Followers

Search Here...

Wednesday, 19 June 2024

மிலேச்சன் யார்? ஆதி பர்வம் (மஹாபாரதம்)

மிலேச்சன் யார்?

यत्त्वं मे हृदयाज्जातो वयः स्वं न प्रयच्छसि।

तस्मात्प्रजा समुच्छेदं तुर्वसो तव यास्यति।।

संकीर्ण आचारधर्मेषु प्रतिलोमचरेषु च।

पिशिताशिषु चान्त्येषु मूढ राजा भविष्यसि।।

गुरुदारप्रसक्तेषु तिर्यग्योनिगतेषु च।

पशुधर्मेषु पापेषु म्लेच्छेषु त्वं भविष्यसि।।

- ஆதி பர்வம் (மஹாபாரதம்) 

"உனக்கு பிறக்கும் சந்ததிகள், ஆசார தர்மங்களில் விலகியும், வர்ண கலப்பில் ஏற்கப்படாத மணம் புரிந்து கொண்டும், மாமிசம் சாப்பிடுவதில் பெரும் ஆர்வம் கொண்டும், குருவின் மனைவியை அடைய துணிபவனாகவும், திர்யக் ஜாதியின் நடையுள்ளவர்களும், மிருகத்தை போல (சாப்பிடுவதற்காக வாழ்வது) வாழ்பவர்களும், பாபத்தை செய்வதில் தயக்கம் இல்லாதவர்களுமான மிலேச்சர்களுக்கு நீ அரசனாக இருப்பாய்என்று யயாதி தன் மகனான துர்வஸுவை சபித்தார்.



மக்களை, தர்மத்தில் சரியாக வழிநடத்தி கொண்டு, 2வது இந்திரனை போல யயாதி அரசாட்சி செய்தார்.

இளமையை தன் மகனான புருவிடம் பெற்று கொண்ட யயாதி

தேவர்களை, யாகங்கள் செய்து மகிழ்வித்தார்.

பித்ருக்களை, ஸ்ரார்த்தம் செய்து மகிழ்வித்தார்.

ஏழைகளுக்கு தேவையான கருவிகளை அன்போடு கொடுத்தார். 

ப்ராம்மணர்களுக்கு தேவையானதை கொடுத்தார்.

விருந்தினர்களுக்கு, உணவும், பானமும் கொடுத்தார்.

வைஸ்யர்களின் செல்வத்தை காப்பாற்றினார்.

சூத்திரர்களிடம் இரக்கத்தோடு இருந்தார்.

திருடர்களுக்கு, நியாயமான தண்டனை கொடுத்தார்.

மக்களை, தர்மத்தில் சரியாக வழிநடத்தி கொண்டு, 2வது இந்திரனை போல யயாதி அரசாட்சி செய்தார்.


देवानतर्पयद् यज्ञैः श्राद्धै: तद्वित् पितॄनपि।

दीनान् अनुग्रहै: इष्टैः कामै: च द्विजसत्तमान्।।

अतिथीन् अन्न पानै: च विश: च परिपालनैः।

आनृशंस्येन शूद्रां च दस्यून्सन्निग्रहेण च।।

धर्मेण च प्रजाः सर्वा यथावदनुरञ्जयन्।

ययातिः पालयामास साक्षादिन्द्र इवापरः।।

 - ஆதி பர்வம்