Followers

Search Here...

Friday 14 August 2020

பொறுமையின் லாபம் என்ன?.. வால்மீகி ராமாயணம் பதில் சொல்கிறது.. தெரிந்து கொள்வோம்.

கஷ்டம் வரும்போது, நாம் எதை கடைபிடிக்க வேண்டும்?..


ராமாயணத்தில், "14 வருட வனவாசம் முடித்துக்கொண்டு, ராமபிரான் பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.. நீங்கள் ராமபிரானை வெகுசீக்கிரத்தில் பார்க்க போகிறீர்கள்" 

என்று ஹனுமான் பரதனை பார்த்து சொன்னார்.

தசரதர், ராமபிரான் பிரிவை தாளமுடியாமல் தேகத்தை விட்டு, சொர்க்க லோகம் சென்று விட்டார்.


பரதன், கௌசல்யா, அயோத்தி மக்கள் என்று அனைவரும் மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்கள்


"பொறுமையால்" 14 வருடங்கள் உயிர் தரித்து இருந்தனர்.


14 வருடம் தானும் மரவுரி அணிந்து, ராமபிரானுக்காக காத்து இருந்த பரதன், ஹனுமானை பார்த்து சொல்கிறார்...


கல்யாணி பத காதேயம் 

லௌகிகீ ப்ரதிபாதி மே!

ஏதி ஜீவந்தம் ஆனந்தோ 

நரம் வர்ஷ சதாதபி!!

- தமிழர் "வால்மீகி ராமாயணம்"


कल्याणी बत गाथेयं लौकिकी प्रतिभाति में !

एति जीवंतम आनंदो नरं वर्ष शतादपि !!

- valmiki ramayan





அர்த்தம்:

"பல வருடங்கள் ஒருவனுக்கு கஷ்ட காலமாக அமைந்தாலும், பொறுமையை கடைபிடித்து வாழ்ந்து வந்தால், நிச்சயமாக பேரானந்தம் இவனை வந்து சேரும்.

இந்த வாக்கியம் இன்று சத்தியமாக ஆயிற்று !!"

என்று பரதன் சொல்கிறார். 


Meaning:

"If one survives difficult times patiently, Joy comes to one even after many years.

This saying is auspicious."

Says bharat (brother of rama)


பொறுமையை இழக்கும் போது, மனதுயர் அதிகமாகும், ஆயுள் குறையும்.

கஷ்டங்கள் வரும்போது, நாம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.


அன்பில் என்ற ஊரில் அவதரித்து, திருநீர்மலையில் முக்தி பெற்ற "தமிழர் வால்மீகி" உலகுக்கே ராமாயணம் கொடுத்தார். 


தமிழர் வால்மீகி த்ரேதா யுகத்தில் பொது மொழியான சமஸ்கரிதத்தில் எழுதினார்.


"தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை எழுதுவோம்" என்று கலி யுகத்தில் இன்னொரு தமிழ் புலவன் நினைத்தார்.

கம்ப ராமாயணமும் கிடைத்தது.


ராமாயணத்தை கொடுத்த தமிழர் வால்மீகியால், உலக மக்களுக்கும், உண்மை தமிழர்களுக்கும் பெருமை. 

1 comment:

Brent O said...

This wwas great to read