Followers

Search Here...

Saturday 17 February 2018

கோவிலில் சடாரி தலையில் படும்போது ,- ஆத்ம சமர்ப்பணம்

அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, புகழ் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
நம்மாழ்வார் - திருவாய் மொழி

பரமாத்மாவாகிய நாராயணரின் திருவடி, தன் தலை மேல் படவேண்டும் என்றால் கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

அத்தனை புண்ணியத்தையும் செலவு செய்தாலும், அவர் பாத ஸ்பரிசம் கிடைக்காது.
பலிச்சக்கரவர்த்தி தான் சம்பாதித்த உலகங்களை அந்த நாராயணரின் பாதத்தில் அர்ப்பணம் செய்தும், அதுவும் போதாது என்று தெரிந்தவுடன், தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்ததும், பகவான் ஸ்ரீமந் நாராயணர் பாதம் தன் சிரசில் படும் பாக்கியம் பெற்றார்.

தன் திருவடியை பக்தன் தலை மேல் வைத்து "நீ என்னை சேர்ந்தவன்" என்று உரிமையுடன் ஆட்கொண்டார்.


அத்தனை மதிப்புள்ள பெருமாளின் சடாரி (பெருமாள் திருவடி) தன் தலை மீது பட்டும், தான் ஒன்றுமே சமர்ப்பிக்க வில்லையே !!
பலிச்சக்கரவர்த்தி தன்னையே சமர்ப்பித்த பின்னரே, "நீ என்னை சேர்ந்தவன்" என்று தலை மீது தன் திருவடி வைத்த வெங்கடேச பெருமாள், தான் ஒன்றுமே சமர்ப்பிக்காமலே, தன்னை ஆட்கொண்டு விட்டாரே என்று கருணையை நினைத்து, இனியாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வது என்று "உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்று தன்னை ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார்.

நாமும் கோவிலில் சடாரி (பெருமாள் பாதரக்ஷை) நம் தலையில் படும்போது,  பலிச்சக்கரவர்த்தியின் ஆத்ம சமர்ப்பணத்தை நினைத்து, ஆழ்வாரின் இந்த பாசுரத்தை ஸ்மரிப்போம்.

No comments: