Followers

Search Here...

Showing posts with label தேசிகர். Show all posts
Showing posts with label தேசிகர். Show all posts

Sunday 8 May 2022

சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்? வேதாந்த தேசிகர் என்ன சொல்கிறார்? குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார்? அறிவோம்...பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்? வேதாந்த தேசிகர் என்ன சொல்கிறார்? குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார்? அறிவோம்...

ஹரிபக்தி செய்யாதவர்களை "ஸம்சாரிகள்" என்று சொல்கிறாகள்

"ஹரி பக்தியில் ஈடுபட நினைப்பவன், சம்சாரிகளிடம் பேசவே கூடாது" என்று வேதாந்த தேசிகர் எச்சரிக்கிறார். 

ஏன்?

மீறி பேசினால், சம்சாரிகள் பேசும் பேச்சை கேட்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்.


சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்?

  • தன்னை பற்றி நல்லதாக பேசுவார்கள்
  • பிறரை பற்றி தோஷம் சொல்வார்கள்.
  • தெய்வத்தை குறை சொல்வார்கள்.
  • ஹரி பக்தி செய்யும் பாகவதர்களை திட்டுவார்கள்.

வரம் ஹுதுவஹ ஜ்வாலா 

பஞ்சராந்தர்வ்ய வஸ்திதி:

ந சௌரி சிந்தா விமுக ஜன சம்வாசவை ரசம்

वरम् हुतवह-ज्वाला पंजरंतरव्य वस्थिति:

न शौरी चिंता विमुक जन संवासवै रसम्

என்று சாஸ்திரம் சொல்கிறது.

வந்திருப்பது பாகவதன் என்றால், கதவை திறந்து வைத்திருக்கலாம்.

'சம்சாரிகள் வந்தால், அவர்கள் பேச்சிலிருந்து தப்பிக்க, நான்கு புறமும் நெருப்பு மூட்டியோ, அல்லது நெருப்பு போல வெயில் அடித்தாலும், கதவை மூடிக்கொண்டு புழுக்கத்தில் கூட இருக்கலாம். 

ஆனால் ஹரி பக்தி செய்யும் பாகவதன், ஒருக்காலும் சம்சாரிகளோடு பேச கூடாது'

என்று வேதாந்த தேசிகர் சொல்கிறார். (ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம்)

சம்சாரிகளிடம் விலகியே இருக்க ஆசைப்படும் குலசேகர ஆழ்வார்,  'சம்சாரிகளுக்கு என்னை கண்டால் பைத்தியம் போல தெரிகிறது, எனக்கு அவர்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறது' என்று பாடுகிறார்.

பேயரே எனக்கு யாவரும்

யானும் ஓர் பேயனே

எவர்க்கும் இது பேசி

என் ஆயனே அரங்கா!

என்று அழைக்கின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே

- பெருமாள் திருமொழி

என்னை.பொறுத்தியவரையில் ஹரிபக்தி செய்யாத சம்சாரிகளை கண்டால், பைத்தியம் போல தெரிகிறது (பேயரே எனக்கு யாவரும்).

எப்பொழுதும் யாரை பார்த்தாலும் பெருமாளை பற்றியே பேசி (எவர்க்கும் இது பேசி) கொண்டு, நானும் ஒரு பைத்தியம் போல (யானும் ஓர் பேயனே) இருக்கிறேன். 

"என் கண்ணா! அரங்கா!" (என் ஆயனே அரங்கா!) என்று கதறி அழைக்கின்றேன். ஒரு பைத்தியம் போல எம்பெருமானே கதி என்று சரணடைந்து கிடக்கிறேன் (பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே),

என்று தன் (பாகவதனின்) நிலையை சொல்கிறார்.


Wednesday 23 December 2020

தேசிகர் (திருவஹீந்திரபுரம் - கடலூர்) மங்களாசாசனம் செய்கிறார்.. அர்த்தம் தெரிந்து கொள்வோமே ! திவ்ய தேசம் (பெருமாள்: தேவநாதன். தாயார்: ஹேமாம்புஜவல்லி))

திருவஹீந்திரபுரம் திவ்ய தேசம்…  (கடலூர் மாவட்டம் அருகில் உள்ளது.)

பெருமாள்:  தேவநாதன். தாயார்: ஹேமாம்புஜவல்லி

'ஆஸ்ரயித்து உபாசனை செய்யத்தக்க பெருமாள், தேவநாத பெருமாள்' என்கிறார் தேசிகர்.

தேசிகர் அவதரித்த ஸ்தலம் "தூப்புல்" (காஞ்சிபுரம்).

வேதாந்த தேசிகருக்கு, அவதார ஸ்தலம் காஞ்சிபுரமாக இருந்தாலும், பெருமாளின் சாஷாத்காரம் கிடைத்த இடமோ "திருவஹீந்திரபுரம்".


காலத்தில் உபநயனம் ஆகி, சாஸ்திரங்கள் அனைத்தும் அத்யயனம் செய்து முடித்தும், தேசிகருக்கு திருப்தி ஏற்படவில்லை.

'படிப்பு தானே இவை.. படித்தது அனுபவத்தில் வந்தால் தானே முழுமை' என்று நினைத்தார் வேதாந்த தேசிகர்.

'வேதாந்தம் படித்தும் அனுபவத்தில் வரவில்லையென்றால், பெருமாள் கிடைக்க மாட்டார்' என்று புரிந்து கொண்டார் ஸ்வாமி தேசிகர்.

'சாஸ்திரமும் கற்றதன் பலனாக, பெருமாளை நேரில் பார்க்க வேண்டும்' என்று ஆசைப்பட்டார் ஸ்வாமி தேசிகர்.





