Followers

Search Here...

Showing posts with label மன தூய்மை. Show all posts
Showing posts with label மன தூய்மை. Show all posts

Sunday 22 May 2022

மனம் தூய்மை பெற என்ன செய்ய வேண்டும்? வியாசர் சொல்கிறார். அறிவோம் பாரதம்.

மனம் தூய்மையடைய என்ன செய்ய வேண்டும்? என்று யுதிஷ்டிரர் வியாசரை கேட்டார்.

तैर एवम् उक्तॊ भगवान्

मनुः स्वायम्भुवॊ ऽब्रवीत् |

शुश्रूषध्वं यथावृत्तं

धर्मं व्यास समासतः ||

- வியாசர் மஹாபாரதம்

க்ருத யுகத்தில் ரிஷிகளுக்கு ஸ்வாயம்பு மனு சொன்னதை, வியாசர் யுதிஷ்டிரனுக்கு சொல்ல ஆரம்பித்தார்.


अनादेशे जपो होम

उपवास: तथैव च |

आत्मज्ञानं पुण्यनद्यो

यत्र प्रायश्च तत्पराः ||

अनादिष्टं तथैतानि

पुण्यानि धरणीभृतः |

सुवर्ण-प्राशनम् अपि

रत्नादि-स्नानम् एव च ||

देवस्थान् अभिगमनम् आज्यप्राशनमेव च |

एतानि मेध्यं पुरुषं

कुर्वन्त्याशु न संशयः ||

- வியாசர் மஹாபாரதம்

சரியான காலங்களில்

  • ஜபம் செய்வது
  • ஹோம் செய்வது
  • விரதம் இருப்பது 
  • ஆத்ம ஞானத்தை கொடுக்கும் படிப்பை படிப்பது,
  • மகான்கள் இருக்கும் இடத்திற்கு செல்வது.
  • புண்ணிய நதியில் நீராடுவது.
  • தெய்வ சாந்நித்யம் உள்ள மலைகளில் ஏறுவது.
  • தங்கபஸ்பம் மற்றும், நெய் உண்பது,
  • ரத்னங்கள் ஜலத்தில் போட்டு குளிப்பது,
  • கோவிலுக்கு செல்வது,

இதை எப்பொழுதும் கடைபிடிக்கும் மனிதன், சீக்கிரத்தில் சுத்தி அடைவான் என்பதில் சந்தேகமில்லை.