Followers

Search Here...

Tuesday, 10 January 2023

ஜெய்ஶ்ரீராம் என்று ஏன் சொல்கிறோம்? 'ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 'ஸாது சங்க கீ ஜெய்', 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய் என்று ஏன் சொல்கிறோம்.?

ஜெய்ஶ்ரீராம் என்று ஏன் சொல்கிறோம்?  

  • 'ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 
  • 'ஸாது சங்க கீ ஜெய்', 
  • 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்' 
என்று ஏன் சொல்கிறோம்.?

பொதுவாக, ஒருவர் வெற்றி பெற்றால் தானே 'ஜெய்' என்று கோஷம் போடுவார்கள்? 

கடவுளுக்கு எதற்கு வெற்றி கோஷம்? அவர் அப்படி என்ன வெற்றி பெற்றார்?


பகவானுக்கும், நமக்கும் ஒரு போட்டி பல யுகங்களாக நடந்து கொண்டே இருக்கிறது. 

இது பகவானே இஷ்டப்பட்டு செய்யும் ஒரு லீலை (விளையாட்டு). 


அப்படி என்ன லீலை இது?

நம்மை படைத்து

நாம் வாழ அழகான இந்த பூமியையும் கொடுத்து,

உடம்பையும் கொடுத்து, 

மனம், புத்தியையும் கொடுத்து, 

"இவன் இதையெல்லாம் கொடுத்த என்னை பார்க்கிறானா? அல்லது, நான் கொடுத்த இந்த ஆச்சர்யங்களில் மூழ்கி இருக்கிறானா?

என்று பார்க்கிறார்.

இன்று வரை, 

உலக விஷயங்களில் மூழ்கி தான் இருக்கிறோம். 

இப்பொழுது இருக்கும் ப்ரம்மாவுக்கே அவர் கணக்கு படி, 50 வயது முடிந்து விட்டது

நாமும் பல ஜென்மங்களாக பிறந்து கொண்டே இருக்கிறோம். 

இன்று வரை முக்தி அடையாமல் நாம் இருப்பதை கவனித்தாலேயே, உலக ஆசைகளை விட்டு வெளியே நாம் வரவில்லை என்று அறிகிறோம். 


பகவானை தியானிப்பதை விட, நமக்கு அவர் படைத்த இந்த உலகத்திலேயே நமக்கு நாட்டம் உள்ளது. 


"பகவானால் படைக்கப்பட்ட உலகமே இவ்வளவு ஈர்க்கிறதே, இதை படைத்த பகவான் எப்படிப்பட்டவனாக இருப்பார்?"  

என்று எப்பொழுதாவது இவன் தன்னை பார்ப்பானா என்று பெருமாளும்,  பார்த்துக்கொண்டிருக்கிறார். 


பல யுகங்கள் ஆனாலும், பல ஊர்களில் பிறந்தாலும், ஒவ்வொரு ஊரிலும் கோவில் கொண்டு, "இந்த ஜென்மத்திலாவது நம் கவனம் இவனுக்கு வருமா?" என்று காத்துக் கொண்டு இருக்கிறார் பெருமாள்.


நமக்கோ, அவர் படைத்த உலகம் அலுத்தபாடில்லை. பகவான் நினைப்பு இன்று வரை இல்லை.  

அவரும் நம்மை விடுவதாக இல்லை


கஷ்டம் வரும் பொழுது பெருமாளை நோக்கி வருகிறோம். 

அது சரியானவுடன், மீண்டும் உலக விஷயங்களில் போகிறோம். 


"சரி, விளையாடட்டும்" என்று பெருமாளும்,  பார்த்துக்கொண்டிருக்கிறார். 


இது யுகம் யுகமாக நடந்து கொண்டே இருக்கிறது. 


"தான் படைத்த உலகம் தானே. ரசிக்கட்டும்", என்று அவரும் பொறுமையாக காத்துக் கொண்டு இருக்கிறார். 


"சம்பாதிப்பது, உண்ணுவது, ஆடம்பரமாக ட்ரெஸ் பண்ணுவது" என்ற எண்ணங்களுக்கு மத்தியில், நமக்கும் ஒரு 'ஸத் சங்கம் தேவை' என்ற எண்ணம் லட்சத்தில் ஒருவனுக்கு உண்டாகிறது. 


இப்படி ஆசைப்படும் ஒருவனுக்காக, பகவானே, அவனுக்கு 'ஸத் சங்கத்தை' ஏற்படுத்தி தருகிறார்.


ஸத் சங்கத்தினால் மட்டுமே, உலக நாட்டம் குறைந்து, நம் கவனம் பகவானிடம் மெல்ல திரும்புகிறது. 

ஸத் சங்கத்தினால் மட்டுமே ஒருவனுக்கு பக்தி வருகிறது.


பல யுகங்கள் கடந்து, இது நாள் வரை, 

  • எப்படி சம்பாதிப்பது? 
  • எதையெல்லாம் உண்ணுவது? 
  • எப்படி ஆடம்பரமாக ட்ரெஸ் பண்ணுவது? 

என்று மட்டுமே எண்ணிய இந்த மனது, ஸத் சங்கத்தால் திடீரென்று, 

  • எப்படி பகவான் இருப்பார்? 
  • முக்தி என்றால் என்ன? 
  • எங்கு இருக்கிறார்? 
  • நாம் எங்கிருந்து வந்தோம்? 

என்ற பல கேள்விகளை கேட்க வைத்து, கவனத்தை பகவானிடம் மெல்ல திருப்புகிறது. 


இப்படி உலகத்தை மட்டுமே இது நாள் வரை பார்த்து கொண்டிருந்த நம்மையும், பகவான் பக்கம் திருப்பிய 'ஸத் சங்கத்திற்கு, ஸத் குருவிற்கு' நாம் சொல்லும் வெற்றி கோஷமே 

'ஸாது சங்க கீ ஜெய்', 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்'. 


பல யுகங்களாக பகவானின் நினைவு இல்லாமல், தப்பித்து கொண்டே இருந்த ஒரு ஜீவன் ஸத் சங்கத்தால், ஸத் குருவால், பகவானிடம் மாட்டிக்கொண்டு விடுகிறான். 


இறுதியில், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, நம்மை பகவானிடம் பிடித்து கட்டிபோட்ட 'ஸத் சங்கத்திற்கும், ஸத் குருவுக்கும், பகவானுக்கும் வெற்றி' என்று தன் வாயால் சொல்லி சரணடைகிறான்.


பகவான் தன்னை ஜெயித்ததில் ஆனந்தம் கொள்கிறான். 

தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, குருவின் வெற்றியை, பகவானின் வெற்றியை 

  1. 'பகவான் ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 
  2. ஜெய் ஶ்ரீராம்,
  3. 'ஸாது சங்க கீ ஜெய்', 
  4. 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்' 

என்று கொண்டாடுகிறான்.

Wednesday, 4 January 2023

மகாபாரதம் முதல் ஸ்லோகம். நாராயண தியான ஸ்லோகம்... அறிவோம் மகாபாரதம்

நாராயண தியான ஸ்லோகம்

श्रीवेद व्यासाय नमः।। 1

नारायणं नमस्कृत्य 

नरं चैव नरोत्तमम्।

देवीं सरस्वतीं व्यासं 

ततो जयम् उदीरयेत् ।। 2

नारायणं सुरगुरुं जगदेक-नाथं 

भक्त-प्रियं सकल-लोक-नमस्कृतं च।

त्रैगुण्य-वर्जितम् अजं विभुम् आद्यम् ईशं 

वन्दे भवघ्नम् अमर-असुर सिद्ध वन्द्यम्'।। 3

- மஹாபாரதம் (முதல் தியான ஸ்லோகம்) - வியாசர்

வேத வியாசரை வணங்குகிறேன் (1)

நாராயணனை நமஸ்கரிக்கிறேன். நரர்களில் உத்தமரான நரனையும் (அர்ஜுனனையும்) நமஸ்கரிக்கிறேன். நர-நாராயணனை நமஸ்கரிக்கிறேன். வாக்குக்கு தேவதையான சரஸ்வதியையும், வ்யாஸ பகவானையும் பல்லாண்டு பாடுகிறேன். (2)

தேவர்களுக்கு (சுரர்கள்) குருவும், உலகங்களுக்கு ஒரே நாதனும், பக்தர்களுக்கு ப்ரியமானவரும், அனைத்து உலகத்து மக்களும் நமஸ்கரிப்படுபவரும், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு நிர்குணமாக இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் ஜனனமில்லாதவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், முதல்வரும், தலைவனும் (ஈசன்), தேவர்களாலும் அசுரர்களாலும் ஸித்தர்களாலும் வந்தனம் செய்யப்படுகின்ற நாராயணனை நான் வந்தனம் செய்கிறேன். (3)


सौति: उवाच। (உக்கிரஸரவஸ் என்ற ஸூத பௌராணிகர் சொல்கிறார்)

आद्यं पुरुषम् ईशानं 

पुरुहूतं पुरुष्टुतम्।

ऋतम् एकाक्षरं ब्रह्म 

व्यक्त-अव्यक्तं सनातनम्।।

- மஹாபாரதம் - வியாசர்

ஆதி புருஷரும், தலைவரும் (ஈசனும்), அனைவராலும் யாகத்தில் அழைக்கப்பட்டவரும், அனைவராலும் ஸ்துதிக்கப்பட்டவரும், சத்யமே வடிவானவரும், அழிவில்லாத ஒரே பரப்ரம்மமாக இருப்பவரும், உலகமாக (ஸ்தூலமாக) தெரிபவரும் சூக்ஷ்மமாக (ஆத்மாவாக) இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் (சனாதனம்), 

असच्च सच्च एव च 

यद् विश्वं सदसतः-परम्

पर आवराणां स्रष्टारं 

पुराणं परम् अव्ययम्।।

- மஹாபாரதம் - வியாசர்

அஸத்யமாக இருப்பவரும் (இல்லை என்பவருக்கு தன்னை காட்டாமலும்), ஸத்யமாகவும் இருப்பவரும் (உண்டு என்பவருக்கு தன்னை காட்டுபவரும்), உலகமாக இருப்பவரும், உலகங்களுக்கு அப்பாற்பட்டவரும், மேலானவைகளையும் கீழானவைகளையும் படைத்தவரும், எப்பொழுதுமே புதிதாகவே இருப்பவரும், பரதத்துவமாக இருப்பவரும், மாறுதல் இல்லாதவரும், 

मङ्गल्यं मङ्गलं विष्णुं 

वरेण्यम् अनघं शुचिम्।

नमस्कृत्य हृषीकेशं 

चराचर गुरुं हरिम्।।

- மஹாபாரதம் - வியாசர்

என்றும் மங்களமானவரும், மங்களத்தை தருபவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், ப்ரார்த்திக்க தக்கவரும், பாபத்தை போக்குபவரும், பரிசுத்தமானவரும், 5 புலன்களை ஆள்பவரும், அசைகின்ற அசையாத உயிர்கள் அனைத்துக்கும் பிதாவாக இருக்கும் ஹரியை நான் நமஸ்கரிக்கிறேன்.