இந்த சிந்தனையோடு, 'தீர்த்தம், மூர்த்தி, மலை, திவ்ய தேசம்' இவை நான்கும் சேர்ந்த திவ்ய தேசத்தை தேடி வந்தார் ஸ்வாமி தேசிகர்.


'கடில தீர்த்தம், ஓஷதி மலை, தேவநாத பெருமாள், திவ்ய தேசம்' என்று நான்கும் பொருந்தி இருக்கும் இடமாக திருவஹீந்திரபுரம் இருப்பதை கண்டு கொண்டார்.

இந்த திவ்ய தேசத்தில் இவருடைய மாமா "கிடாம்பி அப்புள்ளார்" என்ற பரம வைஷ்ணவர் இருந்தார்.

இவரை பார்க்க வந்த தேசிகர், தன் மாமாவிடம் "பெருமாள் தனக்கு ப்ரத்யக்ஷம் ஆவாரா?" என்று கேட்டார்.

உடனே அப்புள்ளார், தேசிகருக்கு, கருட மந்திரத்தை உபதேசம் செய்தார்.

மேலும்,

'எந்த கருடன் பெருமாளை இங்கு சாஷாத்கரிக்க வந்தாரோ! அந்த கருடனை குறித்து இங்கு நீ பக்தியோடு தியானம் செய். 

இந்த கருட மலையில் அமர்ந்து கொண்டு, கருட மந்திரத்தை அக்ஷரத்துக்கு லட்சம் ஜபம் செய்' என்று சொல்ல, 

அது போலவே தேசிகரும் பக்தி யோகத்தால் தியானம் செய்ய, கருடன் தேசிகருக்கு ப்ரத்யக்ஷமானார்.

கருடன் தேசிகருக்கு "ஹயக்ரீவ மந்திரத்தை தானே உபதேசிக்க", 

ஈடுபாடு குறையாத பக்தியோடு ஹயக்ரீவ மந்திரத்தை ஜபம் செய்ய, பெருமாள், தேசிகருக்கு இந்த மலையில் ஹயக்ரீவ மூர்த்தியாகவே ப்ரத்யக்ஷமாகி காட்சி கொடுத்தார்.

ஹயக்ரீவ தரிசனம் ஏற்பட்டதுமே, படித்தது எல்லாம் அனுபவ பூர்வமாகி தெளிந்த ஞானம் ஏற்பட்டது தேசிகருக்கு.

சர்வ கலையும் தெரிந்தவராகி இருந்தார், ஸ்வாமி தேசிகர்.


இதனை கேட்டு அசூயை பட்ட ஒரு சிற்பி, 'சர்வ கலையும் தெரிந்தவர் என்றால், சிற்ப கலை தெரியுமா? அதிலும் தன்னையே சிற்பமாக அப்படியே செதுக்கி காட்ட முடியுமா?" என்று கேட்க, 

தேசிகர், 'தன்னையே சிற்பமாக வடித்து கொடுத்து விட்டார்".


ஒரு சிற்பிக்கு மற்றவர் உருவத்தை செத்துக்குவது எளிது

தன் ரூபத்தை தானே வடிப்பது என்பது சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே முடியும்.


'சிற்ப கலையும் தெரிந்தவர்' என்று தானே தன்னை அப்படியே சிலையாக வடித்து விட்டார் தேசிகர். 

அந்த சிற்பி அமைதியாக திரும்பி விட்டான். 

தானே செய்த தன் திருமேனியை தானே ஆலிங்கனம் செய்து கொண்டு, தன் சிஷ்யர்களுக்கு ஆராதனைக்காக கொடுத்து விட்டார் தேசிகர்.

தேசிகரே வடித்த, தேசிகரே ஆலிங்கனம் செய்து கொண்ட, அந்த அர்ச்சா திருமேனி இன்றும் உள்ளது. 

தேசிகர் மங்களாசாசனம் செய்கிறார்.

தேசிகர் தன் அனுபவத்தை சொல்வதாக உள்ளது..

ப்ரணத சுர கிரீட ப்ராந்த மந்தார மாலா 

விகளித மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த: |

பசுபதி விதி பூஜ்ய: |

பத்ம பத்ரா யதாக்ஷகா |

ஹனி பதிபுர நாத: |

பாது மாம் தேவநாத: |

 - தேசிகர்

திருவஹீந்திரபுர 'தேவநாத பெருமாளை' மங்களாசாசனம் செய்கிறார்

தமிழ் அர்த்தம்.

தேவர்கள், மந்தார புஷ்பத்தை எடுத்து கொண்டு வந்து தேவநாத பெருமாளின் திருவடியில் சமர்பிக்கிறார்களாம்.

அந்த மந்தாரபூக்களில் வழிந்து வரும் தேனாலேயே பெருமாளுக்கு பாத பூஜை (பாத்யம்) செய்தார்களாம் தேவர்கள்.

எந்த தேவர்கள் வந்தார்களாம்? முப்பத்து முக்கோடி தேவர்களோ?

அவர்களுக்கும் மேற்பட்ட தேவனான, கைலாயத்தில் உள்ள பசுபதியும், சத்ய லோகத்தில் உள்ள ப்ராம்மாவும் மிகவும் ப்ரகாசனான முகத்தோடு, இந்த தேவநாத பெருமாளின் இருபக்கமும் இருந்து கொண்டு பூஜித்து கொண்டிருக்க, 'தேவாதி தேவனாக இருக்கும், அஹீந்திரனுக்கு தேவனாக இருக்கும் இந்த பெருமாள் என்னை ரக்ஷிக்கட்டும்

என்று பாடுகிறார் தேசிகர்.

குருநாதர் துணை