Followers

Search Here...

Tuesday 9 June 2020

"கடவுள் இருக்கிறாரா? என் கண் எதிரே காட்டு" என்று நாத்தீகன் கேட்கிறான்.. ஒரு அலசல்...

1. புலன்:
"பூ அழகாக இருக்கிறதா? யாரிடம் பொய் சொல்கிறாய்?"
என்று குருடன் கேட்கிறான்:

"பூ அழகாக தான் இருக்கிறது. என் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால், உனக்கு உள்ள குறையால், உனக்கு தெரியவில்லை. 
நீ பார்க்கமுடியவில்லை என்பதால் நான் பார்ப்பது பொய் என்று ஆகிவிடாது" 
என்று கண் இருப்பவன் சொல்கிறான்.

புலன்களால் ஏற்படும் அனுபவத்தை, புலன்கள் முடக்கப்பட்ட ஒருவனால் அறியமுடியாமல் போகிறது.
(புலன்கள் 5 : கண், காது, நாக்கு, மூக்கு, தோல்)




2.  அனுபவம்:
"என்னது பசி மயக்கமா? யாரை ஏமாற்றுகிறாய்?"
என்று பசி என்ற அனுபவமே இல்லாத பணக்காரன் கேட்கிறான்.
"பசி என்ற அனுபவம் எனக்கு உண்மை. அது சத்தியமே ! உனக்கு அது அனுபவத்தில் இல்லாததால், நான் சொல்வது பொய் என்று ஆகிவிடாது"
என்று பசியில் இருப்பவன் சொல்கிறான்.

உடல் சம்பந்தமாக ஏற்படும் அனுபவங்களை, அந்த அனுபவங்கள் ஏற்படாத ஒருவனால் அறியமுடியாமல் போகிறது.
(உடல் சம்பந்தமாக ஏற்படும் அனுபவங்கள் : பசி, உடல் வலி.)

3. மனம்:
"என்னது.. குடும்பத்தை எப்படி நடதத்துவோம் என்று கவலையா? எதற்கு கவலை?"
என்று  கேட்கிறான் 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்த அரசியல்வாதி.

"எதிர்காலத்தை நினைத்து கவலையும், பயமும் எனக்கு மனதில் தோன்றுவது உண்மையே. அது சத்தியமே ! உனக்கு அது அனுபவத்தில் இல்லாததால், நான் சொல்வது பொய் என்று ஆகிவிடாது"
என்று அன்றாடம் உழைத்து உண்பவன் சொல்கிறான்.

4.
1. கடவுள்:
"கடவுள் இருக்கிறாரா? யாரிடம் பொய் சொல்கிறாய்? என் கண் எதிரே காட்டு"
என்று நாத்தீகன் கேட்கிறான்:
"கடவுள் இருப்பதால் தான் பேசுகிறாய். 
கடவுள் இருப்பதால் தான் பார்க்கிறாய்.
கடவுள் இருப்பதால் தான் நீ அனுபவங்களை உணர்கிறாய்.

'புலனுக்கும்,  உடல் அனுபவத்துக்கும், மன உணர்வுகளுக்கும்' -  அப்பாற்பட்டு இருக்கும் கடவுளை, உன் கண்ணை கொண்டு பார்க்க நினைக்காதே ! 

கண்ணால் கடவுளை பார்க்க வேண்டும்! என்று கேட்கிறாயே?
முதலில், 
'யார் உள்ளே இருப்பதால், உன் கண் பார்கிறது?' 
என்று யோசி.

'உனக்கு அனுபவங்களை உள்ளிருந்து கொடுப்பது யார்?' 
என்று யோசி.

'பிணத்துக்கு கண் உண்டு. அது பார்க்குமா? 
பிணத்துக்கு அனுபவம் உண்டா?'
உன்னையே கேட்டு பார்.

நீயும் ஒரு நாள், நிச்சயமாக பிணமாக ஆகி விடுவாய். 
இன்று 'உனக்கு இந்த அனுபவங்களை தருவது யார்?' 
என்று யோசி.

உன்னையே உள் நோக்கி கடந்து பார். 
கண்ணை பார்க்க வைப்பது கடவுள் என்று புரியும்.
அனுபவங்களை உணரச்செய்வது கடவுள் என்று புரியும்.
உள்ளிருக்கும் கடவுள் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்" என்று உனக்கு தெரியும்.

'அவர் உன்னிடத்திலும் உள்ளார். 
மற்றவர்களிடத்திலும் இருக்கிறார்.
அவர் உள்ளும் இருக்கிறார். 
அவர் வெளியிலேயும் இருக்கிறார். 
அவர் எங்கும் இருக்கிறார்' என்ற உண்மை புரியும்.

நீ "ஆத்மா" என்று சொல்கிறாய். 
நீ "மனசாட்சி" என்று சொல்கிறார். 
நீ "உயிர்" என்று சொல்கிறாய். 

நான் "பரமாத்மா" என்று சொல்கிறேன். 
நான் "கடவுள்" என்று சொல்கிறேன். 
நான் "ஈஸ்வரன்" என்று சொல்கிறேன். 
கண்ணுக்கு அப்பாற்பட்ட, புலன்களுக்கு அப்பாற்பட்ட எங்கும் உள்ள பிரமாத்மா, 
தர்மத்தை நிலைநாட்ட, தர்மங்களை தானே நேரிடையாக சில சமயங்களில் சொல்ல  "ஸ்ரீ கிருஷ்ணராக கபில ரிஷியாக, வ்யாசராக" வந்தார் என்று அறிகிறேன்.


'மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தைகை கஷ்டம் வந்தாலும், தர்மத்தில் இருக்க வேண்டும்' என்று காட்ட, தானே மனித அவதாரம் எடுத்து "ஸ்ரீ ராமராக" வந்தார் என்றும் அறிகிறேன்.

பலி சக்கரவர்த்தி அடுத்தவன் (தேவர்கள்) சொத்தை அநியாயமாக பறித்து, விரட்டி அடித்த செயலுக்கு, அதர்மத்தை அதர்மம் கொண்டே கபடம் செய்து அவதாரம் எடுத்த "வாமனர்" என்று அறிகிறேன். 

அவதாரம் செய்த பரமாத்மாவை புரிந்து கொள்ளமுடியாமல் போனாலும் பரவாயில்லை,  
"உனக்கு ஆத்மாவாக அவரே தான் இருக்கிறார்" என்பதும் உனக்கு  புரியவில்லை என்றால், அது உனக்கு நீயே செய்து கொள்ளும் துரோகம். 

கடவுளை மறுப்பவன், ஆத்மாவை மறுக்கிறான். 
ஆத்மாவை மறுப்பவன், தன்னையே மறுக்கிறான். 
தன்னையே இல்லை என்று மறுப்பவன், பிணத்துக்கு சமம்..

கடவுளை மறுப்பவன், பிணத்துக்கு சமம்..





1 comment:

Pia Tepperies said...

Helllo mate nice post