Followers

Search Here...

Thursday 25 May 2023

பிராம்மணனின் கடமைகள் என்ன? சூத்திரனின் கடமை என்ன? மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?.. அறிவோம்..

பிராம்மணனின் கடமைகள் என்ன? சூத்திரனின் கடமை என்ன? மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது?..  அறிவோம்..

अध्यापनम् अध्ययनं यजनं याजनं तथा ।
दानं प्रतिग्रहं चैव ब्राह्मणानामकल्पयत् ॥ 
- Manu Smriti (Rule Book)
  1. வேதத்தை கற்றுக்கொடுத்தல்,
  2. வேதத்தை ஓதுதல்
  3. ஸமிதாதானம் ஆரம்பித்து யாகங்கள் செய்தல்
  4. யாகம் செய்வித்தல்
  5. தானம் கொடுத்தல்
  6. தானம் வாங்குதல்
இந்த 6ம் பிராம்மண வர்ணத்தில் இருப்பவனின் கடமையாகும்.
(இன்று பிராம்மண வர்ணத்தில் இருந்து க்ஷத்ரியர்களை (police) தனக்கு கீழ் வைத்து மக்களை வழிநடத்துபவர்கள் - முதலமைச்சர், மந்திரிகள். இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)

प्रजानां रक्षणं दानमिज्या अध्ययनमेव च ।
विषयेष्वप्रसक्तिश्च क्षत्रियस्य समासतः ॥ 
- Manu Smriti (Rule Book)

  1. மக்களை காப்பாற்றுதல்,  
  2. தானம் அளித்தல்
  3. யாகம் செய்தல்,
  4. வேதத்தை ஓதுதல்
  5. விஷய சுகங்களில் மூழ்காமல் இருத்தல்.
இந்த 5ம் க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவனின் கடமையாக இருக்கிறது.
(இன்று க்ஷத்ரிய வர்ணத்தில் இருந்து ப்ராம்மண வர்ணத்தில்  (MLA/CM) சொல்படி மக்களை வழிநடத்துபவர்கள் - POLICE. இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)
3
पशूनां रक्षणं दानमिज्याऽध्ययनमेव च ।
वणिक्पथं कुसीदं च वैश्यस्य कृषिमेव च ॥ 
- Manu Smriti (Rule Book)

  1. பசுக்களை காப்பாற்றுதல்
  2. யாகங்கள் செய்தல்
  3. வேதத்தை ஓதுதல்
  4. வாணிபம் செய்தல்
  5. வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்க்கையை நடத்துதல்
  6. விவசாயம் செய்தல்
இந்த 6ம் வைஸ்ய  வர்ணத்தில் இருப்பவனின் கடமையாக இருக்கிறது.
(இன்று வைசிய வர்ணத்தில் இருந்து வாழ்க்கை வழிநடத்துபவர்கள் - EMPLOYER/FARMER. இவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கை முறை இது)

"வேதம் ஓதுதல்" இந்த மூன்று வர்ணத்தில் இருப்பவருக்கும் கொடுக்கப்பட்ட பொதுவான கடமைகளில் ஒன்று.

வேதத்தில், பிரம்மத்தை பற்றிய ஞான விஷயங்கள் மட்டுமின்றி, தர்ம (சட்டம்) சொல்லப்பட்டு இருக்கிறது. 

ஆட்சி முறைகள், தனுர் வேதம், விவசாயம் என்று அனைத்தும் இருக்கிறது. 

அவரவர்களுக்கு தேவையான படிப்பை கற்று, அதை தினமும் மேலும் மேலும் படித்து மெருகேற்றவே "வேதம் ஓதுதல்" தினசரி கடமையாக சொல்லப்பட்டு இருக்கிறது.

சிற்ப கலையின் அற்புதத்தை இன்றும் கோவில்களில் நாம் பார்க்கும் போது, வைசிய வர்ணத்தில் இருந்த சிற்பிகள் எத்தனை வேத அறிவோடு இருந்தார்கள் என்று தெரிகிறது.
4.
एकमेव तु शूद्रस्य प्रभुः कर्म समादिशत् ।
एतेषामेव वर्णानां शुश्रूषामनसूयया ॥ 
- Manu Smriti (Rule Book)

மற்ற வர்ணத்தில் இருப்பவர்களுக்கு சொல்லப்பட்ட எந்த ஒரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல், சுகமாக சூத்திரர்கள் (EMPLOYEE) வாழ அனுமதிக்கப்படுகின்றனர். 

மற்ற வர்ணத்தில் இருப்பவர்கள் (Police, MP/MLA/Employer) கொடுக்கும் வேலையை, வேலை கொடுப்பவனை கண்டு பொறாமை இல்லாமல் இருப்பது ஒன்றே, இவர்களின் ஒரே கடமையாக இருக்கிறது.

No comments: