Followers

Search Here...

Showing posts with label apastamba. Show all posts
Showing posts with label apastamba. Show all posts

Sunday 6 December 2020

குருவிடம் எப்படி பழக வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். சிலவற்றை தெரிந்து கொள்வோமே..

குருவிடம் எப்படி பழக வேண்டும்? 
'ஆபஸ்தம்ப ரிஷி' சொல்கிறார். தெரிந்து கொள்வோமே.. 
1.
ந ச ஏனம் அபிப்ரசாரயீத 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன் கால் நீட்ட கூடாது. 

2. 
கச்சந்தம் அனுகச்சேத் அணுகம்
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும். 




3.
தாவந்தம் அனுதாவேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும் 

4. 
ந ஸ உபான: வேஷ்டிதசிரா அவஹித பானிர் அவதா வா ஆசீதேத் | 
அத்வா ஆபன்னாஸ் து கர்ம யுக்தோ வா ஆசீதேத் || 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது. 
ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை. 

5. 
ந சேத் உபசீதேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு மிக அருகில் அமர கூடாது. 

6. 
தேவம் இவ ஆசார்யம் உபாசீத அவிகதயண் 
அவிமனா வாசம் சுஸ்ரூசமானோ ஸ்ய 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர் சொல்வதை கவனத்துடன், ஆசையுடன் கேட்க வேண்டும். 

7. 
அனுபஸ்த க்ருத: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது. 

8. 
அணுவாதி வீத: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
காற்று நம் மீது பட்டு பிறகு அவர் மீது படும் படி இருக்க கூடாது. உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாக பார்த்து அமர வேண்டும். 


9. 
அப்ரதிஷ்டப்த: பாணினா 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்க கூடாது. 

10. 
அனபஸ்ரிதோ நியத்ர 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்க கூடாது. 

11. 
அபிமுகோ ந அபிமுகம் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு எதிரே இருக்க கூடாது. 

12. 
அனாஸன்னோ ந திதூரே | 
யாவத் ஆசீனோ பாஹுப்யாம் ப்ராப்நுயாத் || 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது. 
குரு கையை உயர்த்தி கூப்பிடும் தூரத்தில் அமர வேண்டும். 

13.
ஏக அதயாயீ தக்ஷிணம் பாஹும் ப்ரதி உபசீதேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
ஒரே ஒரு சிஷ்யனாக இருக்கும் சமயத்தில், குருவுக்கு வலது பக்கம் அமர வேண்டும். 

14. 
யதா அவகாசம் பஹவ: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம். 

15. 
திஷ்டதி ச ந ஆசீத அனாசன யோக விஹிதே | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு நிற்கும் போது, அமர்ந்து இருக்க கூடாது. 
குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில், தனக்கு இடம் கிடைத்தாலும் அமர கூடாது. 

16. 
ஆசீனே ச ந சம்விசேத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஆசனத்தில் அமராமல் தரையில் அமர்ந்து இருக்கும் போது, நாம் ஆசனத்தில் (chair) அமர கூடாது. 

17. 
சேஷ்டதி ச சிகீர்ஷன் தச் ஷக்தி விசயே 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யனின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.. 

18. 
ந ச யஸ்ய சகாஸே ந வக் ஸ்தானினம் உபசம்க்ருஹ்நீயாத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் (பெரியோர்கள் ஆனாலும், தகப்பனே ஆனாலும்) காலில் விழ கூடாது. 

19. 
கோத்ரேன வா கீர்த்தயேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன் கோத்திர பெருமையை குருவுக்கு முன் பேச கூடாது. 

20. 
ந ச ஏனம் ப்ரதி உத்திஷ்ட்டே அனூத்திஷ்ட்டே வா | 
அபி சேத் தஸ்ய குரு ஸ்யாத் | 
தேசாத் த்வ ஆசனாச் ச சமஸர்பேத் | 
யஸ்மிம்ஸ் த்வ அனாசார்ய சம்பந்தாத் கௌரவம் 
வ்ருத்திஸ் தஸ்மின் அன்வக் ஸ்தாநீய பை ஆசார்யஸ்ய |
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன் குருவை மீறி அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்க கூடாது, அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக உயர்த்த கூடாது. 
குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு அவமானம் செய்ததாகும். தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம். 




21. 
ந ஸ்மயேத | 
யதி ஸ்மயேத அபிக்ருஹ்ய ஸ்மயேத இதி ஹி ப்ராஹ்மணம் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
வாயை திறந்து கொட்டாவி விட கூடாது. 
அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால் மூடிக்கொள்ள வேண்டும் 

22. 
விசம கதே த்வம ஆசார்ய உக்ரதா: சூத்ரதோ வா ஆஹரேத் | 
சர்வதா சூத்ரதா உக்ரதோ வா ஆசார்ய 
அர்தஸ்ய ஆஹரணம் தார்ம்யம் இதி ஏகே | 
தத்வா ச ந அனுகதயேத் | 
க்ருத்வா ச ந அனுஸ்மரத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன்னால் முடிந்தவரை சம்பாவனை செய்தும், குரு முழுதிருப்தி அடையவில்லை என்றால், வைஸ்யர்களிடமோ (business class), சூத்திரர்களிடமோ (employee class) யாஸித்து தானம் வாங்கி திருப்தி செய்யலாம். 
தேவைப்பட்டால், முழு சம்பாவனையுமே வைஸ்யர்களிடமோ (business class), சூத்திரர்களிடமோ (employee class) யாஸித்து தானம் வாங்கி திருப்தி செய்யலாம். குருவுக்கு கொடுத்ததை பெருமை பேசி கொள்ள கூடாது. 
குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்து விடுவது நல்லது. 

23. 
ஸய்யா ஆசனே ச ஆசரிதே ந ஆவிசே |  
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு அமர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. 

24. 
ந அநபிபாஷிதோ குரும் அபிபாஷேத ப்ரியாத் அன்யத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேச கூடாது. 

25. 
சமாவ்ருத்தஸ்ய அபி ஏதத் ஏவ சாமயாசாரிகம் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதம் கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும். 

26. 
சஹ வசன் சாயம் ப்ராத: 
அநாஹுதோ குரும் தர்சன அர்தோ கச்சேத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும் மாலையும் அவரை பார்க்க செல்ல வேண்டும். 

27. 
முஹும்ஸ் ச ஆசார்ய குலம் தர்சன அர்தோ கச்சேத் 
யதா சக்தி அதிஹஸ்த்யம் ஆதாய அபி தந்த ப்ரக்ஸாலனானி இதி | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அடிக்கடி அவரை பார்க்க செல்ல வேண்டும்.
தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.

குருநாதர் துணை