Followers

Search Here...

Showing posts with label திருநெடுந்தாண்டாகம். Show all posts
Showing posts with label திருநெடுந்தாண்டாகம். Show all posts

Wednesday 26 January 2022

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார். பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்.. மின்னுமா மழைதவழும் மேக வண்ணா..

திருநெடுந்தாண்டாகம் சேவிப்போருக்கு கிடைக்கும் பலன் என்ன? என்று சொல்கிறார், திருமங்கையாழ்வார்.

மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா.

விண்ணவர்தம் பெருமானே! அருளாய், என்று,

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த

அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை,

மன்னு மாமணி மாட வேந்தன்

மானவேல் பரகாலன் கலியன் சொன்ன

பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார் 

தொல்லைப் பழவினையை முதல் அரிய வல்லார் தாமே


மின்னிக்கொண்டு பெரிய மழை கொட்டக்கூடிய மேகம் போன்ற வண்ணம் உடையவரே! (மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா)

தேவாதி தேவனே (விண்ணவர்தம் பெருமானே!) அருளாய்! என்று முனிவர்களும்,தேவர்களும் துதிக்க (முனிவரோடு அமரர் ஏத்த)

ஹம்சாவதாரம் செய்து வந்து, வேதத்தினுடைய அர்த்தத்தை சொன்ன பெருமானே ! (அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை)


பெரிய பெரிய மணிமாடங்களையுடைய திருநாங்கூர் என்ற சாம்ராஜ்யத்துக்கு மன்னனாக இருக்கக்கூடிய, கையில் வேல் வைத்திருக்கும் இந்த பரகாலன், கலியன் என்று புகழ் பெற்றவன் சொன்ன அற்புதமான இந்த தமிழ் நூலை, எந்தெந்த பாக்கியவான்கள் சேவிக்கிறார்களோ (மன்னு மாமணி மாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார்)

அவர்கள் ஜென்ம ஜென்மமாக செய்த கோடி பாவங்களும் பொசுங்கி போகும்.


எத்தனை முறை களை எடுத்தாலும், அது மீண்டும் மீண்டும்  வளரும். அது போல முன்பு செய்த பாபங்கள் பொசுங்கினாலும், பாவம் செய்ய வேண்டும் என்கிற வாசனையால் மீண்டும் பாவம் செய்ய தோன்றும். 

எப்படி மண்ணுக்கடியில் உள்ள அந்த வேர் கிழங்கை வெட்டி எரிந்தால், மீண்டும் களை வளராதோ, அது போல, பாவம் செய்ய 'முதல்' காரணமான அந்த வாசனையும் சேர்ந்து அழிந்து போகும்" (தொல்லைப் பழவினையை 'முதல்' அரிய வல்லார் தாமே)

என்று திருநெடுந்தாண்டாகத்திற்கு பலஸ்ருதியும் தானே சொல்கிறார் திருமங்கையாழ்வார்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் திருவடிகளே சரணம்

Tuesday 28 December 2021

தமிழா! தமிழ் இலக்கணம் பாசுரங்களில் எப்படி உள்ளது? என்று தெரிந்து கொள்வோமே நாலு கவி பெருமாள் என்று பெயர் பெற்ற திருமங்கையாழ்வாரின், பெருமையை அறிந்து கொள்வோமே! திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டாகம் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

திருமங்கையாழ்வார் 30 பாடல்களை 'நெடுந்தாண்டகம்' என்ற செய்யுள் நடையில் எம்பெருமானை பாடினார். 

"திருநெடுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் 20 பாடல்கள் 'குறுந்தாண்டகம்' என்ற நடையில் எம்பெருமானை பாடினார்.


ஒரு பாடலில்,

  1. ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருந்தால்,
  2. அந்த பாடல் தெய்வத்தை பற்றியோ, ஒரு நாயகனை பற்றியோ பாடினால்,
  3. ஒவ்வொரு 8 சீரிலும், 
    • 1,2,5,6 ஆகிய நான்கு சீர்கள் காய்ச்சீர்களாகவும்
    • 3,4,7,8 ஆகிய நான்கு சீர்கள் இயற்சீர்களாகவும், குறிப்பாக இயற்சீர் நான்கினுள் (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்) 
      • 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அல்லது தேமாவாக, 
      • 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமைந்தால்,

அதற்கு "நெடுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் எப்படி  நெடுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது?

