Followers

Search Here...

Monday 18 June 2018

உத்தமமான மனைவி - இல்லறம் நடத்த முக்கிய பங்கு வகிப்பவள். உத்தமமான மனைவி யாருக்கு கிடைப்பாளோ, அவனே பாக்கியவான்

இல்லறம் நடத்த முக்கிய பங்கு வகிப்பவள் மனைவி.




கிருஹஸ்தனுக்கு மூலம் கிருஹிணியே.
கணவனுக்கு ஆதாரம் மனைவியே.
சுகத்திற்கு காரணம் அவளே.
தர்மத்திற்கு காரணம் அவளே.
சந்ததிக்கு காரணமும் அவளே
என்று சிவ புராணம் கூறுகிறது.

ஏழ்மையையும், இல்லாமையையும் பாராட்டாமல் இருக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
கிடைத்ததைக் கொண்டு கண்ணியமாக குடும்பம் நடத்தும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
வீட்டை துப்புரவாக வைத்துக் இருக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.




மாமனார் மாமியாருக்கு அடங்கி நடக்கும் உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

பர்த்தாவை குறை சொல்லாமல் இருக்கும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

சிரித்த முகத்துடன் பழகும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

குழந்தைகளிடம் பொறுமையும், வாத்ஸல்யமும் உள்ள  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.
தேவ பித்ரு காரியங்களில் சிரத்தை உள்ள  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

சோம்பல் இல்லாமல் உழைக்கும்  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

பர புருஷனை திரும்பியும் பாராதவளும் ஆன  உத்தமியே க்ருஹ லட்சுமி ஆவாள்.

இத்தகைய மனைவி யாருக்கு கிடைப்பாளோ, அவனே பாக்கியவான்.


No comments: