Followers

Search Here...

Wednesday 12 April 2023

யக்ஷன் கேள்விகள், தர்மபுத்திரர் யுதிஷ்டிரர் பதில்கள் - ஆதி பர்வா. அறிவோம் வியாசர் மஹாபாரதம்

யக்ஷன் கேள்விகள், தர்மபுத்திரர் யுதிஷ்டிரர் பதில்கள்… வியாசர் மஹாபாரதம்

किंस्विद् आदित्यम् उन्नयति के च तस्य अभित: चराः।

कश्चैनम् अस्तं नयति कस्मिंश्च प्रति-तिष्ठति ॥ Adi Parva

யார் சூரியனை உதிக்க செய்கிறார்?

சூரியனுக்கு பக்கத்தில் யார் போகிறார்கள்?

யார் சூரியனை அஸ்தமிக்க செய்கிறார்?

எதில் சூரியன் நிலை பெற்று இருக்கிறார்?

ब्रह्म आदित्यम् उन्नयति देवा: तस्य अभित: चराः।

धर्म: चा अस्तं नयति च सत्ये च प्रति-तिष्ठति ॥

பரமாத்மா (ப்ரம்மம்) சூரியனை (ஜீவனை) உதிக்க செய்கிறார்.

தேவர்கள் (மனமும், புலனும்) சூரியனுக்கு (ஜீவனுக்கு) பக்கத்தில் போகிறார்கள்.

பரமாத்மாவின் சட்டம் என்ற தர்மமே (பக்தியால்) சூரியனை (ஜீவன்) அஸ்தமிக்க செய்கிறது (மோக்ஷம் அடைகிறான்)

சத்தியத்தில்  (பரமாத்மாவின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு) சூரியன் (ஜீவன்) நிலை பெற்று இருக்கிறான்.

 केनस्विद् श्रोत्रियः भवति केनस्विद् विन्दते महत्।

केनस्विद्  द्वितीयवान् भवति राजन् केन च बुद्धिमान् ॥

எதனால் மனிதன் ஸ்ரோத்ரியனாகிறான் (வேதம் படித்தவன்)?

எதனால் மனிதன் மகத்தை (பெருமை) அடைகிறான்?

எதனால் மனிதன் துணை உள்ளவனாகிறான்?

எதனால் மனிதன் புத்திமானாகிறான்?

श्रुतेन श्रोत्रियो भवति तपसा विन्दते महत्।

धृत्या द्वितीयवान् भवति बुद्धिमान् वृद्ध सेवया ॥

வேதம் ஓதுவதால் மட்டுமே மனிதன்  ஸ்ரோத்ரியனாகிறான்.

தவத்தால் (action without giveup) மனிதன் மகத்தை (பெருமை) அடைகிறான்

தைரியத்தினால் மனிதன் துணை உள்ளவனாகிறான்.

வயதானவர்களை கைவிடாமல் அவர்களுக்கு சேவை செய்யும் மனிதன் புத்திமானாகிறான்.

किं ब्राह्मणानां देवत्वं क: च धर्मः सतामिव।

क: च एषां मानुषो भावः किम् एषां सतामिव ॥

ப்ராம்மணன் (MLA, MP) தேவ தன்மையை (ஸத்வ குணத்தை/சாஸ்திரத்தை மீறாத குணத்தை) எப்போது பெறுகிறான்?

ப்ராம்மணனிடம் (MLA, MP) இருக்க வேண்டிய சாது தர்மம் எது?

பிராம்மணன் (MLA, MP) எப்போது மனித தனமையை அடைகிறான்?

ப்ராம்மணனிடம் (MLA, MP) இருக்க கூடாத அசட்டு குணம் எது?

स्वाध्याय एषां देवत्वं तप एषां सतामिव।

मरणं मानुषो भावः परिवाद: असतामिव ॥

ப்ராம்மணன் வேதம் அத்யயனம் செய்வதால் தேவ தன்மை பெறுகிறான். (வேதம் படிக்க படிக்க சமம்-தமம் (மன அடக்கம், புலன் அடக்கம்) உண்டாகும், ஆத்மாவே நான் என்று அறிகிறான்)

ப்ராம்மணனிடம் இருக்க வேண்டிய குணம் - தவமே (வேதத்தின் அர்த்தத்தை நினைத்து கொண்டே இருப்பதே)

‘ஆத்மா நான்’ என்பதை மறந்து, தேகம் அழியும் மரணத்தை கண்டு பயப்படும்  பிராம்மணன் மனித தனமையை அடைகிறான்

ப்ராம்மணனிடம் இருக்க கூடாத குணம் - பரநிந்தை (பிறரை பற்றி குறை சொல்வது)

किं क्षत्रियाणां देवत्वं क: च धर्मः सतामिव।

क: च एषां मानुषो भावः किं एषाम् सतामिव ॥

க்ஷத்ரியன் (Police/Army) தேவ தன்மையை (சாஸ்திரத்தை மீறாத குணம்) எப்போது பெறுகிறான்?

க்ஷத்திரியனிடம் இருக்க வேண்டிய சாது தர்மம் எது?

க்ஷத்திரியன் எப்போது மனித தனமையை அடைகிறான்?

க்ஷத்திரியனிடம் இருக்க கூடாத அசட்டு தர்மம் எது?

इषु अस्त्रम् एषां देवत्वं यज्ञ एषां सतामिव।

भयं वै मानुषो भावः परित्यागो असतामिव ॥

க்ஷத்திரியன் பாணங்களாலும், அஸ்திரங்களாலும் தேவத்தன்மையை பெறுகிறான்.

உலக நன்மைக்காக யாகங்கள் செய்வதே,  க்ஷத்திரியனிடம் இருக்க வேண்டிய சாது தர்மம்

பயப்படும் போது க்ஷத்திரியன்  மனித தன்மையை அடைகிறான்.

நம்பியவனை கைவிடுவதே க்ஷத்திரியனிடம் இருக்க கூடாத அசட்டு தர்மம்

किम् एकं यज्ञियं साम किम् एकं यज्ञियं यजुः।

का च: एषां वृणुते यज्ञं कां यज्ञो नातिवर्तते ॥

யாகத்திற்கு முக்கியமான ஸாமம் எது? 

யாகத்திற்கு முக்கியமான யஜுஸ் எது? 

யாகத்தை எது தாங்குகிறது? 

யாகம் எதை மீறாமல் இருக்கிறது?

प्राणो वै यज्ञियं साम मनो वै यज्ञियं यजुः।

ऋग् एका वृणुते यज्ञं तां यज्ञो नातिवर्तते ॥

இதயத்தில் இருக்கும் பிராணனே யாகத்திற்கு முக்கியமான ஸாமம்.

மனமே யாகத்திற்கு முக்கியமான யஜுஸ். 

ரிக் மந்திரங்களே யாகத்தை தரிக்கிறது.

யாகம் ரிக் மந்திரங்களை மீறாமல் இருக்கிறது.

யாகம் செய்யும் போது, ரிக் மந்திரங்கள் சொல்லி பெருமாளை அழைக்கிறோம். பிறகு யஜுர் மந்திரங்கள் மன ஈடுபாட்டுடன் சொல்லி, பெருமாளுக்கு அக்னியின் வழியாக நெய்வேத்யம் செய்கிறோம். இதை ஏற்று கொண்ட பெருமாளை ஸாம கானம் பாடி ஆனந்தப்படுத்துகிறோம். உலகத்தில் ஏதாவது அடைய ஆசை இருந்தால், கடைசியாக, அதர்வண மந்திரங்கள் சொல்லி, நமக்கு தேவையான ஆசைகளை சொல்லி, அவரிடம் வரம் வாங்குகிறோம்.

किंस्वित् आवपतां श्रेष्ठं किंस्विन् निवपतां वरम्।

किंस्वित् प्रतिष्ठमानानां किस्वित् प्रसवतां वरम् ॥

பயிர் செய்பவனுக்கு சிறந்தது எது?

விதைப்பவனுக்கு எது சிறந்தது?

தன்னை நிலைநிறுத்தி கொள்ள விரும்புபவர்களுக்கு எது சிறந்தது?

சந்ததிக்கு எது சிறந்த வரம்?

वर्षम् आवपतां श्रेष्ठं बीजं निवपतां वरम्।

गावः प्रतिष्ठमानानां पुत्रः प्रसवतां वरः ॥

மழையே பயிர் செய்பவனுக்கு சிறந்தது.

நல்ல விதையே விதைப்பவனுக்கு சிறந்தது.

தன்னை நிலைநிறுத்தி கொள்ள விரும்புபவர்களுக்கு பசுக்களே சிறந்தது.(பசுக்களை காப்பவனை, பசுக்கள் காக்கும்)

புத்ர பாக்கியமே சிறந்த வரம்.

इन्द्रियार्थान् अनुभवन् बुद्धिमान् लोकपूजितः।

संमतः सर्वभूतानाम् उच्छ्वसन् को  न जीवति ॥

கண் காது மூக்கு, நாக்கு, தோல் போன்ற 5 புலன்களால் விஷயங்களை அனுபவிக்கிறான்.

சிறந்த புத்தி உள்ளவனாகவும் இருக்கிறான்.

உலகத்தாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும் இருக்கிறான்.

அனைத்து உயிர்களுக்கும் சம்மதமாகவும் இருக்கிறான்.

மூச்சு விட்டுக்கொண்டும் இருக்கிறான்.

ஆனால் உயிரில்லாதவனாக இருக்கிறான். அவன் யார்?

देवता अतिथि भृत्यानां पितॄणाम् आत्मनश्च यः।

न निर्वपति पञ्चानाम् उच्छ्वसन्न स जीवति ॥

எவன் தெய்வங்களுக்கும், அதிதிகளுக்கும் (வீட்டிற்கு திடீரென்று வந்தவர்களுக்கும்), தனக்கு வேலை செய்பவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தனக்கும் எவன் பூஜை (உணவு/மரியாதை) செய்வதில்லையோ, அப்படிப்பட்டவன், மூச்சு விட்டு கொண்டிருந்தாலும், அவன் உயிரில்லாதவனாகவே இருக்கிறான்.

किंस्विद् गुरुतरं भूमेः किंस्विद् उच्चतरं च खात्।

किंस्विद् शीघ्रतरं वायोः किंस्विद् बहुतरं तृणात् ॥

பூமியை காட்டிலும் கனமானது எது?

ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தது எது?

காற்றை விட வேகமானது எது?

புல்லை காட்டிலும் வேகமாக வளர்வது எது?

माता गुरुतरा भूमेः खात्पित: उच्चतर: तथा।

मनः शीघ्रतरं वाता:

चिन्ता बहुतरी तृणात् ॥

பிள்ளை மதித்தாலும், மிதித்தாலும் பொறுமையாக இருப்பவள் தாய். பூமியை காட்டிலும் தாய் கனமானவள்.

தந்தை ஆகாயத்தை காட்டிலும் உயர்ந்தவர்

பெரிய பெருமாள் என்று நினைத்த மாத்திரம் மனம் ஶ்ரீரங்கம் சென்று விடும். மனம் காற்றை விட வேகமானது.

கவலை புல்லை காட்டிலும் வேகமாக வளரும்.

किंस्वित् सुप्तं न निमिषति किंस्वित् जातं न च इङ्गते।

किंस्वित् हृदयं न अस्ति किंस्वित् वेगेन वर्धते ॥

எது தூங்கும்போதும் கண் மூடாமல் இருக்கிறது?

எது பிறந்தும் அசைவில்லாமல் இருக்கிறது?

யாருக்கு இதயம் இல்லை?

எது வேகத்தால் வளர்கிறது?

मत्स्यः सुप्तो न निमिषति अण्डं जातं न च इङ्गते।

अश्मनो हृदयं न अस्ति नदी वेगेन वर्धते ॥

மீன் (ஆத்மா) தூங்கும்போதும் (தமஸ்) கண் மூடாமல் இருக்கிறது.

முட்டை (14 லோகங்கள்) பிறந்தும் அசைவில்லாமல் இருக்கிறது. 

கல்லுக்கு (யோகிகளுக்கு) இதயம் இல்லை. (யோகிக்கு சுக-துக்கம் அனுபவிக்க இதயம் இல்லை)

நதி (மனம்வேகத்தால் வளர்கிறது.

किंस्वित् प्रवसतो मित्रं किंस्वित् मित्रं गृहे सतः।

आतुरस् च किं मित्रं किंस्वित् मित्रं मरिष्यतः ॥

வெளியூரில் யார் நண்பன்?

வீட்டில் இருப்பவனுக்கு யார் நண்பன்?

நோயாளிக்கு யார் நண்பன்?

சாகப்போகிறவனுக்கு யார் நண்பன்?

विद्या प्रवसतो मित्रं भार्या मित्रं गृहे सतः।

आतुरस्य भिषङ्मित्रं दानं मित्रं मरिष्यतः ॥

வெளியூரில் செல்பவனுக்கு படித்த கல்வியே நண்பன்.

வீட்டில் இருப்பவனுக்கு மனைவியே தோழி.

நோயாளிக்கு வைத்தியனே நண்பன்.

சாகப்போகிறவனுக்கு செய்த தானமே நண்பன்.

को अतिथिः सर्वभूतानां किंस्विद् धर्मं सनातनम्।

अमृतं किंस्विद् राजेन्द्र किंस्वित् सर्वमिदं जगत् ॥

அனைத்து உயிர்களுக்கும் யார் அதிதி?

எந்த தர்மம் மிகவும் தொன்மையானது?

ராஜேந்திரா! எது அம்ருதம்?

இந்த உலகம் அனைத்தும் எதனால் மூடப்பட்டு இருக்கிறது?

अतिथिः सर्वभूतानाम् अग्निः सोमो गवामृतम्।

सनातनो अमृतो धर्मो वायुः सर्वमिदं जगत् ॥

அனைத்து உயிர்களுக்கும் அதிதியாக (விருந்தாளி) அக்னியே வருகிறார். அவருக்கு தேவையான உபசாரத்தை கட்டாயம் செய்து விட வேண்டும். (வயிற்றில் உள்ள அக்னியும் ஒரு அதிதியே)

மோக்ஷத்தை பற்றி சொல்லும் தர்மமே மிகவும் தொன்மையானது.

வெண்மையான பசும்பால் (மஞ்சள் கலந்தால் மருந்தாகவும் இருக்கும், பாயாசமாகி விருந்தாகவும் இருக்கும்) அம்ருதமாகும்.

இந்த உலகம் அனைத்தும் வாயுவால் மூடப்பட்டு இருக்கிறது.

किंस्विद् एको विचरते जातः को जायते पुनः।

किंस्विद् धिमस्य भैषज्यं किंस्विद् आवपनं महत् ॥

யார் ஒருவர் தனித்து திரிந்து கொண்டு இருக்கிறார்?

பிறந்த பிறகு மீண்டும் எவன் பிறக்கிறான்?

பனிக்கு எது மருந்து?

எல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ள பெரிய பாத்திரம் எது?

सूर्य एको विचरते चन्द्रमा जायते पुनः।

अग्नि: हिमस्य भैषज्यं भूमि: आवपनं महत् ॥

சூரியன் (ஆத்மா) ஒருவரே தனித்து திரிந்து கொண்டு இருக்கிறார்.

சந்திரன் (மனம்) தேய்ந்து பிறகு மறுபடி பிறக்கிறான்.

அக்னி (வேதவாக்கை புரிந்து கொள்ளும் போது) பனிக்கு (அஞானம்) மருந்து.

பூமியானது (உடல்) எல்லாவற்றையும் (வித்யை, அவித்யை) அடக்கி வைத்துள்ள பெரிய பாத்திரம்.

किंस्विद् एकपदं धर्म्यं किंस्विद् एकपदं यशः।

किंस्विद् एकपदं स्वर्ग्यं किंस्विद् एकपदं सुखम् ॥

தர்மம் எதில் நிலைபெறுகிறது?

புகழ் எதில் நிலைபெறுகிறது?

ஸ்வர்க்கம் எதில் நிலைபெறுகிறது?

சுகம் எதில் நிலைபெறுகிறது?

दाक्ष्यम् एकपदं धर्म्यं दानम् एकपदं यशः।

सत्यम् एकपदं स्वर्ग्यं शीलम् एकपदं सुखम् ॥

தர்மம் (அவரவர் கடமை) முயற்சியில் நிலைபெறுகிறது. (தர்மத்தை முயற்சியில்  நிலைநாட்ட வேண்டும். தர்மம் தானாக அமையாது)

தானம் செய்ய செய்ய, புகழ் நிலைபெறுகிறது.

சத்தியத்தில் (உள்ளும் புறமும் உண்மையாக இருத்தல்) இருக்க இருக்க, ஸ்வர்க்கம் நிலைபெறுகிறது.

நல்லொழுக்கம் பெருக பெருக, சுகம் நிலைபெறுகிறது.

किंस्विद् आत्मा मनुष्यस्य किंस्विद् दैवकृतः सखा।

उपजीवनं किस्विद् अस्य किंस्विद् अस्य परायणम् ॥

மனிதனுக்கு ஆத்மா எது?

தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட துணை யார்?

மனிதனுடைய பிழைப்புக்கு ஸாதனம் எது?

மனிதனுக்கு முக்கியமான கதி (அடையவேண்டியது) என்ன?

पुत्र आत्मा मनुष्यस्य भार्या दैवकृतः सखा।

उपजीवनं च पर्जन्यो दानमस्य परायणम् ॥

மனிதனுக்கு ஆத்மாவாக (விருப்பமாக) இருப்பவன் "புத்திரனே".

தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட துணை "மனைவியே"

மனிதனுடைய பிழைப்புக்கு சாதனம் "மேகமே".

மனிதனுக்கு முக்கியமான கதி தானமே (அனைத்தையும் சரணாகதி செய்வதே)

धन्यानाम् उत्तमं किंस्विद् धनानां स्यात्किम् उत्तमम्। 

लाभानाम् उत्तमं किंस्यात् सुखानां स्यात्किम् उत्तमं ॥

செல்வத்தை ஏற்படுத்தி கொடுப்பவற்றுள் சிறந்தது எது?

செல்வத்தில் சிறந்த செல்வம் எது?

லாபங்களுள் எது சிறந்த லாபம்?

சுகங்களுள் எது சிறந்த சுகம்?

धन्यानामुत्तमं दाक्ष्यं धनानामुत्तमं श्रुतम्।

लाभानां श्रेय आरोग्यं सुखानां तुष्टि: त्तमा ॥

செல்வத்தை ஏற்படுத்தி கொடுப்பவற்றுள் சிறந்தது  ஊக்கமே.

செல்வத்தில் சிறந்த செல்வம் - சாஸ்திர ஞானமே (வேதத்தை உண்மையாக அறிந்து கொள்வதே)

லாபங்களுள் சிறந்த லாபம் - நோயற்ற வாழ்வே.

சுகங்களுள் சிறந்த சுகம் - திருப்தியே.

किंस्विद् धर्मपरं लोके कश्च धर्मः सदाफलः।

किं नियम्य न शोचन्ति कैश् सन्धिर्न जीर्यते ॥

உலகத்தில் சிறந்த தர்மம் எது?

எந்த தர்மம் எப்பொழுதுமே பலன் கொடுக்கும்?

எதை அடக்கினால், மனிதன் துயரம் அடையமாட்டான்.

எவர்களோடு ஏற்படும் நட்பு, குறையாமல் இருக்கும்?

आनृशंस्यं परं धर्मो त्रेताधर्मः सदाफलः।

मनो यम्य न शोचन्ति सन्धिः सद्भिर्न जीर्यते ॥

உலகத்தில் சிறந்த தர்மம் "அஹிம்ஸையே" (கொல்லாமை)

மோக்ஷத்தை தரக்கூடிய (அ உ ம - ஓம்) பிரணவம் ஜப தர்மம் எப்பொழுதுமே பலன் கொடுக்கும்.

மனதை அடக்கும் மனிதன், துயரம் அடைய மாட்டான்.

ஸாதுக்களோடு ஏற்படும் நட்பு, குறையாமல் இருக்கும்.

किं नु हित्वा प्रियो भवति किंनु हित्वा न शोचति।

किंनु हित्वा अर्थवान् भवति किंनु हित्वा सुखी भवेत् ॥

எதை விட்டால், மனிதன் அனைவருக்கும் ப்ரியமானவன் ஆகிறான்?

எதை விட்டால், மனிதன் துயரத்தை அடைவதில்லை?

எதை விட்டால், மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்?

எதை விட்டால், மனிதன் சுகம் பெறுகிறான்?

मानं हित्वा प्रियो भवति क्रोधं हित्वा न शोचति।

कामं हित्वा अर्थवान् भवति लोभं हित्वा सुखी भवेत् ॥

கர்வத்தை (தன்னை பற்றி ஒரு அபிமானம்) விட்டால், மனிதன் அனைவருக்கும் ப்ரியமாகிறான்.

கோபத்தை விட்டால், மனிதன் துயரத்தை அடைவதில்லை.

தர்மத்துக்கு எதிரான ஆசைகளை விட்டால், மனிதன் பொருள் உள்ளவன் ஆகிறான்.

பேராசையை மனிதன் விட்டு விட்டால், மனிதன் சுகம் பெறுகிறான்.

किम् अर्थं ब्राह्मणे दानं किम् अर्थं नटनर्तके।

किम् अर्थं चैव भृत्येषु किम् अर्थं चैव राजसु ॥

ப்ராம்மணனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

நடனம், நாட்டியம் ஆடுபவர்களுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

வேலைக்காரனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

அரசனுக்கு தானம் எதற்கு கொடுக்கிறோம்?

धर्मार्थं ब्राह्मणे दानं यशोर्थं नटनर्तके।

भृत्येषु सङ्ग्रहार्थं च भयार्थं चैव राजसु ॥

தர்மத்துக்காக ப்ராம்மணனுக்கு தானம் கொடுக்கிறோம்.

புகழுக்காக நடனம், நாட்டியம் ஆடுபவர்களுக்கு தானம் கொடுக்கிறோம்.

வசப்படுத்துவதற்காக வேலைக்காரனுக்கு தானம் கொடுக்கிறோம்.

பயத்தை போக்கி கொள்ள, அரசனுக்கு தானம் கொடுக்கிறோம்.

केनस्विद् आवृतो लोकः केनस्विन्  प्रकाशते ।

केन त्यजति मित्राणि केन स्वर्गं न गच्छति ॥

எதனால் உலகம் மூடப்பட்டு இருக்கிறது?

எதனால் உலகம் பிரகாசிக்கவில்லை?

எந்த காரணத்தால், மனிதன் தன் நண்பனை இழக்கிறான்?

எந்த மனிதன் ஸ்வர்க்கத்தை அடையாமல் இருக்கிறான்?

अज्ञानेनावृतो लोक: मसा न प्रकाशते।

लोभात्त्यजति मित्राणि सङ्गात्स्वर्गं न गच्छति ॥

உலகம் (ஆத்மா) அஞானத்தால் மூடப்பட்டு இருக்கிறது.

தமோ குணத்தால் உலகம் (ஆத்மா) பிரகாசிக்கவில்லை.

லோபத்தினால் (பேராசை), மனிதன் தன் நண்பனை இழக்கிறான்.

(உலக) பற்றுதல் உடைய மனிதன் ஸ்வர்க்கத்தை அடையாமல் இருக்கிறான்.

मृतः कथं स्यात्पुरुषः कथं राष्ट्रं मृतं भवत्।

श्राद्धं मृतंकथं वा स्यात्कथं यज्ञा मृतो भवेत् ॥

எப்போது மனிதன் இறந்தவனுக்கு சமமாகிறான்?

அரசாங்கம் எப்பொழுது இறந்ததற்கு சமமாகிறது?

ஸ்ரார்த்தம் எப்போது அழிந்ததாகும்?

யாகம் எப்போது அழிந்ததாகும்?

मृतो दरिद्रः पुरुषो मृतं राष्ट्रमराजकम्।

मृतम् अश्रोत्रियं श्राद्धं मृतो यज्ञस्त्व दक्षिणः ॥

தரித்திரம் ஏற்படும் போது, மனிதன் இறந்தவனுக்கு சமமாகிறான்.

அரசன் இல்லாத அரசாங்கம் இறந்ததற்கு சமமாகிறது

வேதத்தை அத்யயனம் செய்யாத ப்ராம்மணன் செய்து வைக்கும் ஸ்ரார்த்தம் பயனில்லாது போகும்.

தக்ஷிணை இல்லாத யாகம், பயனற்றதாக போகும்.

का दिग्  किं उदकं पार्थ किम् अन्नं किंच वै विषम्।

श्राद्धस्य कालम् ख्याहि ततः पिब हरस्व च ॥

எது பாதை (திக்கு)?

பரத குலத்தவனே ! எது ஜலம்?

எது அன்னம்?

எது விஷம்?

சிரத்தையோடு இதற்கு பதில் சொல்லி விட்டு, தண்ணீர் எடுத்து கொள்.

सन्तो दिग् जलम् आकाशं गौ: अन्नं ब्राह्मणं विषम्।

श्राद्धस्य ब्राह्मणः कालः कथं वा यक्ष मन्यसे ॥

சாதுக்கள் செல்லும் பாதையே நமக்கும் பாதை (திக்கு).

ஆகாசத்திலிருந்து ஜலம் உண்டாகிறது. ஆகையால், ஆகாசமே ஜலம்.

பசுவின் பால் இல்லாமல் உலகம் இல்லை. பசுவே நமக்கு உணவு தருகிறது.

ப்ராம்மணனுடைய பொருள் விஷம். பிராம்மணன் பொருளை அபகரிப்பதால், விஷத்தை குடித்தது போல ஆகும்.

तपः किंलक्षणं प्रोक्तं को दमश्च प्रकीर्तितः।

क्षमा च का परा प्रोक्ता का च ह्रीः परिकीर्तिता ॥

எது தவம் என்று சொல்லப்படுகிறது?

எது தமம் என்று சொல்லப்படுகிறது?

எது பொறுமை என்று சொல்லப்படுகிறது?

எது வெட்கமென்று சொல்லப்படுகிறது?

तपः स्वधर्मवर्तित्वं मनसो दमनं दमः।

क्षमा द्वन्द्व सहिष्णुत्वं ह्रीर कार्य निवर्तनम् ॥

அவரவர் தர்மத்தை (கடமையை)  கடைப்பிடிப்பதே தவம்.

மனதை அடக்குவதே, சிறந்த தமம் என்று சொல்லப்படுகிறது.

ஸுகம் துக்கம் போன்ற இரட்டைகளை (த்வந்தம்) பொறுப்பதே, பொறுமை என்று சொல்லப்படுகிறது.

செய்ய கூடாத காரியத்திலிருந்து விலகி திரும்பி வருவதே, வெட்கம் என்று சொல்லப்படுகிறது.

किं ज्ञानं प्रोच्यते राजन् क: शमश्च प्रकीर्तितः।

दया च का परा प्रोक्ता किं च: आर्जवम् उदाहृतम् ॥

அரசே! ஞானம் எப்படி  உண்டாகும்?

எது சமமென்று என்று சொல்லப்படுகிறது?

எது கருணை (தயை) என்று சொல்லப்படுகிறது?

எது ஆர்ஜவம் என்று சொல்லப்படுகிறது?

ज्ञानं तत्त्वार्थ सम्बोधः शमश्चित्त प्रशान्तता।

दया सर्वसुखैषित्वम् आर्जवं सम-चित्तता ॥

உண்மையை அறியும் போது, ஞானம் (அறிவு) உண்டாகும்

சித்தத்தில் சாந்தி (அமைதி) இருப்பதே சமமென்று என்று சொல்லப்படுகிறது.

அனைவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதே, கருணை (தயை) என்று சொல்லப்படுகிறது.

