Followers

Search Here...

Saturday, 25 March 2023

தமிழர்களுக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? மலயத்வஜ பாண்டிய வம்சம் எப்படி அர்ஜுனனோடு உறவு கொண்டது? அறிவோம் மகாபாரதம்

What is the connection between tamil people (Pandiya and chola) in mahabharat?

In 3 chapter, we see  this connection.
Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.

1st when Arjuna goes for theertha yatra,
2nd sahadeva when he goes for rajasuya yagya,
3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.

பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும்,
தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.

நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.

மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

1.
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.

அப்பொழுது, பாண்டிய தேசத்தில், மணலூர் வருகிறான். அப்பொழுது சித்ரவாகனன் என்ற பாண்டிய அரசன், தன் பெண்ணை (சித்ராங்கதை) நிபந்தனை பேரில் திருமணம் அர்ஜுனனுக்கு செய்து முடிக்கிறான்.
ஆதி பர்வம், 61, 235 அத்தியாயம்
https://www.proudhindudharma.com/2022/10/Pandya-king-dynasty-arjuna.html?m=1

2.
யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார்.
இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.
சபா பர்வம், அத்தியாயம் 33
https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1

3.
போர் முடிந்த பிறகு, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் முடிவு செய்கிறார்.
அப்போது, அர்ஜுனன் பாண்டிய தேசம் வருகிறான்.
பாண்டிய மன்னனான தன் மகனையும், தமிழ் பெண்ணான சித்ராங்கதையையும் பார்கிறான்.
அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79
https://www.proudhindudharma.com/2023/01/arjuna-killed-by-pandiya-king.html?m=1

Friday, 24 March 2023

ஜனமேஜெயன் செய்த சர்ப யாகத்தில், உயிர் விட்ட சர்ப்பங்களின் பெயர்கள் என்னென்ன? அறிவோம் மஹாபாரதம்....

ஸூத பௌரானிகரிடம், "ஜனமேஜெயன் செய்த சர்ப யாகத்தில் விழுந்து, உயிர் விட்ட சர்ப்பங்களின் பெயர்களை சொல்லுமாறு" கேட்டார் சௌனகர்.

எண்ணிலடங்காத அளவுக்கு கோடிக்கணக்கான சர்ப்பங்கள் அக்னியில் விழுந்து உயிர் விட்டன.

அனைத்து சர்ப்பங்களின் பெயர்களையும் சொல்வது இயலாது என்பதால், அதில் குறிப்பாக சிலவற்றை பௌரானிகர் சொல்ல ஆரம்பிக்கிறார்.


வாசுகி என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகள் அக்னியில் விழுந்து பொசுங்கின, அவைகளின் பெயர்கள் ..

  1. கோடிஸன், 
  2. மானஸன், 
  3. பூர்ணன், 
  4. சலன், 
  5. பாலன், 
  6. ஹலீமகன், 
  7. பிச்சலன், 
  8. கௌனபன், 
  9. சக்ரன், 
  10. காலவேகன், 
  11. ப்ரகாலனன், 
  12. ஹிரண்யபாஹு, 
  13. ஸரணன், 
  14. கக்ஷகன், 
  15. காளதந்தகன்,

वासुकेः कुलजातांस्तु प्राधान्येन निबोध मे।

नील रक्तान् सितान्घोरान् महाकायान् विषोल्बणान्।।

अवशान् मातृ वाग्दण्ड पीडितान् कृपणान् हूतान्।

कोटिशो मानसः पूर्णः शलः पालो हलीमकः।।

पिच्छलः कौणपः चक्रः कालवेगः प्रकालनः।

हिरण्यबाहुः शरणः कक्षकः कालदन्तकः।।

एते वासुकिजा नागाः प्रविष्टा हव्यवाहने।

अन्ये च बहवो विप्र तथा वै कुलसंभवाः।

प्रदीप्ताग्नौ हुताःसर्वे घोर-रूपा महाबलाः।।

தக்ஷகன் என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகளும் அக்னியில் விழுந்து பொசுங்கின.

அவைகளின் பெயர்கள் ..

  1. புச்சாண்டகன், 
  2. மண்டலகன், 
  3. பிண்டஸேக்தா, 
  4. ரபேனகன், 
  5. உச்சிகன், 
  6. சரபன், 
  7. பங்கன், 
  8. பில்வதேஜஸ், 
  9. விரோஹனன், 
  10. ஸிலி, 
  11. ஸலகரன், 
  12. மூகன், 
  13. சுகுமாரன், 
  14. ப்ரவேபனன்,
  15. முத்கரன், 
  16. சிசுரோமன்,
  17. ஸுரோமன், 
  18. மஹாஹனு

तक्षकस्य कुले जातान् प्रवक्ष्यामि निबोध तान्।

पुच्छाण्डको मण्डलकः पिण्डसेक्ता रभेणकः।।

उच्छिखः शरभो भङ्गो बिल्वतेजा विरोहणः।

शिली शलकरो मूकः सुकुमारः प्रवेपनः।।

मुद्गरः शिशुरोमा च सुरोमा च महाहनुः।

एते तक्षकजा नागाः प्रविष्टा हव्यवाहनम्।


ஐராவத என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகளும் அக்னியில் விழுந்து பொசுங்கின, அவைகளின் பெயர்கள் ..

  1. பாராவதன், 
  2. பாரியாத்ரன், 
  3. பாண்டரன், 
  4. ஹரினன், 
  5. க்ருஷன், 
  6. விஹங்கன், 
  7. ஸரபன், 
  8. மோதன், 
  9. ப்ரமோதன், 
  10. சம்ஹதாபனன்

पारावतः पारियात्रः पाण्डरो हरिणः कृशः।

विहङ्गः शरभो मोदः प्रमोदः संहतापनः।।

ऐरावत कुलादेते प्रविष्टा हव्यवाहनम्।

கௌரவ்ய என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகளும் அக்னியில் விழுந்து பொசுங்கின, அவைகளின் பெயர்கள் ..

  1. ஏரகன், 
  2. குண்டலன், 
  3. வேணி, 
  4. வேணீஸ்கந்தன், 
  5. குமாரகன், 
  6. பாஹுகன், 
  7. ஶ்ருங்கபேரன், 
  8. தூர்தகன், 
  9. ப்ராதன், 
  10. ராதகன்

कौरव्य कुलजान् नागाञ्शृणु मे त्वं द्विजोत्तम।।

एरकः कुण्डलो वेणी वेणीस्कन्धः कुमारकः।

बाहुकः शृङ्गबेरः च धूर्तकः प्रातरातकौ।।

कौरव्य कुलजास्त्वेते प्रविष्टा हव्यवाहनम्।



த்ருதராஷ்டிரன் என்ற நாகராஜனுக்கு பிறந்த முக்கியமான சில கொடிய விஷமுள்ள பாம்புகளும் அக்னியில் விழுந்து பொசுங்கின, அவைகளின் பெயர்கள் ..

  1. சங்கு கர்ணன், 
  2. பிடரகன், 
  3. குடாரமுகன், 
  4. ஷேசகன், 
  5. பூர்ணாங்கதன், 
  6. பூர்ணமுகன், 
  7. ப்ரஹாஸன், 
  8. சகுனி, 
  9. தரி, 
  10. அமாஹடன், 
  11. காமடகன், 
  12. சுஷேணன், 
  13. மானஸன், 
  14. அவ்யயன், 
  15. அஷ்டாவக்ரன், 
  16. கோமலகன், 
  17. ஸ்வசனன், 
  18. மௌனவேபகன், 
  19. பைரவன், 
  20. முண்டவேதாங்கன், 
  21. பிசங்கன், 
  22. உதபாரகன், 
  23. ரிஷபன், 
  24. வேகவான், 
  25. பிண்டாரகன், 
  26. மஹாஹனு, 
  27. ரக்தாங்கன், 
  28. ஸர்வ சாரங்கன், 
  29. ஸம்ருத்தன், 
  30. படவாசகன், 
  31. வராஹகன், 
  32. வீரணகன், 
  33. சுசித்ரன், 
  34. சித்ரவேகிகன், 
  35. பராசரன், 
  36. தருநகன், 
  37. மணி, 
  38. ஸ்கந்தன், 
  39. ஆருணி

धृतराष्ट्र कुले जाताञ्शृणु नागान्यथातथम्।।

कीर्त्यमानान्मया ब्रह्मन् वातवेगान् विषोल्बणान्।

शङ्कु-कर्णः पिठरकः कुठारमुख सेचकौ।।

पूर्णाङ्गदः पूर्णमुखः प्रहासः शकुनि: दरिः।

अमाहठः कामठकः सुषेणो मानसो अव्ययः।।

अष्टावक्रः कोमलकः श्वसनो मौनवेपगः।

भैरवो मुण्डवेदाङ्गः पिशङ्ग च उदपारकः।

ऋषभो वेगवान् नागः पिण्डारक महाहनू।।

रक्ताङ्गः सर्वसारङ्गः समृद्ध पटवासकौ।

वराहको वीरणकः सुचित्र चित्रवेगिकः।।

पराशरः तरुणको मणिः स्कन्धः तथा आरुणिः।

इति नागा मया ब्रह्मन् कीर्तिताः कीर्ति वर्धनाः।।

Adi parva 57 - வ்யாஸ பாரதம்


இவ்வாறு இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை என்று பல வித விதமான கொடிய கோடிக்கணக்கான ஸர்ப்பங்கள், முக்கியமான இந்த 92 சர்ப்பங்களுடன் சேர்ந்து, ஜனமேஜெயன் செய்த சர்ப யாகத்தினால் இழுக்கப்பட்டு, அக்னியில் விழுந்து பொசுங்கின.