Followers

Search Here...

Saturday 20 May 2023

ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்? - அறிவோம் மனு ஸ்ம்ருதி

ப்ரம்மாவின் ஒரு பகல், பூமியில் எத்தனை வருடங்கள்? தேவலோகத்தில் எத்தனை வருடங்கள்?  

பூ: புவ: ஸுவ: மஹ: ஜன: தப: சத்ய: 

பூ: என்ற நமது பூலோகத்திற்கு மேல் புவர் (நக்ஷத்ரம்) லோகங்களுக்கு மேல், தேவர்கள் ஸுவ என்ற சொர்க்க லோகத்தில் வசிக்கின்றனர்.

அதற்கும் மேல் மஹ, ஜன, தப லோகங்களுக்கு மேல் ப்ரம்ம தேவன் சத்ய லோகத்தில் வசிக்கிறார்.


இப்பொழுது சத்ய லோகத்தில் இருக்கும் ப்ரம்ம தேவன் 50 வயது முடிந்து, 51வது வயதின் முதல் நாள் பகலை கழித்து கொண்டு இருக்கிறார்.


ப்ரம்மா, தன் ஒவ்வொரு நாளும் 71 சதுர் யுகங்களை ஆளும் 14 மனுக்களை பார்க்கிறார் . 

அவருடைய இன்றைய பொழுதில், 27 சதுர் யுகங்கள் முடிந்து விட்டது.

இப்பொழுது இவர் 28வது சதுர் யுகத்தை பார்த்து கொண்டு இருக்கிறார்.

இந்த சதுர் யுகத்தில் 3 யுகங்கள் (சத்ய, த்ரேதா, த்வாபர) முடிந்து விட்டது. 

4வது யுகம் "கலி யுகம்" நடந்து கொண்டு இருக்கிறது  மனிதர்களுக்கு  5000 பூலோக வருடங்கள் கலியுகத்தில் முடிந்து விட்டது.

पित्र्ये रात्र्यहनी मासः प्रविभागस्तु पक्षयोः ।

कर्मचेष्टास्वहः कृष्णः शुक्लः स्वप्नाय शर्वरी ॥

- மனு ஸ்மிருதி (manu smriti)

பித்ருக்கள் வாழும் உலகத்தில் ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு மாத காலமாகும். 

இந்த 1 மாதத்தில், 

15 நாட்கள் கொண்ட தேய்பிறை கால சமயத்தில் (அமாவாசை வரை), பித்ருக்கள் கர்மானுஷ்டங்கள் செய்கின்றனர். இது அவர்களுக்கு பகல் பொழுது.

அடுத்த 15 நாட்கள் கொண்ட வளர்பிறை கால சமயத்தில் (பௌர்ணமி வரை), இரவு பொழுதாக இருப்பதால், உறங்குகின்றனர்.


ஒவ்வொரு மனிதனும், தன் பெற்றோரை நினைத்து கொண்டு, பித்ருக்கள் உறங்க போகும் முன், தன் கையால் எள், ஜலம் கொடுத்து தன் பெற்றோரை நினைத்து கொண்டு தர்ப்பணம் (திருப்தி) செய்கிறான்.

दैवे रात्र्यहनी वर्षं प्रविभाग: तयोः पुनः ।

अह: तत्रोदगयनं रात्रिः स्याद् दक्षिणायनम् ॥ 

- மனு ஸ்ம்ருதி (Manu Smriti)

(மனிதர்கள் வாழும்) பூலோகத்தில் ஒரு வருடம் என்பது, (சொர்க்க லோகத்தில் உள்ள) தேவர்களுக்கு பகலும், இரவும் சேர்ந்த ஒரு நாள் மட்டுமே.


தேவ லோகத்தில்:

  • தை (6-8AM), மாசி (8-10AM), பங்குனி (10AM-12Noon), 
  • சித்திரை (12Noon -2PM), வைகாசி (2PM -4PM), ஆனி (4PM -6PM)
என்ற 6 மாதங்கள் தேவலோகத்தில் ஒரு பகலாக  உள்ளது. இதற்கு உத்தராயணம் என்று பெயர்.

  • ஆடி (6PM -8PM), ஆவணி (8PM -10PM), புரட்டாசி (10PM -12AM), 
  • ஐப்பசி (12AM -2AM), கார்த்திகை (2AM -4AM), மார்கழி (4AM -6AM)
என்ற மற்றொரு 6 மாதங்கள், தேவ லோகத்தில் ஒரு இரவாக உள்ளது. இதற்கு தக்ஷிணாயணம் என்று பெயர்.

மார்கழி மாத காலத்தில் 18 நாள் மஹாபாரத யுத்தம் நடந்தது. 

யுத்தத்தில் 10வது நாள் பீஷ்மர் வீழ்ந்தார். 

உத்தராயணம் வரும் வரை உயிரை விட்டு விடாமல், யோகத்தில் இருந்து, தை மாதம் வந்ததும் (உத்தராயண காலம்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து "1000 நாமங்களால்" ஸ்துதி செய்து, அவர் முன்பாக தேகத்தை துறந்து மேலுலகம் சென்றார்.
ब्राह्मस्य तु क्षपाहस्य यत् प्रमाणं समासतः ।
एकैकशो युगानां तु क्रमशस्तन् निबोधत ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
(சத்ய லோகத்தில் இருக்கும்) பிரம்மாவுடைய பகல், இரவு கால கணக்கை, யுக அளவை சொல்கிறேன். கேளுங்கள்.

चत्वार्याहुः सहस्राणि वर्षाणां तत् कृतं युगम् ।
तस्य तावत् शती सन्ध्या सन्ध्यांशश्च तथाविधः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
4000 தேவ வருடங்கள் மேலும் 400 தேவ வருடங்கள் காலை, 400 தேவ வருடங்கள் மாலை சந்தியா காலங்களாக, மொத்தம் 4800 தேவ வருடங்கள் ஒரு க்ருத-யுகம் காலம்
इतरेषु ससन्ध्येषु ससन्ध्यांशेषु च त्रिषु ।
एकापायेन वर्तन्ते सहस्राणि शतानि च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
இதில் 1000 வருடங்கள் குறைத்து,  100 வருடங்கள் ஒவ்வொரு சந்தியிலும் படிப்படியாக குறைய, மற்ற மூன்று யுகங்கள் காலத்தை அறியலாம். அதாவது,
  • 3600 தேவ வருடங்கள் ஒரு த்ரேதா-யுகம் காலம் = பூமியில் 3*4,32,000 வருடம்
  • 2400 தேவ வருடங்கள் ஒரு துவாபர-யுகம் காலம் = பூமியில் 2*4,32,000 வருடம்
  • 1200 தேவ வருடங்கள் ஒரு கலி-யுகம் காலம் = பூமியில் 4,32,000 வருடம் 

  • பூமியில் 360 நாட்கள் = பூமியில் வருடம் = தேவலோகத்தில் தேவ நாள்
  • பூமியில் 360 வருடம் = தேவலோகத்தில் 360 தேவநாள் = தேவலோகத்தில் தேவ வருடம்
  • பூமியில் 36,000 வருடம் = தேவலோகத்தில் 36,000 தேவ நாள் தேவலோகத்தில் 100 தேவ வருடம் (ஒரு இந்திரனின் ஆயுள்)
  • பூலோகத்தில் ஒரு கலி யுகம் = பூமியில் 4,32,000 வருடம் = தேவலோகத்தில் 4,32,000 தேவ நாள் = தேவலோகத்தில் 1200 தேவ வருடம் 12 இந்திரர்கள் ஆயுட் காலம்
  • பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = பூமியில் 43,20,000 வருடம் = தேவலோகத்தில் 43,20,000 தேவ நாள் = தேவலோகத்தில் 12,000 தேவ வருடம் = தேவ லோகத்தில் 1 தேவ யுகம்  = 120 இந்திரர்கள் ஆயுட் காலம்
  • 71 * பூலோகத்தில் 4 யுகம் சேர்த்து = ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்)
यदेतत् परि-सङ्ख्यातमादावेव चतुर्युगम् ।
एतद् द्वादश साहस्रं देवानां युगम् उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)

இந்த 4 யுகங்கள் சேர்ந்தால், மொத்தம் 12000 (4800,3600,2400,1200) தேவ வருடங்கள் ஆகிறது.  (அதாவது 120 இந்திரர்கள் ஒரு சதுர் யுகத்தில் பதவிக்கு வருகின்றனர்)

दैविकानां युगानां तु सहस्रं परि-सङ्ख्यया ।
ब्राह्मम एकम् अहर्ज्ञेयं तावतीं रात्रिम् एव च ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
1000 முறை இப்படிப்பட்ட 12000 தேவ வருடங்கள் முடியும் போது (1,20,00,000 Deva Yug), அது சத்ய லோகத்தில் பிரம்மாவுக்கு ஒரு பகலாக இருக்கிறது. அதே கால அளவுக்கு பிரம்மாவுக்கு ஒரு இரவும் இருக்கிறது.

तद् वै युग सहस्रान्तं ब्राह्मं पुण्यम् अहर्विदुः ।
रात्रिं च तावतीम् एव ते अहोरात्र विदो जनाः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மாவின் இந்த பகல் பொழுது "புண்ய காலம்" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதும் "புண்ய இரவு" என்று சொல்கிறோம். ப்ரம்மாவின் இரவு பொழுதிலும் அழியாமல் இருப்பவர்கள் "அஹோ ராத்திரிகள்" என்று செல்லப்படுகிறார்கள்.

तस्य सो अहर्निशस्यान्ते प्रसुप्तः प्रतिबुध्यते ।
प्रतिबुद्ध: च सृजति मनः सद् असद् आत्मकम् ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மா தன்னுடைய இரவு காலத்தில் தூங்குவார். முடியும் தருவாயில் எழுந்திருப்பார். எழுந்த பிறகு, "ஸத் (soul) அஸத்தில் (nature) பிரவேசித்தபடியான  ரூபமான படைப்பை" மீண்டும் தொடங்குகிறார்.

मनः सृष्टिं विकुरुते चोद्यमानं सिसृक्षया ।
आकाशं जायते तस्मात् तस्य शब्दं गुणं विदुः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ப்ரம்மாவின் மனம், படைப்பை செய்ய ஏவப்பட்டு, ஆகாயத்தை படைத்தார். ஆகாயத்தில் "சப்தம்" (ஒலி) குணமாக அமைத்தார்.

आकाशात् तु विकुर्वाणात् सर्व-गन्धवहः शुचिः ।
बलवान् जायते वायुः स वै स्पर्शगुणो मतः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ஆகாயத்திலிருந்து வாசனைகளை கடத்தும், மிகவும் சுத்தமான, மஹா பலம் பொருந்திய வாயுவை (காற்று) படைத்தார். வாயுவில் "ஸ்பரிசம்" (தொடுதல்) கூடுதல் குணமாக அமைத்தார்.

वायो: अपि विकुर्वाणाद् विरोचिष्णु तमोनुदम् ।
ज्योति: उत्पद्यते भास्वत् तद् रूप गुणम् उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
வாயுவிலிருந்து பிரகாசத்தை ஏற்படுத்தும், இருட்டை போக்கடிக்கும் ஜோதியை (அக்னி)  படைத்தார். ஜோதியில் "உருவம்" (பார்த்தல்) கூடுதல் குணமாக அமைத்தார்.

ज्योतिषश्च विकुर्वाणाद् आपो रस गुणाः स्मृताः ।
अद्भ्यो गन्धगुणा भूमि: इत्येषा सृष्टि: आदितः ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
ஜோதியிலிருந்து (அக்னி) தண்ணீரை படைத்தார். தண்ணீரில் "ரசத்தை" (சுவை) கூடுதல் குணமாக அமைத்தார்.

यद् प्राग् द्वादश साहस्रम् उदितं दैविकं युगम् ।
तदेक सप्ततिगुणं मन्वन्तरम् इह उच्यते ॥
- மனு ஸ்ம்ருதி (rule book)
12,000 தேவ வருடங்கள் "ஒரு சதுர் யுகம்" என்று முன்பே சொல்லப்பட்டது. தேவ லோகத்தை பொறுத்தவரை "12,000 தேவ வருடங்கள், ஒரு தேவ யுகம்" என்று சொல்லப்படுகிறது.
71 தேவ யுகங்கள் (71 சதுர் யுகம் சேர்த்து), ஒரு மனுவின் ஆயுட் காலம் (மன்வந்தரம்) என்று சொல்லப்படுகிறது.

मन्वन्तराण्य सङ्ख्यानि सर्गः संहार एव च ।
क्रीडन् इव एतत् कुरुते परमेष्ठी पुनः पुनः ॥ 
- மனு ஸ்ம்ருதி (rule book)
எப்படி படைப்பும், சம்ஹாரமும் எண்ண முடியாததோ, அது போல, மன்வந்திரங்களும் எத்தனை முடிந்தது? எத்தனை நடக்க போகிறது? என்று எண்ண முடியாதபடி விளையாட்டாக ( லீலையாக) மீண்டும் மீண்டும் படைப்பு தொழிலை செய்து கொண்டே இருக்கிறார்


Monday 1 May 2023

"ஸ்மார்த்த" "ஸ்ரௌத்த" தர்மம் என்றால் என்ன? பிராம்மண வர்ணத்தில் அனுமதிக்கப்படாத விவாஹம் எது? அறிவோம் மஹாபாரதம்

பராசர ரிஷி, சத்யவதி மூலமாக வியாசரை நொடி பொழுதில் யமுனை கரையில் பிறப்பிக்க செய்தார்.  

அப்போது, அவளை பார்த்து, சிறந்த தர்மம் எது? என்று விளக்க ஆரம்பிக்கிறார்.

शिष्टानां तु समाचारः शिष्टाचार इति स्मृतः।

श्रुतिस्मृतिविदो विप्रा धर्मज्ञा ज्ञानिनः स्मृताः।।

- adi parva (Vyasa mahabharata)

சிஷ்டர்கள் தொன்றுதொட்டு செய்து கொண்டு வரும் ஆசாரமே - "சிஷ்டாசாரம்" என்று சொல்லப்படுகிறது.

வேதத்தையும்+தர்ம சாஸ்திரத்தையும் (அனைத்து ஸ்ம்ருதிகளையும்)+தர்மஸூக்ஷ்மத்தையும் அறிந்த வேதியனே (விப்ரன்) - "ஞானி" (அறிவு உள்ளவன்) என்று சொல்லப்படுகிறான்.


धर्मज्ञैर्विहितो धर्मः श्रौतः स्मार्तो द्विधा द्विजैः।

- adi parva (Vyasa mahabharata)

தர்மம் தெரிந்த இரட்டை பிறப்பாளர்களால் (பூணூல்/காயத்ரீ உபதேசம் பெற்ற பிராம்மணர்கள்/வைசியர்கள்/க்ஷத்ரியர்கள்), "ஸ்ரௌத்த" தர்மம், "ஸ்மார்த்த" தர்மம் என்ற 2 தர்மங்கள் விதிக்கப்பட்டு உள்ளது. 

दानाग्निहोत्रमिज्या च श्रौतस्यैतद्धि लक्षणम्।।

- adi parva (Vyasa mahabharata)

"தானம் + அக்னி ஹோத்ரம் + யாகம்" இந்த மூன்றும் "ஸ்ரௌத்த" தர்மத்தில் உள்ள லக்ஷணங்கள்.


स्मार्तो वर्णाश्रमाचारो यमैश्च नियमैर्युतः।

- adi parva (Vyasa mahabharata)

"யமம்+நியமம்" போன்ற வர்ணாஸ்ரம தர்மத்தை கடைபிடித்து கொண்டிருப்பது "ஸ்மார்த்த" தர்ம லக்ஷணம்.

(யமம் - பிற உயிரை துன்பம் செய்யாமல் இருப்பது, பொய் பேசாமல் இருப்பது, திருடாமல் இருப்பது, தகாத காமம் இல்லாமல் ப்ரம்மச்சர்யத்தில் இருப்பது, அதர்மமான பொருளில் பற்று இல்லாமல் இருப்பது. யமம் என்பது இந்த குணங்களை குறிக்கிறது)

(நியமம் - தூய்மையாக (சௌசம்) இருப்பது, கிடைத்ததில் திருப்தி கொள்வது, தவம் செய்வது, வேதம் ஓதுவது, பகவத் தியானம் செய்வது. நியமம் என்பது கட்டுப்பாடுகளை குறிக்கிறது


धर्मे तु धारणे धातुः सहत्वे चापि पठ्यते।।

- adi parva (Vyasa mahabharata)

தர்மமே அனைத்திற்கும் ஆதாரம். ஆதலால் அவரவர் தர்மத்தை விட கூடாது என்று சொல்லப்படுகிறது. 


तत्रेष्टफलभाग्धर्म आचार्यैरुपदिश्यते।

अनिष्टफलभाक्रेति तैरधर्मोऽपि भाष्यते।।

तस्मादिष्टफलार्थाय धर्ममेव समाश्रयेत्।

- adi parva (Vyasa mahabharata)

தன்னுடைய தர்மத்தில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இனிய பலன்கள் தானாக கிடைக்கும் என்று ஆசார்யர்கள் உபதேசிக்கிறார்கள்.

நல்ல பலன் நமக்கு கிடைப்பதற்காக, நம் தர்மத்தை நாம் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். 

ब्राह्मो दैवस्तथैवार्षः प्राजापत्यश्च धार्मिकः।।

विवाहा ब्राह्मणानां तु गान्धर्वो नैव धार्मिकः।

- adi parva (Vyasa mahabharata)

பிராம்மண விவாஹம் (1), தெய்வ விவாஹம் (2), ஆர்ஷம் என்ற விவாஹம் (3), ப்ராஜாபத்யம் என்ற விவாஹம் (4) தர்மத்துக்கு உட்பட்ட விவாஹ முறைகள். 

காந்தர்வ விவாஹம் (LOVE MARRIAGE) ஒரு போதும் பிராம்மண வர்ணத்தில் (Today MLA/MP are in this Varna guiding Kshatriya (army/police)) உள்ளவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விவாஹம் ஆகாது. 


त्रि-वर्णेतर जातीनां गान्धर्वासुर राक्षसाः।।

- adi parva (Vyasa mahabharata)

பிராம்மண/க்ஷத்ரிய/வைஸ்ய வர்ணத்தில் இல்லாதவர்களுக்கு காந்தர்வ விவாஹம் (5), ஆஸுர விவாஹம் (6), ராக்ஷஸ விவாஹம் (7) தர்மமாக கூறப்படுகிறது. 


पैशाचो नैव कर्तव्यः पैशाचश्चाष्टमोऽधमः।

सामर्षां व्यङ्गिकां कन्यां मातुश्च कुलजां तथा।।

- adi parva (Vyasa mahabharata)

பைஸாச விவாஹம் (8) யாருமே செய்து கொள்ள கூடாது. இந்த 8வது விவாஹம் இழிவானது.

வியாசர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? த்வைபாயனர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? அறிவோம் மஹாபாரதம்

வியாசர் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? அறிவோம் மஹாபாரதம்

एवं द्वैपायनो जज्ञे सत्यवत्यां पराशरात्।

न्यस्तो द्वीपे यद् बाल: तस्माद् द्वैपायनःस्मृतः।।

- adi parva (Vyasa mahabharata)

பராசரருக்கும், சத்யவதிக்கும் பிறந்த இவர், யமுனை கரையிலேயே (த்வீபத்தில்) குழந்தையாக விடப்பட்டதால், இவருக்கு 'த்வைபாயனர்" என்ற பெயர் வந்தது.


पादापसारिणं धर्मं स तु विद्वान्युगे युगे।

आयुः शक्तिं च मर्त्यानां युगावस्थामवेक्ष्यच।।

ब्रह्मणो ब्राह्मणानां च तथानुग्रह काङ्क्षया।

विव्यास वेदान्यस्मत्स तस्माद् व्यास इति स्मृतः।।

- adi parva (Vyasa mahabharata)

தர்மம் ஒவ்வொரு யுகமாக நகரும் போது, கால் பங்கு விலகி போவதையும், மனிதனின் ஆயுளும், சக்தியும் யுகங்களுக்கு தக்கபடி இருப்பதையும் பார்த்த அந்த த்வைபாயனர், 

வேதத்தையும், ப்ராம்மணர்களையும் அனுசரித்து, வேதத்தை வகுத்ததால், அவருக்கு "வியாசர்" என்று பெயரும் ஏற்பட்டது.

वेदानध्यापयामास महाभारत पञ्चमान्।

सुमन्तुं जैमिनिं पैलं शुकं चैव स्वमात्मजम्।।

அந்த வியாசர், வேதத்தை, பைலருக்கும் (ரிக்), சுமந்துவுக்கும், ஜைமினிக்கும் (ஸாம), தன் பிள்ளையான சுகருக்கும் சொல்லிவைத்தார்.

Saturday 29 April 2023

Punjab தமிழ்நாடு உறவு அறிவோம். பாண்டவர்களுக்கு எத்தனை மகன்கள் பிறந்தார்கள்? அறிவோம் மஹாபாரதம்

பாண்டவர்களுக்கு எத்தனை மகன்கள் பிறந்தார்கள்? அறிவோம் மஹாபாரதம்

ततः पाञ्चाल विषयं गत्वा

स्वयंवरे द्रौपदीं लब्ध्वा अर्ध राज्यं 

प्राप्य इन्द्रप्रस्थ निवासिन: तस्यां 

पुत्रान् उत्पादयाम् आसु द्रौपद्याम्।।

प्रतिविन्ध्यां युधिष्ठिरः |

सुतसोमं वृकोदरः |

श्रुतकीर्तिमर्जुनः |

शतानीकं नकुलः |

श्रुतसेनं सहदेव इति।।

- மஹாபாரதம் (வ்யாஸர்)

பாஞ்சால தேசம் (punjab) சென்று, திரௌபதியை சுயம்வரத்தில் வென்று, கிடைத்த பாதி ராஜ்யமான இந்திரப்ரஸ்தத்தில் பாண்டவர்கள் வசித்தனர். அங்கு திரௌபதி மூலம் பாண்டவர்கள் 5 புத்திரர்களை பெற்றனர்.

யுதிஷ்டிரன் ப்ரதிவிந்த்யன் (1) என்ற புத்திரனை பெற்றார்.

பீமன் ஸுதஸோமன் (2) என்ற புத்திரனை பெற்றார்.

அர்ஜுனன் ஸ்ருதகீர்த்தீ (3) என்ற புத்திரனை பெற்றார்

நகுலன் ஸதாநீகன் (4) என்ற புத்திரனை பெற்றார்.

சஹதேவன் ஸ்ருதசேனன் (5) என்ற புத்திரனை பெற்றார்.

शैव्यस्य कन्यां देवकीं नामोपयेमे युधिष्ठिरः।

तस्यां पुत्रं जनयामास यौधेयं नाम।।

யுதிஷ்டிரன் ஸைப்யனின் பெண்ணான தேவகீயை மணந்தார். அவர்களுக்கு யௌதேயன் (6) என்ற புத்திரன் பிறந்தான்.


भीमसेनस्तु वाराणस्यां काशिराज कन्यां जलन्धरां नामोपयेमे स्वयंवरस्थां।

तस्यामस्य जज्ञे शर्वत्रातः।।

பீமன் காசி ராஜனின் பெண்ணான ஜலந்தராவை மணந்தார். அவர்களுக்கு ஸர்வத்ராதன் (7) என்ற புத்திரன் பிறந்தான்


अर्जुनस्तु खलु द्वारवतीं गत्वा 

भगवतो वासुदेवस्य भगिनीं सुभद्रां

नामोदवहद् भार्यां |

तस्याम् अभिमन्युं नाम पुत्रं जनयामास ||

அர்ஜுனன் துவாரகை சென்ற போது, பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை மணந்தார். அவர்களுக்கு அபிமன்யு (8) என்ற புத்திரன் பிறந்தான்

नकुलस्तु खलु चैद्यां रेणुमतीं नामोदवहत् |

तस्यां पुत्रं जनयामास निरमित्रं नाम ||

நகுலன் சேதி நாட்டு அரசன் பெண்ணான ரேணுமதீயை, மணந்தார். அவர்களுக்கு நிரமித்ரன் (9) என்ற புத்திரன் பிறந்தான்


सहदेवस्तु खलु माद्रीमेव स्वयंवरे विजयां नामोदवहद्भार्याम् |

तस्यां पुत्रं जनयामास सुहोत्रं नाम ||

சஹதேவன் மத்திர நாட்டு அரசன் பெண்ணான விஜயாவை சுயம்வரத்தில் மணந்தார். அவர்களுக்கு ஸுஹோத்ரன் (10) என்ற புத்திரன் பிறந்தான்

भीमसेनश्च पूर्वमेव हिडिम्बायां राक्षस्यां पुत्रमुत्पादयामास

घटोत्कचं नाम |

பீமன் இதற்கு முன்பேயே ராக்ஷஸ பெண்ணான ஹிடிம்பியை மணந்தார். அவர்களுக்கு கடோத்கஜன் (11) என்ற புத்திரன் பிறந்தான்.


अर्जुनस्तु नागकन्यायाम् उलूप्याम् 

इरावन्तं नाम पुत्रं जनयामास ||

அர்ஜுனன் மேலும் நாக கன்னியான உலூபியை மணந்தார். அவர்களுக்கு இராவந்தன் (12) என்ற புத்திரன் பிறந்தான். 


ततो मणलूरुपति कन्यायां चित्राङ्गदायाम् अर्जुनः पुत्रम् उत्पादयामास

बभ्रुवाहनं नाम |

பிறகு, அர்ஜுனன் மதுரைக்கு எல்லையாக இருந்த மணலூர் (பாண்டிய தேசம்) அரசனின் (சித்ரவாஹனன்) பெண்ணான சித்ராங்கதாவை மணந்தார். அவர்களுக்கு பப்ருவாஹனன் (பாண்டிய மன்னன்) (13) என்ற புத்திரன் பிறந்தான். 

एते त्रयोदश पुत्राः पाण्डवानाम् 

இவ்வாறு பாண்டவர்களுக்கு 13 புத்திரர்கள் பிறந்தார்கள். 


பாண்டிய தேச அரசி சித்ராங்கதா, அர்ஜுனனின் மூத்த மனைவியும், பாஞ்சாலியுமான (punjab) திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து இருக்கிறாள்.

அவள் மகனும், பாண்டிய அரசனுமான பப்ருவாஹனன் முதல் பிறகு 5000 வருடங்கள் வந்த பாண்டிய அரசர்கள் யாவரும் திரௌபதிக்கு பெரு மதிப்பு கொடுத்து வழிபாடு செய்து, அக்னியில் இருந்து தோன்றியவள் என்பதால், அவளுக்கு முன் தீ மிதித்து வழிபாடு செய்து இருக்கின்றனர் என்று தெரிகிறது.

இன்றைய பஞ்சாபில் கூட திரௌபதிக்கு வழிபாட்டு கோவில்கள் அதிகம் இல்லை. ஆனால் திரௌபதிக்கு தெற்கு பாரதமான தமிழ்நாட்டில் திரௌபதிக்கு கோவில்கள், வழிபாடுகள் அதிகம் காணப்படுகிறது.

Saturday 15 April 2023

மகாபாரத சமயத்தில் மதுரை, தமிழ்நாடு... ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது? வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்

ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது? 

தமிழர்களுக்கும் திரௌபதிக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருக்கும்?

 

திரௌபதியை மணந்து கொண்ட அர்ஜுனன், தமிழகம் வந்தாரா?

மஹாபாரதம் படிக்கும் போது, இதற்கான விடை நமக்கு தெரிகிறது.


அது மட்டுமல்ல, அர்ஜுனன் பாண்டிய இளவரசியான சித்ராங்கதையை மணந்து கொண்டார் என்று தெரிகிறது.


அர்ஜுனன் பிள்ளையே பிறகு பாண்டிய மன்னன் ஆனான் என்றும் தெரிகிறது. 

மஹாபாரத போருக்கு பிறகு 4000 வருடங்கள் (பாண்டிய ஆட்சி இருந்த வரை) அர்ஜுனன் வம்சமே பாண்டிய மன்னர்களாக ஆண்டனர்.


