Followers

Search Here...

Monday 1 May 2023

"ஸ்மார்த்த" "ஸ்ரௌத்த" தர்மம் என்றால் என்ன? பிராம்மண வர்ணத்தில் அனுமதிக்கப்படாத விவாஹம் எது? அறிவோம் மஹாபாரதம்

பராசர ரிஷி, சத்யவதி மூலமாக வியாசரை நொடி பொழுதில் யமுனை கரையில் பிறப்பிக்க செய்தார்.  

அப்போது, அவளை பார்த்து, சிறந்த தர்மம் எது? என்று விளக்க ஆரம்பிக்கிறார்.

शिष्टानां तु समाचारः शिष्टाचार इति स्मृतः।

श्रुतिस्मृतिविदो विप्रा धर्मज्ञा ज्ञानिनः स्मृताः।।

- adi parva (Vyasa mahabharata)

சிஷ்டர்கள் தொன்றுதொட்டு செய்து கொண்டு வரும் ஆசாரமே - "சிஷ்டாசாரம்" என்று சொல்லப்படுகிறது.

வேதத்தையும்+தர்ம சாஸ்திரத்தையும் (அனைத்து ஸ்ம்ருதிகளையும்)+தர்மஸூக்ஷ்மத்தையும் அறிந்த வேதியனே (விப்ரன்) - "ஞானி" (அறிவு உள்ளவன்) என்று சொல்லப்படுகிறான்.


धर्मज्ञैर्विहितो धर्मः श्रौतः स्मार्तो द्विधा द्विजैः।

- adi parva (Vyasa mahabharata)

தர்மம் தெரிந்த இரட்டை பிறப்பாளர்களால் (பூணூல்/காயத்ரீ உபதேசம் பெற்ற பிராம்மணர்கள்/வைசியர்கள்/க்ஷத்ரியர்கள்), "ஸ்ரௌத்த" தர்மம், "ஸ்மார்த்த" தர்மம் என்ற 2 தர்மங்கள் விதிக்கப்பட்டு உள்ளது. 

दानाग्निहोत्रमिज्या च श्रौतस्यैतद्धि लक्षणम्।।

- adi parva (Vyasa mahabharata)

"தானம் + அக்னி ஹோத்ரம் + யாகம்" இந்த மூன்றும் "ஸ்ரௌத்த" தர்மத்தில் உள்ள லக்ஷணங்கள்.


स्मार्तो वर्णाश्रमाचारो यमैश्च नियमैर्युतः।

- adi parva (Vyasa mahabharata)

"யமம்+நியமம்" போன்ற வர்ணாஸ்ரம தர்மத்தை கடைபிடித்து கொண்டிருப்பது "ஸ்மார்த்த" தர்ம லக்ஷணம்.

(யமம் - பிற உயிரை துன்பம் செய்யாமல் இருப்பது, பொய் பேசாமல் இருப்பது, திருடாமல் இருப்பது, தகாத காமம் இல்லாமல் ப்ரம்மச்சர்யத்தில் இருப்பது, அதர்மமான பொருளில் பற்று இல்லாமல் இருப்பது. யமம் என்பது இந்த குணங்களை குறிக்கிறது)

(நியமம் - தூய்மையாக (சௌசம்) இருப்பது, கிடைத்ததில் திருப்தி கொள்வது, தவம் செய்வது, வேதம் ஓதுவது, பகவத் தியானம் செய்வது. நியமம் என்பது கட்டுப்பாடுகளை குறிக்கிறது


धर्मे तु धारणे धातुः सहत्वे चापि पठ्यते।।

- adi parva (Vyasa mahabharata)

தர்மமே அனைத்திற்கும் ஆதாரம். ஆதலால் அவரவர் தர்மத்தை விட கூடாது என்று சொல்லப்படுகிறது. 


तत्रेष्टफलभाग्धर्म आचार्यैरुपदिश्यते।

अनिष्टफलभाक्रेति तैरधर्मोऽपि भाष्यते।।

तस्मादिष्टफलार्थाय धर्ममेव समाश्रयेत्।

- adi parva (Vyasa mahabharata)

தன்னுடைய தர்மத்தில் யார் யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இனிய பலன்கள் தானாக கிடைக்கும் என்று ஆசார்யர்கள் உபதேசிக்கிறார்கள்.

நல்ல பலன் நமக்கு கிடைப்பதற்காக, நம் தர்மத்தை நாம் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். 

ब्राह्मो दैवस्तथैवार्षः प्राजापत्यश्च धार्मिकः।।

विवाहा ब्राह्मणानां तु गान्धर्वो नैव धार्मिकः।

- adi parva (Vyasa mahabharata)

பிராம்மண விவாஹம் (1), தெய்வ விவாஹம் (2), ஆர்ஷம் என்ற விவாஹம் (3), ப்ராஜாபத்யம் என்ற விவாஹம் (4) தர்மத்துக்கு உட்பட்ட விவாஹ முறைகள். 

காந்தர்வ விவாஹம் (LOVE MARRIAGE) ஒரு போதும் பிராம்மண வர்ணத்தில் (Today MLA/MP are in this Varna guiding Kshatriya (army/police)) உள்ளவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விவாஹம் ஆகாது. 


त्रि-वर्णेतर जातीनां गान्धर्वासुर राक्षसाः।।

- adi parva (Vyasa mahabharata)

பிராம்மண/க்ஷத்ரிய/வைஸ்ய வர்ணத்தில் இல்லாதவர்களுக்கு காந்தர்வ விவாஹம் (5), ஆஸுர விவாஹம் (6), ராக்ஷஸ விவாஹம் (7) தர்மமாக கூறப்படுகிறது. 


पैशाचो नैव कर्तव्यः पैशाचश्चाष्टमोऽधमः।

सामर्षां व्यङ्गिकां कन्यां मातुश्च कुलजां तथा।।

- adi parva (Vyasa mahabharata)

பைஸாச விவாஹம் (8) யாருமே செய்து கொள்ள கூடாது. இந்த 8வது விவாஹம் இழிவானது.

No comments: