Followers

Search Here...

Showing posts with label கருட புராணம். Show all posts
Showing posts with label கருட புராணம். Show all posts

Friday 23 February 2024

திருப்பதி செல்லும் போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டுபயணிக்க வேண்டும்? ஜாம்பவதி சொன்ன பிரார்த்தனையை நாமும் சொல்வோம்.

திருப்பதி ஶ்ரீனிவாசனை வழிபட்டதன் பயனாக, அடுத்த ஜென்மத்தில் ஜாம்பவதியாக பிறந்து, ஶ்ரீ கிருஷ்ணரை மணந்தாள்.

அவளுடைய முன் ஜென்மத்தில், 

பகவான் விராட் ரூபத்தில் 14 லோகங்களாகவும் இருக்கிறார். அவரே திருமலையில் ஸ்ரீனிவாசனாக இருக்கிறார். அந்த ஶ்ரீனிவாசனை "எப்பொழுது தரிசிப்பேன்? எப்பொழுது தரிசிப்பேன்?" என்ற தாபத்தோடு பிரார்த்தனை செய்து கொண்டே சேஷாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.


ஜாம்பவதி முன் ஜென்மத்தில், திருமலையில் ஏறும் போது, செய்த பிரார்த்தனை.

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य वक्षः श्रीवत्स रत्नै: भूषितं विस्तृतं च ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य तुन्दं वलित्रयेणाङ्कितं सुंदरं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य कण्ठं महर्लोकस्य आश्रयं कंबु तुल्यम् ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य नाभिं सदा अन्तरिक्षस्य आश्रयं वै सुपूर्णम् ॥

कदा द्रक्ष्ये वदनं वै मुरारे: जन-लोकस्य आश्रयं सर्वदैव ॥

शिरः कदा श्रीनिवासस्य द्रक्ष्ये सत्यस्य लोकस्य आश्रयं सर्वदैव ।

कटिं कदा श्रीनिवासस्य द्रक्ष्ये भूर्लोकस्य आश्रयं सर्वदैव ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य च ऊरु तलातलस्य आश्रयं सर्वदैव ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जानु सुकोमलं सुतलस्य आश्रयं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जङ्घे रसातलस्य आश्रयेः सर्वदैव ।

कदा द्रक्ष्ये पादतलं हरेश्च पाताल-लोकस्य आश्रयं सर्वदैव ॥

- गरुडपुराणम् - ब्रह्मकाण्डः (मोक्षकाण्डः)


கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய வக்ஷ:? ஶ்ரீவத்ஸ  ரத்னை: பூஷிதம் விஸ்த்ருதம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய துந்தம்? வலித்ரயேன அங்கிதம் சுந்தரம் ச !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய கண்டம்? மஹர் லோகஸ்ய ஆஸ்ரயம் கம்பு துல்யம் !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய நாபிம்? ஸதா அந்தரிக்ஷஸ்ய ஆஸ்ரயம் வை சுபூர்ணம் !

கதா த்ரக்ஷே வதனம் வை முராரை:? ஜன லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

ஸிர: கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? சத்யஸ்ய லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கடிம் கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? பூலோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ச ஊரு? தலாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜானு ஸு கோமளம்? சுதலஸ்ய ஆஸ்ரயம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜங்கே? ரஸாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே பாத தலம் ஹரே: ச? பாதாள லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

"ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளம் கொண்ட ஶ்ரீநிவாசனின் திருமார்பை எப்பொழுது  தரிசிப்பேன்? 

மூன்று மடிப்புகள் கொண்ட ஶ்ரீநிவாசனின் திவ்யமான திரு வயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?

மகர லோகத்தில் இருப்பவர்கள் வழிபடும் ஶ்ரீநிவாசனின் சங்கம் போன்ற கழுத்தை எப்பொழுது நான் தரிசிப்பேன்? 

அனைத்து அந்தரிக்ஷமும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீநிவாசனின் திரு நாபியை எப்போது தரிசிப்பேன்?

ஜன லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் முராரியின் திரு முக மண்டலத்தை எப்பொழுது நான் காண்பேன்? 

ஸத்ய லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் சிரஸை எப்பொழுது தரிசிப்பேன்?

பூ லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் இடையை எப்பொழுது தரிசிப்பேன்?

தலாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் தொடையை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் கோமளமான முழங்காலை எப்பொழுது தரிசிப்பேன்?

ரஸாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

இரு கால்களை எப்பொழுது தரிசிப்பேன்?

பாதாள லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

திரு பாதங்களை எப்பொழுது தரிசிப்பேன்?

என்று ஸ்ரீனிவாசனின் தரிசனம் கிடைக்க வேண்டுமே என்ற தவிப்போடு தீர்த்த யாத்திரை செய்தாள்.

Saturday 28 October 2023

திருப்பதி மலை ஏறும் போது எப்படி பெருமாளை தியானிக்க வேண்டும்? ஜாம்பவதி இதற்கு வழி காட்டினாள்... கருட புராணம் அறிவோம்

திருப்பதி மலை ஏறும் போது என்ன சொல்ல வேண்டும்?

மலை ஏறும் போது... ,"14 லோகங்களில் உள்ளவர்களும் வணங்கும் ஶ்ரீநிவாச பெருமாளின் தரிசனம் எனக்கு எப்பொழுது  கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்" என்று சொல்லிக்கொண்டே, ஜாம்பவதி செய்த பிரார்த்தனை.

ஜாம்பவதியை ஶ்ரீகிருஷ்ணர் மணம் செய்து கொள்கிறார்.

ஜாம்பவதியே தன் பட்டத்து மிஹிஷிகளில் மிகவும் விரும்பத்தக்கவள் என்றார்.

ஶ்ரீ கிருஷ்ணர், "தான் ருக்மிணியை நினைக்கும் போது ருக்மிணியே மனதில் நிற்பாள். ருக்மிணியை நினைக்காத நேரங்களில் எல்லாம் எனக்கு ஜாம்பவதி நினைவாகவே இருக்கும்" என்றார். 

இதை கேட்ட கருடன், ஜாம்பவதியின் பெருமையை கேட்க, ஜாம்பவதியின் உண்மையான விஷ்ணு பக்தியை, அவள் செய்த தீர்த்த யாத்திரையை, திருமலை என்று அழைக்கப்படும் சேஷாத்ரி மலையை நோக்கி இவள் பக்தியோடு வந்த அழகையும் விரிவாக சொல்கிறார். இந்த உரையாடலை கருட புராணத்தில், ப்ரம்ம காண்டத்தில் சொல்கிறார்.

விஷ்ணு பக்தையான ஜாம்பவதி, "எப்பொழுது விராட் ஸ்வரூபமாக இருக்கும் விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கும்" என்று கதறியபடி திருமலை ஏறுகிறாள்.


कदा द्रक्ष्ये श्रीनिवासस्य वक्षः

श्रीवत्स रत्नैर्भूषितं विस्तृतं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य

तुंदंवलि त्रयेणांकितं सुंदरं च ॥

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீநிவாசஸ்ய வக்ஷ:

ஶ்ரீவத்ஸ ரத்ன பூஷிதம் விஸ்த்ருதம் ச

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீநிவாசஸ்ய

துந்தம்வளி த்ரயேனாம்கிதம் சுந்தரம் ச

- ப்ரம்ம காண்டம் (அத்யாயம் 23)

ஶ்ரீனிவாச பெருமாளின் ஶ்ரீவத்ஸம் பொருந்திய வக்ஷ ஸ்தலத்தை எப்பொழுது தரிசிப்பேன்?அந்த அழகான 3 மடிப்புகள் கொண்ட திருவயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?


कदा द्रक्ष्ये श्रीनिवासस्य कंठं

महलोंकय आश्रयं कंबुतुल्यम् ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य नाभि

सदांतरिक्षसि आश्रयं वै सूपूर्णम् ॥

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீநிவாசஸ்ய கண்டம்

மஹர் லோகய ஆஸ்ரயம் கம்புதுல்யம்

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீநிவாசஸ்ய நாபி

ஸத அந்தரிக்ஷ்யஸி ஆஸ்ரயம் வை சம்பூர்ணம்

பூ புவ, ஸுவ, மக:, ஜன, தப, சத்ய என்ற 7 மேல் லோகங்களில், மகர லோகமே விராட்புருஷனின் கழுத்து. அந்த ஶ்ரீனிவாசனின் சங்கு போன்ற அழகான சங்கு போன்ற உருண்டையான கழுத்தை எப்பொழுது தரிசிப்பேன்? உயிர்கள் அனைத்தையும் அடக்கி வைத்திருக்கும் அந்த திருவயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?


कदा द्रक्ष्ये वदनं वै मुरारे: 

जन लोकस्य आश्रयं सर्वदैव ॥

கதா த்ரக்ஷ்யே வதனம் வை முராரே

ஜன லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

ஜன லோகமே விராட் ஸ்வரூபனின் திருமுகம். ஜன லோகத்தில் உள்ள அனைத்து தேவதைகளும், ரிஷிகளும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?


शिरः कदा श्रीनिवासस्य द्रक्ष्ये

सत्यस्य लोकस्य आश्रयं सर्वदैव ॥

कटिं कदा श्रीनिवासस्य द्रक्ष्ये

भूर्लोकस्य आश्रयं सर्वदैव ॥

சிர: கதா ஶ்ரீனிவாசஸ்ய த்ரக்ஷ்யே

சத்யஸ்ய லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

கடிம் கதா ஶ்ரீனிவாசஸ்ய த்ரக்ஷ்யே

பூலோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

சத்ய லோகமே விராட் ஸ்வரூபனின் தலை. சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாதி தேவர்களும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?

பூ லோகமே விராட் ஸ்வரூபனின் இடை. பூலோகவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?


कदा द्रक्ष्ये श्रीनिवासस्य

च ऊरु तलातलस्य आश्रयं सर्वदैव ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जानु

सुकोमलं सुतलस्य आश्रयं च ॥

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீனிவாசஸ்ய 

ச ஊரு தலாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீனிவாசஸ்ய ஜானு

சுகோமலம் சுதலஸ்ய ஆஸ்ரயம் ச

தலாதல லோகமே விராட் ஸ்வரூபனின் தொடை. தலாதலவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதல லோகமே விராட் ஸ்வரூபனின் மூட்டு. சுதலவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जंघे

रसातलस्य आश्रयेः सर्वदैव ॥

कदा द्रक्ष्ये पादतलं हरेश्च

पातललोकस्य आश्रयं सर्वदैव ॥

கதா த்ரக்ஷ்யே ஶ்ரீனிவாசஸ்ய ஜங்கே

ரசாதலஸ்ய ஆஸ்ரயே ஸர்வதைவ

கதா த்ரக்ஷ்யே பாததலம் ஹரே: ச

பாதாள லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வதைவ

ரசாதல லோகமே விராட் ஸ்வரூபனின் கணுக்கால். ரசாதலவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீனிவாச பெருமாளை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதல லோகமே விராட் ஸ்வரூபனின் திருவடி. சுதலவாசிகள் அனைவரும் ஆஸ்ரயிக்கும் அந்த ஶ்ரீனிவாச பெருமாளின் திருவடியை எப்பொழுது தரிசிப்பேன்?


இவ்வாறு, ஜாம்பாவதி பக்தியோடும், தாபத்தோடும் சேஷாசலம் என்ற திருமலையில் ஏறினாள்.

இப்படிப்பட்ட 'பக்தையான ஜாம்பவதி தனக்கு மிகவும் பிரியமானவள்' என்றார் ஶ்ரீ கிருஷ்ணர். 

ஏகாதசி விரதம் தசமி கலந்த தினத்தில் அனுஷ்டிக்க கூடாது. காந்தாரிக்கு நடந்த விபரீதம். அறிவோம் கருட புராணம்.

