Followers

Search Here...

Showing posts with label shanthipani. Show all posts
Showing posts with label shanthipani. Show all posts

Tuesday 27 December 2022

கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? how many days krishna studied in shanthibini ashram?

கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்?

how many days krishna studied in shanthibini ashram?

பீஷ்மர் சொல்கிறார்...


ततस्तौ जग्मतुस्तत्र गुरुं सान्दीपिनिं पुनः।

गुरुशुश्रूषणायुक्तौ धर्मज्ञौ धर्मचारिणौ।।

व्रतम् उग्रं महात्मानौ विचरन्ताववन्तिषु।

अहोरात्रैश्च तुष्पष्ट्या साङ्गान्वेदानवापतुः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கிருஷ்ணரும், பலராமரும் சாந்தீபினி ஆஸ்ரமத்துக்கு சென்றனர். தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், கடுமையான ப்ரம்மச்சர்யத்தை கடைபிடித்து கொண்டு, குருவுக்கு இரவுபகல் பாராது சேவை செய்து, 64 நாட்களில் வேதம், வேத அங்கங்கள் (கலைகள்) முழுவதையும் கற்றனர்.

लेख्यं च गणितं चोभौ प्राप्नुतां यदुनन्दनौ।

गान्धर्ववेदं वैद्यं च सकलं समावापतुः।।

हस्तिशिक्षामश्विशिक्षां द्वादशाहेन चाप्नुताम्।

तावुभौ जग्मतुर्वीरौ गुरुं सान्दीपिनिं पुनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

அந்த யாதவர்கள், எழுத்து (writing), எண் (maths), சங்கீதம் (music), வைத்தியம் (medicine), யானை பயிற்சி (elephant handling  / riding), குதிரை பயிற்சி (horse handling /ride) இவற்றையெல்லாம் 12 நாட்களில் கற்றனர்.


धनुर्वेदचिकीर्षार्थं धर्मज्ञौ धर्मचारिणौ।

ताविष्वासवराचार्यमभिगम्य प्रणम्य च।।

- மஹாபாரதம் (வியாசர்)

தர்மம் அறிந்தவர்களுமான, தர்மத்தை கடைபிடிப்பவர்களுமான இருவரும், தனுர் வேதம் (weaponary) கற்று கொள்ள மீண்டும் சாந்தீபினி ஆஸ்ரமம் வந்து, தன் ஆசாரியரை வணங்கினர்.


तेन वै सत्कृतौ राजंश्चरन्तौ ताववन्तिषु।

पञ्चाशद्भिरहोरात्रैर्दशाङ्गं सुप्रतिष्ठितम्।।

स-रहस्यं धनुर्वेदं सकलं ताववापतुः।

दृष्ट्वा कृतार्थो विप्रेन्द्रो गुर्वर्थे तावचोदयत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுதிஷ்டிர ராஜன் ! வில் வித்தையில் தேர்ந்த அந்த சாந்தீபினியை நமஸ்கரித்து, அவரால் மிகவும் விரும்பப்பட்ட இந்த இருவரும், அவந்தி தேசத்தில் இருந்து கொண்டே, 50 நாட்களில் இரவு பகல் பாராமல் கற்று, 10 அங்கங்களோடு கூடிய தனுர் வேதத்தை அதன் ரஹஸ்யங்களோடு கூட அறிந்து கொண்டு, மனதில் ஆழமாக பதியும் படி கற்றனர்.


கிருஷ்ணர் எத்தனை வருடங்கள், சாந்தீபினி ஆஸ்ரமத்தில் படித்தார்? 64+12+50=126 நாட்கள்.


ஸ்ரீ கிருஷ்ணராக பகவான் நாராயணனே வந்தார் என்பதால் 128 நாட்களில் படித்தார் என்பது கூட ஆச்சரியமில்லை.

இவை அனைத்தும் சாந்தீபினியே சொல்லி கொடுத்தார் என்று பார்க்கும் போது, அவர் பெருமையை நாம் உணரலாம்.

உஜ்ஜயினி என்று இன்று சொல்லப்படும் நகரமே அன்று அவந்தி தேசமாக இருந்தது.