?v=B2bhRr7EB4k
காலை
https://www.youtube.com/watch?v=-SDhzQlvfRU

குருநாதர் துணை

Monday 31 October 2022

பாம்புக்கு இரண்டு நாக்கு ஏப்படி ஏற்பட்டது? கருடன் பெற்ற வரங்கள் என்ன? கருடன் விஷ்ணுவுக்கு கொடுத்த வரம் என்ன? வியாச பாரதம் அறிவோம்.

ஒரு சமயம், கஷ்யபர், புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்.

யாகத்துக்கு தேவையான உதவிகளை தேவர்களும், ரிஷிகளும்,கந்தர்வர்களும் செய்தனர்.


யாகத்துக்கு தேவையான ஸமித்துக்களை சேகரிக்க இந்திரனும், மற்ற தேவர்களும் உதவினர்.


இந்திரன் தன் சக்திக்கு ஏற்றார் போல, மலை அளவுக்கு ஸமித்துக்களை அள்ளி கொண்டு, சிரமமில்லாமல் வந்து கொண்டிருந்தான்


வரும் வழியில், ஆகாரம் இல்லாமல் உடல் மெலிந்து, உடலில் சக்தி இல்லாத நிலையில் வாலகில்ய ரிஷிகளை கண்டான்.

அவர்களை பார்த்து சிரித்து கொண்டே, அவர்களுக்கு மரியாதை செய்யாமல் விரைந்து சென்றான்.


இதை கண்ட அந்த ரிஷிகள், "இந்திரனின் கர்வத்தை அடக்க, அவனுக்கே பயத்தை கொடுக்கும், இந்திரனை காட்டிலும் பலம் வாய்ந்த மற்றொரு இந்திரன் (தலைவன்) உருவாகட்டும்" என்று சபித்து விட்டனர்.


இதை அறிந்த இந்திரன், கஷ்யபரிடம் முறையிட்டு, வழி கேட்டு பிரார்த்தனை செய்தான்.


நிலைமையை சமாளிக்க, கஷ்யபர், வாலகில்ய ரிஷிகளிடம் சென்றார்.


"ப்ரம்மா மூவுலகத்தையும் நிர்வாகம் செய்யட்டும் என்று இந்திர பதவி கொடுத்து இருக்கிறார். உங்களுக்கு இந்திரனிடம் ஏற்பட்ட கோபம் நியாயமே என்றாலும், இன்னொரு இந்திரனை உருவாக்கினால், அது பிரம்மாவுக்கு ஏற்புடையதாக இருக்காதே! ஆதலால் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.

வாலகில்ய ரிஷிகள், "கொடுத்த வாக்கை திரும்ப பெற முடியாதே! நீங்களே இதற்கு மாற்று வழியை சொல்லுங்கள்" என்றனர்.


காஷ்யபர் "அப்படியென்றால், பிறக்க போகும் அந்த மஹாபலசாலி பக்ஷிகளுக்கு இந்திரனாக இருக்கட்டும். நரர்களுக்கு இந்திரனாக இப்பொழுது இருக்கும் இந்திரனே இருக்கட்டும்" என்று சொன்னார்.


இதற்கு சம்மதம் தெரிவித்தனர் ரிஷிகள்.


அப்பொழுது வினதா தனக்கு புத்ரர்கள் வேண்டும் என்று விரதத்தில் இருந்தாள். அவள் கர்ப்பம் தரித்தாள்.


அவளிடம்  "உனக்கு 2 புத்ரர்கள் பிறப்பார்கள். இருவருமே மஹா பலசாலிகளாக இருப்பார்கள். இவர்களில் ஒருவன், உலகத்தாரால் பூஜிக்கப்படுபவனாக, நினைத்த ரூபம் எடுத்து கொள்பவனாக, மஹா வீரனாக, அனைத்து  பக்ஷிகளுக்கும் இந்திரனாக இருக்க போகிறான்" என்று கஷ்யபர் தெரிவித்தார்.


இந்திரனை பார்த்து, "பிறக்கபோவது சகோதரர்களாக இருக்க போவதால், பயப்பட வேண்டாம்" என்று சொல்லி சமாதானம் செய்து அனுப்பினார்.


அந்த வினதாவுக்கு அருணன் பிறந்தான். அருணன் சூரியனுக்கு சாரதியாக சென்றான்.


பிறகு, கருடன் பிறந்தார். கருடன் பக்ஷி ராஜனாக ஆனார்.


ஒரு சமயம், கருடன் தேவலோகம் சென்றார். கருடனை பார்த்த தேவர்கள் பயந்து நடுங்கினர்.


அமிர்த கலசத்தை "பௌமன்" என்ற தேவன் பாதுகாத்து கொண்டிருந்தான்.


கருடன் இறக்கைகளை அடித்து கொண்டு பறக்க, புழுதி கிளம்பி யார் எதிரில் நிற்கிறார்கள்? என்பதே தெரியாமல் போனது.


உடனே வாயு தேவனை கூப்பிட்டு கலைக்க சொல்லி, பெரும் யுத்தம் செய்தனர் தேவர்கள்.


கடைசியில்,

சாத்யர்களும், கந்தர்வர்களும் - கிழக்கு நோக்கியும்,

வசுக்களும், ருத்ரர்களும் - தெற்கு நோக்கியும்,

ஆதித்யர்கள் - மேற்கு நோக்கியும்,

நாசத்யர்கள் என்ற அஸ்வினீ தேவர்கள் - வடக்கு நோக்கியும், கருடனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஓடினர்.

साध्याः प्राचीं स-गन्धर्वा 

वसवो दक्षिणां दिशम् |

प्रजग्मुः सहिता रुद्राः 

पतगेन्द्र प्रधर्षिताः |

दिशं प्रतीचीम् आदित्या 

नासत्या: उत्तरां दिशम् ||

- வியாச மஹாபாரதம்

கடைசியாக அம்ருத கலசம் இருக்கும் இடத்துக்கு வந்த போது, நான்கு புறமும் தீ வானளாவி இருந்தது. இதற்கு நடுவில் அம்ருத கலசத்தை தேவர்கள் பாதுகாத்து வைத்து இருந்தனர்.

உடனே கருடன் 8100 வாய்களை எடுத்து கொண்டு, பல நதிகளை குடித்து, ஜ்வாலை விட்டு எறிந்து கொண்டிருந்த அக்னியை நனைத்தார்.


உடனே தன் உருவத்தை சிறியதாக ஆக்கி கொண்டு, சமுத்திரத்துக்குள் வேகமாக நதிகள் புகுந்து கொள்வது போல, பிரவேசித்தார்.


அப்பொழுது கூர்மையான கத்தி முனைகள் கொண்ட சக்கரம் சுழல்வதை கண்டார்.


சிறிது நேரம் அதனோடு தானும் சுற்றி பறந்து கொண்டே, சாமர்த்தியமாக அந்த இடைவெளியில் புகுந்து சென்று விட்டார்.


அங்கு, அந்த கலசத்தை காத்து கொண்டு இரண்டு மஹா சர்ப்பங்கள் கண்களில் விஷத்தோடு இருந்தன.


இதை கண்டு சிறிது கலங்கிய கருடன், புழுதியை கிளப்பி, அந்த சர்ப்பங்களின் கண்களை மறைக்க, அந்த சமயத்தில் உடனே பறந்து அந்த இரண்டு சர்ப்பங்களையும் பிடித்து கிழித்து எறிந்தார். 

அம்ருதத்தை தான் எடுத்து கொள்ளாமல், அங்கிருந்த அம்ருத கலசத்தை எடுத்து கொண்டு உயரே பறக்க ஆரம்பித்தார்.


அப்பொழுது, வைனதேயர் என்று அழைக்கப்படும் கருடனை, 'அம்ருதத்தில் ஆசையற்ற' கருடனை கண்டு சந்தோஷமடைந்த விஷ்ணு பகவான் அவர் முன் காட்சி கொடுத்தார்.


கருடனை பார்த்து, "உனக்கு நான் வரம் கொடுக்கிறேன். கேள்" என்றார்.

உடனே கருடன், "நான் உங்களுக்கு மேல் இருக்க ஆசைப்படுகிறேன். மேலும் அம்ருதம் உண்ணாமலேயே முதுமையும், மரணமும் இல்லாமல் இருக்க வேண்டும்" என்றார்.


"அப்படியே ஆகட்டும்" என்றார் பகவான்.


एवमस्त्विति तं विष्णुरुवाच विनतासुतम्।

प्रतिगृह्य वनौ तौ च गरुडो विष्णुम् अब्रवीत्।।

भवतेपि वरं दद्यां वृणोतु भगवानपि।

तं वव्रे वाहनं विष्णुर्नरुत्मन्तं महाबलम्।।

- வியாச மஹாபாரதம்

உடனே கருடன், "நான் உங்களுக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன். நீங்களும் கேட்க வேண்டும்" என்றார்.


மந்தஹாசம் செய்து கொண்டே பகவான், "நீ எனக்கு வாகனமாக இரு" என்றார்.


இப்படி உடன்படிக்கை ஆன பிறகு, கருடன் விஷ்ணு பகவானுக்கு வாகனமாகவும், பகவானுக்கு மேலே கருட கொடியாகவும் இருந்தார்.


விஷ்ணு பகவானிடம் தான் வந்த காரியத்தை முடித்து விட்டு வருவதாக சொல்லி அனுமதி பெற்று, மீண்டும் அம்ருத கலசத்தோடு கிளம்பினார்.


வழியில், இந்திரன் பறந்து கொண்டிருக்கும் கருடனை நோக்கி வஜ்ராயுதத்தை வீசினான்.


वज्रस्य च करिष्यामि तवैव च शतक्रतो।

एतत् पत्रं त्यजाम् एकं यस्यान्तं नोपलप्स्यसे।।

- வியாச மஹாபாரதம்

வஜ்ராயுதம் பட்டும் கலங்காத கருடன், இந்திரனை பார்த்து, "இந்திரா! இந்த வஜ்ராயுதம் எந்த ரிஷியின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த ரிஷிக்கும், இந்த வஜ்ராயுதத்துக்கும், உனக்கும் மரியாதை செலுத்துவதற்காக, இதோ என்னுடைய ஒரே ஒரு சிறகை விடுகிறேன்" என்று சொல்லி ஒரு சிறகை மட்டும் கீழே போட்டார்.


सुरूपं पत्रमालक्ष्य सुपर्णो अयं भवत्विति।

- வியாச மஹாபாரதம்

அந்த ஒரு சிறகின்  அழகை கண்டே சொக்கி போன தேவர்கள் அனைவரும் "இவர் ஸுபரணர்" என்று கருடருக்கு பெயரிட்டு ஜெயகோஷம் செய்தனர்.


இந்திரன் கருடனின் பராக்கிரமத்தை பார்த்து, தன்னோடு தோழமை கொள்ளுமாறு கேட்டு கொண்டான். மேலும் கருடனின் உண்மையான பலம் தான் என்ன? என்று அறிந்து கொள்ள ஆசைப்பட்டு கருடனிடமே கேட்டான்.

இப்படி சொன்ன தேவேந்திரனை பார்த்து, "தேவனே! புரந்தரனே ! நீ விரும்பியபடி உனக்கும் எனக்கும் ஸ்நேஹம் இருக்கட்டும். என்னுடைய பலம் பெரியது, தாங்க முடியாதது என்றும் அறிந்து கொள்.

தன் பலத்தை அறிந்தவர்கள், தன் பலத்தை குறித்து பெருமையாக பேசிக்கொள்வதில்லை.

தன்னை பற்றி தானே பெருமை சொல்லி கொள்பவன், பிறரால் தூஷணைக்கு உள்ளாகிறான்.

ஆனால், பிறர் கேட்டால், அவர்களுக்கு தன்னை பற்றி சொல்லலாம்.

தானாக சொல்வது கூடாது.

நீ கேட்டதால், உனக்கு என்னை பற்றி சொல்கிறேன்.

மலைகள், காடுகள் கடல்கள் கொண்ட இந்த பூமியை, இதில் இருக்கும் உன்னையும் சேர்த்து, மற்ற உயிரைகளோடு சேர்த்து, ஒரே ஒரு சிறகினால் தூக்கி விடுவேன். இது என்னுடைய பலம் என்று அறிந்து கொள்" என்றார் கருடன்.


இதை கேட்ட தேவேந்திரன், "உம்முடைய பலத்தை ஒப்புக்கொள்கிறேன். எங்களிடம் ஸ்நேஹம் கொள்ளுங்கள். உமக்கு இந்த அம்ருதம் தேவையென்றால் எடுத்து கொள்ளுங்கள். தேவை இல்லையென்றால், எங்களுக்கு திருப்பி தந்து விடுங்கள். இதை மற்றவர்களுக்கு கொடுத்தால், அதன் பலத்தை கொண்டு எங்களை எதிர்ப்பார்கள்" என்றான்.


கருடன், "இதை நான் ஒரு காரணமாக கொண்டு செல்கிறேன். நான் இந்த அம்ருத கலசத்தை ஒரு இடத்தில் வைக்கும் போது, அதை நீங்கள் எடுத்து செல்லுங்கள்" என்றார்


இதை கேட்ட இந்திரன் சந்தோஷமடைந்து, "கருடா ! நீ என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான்.


கருடன், "நான் சர்வ வல்லமை உடையவன் என்றாலும், நீ கேட்பதால் சொல்கிறேன். மிகுந்த வலிமையான சர்ப்பங்கள் எனக்கு உணவாக ஆகட்டும்" என்றார்.


"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, கொடுத்த வரத்தை பற்றி விஷ்ணு பகவானிடம் தெரிவித்து, அவர் சம்மதத்தையும் பெற்றான்.


கருடன் கடைசியாக வினதையிடம் வந்து "அம்மா! தேவலோகத்தில் இருந்து அம்ருதத்தை கொண்டு வந்துள்ளேன். என்ன செய்ய வேண்டும். கட்டளை இடுங்கள்" என்றார்.


தாயான வினதா, "பெரிதும் மகிழ்ந்தேன். நீ மூப்பு இல்லாமல், மரணமில்லாமல் தேவர்களுக்கு அன்பானவனாக இருப்பாய்" என்றாள்


உடனே அங்கிருந்த கத்ருவின் பிள்ளைகளான சர்ப்பங்களை பார்த்து, "இதோ அம்ருதம். இதை இந்த தர்ப்பை பாயில் வைக்கிறேன். ஸ்நானம் செய்து விட்டு, இதை உண்ணுங்கள். நீங்கள் சொன்னபடி அம்ருதத்தை கொண்டு வந்து விட்டேன். ஆதலால் நீங்கள்  அமர்ந்து இப்பொழுதே 'என் தாய் உங்கள் தாயாரான கத்ருவுக்கு  அடிமை இல்லை'  என்று ஆக வேண்டும்" என்றார்.


அந்த சர்ப்பங்கள் "அப்படியே ஆகட்டும்" என்று கருடனின் தாயான வினதாவின் அடிமை விலங்கை விலக்கினார்கள்


இப்படி இவர்கள் சொல்லி விட்டு ஸ்நானம் செய்ய கிளம்ப, உடனே தேவேந்திரன் அங்கு வந்து அம்ருத கலசத்தை எடுத்து கொண்டு மீண்டும் தேவலோகம் சென்று விட்டான்.


ஸ்நானம் செய்து விட்டு, திரும்பி வந்த சர்ப்பங்கள், அம்ருத கலசம் காணாமல் போனதை கண்டன.


सोमस्थानम् इदं चेति दर्भांस्ते लिलिहु: तदा।

ततो द्विधा कृता जिह्वाः सर्पाणां तेन कर्मणा।    

अभवंश्च अमृत स्पर्शाद् दर्भास्तेऽथ पवित्रिणः।।

- வியாச மஹாபாரதம்

அம்ருதம் இருந்த இடம் என்பதால், போட்டி போட்டு கொண்டு அந்த தர்ப்பை பாயை நக்கின.

இதனால், பாம்பின் நாக்குகள் இரண்டாக பிளந்தன.

யாராலும் எதிர்க்க முடியாத கருடனை பார்த்து பயந்த சர்ப்பங்கள் ஓடி ஒளிந்தன. எதிர்த்த சர்ப்பங்களை உணவாக உண்டு விட்டார் கருடன்.


பிறகு தன் தாயோடு வசித்து கொண்டு, பக்ஷிகளுக்கு ராஜனாக இருந்து கொண்டு, ப்ரஸித்தியோடு இருந்தார் கருடன்.


இந்த சரித்திரத்தை கேட்பவன், படிப்பவன், கருடனுடைய சங்கீர்த்தனத்தால் நிச்சயம் ஸ்வர்க்கம் அடைவான்.

Friday 21 October 2022

பாண்டிய ராஜ்யத்தில் நடந்த ஒரு நிகழ்வு... - பாண்டிய அரசரும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு... தெரிந்து கொள்வோம்.

பாண்டிய ராஜ்யம் - பாண்டிய அரசரும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவு. ஆதி பர்வம், 235 அத்தியாயம்

அர்ஜுனன் தீர்த்த யாத்திரையாக 12 மாதங்கள் மேலும் ஒரு மாதம் வனத்தில் இருந்து விட்டு, மேலும் தொடர்ந்து பயணித்து, நாக கன்னிகையையும் (உலூபி), பிறகு பாண்டிய அரசனின் புதல்வியையும் (சித்ராங்கதை என்ற‌ தமிழ் பெண்) மணந்து கொண்டான். (தீர்த்த யாத்திரை முடித்து கொண்டு திரும்பும் போது, துவாரகை (gujarat) சென்ற போது, தன் தங்கை சுபத்திரையை அர்ஜுனன் மணந்து கொள்ள உதவினார் ஶ்ரீ கிருஷ்ணர்.

अर्जुनं पुरुष-व्याघ्रं स्थिर आत्मानं गुणैः युतम्।

स वै संवत्सरं पूर्णं मासं च एकं वने वसन्।।

तीर्थयात्रां च कृतवान् नाग-कन्याम् अवाप च।

पाण्ड्यस्य तनयां लब्ध्वा तत्र ताभ्यांसहोषितः'।। 

Adi parva 61


தீர்த்தயாத்திரைக்கு சென்ற அர்ஜுனன் கங்கையில் ஸ்நானம் செய்த போது, நாக கன்னிகை "உலூபி" இழுத்து கொண்டு தன் இடத்துக்கு சென்றாள். அவள் தன்னை மணக்கும் படியாக கேட்க, உலூபியை மணந்து கொண்ட அர்ஜுனன், ஒரு நாள் அவளோடு தங்கி விட்டு, மேலும் தீர்த்த யாத்திரையை தொடர்ந்தான்.


பிறகு இமய மலைக்கு சென்றான். பல புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்தான்.


பிறகு கிழக்கு நோக்கி பிரயாணம் செய்து, வரும் வழியில் நைமிசாரண்யத்தில் பல நதிகளில் ஸ்நானம் செய்து, பிறகு கயா சென்று அங்கும் ஸ்நானம் செய்து, பிறகு வங்க (bengal), களிங்க (orisaa), தேசங்களில் உள்ள புண்ய நதிகளில் ஸ்நானம் செய்து, அங்குள்ள கோவில்கள் மாளிகைகளை தரிசித்து கொண்டே, மேலும் ப்ரயாணம் செய்து, மஹேந்திர மலையை கண்டு, பிறகு கோதாவரியில் ஸ்நானம் செய்து, பிறகு, கடல் வரை சேரும் காவிரி நதியில் ஸ்நானம் செய்து, தேவரிஷி பித்ரு தர்ப்பணம் செய்தான்,

मणलूर् ईश्वरं राजन् धर्मज्ञं चित्रवाहनम्।

तस्य चित्राङ्गदा नाम दुहिता चारु दर्शना।।

பிறகு, மணலூர் (மதுரை) என்ற தேசத்துக்கு சென்று அந்த அரசரை சந்தித்தான். அவளுக்கு சித்ராங்கதை என்ற பெண் இருந்தாள்.

तां ददर्श पुरे तस्मिन् विचरन्तीं यदृच्छया।

दृष्ट्वा च तां वरारोहां चकमे चैत्रवाहनीम्।।

அவள் அந்த பட்டிணத்தில் சுதந்திரமாக சஞ்சரிப்பதை கண்டான் அர்ஜுனன். சித்ரம் போல இருக்கும் அவளை கண்டதுமே அவளை விரும்பினான் அர்ஜுனன்.




अभिगम्य च राजानमवदत्स्वं प्रयोजनम्।

देहि मे खल्विमां राजन् क्षत्रियाय महात्मने।।

தன் விருப்பத்தை அந்த தேசத்தின் அரசரிடம் நேராக சென்று "அரசே! உங்கள் பெண்ணை க்ஷத்ரியனான எனக்கு கொடுங்கள்" என்று தெரிவித்தான்.


तच्छ्रुत्वा त्वब्रवीद् राजा कस्य पुत्रोऽसि नाम किम्।

उवाच तं पाण्डवोऽहं कुन्तीपुत्रो धनञ्जयः।।

இதை கேட்ட அரசர், "நீ யாருடைய புதல்வன்? உன் பெயர் என்ன?" என்று கேட்டார். அர்ஜுனன் "நான் பாண்டவன். குந்தி புத்ரன் தனஞ்சயன்" என்றான்.


तम् उवाचाथ राजा स सान्त्व पूर्वम् इदं वचः।

राजा प्रभञ्जनो नाम कुले अस्मिन्संबभूव ह।।

அர்ஜுனன் பேசியதை கேட்ட அரசன், மிகவும் சாந்தமாக பேச தொடங்கினார்.."எங்கள் ராஜ்யத்தில் ஒரு சமயம் பிரபஞ்சன் என்ற ஒரு அரசர் இருந்தார்.

अपुत्रः प्रसवेनार्थी तपस्तेपे स उत्तमम्।

उग्रेण तपसा तेन देवदेवः पिनाक-धृक्।।

ईश्वरस्तोषितः पार्थ देवदेवः उमापतिः।

स तस्मै भघवान्प्रादाद् एकैकं प्रसवं कुले।।

குழந்தை பாக்கியம் இல்லாத அந்த அரசர், தனக்கு சந்ததி அமைய தவம் செய்தார். அவருடைய உக்ரமான தவத்தால் தேவாதி தேவனும், பினாகி என்ற ஆயுதம் கையில் ஏந்திய உமாபதியான சிவபெருமான் ப்ரசன்னமானார். மேலும் அந்த உமாபதி அரசரை பார்த்து. "உங்கள் குலத்தில் ஒவ்வொரு குழந்தை தான் பிறக்கும்" என்று சொன்னார்.


एकैकः प्रसव: तस्माद् भवति अस्मिन् कुले सदा।

तेषां कुमाराः सर्वेषां पूर्वेषां मम जज्ञिरे।।

இதன் காரணத்தால், இன்று வரை இந்த குலத்தில் ஒவ்வொரு சந்ததிக்கும் ஒரே ஒரு குழந்தை தான் பிறக்கிறது. என்னுடைய முன்னோர்கள் வரை, அனைவருக்கும் ஆண் குழந்தையே பிறந்தனர்.


एका च मम कन्येयं कुलस्योत्पादनी भृशम्।

पुत्रो ममायमिति मे भावना पुरुषर्षभ।।

पुत्रिका-हेतु विधिना संज्ञिता भरतर्षभ।

तस्माद् एकः सुतो योऽस्यां जायते भारत त्वया।।

एतच्छुल्कं भवत्वस्याः कुल कृज्जायताम् इह।

एतेन समयेनेमां प्रतिगृह्णीष्व पाण्डव।।

स तथेति प्रतिज्ञाय तां कन्यां प्रतिगृह्य च।

मासे त्रयो-दशे पार्थः कृत्वा वैवाहिकीं क्रियाम्।

उवास नगरे तस्मिन् मासांस्त्रीन्स तया सह।।

"புருஷர்களில் சிறந்தவனே ! எனக்கு பிறந்த ஒரே பெண் குழந்தை இவள். இவள் தான் என் குலத்தை வளர செய்பவளாக இருக்கிறாள்.

இவள் பெண் குழந்தையாக இருந்தாலும், இவளை சந்ததி வளர்க்கும் புத்ரன் என்றே நினைக்கிறேன். உன் மூலமாக இவளுக்கு பிறக்கும் குழந்தை என் குலத்தை எடுத்து செல்பவனாக இருக்க வேண்டும். இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் நான் என் பெண்ணை உன் கையில் ஓப்படைக்க சம்மதிக்கிறேன்" என்றார் அரசர். அர்ஜுனன் "அப்படியே ஆகட்டும்" என்று சபதம் செய்து 12 மாத தீர்த்த யாத்திரை முடிந்த நிலையில், அவளை முறையாக மணம் செய்து கொண்டு, 3 மாதங்கள் பாண்டிய தேசத்திலேயே இருந்தான்.

அதன் பிறகு, அர்ஜுனன் தென் சமுத்திர (கன்யாகுமரி) கரை வரை சென்றான். அங்கு பல புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தான். அங்கிருந்த ரிஷிகள் குறிப்பாக "அகஸ்திய தீர்த்தம், ஸௌபத்ர தீர்த்தம், பௌலோம தீர்த்தம், காரந்தம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம் என்ற 5 தீர்த்தங்களில் மட்டும் ஸ்நானம் செய்ய வேண்டாம்" என்று தடுத்தனர்.


ग्राहाः पञ्च वसन्त्येषु हरन्ति च तपोधनान्।
तत एतानि वर्ज्यन्ते तीर्थानि कुरुनन्दन।।

அதில் மனிதர்களை விழுங்கும் 5 பெரும் முதலைகள் இருப்பதை சொல்லி எச்சரித்தார்கள்.


மஹா வீரனான அர்ஜுனன், கவலையே இல்லாமல் இறங்கி, அதில் தன்னை விழுங்க வந்த ஒரு முதலையை தூக்கி கொண்டு வந்து கரையில் போட்டான்.


ரிஷிகள் பார்க்க, அந்த முதலை உருமாறி, சர்வ ஆபரணங்கள் அணிந்த அப்சரஸாக மாறினாள்.


அந்த தேவ லோக அப்சரஸ் மேலும் தன்னுடைய 4 தோழிகள் முதலையாக இருப்பதை சொல்லி, அவர்களையும் சாப விமோசனம்  செய்யுமாறு பிரார்த்தனை செய்தாள்.


தாங்கள் ஐவரும், தவம் செய்து கொண்டிருந்த ப்ராம்மணனை மயக்க நினைத்து அவர் முன் நடனம் ஆடி, பேச்சு கொடுத்த போது, "100 வருடங்கள் முதலையாக போங்கள்" என்று சபித்ததை சொன்னாள்.


அதே சமயம், "ஒரு புருஷ ஸ்ரேஷ்டன் ஒரு நாள் வந்து உங்களை தூக்கி கரை ஏற்றும் போது, சாபம் நீங்கும்" என்று சமாதானமும் செய்தார்.


இதை கேட்ட மஹா வீரனான அர்ஜுனன், மீண்டும் இறங்கி, மற்ற 4 முதலைகளையும் அடக்கி, தூக்கி கொண்டு கரையில் விட்டான். உடனே அனைவரும் தங்கள் தங்கள் உருவத்தை பெற்று, அர்ஜுனனுக்கு நன்றி கூறி, தேவலோகத்துக்கு சென்றனர்.


பிறகு மீண்டும் சித்ராங்கதை இருக்கும் மணலூர்க்கு (மதுரைக்கு) சென்ற அர்ஜுனன், அவள் மூலம் "பப்ரு வாகனன்" என்ற மகனை பெற்றான்.


बभ्रुवाहन नाम्ना तु 

मम प्राणो बहिश्चरः।

तस्माद्भरस्व पुत्रं वै 

पुरुषं वंशवर्धनम्।।

அந்த அரசரை பார்த்து, "என் மகனான 'பப்ரு வாகனனை' உமக்கே தருகிறேன். நீங்கள் என் மகனை வாங்கி கொண்டு, எனக்கு விடுதலை தாருங்கள்" என்று கேட்டான்.

தன் மனைவியான சித்ராங்கதையை பார்த்து, "நீ இங்கேயே இருந்து கொண்டு இரு. பப்ரு வாகனனை நன்றாக வளர்த்து வா. உனக்கு சுகம் உண்டாகட்டும். இவன் வளர்ந்த பிறகு இந்த்ரப்ரஸ்தம் வா. அங்கு மாதா குந்தி தேவி, யுதிஷ்டிரர், பீமன், என்னுடைய இளைய சகோதரர்கள், மற்ற எனது உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களை நீ பார்க்கலாம். என் சொந்தங்களோடு நீயும் சுகமாக இருக்கலாம்.




அன்பானவளே! தர்மத்தில் இருப்பவரும், சத்தியத்தை விடாதவருமான என் சகோதரர் யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய போகிறார்.


உலகத்துக்கே அவர் சக்கரவர்த்தி என்ற பட்டத்தோடு அவர் ராஜ சுய யாகம் செய்து கொள்ளும் போது, உன் தந்தையோடு நீயும் வா. அங்கு உன்னை பார்க்கிறேன்.


இப்பொழுது நம் புத்திரனை காப்பாற்றி வளர்த்து கொண்டு இரு. துக்கப்படாதே!

எனது உயிரே பப்ரு என்ற உருவத்தோடு இருக்கின்றான் என்று பார்.  இந்த வம்சத்தை விருத்தி செய்ய போகும் பப்ருவை பார்த்து கொள்.

என் பிரிவினால் வருத்தப்படாதே !"

என்று அர்ஜுனன் சொல்லி சமாதானம் செய்தான்.


பிறகு மேலும் யாத்திரையை தொடர்ந்து கடற்கரை பக்கம் வந்து, கடைசியாக கேரள தேசம் தாண்டி, புண்யமான கோகர்ண க்ஷேத்ரம் (கர்நாடக) நோக்கி சென்றான்.


பாண்டிய தேசத்துக்கு அர்ஜுனன் சென்றதை பிறகு துரியோதனனும் சொல்கிறான்.

துரியோதனன் தன் தகப்பனார் த்ருதராஷ்டிரனிடம் மீண்டும் ஒரு முறை பாண்டவர்களை சூதாட அழைக்க சொல்லி.. அர்ஜுனனின் பராக்ரமத்தையும், அவன் தீர்த்த யாத்திரை செய்த போது, பலராமரையும் யாதவ சேனையையும் ஒரே ஆளாக எதிர்த்து போரிட்டதையும் சொல்லி பயம் கொள்கிறான்.


தீர்த்த யாத்திரை செய்த அர்ஜுனன், தமிழகம் வந்து, பாண்டிய தேசத்து அரசனின் குமாரியை மணந்தான் என்று சொல்கிறான்.


ततो गोदावरीं कृष्णां कावेरीं चावगाहत।

तत्र पाण्ड्यं समासाद्य तस्य कन्यामवाप सः।।

இப்படி தீர்த்த யாத்திரை செய்து வந்த அர்ஜுனன், கோதாவரி, கிருஷ்ணா, காவேரீ போன்ற புண்ய நதிகளில் நீராடி கொண்டே சென்றான். பிறகு பாண்டிய தேசம் சென்று, அந்த அரசரின் பெண்ணை மணம் செய்து கொண்டான்.


लब्ध्वा जिष्णुर्मुदं तत्र ततो याम्यां दिशं ययौ।

பிறகு மேலும் சந்தோஷத்தோடு மேலும் தென் திசை நோக்கி தீர்த்தயாத்திரை தொடர்ந்தான்.


स दक्षिणं समुद्रान्तं गत्वा चाप्सरसां च वै।

कुमार-तीर्थम् आसाद्य मोक्षयामास च: अर्जुनः।।

தெற்கு கோடிக்கு சென்ற அர்ஜுனன், தேவர்களில் அப்சரஸ் அதிகம் சஞ்சரிக்கும் குமார தீர்த்தம் (கன்னியாகுமாரி) வந்து, அங்கு 5 அப்சரஸ்கள் முதலையாக சாபத்தில் இருப்பதை அறிந்து, தன் பலத்தினாலும், கரையில் எடுத்து சாப விமோசனம் செய்து விடுவித்தான்.