பாசுரம்: 

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்

அற்றாள் தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்

பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி

பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே


இந்த பாசுரத்தில், 

ஒவ்வொரு அடியிலும் 8 சீர் இருக்கிறது

பெருமாளே இங்கு நாயகன். 

பாசுரத்தின் முதல் அடி (உதாரணத்திற்கு):

  1. முற்/றா/ரா - நேர் நேர் நேர்  - தேமாங்காய் (காய் சீர்)
  2. வன/முலை/யாள் - நிரை நிரை நேர் - கருவிளங்காய் (காய் சீர்)
  3. பா/வை - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  4. மா/யன் - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  5. மொய்/யக/லத் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
  6. துள்/ளிருப்/பாள் - நேர் நிரை நேர் - கூவிளங்காய் (காய் சீர்)
  7. அஃ/தும் - நேர் நேர் - தேமா  (மா சீர்)
  8. கண்/டும்- நேர் நேர் - தேமா  (மா சீர்)

1,2,5,6 - காய் சீராக அமைந்து இருக்கிறது.

3,7, 4,8 - மா சீராக அமைந்து இருக்கிறது.

எழுத்துகள் சேர்ந்து "நேர்" அல்லது "நிரை" அசையாகும்,

அசைகள் சேர்ந்து சீராகும்,

 

"முற்றாரா" என்பது ஒரு சீர். இதில் இரண்டு தமிழ் சொற்கள் இருக்கிறது (முற்று ஆரா)

"மொய்யகலத் துள்ளிருப்பாள்" என்ற இரண்டு சீரில் 3 தமிழ் சொற்கள் இருக்கிறது (மொய் அதலத்துள் இருப்பாள்)

பெருமாளை பற்றி இந்த 'நெடுந்தாண்டகம் என்ற விருத்தத்திலேயே 30 பாடல்கள் பாடுகிறார்' நம்முடைய திருமங்கையாழ்வார்.






ஒரு பாடலில்,

  1. ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருந்தால்,
  2. அந்த பாடல் தெய்வத்தை பற்றி பாடினால்,
    • ஒவ்வொரு 6 சீரிலும், பொதுவாக எல்லா சீர்களும் இயற்சீர்களாகவே வந்தால் (சிலசமயங்களில் காய்ச்சீரும் இருப்பதுண்டு), 
      • பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும் (கருவிளம் or கூவிளம்), 
      • 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் (தேமா, புளிமா) வந்தால்,

அதற்கு "குறுந்தாண்டகம்" என்று பெயர்.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள் எப்படி  குறுந்தாண்டகத்தில் அமைந்து இருக்கிறது?

பாசுரம்:

வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும் நாளும்

தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை

மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும்

ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வ ர் தாமே


இந்த பாசுரத்தில், 

ஒவ்வொரு அடியிலும் 6 சீர் இருக்கிறது. 

பெருமாளே இங்கு நாயகன். 

பாசுரத்தில் முதல் அடி (உதாரணத்திற்கு):

  1. வா//வர் - நேர் நிரை  - கருவிளம் (விள சீர்)
  2. தங்/கள் -  நேர் நேர்  - தேமா (மா சீர்)
  3. கோ/ணும்  - நேர் நேர் - தேமா (மா சீர்)
  4. மலர்/மிசை - நிரை நிரை  - கருவிளம் (விள சீர்)
  5. அய/னும்  - நேர் நேர் - தேமா (மா சீர்)
  6. நா/ளும் - நேர் நேர் - தேமா (மா சீர்)

 

இங்கு, 

1,4 - விள சீராக அமைந்து இருக்கிறது..

2,3,5,6 - மா சீராக அமைந்து இருக்கிறது.

திருமங்கையாழ்வாரின் கவித் திறனை பார்த்து, முருகப்பெருமானே  அவருக்கு 'நாலு கவி பெருமாள்' என்று பட்டமளித்து அவருக்கு "வேல்" பரிசாக அளித்தார். (சைவர்கள், முருகப்பெருமானின் அவதாரமான ஞானசம்பந்தர் கொடுத்தார் என்று சொல்கின்றனர்)

ஆழ்வார்களில், வேல் வைத்திருக்கும் ஒரே ஆழ்வார் இவர் ஒருவரே!

திருமங்கைமன்னன் என்றும் பரகாலன் என்றும் நீலன் என்றும் கலியன் என்றும் அழைக்கப்படும் திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.