அர்ஜுனன் பாண்டிய இளவரசி சித்ராங்கதையை மணக்க இடம் கொடுத்த திரௌபதிக்கு இந்த தமிழ் மண் தெரிவிக்கும் நன்றி என்று அறிய முடிகிறது.


மேலும், திரௌபதி அக்னியில் இருந்து வந்தவள் என்று காட்ட, தீ மிதிக்கும் வழிபாடும் ஏற்பட்டது என்று அறிய முடிகிறது.


மஹாபாரத காலத்தில் (3100BCE) "மதுரை"க்கு பெயர் என்ன இருந்து இருக்கிறது? என்று அறிய முடிகிறது.

பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?

சோழ அரசாட்சியும், சேர அரசாட்சி முடிந்ததும், பாண்டிய அரசாட்சி பல வருடங்கள் நடந்தது என்பது மாலிக் காபூர் வந்த சமயத்தில் அறிய முடிகிறது. இஸ்லாமியர்கள் தாக்கிய மீனாக்ஷி கோவிலில் இன்றும் உடைக்கபட்ட சிவ லிங்கம் கதை சொல்கிறது.

5000 வருடம் முன் மஹாபாரத காலத்தில் "மணிபூரம்" என்றும் மதுரை அழைக்கப்பட்டு இருக்கிறது.

பார்வதி தேவியே மலயத்வஜ பாண்டியனுக்கு மீனாக்ஷியாக பிறந்து இந்த பாண்டிய தேசத்தை ஆண்டாள். மலயத்வஜன் வம்சத்தில் வந்த பாண்டிய மன்னன் என்று சகாதேவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார், அன்று இருந்த பாண்டிய அரசர்.

பிற்காலத்தில் பெரியாழ்வார் இங்கு வந்து வசித்த போது, சில மைல் தூரத்தில் கள்ளழகர் இருக்கும் இடத்தை பார்த்தால் கோகுலம் போலவும், அங்குள்ள மலையை பார்த்தால் கோவர்த்தனம் போலவும், பிருந்தாவனம் போலவும், இந்த தலைநகரை பார்த்தால் மதுரை போலவும் தெரிய, அங்கேயே கடைசி வரை வசித்தார்.
மணிபூரம் தென்மதுரை போல இவருக்கு தெரிய, உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிஜமான மதுராவை வடமதுரை... வடமதுரை என்று குறிப்பிட்டு பாடுகிறார்.

அவர் காலத்துக்கு பிறகே, மதுரை என்ற பெயர் உண்டாகியது.

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் முக்தி பெற்ற ஸ்தலம் அழகர்மலை என்ற சோலைமலை என்ற திருமாலிருஞ்சோலை.

பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?


தமிழர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?


வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்


Connection between tamil people (Pandiya and chola) in mahabharat?

In 3 chapter, we see  this connection.
Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.

1st when Arjuna goes for theertha yatra,
2nd sahadeva when he goes for rajasuya yagya,
3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.

பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும்,
தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.

நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.

மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

1.
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.

அப்பொழுது, பாண்டிய தேசத்தில், மணலூர் வருகிறான். அப்பொழுது சித்ரவாகனன் என்ற பாண்டிய அரசன், தன் பெண்ணை (சித்ராங்கதை) நிபந்தனை பேரில் திருமணம் அர்ஜுனனுக்கு செய்து முடிக்கிறான்.
ஆதி பர்வம், 61, 235 அத்தியாயம்
https://www.proudhindudharma.com/2022/10/Pandya-king-dynasty-arjuna.html?m=1

2.
யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார்.
இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.
சபா பர்வம், அத்தியாயம் 33
https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1

3.
போர் முடிந்த பிறகு, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் முடிவு செய்கிறார்.
அப்போது, அர்ஜுனன் பாண்டிய தேசம் வருகிறான்.
பாண்டிய மன்னனான தன் மகனையும், தமிழ் பெண்ணான சித்ராங்கதையையும் பார்கிறான்.
அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79
https://www.proudhindudharma.com/2023/01/arjuna-killed-by-pandiya-king.html?m=1