ஏகாதசி விரதம் தசமி கலந்த தினத்தில் அனுஷ்டிக்க கூடாது.

ப்ரம்ம தேவன் சொன்னார்.

मान्धाता चक्रवर्त्यासीदुपोष्यैकादशीं नृपः ॥ 

एकदश्यां न भुञ्जीत पक्षयोरुभयारपि ॥ 

- கருட புராணம் (அத்யாயம்: 125)

மாந்தாதா (Click Here to know moreஎன்ற மன்னன், ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்ததன் காரணத்தால், மூன்று உலகங்களுக்கும் எதிரிகள் இல்லாத அதிபதியாக இருந்தார். எனவே 11வது நாளில் (ஏகாதசி) இரவு பகல் சேர்த்து, விரதத்தில் இருக்க வேண்டும்.

दशमि एकादशी मिश्रा गान्धार्य समुपोषिता ॥ 

तस्याः पुत्रशतं नष्टं तस्मात्तां परिवर्जयेत् ॥

- கருட புராணம் (அத்யாயம்: 125)

ராணி காந்தாரி சந்திரனின் பத்தாம் நாள் (தசமி) கலந்த ஏகாதேசியில் விரதம் இருந்தாள், அதன் விளைவாக தனது நூறு மகன்களை இழந்தாள்.  

द्वादश एकादश यत्र तत्र सन्निहितां हरिः ॥ 

दशम् एकादशी यत्र तत्र सन्निहितो असुरः ॥ 

बहुवाक्य विरोधेन सन्देहो जायते यदा ॥

द्वादशी तु तदा ग्राह्या त्रयोदश्यान्तु पारणम्॥ 

एकादशी कलापि स्यादुपोष्या द्वादशी तथा ॥

- கருட புராணம் (அத்யாயம்: 125)

ஏகாதசி கலந்த துவாதசி தினங்கள் ஹரிக்கு உகந்த தினங்கள். தசமி கலந்த ஏகாதசி தினங்கள் அசுரர்களுக்கு உகந்த தினங்கள். ஆதலால், தசமி பிட்சமாக இருக்கும் தினத்தில் ஏகாதசி வந்தால், அன்று விரதம் அனுஷ்டிக்க கூடாது. அடுத்த நாளில் ஏகாதசி பிட்சமாக இருக்கும் தினத்தில் தான் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். த்ரயோதசி கலந்த அடுத்த நாளையே துவாதசியாக கொண்டு, விரதத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.


एकादशी द्वादशी च विशेषेण त्रयोदशी ॥ 

त्रिमिश्रा सा तिथिग्रह्या सर्वपापहरा शुभा ॥

एकादशीमुपोष्यैव द्वादशीम थवा द्विज ॥ 

त्रिमिश्रां चैव कुर्वीत न दशम्या युतां क्वचित्॥

- கருட புராணம் (அத்யாயம்: 125)

ஏகாதசியில் விரதம் இருப்பது விஷேசம். பிட்சமாக வரும் ஏகாதசி காலத்தில், ஏகாதசி, துவாதசி ஒரே நாளில் வரும். அடுத்த நாளில் த்ரயோதசி துவாதசியோடு கலக்கும். இந்த ஏகாதசியில் விரதம் இருப்பது சர்வ-பாபத்தையும் நாசம் செய்யும். தசமியில் விரதம் இருக்கவே கூடாது. 


रात्रौ जागरणं कुर्वन्पुराणश्रवणं नृपः ॥ 

गदाधरं पूजयंश्च उपोष्यैका दशीद्वयम ॥ 

रुक्माङ्गदो ययौ मोक्षमन्ये चैकादशीव्रतम् ॥

- கருட புராணம் (அத்யாயம்: 125)

மன்னன் ருக்மாங்கதன் இரண்டு ஏகாதசிகளின் இரவுகளில் விழித்திருந்து, புராணங்களை கேட்டார், கதாதரனான விஷ்ணுவை பூஜித்தார். அதன் பலனாக, அவர் வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுபட்டு, மரணத்திற்குப் பிறகு மோக்ஷத்துக்கு சென்றார்.