Followers

Search Here...

Friday, 26 May 2023

What is the difference between Vanaspati (வனஸ்பதி) and Vruksha (வ்ருக்ஷம்)? Let us understand... Manu smriti answers..

Which Tree is referred as Vanaspati (வனஸ்பதி) and Vruksha (வ்ருக்ஷம்)

अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।

पुष्पिणः फलिन: च एव वृक्षास्तूभयतः स्मृताः ॥

- Manu smriti (மனு ஸ்மிருதி)


எந்த மரம், பூக்கள் இல்லாமல் பழம் தருமோ, அந்த மரத்தை "வனஸ்பதி" என்று சொல்கிறோம்.

The tree which gives fruit without becoming flower, is referred as Vanaspati.


எந்த மரம், பூக்களை உண்டாக்கி, அதிலிருந்து பழம் தருமோ, அந்த மரத்தை "விருக்ஷம்" என்று சொல்கிறோம்.

The tree which gives fruit from flower, is referred as Vruksha.

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்கள் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே

தூவா விரைத்தாலு நன்றாகா வித்தெனவே 

பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு 

—அவ்வையார் இயற்றிய நல்வழி


மனு ஸ்மிருதியின் வாக்கியத்தையே, அவ்வையும் பயன்படுத்துகிறாள்.


பூக்காது காய்க்கும் அத்தி மரம், ஆல மரம், அரச மரம், பலா மரம் முதலிய மரங்கள் உலகில் உண்டு. அது போல, 

மக்கள் கூட்டத்தில், இதைச் செய் என்று சொல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படும் நல்லோரும் உண்டு. 

அதற்கு மாறாக,

விதைத்தாலும் முளைக்காத வித்து (விதை) போன்றும் சிலர் இருக்கிறார்கள். 

அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது- தெரியாது. 

அதாவது விதைத்தாலும் முளைக்காது போன்று இப்படிப்பட்ட மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரையும் இப்படி பயனற்றதாக போகும்.

நல்லவன் கஷ்டப்படுகிறான்! கெட்டவன், கொள்ளைக்காரன் நன்றாக வாழ்கிறான் !! நானும் இவர்களை போல ஆகி விடலாமா? இதற்கு பதில் என்ன? மனு ஸ்ம்ருதி படியுங்கள்..

"நல்லவன் கஷ்டப்படுகிறான்!கொள்ளைக்காரன்,கெட்டவன் நன்றாக வாழ்கிறான் !! நானும் இவர்களை போல ஆகி விடலாமா?" இதற்கு பதில் என்ன? 

மனு ஸ்ம்ருதி படியுங்கள்..  ப்ரம்மாவின் புத்திரனான ஸ்வாயம்பு மனு சொல்கிறார்.


न सीदन्नपि धर्मेण मनो अधर्मे निवेशयेत् ।

अधार्मिकानां पापानाम् आशु पश्यन् विपर्ययम् ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

தான் அறத்தோடு (தர்மம்) வாழ்ந்து வறுமையில் வாடும் போது, அதே சமயம் அதர்மத்தோடு வாழும் ஒருவன் சௌக்கியமாக வாழ்கிறானே என்று மனம் தடுமாற கூடாது. "அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்" என்று அறிந்து, தானும் அதர்ம வழியில் செல்ல மனத்தை செலுத்தவே கூடாது.


न अधर्म: चरितो लोके सद्यः फलति गौरिव ।

शनैरावर्त्य मानस्तु कर्तुर्मूलानि कृन्तति ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

அதர்மம் செய்பவன் அதற்கான பாப பலனை உடனே அடைந்து விடுவதில்லை. ஆனால், காலம் கனியும் போது அதர்மம் செய்பவன் நிச்சயம் அழிவான்.

यदि न आत्मनि पुत्रेषु न चेत् पुत्रेषु नप्तृषु ।

न त्वेव तु कृतो अधर्मः कर्तुर्भवति निष्फलः ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

ஒருவேளை, அதர்மம் செய்தவன் பாபத்தின் பலனை அழிவை சந்திக்காமல் போனாலும், அவன் பிள்ளையோ, பேரனோ அல்லது அவனது பிள்ளையோ அதன் பலனை அடைந்து அழிந்து போவார்கள். ஒரு நாளும் ஒருவன் செய்த அதர்மம் பலன் தராமல் போகாது.


अधर्मेणैधते तावत् ततो भद्राणि पश्यति ।

ततः सपत्नान् जयति समूलस्तु विनश्यति ॥

- மனு ஸ்ம்ருதி (manu smriti)

ஒருவன் செய்த அதர்மங்கள் ஒரு நிலையை அடையும் வரை, அவன் சுகமாக சௌக்கியமாக வாழ்ந்து கொண்டு இருப்பான். தன்னை விட குறைந்த எதிரிகளையும் ஒழிப்பான். எப்பொழுது இவன் செய்த பாபம் ஒரு பரிபக்குவத்தை அடைகிறதோ, அப்போது தன்னுடைய சொத்து, சுகம், பிள்ளைகளோடு சேர்த்து, தானும் அழிந்து போவான்.