Followers

Search Here...

Showing posts with label கேள்வி 1. Show all posts
Showing posts with label கேள்வி 1. Show all posts

Sunday 21 January 2024

மஹாபாரதம் (கேள்வி 1) - சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இருந்தானா?

பாண்டவர்கள் வன வாசம் சென்றார்கள். 

ஒரு சமயம், திரௌபதி திவ்யமான நறுமணம் கொண்ட 1000 இதழ்கள் கொண்ட தாமரை மலரை கண்டாள். 

சௌகந்திக மலரை பறிக்க சென்றான் பீமன். 

அந்த சமயம் சகோதரர்களோடு அர்ஜுனன் இருந்தானா? 


பீமன் வரவில்லையே என்று தர்மபுத்திரர் திரௌபதி, நகுலன், சகாதேவனோடு, அங்கிருந்த ப்ராம்மணரைகளையும் கடோதகஜன் உதவியோடு அழைத்து கொண்டு, கந்தமாதன் என்ற மலையை அடைந்தார்கள்.

குபேரன் "பீமன் சௌகந்திக மலர்களை வேண்டுமளவுக்கு எடுத்து கொள்ளட்டும்" என்று அனுமதி கொடுத்த பிறகு, பீமன் மலர்களை பறித்து கொண்டான்.


ऊषुर्नातिचिरं कालं रममाणाः कुरूद्वहाः |

प्रतीक्षमाणआ बीभत्सुं गन्धमादनसानुषु || 

- ஆரண்ய காண்டம் (மஹாபாரதம்)

கந்தமாதன் என்ற அந்த மலை அடிவாரத்திலேயே சில காலம் பீபத்ஸு என்ற பெயர் கொண்ட அர்ஜுனனை எதிர்பார்த்து வசித்து வந்தார்கள்.


பதில்: சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இல்லை