எங்கும் சமமான எண்ணமே ஆர்ஜவம் என்று சொல்லப்படுகிறது. (அதாவது, உள்ளும் (மனம்) புறமும் (வாக்கு) ஒரே போல இருத்தல்)

कः शत्रु: दुर्जयः पुंसां कश्च व्याधि: अनन्तकः।

कीदृशश्च स्मृतः साधु: असाधुः कीदृशः स्मृतः ॥

மனிதனால் எளிதில் வெல்லமுடியாத பகைவன் யார்?

எது முடிவில்லாத வியாதி?

எப்படி இருந்தால், மனிதன் ஸாது என்று அழைக்கப்படுகிறான்?

யார் அஸாது என்று அழைக்கப்படுகிறான்?

क्रोधः सुदुर्जयः शत्रु: लोभो व्याधि: अनन्तकः।

सर्व भूत हितः साधु: असाधु: निर्दयः स्मृतः ॥

கோபமே மனிதனால் எளிதில் வெல்லமுடியாத பகைவன்.

பேராசையே  முடிவில்லாத வியாதி

அனைத்து உயிருக்கும் நன்மை செய்ய நினைப்பவனே, ஸாது என்று அழைக்கப்படுகிறான்

பிற உயிரிடத்தில் கருணை (தயை) அற்றவன், அஸாது என்று அழைக்கப்படுகிறான்

को मोहः प्रोच्यते राजन् कश्च मानः प्रकीर्तितः।

किं आलस्यं च विज्ञेयं कश्च शोकः प्रकीर्तितः ॥

அரசே! எது மோகம் என்று சொல்லப்படுகிறது?

எது மானம் என்று சொல்லப்படுகிறது?

எது சோம்பேறித்தனம் (ஆலஸ்யம்) என்று சொல்லப்படுகிறது.

எது சோகம் என்று சொல்லப்படுகிறது?

मोहो हि धर्म मूढ्तवं मान: त्व आत्मा अभिमानिता।

धर्म निष्क्रियता लस्यं शोकस्त्वज्ञानम् च्यते ॥

தர்மத்தை (கடமை) அறியாமல் இருப்பதே, மோகம் என்று சொல்லப்படுகிறது

'நான்' என்ற அஹங்காரமே, மானம் என்று சொல்லப்படுகிறது

தர்மத்தை (கடமையை) செய்யாமல் இருப்பதே சோம்பேறித்தனம் (ஆலஸ்யம்) என்று சொல்லப்படுகிறது.

உண்மையை அறியாமல் இருப்பதே (அஞானமே), சோகம் என்று சொல்லப்படுகிறது.

किं स्थैर्यम् ऋषिभिः प्रोक्तं किं च धैर्यम् उदाहृतम्।

स्नानं च किं परं प्रोक्तं दानं च किमिहोच्यते ॥

உறுதியான நிலை என்று ரிஷிகள் எதை சொல்கிறார்கள்?

எது தைரியம் என்று சொல்லப்படுகிறது?

எது சிறந்த ஸ்நானம் (குளியல்) என்று சொல்லப்படுகிறது?

எது தானம் என்று இந்த உலகில் சொல்லப்படுகிறது?

स्वधर्मे स्थिरता स्थैर्यं धैर्यम् इन्द्रिय निग्रहः।

स्नानं मनो मल त्यागो दानं वै भूत रक्षणम् ॥

அவரவர் தர்மத்தில் (கடமையில்) நிலைத்து இருப்பது, உறுதியான நிலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.

புலன்களால் உண்டாகும் உணர்ச்சிகளை அடக்குதல், தைரியம் என்று சொல்லப்படுகிறது.

மனதில் உள்ள அழுக்கை கலைவதே, சிறந்த ஸ்நானம் (குளியல்) என்று சொல்லப்படுகிறது.

உயிர்களை காப்பதே, தானம் என்று இந்த உலகில் சொல்லப்படுகிறது. (பிராணிகள் கொலை செய்யப்படாமல், உயிர் தானம் செய்வதே)

कः पण्डितः पुमान्ज्ञेयो नास्तिकः कश्च उच्यते।

को मूर्खः कश्च कामः स्यात्को मत्सर इति स्मृतः ॥

யார் பண்டிதன் என்று அறியப்படுகிறான்?

யார் நாஸ்திகன் என்று சொல்லப்படுகிறான்?

யார் மூர்க்கன் என்று சொல்லப்படுகிறான்?

எது காமம் (இச்சை) ஆகும்?

எது மாத்ஸர்யம் என்று சொல்லப்படுகிறது?

धर्मज्ञः पण्डितो ज्ञेयो नास्तिको मूर्ख उच्यते।

कामः संसारहेतु: च हृत्तापो मत्सरः स्मृतः ॥

அனைத்து தர்மங்களையும் (கடமைகளை) அறிந்தவன் பண்டிதன் என்று சொல்லப்படுகிறான்.

மூர்க்கனே நாஸ்திகன் என்று சொல்லப்படுகிறான்.

சம்சாரம் என்ற பிறப்பே, காமம் ஆகும்.

மனக்கொதிப்பே மாத்ஸர்யம் என்று சொல்லப்படுகிறது

को अहंकार इति प्रोक्तः कश्च दम्भः प्रकीर्तितः।

किं तद् दैवं परं प्रोक्तं किं तत् पैशुन्यं उच्यते ॥

எது அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது?

எது டம்பம் என்று சொல்லப்படுகிறது?

தெய்வம் (விதி) என்பது என்ன?

எது பைசூன்யம் என்று சொல்லப்படுகிறது?

महा ज्ञानम् हंकारो दम्भो धर्मो ध्वजोच्छ्रयः।

दैवं दानफलं प्रोक्तं पैशुन्यं परदूषणम् ॥

பெரிய அஞானமே (உண்மையை அறிய இயலாத நிலையே), அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது.

'தர்மத்தை அனுஷ்டிக்கிறேன்' என்று பிறருக்கு தெரிவித்தலே, டம்பம் என்று சொல்லப்படுகிறது.

தானம் செய்ததால் ஏற்படும் பலனே விதி.

பிறரை திட்டுவதே, பைசூன்யம் என்று சொல்லப்படுகிறது.

धर्म: च अर्थ: च काम: च परस्पर विरोधिनः।

एषां नित्य विरुद्धानां कथम् एकत्र संगमः ॥

அறம், பொருள், இன்பம் மூன்றும் ஒன்றோடொன்று விரோதமுள்ளவை. எப்பொழுதும் விரோதமுள்ள இவை மூன்றும், ஓரிடத்தில் எப்போது சேரும்?

यदा धर्म: भार्या च परस्पर वशानुगौ।

तदा धर्म अर्थ कामानां त्रयाणामपि संगमः ॥

எப்பொழுது தர்மமும் (கடமையும்), மனைவியும் சேர்ந்து நடப்பார்களோ, அப்பொழுது அறம், பொருள், இன்பம் மூன்றும் சேரும்.

अक्षयो नरकः केन प्राप्यते भरतर्षभ।

एतन्मे पृच्छतः प्रश्नं तच्छीघ्रं वक्तुमर्हसि ॥

நீண்ட நரகத்தை யார் அடைவார்கள்?

இதற்கு விடை அளிப்பாயாக..

ब्राह्मणं स्वयमाहूय याचमानम् अकिंचनम्।

पश्चान्नास्तीति यो ब्रूयात्सो अक्षयं नरकं व्रजेत् ॥

பொருள் இல்லாத நிலையில், யாசகம் செய்யும் ப்ராம்மணனை தானே கூப்பிட்டு, பிறகு கொடுப்பதற்கு இல்லையென்று எந்த மனிதன் சொல்வானோ, அவன் நீண்ட நரகத்தை அடைவான்.

वेदेषु धर्मशास्त्रेषु मिथ्या यो वै द्विजातिषु।

देवेषु पितृधर्मेषु सो अक्षयं नरकं व्रजेत् ॥

எவன் வேதத்தை பற்றி பொய் சொல்வானோ, தர்மத்தை பற்றி பொய் சொல்வானோ, ப்ராம்மணனிடத்தில் பொய் சொல்வானோ, தேவர்களிடத்தில் பொய் சொல்வானோ, பித்ரு காரியங்களில் பொய் சொல்வானோ, அவனும் நீண்ட நரகத்தை அடைவான்.

विद्यमाने धने लोभाद् दानभोग विवर्जितः।

पश्चान् नास्ति इति यो ब्रूयात्सो अक्षयं नरकं व्रजेत् ॥

தனம் இருக்கும் போதே, பேராசை காரணமாக பிறருக்கு கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் "இல்லை" என்று சொல்வானோ, அவனும் நீண்ட நரகத்தை அடைவான்.

राजन् कुलेन वृत्तेन स्वाध्यायेन श्रुतेन वा।

ब्राह्मण्यं केन भवति प्रब्रूह्येतत् सुनिश्चितम् ॥

அரசனே! ஒருவன் குலத்தால் ப்ராம்மணனாகிறானா? ஒழுக்கத்தால் ப்ராம்மணனாகிறானா? வேதம் ஓதுவதால் ப்ராம்மணனாகிறானா? சாஸ்திர அறிவினால் ப்ராம்மணனாகிறானா?

இதனை நன்றாக யோசித்து பதில் சொல்வாயாக?

शृणु यक्ष कुलं तात न स्वाध्यायो न च श्रुतम्।

कारणं हि द्विजत्वे च वृत्तमेव न संशयः ॥

யக்ஷனே ! கேள். குலத்தாலோ, வேதம் ஓதுவதாலோ, சாஸ்திர அறிவினாலோ ஒருவன் ப்ராம்மணன் ஆவதில்லை. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன்  ப்ராம்மணன் ஆகிறான். இதில் சந்தேகம் இல்லை.

वृत्तं यत्नेन संरक्ष्यं ब्राह्मणेन विशेषतः।

अक्षीणवृत्तो न क्षीणो वृत्ततस्तु हतो हतः ॥

ஆதலால், பிராம்மணன் தன் ஒழுக்கத்தை பெரும் முயற்சி செய்து பாதுகாத்து கொள்ள வேண்டும். ஒழுக்க குறையற்ற பிராம்மணன் எந்த குறையும் இல்லாமல் மதிக்கப்படுவான். ஒழுக்கத்தை தொலைத்தவன் கெட்டு போனவனே !

पठकाः पाठकाश्चैव ये चान्ये शास्त्रचिन्तकाः।

सर्वे व्यसनिनो मूर्खा यः क्रियावान्स पण्डितः ॥

படிப்பவர்கள், படிப்பை சொல்லி தருபவர்கள், மேலும் பல சாஸ்திரங்களை சிந்தனை செய்பவர்கள், யாராக இருந்தாலும், தெரிந்து கொண்டதே பரம பிரயோஜனம் என்று நினைப்பார்களென்றால், அவர்களே மூடர்கள். எவன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுவானோ , அவனே பண்டிதன்.

चतुर्वेदोऽपि दुर्वृत्तः स शूद्रादतिरिच्यते।

यो अग्निहोत्र परो दान्तः स ब्राह्मण इति स्मृतः ॥

நான்கு வேதத்தை அத்யயனம் செய்தவனே என்றாலும், ஒழுக்கமில்லாவிட்டால், அந்த பிராம்மணன் (MLA/MP) சூத்திரனுக்கும் (employee) கீழானவன்.

அக்னி ஹோத்திரத்தில் பற்றுதலும், புலன்களை (காமத்தை கோபத்தை வளர்க்கும் விஷயங்களை பார்ப்பது, பேசுவது, முகர்வது, தொடுவது, கேட்பது) அடக்கி வைத்து இருப்பவன் ப்ராம்மணாக கருதப்படுகிறான்.

प्रियवचनवादी किं लभते

विमृशित कार्यकरः किं लभते।

बहु-मित्रकरः किं लभते

धर्मे रतः किं लभते कथय ॥

பிரியமாக பேசுபவன் எதை அடைகிறான்?

ஆலோசித்து காரியத்தை செய்பவன் எதை அடைகிறான்?

பல நண்பர்களை கொண்டிருப்பவன் எதை அடைகிறான்?

தர்மத்தின் வழியில் இருப்பவன் எதை அடைகிறான்?

प्रियवचनवादी प्रीयो भवति

विमृशितकार्यकरोऽधिकं जयति।

बहुमित्रकरः सुखं वसते

यश्च धर्मरतः स गतिं लभते ॥

பிரியமாக பேசுபவன் அனைவர்க்கும் பிரயமானவனாகிறான்.

ஆலோசித்து காரியத்தை செய்பவன் வெற்றி அடைகிறான்.

பல நண்பர்களை கொண்டிருப்பவன் சுகமாக இருக்கிறான்.

தர்மத்தின் வழியில் இருப்பவன் நற்கதியை அடைகிறான்

को मोदते किम् श्चर्यं कः पन्थाः का च वार्तिका।

वद मे चतुरः प्रश्नान्मृता जीवन्तु बान्धवाः ॥

எவன் சந்தோஷமாக இருக்கிறான்?

எது ஆச்சர்யம்?

எது வழி?

எது தினமும் நடக்கும் நிகழ்ச்சி?

இந்த 4 கேள்விக்கும் பதில் அளிப்பாயாக.

पञ्चमेऽहनि षष्ठे वा शाकं पचति स्वे गृहे।

अनृणी चाप्रवासी च स वारिचर मोदते ॥

ஜலத்தில் சஞ்சரிக்கும் யக்ஷனே!

எந்த மனிதனால் பகலில் 5வது அல்லது 6வது காலத்தில், (12-4PM) (ஒரு பகலை 8ஆக பிரிப்பார்கள்) குறைந்தது ஒரு கீரையாவது தன் வீட்டில் சமைத்து சாப்பிட முடிகிறதோ! கடனில்லாதவனாகவும், வெளியூர் பயணம் செல்லவேண்டிய அவசியமில்லாதவனாகவும் எவன் இருக்கிறானோ, அவனே சந்தோஷமாக இருக்கிறான்.

अहन्यहनि भूतानि गच्छन्तीह यमालयम्।

शेषाः स्थावरमिच्छन्ति किमाश्चर्यमतः परम् ॥

இந்த உலகில் தினமும் எண்ணிலடங்கா உயிர்கள் யமலோகம் சென்று கொண்டே இருக்கிறது. மிச்சப்பட்டு இருக்கும் உயிர்கள் (மனிதர்கள்) தாங்கள் மட்டும் நிலையாக இருக்க போகிறோம் என்று நினைக்கிறார்கள். இதை காட்டிலும் ஆச்சர்யம் வேறு என்ன இருக்கிறது?

तर्को प्रतिष्ठः श्रुतयो विभिन्ना

नैको मुनिर्यस्य मतं प्रमाणम्।

धर्मस्य तत्त्वं निहितं गुहायां

महाजनो येन गतः स पन्था ॥

விவாதத்தால் தர்மத்தை நிர்ணயிக்க முடியாது (பேசுபவன் சாமர்த்தியமே ஜெயிக்கும்)

வேதத்திலோ ஒரு மந்திரம் பல அர்த்தங்களை கொண்டு இருக்கிறது.

அதை கொண்டும் உண்மையான தர்மத்தை நிர்ணயிக்க முடியவில்லை.

ஒரு முனிவர் சொல்லும் சாஸ்திரம் மற்றொரு முனிவர் சொல்வதற்கு  மாறாக இருக்கிறது.

எது தர்மம் என்று அறிவது உண்மையில் ரகசியமாக தான் வைக்கப்பட்டுள்ளது.

ஆதலால்,

எந்த வழியில் பல பெரியோர்கள் சென்றார்களோ, அது தான் நாம் பின்பற்ற வேண்டிய தர்ம வழி.

पृथ्वी विभाण्डं गगनं पिघानं

सूर्याग्निना रात्रिदिवेन्धनेन।

मास: तु दर्वी परिघट्टनेन

भूतानि कालः पचतीति वार्ता ॥

பூமியே ஒரு பாண்டம் போல உள்ளது. ஆகாயம் அதற்கு மூடி போல இருக்கிறது. இந்த பூமி என்ற பாண்டத்தில், இரவு பகல் என்ற விறகுகளை வைத்து, சூரியன் என்ற அக்னி மூட்டி, மாதங்கள், காலங்கள் (ருதுக்கள்) என்ற கரண்டியை கொண்டு பூத உடல்களை கிளறி, பக்குவம் செய்து கொண்டே இருக்கிறது காலம். இதுவே தினமும் நடந்து வருகின்ற நிகழ்வு.

व्याख्याता मे त्वया प्रश्ना यथातत्वं परंतप।

पुरुषं त्विदानीं व्याख्याहि यश्च सर्वधनी नरः ॥

எதிரிகளை கொளுத்துபவனே! நான் கேட்ட கேள்விகளுக்கு உள்ளது உள்ளபடி விடை அளித்தாய்.

யார் புருஷன்?

யார் அனைத்து செல்வமும் உடைய மனிதன் என்று கருதப்படுகிறான்?

இதை விரிவாக கூறு.

दिवं स्पृशति भूमिं च शब्दः पुण्येन कर्मणा।

यावत्स शब्दो भवति तावत्पुरुष उच्यते ॥

புண்ணியங்கள் (நல்வினை) செய்வதால், பேரும் புகழும் பூமியில் மட்டுமல்லாது சொர்க்க லோகம் வரை பரவுகிறது. அந்த புகழ் சொல் எதுநாள் ஒருவனுக்கு இருக்கிறதோ, அது வரை "புருஷன்" என்று மதிக்கப்படுகிறான்.

तुल्ये प्रियाप्रिये यस् सुखदुःखे तथैव च।

अतीतानागते चोभे सवै पुरुष उच्येत ॥

எந்த மனிதன் விருப்பு-வெறுப்பு, சுக-துக்கம், வருமானம்-நஷ்டம் போன்ற இரட்டைகளை கண்டும் சமமாக இருக்கின்றானோ, அவனும் "புருஷன்" என்று மதிக்கப்படுகிறான்.

समत्वं यस्य सर्वेषु निस्पृहः शान्त मानसः।

सुप्रसन्नः सदा योगी स वै सर्वधनी नरः ॥

எந்த மனிதன் எந்த பொருளை கண்டாலும் சலனமில்லாமல், சம புத்தியோடு, ஆசை அற்றவனாக, சாந்தமான மனநிலையுடன், தெளிவுள்ளவனாக, எப்போதும் ப்ரம்மத்தையே தியானித்து கொண்டு இருக்கிறானோ, அந்த மனிதனே, எல்லா செல்வமும் உடையவன் என்று கருதப்படுகிறான்.



Sunday 26 March 2023

மகாபாரதம் படிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன? வைசம்பாயணர் (வியாசரின் சிஷ்யர்) சொல்கிறார். அறிவோம் மஹாபாரதம்.

"சர்பயாகம் செய்கிறான்" என்று கேள்விப்பட்ட வியாசர்,

ஜனமேஜெயன் தீக்ஷை பெற்று அமர்ந்து இருக்கும் சர்ப யாகசாலையில் பிரவேசித்தார்.

श्रुत्वा तु सर्पसत्राय दीक्षितं जनमेजयम्।

अभ्यगच्छद् ऋषि: विद्वान् कृष्णद्वैपायन: तदा।।


ஜனமேஜெயன், யாக சாலைக்கு வந்த வியாச பகவானை நமஸ்கரித்து, பாத்யம், அர்க்ய தீர்த்தம் கொடுத்து வரவேற்று, ஆசனம் கொடுத்தார்.


மேலும்,

"வியாச பகவன்!கௌரவர்கள் பற்றியும் பாண்டவர்கள் பற்றியும் தாங்கள் நேரில் அறிவீர்கள். அவர்களுக்குள் எப்படி விரோதம் ஏற்பட்டது? நீங்கள் அந்த வரலாற்றை சொல்ல, அதை நான் கேட்க ஆசைப்படுகிறேன்.

எண்ணிலடங்கா உயிர்கள் மடிய காரணமான அந்தப் பெரும்போர், எனது பாட்டனார்களுக்குள் ஏன் நடந்தது? 

அவர்களின் தெளிந்த அறிவும் விதியால் மூடப்பட்டதோ? 

ஓ பிராமணர்களில் சிறந்தவரே ! 

அதை எனக்கு முழுமையாக, எவை எவை எவ்வாறு நடந்தனவோ அவற்றை அவ்வாறே சொல்ல வேண்டும். பகவன்! நீங்கள் நடந்தவற்றை அறிந்தவர் என்பதால் உங்களிடம் நடந்ததை கேட்க விரும்புகிறேன்" என்றார் ஜனமேஜயன்.

जनमेजय उवाच।

कुरूणां पाण्डवानां च भवान् प्रत्यक्ष दर्शिवान्।

तेषां चरितम् इच्छामि कथ्यमानं त्वया द्विज।।

कथं सम भवद् भेद: तेषाम् अक्लिष्ट कर्मणाम्।

तच्च युद्धं कथं वृत्तं भूतान्त करणं महत्।।

पितामहानां सर्वेषां दैवेनाविष्ट चेतसाम्।

कार्त्स्न्येनैतन्ममाचक्ष्व यथा वृत्तं द्विजोत्तम।

इच्छामि तत्त्वतः श्रोतुं भगवन् कुशलो ह्यसि।।


ஜனமேஜயனின் பிரார்த்தனையை கேட்ட கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாசர், தனது அருகில் அமர்ந்திருந்த தமது சீடரான வைசம்பாயனரை பார்த்து இவ்வாறு பேசலானார்,

सौति: उवाच।

तस्य तद् वचनं श्रुत्वा कृष्णद्वैपायनस्श: तदा।

शशास शिष्यम् आसीनं वैशंपायनम् अन्तिके।।

"முன்பு கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் இருந்த பிரிவை, நீ என்னிடம் எவ்வாறு கேட்டறிந்தாயோ, அவ்வாறே, மன்னனுக்கு (ஜனமேஜயனுக்கு) முழுமையாக அப்படியே சொல்என்றார்.

व्यास उवाच।

कुरूणां पाण्डवानां च यथा भेदो अभवत्पुरा।

तद् अस्मै सर्वम् आचक्ष्व यन्मत्तः श्रुतवानसि।।

गुरो: वचनम् आज्ञाय स तु विप्रर्षभस: तदा।

आचचक्षे ततः सर्वम् इतिहासं पुरातनम्।।

राज्ञे तस्मै सदस्येभ्यः पार्थिवेभ्य: च सर्वशः।

भेदं सर्व विनाशं च कुरु पाण्डवयो स: तदा।।

Adi parva 60


வைசம்பாயணர் (வியாசரின் சிஷ்யர்) சுருக்கமாக மஹாபாரத சரித்திர நிகழ்வை ஜனமேஜெயனுக்கு சொன்னார்.

"தனக்கு விரிவாக சொல்ல வேண்டும்" என்று ஜனமேஜெயன் கேட்க, 

வைசம்பாயணர் பாரதத்தின் பெருமையை ஜனமேஜெயனுக்கு விரிவாக சொல்ல ஆரம்பிக்கிறார்.

அரசே! கொஞ்ச நேரம் (ஓய்வு) எடுத்து கொண்டு வாருங்கள். இந்த புண்ணியமான சரித்திரத்தை பற்றி எவ்வாறு கிருஷ்ண த்வைபாயணர் (வியாசர்) சொன்னாரோ, அப்படியே விவரமாக சொல்கிறேன்.

वैशंपायन उवाच।

क्षणं कुरु महाराज विपुलो अयमनुक्रमः।

पुण्याख्यानस्य वक्तव्यः कृष्णद्वैपायनेरितः।।

வியாச மஹரிஷி அனைத்து லோகங்களிலும் பூஜிக்க்கபடுகிறார். மகாத்மாவாகிய வியாசரின் அபிப்ராயத்தை அப்படியே விளக்க போகிறேன்.  

महर्षेः सर्व-लोकेषु पूजितस्य महात्मनः।

प्रवक्ष्यामि मतं कृत्स्नं व्यासस्य अमित तेजसः।।

சத்யவதி புத்ரனான  வியாச பகவான் புண்ய கர்மமான இந்த மகாபாரதத்தை, நூறு ஆயிரம் (100000) ஸ்லோகங்களாக இயற்றி உள்ளார். 

इदं शतसहस्रं हि श्लोकानां पुण्य कर्मणाम्।

सत्यवति आत्मजेनेह व्याख्यातम् अमितौजसा।।

இந்த மகாபாரதத்தை உபாக்யானங்கள் (பல உதாரணங்கள்) மூலமும் மேலும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இப்போது நான் உங்களுக்கு வியாசர் கொடுத்த கிரந்தபடியே அப்படியே சொல்லப்போகிறேன். 

उपाख्यानैः सह ज्ञेयं श्राव्यं भारतम् उत्तमम्।

संक्षेपेण तु वक्ष्यामि सर्वमेतन् नराधिप।।

200 (100*2) அத்தியாயங்களும், 100 (100*1) பர்வங்களும், நூறு ஆயிரம் (1,00,000) ஸ்லோகங்களும் உள்ளன. மகரிஷி வியாசர் 100 பர்வங்களையும் 18 (8+10) பெரும் பர்வங்களுக்குள் தொகுத்து கொடுத்துள்ளார்.

अध्यायानां सहस्रे-द्वे पर्वणां शतम्-एव च।

श्लोकानां तु सहस्राणि नवतिश्च दशैव च।

ततो अष्टा-दशभिः पर्वैः संगृहीतं महर्षिणा'।।

இந்த வியாச மஹாபாரதத்தை சொல்லும் மனிதனும், அதை கேட்கும் மனிதனும், பூலோக ஆயுசு முடிந்த பிறகு, ப்ரம்ம லோகமான சத்ய லோகம் சென்று, பிரம்மாவுக்கு நிகரான ஆனந்தத்தை பெறுவார்கள்.

य इदं श्रावयेद् विद्वान्ये चेदं शृणुयुः नराः।

ते ब्रह्मणः स्थानमेत्य प्राप्नुयुः देव-तुल्यताम्।।

மகாபாரதம் வேதத்திற்கு நிகரானது. புண்ணியங்களுக்குள் உத்தமமானது. கேட்கத்தக்கவைகளில் மிகவும் உத்தமமானது. இந்த புராணம் ரிஷிகளால் மிகவும் போற்றப்படுகிறது.

इदं हि वेदैः समितं पवित्रम् अपि च उत्तमम्।

श्राव्याणाम् उत्तमं च इदं पुराणम् ऋषि संस्तुतम्।।

இந்த மஹாபுண்யமான இதிகாசத்தில் பொருள், இன்பம் போன்ற புருஷார்த்தங்கள் விரிவாக உபதேசிக்கப்பட்டுள்ளது 

अस्मिन् अर्थ: च काम: च निखिलेन: उपदेक्ष्यते।

इतिहासे महापुण्ये बुद्धिश्च परिनैष्ठिकी।।

உயர்ந்த குணம் உடையவர்களிடமோ, சுயநலமின்றி மற்றவருக்கு கொடுப்பதில் ஆர்வம் உள்ளவரிடமோ, உண்மையிலிருந்து விலகாதவரிடமோ, கடவுளை நம்பாத நாஸ்தீகனாக இல்லாமல் இருப்பவரிடமோ, வேதமாகிய இந்த மகாபாரதத்தை சொல்லி, அதன் மூலம் அர்த்தம் (பொருள்) சம்பாதிக்கலாம். 

अक्षुद्रान् दानशीलांश्च सत्यशीलान् अ-नास्तिकान्।

कार्ष्णं वेदम् इमं विद्वान् छ्रावयित्वा अर्थम् अश्नुते।।

ப்ரூண ஹத்தி (கருவில் இருக்கும் குழந்தையை தெரிந்தே கொல்லுதல்) செய்வதால் ஏற்படும் பாபத்தை, வியாச மஹாபாரதம் கேட்பதாலேயே நிச்சயமாக போக்கி கொள்ள முடியும். 

