Followers

Search Here...

Wednesday 11 October 2017

கைகேயி கேட்ட வரம்... ராம ராஜ்ஜியம் என்றால் என்ன ?

கைகேயி கேட்ட வரம்:

  1. ராமர் 14 வருடம் காடு செல்ல வேண்டும்.
  2. பரதன் நாட்டை ஆள வேண்டும்.




பரதன் ஒரு நாளா ? 14 வருடமா? காலம் முழுவதுமா?
என்று அவள் குறிப்பாக கேட்கவில்லை.

ராமர் இதற்கு கட்டுப்பட்டு 14 வருடம் காடு சென்றார்.
அவரை பொறுத்தவரை, "மீண்டும் அயோத்தி வர வேண்டும், ஆள வேண்டும்" என்கிற எண்ணம் கூட இல்லை.
கைகேயி "இத்தனை வருடம் பரதன் நாட்டை ஆள வேண்டும்!!" என்று கேட்கவில்லை என்றாலும் கூட, ராமரை பொறுத்தவரை "பரதனே ஆளட்டும்" என்று தான் இருந்தார்.
மீண்டும் அயோத்தி வரும் எண்ணம் இருந்ததா!! என்று கூட தெரியவில்லை.

பரதன் "காட்டை விட்டு மீண்டும் ஆள வாருங்கள்" என்று சொன்ன போது, ராமருக்கு, பரதன் தந்து ஏற்றுக் கொள்வதில் அவருக்கு தடை இல்லை. ஆனால், ராமரை தடுத்தது கைகேயியின் முதல் வரம் தான்.
ஆனாலும் "பரதனே அயோத்தியை இனி ஆளட்டுமே" என்று தான் இருந்தார்.

ராமர் இப்படி மனதில் நினைத்து 14 வருடம் கழித்து திரும்பிய பின், ஒருவேளை தன்னையே எப்போதும் ஆள சொல்வாரோ!! என்ற பயத்தில் தான் பரதன், ராமர் முன் "நீங்கள் 14 வருடம் முடிந்து அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் நான் அக்னி பிரவேசம் செய்து விடுவேன்" என்று பரதன் சபதம் செய்தார்.

14 வருடம் முடிந்த நிலையில், ராமர் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருக்க, பரதன் இதற்குள்ளாக, அக்னியை மூட்டிவிட்டார்.
அந்த சமயத்தில் "ஜெய் சீதாராம்" என்று வந்து இறங்கிய ஹனுமான், தன் கையாலேயே எரிந்து கொண்டிருந்த அக்னியை அணைத்து "ராமர் வருகிறார். அயோத்தி வந்து ஆட்சி புரிய வருகிறார்" என்றார்.

சாஸ்திரம் "கையால் அக்னியை அணைக்க கூடாது" என்கிறது.
சாஸ்திரம் அறிந்த ஹனுமான் இப்படி செய்யலாமா ?
சாஸ்திரம் சில சமயங்களில் இது போன்று அனுமதிக்கிறது.
உதாரணமாக
சபதம் செய்யும் போது இப்படி கையால் அணைக்க அனுமதிக்கிறது.

ஹனுமான் உண்மையில் பரதன் முன், அந்த அக்னியை கையால் அணைத்து "ராமர் அயோத்தி வந்து ஆட்சி புரிய வருகிறார்" என்று சபதம் செய்தார்.

இப்படி இரு பக்தர்கள் "பரதனும், ஹனுமனும்" செய்த சபதம் பொய் போக கூடாதே என்று கட்டுப்பட்டு, அயோத்தி வந்து மகிழ்ச்சியுடன் ஆட்சியை ஏற்றார்.



ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனுக்கு இலங்கையின் எல்லையில் இருந்து கொண்டே அவருக்கு பட்டாபிஷேகம் செய்தார்.

அன்பினால் விபீஷணன் நாட்டுக்குள் வந்து ஸ்நானம் செய்து, கொஞ்சம் சாப்பிட்டு விட்டு செல்லலாமே என்று விண்ணப்பிக்கிறார்.
ராவணனை கொன்றதினால், ராமரே இலங்கைக்கு அரசன்.
இருந்தாலும், அந்த அரச பதவியை அப்படியே விபீஷணனுக்கு கொடுத்து விட்டார்.
அங்கிருந்து ஒரு சிறு செல்வத்தை கூட எடுத்து செல்லவும் அவர் விரும்பவில்லை.
நாட்டை கைப்பற்றிய கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம் நாட்டு செல்வத்தை எப்படி சூறையாடினார்கள் என்று இந்திய சரித்திரத்தை பார்க்கும் போது தான், ராமரின் உயர்ந்த குணம் இதில் நமக்கு தெரியும்.

"ஒரு முறை இலங்கைக்குள் வந்து விட்டு செல்லுங்கள்" என்று விபீஷணன் கேட்க, ராமர் அதற்கு "நான் எடுத்துக்கொண்ட ஒரு காரியம் முடிந்து விட்டால், அதற்கு பின் ஒரு க்ஷணம் கூட அங்கே காரணம் இல்லாமல் இருப்பதில்லை. நான் வந்த காரியம் முடிந்து விட்டது. இனி இப்பொழுதே அயோத்தி செல்ல வேண்டும், பரதன் காத்துக்கொண்டிருப்பான்" என்றார். இதில் கூட ராமரின் தலைமை பண்பு தெரிகிறது.

ராம ராஜ்ஜியம் என்றால் என்ன ?
ராமாயணத்தை படிக்கும் போது,
"ராமர் ஆட்சியில் அமர்ந்தது கடைசியில் தானே" என்று நமக்கு தோன்றும்.
ராமர் ஆட்சியில் அமர்ந்த பின் எப்படி ஆட்சி செய்தார்?
என்பதை வைத்து மட்டும் ராம ராஜ்ஜியம் ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை என்று பேசப்படுகிறதா? என்ற கேள்வியும் நமக்கு எழும்.

ராமர் இளவரசனாக, மேலும் காட்டில் 14 வருடம் இருந்த காலத்தில் கூட ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தார்.



அரசன் ஆவதற்கு முன்பே அவரிடம் அத்தனை சிறந்த குணங்களும் இருந்தது.
நான் நல்லவனாக இருப்பேன், 
சத்தியத்தில் இருப்பேன்,
தாய் தந்தை சொல்படி நடப்பேன், 
யாரிடமும் அன்பாக இருப்பேன், 
என் தர்ம விதிப்படி எப்பொழுதும் இருப்பேன். 
மற்றவர்களும் அவர்கள் தர்மபடி இருக்க செய்வேன். 
தர்மத்தை மீறுபவர்களை என் க்ஷத்ரிய தர்ம படி தண்டிப்பேன். 
கொடுத்த வாக்கை காப்பேன்.
இப்படி பல குணங்கள் ராமருக்கு இருந்தது.

தன் தந்தை சபதத்தை காக்க, பிள்ளையான ராமர் 14 வருடம் காட்டுக்கு சென்றார்.
இதை கண்கூடாக பார்த்தனர் மக்கள்.
சத்தியத்துக்கு இப்படி மரியாதை செய்தவர், 14 வருடம் கழித்து வந்து ஆட்சியை நடத்தினால், மக்கள் அனைவரும் சத்தியத்துக்கு கட்டுப்படாமலா இருப்பார்கள்?

ராம ராஜ்ஜியம் ஒரு அரசனை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனையும் தர்ம வழியில் வாழ தூண்டும்.

No comments: