Followers

Search Here...

Showing posts with label பேயரே. Show all posts
Showing posts with label பேயரே. Show all posts

Sunday 8 May 2022

சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்? வேதாந்த தேசிகர் என்ன சொல்கிறார்? குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார்? அறிவோம்...பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்... பாசுரம் அர்த்தம் தெரிந்து கொள்வோம்

சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்? வேதாந்த தேசிகர் என்ன சொல்கிறார்? குலசேகர ஆழ்வார் என்ன சொல்கிறார்? அறிவோம்...

ஹரிபக்தி செய்யாதவர்களை "ஸம்சாரிகள்" என்று சொல்கிறாகள்

"ஹரி பக்தியில் ஈடுபட நினைப்பவன், சம்சாரிகளிடம் பேசவே கூடாது" என்று வேதாந்த தேசிகர் எச்சரிக்கிறார். 

ஏன்?

மீறி பேசினால், சம்சாரிகள் பேசும் பேச்சை கேட்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்.


சம்சாரிகள் எப்படி பேசுவார்கள்?

  • தன்னை பற்றி நல்லதாக பேசுவார்கள்
  • பிறரை பற்றி தோஷம் சொல்வார்கள்.
  • தெய்வத்தை குறை சொல்வார்கள்.
  • ஹரி பக்தி செய்யும் பாகவதர்களை திட்டுவார்கள்.

வரம் ஹுதுவஹ ஜ்வாலா 

பஞ்சராந்தர்வ்ய வஸ்திதி:

ந சௌரி சிந்தா விமுக ஜன சம்வாசவை ரசம்

वरम् हुतवह-ज्वाला पंजरंतरव्य वस्थिति:

न शौरी चिंता विमुक जन संवासवै रसम्

என்று சாஸ்திரம் சொல்கிறது.

வந்திருப்பது பாகவதன் என்றால், கதவை திறந்து வைத்திருக்கலாம்.

'சம்சாரிகள் வந்தால், அவர்கள் பேச்சிலிருந்து தப்பிக்க, நான்கு புறமும் நெருப்பு மூட்டியோ, அல்லது நெருப்பு போல வெயில் அடித்தாலும், கதவை மூடிக்கொண்டு புழுக்கத்தில் கூட இருக்கலாம். 

ஆனால் ஹரி பக்தி செய்யும் பாகவதன், ஒருக்காலும் சம்சாரிகளோடு பேச கூடாது'

என்று வேதாந்த தேசிகர் சொல்கிறார். (ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம்)

சம்சாரிகளிடம் விலகியே இருக்க ஆசைப்படும் குலசேகர ஆழ்வார்,  'சம்சாரிகளுக்கு என்னை கண்டால் பைத்தியம் போல தெரிகிறது, எனக்கு அவர்களை பார்த்தால் பைத்தியமாக தெரிகிறது' என்று பாடுகிறார்.

பேயரே எனக்கு யாவரும்

யானும் ஓர் பேயனே

எவர்க்கும் இது பேசி

என் ஆயனே அரங்கா!

என்று அழைக்கின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே

- பெருமாள் திருமொழி

என்னை.பொறுத்தியவரையில் ஹரிபக்தி செய்யாத சம்சாரிகளை கண்டால், பைத்தியம் போல தெரிகிறது (பேயரே எனக்கு யாவரும்).

எப்பொழுதும் யாரை பார்த்தாலும் பெருமாளை பற்றியே பேசி (எவர்க்கும் இது பேசி) கொண்டு, நானும் ஒரு பைத்தியம் போல (யானும் ஓர் பேயனே) இருக்கிறேன். 

"என் கண்ணா! அரங்கா!" (என் ஆயனே அரங்கா!) என்று கதறி அழைக்கின்றேன். ஒரு பைத்தியம் போல எம்பெருமானே கதி என்று சரணடைந்து கிடக்கிறேன் (பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே),

என்று தன் (பாகவதனின்) நிலையை சொல்கிறார்.