இவ்வாறு துரியோதனன் அர்ஜுனனை பற்றி சொல்கிறான்.

 

யார் அந்த பாண்டிய அரசன்? அவர் பெயர் என்ன?

இவர்கள் பெயரை சஹதேவன் ராஜசூய யாகத்துக்கு திக்விஜயம் சென்ற போது, அவர்களை பார்த்த பொழுது, அறிகிறோம்.


प्रतिजग्राह तस्याज्ञां सम्प्रीत्या मलयध्वजः।।

- Vyasa Mahabharata

அர்ஜுனனின் மாமனாரும், பாண்டிய அரசரான "மலயத்வஜ" அரசரிடம் தான் வந்திருப்பதை தெரிவிக்க தன் தூதுவனை அனுப்பினார், சஹதேவன். உடனேயே, பாண்டிய ராஜன் சஹதேவன் கட்டளையை அன்புடன் அங்கீகரித்தார்.

भार्या रूपवती जिष्णोः पाण्ड्यस्य तनया शुभा।

चित्राङ्गदेति विख्याता द्रमिडी योषितां वरा।।  

आगतं सहदेवं तु सा श्रुत्वाऽन्तः पुरे पितुः।

प्रेषयामास सम्प्रीत्या पूजारत्नं च वै बहु।।

- Vyasa Mahabharata

அர்ஜுனனின் மனைவியும், பாண்டியராஜனின் மகளுமான அழகில் சிறந்தவளான, நல்ல லக்ஷணங்கள் கொண்ட, பெண்களில் சிறந்தவளான, தமிழ் பெண்ணான 'சித்ராங்கதை', சஹதேவன் வந்திருப்பதை தன் தந்தை மூலமாக அறிந்து கொண்டு,  பல வகையான விலையுயர்ந்த பொருள்களையும், ரத்தினங்களையும், முத்துக்களையும், பவழங்களையும், தூதர்களிடம் கொடுத்து சஹதேவனுக்கு அனுப்பினாள்.


पाण्ड्योऽपि बहु-रत्नानि दूतैः सह मुमोच ह।

मणिमुक्ताप्रवालानि सहदेवाय कीर्तिमान्।।

तां दृष्ट्वाऽप्रतिमां पूजां पाण्डवोऽपि मुदा नृप।

भ्रातुः पुत्रे बहून्रत्नान्दत्वा वै बभ्रूवाहने।।

- Vyasa Mahabharata

அந்த நிகரற்ற மரியாதையை கண்ட சஹதேவன், மிகுந்த ஆனந்தம் அடைந்து, தன் சகோதரன் புதல்வனான பப்ருவாஹனனுக்கு  தானே ரத்தினங்களை அள்ளி கொடுத்து, ஆனந்தப்பட்டார்.




पाण्ड्यं द्रमिड-राजानं श्वशुरं मलयध्वजम्।

स दूतैस्तं वशे कृत्वा मणलूर् ईश्वरं तदा।।

ततो रत्नान्युपादाय द्रमिडै: आवृतो ययौ।

अगस्त्यस्यालयं दिव्यं देवलोकसमं गिरिम्।। 

- Vyasa Mahabharata

பாண்டிய தேசத்தின் தமிழ் அரசனும், மணலூர் (மதுரை) தேசத்தை ஆளும், அர்ஜுனனுக்கு மாமனாருமான மலயத்வஜ பாண்டியனை தன் தூதர்களை அனுப்பி தன் வசப்படுத்தி அவரிடம் ரத்தினங்களை பெற்று கொண்டு, தமிழ் மக்களால் சூழப்பட்ட சஹதேவன் அகத்திய ரிஷியின் திவ்யமான மலையை நோக்கி மேலும் புறப்பட்டார்.


स तं प्रदक्षिमं कृत्वा मलयं भरतर्षभ।

लङ्घयित्वा तु माद्रेय: ताम्रपणीं नदीं शुभाम्।। 

प्रसन्नसलिलां दिव्यां सुशीतां च मनोहराम्।

समुद्र तीरम् आसाद्य न्यविशत् पाण्डु-नन्दनः।।

-Vyasa Mahabharata

ஜனமேஜயா! கிளம்பும் முன், மலயத்வஜ பாண்டியனை வலம் வந்து நமஸ்கரித்து புறப்பட்ட சஹதேவன், கிளம்பி குளிர்ச்சியான நீரை கொண்ட தாம்ரபரணி நதியோரம் வழியாக, இலங்கையை நோக்கி வந்து பயணம் மேற்பட்ட சஹதேவன், கடற்கரையை அடைந்தார்