Followers

Search Here...

Showing posts with label யமன். Show all posts
Showing posts with label யமன். Show all posts

Friday 12 April 2024

யமன், ஏன் விதுரனாக பிறந்தார்? மஹாபாரத சரித்திரம் அறிவோம்

யமன், ஏன் விதுரனாக பிறந்தார்?

वैशंपायन उवाच। வைசம்பாயனர் ஜனமேஜெயனுக்கு மஹாபாரத சரித்திரத்தை சொன்னார்..


பழமையான ஒரு காலத்தில், வேதத்தின் அர்த்தம் அறிந்த, பெரும் புகழுடைய மகிமையுள்ள ஒரு ப்ரம்ம ரிஷி, திருடாமல் இருந்த போது,  திருடி விட்டார் என்று நினைத்து, அரசன் கழு மரத்தில் ஏற்றி விட்டான்.

वैदार्थविच्च भगवान् ऋषि: विप्रो महायशाः।

शूले प्रोतः पुराणर्षि: अचोर: चोर शङ्कया।।

ஆணீமாண்டவர் என்ற அறியப்பட்ட அந்த ரிஷி, யம லோகம் சென்று, தர்ம தேவனான யமதர்மனை பார்த்து இவ்வாறு சொன்னார்.

अणीमाण्डव्य इत्येवं विख्यातः स महायशाः।

स धर्ममाहूय पुरा महर्षि: इदमुक्तवान्।।


"தர்மனே! நான் சிறுவனாக இருந்த போது, ஒரு பறவையை இரும்பினால் குத்தி இருக்கிறேன். அந்த பாபம் தான் என் நினைவில் இருக்கிறது. வேறு பாபம் செய்யவில்லை. அந்த பாபத்தை நான் இதுவரை செய்த 1000 மடங்காக அளவற்று நான் செய்த தபசு எப்படி போக்காமல் இருந்தது? உயிர் கொலை பாபம் என்றால், பிராம்மணனை கொன்ற மஹாபாபம் உனக்கும் உண்டு. அந்த பாபத்தினால் நீ சூத்திரனின் யோனியில் பிறப்பாய்" என்று சபித்தார்.

इषीकया मया बाल्याद्विद्धा ह्येका शकुन्तिका।

तत्किल्बिषं स्मरे धर्म न अन्यत् पापम् अहं स्मरे।।

तन्मे सहस्रममितं कस्मान्नेहाजयत्तपः।

गरीयान् ब्राह्मणवधः सर्वभूतवधाद्यतः।।

तस्मात्त्वं किल्बिषाद् तस्मात् छूद्र योनौ जनिष्यसि।

இந்த சாபத்தின் காரணமாக, தர்ம தேவன், வித்வானாக, தர்மம் அறிந்தவனாக சூத்திர யோனியில் விதுரனாக பிறந்தார்.

तेन शापेन धर्मोऽपि शूद्रयोनावजायत।।

विद्वान् विदुर रूपेण धार्मिकः किल्बिषात् ततः।

- aadi parva (vyasa mahabharata)

Wednesday 22 April 2020

யமன் செய்த அவதாரம்... பற்றி தெரிந்து கொள்வோமே

'ஆணிமாண்டவ்ய ரிஷி' ஒரு சமயம் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது,  அவருடைய ஆஸ்ரமத்துக்குள், திருடர்கள் நுழைந்து அவர்கள் திருடிய பொருட்களை போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இவர்களை துரத்தி வந்த காவலர்கள், இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்தனர்.
மகரிஷியின் அருகில் அரண்மனையில் திருடிய நகைகள்  கிடப்பதைக் கண்டு இவரை சந்தேகப்பட்டு சிறைப்படுத்தி விட்டனர்.




அந்த காலங்களில், திருடுவதற்கு மக்கள் பயப்படுவார்கள்.
திருட்டுக்கு தண்டனையாக கழுவேற்றி விடுவார்கள். 
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றி விடுவார்கள்.
அரச தண்டனை மிக கடுமையாக இருந்த காலம் அது.
எதிர்பாராவிதமாக, இவர் திருடவில்லை என்று நிரூபணம் ஆகாமல் போக, அரசன், தண்டனை யாருக்கும் பொது என்ற காரணத்தால், மாண்டவ்ய ரிஷியை ஊசி போல இருக்கும் கழுவில் ஏற்றி  விட்டான். 

தியானம் கலையாமலேயே இருந்த ரிஷி, உடல் நாசமானதால், 
தன் சூக்ஷ்ம ரூபத்துடன் யமலோகம் சென்று விட்டார்.

கழுவேற்றிய மரத்தில் தன் உடல் கிடப்பதை பார்த்த ரிஷி, எம தர்மமனிடமே நியாயம் கேட்டார்.

"தான் செய்யாத குற்றத்துக்கு இத்தனை பெரிய தண்டனையா?"
என்று யமதர்மனை கேட்டார்.

ரிஷியான மாண்டவ்யரை பார்த்து எம தர்மராஜன்,
"ரிஷி ! நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது, ஒரு தும்பியின் வாலைக் [பட்டாம்பூச்சி] கயிற்றால் கட்டி அதன் அடிப்பகுதியை முள்ளால் குத்தி கொடுமை படுத்தினீர்கள். அதற்கான தண்டனையே இது” என்று சொன்னார்.
இதை கேட்ட மாண்டவ்ய ரிஷி,
“என்ன அநியாயமான சட்டம் இது!! 
அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா? 
16 வயது வரை நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாதே !  
குழந்தை பருவத்தில் செய்யும் பாவங்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருக்குமானால், நான் செய்த தவத்தை நீங்கள் பலனாக ஏற்றுக்கொண்டு, 16 வயது வரை செய்த பாவங்களுக்கு தண்டனை கிடையாது என்று சட்டத்தை மாற்றுங்கள்" 
என்று சொல்லிவிட்டார்.

அவர் செய்த தவத்துக்கு பலனாக, யமதர்மன் "சரி! மாற்றினேன்" என்று உடனேயே சட்டத்தை மாற்றினார்..
உடனே மாண்டவ்ய ரிஷி, யமதர்மனை பார்த்து,
"அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு தண்டனை இல்லை என்று சட்டத்தை மாற்றி விட்டீர்கள். 
இருந்தாலும், அதோ பாருங்கள்..  என் உடல் இன்னும் அதே கழுவில் உள்ளது. 
சட்டம் மாற்றிய பிறகும், நடைமுறையில் இல்லாத சட்டத்தால், தண்டிக்கப்பட்டு இந்த உடல் இன்னும் பூமியில் கிடப்பதால், அதற்கு பிராயச்சித்தமாக, நீங்களும் பூமியில் அவதரிக்குமாறு, நான் சாபமிடுகிறேன்."
என்று சொல்லிவிட்டார்.

"ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்ய போகிறார், நாராயணன்"
என்று தெரிந்ததும், அவருக்கு முன்பாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும் பிருந்தாவனத்தில் இடையர்களாக அவதாரம் செய்து விட்டனர்..

ரிஷிகள் கோபிகைகளாக வந்து விட்டனர். 

எம தர்மனுக்கு மட்டும் ஓய்வே கிடையாது. 
நரகத்தில் இவருக்கு எப்பொழுதும் வேலை. 

"தானும் கிருஷ்ண  அவதாரத்தில் கலந்து கொள்வோமா? 
தன்  வீட்டுக்கும் கண்ணன் ஒரு முறையாவது வருவாரா?" 
என்று காத்து இருந்த யமதர்மன், ஆணி மாண்டவ்யர் கொடுத்த சாபத்தை அனுகிரஹமாக ஏற்றுக்கொண்டு, தன் சார்பாக சித்ரகுப்தனை சிறிது காலம் பார்க்க சொல்லிவிட்டு,  விதுரராக அவதரித்தார்.
மஹாபாரதத்தில் விதுரர் சொல்லும் தர்மங்கள் "விதுர நீதி" என்று புகழ் பெற்றது. 
தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், "விதுர நீதி" படித்தாலேயே போதும்.




யமதர்மனுக்கு "ஸ்ரீ கிருஷ்ணரை" பஜிப்பவர்களை கண்டால் பேரானந்தம் உண்டாகும்.  
யமதர்மனே கிருஷ்ண பக்தர் தான், என்கிற போது "யமனை கண்டு நாம் ஏன் அச்சம் கொள்ளவேண்டும்?".

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.
வாழ்க ஹிந்து தர்மம்.
வாழ்க நம் புராணங்கள்.