Followers

Search Here...

Sunday 10 June 2018

திராவிட என்பது சமஸ்கரித மொழி. சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?

திராவிட என்பது சமஸ்கரித மொழி.  இதில் என்ன பெருமை?
சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?




1900 வரை பொதுவாக வேறு மாநிலத்தில் உள்ளவர்களிடம் இன்று english  போல சமஸ்கரிதம் பேசினார்கள்.
அனைவருக்கும் இந்த மொழி தெரிந்தற்கு காரணம், அனைவருமே வேதத்தை அடிப்படையாக கொண்டவர்கள்.  

வேதத்தில் சொன்ன முருகன் தான், சிவன் தான், பெருமாள் தான் கன்யாகுமரியில் இருந்து ஹிமாலயா வரை எங்கும் கோவிலாக அமைந்துள்ளது. 
ஸ்ரீ ரங்கமாக இருந்தாலும் சரி, சிதம்பரம் நடராஜர் ஆக இருந்தாலும் சரி.

ராமானுஜர் 12 வருடம் மேல்கோட்டையில் இருந்தார். பாரத தேசம் முழுவதும் யாத்திரை சென்றார். பொது மொழியான சமஸ்க்ரித மொழி தானே பேசினார்? 
இவர் பேசினார் என்றால், ஊர் மக்கள் அனைவரும் பொது மொழியான சமஸ்க்ரித மொழி பேசினார்கள் என்று தெரிகிறதே.

மதுரையில் பிறந்து ஸ்ரீ ராகவேந்திரர், பாரத தேசம் முழுவதும் கொடி கட்டினாரே..  

இப்படி பொது பாஷையாக சமஸ்கிருதம் இருந்ததால் தான், 
ஆதி சங்கரர் காஷ்மீர் சென்று மந்தனமிஸ்ரரிடம் வாதத்தில் ஈடுபடும் போது, "நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள்?" என்று சமஸ்கிருத மொழியில் கேட்க...
"நான் திராவிட தேசத்தில் இருந்து வருகிறேன்" என்று சமஸ்கிருத மொழியில் பேசிக்கொண்டனர். 
மலையாளத்திலா பேசினார்?

திராவிடன் என்றால் தமிழ் மொழி அல்ல..




நான் திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்த ஆசைப்படுபவன், சமஸ்கிருத மொழி பேசுபவன் என்பதை தவிர ஒன்றும் விசேஷமில்லை.
இது சமஸ்கரித வார்த்தை.

"திராவிடன்" என்ற சொல்லை தமிழில் சொல்ல ஆசைப்பட்டால்
"மூன்று கடல் சூழ்ந்த நிலப்பரப்பு" என்று பொருள். அவ்வளவு தான்.
இதில் கர்வபட என்ன இருக்கிறது?

இதனால் தான், சமஸ்கிருத மொழி தெரிந்த கேரளகாரன், "நான் திராவிடன்" என்று சொல்லிக்கொள்வதில் இந்த போலி தமிழனுக்கு ஏன் இப்படி கர்வம்? என்று புரியாமல் இருக்கிறான்.

நான் மூன்று கடல் சூழ்ந்த இடத்தை சேரந்தவன் (அதாவது திராவிடன்) என்பதை "திராவிடன்" என்று சமஸ்கரிதத்தில் சொன்னதால் சமஸ்கரித பற்று தெரிகிறதே ஒழிய, இதில் வேறு என்ன சாதித்ததாக பெருமை கொள்ள முடியும்?

இன்று English உள்ளது போல அனைவராலும் பேசப்பட்ட சம்ஸ்க்ரிதம் வாழ்க. 


1 comment:

Premkumar M said...

திராவிட என்ற சொல் சமஸ்கரித சொல்.
இடத்தை குறிக்கும் இந்த சொல்லில் தமிழகமும், கேரளமும், ஆந்திராவும், கர்நாடகமும் அடக்கம்.
இடத்தை வைத்து அடையாளபடுத்தி கொள்ள ஆசைப்படுபவர்கள் திராவிடம் என்று பயன்படுத்துகிறார்கள்..
மொழியை வைத்து சொல்ல விரும்புபவர்கள் தமிழன், தெலுங்கன், கன்னடன், மலையாளி என்று சொல்லி கொள்கிறார்கள்..

இடத்தை, மொழி வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத வரை, இப்படி நான் திராவிடன் என்று சொல்பவனை நான் தமிழன், நான் கன்னடன், நான் மலையாளி என்று சொல்லி புலம்ப வேண்டியது தான்.
இடத்தை வைத்து சொல்லும் போது, கர்நாடகம், ஆந்திர, தமிழ்நாடு, கேரளம் எல்லாம் திராவிடம் தான்.

முட்டாள் கழகங்கள், எது தமிழ், எது சமஸ்கரித சொல் என்று புரியாமல், கிறுக்கு கூட்டத்தை வளர்த்து, முட்டாள் வம்சம் இன்று தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டு உள்ளது..
வேடிக்கை.. திராவிட என்ற சொல் தமிழ் மொழியா என்று கூட புரியாத வேடிக்கை கூட்டம்..

https://www.proudhindudharma.com/2018/06/DravidaSanskrit.html