भ्रूणहत्या कृतं च अपि पापं जह्याद् असंशयम्।

इतिहासम् इमं श्रुत्वा पुरुष: अपि सुदारुणः।।

வியாச மகாபாரதத்தை படிப்பவர்கள், ராகுவால் விழுங்கபட்ட சந்திரன் எப்படி கிரகணம் முடிந்து பிரகாசமாக வெளிப்படுகிறானோ அது போல, பாபங்கள் அனைத்தும் விலகி, புண்ணிய ஆத்மாவாக ஆகிறார்கள் 

मुच्यते सर्व पापेभ्यो राहुणा चन्द्रमा यथा।

இந்த வியாச மஹாபாரதம் வெற்றிக்கான இதிகாசம். வெற்றி அடைய ஆசைப்படுபவர்கள், இந்த இதிஹாசத்தை கேட்க வேண்டும்.

जयो नाम इतिहासो अयं श्रोतव्यो विजिगीषुणा।।

நாட்டை ஆள ஆசைபடுபவன், வியாச மகாபாரதத்தை கேட்டால் எதிரிகளை ஜெயித்து பூமியை தன் வசப்படுத்தி கொள்வான்.

महीं विजयते राजा शत्रूं च अपि पराजयेत्।

வியாச மகாபாரதத்தை கேட்டால், நிச்சயம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

इदं पुंसवनं श्रेष्ठम् इदं स्वस्त्ययनं महत्।।

தேசத்தின் அரசியும், யுவராஜனும் அவசியம் கேட்க வேண்டியது வியாச மஹாபாரதம். இதை கேட்பதால், தேசத்தின் அரசி வீரமிகுந்த புத்திரனையோ, ராஜ்யத்தை நடத்தும் திறன் படைத்த பெண்ணையோ பெற்றெடுப்பாள். 

महिषी युवराजाभ्यां श्रोतव्यं बहुशस्तथा।

वीरं जनयते पुत्रं कन्यां वा राज्य भागिनीम्।।

வ்யாசரால் கொடுக்கப்பட்ட இந்த மஹாபாரதத்தில், புண்ணியங்களை கொடுக்கும் தர்ம சாஸ்திரமும் (அறம்), அர்த சாஸ்திரமும் (பொருள்), மோக்ஷ சாஸ்திரமும் (வீடு) நிரம்ப கிடக்கிறது.

धर्म-शास्त्रम् इदं पुण्यम् अर्थ-शास्त्रम् इदं परम्।

मोक्ष-शास्त्रम् इदं प्रोक्तं व्यासेनामित बुद्धिना।

அறம், பொருள், இன்பம், வீடு போன்றவற்றை பற்றி இந்த இதிகாசத்தில் என்னென்ன சொல்லப்பட்டு இருக்கிறதோ, அது தான் மற்ற தர்ம சாஸ்திரங்களில் உள்ளது. இதில் இல்லாதது என்று ஏதுமில்லை.

धर्मे च अर्थे च कामे च मोक्षे च भरतर्षभ।

यदिहास्ति तद् अन्यत्र यन्नेहास्ति न कुत्रचित्।

இந்த வியாச மகாபாரதத்தை பிராம்மணர்கள் கேட்டு கொண்டும், சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இனியும் சொல்லிகொண்டே இருப்பார்கள். இனியும் கேட்டு கொண்டே இருப்பார்கள்.

इदं हि ब्राह्मणै: लोके आख्यातं ब्राह्मणेषु इह'।

संप्रत्याचक्षते चेदं तथा श्रोष्यन्ति चापरे।।

வியாச மகாபாரதத்தை கேட்பதால், பிள்ளைகள் தாய் தந்தையை கைவிடாதவர்களாக இருப்பார்கள். கொடுத்த வேலையை செய்பவர்கள் (employee) இதை கேட்பதால், எஜமானனுக்கு (employer) விருப்பபட்டதை செய்பவர்களாக இருப்பார்கள். பரத வம்சத்தில் பிறந்தவர்களை பற்றி பொறாமை இல்லாமல் கேட்பவர்களுக்கு வியாதியை கண்டு பயம் ஏற்படாது. அவர்களுக்கு பரலோகத்தை கண்டு பயமில்லை என்று சொல்லவும் வேண்டுமா?

पुत्राः शुश्रूषवः सन्ति प्रेष्या: च प्रियकारिणः।

भरतानां महज्जन्म शृण्वताम् अनसूयताम्।

न अस्ति व्याधि-भयं तेषां परलोकभयं कुतः।।

வியாச மஹாபாரதத்தை கேட்கும் மனிதன், உடலால், பேச்சினால், மனதால் செய்த பாபத்தை அழித்து கொள்கிறான்.

शरीरेण कृतं पापं वाचा च मनसैव च।

सर्वं संत्यजति क्षिप्रं य इदं शृणुयान् नरः।।

செல்வத்தையும், புகழையும், நீண்ட ஆயுளையும், புண்ணியத்தையும், ஸ்வர்க்கத்தையும் கொடுக்கக்கூடிய இந்த மகாபாரதம் என்ற புண்ணிய கிரந்தம், கிருஷ்ண த்வைபாயனரால் கொடுக்கப்பட்டது.

धन्यं यशस्यम् आयुष्यं पुण्यं स्वर्ग्यं तथैव च।

कृष्णद्वैपायनेनेदं कृतं पुण्य चिकीर्षुणा।।

இந்த மஹாபாரதத்தில், பாண்டவர்களின் புகழை உலகிற்கு காட்டினார். மேலும் இந்த பூலோகத்தில் ஆண்டு கொண்டிருந்த பல பொலிவுள்ள க்ஷத்ரியர்கள் பற்றியும் சொல்கிறார். 

कीर्तिं प्रथयता लोके पाण्डवानां महात्मनाम्।

अन्येषां क्षत्रियाणां च भूरिद्रविण तेजसाम्।।

அனைத்து கல்வியும் தரக்கூடிய, உலகத்திற்கு சம்மதமான இந்த இதிஹாசத்தை, உலகத்தில் எந்த மனிதன் புண்ணியத்தை விரும்பி பிராம்மணர்களுக்கு சொல்வானோ, அவன் அழியா புகழுடன் இருப்பான்.

सर्व विद्या वदातानां लोके प्रथित कर्मणाम्।

य इदं मानवो लोके पुण्यार्थे ब्राह्मणाञ्छुचीन्।।

மகாபுண்யத்தை தரும், சனாதனமான தர்மத்தை சொல்லும், குரு வம்சத்தின் சரித்திரத்தை யார் கேட்கிறார்களோ அவர்களுடைய வம்சம் பெரிய வளர்ச்சி அடையும். உலகத்தில் மிகவும் கொண்டாடப்படுவார்கள். 

श्रावयेत महापुण्यं तस्य धर्मः सनातनः।

कुरूणां प्रथितं वंशं कीर्तयन् सततं शुचिः।

वंशम् आप्नोति विपुलं लोके पूज्यतमो भवेत्।।

எந்த பிராம்மணன் நியமம் தவறாமல், வருடத்தில் 4 மாதங்கள் தொடர்ந்து வியாச மகாபாரதத்தை படிப்பானோ, அவன் செய்த அனைத்து பாபங்களும் அழிந்து போகும்.

योऽधीते भारतं पुम्यं ब्राह्मणो नियत व्रतः।

चतुरो वार्षिकान् मासान् सर्वपापैः प्रमुच्यते।।

வியாச மகாபாரதத்தை படித்தவன், வேதம் முழுவதும் கற்றவன் என்று அறியலாம்.

विज्ञेयः स च वेदानां पारगो भारतं पठन्।।

இந்த வியாச மகாபாரதத்தில், தேவர்கள், ராஜரிஷிகள், முனிவர்கள், தோஷமற்ற கேசவன் {கிருஷ்ணன்},(33) தேவாதி தேவனான விஷ்ணு, அவருடைய தேவி, பல தாயாரால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் {முருகன்} பிறப்பும், பிராம்மணர்கள் மற்றும் பசுக்களின் பெருமையும், விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

देवा राजर्षयो ह्यत्र पुण्या ब्रह्मर्षय: तथा।

कीर्त्यन्ते धूतपाप्मानः कीर्त्यते केशव: तथा।।

भगवां च अपि देवेशो यत्र देवी च कीर्त्यते।

अनेक जननो यत्र कार्तिकेयस्य संभवः।।

ब्राह्मणानां गवां च एव माहात्म्यं यत्र कीर्त्यते।

அனைத்து வேதமந்திரங்களின் தொகுப்பாக இருக்கும் இந்த வியாச மஹாபாரதத்தை, அறத்தில் (தர்மத்தில்) நாட்டமுள்ள அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.

सर्व श्रुति समूहोऽयं श्रोतव्यो धर्म बुद्धिभिः।।

எந்த வித்வான், புண்ணியமான காலங்களில், பிராம்மணர்களுக்கு, 18 மஹாபர்வங்கள் கொண்ட வியாச மகாபாரதத்தை சொல்வார்களோ, அவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு, சொர்க்கத்தையும் லட்சியம் செய்யாமல், பிரம்மத்துடன் நிலையாக மோக்ஷமடைவார்கள்.

य इदं श्रावयेद् विद्वान् ब्राह्मणान् इह पर्वसु।

धूतपाप्मा जित स्वर्गो ब्रह्म गच्छति शाश्वतम्।।

மறைந்த பெற்றோர்களுக்கு ஈடுபாட்டுடன் (ஸ்ரார்த்தம்) திவசம் செய்யும் போது, வியாச மஹாபாரதத்தில் உள்ள ஒரு ஸ்லோகதின் ஓர் அடியையாவது, வந்த பிராம்மணர்களை கேட்க செய்தால், அந்த ஸ்ரார்த்தம் அழியாத பயனுள்ளதாக வளர்ந்து, பித்ருக்களை போய் சேரும். பித்ருக்கள் மனநிறைவு பெற்று இருப்பர்.

श्रावयेद् ब्राह्मणान् श्राद्धे यश्चेमं पादम् अन्ततः।

अक्षय्यं तस्य तच्छ्राद्धम् उपावर्तेत् पितॄन् इह।।

ஒரு மனிதன் தெரிந்தோ, தெரியாமலோ உடலாலோ மனதாலோ செய்யும் பாபங்கள், வியாச மகாபாரதத்தை கேட்பதாலேயே அழிந்து போகும்.

अह्ना यदेनः क्रियते इन्द्रियै: मनसा अपि वा।

ज्ञानाद् अज्ञानतो व अपि प्रकरोति नर: च यत्।

तत् महाभारत आख्यानं श्रुत्वैव प्रविलीयते।।

மகத்தான பரத வம்ச இளவரசர்களின் வரலாறே "மஹாபாரதம்" என்றழைக்கப்படுகிறது.

இந்த பெயர் காரணத்தை அறிகிறவனை எல்லா பாபங்களும் விட்டு விடுகின்றன.

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।

भरतानां महत् जन्म महाभारतम् उच्यते।।

இந்த பாரத வம்சத்தின் வரலாறு மிகவும் அற்புதமானது. இந்த வியாச மகாபாரதத்தை சொல்லும்போது, மரணத்தை தவிர்க்க முடியாத மனிதர்களின் (அநித்யமானவர்கள்) பாவங்கள் உறுதியாக அழிந்து போகும்.

महतो ह्येनसो मर्त्यान् मोचयेद् अनुकीर्तितः।

சிறந்த பெருமைகள் உடைய, சாமர்த்தியம் அறிந்த கிருஷ்ண த்வைபாயனர் என்ற வியாச பகவான், 3 வருட காலம் தூங்காமல், சுத்தமாக ஆசாரத்தோடு இருந்து, மகாபாரதத்தை முடித்தார். கடுமையான தவம் மற்றும் நியமத்துடன் இருந்து, வியாச மஹரிஷியான எங்கள் குரு இந்த மகாபாரதத்தை முடித்தார்.

त्रिभिः वर्षैः महाभागः कृष्णद्वैपायनो अब्रवीत्।।

नित्योत्थितः शुचिः शक्तो महाभारतम् आदितः।

तपो नियमम् आस्थाय कृतम् एतत् महर्षिणा।।

ஆதலால், இந்த வியாச மஹாபாரதத்தை, அனைத்து பிராம்மணர்களும் உறுதியான நியமத்தில் இருந்து கொண்டு கேட்க வேண்டும்.  

तस्मात् नियम संयुक्तैः श्रोतव्यं ब्राह्मणै: इदम्।

कृष्णप्रोक्ताम् इमां पुण्यां भारतीम् उत्तमां कथाम्।।

கிருஷ்ண த்வைபாயனர் {வியாசர்} கொடுத்த இந்த மகாபாரதத்தை எந்த பிராம்மணன் சொல்கிறாரோ, அவருக்கும், அவர் சொல்லிக் கேட்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் செய்ததால், செய்யாமல் இருந்ததால் ஏற்பட போகும் கர்மங்கள் பலன்கள் நினைத்து கவலை அடைய அவசியம் இருக்காது.

श्रावयिष्यन्ति ये विप्रा ये च श्रोष्यन्ति मानवाः।

सर्वथा वर्तमाना वै न ते शोच्याः कृत अकृतैः।।

அறத்தில் (தர்மத்தில்), பொருளில் (அர்தத்தில்) விருப்பமுள்ள மனிதன், இந்த வியாச மகாபாரதத்தை முழுவதும் விடாமல் படிக்க வேண்டும். இப்படி செய்வதால், அவன் நினைத்த காரியங்கள் அனைத்தும் (தர்மமான ஆசைகள்) தானாக கைகூடும்

नरेण धर्म-कामेन सर्वः श्रोतव्य इति अपि।

निखिलेन इतिहासो अयं ततः सिद्धिम् अवाप्नुयात्।।

மஹாபுண்யத்தை தரும் வியாச மகாபாரதத்தை கேட்பதால் ஒரு மனிதன் அடைய போகும் சுகத்திற்கு நிகராக, சொர்க்கம் லோக சுகங்கள் கூட கிடையாது. 

न तां स्वर्गगतिं प्राप्य तुष्टिं प्राप्नोति मानवः।

यां श्रुत्वैवं महापुण्यम् इतिहासम् उपाश्नुते।।

ஈடுபாட்டுடன் இந்த வியாச மகாபாரதத்தை கேட்பவரும், இந்த அத்புதமான இதிகாசத்தை கேட்பிக்க செய்தவரும், ராஜசூய யாகம் செய்த பலனையும், அஸ்வமேத யாகம் செய்த பலனையும் அடைவார்கள். 

शृण्वञ्श्राद्धः पुण्यशीलः श्रावयं च इदम् अद्भुतम्।

नरः फलम् अवाप्नोति राजसूय अश्वमेधयोः।।

எப்படி கடலும், மேரு என்ற பெரிய மலையும் பல வகையான ரத்தினங்களை நிதியாக கொண்டுள்ளதோ, அது போல, இந்த வியாச மகாபாரதமும்  ரத்ன குவியல் போல பல தர்மங்களை நிதி போல வைத்து இருக்கிறது.

यथा समुद्रो भगवान् यथा मेरु: महा-गिरिः।

उभौ ख्यातौ रत्न-निधी तथा भारतम् उच्यते।।

இந்த வியாச மஹாபாரதம் வேதத்திற்கு சமமாக உள்ளது. இது, அனைத்தையும் காட்டிலும் உத்தமமான மங்களத்தை தரவல்லது. இதன் ஸ்லோகங்களை காதால் கேட்டாலேயே சுகத்தை தர வல்லது. செவிக்கு இனியது. மனதை பரிசுத்தமாக ஆக்க வல்லது. நல்ல ஒழுக்கத்தை வளர செய்ய வல்லது.

इदं हि वेदैः समितं पवित्रमषि च: उत्तमम्।

श्राव्यं श्रुति-सुखं च एव पावनं शील वर्धनम्।।

வியாசரின் மகாபாரதத்தை அனைவரும் அவசியம் கேட்க வேண்டும். ஜனமேஜெயா! அரசே! இந்த வியாச மகாபாரதத்தை படிப்பவனுக்கு, யார் தானம் கொடுக்கிறானோ அவன் சமுத்திரம் சூழ்ந்த இந்த பூமியையே தானம் செய்த புண்ணியத்தை அடைவான்.

य इदं भारतं राजन् वाचकाय प्रयच्छति।

तेन सर्वा मही दत्ता भवेत् सागरमेखला।।

பரிக்ஷித்தின் பிள்ளையே! புண்ணியத்தை அடைவதற்காகவும், வெற்றியையே அடைவதற்காகவும், நான் சொல்லப்போகும் இந்த உயர்ந்த இதிகாசத்தின் கதையை முழுவதுமாக கேளும். 

पारिक्षित कथां दिव्यां पुण्याय विजयाय च।

कथ्यमानां मया कृत्स्नां शृणु हर्षकरीम् इमाम्।।

ரிஷியான கிருஷ்ண த்வைபாயனர் 3 வருடங்கள் தூக்கத்தை விட்டு, அத்புதமான இந்த மகாபாரதத்தை கொடுத்தார். அதை அப்படியே நான் (வைசம்பாயானர்) உனக்கு சொல்ல போகிறேன். 

त्रिभि: वर्षैः सद उत्थायी कृष्णद्वैपायनो मुनिः।

महाभारतम् आख्यानं कृतवान् इदम् अद्भुतम्।।

शृणु कीर्तयतस्तन्म इतिहासं पुरातनम्।।

Adi parva 62 (Vyasa Mahabharata)

Saturday 25 March 2023

அர்ஜுனன் காண்டீபத்தை எப்போது பெற்றான்? அறிவோம் மஹாபாரதம்..

அர்ஜுனன் காண்டீபத்தை எப்போது பெற்றான்? அறிவோம் மஹாபாரதம்.. 

அர்ஜுனன் தீர்த்த யாத்திரை முடித்து சுபத்ரையை மணம் செய்து கொண்ட பிறகு, ஶ்ரீ கிருஷ்ணரின் உதவியுடன், காண்டவ வனத்தை அழித்து அக்னிக்கு ஹோமம் செய்தான். 


இதனால் சந்தோஷமடைந்த அக்னி பகவான் நேரில் பிரத்யக்ஷமாகி, அர்ஜுனனுக்கு, 

  1. காண்டீபம் என்ற திவ்யமான வில்லையும், 
  2. பாணங்கள் குறையாத 2 அம்புரா துணியையும்
  3. ஹனுமன் கொடி பறக்கும் திவ்யமான தேரையும் கொடுத்தார்.

व्यवसाय सहायस्य विष्णोः शत्रु वधेषि इव।

पार्थाय अग्निः ददौ च अपि गाण्डीवं धनुः उत्तमम्।।

इषुधी च अक्षयैः बाणै रथं च कपिलक्षणम्।

मोक्षयामास बीभत्सुर्मयं यत्र महासुरम्।।

Adi Parva 61 - vyasa mahabharata